search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Solar eclipse"

    • இந்தியா உள்பட பெரும்பாலான ஆசிய நாடுகளில் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியாது.
    • அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் முழு சூரிய கிரகணம் தெரிந்தது.

    வாஷிங்டன்:

    சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டு புள்ளியாக சந்திரன் வரும். அப்போது சூரியனை சந்திரன் மறைப்பதால் கிரகணம் நிகழ்கிறது. இந்த ஆண்டு முதல் சூரிய கிரகணம் என கூறப்படுகிறது.

    இந்தியா உள்பட பெரும்பாலான ஆசிய நாடுகளில் இந்த கிரகணத்தைப் பார்க்கமுடியாது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ மற்றும் வட அமெரிக்க நாடுகளில் சூரிய கிரணக்கத்தை பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், முழு சூரிய கிரகணம் அமெரிக்காவில் தெரிந்தது. இந்த நிகழ்வை டல்லாஸ், இண்டியானாபோலிஸ், கிளீவ்லேண்ட் மற்றும் நியூயார்க்கின் பஃபலோ ஆகிய நகர மக்கள் கண்டு களித்தனர். மேலும் கனடா, மெக்சிகோவிலும் சூரிய கிரகணம் தெரிந்தது. இதுதொடர்பான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

    • 2024-ம் ஆண்டின் கிரகண நிகழ்வுகள், மார்ச் 25-ந்தேதி ஏற்படும் சந்திர கிரகணத்துடன் தொடங்குகிறது.
    • செப்டம்பர் 18-ந்தேதி காலை நிகழும் பகுதி சந்திர கிரகணம் இந்தியாவில் காணப்படாது.

    இந்தூர்:

    சூரியன்-சந்திரன்-பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. அதன்படி சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணமும், சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி இருக்கும்போது சந்திர கிரகணமும் ஏற்படுகிறது.

    இந்த நிலையில் நடப்பு ஆண்டில் முழு சூரிய கிரகணம் உள்பட 4 கிரகணங்கள் நிகழும் என்றும், ஆனால் அவை எதையும் இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது என்றும் மத்தியபிரதேசத்தை சேர்ந்த வானியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

    நடப்பு ஆண்டு கிரகணங்கள் நிகழ்வு குறித்து உஜ்ஜைன் நகரில் உள்ள அரசு ஜிவாஜி ஆய்வகத்தின் மூத்த அதிகாரி ராஜேந்திர பிரகாஷ் குப்தா கூறியதாவது:-

    2024-ம் ஆண்டின் கிரகண நிகழ்வுகள், மார்ச் 25-ந்தேதி ஏற்படும் சந்திர கிரகணத்துடன் தொடங்குகிறது. இந்த கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது.

    அதனை தொடர்ந்து, முழு சூரிய கிரகணம் ஏப்ரல் 8 மற்றும் 9-ந்தேதிக்கு இடைப்பட்ட இரவில் நிகழ உள்ளதால், இந்த கிரகணத்தையும் இந்தியாவில் பார்க்க இயலாது.

    அதேபோல் செப்டம்பர் 18-ந்தேதி காலை நிகழும் பகுதி சந்திர கிரகணமும் இந்தியாவில் காணப்படாது.

    அக்டோபர் 2 மற்றும் 3-ந்தேதிக்கு இடைப்பட்ட இரவில் நிகழவுள்ள வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் புலப்படாது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பூமியை பொறுத்தவரை ஓர் ஆண்டில் 2 முதல் 5 சூரிய கிரகணங்கள் நிகழக்கூடும்.
    • அமெரிக்காவின் வானிலை ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் இணைய தள பக்கத்தில் சூரிய கிரகணம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    வாஷிங்டன்:

    சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த சமயத்தில் சூரியனின் ஒளியை சந்திரன் மறைக்கும். பூமியை பொறுத்தவரை ஓர் ஆண்டில் 2 முதல் 5 சூரிய கிரகணங்கள் நிகழக்கூடும்.

    இந்நிலையில் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நடைபெற உள்ளது. 178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில் இந்த அரிய கிரகணம் நிகழ்கிறது.

    இந்திய நேரப்படி இரவு 8.34 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2.25 மணி வரை சூரிய கிரகணம் நடக்க உள்ளது. இரவு நேரம் என்பதால் இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியாது.

    இந்த சூரிய கிரகணம் அமெரிக்காவில் நன்றாக தெரியும் என்றும் நெருப்பு வளையம் போல காட்சி அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருப்பு வளைய சூரிய கிரகணம் நிலவு பூமியில் இருந்து வழக்கத்தை விட சற்று தொலைவில் இருக்கும் போது நிகழ்கிறது. இது சூரியனை முழுமையாக மறைக்காது. அதற்கு பதிலாக ஒரு மெல்லிய நெருப்பு வளையம் போல் தெரியும்.

    அமெரிக்காவின் வானிலை ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் இணைய தள பக்கத்தில் சூரிய கிரகணம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    பித்ரு அமாவாசை எனப்படும் மகாளய அமாவாசை தினத்தில் கிரகணம் ஏற்படுவது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, 178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில் இந்த அரிய கிரகணம் ஏற்படுவதால் இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது. பல ஆண்டுகாலத்திற்கு புண்ணியத்தையும் முன்னோர்களின் ஆசியையும் கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து வருகிற 28-ந்தேதி பவுர்ணமி நாளில் சந்திர கிரகணமும் ஏற்பட உள்ளது. இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 28- ந்தேதி ஏற்படும் சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இரவு 11.31 மணிக்கு தொடங்கி மறுநாள் 29- ந்தேதி அதிகாலை 3.56 மணி வரை நீடிக்க உள்ளது. இதன் காரணமாக சந்திர கிரகணத்தை இந்தியாவில் மிகவும் தெளிவாக வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்திய நேரப்படி இன்று காலை 7.04 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கியது.
    • அதிகபட்சமாக 1 நிமிடம் 16 வினாடிகள் மட்டுமே முழு சூரிய கிரகணம் இருக்கும்.

    ஆஸ்திரேலியா:

    இயற்கை பேரதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படும் சூரிய கிரகணம் இன்று ஏற்படுகிறது. சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

    அதன்படி இன்று சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளது. இன்று நடக்கும் சூரிய கிரகணம் ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் காணமுடியும்

    இந்திய நேரப்படி இன்று காலை 7.04 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கியது. இந்த கிரகணம் நண்பகல் 12.29 மணி வரை நீடிக்கிறது. 12.29 மணிக்கு முழு சூரிய கிரகணமாக ஏற்படும். ஆசியாவின் கிழக்கு கடல் ஓரம் அண்டார்டிகா, ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளில் சூரிய கிரகணத்தை தெளிவாக காண முடியும்.

    இந்த சூரிய கிரகணத்தை பகுதி அளவாகவோ, முழுமையாகவோ இந்தியாவின் எந்த பகுதியிலும் பார்க்க முடியாது. அதிகபட்சமாக 1 நிமிடம் 16 வினாடிகள் மட்டுமே முழு சூரிய கிரகணம் இருக்கும்.

    சூரிய கிரகணத்தை 'தென்கிழக்கு ஆசியா, கிழக்கிந்திய தீவுகள், பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் பகுதி அளவாக காண முடியும் எனவும்' என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    • திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் சூரிய கிரகணத்தின்போது மேகம் சூழ்ந்திருந்தது.
    • பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் கிரகணத்தின்போது உலக்கையை உரல் மீது நிறுத்தி வைப்பார்கள். கிரகணம் நடைபெறும் நேரத்தில் அந்த உலக்கை கீழே விழுகாமல் நேராக நிற்கும்.

    வடமதுரை:

    சூரிய கிரகணம் நேற்று மாலை 4.29 மணியிலிருந்து 5.48 மணிவரை நடைபெற்றது. இதனை வெறும் கண்களால் பார்த்தால் பாதிப்பு ஏற்படும் என்பதால் பல்வேறு பகுதிகளில் கண்ணாடி அணிந்து பொதுமக்கள் பார்த்தனர்.

    கொடைக்கானலில் மேகமூட்டம் இருந்ததால் கிரகணம் தெரியவில்லை. இதேபோல் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் சூரிய கிரகணத்தின்போது மேகம் சூழ்ந்திருந்தது. பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் கிரகணத்தின்போது உலக்கையை உரல் மீது நிறுத்தி வைப்பார்கள். கிரகணம் நடைபெறும் நேரத்தில் அந்த உலக்கை கீழே விழுகாமல் நேராக நிற்கும்.

    தற்போதும் பெரும்பாலான கிராமங்களில் இந்த முறையில் கணித்து வருகின்றனர். நேற்று கிரணகத்தின்போது எரியோடு அருகே தொட்டணம்பட்டியை சேர்ந்த விவசாயி சிவா(32) தனது விளைநிலத்தில் நெல்குத்தும் உரல் மீது உலக்கையை நிற்க வைத்தார். அது கிரகணம் முடியும் வரை நேராக நின்றது.

    இதேபோல் திண்டுக்கல்லில் பல வீடுகளில் உலக்கையை நிறுத்தி வைத்தனர். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. மாறி வரும் விஞ்ஞான உலகில் நமது முன்னோர்களின் பாரம்பரியத்தையும் பின்பற்ற வேண்டும். தொழில்நுட்ப வசதி இல்லாத காலத்தில் சூரிய கிரகணம் கோள்களின் இயக்கம் ஆகியவற்றை சிற்பம் மூலம் வெளிப்படுத்தினர்.

    எனவே நாமும் அதை பின்பற்ற வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • ஐயாறப்பர் கோவில் மூலவர் சுயம்பாக இருப்பதனால் அவை கைலாயத்திற்கு நிகரானவையாக கருதப்படுகிறது.
    • கதவு சாத்தப்படாமல் சூரிய கிரகணம் நடைபெறும்போது சூலப்பாணிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    சூரிய கிரகணத்தையொட்டி கோவில் நடைகள் சாத்தப்பட்டன. கிரகணம் முடிந்தபிறகு கோவில் திறக்கப்பட்டதும் சாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    அந்தவகையில் திருவையாறு அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் கோவில் மூலவர் சுயம்பாக இருப்பதனால் அவை கைலாயத்திற்கு நிகரானவையாக கருதப்படுகிறது. கதவு சாத்தப்படாமல் சூரிய கிரகணம் நடைபெறும்போது புஷ்பமண்டப படித்துறை காவிரி ஆற்றில் சூலப்பாணிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம் போன்ற திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர், சூலப்பாணியை மேளதாளம் முழங்க சன்னதிக்கு கொண்டு சென்று ஐயாறப்பர் மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    • பிற்பகல் 3 மணி அளவில் கோவில்கள் நடை சாத்தப்பட்டது.
    • கிரகணம் முடிந்த பின் கோவிலை சுத்தம் செய்து பூஜைகள் நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடத்தில், சூரிய கிரகணத்தை முன்னிட்டு நேற்று பிற்பகல் 3 மணி அளவில் கோவில்கள் நடை சாத்தப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு கிரகணம் முடிந்த பின் கோவிலை சுத்தம் செய்து பூஜைகள் நடைபெற்றது.

    அந்த வகையில் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் சூரிய பகவானுக்கு சிறப்பு பூஜைகளும் 16 வகை திரவியங்களால் அபிஷேகமும் நடைபெற்றது. காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அப்ச‌ர்வேட்ட‌ரி வான் இய‌ற்பிய‌ல் ஆராய்ச்சி மைய‌த்தில் நேற்று ந‌டைபெற்ற‌ ப‌குதி நேர‌ சூரிய‌ கிர‌க‌ண‌த்தினை காண‌ வான் இய‌ற்பிய‌ல் ஆராய்ச்சி மைய‌த்தில் அதிக‌ள‌வில் குவிந்த‌ன‌ர்.
    • கொடைக்கானல் ம‌லைப்ப‌குதிக‌ளில் காலை முத‌லே அட‌ர்ந்த‌ மேக‌ மூட்ட‌ம் நில‌விய‌தால் ப‌குதி நேர‌ சூரிய‌ கிர‌க‌ண‌ம் தென்ப‌ட‌வில்லை. சுற்றுலா ப‌ய‌ணிக‌ளும் பொதும‌க்க‌ளும் விஞ்ஞானிகள் உட்பட அனைவரும் மிகுந்த‌ ஏமாற்ற‌த்துட‌ன் திரும்பினர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கான‌ல் அப்ச‌ர்வேட்ட‌ரி வான் இய‌ற்பிய‌ல் ஆராய்ச்சி மைய‌த்தில் நேற்று ந‌டைபெற்ற‌ ப‌குதி நேர‌ சூரிய‌ கிர‌க‌ண‌த்தினை காண‌ வான் இய‌ற்பிய‌ல் ஆராய்ச்சி மைய‌த்தில் அதிக‌ள‌வில் குவிந்த‌ன‌ர்.

    ல‌டாக் ம‌லைப்பிர‌தேச‌த்தில் உள்ள‌ ஹேண்ட்லே வான் இயற்பியல் ஆய்வகத்தில் இந்த சூரிய கிரகணம் 55 சதவிகிதம் தெரிய‌வாய்ப்புள்ள‌தாக‌வும், திருவனந்தபுரத்தில் 2 சதவிகிதமும், கொடைக்கானலில் ஏறத்தாழ 3 முதல் 4 சதவிகிதமும் தென்படும் எனவும் மேலும் இதைப் பார்க்கும்போது பெரிய மாற்றத்தை நாம் கண்டுபிடிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

    கொடைக்கான‌ல் அப்ச‌ர்வேட்ட‌ரி வான் இய‌ற்பிய‌ல் ஆய்வ‌கத்தில் இருந்து ஆய்வாளர்கள் ல‌டாக் ம‌லைப்பிர‌தேச‌த்தில் உள்ள ஹேண்ட்லேவிற்கு சென்று உள்ளார்கள் என‌வும் இந்த கிரகணம் மாலை 4 மணி 29 நிமிடங்களுக்கு ஆரம்பமாகி இதனுடைய உச்சகட்ட மறைவு நிலை மாலை 5 மணி 30 நிமிடங்களுக்கும், சூரியன் மறையும் போது 5 மணி 48 நிமிடமுமாகும்,

    இதனை பாதுகாப்பாக பார்ப்பதற்கு மைலோ பில்டர் மற்றும் பாலிமர் பில்டரில் சூரிய கண்ணாடிகளை த‌யார் செய்துள்ள‌தாக‌வும், இதில் பார்ப்பது மிகவும் பாதுகாப்பானது என‌வும் இந்தக் கண்ணாடி இல்லாமல் சூரிய‌ கிர‌கண‌த்தினை வெறும் க‌ண்க‌ளில் பார்த்தால் கண்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

    எனவே இந்தசூரிய கிரகணத்தை பாதுகாப்பு கண்ணாடி அணிந்து நாம் பார்ப்பதால் நமது கண்களுக்கோ நமது உடலுக்கோ எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. மேலும் சூரிய கிரகணத்தின் போது அல்ட்ரா வயலட் கதிர்கள் வரும் என்று சொல்வதெல்லாம் மூடத்தனம், சூரிய கிரகணத்தின் போது நமது ஓசோன் படலமானது அல்ட்ரா வயலட் கதிர்களை வழக்கம்போல் அவைகள் பிடித்துக் கொள்ளும் ஆகவே எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என‌ இங்கு வ‌ந்திருந்த‌ பொதும‌க்க‌ளிட‌ம் விஞ்ஞானி எபினேச‌ர் ம‌ற்றும் ம‌ற்ற‌ விஞ்ஞானிக‌ளும் விளக்கினர்.

    பொதும‌க்க‌ளும், சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளும் ஆர்வ‌த்துட‌ன் சூரிய‌ க‌ண்ணாடிக‌ளை அணிந்து நிக‌ழ‌விருக்கும் சூரிய‌ கிர‌க‌ண‌த்தினை பார்வையிட‌ காத்திருந்த‌ நிலையில்

    கொடைக்கானல் ம‌லைப்ப‌குதிக‌ளில் காலை முத‌லே அட‌ர்ந்த‌ மேக‌ மூட்ட‌ம் நில‌விய‌தால் ப‌குதி நேர‌ சூரிய‌ கிர‌க‌ண‌ம் தென்ப‌ட‌வில்லை. என‌வே கூடியிருந்த‌ சுற்றுலா ப‌ய‌ணிக‌ளும் பொதும‌க்க‌ளும் விஞ்ஞானிகள் உட்பட அனைவரும் மிகுந்த‌ ஏமாற்ற‌த்துட‌ன் திரும்பினர்.

    மேலும் ஒரு சில‌ர் ம‌ட்டும் வான் இய‌ற்பிய‌ல் ஆராய்ச்சி நிலைய‌த்தில் அமைக்க‌ப்ப‌ட்டு ஒளிப‌ர‌ப்ப‌ப‌ட்டிருந்த‌ யூடியூப் நேர‌லை காட்சிக‌ளை ம‌ட்டும் க‌ண்டு ர‌சித்தும் வான் இய‌ற்பிய‌ல் ஆராய்ச்சி நிலைய‌ தொலை நோக்கிக‌ளின் ப‌ய‌ன்க‌ளை கேட்ட‌றிந்தும் திரும்பி சென்ற‌தும் குறிப்பிட‌த்த‌க்க‌து.

    • திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி மாத திருவிழா நடந்து வருகிறது.
    • ஒற்றைக் கல் மண்டபத்தில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    குமரி மாவட்ட கோவில் நிர்வாகத்தின் கீழ் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், வேளிமலை குமாரசாமிகோவில் உட்பட 490 கோவில்கள் உள்ளன.

    மேலும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் 644 கோவில்களும், பல்வேறு தனியார் கோவில்களும் இருக்கின்றன. இந்த கோவில்களில் தினமும் அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கபட்டு மதியம் 1மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8:30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சூரிய கிரகணம் நேற்று மாலை 5 மணி 14 நிமிடத்தில் தொடங்கி 5 மணி 44 நிமிடத்துக்கு முடிந்தது.

    இதையொட்டி மதிய வேளையில் கோவில் நடைகள் அடைக்கப்பட்டது. கிரகணத்தின் பார்வை கோவிலில் உள்ள மூலஸ்தான சாமிகள் மீது விழாத வண்ணம் தர்ப்பை புல் கொண்டு மறைக்கப்பட்டிருந்தது பின்னர் மாலை 6.30 மணிக்கு மேல் பரிகார பூஜைகள் செய்யப்பட்டு கோவில் நடைகள் திறக்கப்பட்டன.

    சூரியகிரகணத்தால் நடை அடைக்கப்பட்டதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் காத்திருந்து நடை திறந்ததும் சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் சூரிய கிரகணத்தால் பாதிக்கப்படும் சித்திரை, சுவாதி, விசாகம், திருவாதிரை, சதயம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்யும் வகையில் சூரிய பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபாடும் நடத்தினர்.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி மாத திருவிழா நடந்து வருகிறது. நேற்று காலை முதல் மதியம் வரை வழக்கமான பூஜைகள் நடந்தது. வழக்கமாக மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். நேற்று சூரிய கிரகணம் என்பதால், கிரகணத்துக்குப் பின்னர் கோவில் தண்ணீரால் சுத்தப்படுத்தப்பட்டு இரவு 7 மணி அளவில் திறக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் கருவறையில் இருந்து ஒற்றைக் கல் மண்டபத்துக்கு அர்ச்சனா மூர்த்தி, ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் எடுத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் சாமி சிலைகள் கருவறைக்கு எடுத்துச் செல்லப் பட்டது. அதன்பிறகு ஒற்றைக் கல் மண்டபத்தில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    குமாரகோவில், வேளிமலை முருகன் கோவிலில் வழக்கமாக மாலை 5 மணிக்கு நடை திறந்து இரவு 8மணிக்கு நடை அடைக்கப்படும், நேற்று சூரிய கிரகணத்தையொட்டி மாலையில் 5 மணிக்கு பதில் 6.30 மணிக்கே நடை திறக்கப்பட்டது. பின்னர் பரிகார பூஜை நடத்தப்பட்டு சாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு கந்தசஷ்டி விழாவில் பங்குகொள்ளும் பக்தர்களுக்கு சண்முகநாதர் சன்னதியில் வைத்து காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்,

    • நாட்டின் பெரும்பாலான இடங்களில் பகுதி நேர சூரிய கிரகணத்தை காண முடிந்தது.
    • கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது

    சென்னை:

    சூரியனை நிலவின் நிழல் பகுதியளவு மறைக்கும் பகுதி சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இதுவாகும். உலக அளவில் இன்று மதியம் 2.19 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்காவின் வடகிழக்கு பகுதிகள், மேற்கு ஆசியா, வட அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் வட இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றை உள்ளடக்கிய பிராந்தியத்தில் தெரிந்தது. ரஷியாவின் மத்திய பகுதியில் 80 சதவீதம் வரை சூரிய கிரகணத்தை பார்க்க முடிந்தது.

    இந்தியாவில் வடகிழக்கில் உள்ள ஒரு சில மாநிலங்களைத் தவிர நாட்டின் பெரும்பாலான இடங்களில் பகுதி நேர சூரிய கிரகணத்தை காண முடிந்தது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு கண்ணாடி மூலம் சூரியகிரணத்தை கண்டுகளித்தார். இந்தியாவில் சூரியகிரகணம் மாலை 5.11 மணியளவில் தொடங்கியது. தமிழகத்தில் 5.14 மணிக்கு கிரகணம் தெரியத் தொடங்கியது. 5.44 மணி வரை தெரியும் என கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது எனவும், சூரிய வெளிச்சத்தைக் குறைக்கும் தன்மையுடைய சிறப்பு கண்ணாடிகள் அணிந்தும், சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச் செய்தும் பார்க்கலாம் எனவும் அறிவியலாளர்கள் அறிவுறுத்தினர். அதன்படி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கிரகணத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் ஆர்வத்துடன் கிரகணத்தை பார்த்தனர்.

    சூரிய கிரகணம் தொடங்கியதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் கோயில்களின் நடை மூடப்பட்டது. கிரகணம் முடிந்த பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 

    • புதுவையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் பகல் 11.30 மணிக்கு நடை மூடப்பட்டது.
    • மாலை 7 மணி அளவில் கோவில் நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    சூரிய கிரகணம் இன்று பிற்பகல் 2.28-க்கு தொடங்கி மாலை 6.30-க்கு முடிவடைகிறது. இதனால் நாடு முழுவதும் கோவில்கள் நடை மூடப்பட்டது.

    புதுவையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் பகல் 11.30 மணிக்கு நடை மூடப்பட்டது. கோவிலுக்குள் இருந்த பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    மற்ற பக்தர்களை மாலையில் வருமாறு அறிவுறுத்தி கோவில் பாதுகாவலர்கள் அனுப்பினர்.

    மாலை 7 மணி அளவில் கோவில் நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேபோல் புதுவையில் உள்ள கோவில்களின் நடை மதியம் 12 மணிக்குள் மூடப்பட்டது.

    • சூரிய கிரகணம் இன்று மாலை 5.13மணிக்கு தொடங்கி மாலை 6.25 மணி வரை உள்ளது.
    • சிதம்பரம் நடராஜர்கோவில் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கோவில்கள் இருந்து வருகின்றன.

    கடலூர்:

    சூரிய கிரகணம் இன்று மாலை 5.13மணிக்கு தொடங்கி மாலை 6.25 மணி வரை உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழு வதும் உள்ள கோவில்கள் இன்று மதியம் முதல் மாலை வரை கோவில்கள் சாற்றப்படுகிறது. மேலும் அனைத்து கோவில்களி லும் பரிகார பூஜைகள் செய்யப்பட்டு கோவில் முழுவதும் சுத்தம் செய்து பின்பு திறக்கப்பட உள்ளது. 

    கடலூர் மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 1600 கோவில்கள் உள்ளன. இதில் கடலூர் பாடலீஸ்வரர், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில், புதுப்பா ளையம் ராஜகோபால சாமி கோவில், திருப்பா திரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில், திரு வதிகை விரட்டா னேஸ்வரர் கோவில், விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் கோவில், சிதம்பரம் தில்லை காளிய ம்மன் கோவில், திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்கள் ஆகும்.

    இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இல்லாமல் சிதம்பரம் நடராஜர்கோவில் உள்ளிட்ட நூற்றுக்க ணக்கான கோவில்கள் இருந்து வருகின்றன. இன்று மாலை சூரிய கிரகணம் உள்ளதால் அனைத்து கோவில்களிலும் இன்று மதியம் முதல் மாலை சூரிய கிரகணம் முடிந்து பின்பு பரிகார பூஜைகள் மற்றும் கோவில் சுத்தம் செய்து பொதுமக்களுக்கு சாமி கும்பிட அனுமதிக்கப்படு கின்றனர். இது மட்டும் இன்றி இன்று கந்த சஷ்டி விழா தொடங்கியதை யொட்டி முருகர் கோவில்களில் இன்று முதல் சஷ்டி விழா கோலகலமாக தொடங்க ப்பட்டு உள்ளது. மேலும் சூரிய கிரகணம் முடிந்து சஷ்டி விழா அனைத்து முருகர் கோவில்களிலும் சிறப்பு பூஜை உடன் தொட ங்கி நடைபெற உள்ளது.

    இது மட்டும் இன்றி கடலூர் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் காலை முதல் சூரிய கிரகணம் காரணமாக கோவில்கள் மூடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் குறிப்பிட்ட நட்சத்தி ரம் மற்றும் ராசிக்காரர்கள் சூரிய கிரகணம் முடிந்து பரிகார பூஜைகள் செய்ய ப்பட வேண்டும் என தெரிவி க்கப்பட்டுள்ளது. இது மட்டும் இன்றி இந்நேரத்தில் பொதுமக்கள் யாரும் உணவு உண்ணாமலும், வெறும் கண்களால் சூரியனை காணாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×