என் மலர்tooltip icon

    சமையல்

    • தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து தூவ மணமாக இருக்கும்.
    • பட்டாணியை வேக வைக்கும் போது ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து வேக விட்டால் சுவையாக இருக்கும்.

    வாழைக்காயை ஈரமில்லாத பாலித்தீன் கவரில் போட்டு இறுக்கமாக கட்டி பிரிட்ஜில் வைத்து விட்டால் இரு வாரம் ஆனாலும் பழுக்காது.

    கடையில் விற்கும் தையல் இலை எனும் மந்தாரை இலையைப் பானையில் போட்டு அதன் மேல் புளியை வைத்தால் நீண்ட நாட்கள் புளி கெடாமல் இருக்கும்.

    கூடையில் வைத்திருக்கும் உருளைக்கிழங்கு முளைவிடாமல் இருக்க கூடவே ஆப்பிள் பழத்தை போட்டு வைக்க வேண்டும்.

    குளிர் காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைத்து விட்டால் ஒரு ஸ்பூனை நன்கு சூடாக்கி அப்பாட்டிலினுள் நுழைத்து விட்டால் எண்ணெய் உருகி வழக்கமான நிலைக்கு மாறிவிடும்.

    வெங்காயத்தை பிளாஸ்டிக் பையில் போட்டு பிரிட்ஜில் வைத்து மறுநாள் உரித்தால் தோல் எளிதாக உரிந்து வரும். கண்ணில் இருந்து நீரும் வராது.

    பிஸ்கெட் இருக்கும் டப்பாவின் அடியில் சிறிது சர்க்கரையைத் தூவி காற்று புகாமல் இறுக மூடி வைத்தால் பிஸ்கெட் நமத்துப் போகாமல் மொரமொரப்பாக இருக்கும்.

    மாதத்திற்கு ஒரு முறை உப்பை போட்டு மிக்ஸியை சுழலச் செய்தால் மிக்ஸியின் பிளேடுகள் கூர்மையாக இருக்கும்.

    பிரியாணி செய்யும்போது ஒரு எலுமிச்சம் பழத்தை அதில் பிழிந்தால் பிரியாணியின் அரிசிகள் தனித்தனியே பிரிந்து பிரியாணி பார்க்க அழகாக இருக்கும்.

    சர்க்கரைப் பாகில் கொஞ்சம் பாலை விட்டு விட்டால் எந்த இனிப்பு பண்டமும், கடினமாகாமல் மிருதுவாக, சாப்பிட நன்றாக இருக்கும்.

    மேஜை விரிப்பில் தேநீர் கொட்டி விட்டால் உடனே அந்த இடத்தில் சர்க்கரை சிறிது தூவினால் கறை படியாது.

    பழைய சாதம் மீந்து விட்டால் பெரிய கிண்ணத்தில் சாதத்தை நன்கு பிழிந்து வைத்து ஒரு கப் துருவிய தேங்காய் ஒரு டீ ஸ்பூன் சீரகம், சிறிது உப்பு கலந்து கூழாக பிசைந்து பிஸ்கெட் சைஸில் தட்டிப்போட்டு வெயிலில் காய வைத்து பொரித்து சாப்பிடலாம்.

    தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து தூவ மணமாக இருக்கும்.

    பட்டாணியை வேக வைக்கும் போது ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து வேக விட்டால் சுவையாக இருக்கும்.

    புளித்த தோசை மாவில் சுக்குப்பொடி கலந்து ஊத்தாப்பம் செய்தால் எளிதில் ஜீரணமாகும்.

    • பூண்டு வாடை கையில் இருந்தால் சிறிதளவு பற்பசையை பூசி அலம்பினால் வாடை ஓடியே போகும்.
    • காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை சமையல் பொருட்கள் இருக்கும் அலமாரியில் வைத்தால் பூச்சிகள் வராது.

    தயிர் கெட்டியாக இருக்க, நன்கு காய்ச்சி ஆறிய பாலுடன் சிறிது காய்ச்சாத பாலையும், சிறிது தயிரையும் சேர்த்து வைக்கலாம்.

    நெய் காய்ச்சுவதற்கு முன்பு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் தேய்த்து பின்பு காய்ச்சினால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாது.

    முட்டைக்கோஸை நறுக்கும் போது அதன் தண்டுகளை சாம்பாரில் போட்டு சமைத்தால் நன்றாக இருக்கும்.

    வாழைப்பழம் சீக்கிரம் கருத்து விடாமல் இருக்க ஈரத் துணியால் சுற்றி வைத்தால் பிரெஷ்ஷாக இருக்கும்.

    பூண்டு வாடை கையில் இருந்தால் சிறிதளவு பற்பசையை பூசி அலம்பினால் வாடை ஓடியே போகும்.

    முட்டைக்கோஸை துருவி நன்றாக வதக்கி மிளகாய், உப்பு, புளியுடன் சேர்த்து அரைத்தால் சுவையான கோஸ் துவையல் ரெடி.

    வழக்கமான அடை மாவுடன் தக்காளி சேர்த்து அரைத்து அதனை பாத்திரத்திற்கு மாற்றும் முன்பு துருவிய கேரட் அல்லது பீட்ரூட் போட்டு ஒரு சுற்று சுற்றி மாவை கரைத்து அடை வார்க்க ருசி அமோகமாக இருக்கும்.

    காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை சமையல் பொருட்கள் இருக்கும் அலமாரியில் வைத்தால் பூச்சிகள் வராது.

    ஆப்பத்திற்கு மாவு அரைக்கும்போது உறவைத்த பச்சரிசியுடன் ஒரு மூடி தேங்காய் துருவல், ஒரு கரண்டி பழைய சாதம் போட்டு அரைத்தால் ஆப்பம் மிருதுவாக இருக்கும்.

    • லஸ்ஸியில் சேர்க்கும் சர்க்கரை அளவை குறைத்து அதற்கு பதிலாக தேன் கலந்து பிரிட்ஜில் சிறிது நேரம் வைத்திருந்து பருகினால் சுவை கூடுதலாக இருக்கும்.
    • சாம்பார், கீரை, புளிப்பு கூட்டு போன்றவற்றை கொதித்து இறக்கும் சமயத்தில் சிறிதளவு வெந்தயப் பொடி தூவினால் வாசனையாக இருக்கும்.

    * கருவேப்பிலை துவையலுக்கு உளுந்தம் பருப்புக்கு பதில் வேர்க்கடலையை வறுத்து போட்டால் துவையல் சுவையாக இருக்கும்.

    * உருளைக்கிழங்கை உப்பு கரைத்த வெந்நீரில் இரண்டு நிமிடம் போட்டு எடுத்து வைத்துக் கொண்டால் சில நாட்களுக்கு உருளைக்கிழங்கு கெடாமல் பிரெஷாக இருக்கும்.

    * குடிக்கும் நீர் மணமாகஇருக்க வேண்டும் என்றால் வாட்டர் பில்டரில் சிறிதளவு துளசியைப் போட்டு வைத்தால் நன்றாக இருக்கும்.

    * ஆப்பிள் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய்ப் பொடி, வெந்தயம், பெருங்காயத்தூள் கலந்து தாளித்தால் சுவையான ஊறுகாய் தயார்.

    * காலையில் கீரை சமைக்க இரவே வாங்கி விட்டால், அது வாடிப் போகாமல் இருக்க கீரையின் வேர் பாகத்தை நீரில் மூழ்கும்படி வைக்கலாம்.

    * லஸ்ஸியில் சேர்க்கும் சர்க்கரை அளவை குறைத்து அதற்கு பதிலாக தேன் கலந்து பிரிட்ஜில் சிறிது நேரம் வைத்திருந்து பருகினால் சுவை கூடுதலாக இருக்கும்.

    * அப்பளம் நமத்துப் போகாமல் இருக்க உளுந்தம் பருப்பு வைத்திருக்கும் டப்பாவில் அப்பளங்களை மேலாக வைத்து இறுகி மூடிவிட்டால் போதும். வெயிலில் உலர்த்தியது போலாகி விடும்.

    * நெய் காய்ச்சும் போதே வெந்தயக்கீரை, முருங்கைக்கீரையை போட்டு லேசாக வதக்கிக்கொள்ளவும். நன்கு ஆறிய பிறகு இந்த வெந்தயக்கீரை, முருங்கைக்கீரையை சப்பாத்தி மாவில் பிசைந்து சப்பாத்தி செய்து பாருங்கள். சப்பாத்தி ருசியாகவும், வாசனையாகவும் இருக்கும்.

    * சாம்பார், கீரை, புளிப்பு கூட்டு போன்றவற்றை கொதித்து இறக்கும் சமயத்தில் சிறிதளவு வெந்தயப் பொடி தூவினால் வாசனையாக இருக்கும்.

    * வெண்டைக்காய் பொரியல் செய்வதற்கு முன்பு வெண்டைக்காயை நறுக்கி வெயிலில் கால் மணி நேரம் உலர வைக்கவும். பிறகு பொரியல் செய்தால் வழுவழுப்பு நீங்கி விடும்

    • கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், புளி ஆகியவற்றை வதக்கி, பின்னர் மிக்சியில் விழுதாக அரைக்கவும்.
    • அரைத்த விழுது, பெருங்காயத்தூள், உப்பு, நெய் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    தேவையான பொருட்கள்:

    அரிசி ரவை-2 கப்

    கொத்தமல்லித்தழை - சின்ன கட்டு

    பச்சை மிளகாய் -3

    தேங்காய்த் துருவல் - 4 கப்

    நெய் - 2 டீஸ்பூன்

    புளி - சிறிதளவு

    கடுகு - 1½ டீஸ்பூன்

    உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு தலா - 2 டீஸ்பூன்

    பெருங்காயத்தூள் ½ டீஸ்பூன்

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், புளி ஆகியவற்றை வதக்கி, பின்னர் மிக்சியில் விழுதாக அரைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, 5 கப் நீர் ஊற்றவும். அதில் அரைத்த விழுது, பெருங்காயத்தூள், உப்பு, நெய் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    நன்கு கொதிக்கும்போது, அடுப்பை 'சிம்'மில் வைத்து, அரிசி ரவையை சேர்த்து கைவிடாமல் கிளறி, மூடிபோட்டு 10 நிமிடம் வேகவிட்டு இறக்கவும். ஆறியதும் சிறு உருண்டைகளாகப் பிடித்து, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுத்தால் சுவையான கொத்தமல்லி கார உருண்டை தயார்.

    • சாதம் உதிரி உதிரியாக இருக்க ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்க்க வேண்டும்.
    • சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது, பசும்பாலுடன் அரை கப் தேங்காய் பாலும் ஊற்றி கிளறினால் சுவை நன்றாக இருக்கும்.

    வெண்டைக்காய் பொரியல் வழ வழன்னு இல்லாமல், மொறு மொறுன்னு இருக்க, வதக்கும் போது சிறிது தயிர் சேர்த்துக்கொள்ளுங்கள். சாப்பிட ருசியாக இருக்கும்.

    வாழைத்தண்டு, வாழைப் பூவை நறுக்கியதும், அரிசி களைந்த நீரில் போட்டு விட்டு பிறகு மோர் கலந்த நீரில் அலசி பின்பு பொரியல் செய்தால், நிறம் மாறாமலும் துவர்ப்பு குறைவாகவும், சுவை அதிகமாகவும் இருக்கும்.

    புது அரிசியில் சாதம் வடிக்கும் போது, குழைவாக ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளும். சாதம் உதிரி உதிரியாக இருக்க ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்க்க வேண்டும்.

    ரவா தோசை செய்யும் போது, ஒரு கரண்டி கடலை மாவு சேர்த்து கரைத்து தோசை வார்த்தால், ஓட்டல் தோசை போல் பொன்னிறத்தில் மொறு மொறு என்று இருக்கும். எள்ளு, மிளகாய்ப் பொடியில் நல்லெண்ணெய் ஊற்றி அதை சாப்பிட்டால் சுவையோ சுவை தான்.

    சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது, பசும்பாலுடன் அரை கப் தேங்காய் பாலும் ஊற்றி கிளறினால் சுவை நன்றாக இருக்கும்.

    இட்லி, தோசைக்கு மிளகாய்ப் பொடி அரைக்கும் போது சிவப்பு மிளகாய், கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு, பெருங்காயக் கட்டி இவற்றை வறுத்ததும், ஒரு கப் கொத்தமல்லி விதை மற்றும் சுத்தமான கருப்பு எள் 100 கிராம் இரண்டையும் வறுத்து, உப்பு சேர்த்து பின் அம்மியில் அரைத்து வைத்துக் கொண்டால்.... ஒரு மாதம் வரை வாசனையும் சுவையும் நன்றாக இருக்கும்.

    கோதுமை மாவு அரைக்கும் போது அதனுடன் வெள்ளை கொண்டைக் கடலை மற்றும் சோயா பீன்ஸ் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் மிருதுவாகவும் ருசியாகவும், சத்து மிகுந்தும் இருக்கும்.

    ரசம் மணக்க வேண்டுமா? புளிக் கரைசலுடன் பழுத்த தக்காளியை மிக்சியில் அரைத்து சேர்த்து ரசம் வைத்து, கீழே இறக்கி இளம் கொத்துமல்லித் தழையை தூவி விடுங்கள். வீடே கமகமனு இருக்கும்.

    சமைத்த சாதம் மீந்து விட்டதா? அதில் உப்பு போட்டு, ஒரு டம்ளர் பால் ஒரு ஸ்பூன் தயிர் ஊற்றிப் பிசைந்து `ஹாட் பேக்' கில் எடுத்து வைத்து விடுங்கள். மறுநாள் காலை சூப்பர் தயிர் சாதம் ரெடியாக இருக்கும். எலுமிச்சை அல்லது மாங்காய் ஊறுகாய் கொண்டு சாப்பிட்டால், அமிர்தமாக இருக்கும்!

    • முளைக்கீரை வேகும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் ருசியாக இருக்கும்.
    • மோர் ஊற்றி வெண்டைக்காயை வதக்கினால் வழவழப்பு தன்மை போய்விடும்.

    * அரிசி ஊற வைப்பது போல பருப்பையும் ஊற வைத்து சமைத்தால் எரிபொருள் மிச்சமாகும்.

    * தேங்காய் பர்பி செய்யும் போது தேங்காயுடன் கேரட்டையும் துருவி சேர்த்து செய்தால் பர்பி கலர்புல்லாக இருக்கும்.

    * ஏலக்காயை சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்தால், ஏலக்காய் எளிதில் தூளாகி விடும்.

    * பஜ்ஜி மாவுடன் ஓமம் சேர்த்து செய்தால் பஜ்ஜி நல்ல மணத்துடன் இருக்கும்.

    * கேசரி செய்யும் போது தண்ணீரின் அளவைக் குறைத்து, பால் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

    * முளைக்கீரை வேகும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் ருசியாக இருக்கும்.

    * மோர் ஊற்றி வெண்டைக்காயை வதக்கினால் வழவழப்பு தன்மை போய்விடும்.

    * மீதமுள்ள காய்கறி பொரியல்களை தோசை மாவுடன் கலந்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு அடை மாதிரி ஊற்றலாம்.

    * பிரெட்டை வெட்டும் பொழுது கத்தியை வெந்நீரில் நனைத்து வெட்டவும்.

    * பூண்டு வாங்கியவுடன் உதிர்த்து வைத்தால் வீணாகாமல் இருக்கும்.

    • எத்தனை நாட்களுக்கு ஒரே மாதிரியான இட்லியை சாப்பிடுவது என்று சலிப்பாக உள்ளதா?
    • சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, துருவிக் கொள்ள வேண்டும்.

    உங்களுக்கு இட்லி பிடிக்கும் ஆனால் எத்தனை நாட்களுக்கு ஒரே மாதிரியான இட்லியை சாப்பிடுவது என்று சலிப்பாக உள்ளதா? கவலையை விடுங்க... ஆரோக்கியமான இட்லி அதுவும் சுரைக்காய் இட்லி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க...

    தேவையான பொருட்கள்:

    * சுரைக்காய் - 1

    * இட்லி ரவை - 1 கப்

    * பச்சை மிளகாய் - 1

    * இஞ்சி - சிறிய துண்டு

    * கொத்தமல்லி - சிறிது

    * கறிவேப்பிலை - சிறிது

    * துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்

    * உப்பு - தேவைக்கேற்ப

    * புளித்த மோர் - 1 கப்

    தாளிப்பதற்கு...

    * தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    * கடுகு - 1/2 டீஸ்பூன்

    * உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

    * கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

    * பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை.




    செய்முறை:

    * முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, துருவிக் கொள்ள வேண்டும்.

    * ஒரு கப் துருவிய சுரைக்காயுடன் 1 கப் ரவை சேர்க்க பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சியை சேர்க்க வேண்டும்.

    * பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, துருவிய தேங்காய் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    * அடுத்து ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்துக் கொள்ளவும் .

    * பின் சுரைக்காயுடன் தாளிப்பு மற்றும் புளித்த மோரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    * அதன் பின் இட்லி தட்டில் எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள 'சுரைக்காய் இட்லி மாவை' கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சின்ன சின்ன இட்லியாக ஊற்றி 15 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான சுரைக்காய் இட்லி தயார்.

    • பச்சை மிளகாயை நறுக்குவதற்கு முன்பு தேங்காய் எண்ணெய்யை கைகளில் தடவிக்கொண்டால் எரிச்சல் ஏற்படாது.
    • கேரட் அல்வா செய்யும் போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால் கோவா சேர்த்தால் பிரமாதமான சுவை கிடைக்கும்.

    * கீரைக்கூட்டுக்கு தேங்காய் அரைத்து செய்வதற்குப் பதில் தேங்காய்ப்பால் சேர்த்தால் ருசி கூடும்.

    * பருப்பு அடைக்கு தேங்காய் சேர்த்து அரைப்பதற்கு பதிலாக மரவள்ளிக்கிழங்கை சேர்த்து அடை சுட்டால் மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.

    * தேங்காய் பர்பி செய்யும் போது 2 டீஸ்பூன் ராகி மால்ட் சேர்த்தால் சுவை கூடும்.



    * தேங்காயை உடைத்து முதலில் கண் உள்ள பாகத்தை உபயோகிக்க வேண்டும், அந்தப் பகுதி தான் விரைவில் கெட்டுப்போகும்.

    * பச்சை மிளகாயை நறுக்குவதற்கு முன்பு தேங்காய் எண்ணெய்யை கைகளில் தடவிக்கொண்டால் எரிச்சல் ஏற்படாது.

    * கோதுமை அல்வா செய்யும் போது நீர்த்து விட்டால் சிறிதளவு சோள மாவை கரைத்துச் சேர்க்கலாம். அல்வா கெட்டிப்படுவதுடன் சுவையும் அதிகரிக்கும்.

    * பாகற்காய் குழம்பு செய்யும் போது நான்கு துண்டுகள் மாங்காய் சேர்த்தால் கசப்பு தெரியாது.

    * கேரட் அல்வா செய்யும் போது பால் ஊற்றுவதற்குப் பதிலாக பால் கோவா சேர்த்தால் பிரமாதமான சுவை கிடைக்கும்.

    * எந்தவிதமான சூப் செய்தாலும் ஒரு டீஸ்பூன் அவலை பொடி செய்து சூப்பில் சேர்த்துக் கொதிக்க விட்டால் சூப் கெட்டியாகவும், ருசியாகவும் இருக்கும்.

    * வற்றல் குழம்பு செய்யும் போது கடைசியாக வெங்காய வடகத்தை வறுத்துப் பொடித்துப் போட்டால் குழம்பு ஜோராக இருக்கும்.

    * தயிர் வடை செய்ய உளுந்துடன் ஐந்தாறு முந்திரிப் பருப்புகளையும் ஊற வைத்து அரைத்தால் வடைகள் மெத்தென்று இருப்பதுடன் ருசியும் அருமையாக இருக்கும்.

    • தோசை மாவில் தேங்காய் பால் ஊற்றி தோசை செய்தால் மணம் அமோகமாக இருக்கும்.
    • மிளகு ரசத்திற்கு குழைவாக வெந்திருக்கும் பட்டாணி நீரை சேர்த்தால் ரசம் சுவையாக இருக்கும்.

    * அடை மாவு புளித்து விட்டால் இட்லி தட்டில் இட்லி போல் மாவை ஊற்றி 7 நிமிடம் வேக வைத்து பின்பு அதை உதிர்த்து கடுகு, மஞ்சள் தூள், கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, வெங்காயம் கறிவேப்பிலை தாளித்து சிறிது உப்பு போட்டு வாணலியில் வறுக்க சூப்பர் அடை காரபுட்டு ரெடி.

    * பலகாரம் செய்ய எண்ணெயை கொதிக்க வைக்கும்போது சிறிது இஞ்சியை அம்மியில் அல்லது மிக்சியில் நசுக்கிப் போட்டு உபயோகித்தால் பலகாரம் அதிக எண்ணெய் குடிக்காது. பொங்கியும் வழியாது. எண்ணெய் புகையில் வாந்தி தலை, சுற்றல் வராது.

    * வாழைக்காய், கோவைக்காய் போன்ற காய்கறிகளை சிறிய பாத்திரத்தில் போட்டு குக்கரில் வைத்து ஒரு விசில் சத்தம் வந்ததும் எடுத்து பொரியல் செய்தால் எண்ணெய் அதிகம் விட வேண்டாம்.

    * தோசை மாவில் தேங்காய் பால் ஊற்றி தோசை செய்தால் மணம் அமோகமாக இருக்கும்.

    * வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் அல்லது நெய் ஊற்றி அது காய்ந்ததும் பஜ்ஜி செய்தால் வாசனையாக இருக்கும்.

    * பிடி கொழுக்கட்டை செய்யும்போது கொதிக்கும் நீரில் கேரட், பீன்ஸ், பட்டாணி இவைகளையும் வேக வைத்து அரிசி மாவை சேர்த்து வெஜிடபிள் கொழுக்கட்டை செய்யலாம்.

    * கோவைக்காயை கொதிநீரில் கொட்டி 5 நிமிடம் கழித்து வடிகட்டி உப்பு, பச்சை மிளகாய் அரைத்துப்போட்டு புளித்த தயிர் கடைந்து கிளறி ஒரு நாள் ஊறவைத்து காய போட்டால் கோவைக்காய் வற்றல் ரெடி.

    * முருங்கை பூவை தேங்காய் எண்ணெயில் பொன்நிறமாக வறுத்து மோர் குழம்பில் போட்டு கொதி வந்தவுடன் இறக்கவும், வாசம் சூப்பராக இருக்கும்.

    * மிளகு ரசத்திற்கு குழைவாக வெந்திருக்கும் பட்டாணி நீரை சேர்த்தால் ரசம் சுவையாக இருக்கும்.

    * வெல்லம் சேர்த்து செய்யும் பொங்கல் பாயசத்திற்கு கொஞ்சம் வெல்லம் குறைவாகப் போட்டு கடைசியில் சர்க்கரையை கொஞ்சம் சேர்க்க சுவை கூடும்.

    * கூட்டு, குழம்பு இவற்றிற்கு அரிசி மாவு கரைத்து விடுவதற்கு பதிலாக பொட்டுக்கடலை மாவு சேர்த்து விட்டால் சீக்கிரம் கெட்டுப்போகாது, கெட்டியாகவும் இருக்கும்.

    • எந்த வகையான இனிப்பு பலகாரம் செய்தாலும் சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது சிறிது தேன் கலந்து செய்தால் சுவை அதிகமாக இருக்கும்.
    • பழங்கள் வைத்திருக்கும் கூடையில் சிறிது கிராம்பு போட்டு வைத்தால் பழங்கள் நீண்ட நாட்களுக்கு சுவை மாறாமல் இருக்கும்.

    * பக்கோடா, வடை முதலியவை செய்யும் பொழுது சிறிது சோம்பு அதிகமாக சேர்த்தால் ருசி தூக்கலாக இருக்கும்.

    * வெங்காயம் வதக்கும்போது சிறிது சர்க்கரை சேர்த்தால் வெங்காயம் நன்கு வதங்கும். சர்க்கரை வெங்காயத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி மென்மைப்படுத்தும்.

    * எந்த வகையான இனிப்பு பலகாரம் செய்தாலும் சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது சிறிது தேன் கலந்து செய்தால் சுவை அதிகமாக இருக்கும்.

    * பால்கோவா செய்யும்போது இரண்டு ஸ்பூன் கோதுமை மாவை துணியில் கட்டி பாலில் வைத்தால் பால்கோவாவின் நிறம் கிரீம் போல் கிடைக்கும்.

    * இரண்டு ஐஸ் கட்டிகள் மற்றும் கல் உப்பை மிக்ஸியில் சேர்த்து அரைத்தால் பிளேடு கூர்மையாக மாறும்.

    * பழங்கள் வைத்திருக்கும் கூடையில் சிறிது கிராம்பு போட்டு வைத்தால் பழங்கள் நீண்ட நாட்களுக்கு சுவை மாறாமல் இருக்கும்.

    * இட்லிக்கு மாவு அரைக்கும்போது சிறிது பழைய சாதம் மற்றும் அவல் சேர்த்து அரைத்தால் இட்லி மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும்.

    * சேமியா பாயசம் செய்யும்போது சேமியா குழைந்து விட்டால் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்தால் சேமியா தனித்தனியாக பிரிந்து விடும்.

    * எண்ணெய் பலகாரங்களை வைக்கும் டப்பாவில் உப்பை ஒரு துணியில் முடிச்சு போட்டு வைத்தால் காரல் வாடை வராது. நீண்ட நாட்களுக்கு மொறுமொறுப்பாக இருக்கும்.

    * தேங்காயை தண்ணீரில் நனைத்து உடைத்தால் தேங்காய் சரிபாதியாக உடையும்.

    * சப்பாத்திக்கு மாவு பிசையும்பொழுது சிறிது வெதுவெதுப்பான நீர் மற்றும் பால் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி நீண்ட நேரம் மிருதுவாக இருக்கும்.

    * தயிர் மிகவும் புளித்து விட்டால் ஒரு டம்ளர் நீர் ஊற்றி 10 நிமிடம் கழித்து அந்த நீரை வடித்து விட்டால், புளிப்பு நீருடன் சென்று விடும். புளிப்பில்லாத தயிர் கிடைக்கும்.

    * மீன் குழம்பு செய்யும்போது சிறிது கடுகை வறுத்து அரைத்து மீனில் தடவி ஐந்து நிமிடம் கழித்து குழம்பில் சேர்த்தால் மீன் உடைந்து போகாது.

    • வெங்காயம், பச்சை மிளகாயை வெட்டிவைத்துக் கொள்ளவும்.
    • தர்பூசணி காய் நன்கு வெந்ததும் தேங்காய்த் துருவலை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    தர்பூசணி கீற்று -3

    பாசிப் பருப்பு - 100 கிராம்

    சிறிய வெங்காயம் - 4

    தேங்காய் - 1/2 மூடி

    பச்சை மிளகாய் - 3

    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

    கடுகு - சிறிதளவு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    கடலை எண்ணெய்- சிறிதளவு

    உப்பு தேவையான அளவு

    செய்முறை:

    தர்பூசணி கீற்றுகளின் பழுத்த பகுதிகளை நீக்கி விட்டு, பச்சைப்பகுதிகளை சீவி விட்டு இடைப்பட்ட சதைப்பகுதிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டிவைத்துக் கொள்ளவும்.

    வெங்காயம், பச்சை மிளகாயை வெட்டிவைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிவைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை ஊறவைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை உருவிவைத்துக் கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

    அத்துடன், வெட்டி வைத்துள்ள தர்பூசணித் துண்டுகள், ஊற வைத்துள்ள பாசிப்பருப்பு, மஞ் சள்தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு வேக விடவும்.

    தர்பூசணி காய் நன்கு வெந்ததும் தேங்காய்த் துருவலை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

    தர்பூசணி பாசிப்பருப்பு கூட்டு தயார். சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

    • சப்பாத்தி மீதமானால் ஈரத்துணி சுற்றி வைத்தால் பதமாக இருக்கும்.
    • ஒரு கப் அவல், ஒரு கைப்பிடி பச்சரிசி, உளுத்தம் பருப்பு சிறிது சேர்த்து அரைத்து செட் தோசை செய்யலாம்.

    * இட்லிப்பொடி தயாரிக்கும்போது சிறிது கறிவேப்பில்லையை வறுத்து அரைத்து சேர்த்தால் மணமாகவும், பித்தத்தை போக்கவும் உதவும்.

    * பூரிக்கு மாவு பிசையும்போது சிறிது சர்க்கரை சேர்த்து பிசைந்தால் பூரி மென்மையாக மாறும்.

    * சப்பாத்தி மீதமானால் ஈரத்துணி சுற்றி வைத்தால் பதமாக இருக்கும்.

    * தோசைமாவு குறைவாக இருந்தால், அந்த அளவிற்கு அரிசி மாவு, தேங்காய் துருவல், ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நீர் விட்டு சிறிது நேரம் கழித்து ஆப்பம் ஊற்றலாம்.

    * ஒரு கப் அவல், ஒரு கைப்பிடி பச்சரிசி, உளுத்தம் பருப்பு சிறிது சேர்த்து அரைத்து செட் தோசை செய்யலாம்.

    * இட்லி மாவு அரைக்கும்போது சிறிது ஐஸ்வாட்டர் ஊற்ற இட்லி பஞ்சு போல் மிருதுவாக வரும்.

    * பீர்க்கங்காயுடன் தக்காளி, வரமிளகாய், வெங்காயம், வதக்கி சட்னி செய்தால் சூப்பர் சுவையுடன் இருக்கும்.

    * மீதமான அப்பளம் இருந்தால், அத்துடன் தேங்காய், கருவேப்பிலை, புளி, உப்பு, பச்சை மிளகாய் வறுத்து சேர்த்து அரைக்க அப்பள துவையல் ரெடி. மாறுபட்ட சுவையை கொண்டிருக்கும்.

    ×