என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Google"

    • செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடந்து வருகிறது
    • உலக நாடுகளின் ஏஐ கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது.

    டெல்லியின் பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாடு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 6 நாட்கள் நாட்கள் நடக்கும் இந்த மாநாடு வரும் 21-ந்தேதி முடிவடைகிறது.

    70,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மாநாட்டு திடலில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் அடங்கிய கண்காட்சியையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் உலக நாடுகளின் ஏஐ கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது.

    இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்துள்ள Google CEO சுந்தர் பிச்சை பிரதமர் மோடியை சந்தித்து உரையாடினார்.

    தொழில்நுட்பம், AI, புதிய கண்டுபிடிப்புகள், இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் சூழல் அமைப்பை வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

    • யூடியூப் தளத்தை அணுகுவதில் சிக்கல் இருந்தால், நீங்கள் தனியாக இல்லை.
    • அனைத்து தளங்களும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான யூடியூப் (YouTube) பயனர்கள் வீடியோ தளத்தை அணுகுவதில் சிக்கல்களை எதிர்கொண்டனர். இந்த செயலிழப்பு யூடியூப் தளம், யூடியூப் செயலி, யூடியூப் கிட்ஸ் மற்றும் யூடியூப் மியூசிக் உள்பட அனைத்து தளங்களும் பாதிகப்பட்டது.

    யூடியூப் தளம் செயலிழந்தது குறித்து டவுன்டிடெக்டர் (Downdetector) தளத்தில் அமெரிக்காவில் இருந்து மட்டும் 2,40,000-க்கும் மேற்பட்ட புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இந்தியாவில், சுமார் 17,000 பேர் யூடியூப் முடக்கம் பற்றி பதிவு செய்திருந்தனர். யூடியூப் செயலிழந்ததை அந்நிறுவனம் விரைவாக ஒப்புக்கொண்டது. மேலும், இது தொடர்பாக X தளத்திலும் பதிவிட்டது.

    அதில், "நீங்கள் இப்போது யூடியூப் தளத்தை அணுகுவதில் சிக்கல் இருந்தால், நீங்கள் தனியாக இல்லை - எங்கள் குழுக்கள் இதைப் பற்றி ஆராய்ந்து வருகின்றன...". "சிலர் யூடியூப் டிவி-யில் உள்நுழைய முடியவில்லை என்ற சிறிய எண்ணிக்கையிலான அறிக்கைகளையும் நாங்கள் காண்கிறோம். இது யூடியூப் முழுவதும் சிக்கலுடன் தொடர்புடையது. மேலும் நாங்கள் இங்கே அதை சரிசெய்யவும் பணியாற்றி வருகிறோம்," என்று கூறியது.

    தற்போது யூடியூப் வெளியிட்டுள்ள புதிய அப்டேட்டில் அனைத்து தளங்களும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த பதிவில், "இறுதி அப்டேட்: எங்கள் பரிந்துரைகள் அமைப்பில் உள்ள சிக்கல் தீர்க்கப்பட்டுள்ளது, மேலும் எங்கள் அனைத்து தளங்களும் (யூடியூப் தளம், யூடியூப் செயலி, யூடியூப் மியூசிக், யூடியூப் கிட்ஸ் மற்றும் யூடியூப் டிவி) இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன! நாங்கள் இதை சரிசெய்தபோது எங்களுடன் நீங்கள் பொறுமையாக இருந்ததற்கு நாங்கள் மிகவும் நன்றி கூறுகிறோம்," என்று கூகுள் சப்போர்ட் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    யூடியூப் தளத்தின் பரிந்துரைகள் அமைப்பில் உள்ள ஒரு சிக்கல் யூடியூபில் வீடியோக்கள் தோன்றுவதைத் தடுத்தது. இந்த செயலிழப்பு முகப்புப் பக்கம், யூடியூப் செயலி, யூடியூப் மியூசிக் மற்றும் யூடியூப் கிட்ஸ் ஆகியவற்றை பாதித்தது.

    இதுகுறித்த சமூக வலைத்தள பதிவுகளின்படி, யூடியூப் பயனர்கள் வீடியோ பிளேபேக் தோல்வி, உள்நுழைவு மற்றும் கணக்கு அணுகல் சிக்கல்கள் மற்றும் யூடியூப் டிவியில் ஸ்ட்ரீமிங் தடங்கல்கள் போன்ற சிக்கல்களை தெரிவித்தனர்.

    • சந்திரனின் இருண்ட நிழலைச் சுற்றி ஒரு பிரகாசமான ஒளிவட்டத்தை உருவாக்குகிறது.
    • இந்த நிகழ்வு இந்தியாவில் இருந்து தெரியாது.

    2026 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று, பிப்ரவரி 17 அன்று நடைபெறவிருக்கும் நிலையில், கூகுள் தனது முதன்மை பக்கத்தில் ஒரு சிறப்பு அனிமேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வலைப்பக்கத்தில் உள்ள பயனர்கள் வான நிகழ்வை மெய்நிகராக அனுபவிக்க அனுமதிக்கிறது. தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது தேடல் பக்கத்தில் நேரடியாகத் தோன்றும் ஒரு மாறும் காட்சி அம்சத்தை வெளியிட்டுள்ளது.

    பயனர்கள் "solar eclipse," "Surya Grahan," போன்ற முக்கிய வார்த்தைகளை தேடும் போது கூகுள் தேடல் பட்டியில் தட்டச்சு செய்வதன் மூலம் அனிமேஷனை காணலாம். முடிவுகள் ஏற்றப்பட்டதும், சூரியன் முழுவதும் சந்திரனின் இயக்கத்தை உருவகப்படுத்தும் ஒரு கிராஃபிக் திரையில் தோன்றும். இன்றைய கிரகணம் வளைய வடிவமானது என்பதால், அனிமேஷன் தனித்துவமான "நெருப்பு வளையம்" விளைவை எடுத்துக்காட்டுகிறது.

    இந்த வகையான கிரகணத்தில், சந்திரன் சூரியனுக்கு முன்னால் நேரடியாக நகர்கிறது, ஆனால் அதை முழுமையாக மறைக்காது. இதன் விளைவாக, சூரியனின் வெளிப்புற அடுக்கு தொடர்ந்து தெரியும், சந்திரனின் இருண்ட நிழலைச் சுற்றி ஒரு பிரகாசமான, உமிழும் ஒளிவட்டத்தை உருவாக்குகிறது, இது அனிமேஷன் மீண்டும் உருவாக்கும் ஒரு குறிப்பிடத்தக்க காட்சி.

    கிரகணம் இந்திய நேரப்படி பிற்பகல் 3:26 மணிக்குத் தொடங்கி மாலை 7:57 மணிக்கு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கிரகணத்தின் போது சூரியன் அடிவானத்திற்குக் கீழே இருப்பதால், இந்த நிகழ்வு இந்தியாவில் இருந்து தெரியாது. "நெருப்பு வளையம்" முதன்மையாக அண்டார்டிகா மற்றும் தென்னாப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் பகுதிகள் உட்பட தெற்கு அரைக்கோளத்தின் சில பகுதிகளிலிருந்து காணப்படுகிறது. 

    • கூகுளில் உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் நேரடியாக பணிபுரிகிறார்கள்.
    • கடந்த 2 ஆண்டுகளில் கூகுளில் விருப்ப ஓய்வு பெற்று 25 ஆயிரம் பேர் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் உள்ளது. உலகின் முன்னணி ஆன்லைன் தேடு பொறி என்ஜின் மட்டுமின்றி யூடியூப், பிளேஸ்டோர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை தவிர்த்து ஸ்மார்ட்போன் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை உற்பத்தி செய்து கிட்டத்தட்ட ஏகபோக உரிமையை அனுபவித்து வருகிறது.

    உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களான அமேசான், மெட்டா ஆகிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. ஆனால் இதற்கு கொஞ்சம் வித்தியாசமாக கூகுள் யோசித்து தங்களுடைய ஊழியர்களை நீக்கம் செய்கிறது. அந்த திட்டத்தின் பெயர்தான் 'விருப்ப ஓய்வு' (பை அவுட்). சட்ட பாதுகாப்பு, நிறுவனத்தின் பெயரை பாதுகாக்கவும் மற்றும் ஊழியர்கள் மாற்று வேலை தேடுவதற்கு நேரம் அமைக்கும் வகையில் அவர்களுக்கு குறிப்பிட்ட மாத சம்பளம் மற்றும் பிற பண பலன்களை அளித்து வெளியேற்றுவதே விருப்ப ஓய்வுத்திட்டம் ஆகும்.

    கூகுளில் உலகம் முழுவதும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் நேரடியாக பணிபுரிகிறார்கள். இதில் என்ஜினீயர்கள், தரவு ஆய்வாளர்கள், விளம்பர பிரிவு, வர்த்தக பரிவு உள்ளிட்டோர் அடங்குவர். செயற்கை நுண்ணறிவின் தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் கூகுளில் விருப்ப ஓய்வு பெற்று 25 ஆயிரம் பேர் வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விருப்ப ஓய்வு பெற்று குறிப்பிட்ட ஊழியர்கள் வெளியேறவில்லை என்றால் பணிக்கு லாயக்கில்லை என அந்த நிறுவனமே பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக மறைமுகமாக அறிவித்திருந்தது. தற்போது கூகுள் நிறுவனம் மீண்டும் விருப்ப ஓய்வு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. அந்த நிறுவனத்தின் 5 சதவீத ஊழியர்களுக்கு கூகுள் தலைமை வணிக அதிகாரி பிலிப் ஷிண்ட்லர் எழுதியுள்ள மின்னஞ்சல் கடிதத்தில் இந்த நடவடிக்கை குறித்து அவர் அறிவித்துள்ளார்.

    அதில் அவர் "2025-ம் ஆண்டில் நீங்கள் சாதித்த அனைத்தினாலும் நாம் இந்த ஆண்டை வலுவான நிலைப்பாட்டில் தொடங்குகிறோம். ஆனால் போட்டி நிலைமை வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது; முன்னேற்றத்தின் வேகம் மின்சார வேகத்தைப் போன்றது. பெரிய தாக்கத்தை ஏற்படுத்த செயற்கை நுண்ணறிவை தாராளமாக ஏற்க வேண்டும்" என்று வலியுறுத்திய அவர் "நிறுவனம் செயல்பட வேண்டிய வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள், அல்லது நிறுவனத்தின் முடிவுகளுக்கு கட்டுப்படாதவர்கள் வெளியேறலாம்" என்று அறிவித்துள்ளார். தீர்வு அணிகள், விற்பனை, நிறுவன வளர்ச்சி உள்ளிட்டவற்றில் பணிபுரியும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இதனால் பாதிப்படைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
    • கூகுள் தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகிறது.

    புதுடெல்லி:

    10-வது ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடரை இந்தியா, இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

    மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. தலா 5 அணிகள் என 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு லீக் போட்டி நடத்தப்படுகிறது. ஏ பிரிவில் இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் இருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். லீக், சூப்பர் 8, அரையிறுதி, பைனல் என மொத்தம் 55 போட்டிகள் நடக்கிறது.

    இந்தியாவில் கொல்கத்தா, அகமதாபாத், சென்னை, டெல்லி, மும்பை, இலங்கையில் கொழும்பு, பல்லேகலே ஆகிய மைதானங்களிலும் போட்டிகள் நடக்கின்றன.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    இணைய தேடு பொறியில் முதன்மை நிறுவனமான கூகுள் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்கள், பிரபலங்களின் பிறந்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அதன் தேடு பொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும். தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் நடைபெறுகிறது.
    • கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை மிகப் பெரிய கிரிக்கெட் பிரியர் ஆவார்.

    புதுடெல்லி:

    19-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் 15-ம் தேதி தொடங்கி மே 31-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் முக்கிய ஸ்பான்சராக சுந்தர் பிச்சையின் கூகுள் ஜெமினி களத்தில் இறங்கியுள்ளது.

    உலகளவில் ஏஐ போட்டியில் முன்னணியில் உள்ள கூகுள் நிறுவனத்தின் ஜெமினி, இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ஸ்பான்சராக 3 ஆண்டுக்கு ரூ.270 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

    இது ஐ.பி.எல். வரலாற்றில் AI தளங்களுடன் செய்யப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இந்த ஒப்பந்தம் கிரிக்கெட்டில் AI நிறுவனங்களின் ஆர்வம் வேகமாக அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது.

    ஏற்கனவே, பெண்கள் பிரீமியர் லீக் உடன் சாட் ஜிபிடி ரூ.16 கோடி மதிப்பிலான 2 ஆண்டு விளம்பர ஒப்பந்தம் செய்தது.

    கூகுள் நிறுவனத்தின் சிஇஓவான சுந்தர் பிச்சை மிகப் பெரிய கிரிக்கெட் பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மக்கள் அவருடைய கருத்துக்கள், அறிக்கைகள் மற்றும் அவரைப் பற்றிய சர்ச்சைகள் குறித்து அதிகம் தேடியுள்ளனர்.
    • ரசிகர்கள் போட்டி அட்டவணைகள், ஸ்கோர், வீரர்களின் பட்டியல் மற்றும் பல அம்சங்களுக்காகத் தேடினர்.

    2025-ம் ஆண்டு உலகளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் இவைதான். எதற்காக, ஏன்..? தேடப்பட்டன என்பதை விளக்கமாக அறிந்து கொள்வோம்.

    1. ஜெமினி (Gemini)

    ஏ.ஐ. இப்போது ஒவ்வொரு நாளும் அசுர வளர்ச்சி பெறுகிறது. செயற்கை நுண்ணறிவின் அன்றாட வாழ்வில் அதிகரித்து வரும் தாக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில், 2025-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக ஜெம்னை என வெளிநாட்டவர்களால் அழைக்கப்பட்ட ஜெமினி (Gemini) உள்ளது. ஜெமினியின் அம்சங்கள், அப்டேட்கள் மற்றும் வேலை, கல்வி மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றில் அதன் நடைமுறைப் பயன்பாடுகளைப் புரிந்துகொள்வதற்காக மக்கள் அந்த வார்த்தையை அதிகம் தேடியுள்ளனர்.

    2. இந்தியா வெர்சஸ் இங்கிலாந்து

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முக்கிய கிரிக்கெட் தொடர் காரணமாக, இந்தியா வெர்சஸ் இங்கிலாந்து (India vs England) என்பது அதிகம் தேடப்பட்ட சொற்களில் இரண்டாவதாக இடம் பிடித்துள்ளது. ரசிகர்கள் போட்டிகளுக்கான கால அட்டவணைகள், நேரலை மதிப்பெண்கள் மற்றும் வீரர்களின் ஆட்டத்திறன்களை உன்னிப்பாகப் பின்தொடர்ந்தனர்.

     

    3. சார்லி கிர்க் (Charlie Kirk)

    அரசியல் விவாதங்கள், பொது நிகழ்வுகளில் அதிகமாக பங்கேற்றது மற்றும் ஊடக வெளிச்சம் ஆகியவற்றின் காரணமாக சார்லி கிர்க் 2025-ல் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றார். மக்கள் அவருடைய கருத்துக்கள், அறிக்கைகள் மற்றும் அவரைப் பற்றிய சர்ச்சைகள் குறித்து அதிகம் தேடியுள்ளனர்.

    4. கிளப் வேர்ல்ட் கப் (Club World Cup)

    2025-ம் ஆண்டில் பிபா கிளப் வேர்ல்ட் கப் (FIFA Club World Cup) தொடர்பான தேடல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. கால்பந்து ரசிகர்கள் போட்டி முடிவுகள், பங்கேற்கும் அணிகள் மற்றும் போட்டி குறித்த சமீபத்திய தகவல்களைத் தேடினர்.

    5. இந்தியா வெர்சஸ் ஆஸ்திரேலியா (India vs Australia)

    மற்றொரு முக்கிய கிரிக்கெட் போட்டியான, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியும், அதுதொடர்பான முடிவுகளும் கூகுளில் அதிகம் தேடப்பட்டது.

    6. டீப் சீக் (DeepSeek)

    புதிய செயற்கை நுண்ணறிவு தளங்களையும், தேடல் தொழில்நுட்பங்களையும் மக்கள் அதிகம் தேடியதால் டீப் சீக் (DeepSeek) மக்களின் கவனத்தை ஈர்த்தது. ஏற்கனவே உள்ள செயற்கை நுண்ணறிவு கருவிகளிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது என்பதை அறிய மக்கள் தேடினர்.

    7. ஆசியக் கோப்பை (Asia Cup)

    2025-ம் ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இணையத்தில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. ரசிகர்கள் போட்டி அட்டவணைகள், ஸ்கோர், வீரர்களின் பட்டியல் மற்றும் பல அம்சங்களுக்காகத் தேடினர். இந்தப் போட்டி ஆசியாவின் சிறந்த அணிகளை ஒன்றிணைத்ததுடன், உலகளாவிய கவனத்தையும் ஈர்த்தது.

     

    8. ஈரான் (Iran)

    சர்வதேச அளவில் ஈரானை சுற்றி நிகழும் புவிசார் அரசியல் மற்றும் சர்வதேச செய்தி ஊடகங்களின் ஆர்வம் காரணமாக, 'ஈரான்' என்ற வார்த்தை அதிகம் தேடப்பட்டதாக உள்ளது. அந்த நாடு தொடர்பான அரசியல், சமூக மற்றும் ராஜதந்திர சூழ்நிலைகளை நன்கு புரிந்துகொள்வதற்காக மக்கள் அந்த நாடு பற்றிய தகவல்களைத் தேடினர்.

    9. ஐபோன் 17 (iPhone 17)

    ஐபோன்களுக்கென உலகளவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதனால்தான் ஐபோன் 17, 2025-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட தொழில்நுட்பம் தொடர்பான சொற்களில் ஒன்றாக மாறியது. ஐபோனை பயன்படுத்துபவர்கள் அது பற்றி கசிந்த தகவல்கள், எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் வெளியீட்டு தேதி போன்றவை குறித்துத் தேடினர்.

    10. இந்தியா-பாகிஸ்தான்

    'பாகிஸ்தான் மற்றும் இந்தியா' என்ற சொல், போர் பதற்றம், தூதரக நிகழ்வுகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் போன்றவற்றால் அதிகம் தேடப்பட்டதாக உள்ளது. இந்த ஆர்வம், இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான வரலாற்று, அரசியல் மற்றும் விளையாட்டுத் தொடர்புகளைப் பிரதிபலிக்கிறது. அதுமட்டுமின்றி தெற்காசிய விவகாரங்கள் மீது உலகளவில் உள்ள கவனத்தையும் இது பிரதிபலிக்கிறது.

    • இந்த களி அரிசி, வெல்லம், நெய் ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பாகும்.
    • இன்னும் பல உணவுகள் இந்த பட்டியலில் இருக்கின்றன.

    ஒவ்வொரு ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் அந்த ஆண்டில் பொதுமக்களால் பெரிதும் விரும்பப்பட்டு தேடப்பட்டவை குறித்து கூகுள் பட்டியலை வெளியிடும். உதாரணத்திற்கு அரசியலில் அதிகம் தேடப்பட்ட தலைவர், சுற்றுலா செல்ல விரும்பி தேடிய இடம் என வெவ்வேறு தலைப்புகளில் டாப் 10 பட்டியலை கூகுள் வெளியிடுகிறது.

    அந்த வகையில், 2025-ம் கூகுளில் இந்தியா அளவில் அதிகம் தேடப்பட்ட உணவு வகைகளை பட்டியலிடப்பட்டுள்ளது. அதில் இந்தியர்களால்அதிகம் தேடப்பட்ட உணவுகளில் தென்னிந்திய உணவுகளான இட்லி, கொழுக்கட்டை, திருவாதிரை களி உள்ளிட்டவையும் இடம் பெற்றுள்ளது சுவாரசியம்.

     

    இட்லி

    தென்னிந்தியாவில் எந்த உணவகத்துக்குப் போனாலும், உணவுப் பட்டியலில் முதலில் இருப்பது இட்லி. 'ரெண்டு இட்லி' என்றபடி டிபனை ஆரம்பிக்கிற நம் ஊர்க்காரர்களின் பழக்கம், அவ்வளவு சுலபத்தில் மாற்ற முடியாதது.

    ஒரு காலத்தில் பலருக்கும் பண்டிகைகள், விருந்து, திருவிழாக்கள் போன்ற முக்கிய நாட்களில் மட்டுமே கண்ணில் காணக்கிடைத்த இட்லி இன்றைக்கு சல்லிசாகக் கிடைக்கிறது. கையேந்தி பவன், உயர்தர சைவ உணவகம், நட்சத்திர ஹோட்டல்கள்... ஏன்... சில வீடுகளில்கூட இட்லி வியாபாரம் வெகு ஜோராக நடக்கிறது.

    இந்த அபூர்வ உணவு. வெகு எளிதாகக் கிடைப்பதாலேயே சாப்பிடுவதில் இதன் அளவு குறைந்து போயிருக்கலாம். ஆனால், இதன் மீதான மோகம் என்றென்றைக்கும் குறையவே குறையாது என்பதுதான் யதார்த்தம்.

    அதனால் தான் என்னவோ 2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 உணவுகளுள் முதன்மையானது, இட்லிதான். இட்லி தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான ஒரு உணவாகும். அரிசி மற்றும் உளுந்த மாவு கொண்டு தயாரிக்கப்படும் இட்லி, மென்மையாக, பஞ்சு போன்று இருக்கும். இட்லிக்கு தேங்காய் சட்னி மற்றும் சாம்பார் அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும்.

    திருவாதிரை களி


    திருவாதிரை களி என்பது தமிழ்நாட்டில் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை திருநாளன்று சிவபெருமானுக்குப் படைக்கப்படும் மிக முக்கியமான பிரசாதமாகும். இந்த களி அரிசி, வெல்லம், நெய் ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பாகும். 2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 உணவுகளுள் 7-ம் இடத்தில் உள்ளது. திருவாதிரை அன்று சிவபெருமானுக்குப் படைக்கப்படும் இந்த களி, உடல் ஆரோக்கியத்திற்கும், மன நிம்மதிக்கும் நல்லது எனக் கருதப்படுகிறது.

    கொழுக்கட்டை


    2025-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10-வது உணவுதான் கொழுக்கட்டை. தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான இது ஆவியில் வேக வைத்து சாப்பிடக்கூடிய ஒரு ஸ்வீட்டாகும். விநாயகர் சதுர்த்தி நாளில் செய்யக்கூடிய முக்கியமான இனிப்பாகும். ஏனெனில் இது விநாயகருக்கு மிகவும் பிடித்த உணவாக கருதப்படுகிறது. இதனால் விநாயகர் சதுர்த்தி அன்று விதவிதமான முறையில் செய்வர்.

    இன்னும் பல உணவுகள் இந்த பட்டியலில் இருக்கின்றன. அவைகள், போர்ன்ஸ்டார் மார்டினி, மோதகம், தேகுவா, உகாதி பச்சடி, பீட்ரூட் கஞ்சி, யார்க்ஷயர் புட்டிங், கோண்ட் கதிரா ஆகியவை ஆகும்.

    • தொற்றா நோய்கள், நகர்ப்புற நிர்வாகம், வேளாண்மை, உள்ளிட்ட துறைகளில் விரிவான ஆய்வு நடத்தப்படும்
    • மெட்ஜெம்மா (MedGemma) மாதிரிகளைப் அடிப்படையாக கொண்டு இந்தியாவிற்கான Health Foundation Models

    சென்னை ஐஐடி உட்பட இந்தியாவின் நான்கு முக்கிய கல்வி நிறுவனங்களில் ஏஐ மையங்களை மேம்படுத்த கூகிள் நிறுவனம் ரூ.72 கோடி நிதி அளிப்பதாக அறிவித்துள்ளது. தொற்றா நோய்கள், நகர்ப்புற நிர்வாகம், வேளாண்மை, உள்ளிட்ட துறைகளில் விரிவான ஆய்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி பெங்களூரு IISc-யில் உள்ள TANUH-க்கும், கான்பூரில் உள்ள Airawat Research Foundation-க்கும், IIT Madras-ல் உள்ள AI Centre of Excellence for Education-க்கும், IIT Ropar-ல் உள்ள ANNAM.AI-க்கும் இந்த நிதி பகிரப்படும். நேற்று (டிச.16) நடைபெற்ற கூகுளின் 'Lab to Impact' உரையாடலில் இந்த செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் கலந்துகொண்டார்.


    டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்திய ஏஐ தாக்க உச்சி மாநாடு2026-ல் இந்த அறிவிப்பு வெளியானது

    மேலும் கூகுள் தனது மெட்ஜெம்மா (MedGemma) மாதிரிகளைப் அடிப்படையாக கொண்டு இந்தியாவிற்கான Health Foundation Models- ஐ உருவாக்குவதற்கு $400,000 (தோராயமாக இந்திய மதிப்பில் ரூ.3 கோடியே 30 லட்சம்) வழங்குவதாகவும் கூறியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தோல் மருத்துவம் மற்றும் OPD வகைப்பாட்டிற்கான AI கருவிகளை உருவாக்க , அஜ்னா லென்ஸ் (ஸ்டார்அப் நிறுவனம்) எய்ம்ஸ் நிபுணர்களுடன் இணைந்து செயல்படும். IISc ஆராய்ச்சியாளர்கள் இதன் மருத்துவ பயன்பாடுகளை ஆராய்வர்.   

    • இந்த வருடம் மக்களின் curiosity எங்கே இருந்தது என்பதை கூகுள் நமக்கு எடுத்து காட்டுகிறது
    • இந்தியர்கள் அதிகம் தேடிய படங்கள் தான் 2025-ன் உண்மையான ட்ரெண்ட் படங்கள்.

    திரையரங்குகளில் வசூல் எவ்வளவு, எத்தனை நாட்கள் ஓடியது என்ற கணக்குகளை விட, இந்த வருடம் மக்களின் curiosity எங்கே இருந்தது என்பதை கூகுள் நமக்கு எடுத்து காட்டுகிறது

    "இந்த படம் என்ன?", "யார் நடித்திருக்காங்க?", "கதை உண்மையா?" – இப்படிப் பல கேள்விகளோடே இந்தியர்கள் அதிகம் தேடிய படங்கள் தான் 2025-ன் உண்மையான ட்ரெண்ட் படங்கள்.

    2025 REWIND-ல், கலெக்சனை ஒதுக்கி விட்டு, கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்கள் எவை?

    ஹிட்–ஃப்ளாப் எல்லையை தாண்டி மக்கள் மனசை கலக்கிய படங்கள் யாவை? இந்த லிஸ்ட், சினிமாவின் இன்னொரு பக்கமான Search Engine சொன்ன மக்கள் தீர்ப்பை வெளிப்படுத்துகிறது. அவ்வகையில் இந்த ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் காணலாம்

     1. சயாரா

    அஹான் பாண்டே மற்றும் அனீத் பத்தா நடிப்பில் உருவான காதல் படம் சயாரா. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி ரூ.500 கோடி வசூலை கடந்தது. வெறும் 50 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.550 கோடிக்கும் மேல் வசூலித்து அனைவரையும் வாய்பிளக்க வைத்தது. அறிமுக நடிகர்கள் நடிப்பில் வெளியான ஒரு படம் இவ்வளவு வசூலை குவிப்பது இதுவே முதல்முறையாகும்.

    இளைஞர்கள் பெரும் ஆதரவை பெற்ற இப்படம் கூகுள் Search-லும் முதல் இடத்தை பிடித்துள்ளது.


    2. காந்தாரா - சாப்டர் 1

    காந்தாரா படத்தின் வெற்றியை தொடர்ந்து ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் காந்தி ஜெயந்தியை தினத்தன்று வெளியாகியது. 2022 ஆம் ஆண்டு வெளியான 'காந்தாரா' படத்தின் முன்கதையாக 4 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதையாக இந்த படம் அமைந்தது.

    இப்படம் உலகளவில் ரூ. 852 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்தது. சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 800 கோடிக்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததால் இணையத்திலும் இப்படம் பேசுபொருளாகி இந்த பட்டியலில் 2 ஆம் இடம் பிடித்துள்ளது.


    3. கூலி

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி படம் இந்தாண்டில் அதிக எதிர்பார்ப்போடு வெளியான படமாகும்.

    அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் 4 நாட்களில் உலகளவின் மொத்தம் ரூ.404 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்தது. தமிழ் சினிமாவில் ரூ.1000 கோடி வசூலை குவித்த முதல் படம் என்ற சாதனையை கூலி படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்மறை விமர்சனங்களால் இப்படத்தின் வசூல் வெகுவாக குறைந்தது. மொத்தத்தில் இப்படம் உலக அளவில் 518 கோடி ரூபாய் தான் வசூல் செய்தது. எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்திருந்தால் இந்த பட்டியலில் முதல் இடத்தை கூட இப்படம் பெற்றிருக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.


    4. வார் 2

    ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான வார் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

    ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்தது மற்றும் கியாரா அத்வானியின் பிகினி காட்சிகள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை. திரையரங்குகளில் இப்படம் மீதான வரவேற்பு குறைந்தாலும் இணையத்தில் இப்படம் பெரும் பேசுபொருளாகி இப்பட்டியலில் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளது.


    5. சனம் தேரி கசம்

    சனம் தேரி கசம் இந்தாண்டு வெளியான படம் கிடையாது. 2016 ஆம் ஆண்டு வெளியான படம். அப்படியிருக்க இந்த படம் பட்டியலில் இடம்பெற காரணம் ரீரிலீஸ் தான்.

    2016-ம் ஆண்டு ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவான சனம் தேரி கசம் படம் ரூ.7 கோடி வசூலை ஈட்டி தோல்வி அடைந்தது. விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற இப்படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது.

    9 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 7-ம் தேதி இந்தப் படம் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. காதல் கதையை அடிப்படையாக கொண்ட இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுது. இந்தப் படம் ரூ.50 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது.

    தற்போது ரீரிலீஸ் கலாச்சாரம் இந்தியா முழுவதும் வைரஸ் போல பரவியுள்ளது. அதன் காரணமாக இப்படம் இந்த பட்டியலில் 5 ஆம் இடம் பிடித்துள்ளது.


    6. மார்கோ

    மலையாள நடிகரான உன்னி முகுந்தன் நடிப்பில் ஹனீஃப் அதேனி இயக்கத்தில் மார்கோ திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்திய சினிமாவில் இப்படி ஒரு ஆக்ஷன் திரைப்படம் வரவில்லை என மக்கள் படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

    இந்தி மொழியில் அதிக வசூலித்த மலையாள திரைப்படம் என்ற சாதனையை படைத்த இப்படம் மொத்தமாக 100 கோடி வசூலை கடந்தது. இந்தி பேசும் மக்களிடையே பெட்ரா வரவேற்பால் இந்த பட்டியலில் இப்படம் 6 ஆம் இடம் பிடித்துள்ளது.


    7. ஹவுஸ்புல் 5

    அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன், அர்ஜூன் ராம்பால் மற்றும் தர்மேந்திரா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள ஹவுஸ்புல் 5 படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது

    ஹவுஸ்புல் 4 பாகங்கள் பெற்ற வெற்றியால் ஹவுஸ்புல் 5 படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த எதிர்பார்ப்பினால் தான் இப்படம் இந்த பட்டியலில் 7 அம இடம் பிடித்துள்ளது.


    8. கேம் சேஞ்சர்

    இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்து வெளியான திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக தோல்வியடைந்தது.

    இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு காரணமாக இந்த பட்டியலில் இப்படம் 8 ஆம் பிடித்துள்ளது.


    9. மிசஸ்

    Mrs' என்பது 2025-ல் அதிகம் பேசப்பட்ட இந்திய படங்களில் ஒன்று. மலையாளத்தில் வெளியான The Great Indian Kitchen படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன இந்த படம், திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் சந்திக்கும் அதிகாரம், அடக்குமுறை மற்றும் அடையாள இழப்பு போன்ற பிரச்சினைகளை நுணுக்கமாக பேசுகிறது.

    இப்படத்தில் நாயகியாக நடித்துள்ள சன்யா மல்ஹோத்ரா, பாரம்பரிய குடும்ப அமைப்பில் சிக்கிக் கொள்ளும் ஒரு பெண்ணின் மனஅழுத்தத்தையும், அவளின் மௌன எதிர்ப்பையும் மிக யதார்த்தமாக வழிபடுத்தியுள்ளார்.

    பெரிய ட்விஸ்ட், அதிக வசனங்கள் இல்லாமல், அன்றாட வாழ்க்கையின் சின்னச் சின்ன விஷயங்களின் மூலம் சமூக உண்மைகளை சொல்வதே 'Mrs' படத்தின் பலம். பெண்களின் உழைப்பு, சமத்துவம், திருமண வாழ்க்கையில் உள்ள மறைமுக வன்முறை போன்ற விஷயங்களை நேர்மையாக பேசும் இந்த படம், வசூலை விட விவாதத்திலும், தேடலிலும் அதிக கவனம் பெற்றது.


    10. மகாவதார் நரசிம்மா

    அஷ்வின் குமார் இயக்கத்தில் அனிமேஷன் திரைப்படமாக வெளியான மகாவதார் நரசிம்மா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதானின் கதையாகும்.

    வெறும் ரூ.15 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன்மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அதிக வசூல் செய்த அனிமேஷன் திரைப்படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்தது.

    வட இந்தியாவில் இப்படம் பெற்ற பெரிய வெற்றியால் இந்த பட்டியலில் இப்படம் 10 ஆம் இடம் பிடித்துள்ளது.

    • இந்த ஆண்டு கூகுள் தேடலில் பஞ்சாப் கிங்ஸ் அணி உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்தது.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அடுத்த இடத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணிகளின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டது.

    இந்த ஆண்டு கூகுள் தேடலில் பஞ்சாப் கிங்ஸ் அணி உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இதேபோல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அடுத்த இடத்தில் உள்ளது.

    ஐ.பி.எல். போட்டியில் இதுவரை கோப்பை வெல்லாத அணிகளாக உள்ள இந்த இரண்டு அணிகளை கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.

    இந்த இரு அணிகளும் கோப்பைக்காக கடுமையாகப் போட்டியிட்டதால் அவற்றின் மீது அதிக ஆர்வம் எழுந்திருக்கலாம்.

    விராட் கோலி, எம்.எஸ்.தோனி போன்ற ஜாம்பவான்கள் இருந்தபோதிலும் அவர்கள் இடம்பெற்றுள்ள அணி கூகுள் தேடலில் முதலிடத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென்னிந்தியர்களை கிண்டல் செய்யும் வகையில் ‘தோசை இட்லி சாம்பார் சட்னி சட்னி’ என்ற பாடல் வடஇந்தியர்கள் மூலம் டிரெண்ட் செய்யப்பட்டது
    • திருவாதிரை களி சிவபெருமானுக்காக படைக்கப்படும் ஒரு பிரசாதமாகும்.

    கூகுள் தனது பயனர்களால் அதிகம் தேடப்படும் பொருட்கள், பெயர்கள் என அனைத்துவிதமான தேடல்களின் பட்டியலையும் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் அதிகம் தேடப்பட்ட A டூ Z அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி அதிகம் தேடப்பட்ட உணவுகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில் தென்னிந்திய உணவான இட்லி முதலிடத்தை பிடித்துள்ளது. முதல் பத்து இடங்களில் கொழுக்கட்டை, திருவாதிரை களி இடம்பிடித்துள்ளன. முதல் பத்து இடங்களை பிடித்த உணவுகள் குறித்து காண்போம். 

    இட்லி

    இந்த தேடலில் தென்னிந்தியாவின் முக்கிய உணவான இட்லி முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் வட இந்தியர்கள் என சொல்லலாம். காரணம் தேசியக் கல்விக்கொள்கை, மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்புகள் எழுந்த சமயத்தில், இணையத்தில் முக்கியமாக இன்ஸ்டாவில் தென்னிந்தியர்களை கிண்டல் செய்யும் வகையில் 'தோசை இட்லி சாம்பார் சட்னி சட்னி' என்ற பாடல் வடஇந்தியர்கள் மூலம் டிரெண்ட் செய்யப்பட்டது. அப்போது அதிகம் இட்லி குறித்து தேடப்பட்டிருக்கலாம்.

    Porn star martini 

    இரண்டாவது இடத்தில் Porn star martini உள்ளது. இது ஒரு காக்டெயில். வெண்ணிலா சுவையுள்ள Porn star martini ஷாட் கிளாஸ் ஷாம்பெயினுடன் சேர்க்கப்படுகிறது.

     உகாடிச்சே மோடக்

    உகாடிச்சே மோடக் என்பது வட இந்தியாவில் செய்யப்படும் கொழுக்கட்டை எனக்கூறலாம். விநாயகர் சதுர்த்தியின்போது இது அதிகம் தேடப்பட்டிருக்கும்.

    தேக்குவா (இனிப்பு பிஸ்கட்)

    4ம் இடத்தில் தேக்குவா (இனிப்பு பிஸ்கட்) உள்ளது. இது கஜூரியா, கஜூர் எனவும் அழைக்கப்படுகிறது. கோதுமை மாவில் வெல்லம், நெய், தேங்காய், ஏலக்காய், பெருஞ்சீரகம் போன்ற பொருட்கள் சேர்த்து செய்யப்படுகிறது.

     உகாதி பச்சடி

    உகாதி பச்சடி என்பது உகாதி பண்டிகையின் போது தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் செய்யும் ஒரு சிறப்பு உணவாகும். இது அறுசுவைகளின் கலவையாகும். 

    பீட்ரூட் கஞ்சி 

    6ம் இடத்தில் பீட்ரூட் கஞ்சி உள்ளது. பீட்ரூட்டுடன் கேரட் கடுகு மற்றும் தேவையான மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் ஒரு உணவு.

    திருவாதிரை

    திருவாதிரை களி சிவபெருமானுக்காக படைக்கப்படும் ஒரு பிரசாதமாகும். இது பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், தேங்காய் மற்றும் ஏலக்காய் கொண்டு செய்யப்படுகிறது.

    கொழுக்கட்டை

    10ம் இடத்தில் கொழுக்கட்டை உள்ளது. கொழுக்கட்டையை நாம் அனைவரும் அறிவோம். விநாயகர் சதுர்த்தியன்று விநாயகப் பெருமானுக்கு படைக்க செய்யப்படும் முக்கிய உணவாகும்.  

    ×