என் மலர்
நீங்கள் தேடியது "இட்லி"
- தென்னிந்தியர்களை கிண்டல் செய்யும் வகையில் ‘தோசை இட்லி சாம்பார் சட்னி சட்னி’ என்ற பாடல் வடஇந்தியர்கள் மூலம் டிரெண்ட் செய்யப்பட்டது
- திருவாதிரை களி சிவபெருமானுக்காக படைக்கப்படும் ஒரு பிரசாதமாகும்.
கூகுள் தனது பயனர்களால் அதிகம் தேடப்படும் பொருட்கள், பெயர்கள் என அனைத்துவிதமான தேடல்களின் பட்டியலையும் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் அதிகம் தேடப்பட்ட A டூ Z அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி அதிகம் தேடப்பட்ட உணவுகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில் தென்னிந்திய உணவான இட்லி முதலிடத்தை பிடித்துள்ளது. முதல் பத்து இடங்களில் கொழுக்கட்டை, திருவாதிரை களி இடம்பிடித்துள்ளன. முதல் பத்து இடங்களை பிடித்த உணவுகள் குறித்து காண்போம்.
இட்லி
இந்த தேடலில் தென்னிந்தியாவின் முக்கிய உணவான இட்லி முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் வட இந்தியர்கள் என சொல்லலாம். காரணம் தேசியக் கல்விக்கொள்கை, மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்புகள் எழுந்த சமயத்தில், இணையத்தில் முக்கியமாக இன்ஸ்டாவில் தென்னிந்தியர்களை கிண்டல் செய்யும் வகையில் 'தோசை இட்லி சாம்பார் சட்னி சட்னி' என்ற பாடல் வடஇந்தியர்கள் மூலம் டிரெண்ட் செய்யப்பட்டது. அப்போது அதிகம் இட்லி குறித்து தேடப்பட்டிருக்கலாம்.
Porn star martini
இரண்டாவது இடத்தில் Porn star martini உள்ளது. இது ஒரு காக்டெயில். வெண்ணிலா சுவையுள்ள Porn star martini ஷாட் கிளாஸ் ஷாம்பெயினுடன் சேர்க்கப்படுகிறது.
உகாடிச்சே மோடக்
உகாடிச்சே மோடக் என்பது வட இந்தியாவில் செய்யப்படும் கொழுக்கட்டை எனக்கூறலாம். விநாயகர் சதுர்த்தியின்போது இது அதிகம் தேடப்பட்டிருக்கும்.
தேக்குவா (இனிப்பு பிஸ்கட்)
4ம் இடத்தில் தேக்குவா (இனிப்பு பிஸ்கட்) உள்ளது. இது கஜூரியா, கஜூர் எனவும் அழைக்கப்படுகிறது. கோதுமை மாவில் வெல்லம், நெய், தேங்காய், ஏலக்காய், பெருஞ்சீரகம் போன்ற பொருட்கள் சேர்த்து செய்யப்படுகிறது.
உகாதி பச்சடி
உகாதி பச்சடி என்பது உகாதி பண்டிகையின் போது தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் செய்யும் ஒரு சிறப்பு உணவாகும். இது அறுசுவைகளின் கலவையாகும்.
பீட்ரூட் கஞ்சி
6ம் இடத்தில் பீட்ரூட் கஞ்சி உள்ளது. பீட்ரூட்டுடன் கேரட் கடுகு மற்றும் தேவையான மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் ஒரு உணவு.
திருவாதிரை
திருவாதிரை களி சிவபெருமானுக்காக படைக்கப்படும் ஒரு பிரசாதமாகும். இது பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், தேங்காய் மற்றும் ஏலக்காய் கொண்டு செய்யப்படுகிறது.
கொழுக்கட்டை
10ம் இடத்தில் கொழுக்கட்டை உள்ளது. கொழுக்கட்டையை நாம் அனைவரும் அறிவோம். விநாயகர் சதுர்த்தியன்று விநாயகப் பெருமானுக்கு படைக்க செய்யப்படும் முக்கிய உணவாகும்.
- பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளில், பல்வேறு தென் மாநில உணவு வகைகள் புதிதாக சேர்ப்பு
- முந்திரி உப்புமா, சாம்பார், மசால் தோசை, கிச்சடி, பரோட்டா ஆகிய உணவு வகைகள் சேர்ப்பு
வெளிநாடுகளுக்குச் செல்லும் தங்களது விமானங்களில் பயணிகளுக்கு தென்னிந்தியவின் சிறப்பான உணவுகளை இலவசமாக வழங்கப் போவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டு உணவான மிளகாய்ப் பொடி இட்லி, முந்திரி உப்புமா, மினி மைசூர் மசால் தோசை, கிச்சடி, பரோட்டா, சாம்பார், மூன்று வகை சட்னிகளான தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்டினி உள்ளிட்டவையும் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் தமிழக பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே சமயம் பிரியாணி, மலபாரி கோழிக் கறி, சிக்கன் பிம்பாப் உள்ளிட்ட அசைவ உணவுகளும் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
- எத்தனை நாட்களுக்கு ஒரே மாதிரியான இட்லியை சாப்பிடுவது என்று சலிப்பாக உள்ளதா?
- சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, துருவிக் கொள்ள வேண்டும்.
உங்களுக்கு இட்லி பிடிக்கும் ஆனால் எத்தனை நாட்களுக்கு ஒரே மாதிரியான இட்லியை சாப்பிடுவது என்று சலிப்பாக உள்ளதா? கவலையை விடுங்க... ஆரோக்கியமான இட்லி அதுவும் சுரைக்காய் இட்லி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க...
தேவையான பொருட்கள்:
* சுரைக்காய் - 1
* இட்லி ரவை - 1 கப்
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி - சிறிய துண்டு
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - தேவைக்கேற்ப
* புளித்த மோர் - 1 கப்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை.

செய்முறை:
* முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, துருவிக் கொள்ள வேண்டும்.
* ஒரு கப் துருவிய சுரைக்காயுடன் 1 கப் ரவை சேர்க்க பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சியை சேர்க்க வேண்டும்.
* பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, துருவிய தேங்காய் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்துக் கொள்ளவும் .
* பின் சுரைக்காயுடன் தாளிப்பு மற்றும் புளித்த மோரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் இட்லி தட்டில் எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள 'சுரைக்காய் இட்லி மாவை' கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சின்ன சின்ன இட்லியாக ஊற்றி 15 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான சுரைக்காய் இட்லி தயார்.
- பாசிப்பயிறு கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவாகும்.
- உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் இந்த இட்லியை சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 1 கப்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 3
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
துருவிய கேரட் - 1/4 கப்
கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி - 1 துண்டு
உப்பு - தேவையான அளவு
Eno - 1 தேக்கரண்டி
செய்முறை
ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாசிப்பருப்பு நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பேனில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும், அரை தேக்கரண்டி கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்துக் வதக்கவும்.
அடுத்து அதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அதனுடன் துருவிய கேரட், கொத்தமல்லி, இஞ்சி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
பின்னர் ஒரு தேக்கரண்டி Eno மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
இட்லி தட்டில் எண்ணெய் தடவி தயார் செய்து வைத்துள்ள மாவில் இட்லி ஊற்றவும்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சூடானதும் இட்லி தட்டுகளை வைத்து மூடி வைக்கவும்.
மிதமான சூட்டில் 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
இப்போது சுவையான பாசிப்பருப்பு தாளிச்ச இட்லி தயார்.
தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.
- சில்லி மசாலா இட்லி மாலை நேர சிற்றுண்டியாக உண்பதற்கு சுவையாக இருக்கும்.
- மீதமான இட்லியில் உப்புமா செய்யாமல் இப்படி செய்தால் உடனே காலியாகிவிடும்.
தேவையான பொருட்கள்
குட்டி இட்லி - 20
சமையல் எண்ணெய் - ½ கப்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி-பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி
கொத்தமல்லி - சிறிது
மிளகாய்த்தூள் - 1 ½ தேக்கரண்டி
கரம் மசாலா - ½ தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - ½ தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
டொமேட்டோ கெட்சப் - 1 தேக்கரண்டி
சோயா சாஸ் - ½ தேக்கரண்டி
செய்முறை
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை அரைத்து கொள்ளவும்.
ஒரு பானில் ¼ கப் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ½ தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்த பின்னர் அதில் குட்டி இட்லிகளை சேர்த்து கிளறவும்.
குறைவான தீயில் வைத்து இட்லியின் நிறம் மாறி லேசான பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதனை தனியே எடுத்து வைக்கவும்.
அதே கடாயில் ¼ கப் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
பின்னர் டொமேட்டோ கெட்சப் மற்றும் சோயா சாஸ் சேர்த்து நன்றாக கலந்த பின்னர் செய்து வைத்த இட்லியை சேர்த்து பிரட்டிக் விடவும். அடுப்பை குறைவான தீயில் வைக்கவும்.
2 நிமிடங்களுக்கு பின்னர் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும்.
சுவையான சில்லி மசாலா இட்லி தயார்.
- விரைவில் டிபன் செய்ய நினைப்பவர்கள் இந்த ரெசிபியை செய்யலாம்.
- காலையில் வேலைக்கு செல்பவர்கள் இந்த ரெசிபியை செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
சேமியா - 250 கிராம்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
தயிர் - 300 மில்லி
சாம்பார் வெங்காயம் - ஒரு கைப்பிடி
கேரட் - 1
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
நெய் - ஒரு குழி கரண்டி
எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
முந்திரிப் பருப்பு - 15
பெருங்காயம் - சிட்டிகை
மஞ்சள் பொடி - சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
இஞ்சி, கேரட்டை துருவிக்கொள்ளவும்.
கொஞ்சம் நெய் விட்டு சேமியாவை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும். டபுள் ரோஸ்டட் சேமியாவாக இருந்தால் வறுக்க வேண்டிய அவசியம் இல்லை.
வாணலியில் எண்ணெய் மற்றும் கொஞ்சம் நெய் விட்டு கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் கேரட், கொத்தமல்லித்தழையை சேர்த்து மிதமான தீயில் வதக்கி மஞ்சள்பொடி, உப்பு சேர்த்து, சேமியாவை அதில் கொட்டி கலந்து விட்டு வேறு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
இதனுடன் தயிர் மற்றும் அரிசி மாவை கலந்து நன்றாக கிளறி தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் மூடி வைத்து விடவும்.
இட்லி தட்டில் நெய் தடவி முந்திரி வைத்து விட்டு அதன் மீது இந்த கலவையை ஊற்றி 5 லிருந்து 6 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான சேமியா இட்லி தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, தக்காளி சட்னி அருமையான காம்பினேஷன்.
- குழந்தைகள் எப்போது வித்தியாசமான ரெசிபிகளை விரும்புவார்கள்.
- இட்லி சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள் :
இட்லி - 2
மூவர்ண குடமிளகாய் - தலா 1
இட்லி மிளகாய்ப்பொடி - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தே.அளவு
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
டூத்பிக் - தே.அளவு
சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
குடைமிளகாய், இட்லியை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
ஒரு பவுலில் இட்லி துண்டுகளை சேர்த்து அதன் மேல் சோள மாவை தூவி கிளறவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, இட்லிகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
இதன் மேலே இட்லி மிளகாய்ப்பொடிகளை எல்லா பக்கமும் படுவது போல தூவவும்.
அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கியூப் வடிவத்தில் நறுக்கிய குடமிளகாய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
இதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து லேசாக வதக்கவும்.
இனி டூத்பிக்கில் இட்லி, குடைமிளகாய் என ஒன்றன் பின் ஒன்றாக சொருகி பரிமாறவும்.
சூப்பரான இட்லி டிக்கா ரெடி.
- இட்லியில் கலோரிகள் குறைவாகவே உள்ளது.
- இட்லியில் நார்ச்சத்து மட்டுமின்றி இரும்பு சத்தும் நிறைந்துள்ளது.
தென் இந்தியாவில் உட்கொள்ளப்படும் காலை, இரவு நேர உணவுகளில் தவிர்க்கமுடியாத உணவுப்பொருள் இட்லி. அரிசி, உளுந்தம் பருப்பு என தானியம் மற்றும் பருப்பு கலவையில் தயாராகும் இட்லியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. எளிதில் செரிமானம் ஆவதோடு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருப்பதால் தென்னிந்தியாவை கடந்து உலகம் முழுவதும் இட்லி பிரபலமாகிவிட்டது. உலக இட்லி தினம் கொண்டாடும் அளவுக்கு அதன் புகழ் உயர்ந்துவிட்டது. சமீபத்தில் உலக இட்லி தினம் (மார்ச் 30) கொண்டாடப்பட்ட நிலையில், இட்லி பற்றிய இனிமையாக தகவல்கள் பற்றி பார்ப்போம்.
உடல் எடையை குறைக்கும்: இட்லியில் கலோரிகள் குறைவாகவே உள்ளது. எனவே இது எடை இழப்புக்கு வித்திடும். மேலும் இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். அதனால் பசி உணர்வு கட்டுக்குள் இருக்கும்.
செரிமானத்தை எளிதாக்கும்: இட்லியில் நார்ச்சத்து மட்டுமின்றி இரும்பு சத்தும் நிறைந்துள்ளது. உளுந்தம் பருப்பு உடலுக்கு தேவையான இரும்பு சத்தை தக்க வைக்க உதவும். இவை செரிமானத்தை எளிதாக்கவும் வழிவகை செய்யும்.
புரதச்சத்து கிடைக்கும்: இரண்டு வகையான புரதங்கள் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. முதல் வகை புரதம் விலங்கு இறைச்சிகளில் இருந்து கிடைக்கின்றன. அவை உடலுக்கு அத்தியாவசியமான அமினோ அமிலங்களையும் வழங்குகின்றன. இரண்டாம் வகை புரதம் காய்கறிகள், பழங்கள் போன்ற தாவர வகைகளில் இருந்து பெறப்படுகின்றன. அவற்றுள் சில அமினோ அமிலங்கள் இல்லாதிருக்கும். தானியங்கள் மற்றும் பருப்புகளில் சில அமினோ அமிலங்கள் இல்லாததால் அவை இரண்டாம் வகை புரதமாக கருதப்படுகின்றன. ஆனால் இட்லியில் இந்த இரு கலவைகளும் சேர்க்கப்படும்போது உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் அனைத்தும் கிடைக்கும்.
குடல் ஆரோக்கியத்தை காக்கும்: இட்லி மாவு புளிக்கவைக்கப்படும்போது நடக்கும் நொதித்தல் செயல்முறை காரணமாக புரோ பயாடிக்குகள் உருவாகின்றன. இவை குடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. செரிமானத்தை மேம்படுத்துவது முதல் உணவில் இருந்து நுண்ணூட்டச்சத்துக்களை வலுப்படுத்துவது வரை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாக அறியப்படுகிறது.
இட்லியை வண்ணமயமான உணவாகவும், நார்ச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் மாற்றுவதற்கு நிறைய காய்கறிகளுடன் சேர்த்து தயாரித்து சாப்பிடலாம். சட்னிக்கு பதிலாக காய்கறிகள் அதிகம் கலந்த சாம்பார் தயாரித்து சாப்பிடுவது சிறப்பானது.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- காலை அல்லது இரவு மீந்து போன இட்லி வைத்து இந்த ரெசிபியை செய்யலாம்.
- 10 நிமிடத்தில் தயிர் இட்லி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
இட்லி - 6,
புளிக்காத புது தயிர் - 3 டீஸ்பூன்,
மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்,
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
ஓமப்பொடி - 3 டீஸ்பூன்,
மாதுளம் முத்துக்கள் - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு.
உப்பு - தேவையான அளவு,
அரைக்க:
தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4,
முந்திரிப்பருப்பு - 6.
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - 1 டீஸ்பூன்.
செய்முறை:
தயிரை நன்றாக கடைந்து வைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து தயிருடன் கலந்துகொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து தயிரில் கலக்கவும்.
பரிமாறும்போது, கிண்ணங்களில் இட்லிகளை வைத்து, கடைந்த தயிரை அதன்மேல் ஊற்றி கொத்தமல்லித்தழை, ஓமப்பொடி, மாதுளம் முத்துக்கள், மிளகாய்தூள், சீரகத்தூள் துவி பரிமாறலாம்.
சூப்பரான தயிர் இட்லி ரெடி.
அல்லது வெறும் கொத்தமல்லித்தழையை மட்டும் தூவியும் பரிமாறலாம்.
இந்த இட்லிக்கு உப்பு காரம் சற்று தூக்கலாக இருந்தால் சுவையாக இருக்கும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- கேழ்வரகில் நார்ச்சத்து அதிக அளவு உள்ளது.
- கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - நான்கு கப்
உளுந்து - முக்கால் கப் ,
குடைமிளகாய் - 1,
ப.மிளகாய் - 3
கேரட் - 1,
வெங்காயம் - 1,
இஞ்சி - சிறிய துண்டு,
பச்சைப் பட்டாணி - கால் கப்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க
கடுகு, பெருங்காயம், உளுந்தம் பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - மூன்று ,
கறிவேப்பிலை - சிறிதளவு,
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், குடைமிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு கெட்டியாகக் கரைத்து வையுங்கள்.
உளுந்தை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்து கேழ்வரகு மாவில் சேர்த்து உப்பு போட்டு இட்லி மாவு பதத்தில் முதல் நாள் இரவே கரைத்து வையுங்கள். மறுநாள் நன்றாகப் பொங்கி விட்டிருக்கும். இந்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து இட்லிகளை ஆற வைத்துச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வையுங்கள்.
கடாயில் எண்ணெய் சேர்த்துக் கடுகு, பெருங்காயம், உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் குடைமிளகாய், கேரட் துருவல், வேகவைத்த பட்டாணி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பிறகு கொஞ்சம் உப்பு சேர்த்து வெட்டி வைத்த இட்லித் துண்டுகளைப் போட்டு நன்றாகப் புரட்டி யெடுங்கள்.
கடைசியாக கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்குங்கள்.
இப்போது சூப்பரான கேழ்வரகு மசாலா இட்லி ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்த இட்லி உடல் சூட்டைத் தணிக்கும் அருமருந்து.
- இன்று இந்த இட்லி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி - ஒரு கிலோ
உளுந்து - கால் கிலோ
வெந்தயம் -
இளநீர் - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு.
செய்முறை
இட்லி அரிசி, வெந்தயத்தை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
உளுந்தை தனியாக 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
அரிசி, வெந்தயத்தை கிரைண்டரில் போட்டு அரைக்கும்போது தண்ணீருக்குப் பதிலாக இளநீர் சேர்த்து அரைக்க வேண்டும்.
அதேபோல் உளுந்து அரைக்கும் போது தண்ணீருக்கு பதிலாக இளநீர் சேர்த்து அரைத்து சேர்க்கவும்.
அரைத்த இரண்டு மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, இளநீரைச் சேர்த்து கரைத்து புளிக்க வைத்து விட்டு, பின்பு இட்லிகளைச் சுட்டெடுக்கவும்.
சூப்பரான இளநீர் இட்லி தயார்!!!
உண்பதற்கு இனிப்பாக இருக்கும் இந்த இட்லி, வெயிலின் சூட்டைத் தணிக்கும் அருமருந்து.
கவனத்தில் கொள்ள வேண்டியவை..
இட்லி மாவு அரைக்கும் போது, மாவில் கைபடாமல் கரண்டியைப் பயன்படுத்தி அரைப்பது நல்லது. அப்போது தான் சீக்கிரம் புளிப்பது, நீண்ட நேரத்துக்குப் பிறகு புளிப்பது போன்ற பிரச்னை களைத் தவிர்க்க முடியும்.
அலுமினியம், ஈயம் பூசப்பட்ட பித்தளைப் பாத்திரம் போன்ற பாத்திரங்களில் மாவை வைத்தால் சீக்கிரம் புளித்து போக வாய்ப்புள்ளது. அதனால், எவர்சில்வர் பாத்திரத்தில் வைப்பது நல்லது.
அடுப்புக்குப் பக்கத்தில் மாவை வைத்துப் பயன்படுத்து வதைத் தவிர்க்க வேண்டும். காரணம் சூட்டில் மாவு சீக்கிரம் புளித்து விடும். இட்லியின் ருசி அதன் புளிப்புத் தன்மையில் தான் இருக்கு. புளிப்பு சரியான அளவில் இருந்தால் தான் இட்லி ருசி நன்றாக இருக்கும்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இட்லி சாப்பிடாத குழந்தைகளும் இதை விரும்புவார்கள்.
- இந்த ரெசிபியை 10 நிமிடத்தில் செய்து விடலாம்.
தேவையான பொருட்கள் :
இட்லி - 8
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1/2 டீஸ்பூன்
ப.மிளகாய் - 3
வேர்க்கடலை - சிறிதளவு
முந்திரி - 10
சின்ன வெங்காயம் - 50 கிராம்
கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
இட்லியை நன்கு உதிரி உதிரியாக உதிர்த்து வைக்கவும்.
வெங்காயம், கொத்தமல்லி தழை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் வேர்க்கடலை, முந்திரி சேர்த்து பொன்னிறமாக மாறியதும் நறுக்கிய சின்ன வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.
வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு சாம்பார் பொடி மற்றும் மிளகுப்பொடி சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.
அடுத்து அதில் உதிர்த்து வைத்திருக்கும் இட்லியை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து உதிரி உதிரியாக வரும் வரை கிளறவும்.
உதிரியாக வந்தவுடன் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் இட்லி உப்புமா ரெடி... சுட சுட பரிமாறுங்கள்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health






