என் மலர்
நீங்கள் தேடியது "இட்லி"
- இந்த களி அரிசி, வெல்லம், நெய் ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பாகும்.
- இன்னும் பல உணவுகள் இந்த பட்டியலில் இருக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் அந்த ஆண்டில் பொதுமக்களால் பெரிதும் விரும்பப்பட்டு தேடப்பட்டவை குறித்து கூகுள் பட்டியலை வெளியிடும். உதாரணத்திற்கு அரசியலில் அதிகம் தேடப்பட்ட தலைவர், சுற்றுலா செல்ல விரும்பி தேடிய இடம் என வெவ்வேறு தலைப்புகளில் டாப் 10 பட்டியலை கூகுள் வெளியிடுகிறது.
அந்த வகையில், 2025-ம் கூகுளில் இந்தியா அளவில் அதிகம் தேடப்பட்ட உணவு வகைகளை பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் இந்தியர்களால்அதிகம் தேடப்பட்ட உணவுகளில் தென்னிந்திய உணவுகளான இட்லி, கொழுக்கட்டை, திருவாதிரை களி உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளது சுவாரசியம்.

இட்லி
தென்னிந்தியாவில் எந்த உணவகத்துக்குப் போனாலும், உணவுப் பட்டியலில் முதலில் இருப்பது இட்லி. 'ரெண்டு இட்லி' என்றபடி டிபனை ஆரம்பிக்கிற நம் ஊர்க்காரர்களின் பழக்கம், அவ்வளவு சுலபத்தில் மாற்ற முடியாதது.
ஒரு காலத்தில் பலருக்கும் பண்டிகைகள், விருந்து, திருவிழாக்கள் போன்ற முக்கிய நாட்களில் மட்டுமே கண்ணில் காணக்கிடைத்த இட்லி இன்றைக்கு சல்லிசாகக் கிடைக்கிறது. கையேந்தி பவன், உயர்தர சைவ உணவகம், நட்சத்திர ஹோட்டல்கள்... ஏன்... சில வீடுகளில்கூட இட்லி வியாபாரம் வெகு ஜோராக நடக்கிறது.
இந்த அபூர்வ உணவு. வெகு எளிதாகக் கிடைப்பதாலேயே சாப்பிடுவதில் இதன் அளவு குறைந்து போயிருக்கலாம். ஆனால், இதன் மீதான மோகம் என்றென்றைக்கும் குறையவே குறையாது என்பதுதான் யதார்த்தம்.
அதனால் தான் என்னவோ 2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 உணவுகளுள் முதன்மையானது, இட்லிதான். இட்லி தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான ஒரு உணவாகும். அரிசி மற்றும் உளுந்த மாவு கொண்டு தயாரிக்கப்படும் இட்லி, மென்மையாக, பஞ்சு போன்று இருக்கும். இட்லிக்கு தேங்காய் சட்னி மற்றும் சாம்பார் அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும்.
திருவாதிரை களி

திருவாதிரை களி என்பது தமிழ்நாட்டில் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை திருநாளன்று சிவபெருமானுக்குப் படைக்கப்படும் மிக முக்கியமான பிரசாதமாகும். இந்த களி அரிசி, வெல்லம், நெய் ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பாகும். 2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 உணவுகளுள் 7-ம் இடத்தில் உள்ளது. திருவாதிரை அன்று சிவபெருமானுக்குப் படைக்கப்படும் இந்த களி, உடல் ஆரோக்கியத்திற்கும், மன நிம்மதிக்கும் நல்லது எனக் கருதப்படுகிறது.
கொழுக்கட்டை

2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10-வது உணவுதான் கொழுக்கட்டை. தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான இது ஆவியில் வேக வைத்து சாப்பிடக்கூடிய ஒரு ஸ்வீட்டாகும். விநாயகர் சதுர்த்தி நாளில் செய்யக்கூடிய முக்கியமான இனிப்பாகும். ஏனெனில் இது விநாயகருக்கு மிகவும் பிடித்த உணவாக கருதப்படுகிறது. இதனால் விநாயகர் சதுர்த்தி அன்று விதவிதமான முறையில் செய்வர்.
இன்னும் பல உணவுகள் இந்த பட்டியலில் இருக்கின்றன. அவைகள், போர்ன்ஸ்டார் மார்டினி, மோதகம், தேகுவா, உகாதி பச்சடி, பீட்ரூட் கஞ்சி, யார்க்ஷயர் புட்டிங், கோண்ட் கதிரா ஆகியவை ஆகும்.
- இட்லியை அதிகம் தேடியவர்களும் இந்தியர்களாகத்தான் இருப்பார்கள்
- என்றும் தென்னிந்திய உணவாகவே இருந்துவிட்டு போகட்டும்.
'இன்னைக்கும் இட்லிதானா' என சொல்பவர்களே கேட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்கான பதிவுதான் இது. இந்தாண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட உணவுகளில் இட்லிதான் முதலிடம் பிடித்துள்ளதாம். டின்னருக்கு நீங்க எப்புடியோ (உப்மா), அதுபோல ப்ரேக்ஃபர்ஸ்ட்க்கு அவங்க (இட்லி) என சுந்தரபாண்டியன் பட டயலாக்கை வைத்து எப்படி கலாய்த்தாலும், அய்யாதான் ஆல் ஏரியாலயு கிங்கு என கில்லி பட டயலாக்போல தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா என ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் முதலிடம் பிடித்துள்ளது இட்லி. 'நீங்க நெனக்கிறமாதிரி நா சாதாரணமான ஆள் இல்லடா' என்பது போல பல குணாதியசங்களை கொண்டது இட்லி.
அதாவது தொட்டுப் பார்த்தால் பஞ்சு, கடித்துப் பார்த்தால் ரப்பர் (சில ஹோட்டல்களில்), சட்னியில் முக்கி எடுத்தால் சோப்பு நுரை போல உறிஞ்சும் தன்மை என சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி ஒரு தனித்துவம். இன்னும் சொல்லப்போனால் இட்லி ஒரு மகாத்மா மாதிரி. மென்மையான உடம்பு, பெரிய மனசு, எல்லாருக்கும் பிடிக்கும். இன்னும் ஏதாவது சொல்லலாம் என நினைத்தால், புழந்தது போதும், எனக்கு புகழ்ச்சி புடிக்காது என இட்லியே கூறிவிடும். அதனால் இதனை இதோடு நிறுத்திக் கொள்வோம்.

இட்லியை வைத்து பெரும் அரசியல் நடந்தது
ஆனால் யார் இட்லியை தேடியிருப்பார்கள்? இட்லியை ஏன் தேடவேண்டும்? என நீங்கள் நினைப்பீர்கள். அதுகுறித்து பார்ப்போம். அட வேற யாரு இல்லங்க. எல்லாம் நம்ம பசங்கதான் என்று கூறுவதற்கு ஏற்ப இட்லியை அதிகம் தேடியவர்களும் இந்தியர்களாகத்தான் இருப்பார்கள் என்பதும் எனது கணிப்பு. காரணம் மும்மொழி கொள்கை, ஹிந்தி திணிப்பு சர்ச்சை இந்த வருட நடுவில் எழுந்தது. உங்களுக்கு நியாபகம் உள்ளதா? இந்த வாக்குவாதம் ரயில்நிலையம், பேருந்து நிலையம், சமூக வலைதளங்கள் என அனைத்து பக்கங்களும் முற்றியது.
முடிவுதான் என்ன?. வாக்குவாதம் முற்ற ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினரை விமர்சிக்க தொடங்கினர். அதாவது சமூக வலைதளங்களில் வடமாநிலத்தவர்களும், தென் மாநிலங்களுக்கும் வாக்குவாதம் முற்றியது. அப்போது தென்னிந்தியர்களை கிண்டலடிக்கும் விதமாக பல போஸ்டுகள் பதிவிடப்பட்டன. அதில் ஒன்றுதான் இட்லி. அதாவது தென்னிந்தியர்களை கிண்டல் செய்யும் வகையில் 'தோசை இட்லி சாம்பார் சட்னி சட்னி' என்ற பாடல் வடஇந்தியர்கள் மூலம் டிரெண்ட் செய்யப்பட்டது. இப்படி இட்லியை வைத்து ஒரு அரசியலே நடந்தது.
அப்போது இட்லி பற்றி தெரிந்துகொள்ள வட இந்தியர்கள் பலரும் தேடியிருக்கலாம். எது எப்டியோ நம்ம ரூட் கிளியர் ஆனா சரிதா என்பதுபோல அனைவரும் கூகுளில் தேட, 2025-ல் அதிகம் தேடப்பட்ட உணவுகள் பட்டியலில் இடம்பிடித்தார் இட்லி.

இட்லி
இவ்ளோ தெரிஞ்சிகிட்ட நாம இவரோட (இட்லி) வரலாறு தெரியாம போனா எப்டி?
இவ்ளோ நாளா நாம எல்லாரும் இட்லி, நம்ம ஊர்ல பிறந்ததுன்னு நினைச்சுட்டு இருக்கோம். ஆனா, அது எங்கயோ வெளிநாட்டுல இருந்து வந்துதுனு நிறைய பேர் சொல்றாங்க. எங்க இருந்து வந்தா என்ன? நம்ம ஊருக்கு வந்த பிறகு, நம்மளோட ஒன்னுக்குள்ள ஒன்னாய்ட்டாய்ங்க. அதனால வெளிநாடு வரலாறு எல்லாம் வேண்டாம். வட இந்தியர்கள் கிண்டலடித்ததுபோல அவர் என்னைக்கும் தென்னிந்திய உணவாகவே இருந்துவிட்டு போகட்டும்.






