என் மலர்
சமையல்
- பழங்களை வெட்டியதும் அதன் மீது சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து விடவும்.
- உணவை சமைத்து முடித்ததும் வெப்பமாக இருக்கும் இடத்தில் சேமித்துவைக்கக்கூடாது.
* காய்கறிகளை வெறுமனே வதக்காமல் கொஞ்சம் நீர், சிறிது சோம்பு தூள் சேர்த்து வதக்கவும். இதனால் காய்கறியின் நிறம் பிரகாசமாகவும், சுவையாகவும் இருக்கும்.
* மூன்று மடங்கு அரிசி, போதுமான அளவு தண்ணீர், சிறிது பால் சேர்த்து சாதம் வேக வைக்கவும். அப்படி செய்தால் சாதம் மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும்.
* குழம்பில் சுவையை அதிகரிக்க செய்ய இறுதியில் சிறிது நெய், மசாலா வதக்கி சேர்க்கவும். வழக்கத்தை விட வாசனை இரு மடங்கு அதிகரிக்கும்.
* பருப்பு வகைகளை வேக வைக்கும் முன்பு சிறிது இஞ்சி, உப்பு சேர்த்து ஊற வைக்கவும். அப்படி செய்தால் பருப்பு வேகவைக்கும் நேரம் குறையும். பருப்பு மென்மையாகவும் இருக்கும்.
* குழம்பு நிறம் பிரகாசமாக மாற தக்காளி சேர்க்கும் முன்பு நெல்லிக்காய் சாறு சேர்க்கலாம். குழம்பு நிறம் மாறுவதுடன் சுவை இனிமையாகும்.
* பழங்களை வெட்டியதும் அதன் மீது சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து விடவும். பழங்கள் பழுப்பு நிறத்துக்கு மாறாமல் இருக்கும்.
* உணவை சமைத்து முடித்ததும் வெப்பமாக இருக்கும் இடத்தில் சேமித்துவைக்கக்கூடாது. மிதமான வெப்பமான இடத்திலோ, சற்று குளிர்ந்த இடத்திலோ மூடி வைக்கவும். வாசனை, சுவை குறையாது.
* வறுத்த உணவு வகைகளில் எண்ணெய் குறைவாக இருக்க காய்கறிகளை தண்ணீரில் வதக்கி சேர்க்கவும். சுவை குறையாது, கொழுப்பு குறையும்.
* கொத்தமல்லி, கறிவேப்பிலையை இறுதியில் சேர்க்கும் போது எண்ணெய்யில் கொஞ்சம் வதக்கி சேர்க்க வாசனை அதிகமாக இருக்கும்.
- தேங்காய்ப்பால் என்பது இயற்கையிலேயே எண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கியது.
- பசும்பால் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு தேங்காய்ப்பால் என்பது சிறந்த மாற்றாக இருக்கும்.
நம் பாரம்பரிய உணவுகளில் புளியோதரை, லெமன்சாதம், தயிர்சாதம் போலவே தேங்காய் சாதமும் முக்கிய இடம் பிடிக்கிறது. உணவுக்கு சுவை மட்டுமின்றி, உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் வகையில் தேங்காய் சாதம் செய்து அசத்த முடியும். இதனால் சத்துக்கள் முழுவதுமாக நமக்கு கிடைக்கும்.
குழம்பு மற்றும் பொரியல் வைக்கும் பொழுது காய்கறிகளில் உள்ள சத்துக்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு கிடைக்கும். ஆனால் நாம் தயிர் சாதம், லெமன் சாதம் போன்ற சாத வகைகள் செய்து கொடுக்கும் பொழுது அதில் சுவை மட்டுமே அதிகமாக இருக்குமே தவிர குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் குறைவாகவே கிடைக்கும்.
ஆனால் குழந்தைகள் அதைக் கேட்டு அடம்பிடிக்கும் பொழுது, அதனை எப்படி ஆரோக்கியமாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்க வேண்டும் என்பதை தான் நாம் பார்க்க வேண்டும். அப்படி ஒரு ஹெல்தியான ரெசிபி தான் இந்த தேங்காய் பால் சாதம்.
தேங்காய்ப்பால் என்பது இயற்கையிலேயே எண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கியது. அதனுடன் ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் மசாலா பொருட்களை சேர்ந்து கொடுக்கும்பொழுது ஆரோக்கியமான மதிய உணவு அல்லது காலை உணவாக இந்த தேங்காய் பால் சாதம் இருக்கும்.
தேங்காய் பால் சாதத்தில் வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் நிறைந்துள்ளன. குறிப்பாக சொல்லப் போனால் வைட்டமின் சி, போலேட், இரும்பு சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் மாங்கனிஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
தேங்காய் பாலில் எம்.சி.டி. எனப்படும் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன. இந்த கொழுப்பானது உடனடியாக கரைந்து உடலுக்கு தேவையான எனர்ஜியை கொடுக்க வல்லது. குறிப்பாக மூளை வளர்ச்சிக்கு இந்த கொழுப்பு மிகவும் அவசியமாகும்.
பசும்பால் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு தேங்காய்ப்பால் என்பது சிறந்த மாற்றாக இருக்கும். பசும்பாலில் உள்ள சத்துக்களை போலவே இதிலும் சத்துக்கள் அதிகம் என்பதால் பசும்பாலுக்கு பதிலாக இதனை குழந்தைகள் எடுத்துக் கொள்ளலாம்.
இதில் இயற்கையிலேயே நிறைந்திருக்கும் லாரிக் அமிலம் எனப்படும் அமிலம் நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டதாகும். எனவே உடலில் ஏற்படும் காயங்களை இயற்கையாகவே ஆற்றும் தன்மை தேங்காய் பாலுக்கு உண்டு.
மேலும் இதில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகமாக உள்ளதால், எலும்புகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை கொடுக்கின்றது.
இயற்கையிலேயே காணப்படும் ஆன்ட்டி ஆக்ஸி டென்ட்களான வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் செலினியம் நிறைந்துள்ளன. இவை உடலில் செல்கள் சிதை உடையாமல் பாதுகாக்கின்றன.
தேங்காய் பாலில் நீர் சத்துக்கள் அதிகம் என்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்கின்றது.
- தோசை மாவு நீர்த்துவிட்டால் பாலில் 2 ஸ்பூன் ரவை, அரிசி மாவு சேர்த்து கலந்து விட்டால் கெட்டியாகும்.
- சாதம் குழையாமல் இருக்க, சாதம் வெந்தவுடன் அதில் எலுமிச்சைச் சாறு கலந்து கிளறினால் சாதம் உதிரியாக இருக்கும்.
உணவுகள் நீர்த்துப் போய்விட்டால் அதை எப்படி சமாளிக்கலாம் என்பதை பார்ப்போம்...
* கூட்டு, குழம்பு நீர்த்துவிட்டால், பொட்டுக்கடலை மாவு அல்லது அரிசி மாவை கரைத்து கூட்டு, குழம்பில் ஊற்றி சூடு செய்தால் அவை கெட்டியாகும். ருசியாகவும் இருக்கும்.
* அடை மாவு நீர்த்துவிட்டால் சிறிதளவு கார்ன்பிளேக்ஸ் தூள் கலந்துவிட்டால் மாவு கெட்டியாகிவிடும்.
* குருமா நீர்த்துவிட்டால் ஒரு கைப்பிடி அளவு நூடுல்சை நொறுக்கிப் போட்டு கொதிக்க வைத்தால் கெட்டியாகி விடும். சிறிது சோளமாவை கரைத்து ஊற்றினாலும் கெட்டியாகும். சுவையாக இருக்கும்.
*கோதுமை அல்வா, மைதா அல்வா செய்யும்போது நீர்த்துவிட்டால் சிறிதளவு சோளமாவு கரைத்து சேர்த்துவிட்டால் கெட்டிப்படும், ருசி கூடும்.
* பொங்கல் நீர்த்துவிட்டால் சிறிதளவு வறுத்த ரவை அல்லது அவலைப் பொடித்து பொங்கலோடு சேர்த்துக் கிளறினால் போதும்.
* தோசை மாவு நீர்த்துவிட்டால் பாலில் 2 ஸ்பூன் ரவை, அரிசி மாவு சேர்த்து கலந்து விட்டால் கெட்டியாகும். புளிப்பும் இருக்காது.
* பருப்பு பாயசம், ஜவ்வரிசி பாயசம் நீர்த்துவிட்டால் அதில் இரண்டு டீஸ்பூன் சோளமாவு அல்லது பால் பவுடர் கரைத்து ஊற்றி கலந்து, 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் போதும்.
* சேமியா உப்புமா நீர்க்க இருந்தால், சிறிது எலுமிச்சைச் சாறு ஊற்றி அடுப்பில் வைத்து கிளறினால் சரியாகும்.
* சாதம் குழையாமல் இருக்க, சாதம் வெந்தவுடன் அதில் எலுமிச்சைச் சாறு கலந்து கிளறினால் சாதம் உதிரியாக இருக்கும்.
* பிசைந்த சப்பாத்தி மாவில் நீர் கூடிவிட்டால் சிறிது மாவு சேர்த்துப் பிசைந்து பிரிட்ஜில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் கெட்டியாகும்.
- சப்பாத்தி மாவில் சிறிது தயிர் சேர்த்தால் சப்பாத்தி மென்மையாக வரும்.
- குழம்பில் வெண்டைக்காய் சேர்க்கும் முன்பு அதை வதக்க வேண்டும்.
* ராகி அல்லது சாமை தோசைக்கு சிறிது அரிசி மாவு கலக்கவும். தோசை சத்தாகவும், ருசியாகவும் இருக்கும்.
* ஆம்லெட்டுக்கு சிறிது பால் சேர்த்து முட்டையை அடித்தால் மென்மையாக இருக்கும்.
* பருப்பு, மசாலா, முந்திரிகளை வறுக்கும் போது சிறிது உப்பு சேர்த்தால் ருசி கூடும்.
* பூரி தயாரிக்கும்போது மாவில் சிறிது ரவை சேர்த்தால் பூரி நன்றாக பூரிக்கும்.
* பாசிப்பயிறு குழம்புக்கு பயிறை நன்கு வறுத்து அரைத்து சேருங்கள். சுவை அதிகரிக்கும்.
* பன்னீர் கட்லெட் செய்யும் போது, பன்னீரை நன்கு வடித்துப் பிசைய வேண்டும்.
* சப்பாத்தி மாவில் சிறிது தயிர் சேர்த்தால் சப்பாத்தி மென்மையாக வரும்.
* பாயசம் கொதிக்கும்போது அடிக்கடி கலக்க வேண்டும். இல்லையெனில் பாத்திரத்தில் அடிப்பிடிக்கும்.
* காய்கறி பாயசத்துக்கு அதில் சிறிது உளுந்து பருப்பு வதக்கி சேர்த்தால் ருசி அதிகரிக்கும்.
* தேங்காயை நன்கு விழுதாக அரைத்தால் சட்னி ருசிக்கும்.
* வெங்காயம் அதிகமாக இருந்தால், அதை கடலை மாவில் உருட்டி பொரித்து சாம்பாரில் போடலாம்.
* சாம்பாரில் சுண்டைக்காய் சேர்க்கும் முன்பு, அதை எண்ணெய்யில் வதக்கினால் அதிக கசப்பு தெரியாது.
*நெய் சாதத்திற்கு சிறிது ஏலக்காய் தூள் சேர்த்தால் நறுமணமும், சுவையும் கூடும்.
* பச்சை மிளகாய் நறுக்கும்போது கையில் எரிச்சலை தருமெனில், எலுமிச்சை சாறில் கைகளை கழுவுங்கள்.
* பூண்டு விழுதை அது பழுப்பு நிறமாகும் வரை வதக்கினால் வாசனை போகும்.
* குழம்புக்கு புளி கரைக்கும் போது கெட்டியான புளி நீரை சேர்க்க வேண்டாம். குழம்பு புளிக்கும்.
* குழம்பில் வெண்டைக்காய் சேர்க்கும் முன்பு அதை வதக்க வேண்டும்.
* வெங்காயம் சீக்கிரம் வதங்க தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.
- வீட்டில் சமைப்பவர், 'உடம்புக்கு நல்லது' என்று நினைப்பார்.
- வீட்டில் சமைக்கப்படும் உணவின் பின்னால் இருக்கும் உழைப்பு பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை.
'அம்மா சாப்பாடு நல்லாதான் இருக்கு... ஆனா ஓட்டல் மாதிரி இல்ல!' - இந்தக் குரல் இன்று பல வீடுகளில் அடிக்கடி ஒலிக்கிறது. வீட்டை விட, ஓட்டலில் சாப்பிட அனேகம் பேருக்கு பிடிக்கிறது, ருசியாக இருப்பதாக தோன்றுகிறது. இது ஏன்?
இதற்கு காரணம், 'சுவை' என்பது நாக்கில் மட்டும் இல்லை.
அது மணம், தோற்றம், சூழல், மனநிலை, எதிர்பார்ப்பு ஆகிய அனைத்தின் கூட்டுத்தொகை. வீட்டில் தினமும் அதே சமையலறை, அதே பாத்திரம், அதே நபர் சமைக்கும் உணவு நமக்கு 'பழக்கம்' ஆகிவிடுகிறது. பழக்கம் வந்த இடத்தில் புதுமை குறையும்; புதுமை குறைந்த இடத்தில் சுவை மங்குவது போல தோன்றும்.
ஆனால் உணவகங்களில்?
புதுமை. புதிய இடம். வேறு கைகள். வேறு வாசனை. வேறு பரிமாறும் முறை. இதுவே உணவின் சுவையை இரட்டிப்பாக்குகிறது.
பொதுவாக, உணவகங்களில் சமைக்கப்படும் உணவுகளில், வீட்டைவிட அதிக அளவில் உப்பு, எண்ணெய், வெண்ணெய், நெய், சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது. காரணம் ஒன்றுதான், வாடிக்கையாளரின் நாக்கை வசப்படுத்த வேண்டும்.
வீட்டில் சமைப்பவர், 'உடம்புக்கு நல்லது' என்று நினைப்பார். ஓட்டலில் சமைப்பவர், 'மீண்டும் வர வைக்க வேண்டும்' என்று நினைப்பார்.
இந்த இரண்டு எண்ணங்களின் இடைவெளிதான், சுவையின் இடைவெளியாக நமக்கு தெரிகிறது.
வீட்டில் சாப்பிடும்போது, வேலைப்பளு, குடும்பப் பிரச்சனை, பணச்சுமை, நாளைய பொறுப்புகள் எல்லாமே நம்முடன் மேசைக்கு வந்து உட்காரும்.
உணவகத்திலோ, 'இன்று சாப்பிட வந்திருக்கோம்' என்ற மனநிலை.
சமைக்கவில்லை. பாத்திரம் கழுவ வேண்டாம். யாருக்கும் பரிமாற வேண்டாம். இந்த மனஅழுத்தமற்ற நிலை, உணவின் சுவையை கூடுதலாக்குகிறது.
வீட்டில் சமைக்கப்படும் உணவின் பின்னால் இருக்கும் உழைப்பு பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. தினமும் சமைக்கும் கைகளின் மதிப்பு, அன்றாடமாகி விட்டதால் சாதாரணமாகிவிடுகிறது. ஆனால் ஓட்டலில் பணம்
கொடுத்து வாங்கும் உணவு, 'விலை' காரணமாகவே நமக்கு உயர்ந்ததாக தோன்றுகிறது.
பணம் கொடுத்தால் சுவை கூடும் என்ற மனநிலை, அறியாமலே நம்முள் உருவாகிவிட்டது.
அழகான தட்டு, கவரும் உள்அலங்காரம், சூடான பரிமாற்றம், உணவுகளுக்கு கவர்ச்சியான பெயர்கள் இவை அனைத்தும் உணவின் சுவைக்கு முன் நம் மனதை தயார் செய்கின்றன.
வீட்டில்?
'சாப்பாடு ரெடி... வாங்க!'
அவ்வளவுதான்.
அன்பு இருந்தாலும், அங்கு ஒரு 'நிகழ்வு' இல்லை. நிகழ்வு இல்லாத இடத்தில் சுவை நினைவாக மாறுவதில்லை.
இன்றைய தலைமுறை, வெளியே சாப்பிடுவதை ஒரு அனுபவமாக பார்க்கிறது. செல்பி, சமூக ஊடகப் பதிவு, நண்பர்கள், சிரிப்பு இவை அனைத்தும் உணவுடன் சேர்ந்து ஒரு நினைவாக உருவாகின்றன. வீட்டுச் சாப்பாடு அந்தப் போட்டியில் பின்னடைகிறது.
உணவக சுவை நாக்குக்கு இனிமை.
வீட்டுச் சாப்பாடு உடலுக்கு நன்மை.
வீட்டுச் சாப்பாடு சுவையில்லை என்று நாம் சொல்வது, உணவின் குறை அல்ல; நமது பார்வையின் குறை.
அதை தினசரி என்று எடுத்துக்கொள்ளாமல், அன்பின் வெளிப்பாடாக பார்த்தால், அதில் இருக்கும் சுவையும் நமக்குத் தெரியும்.
- பருப்பு வேக வைக்கும்போது ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளிப் போடவும்.
- இனிப்புகள் செய்யும்போது நெய்க்கு பதிலாக வெண்ணெய் சேர்த்துக் கொண்டால் மிருது தன்மை அதிகரிக்கும்.
* கேக் தயாரிக்கும்போது முந்திரி, பாதாம் போன்றவைகளை பாலில் ஊற வைத்த பின்னர் சேர்த்தால் அவை கேக்கில் இருந்து கீழே விழாது.
* கீரையை சமைக்கும் போது சிறிது சர்க்கரையை சேர்த்தால் சத்தும் போகாது. நிறமும் மாறாது.
* பருப்பு வேக வைக்கும்போது ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளிப் போடவும். பருப்பு சீக்கிரம் வெந்து விடும்.
* குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால் சிறு வாழைத் தண்டு அல்லது உருளைக்கிழங்கு அளவிற்கு சாதத்தை துணியில் கட்டிப்போட்டு குழம்பு கொதித்ததும் எடுத்து விடவும்.
* உருளைக்கிழங்கு வாங்கும்போது பச்சையாக இல்லாமல் பார்த்து வாங்கவும்.
* உருளைக்கிழங்கு தோல் கெட்டியாக உரிந்திருந்தால் அது நல்ல உருளைக்கிழங்கு.
* வாழைக்காயை உணவில் சேர்க்கும்பொழுது மிளகு, சீரகம் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் வாயு தொல்லை இருக்காது.
* இனிப்புகள் செய்யும்போது நெய்க்கு பதிலாக வெண்ணெய் சேர்த்துக் கொண்டால் மிருது தன்மை அதிகரிக்கும்.
- எப்போதும் போல் ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.
- வெஜிடபிள் ரவா இட்லிக்கு நடுவில் பட்டாணி மசாலா மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
ரவை -2 கப்
தயிர் - 3 ஸ்பூன்
துருவிய கேரட்- ½ கப்
மெல்லியதாக அரிந்த குடமிளகாய்-1
கொத்தமல்லித் தழை- சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
மசாலாவுக்கு:
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சைப் பட்டாணி-1 கப்
மிளகாய்த் தூள்- ½ டீஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு- தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் ரவை, தயிர், தண்ணீர், உப்பு சேர்த்து பத்து நிமிடம் மூடி வைக்கவும்.
பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அதனுடன் வெங்காயம், பச்சைப்பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சிறிது உப்பு சேர்த்து கிளறி வைத்துக் கொள்ளவும்.
ஊறிய ரவையில் குடமிளகாய், துருவிய கேரட், கொத்தமல்லித் தழை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இப்போது இட்லித் தட்டில் எண்ணெய் தடவி, ரவை கலந்த கலவையை கொஞ்சம் ஊற்றி அதன் மேல் பட்டாணி மசாலா கலவை வைத்து மீண்டும் அதற்கு மேல் ரவை கலவையை ஊற்றவும். எப்போதும் போல் ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.
வெஜிடபிள் ரவா இட்லிக்கு நடுவில் பட்டாணி மசாலா மிகவும் சுவையாக இருக்கும். நீண்ட நேரம் மிருதுவாக இருக்கும். சத்துகள் நிறைந்த வெஜிடபிள் மசாலா இட்லியை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
தேவைப்பட்டால் பட்டாணி மசாலா கலவையில் துருவிய பன்னீர், காலிபிளவர் போன்றவற்றை சேர்த்தும் செய்யலாம்.
- பூண்டுவை கொதிக்கும் தண்ணீரில் போட்டு பின்பு குளிர்ந்த நீரில் லேசாக ஊறவைத்தால் சுலபமாக உரிக்கலாம்.
- இட்லி மாவு அரைக்கும் போது சிறிது வெண்டைக்காய் சேர்த்து அரைத்தால் இட்லி மென்மையாக வரும்.
* பால் பாயாசம் சுவையாக இருக்க பாதாம் பருப்பை தோல் நீக்கி அரைத்து சேர்க்க வேண்டும்.
* பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் போன்றவற்றை வெந்நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து, சமைத்தால் காரத்தன்மை குறையும்.
* அப்பளத்தின் மீது லேசாக நெய் தடவி, சிறிது மிளகுத் தூள் தூவி சுட்டெடுத்தால் சுவை நன்றாக இருக்கும்.
* ஓட்ஸை கஞ்சியாக குடிப்பதை விட இட்லி மாவு, தோசை மாவில் சேர்த்து கலந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
* வடை மாவு நீர்த்து விட்டால், அதன் மீது சிறிது பச்சரிசி மாவு, கைப்பிடி ரவை சேர்த்தால் அதிகப்படியான நீரை அது உறிஞ்சி விடும்.
* பூண்டுவை கொதிக்கும் தண்ணீரில் போட்டு பின்பு குளிர்ந்த நீரில் லேசாக ஊறவைத்தால் சுலபமாக உரிக்கலாம்.
* சூடான எண்ணெய்யில் சிறிது மைதா மாவு தூவினால் அந்த எண்ணெய்யில் எதை பொரித்தாலும் சட்டென்று ஒட்டாது.
* தக்காளி கெடாமல் இருக்க காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.
* தேங்காயை மேல் நோக்கியவாறு வைத்தால் நீண்ட நாட்கள் அழுகாமல் இருக்கும்.
* அரிசி, ரவா, கோதுமை டப்பாவில் பூச்சி வராமல் இருக்க ஒரு சிறு துண்டு வசம்பை துணியில் கட்டி டப்பாவில் போட வேண்டும்.
* இட்லி மாவு அரைக்கும் போது சிறிது வெண்டைக்காய் சேர்த்து அரைத்தால் இட்லி மென்மையாக வரும்.
* தயிரில் ஒரு துண்டு தேங்காயை போட்டு வைத்தால் தயிர் எளிதில் புளிக்காது.
* பாகற்காயை உப்பு, மஞ்சள், வெல்லம், எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊற வைத்தால் கசக்காது.
- பொரியல் கமகமவென மணமுடன் இருக்கும்.
- காய்கறிகளை முழுதாக ஒரு மணி நேரம் முக்கி வைத்துவிட்டு எடுத்தால் 'பிரஷ்' ஆகி விடும்.
* வேகவைத்த கேரட் அல்லது பரங்கிக்காய், பாதி வறுத்த துவரம் பருப்பு, நான்கு பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து சட்னி தயாரித்தால் ருசி அபாரமாக இருக்கும்.
* பழைய சாதத்தை மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். அதனுடன் ரவை, மைதா கலந்து கடுகு, மிளகாய், வெங்காயம் தாளிதம் செய்து வார்க்கும் தோசை புது மாதிரியாக இருக்கும்.
* கோதுமை மாவு ஒரு கப், மைதா மாவு அரை கப், வறுத்த உளுந்தம்மாவு ஒரு ஸ்பூன், உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து சீடை செய்தால் வெடிக்காது. எண்ணெய்யும் குடிக்காது.
* கத்தரிக்காய். வெண்டைக்காய், பீன்ஸ் மற்றும் அவரைக்காய் என எந்த பொரியலுக்கும் சிறிது சீரகப்பொடியை பச்சையாக தூவி இறக்கி விடுங்கள். பொரியல் கமகமவென மணமுடன் இருக்கும். தேங்காய் சேர்க்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
* இஞ்சியை மிக்சியில் அரைத்து சாறு எடுத்து வடிகட்டி கொள்ளவும். புளியைக் கரைத்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து அதில் இஞ்சி சாற்றை கலந்து சிறிது நேரம் கொதித்ததும் இறக்கிவிடவும். ஊறுகாய் போல ருசியாக இருப்பதோடு ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.
* சேனைக்கிழங்கை வேக வைக்கும் முன்பு வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது உப்புப்போட்டு வெடிக்கும் வரை வறுக்கவும். பிறகு நீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போடவும். விரைவில் பதமாக வெந்து, சுவையாகவும் இருக்கும்.
*வடித்த சுடு கஞ்சியில் நறுக்கிய வாழைப்பூவை போட்டு விட்டால் வாழைப்பூவில் உள்ள பால் கஞ்சியில் கலந்து விடும். பிறகு பூவை சுத்தமாக அலசி எடுத்துக்கொள்ளலாம்.
* காய்கறிகள் லேசாக வாடிப்போய் இருந்தால் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்திடுங்கள். அதில் காய்கறிகளை முழுதாக ஒரு மணி நேரம் முக்கி வைத்துவிட்டு எடுத்தால் 'பிரஷ்' ஆகி விடும்.
* வாழைத்தண்டை சிறிதாக நறுக்கி ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். கடுகை இடித்து சேர்த்து புளிக்காத தயிரும் கலந்து சாலட்டாக மாற்றி சுவைக்கலாம்.
* 50 கிராம் புதினாவை காய வைத்து இடித்து தூளாக்கி அதனை 10 கிலோ அரிசியில் தூவி வையுங்கள். வண்டு விழாது. சோற்றுக்கும் நல்ல சுவை கிடைக்கும்.
* தேங்காய் பால் பிழிந்தெடுத்த பின்பு அந்த துருவலை வைத்து துவையல் அரைக்கலாம். காய்ந்த மிளகாய், பெருங்காயம், உளுந்தம் பருப்பு போன்றவைகளை வறுத்து புளியும் சேர்த்து அரைக்க வேண்டும். உப்பும், கறிவேப்பிலையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
* புட்டு வேக வைத்த பின்பு, குழாயில் இருந்து அதை எளிதாக எடுக்க வேண்டுமானால் முதலிலே குழாயின் உள்ளே சிறிதளவு நெய்யை சேர்த்து விடுங்கள். புட்டு அதிக ருசியாகவும் இருக்கும்.
* சூடான பானங்களை கண்ணாடி டம்ளர்களில் ஊற்றுவதற்கு முன்னால் டம்ளரின் அடியில் ஒரு துணியை போடுங்கள். எவ்வளவு சூடான திரவத்தை ஊற்றினாலும் கண்ணாடி டம்ளர் உடையாது.
- முட்டைகள் வறுக்கும்போது எண்ணெயில் ஒட்டிக்கொள்ளும்.
- மசாலாப் பொருட்களின் சுவை உடனடியாக மாறும்.
சமையலறையில் வேலை செய்யும் போது, மனதில் கொள்ள வேண்டிய பல சிறிய குறிப்புகள் உள்ளன. இவை சமையலறை வேலைகளை எளிதாக்குவது மட்டுமல்லாமல், உங்கள் உணவின் சுவையையும் அதிகரிக்கின்றன. உங்களுக்கு பல சமையலறை குறிப்புகளைப் பற்றி தெரிந்திருக்கலாம். ஆனால் இந்த சமையல் குறிப்புகள் உங்கள் சமையலை எளிதாக்கும் மற்றும் சிறந்த சுவையை அளிக்கும்.
* முட்டைகள் வறுக்கும்போது எண்ணெயில் ஒட்டிக்கொள்ளும். எனவே நீங்கள் முட்டையை எண்ணெயில் சேர்க்கும் போதெல்லாம், முதலில் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும், பின்னர் முட்டையைச் சேர்க்கவும். இது முட்டை வாணலியின் அடிப்பகுதியில் ஒட்டாமல் தடுக்கும்.
* உருளைக்கிழங்கு அதிகமாக வேகாமல், கொதிக்கும் போது வெடிப்பதைத் தடுக்க விரும்பினால், உருளைக்கிழங்கை வேகவைக்கும் போது ஒரு ஸ்பூன் வினிகரைச் சேர்க்கவும்.
* தக்காளி வதக்குவதற்கு அதிக நேரம் எடுக்கும். எனவே, தக்காளியின் சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். இது அவை வேகமாக வேகவும், வதக்கவும் உதவும்.
* கடாயில் மசாலாப் பொருட்கள் கருகினால், உடனடியாக ஒரு ஸ்பூன் தயிர் சேர்க்கவும். அவ்வாறு செய்வதால் மசாலாப் பொருட்களின் சுவை உடனடியாக மாறும்.
* ஒரு முட்டை புதியதா என்பதைக் கண்டுபிடிக்க, அதை தண்ணீரில் போடுங்கள். மூழ்கினால், அது புதியது. அது மிதந்தால், பழையது.
* பக்கோடாவை மொறுமொறுப்பாக செய்ய விரும்பினால் உருண்டைகள் மிகவும் மொறுமொறுப்பாக இருக்க, சிறிது அரிசி மாவை கடலை மாவுடன் கலக்கவும். இது உருண்டைகளை இன்னும் மொறுமொறுப்பாக மாற்றும்.
* எந்த காய்கறி போட்டு குழம்பு செய்தாலும் கெட்டியாகவில்லை என்றால், ஒரு ஸ்பூன் வறுத்த கடலை மாவைச் சேர்க்கவும். இது குழம்பு கெட்டியாக வைக்க உதவும்.
- சப்பாத்தி மீந்துவிட்டால் மிக்சியில் பொடித்து உடன் நெய், முந்திரி, ஏலப்பொடி சேர்த்து உருட்டி கோதுமை லட்டு செய்யலாம்.
- சப்பாத்தி, இட்லிக்கு தொட்டுக்கொள்ள சுவையாய் இருக்கும்.
* குட்டீசுக்கு வாங்கின பிஸ்கட்டுகள் மீந்து நமுத்துவிட்டதா?அவற்றை மிக்சியில் போட்டு பொடித்து, பால், சர்க்கரை, கிரீம், முந்திரி சேர்த்து, பிரிட்ஜில் வைத்து நல்ல ஐஸ்கிரீமாக பரிமாறலாம்.
* காலையில் செய்த ரவை உப்புமாவுடன் கரம் மசாலா சேர்த்து, பிரெட் துண்டுகள் இடையே உப்புமாவை நிரவி, 'டோஸ்ட்' செய்து சாண்ட்விச்சாக சுவைக்கலாம்.
* சப்பாத்தி மீந்துவிட்டால் மிக்சியில் பொடித்து உடன் நெய், முந்திரி, ஏலப்பொடி சேர்த்து உருட்டி கோதுமை லட்டு செய்யலாம்.
* கறி வகைகள் மீதமானால் வாணலியில் சீரகம், தக்காளி, வெங்காயம் வதக்கி, உடன் மீந்த காய்கறியையும் சேர்த்து மிக்சியில் அரைத்து துவையலாக்கலாம். சப்பாத்தி, இட்லிக்கு தொட்டுக்கொள்ள சுவையாய் இருக்கும்.
* மீந்த சப்பாத்திகளை ரிப்பன் போல் வெட்டி எண்ணெயில் பொரித்து, சிறிது காரம், உப்பு சேர்த்து ஸ்னாக்ஸ் போல் மாலை வேளையில் தரலாம்.
- வெங்காயத்தில் அதிக ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அவற்றை இரவில் சாப்பிடுவது நல்லதல்ல.
- இரவில் நீங்கள் பருகும் ஒரு கப் காபி மற்றும் டீயின் விளைவு 8 முதல் 14 மணி நேரம் வரை நீடிக்கலாம்.
இரவு நேரத்தில் மிக எளிதில் ஜீரணிக்கும் உணவைச் சாப்பிட்டால்தான் நமது ஜீரண உறுப்புக்கள் ஆரோக்கியமாகச் செயல்பட்டு அஜீரணக்கோளாறு, அசிடிட்டி, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மைக் காக்கும்.
பகல் நேரத்தில் நாம் எப்படிச் சாப்பிட்டாலும் நாம் செய்யும் வேலைக்கு அவை ஜீரணித்துவிடும். ஆனால், இரவு நேரத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணிக்க நீண்ட நேரம் எடுக்கும்.
இரவில் சாப்பிடக்கூடாத சில உணவுகள் இருக்கின்றன. கீரை, நெல்லிக்காய், கட்டித்தயிர், கஞ்சி, பாகற்காய், இஞ்சி ஆகியவற்றை இரவில் தவிர்த்து விடுவது நல்லது. அதையும் மீறி சாப்பிட்டால், அந்த வீட்டில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்ய மாட்டார், செல்வம் தங்காது என்பது ஐதீகம். இரவில் பால் சோறு சாப்பிடலாம். இதனால் செல்வம் பெருகும்.
தக்காளியில் அசிடிட்டியை ஏற்படுத்தக்கூடிய அமிலங்கள் அதிகமாக இருப்பதால், இவற்றை இரவில் தவிர்ப்பது நல்லது. நடு ராத்திரியில் ஐஸ்கிரீம் உட்கொள்வது மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கும். இதனால், இரவில் தூங்குவதற்கு சிரமம் ஏற்படும்.
கிரீன் டீயில் காபி மற்றும் டீயை விட அதிக அமிலம் உள்ளது. இதை, இரவில் குடிக்கும் போது அதிக இதயத் துடிப்பு, பதட்டம் மற்றும் கவலை ஆகியவை ஏற்படலாம். எனவே, கிரீன் டீயை பகல் நேரத்தில் குடிப்பது நல்லது. ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்கள் நெஞ்செரிச்சலை அதிகரிக்கும். எனவே, இரவு நேரத்தில் சிட்ரஸ் நிறைந்த பழங்களை தவிர்ப்பது நல்லது.
வெங்காயத்தில் அதிக ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அவற்றை இரவில் சாப்பிடுவது நல்லதல்ல. இரவு நேரத்தில் வெங்காயம் சேர்த்த சாலட் சாப்பிடுவதால் வயிற்றில் வாயு உருவாகும். இதனால், உங்கள் தொண்டை பகுதியில் ரிப்ளக்ஸ் அமிலம் சுரக்கப்படும்.
இரவில் நீங்கள் பருகும் ஒரு கப் காபி மற்றும் டீயின் விளைவு 8 முதல் 14 மணி நேரம் வரை நீடிக்கலாம். அதுமட்டும் அல்ல, இது உங்கள் தூக்கத்தை கட்டுப்படுத்தும். எனவே, இவற்றை காலையில் பருகுவது நல்லது. காரமான பொருட்களை சாப்பிடுவது நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும். அல்லது அஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும். இதனால், தூக்கம் பாதிக்கப்படும். அதேபோல, கொழுப்பு சத்துக்கள் நிறைந்த பீட்சா, பர்க்கர், எண்ணெயில் பொறிக்கப்பட்ட ஸ்னாக்ஸ்கள் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. இந்த உணவுகள் அசவுகரியத்தை ஏற்படுத்துவதோடு, நெஞ்சு எரிச்சல், வயிற்று வலியை ஏற்படுத்தக்கூடும்.






