search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mexico"

    • பயணிகளை ஏற்றி சென்ற இரட்டை அடுக்கு பேருந்து எலோடாவில் விரைந்து சென்றது
    • இந்த விபத்தை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது

    நேற்று, வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டின் ஜலிஸ்கோ மாநிலத்தில் உள்ள குவாடலஜாரா (Guadalajara) பகுதியில் இருந்து சினலோவா மாநில லாஸ் மாசிஸ் (Los Mochis) பகுதிக்கு சுமார் 50 பயணிகளை ஏற்றி கொண்டு ஒரு இரட்டை அடுக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது.

    அப்பேருந்து வடமேற்கு மெக்சிகோவில் எலோடா முனிசிபாலிட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த ஒரு டிரக்கின் மீது நேருக்கு நேராக மோதியது.

    இதில் அந்த பேருந்து அங்கேயே தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர்; 22 பேர் காயமடைந்தனர்.

    எரிந்த நிலையில் உள்ள சடலங்களை பணியாளர்கள் அப்புறப்படுத்தி அடையாளம் காணும் பணியை செய்து வருகின்றனர்.

    இதை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

    அதிக வேகம், மோசமான வாகனங்கள், ஓட்டுனரின் அலட்சியம் மற்றும் பயண களைப்பு போன்ற பல்வேறு காரணங்களால் மெக்சிகோவின் தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட பல சாலைகளில் அடிக்கடி பேருந்து விபத்துகள் நடப்பது குறிப்பிடத்தக்கது.

    • துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • போதைப் பொருள் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மெக்சிகோசிட்டி:

    வடக்கு மெக்சிகோவில் உள்ள சோனோரா மாகாணம் சியுடாட் ஒப்ரெகன் நகரில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆட்டம்-பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மூன்று பேர் துப்பாக்கிகளுடன் விருந்து நிகழ்ச்சிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். மேலும் விருந்து நிகழ்ச்சியில் ஏற்கனவே பங்கேற்றிருந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.

    இதனால் விருந்தில் பங்கேற்றவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். இந்த தாக்குதலில் பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். உடனே தாக்குதல் நடத்திய நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலியானார்கள். 26 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பலியானவர்களில் இரண்டு பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள். காயம் அடைந்தவர்களில் 5 பேர் குழந்தைகள் ஆவார்கள். சிகிச்சை பெறுபவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சோனோரா மாகாணத்தில் போதைப் பொருள் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2021ம் ஆண்டில் ஜாலிஸ்கோவில் உள்ள டோனாலா நகராட்சியில், 11 பேரின் மனித உடல் உறுப்புகளுடன் சுமார் 70 பைகள் கண்டுபிடிப்பு.
    • 2019ம் ஆண்டில், ஜபோபனின் மக்கள்தொகை இல்லாத பகுதியில் 119 பைகளில் 29 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    மேற்கு மெக்சிகோ, ஜலிஸ்கோ பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் மனித உடல் உறுப்புகளுடன் குறைந்தது 45 பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த மே மாதம் 20ம் தேதி முதல் காணாமல் போன 30 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் என 7 பேரை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் 7 பேரும் வெவ்வேறு நாட்களில் காணாமல் போனதும், ஆனால் இவர்கள் 5 பேரும் ஒரே கால் சென்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தது புலனாய்வு விசாரணையில் தெரியவந்தது.

    இந்நிலையில், பெரிய தொழில்துறை மையமான குவாடலஜாராவின் புறநகர்ப் பகுதியில் ஜபோபன் நகராட்சியில் 40 மீட்டர் (120 அடி) பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை அன்று மனித உடல் உறுப்புகள் கொண்ட 45 பைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், " 45 பைகளில் ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் சொந்தமான மனித உடல் உறுப்புகள் இருந்தன. தடயவியல் நிபுணர்கள் மனித உறுப்புகளின் அடையாளங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். ஆனால், இவை கண்டுபிடிக்கப்பட்ட அதே பகுதியில்தான் சம்பந்தப்பட்ட கால் சென்டரும் இயங்கி வருகிறது.

    இதன் முதற்கட்ட விசாரணையில், கால் சென்டர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. மேலும், இதுதொடர்பான முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக மாற்ற கால் சென்டர் நிறுவன அதிகாரிகள் முயல்வதாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

    இதுபோன்று கடந்த 2021ம் ஆண்டில் ஜாலிஸ்கோவில் உள்ள டோனாலா நகராட்சியில், 11 பேரின் மனித உடல் உறுப்புகளுடன் சுமார் 70 பைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

    மேலும் 2019ம் ஆண்டில், ஜபோபனின் மக்கள்தொகை இல்லாத பகுதியில் 119 பைகளில் 29 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    • கீழடி அருங்காட்சியகத்தை பார்த்து மெக்சிகோ தூதர் வியப்படைந்தார்.
    • கல்மண்டபம் முன்பு போட்டோ எடுத்து கொண்டார்.

    மதுரை-ராமேசுவரம் சாலையில் சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை இந்தியாவிற்கான மெக்சிகோ நாட்டு தூதர் பெடரிக்கோ சலாஸ் லோட்பி பார்வையிட்டார். இந்த அருங்காட்சியகம் மார்ச் 5 முதல் திறக்க பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    தினமும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், வரலாற்று ஆய்வாளர்கள் அருங்காட்சியகத்தில் ஆய்வின் போதுகிடைத்த காட்சிபடுத்தப்பட்ட அரிய பொருட்களை பார்வையிட்டு செல்கின்றனர்.

    உலகதரத்தில் உள்ள கீழடி அகழ்வைப்பகத்தையும் அகழ்வாராய்ச்சி நடந்த அகரம், கொந்தகை, மணலூர் பகுதியை பார்வையிட்ட இந்தியாவுக்கான மெக்சிகோ நாட்டு துாதர் பெடரிக்கோ சலாஸ் லோட்பி காட்சிப்படுத்தப்பட்டுள்ள 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்களை கண்டு ரசித்து வியந்தார்.

    அருங்காட்சியகத்தை சுற்றி பார்த்த தூதர் கல்மண் டபம் முன்பு போட்டோ எடுத்து கொண்டார். பின்னர் 7-ம் கட்ட அகழாய்வு நடந்த தளம், திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற் றப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

    அவரை கீழடி ஊராட்சி தலைவர் வெங்கடசுப்ரமணியன் வரவேற்று அகழ்வைப்பகத்தில் உள்ள காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை பற்றி எடுத்துக்கூறினார்.

    • குலியாகன் விமான நிலையத்திற்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.
    • போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையின்போது 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில், சினலோவா மாநிலம் குலியாகன் நகரில், பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஓவிடியோ கஸ்மேனை பாதுகாப்பு படையினர் நேற்று சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் போதைப்பொருள் கடத்தல் மன்னன் எல் சாப்போவின் மகனான கஸ்மேன் கைது செய்யப்பட்டதையடுத்து போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். சாலைகளை மறித்து வாகனங்களுக்கு தீ வைத்தனர். குலியாகன் விமான நிலையத்திற்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 விமானங்கள் சேதமடைந்தன. இந்த வன்முறையைத் தொடர்ந்து விமான சேவை நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு பதிலடி கொடுத்தனர்.

    இந்த வன்முறையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 19 பேர், பாதுகாப்பு படை தரப்பில் 10 பேர் என மொத்தம் 29 பேர் உயிரிழந்ததாக பாதுகாப்புத்துறை மந்திரி லூயிஸ் கிரசென்சியோ சந்தோவல் கூறினார்.

    போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின்போது 21 பேர் கைது செய்யப்பட்டதாகவும், பொதுமக்கள் தரப்பில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    வன்முறையின் மையப்பகுதியான சினலோவா தலைநகர் குலியாகன் விமான நிலையம் மூடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓவிடியோ கஸ்மேன் இப்போது அதிகபட்ச பாதுகாப்பு நிறைந்த மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    • முதல் பாதிவரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • மெஸ்சி முதல் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப் சி பிரிவில் நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா அணி மெக்சிகோவை எதிர்கொண்டது. லுசைல் ஐகானிக் மைதானத்தில் நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் கோல் அடிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டிய போதும், முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இரண்டாவது பாதியின் 64 வது நிமிடத்தில் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்சி தமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்து அந்நாட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். தொடர்ந்து 87வது நிமிடத்தில் பெர்னான்டஸ் மேலும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தார். கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்ட போதும் மெக்சிகோ அணியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இறுதியில்  2-0 என்ற கோல் கணக்கில் தனது முதல் வெற்றியை அர்ஜென்டினா பதிவு செய்தது.

    • மெக்சிகோவில் மர்ம நபர் நடத்திய தாக்குதலில் அந்நகர மேயர் உள்பட 18 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • தொலைதூர நகரமானது மெக்சிகோவின் மிகவும் முரண்பட்ட பகுதிகளில் ஒன்றான டேரா கலிண்ட்டியில் உள்ளது.

    மெக்சிகோவின் தென் மேற்கு பகுதியில் சான் மிகுவல் டோடோலாபன் என்ற நகரில் சிட்டி ஹால் உள்ளது. இந்த கட்டிடத்தின் மீது மர்ம நபர்கள் திடீரென தாக்குதல் நடத்தினார்கள்.

    அவர்கள் கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் அந்த கட்டிடத்தின் மீது கண்மூடித்தனமாக சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் அந்த கட்டிடத்தில் இருந்த பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர்

    மர்ம கும்பல் நடத்திய இந்த வெறித்தனமான துப்பாக்கி சூட்டில் மெக்சிகோ மேயர் கான்ராடோ மெண்டோசா மற்றும் அவரது தந்தையும், முன்னாள் மேயருமான ஜுவான் மென்டோசா, போலீஸ் அதிகாரிகள் உள்பட 18 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதில் சில அரசு ஊழியர்களும் உயிர் இழந்தனர்.

    மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குண்டு பாய்ந்தவர்கள் சிட்டி ஹால் முன்பு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இதனால் அந்த பகுதி ரத்த காடாக காட்சி அளித்தது. அந்த கட்டிடத்தின் பல இடங்களை துப்பாக்கி குண்டுகள் துளைத்து இருந்தது.

    இந்த சம்பவத்திற்கு லாஸ் டெக்வலிரோஸ் என்ற அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. ஆனால் இதனை மெக்சிகோ அதிகாரிகள் உறுதிபடுத்தவில்லை.

    இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை மர்ம கும்பல் படமெடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளது. இது வைரலாக பரவி வருகிறது

    இந்த சம்பவத்தை தொடர்ந்து மெக்சிகோவில் போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். துப்பாக்கி சூடு கும்பலை பிடிக்க அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேயர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அவரது கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது கோழைத்தனமான தாக்குதல் என அக்கட்சி தெரிவித்து உள்ளது.

    சமீபகாலமாக மெக்சிகோவில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் மத்திய மெக்சிகோ மாநிலமான குவானா ஜூவாடோவில் உள்ள மதுக்கடை ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

    சில நாட்களுக்கு முன்பு வடக்கு மெக்சிகோவில் நடந்த மற்றொரு தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 2006-ம் ஆண்டு அரசு போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையை தொடங்கியதில் இருந்து இது போன்ற சம்பவங்கள் தொடர் கதை போல நடந்து வருகிறது. இதில் ஏராளமானோர் இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மெக்சிகோ நாட்டில் டிராக்டர் டிரெய்லருடன் பஸ் மோதிய விபத்தில் அதில் பயணித்த 21 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் மெக்சிகோ சிட்டி நகரில் இருந்து டுஸ்லா குடரஸ் பகுதி நோக்கி பயணிகள் பஸ் சென்று கொண்டிருந்தது.

    வெராகுருஸ் பகுதி அருகே சென்றபோது பஸ் திடீரென முன்னால் சென்ற டிராக்டர் டிரெய்லர் மீது வேகமாக மோதியதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 17 பேர் பலியாகினர் என்றும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 4 பேர் இறந்தனர் என்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

    பயணிகள் பஸ் டிராக்டர் டிரெய்லருடன் மோதிய விபத்தில் 21 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
    மெக்சிகோவில் ஆக்ஸாகா நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியானார்கள்.
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோவில் ஆக்ஸாகா நகரில் ஒரே நேரத்தில் 4 பெண்களும், 2 ஆண்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர். சாலையோரத்தில் அவர்களது உடல்கள் வீசப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது அந்த நகரத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று, சுட்டுக்கொல்லப்பட்ட 6 பேரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    இதேபோன்று டாமாவ்லிபாஸ் நகரில் 2 குழுக்கள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் உள்ளூர் தாதா கும்பலை சேர்ந்தவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
    மெக்சிகோ நாட்டின் வேராகர்ஸ் மாநிலத்தில் நடைபெற்ற குடும்ப விழாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் குழந்தை, பெண்கள் உள்பட 13 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. #MexicoShooting
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் வேராகர்ஸ் மாகாணம் அமைந்துள்ளது. வேராகர்ஸ் மாநிலத்தில் உள்ள மினாடிட்லன் நகரில் குடும்ப விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஒரூ மர்ம நபர் திடீரென அங்கு புகுந்தார். அவர் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுடத்தொடங்கினார்.

    இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு குழந்தை, 5 பெண்கள், 7 ஆண்கள் என மொத்தம் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    தகவலறிந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #MexicoShooting
    கவுதமாலாவில் இருந்து திரண்டு வந்த அகதிகளில், சுமார் 350 பேர் வன்முறையில் ஈடுபட்டு எல்லைக் கதவை உடைத்துக்கொண்டு மெக்சிகோவிற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #Mexico #CentralAmericanMigrants
    மெக்சிகன் சிட்டி:

    மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக வெளிநாட்டினர் அகதிகளாக ஊடுருவி வருகின்றனர். மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள ஹோண்டுராஸ், கவுதமாலா மற்றும் எல் சால்வடோர் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் நுழைகின்றனர்.

    இதை தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக உள்ளார். அமெரிக்காவுக்குள் வெளிநாட்டினர் ஊடுருவதை மெக்சிகோ தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மெக்சிகோ எல்லை முழுவதையும் மூடி விடுவோம் என்று எச்சரித்தார்.

    மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டவும் ஏற்பாடு நடைபெறுகிறது. எல்லையில் 5,800 ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு நாட்டு எல்லையில் காத்திருக்கும் அகதிகள் தங்களை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க வலியுறுத்தி வன்முறையில் ஈடுகின்றனர்.



    இந்நிலையில், கவுதமாலா நாட்டில் இருந்து சுமார் 2500 அகதிகள் நேற்று அதிகாலை மெக்சிகோவிற்கு வந்தனர். அவர்களை நாட்டிற்கு விடாமல் மெக்சிகோ எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். எல்லைக் கதவு மூடப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சிலர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர்.

    மெக்சிகோவிற்குள் நுழைந்த சுமார் 350 பேரையும் போலீசார் தடுத்ததால் கடும் வன்முறையில் ஈடுபட்டனர். தெற்கு நகரமான மெடாபா டி டாமிங்கஸ் நகரில் உள்ள ஒரு காவல் நிலையத்தை தாக்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எல்லையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு அகதிகள் கட்டுப்படுத்தப்பட்டனர். #Mexico #CentralAmericanMigrants 
    மெக்சிகோ இரவு விடுதியில் மர்ம கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 பேர் பலியாகினர்.

    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோவில் எண்ணெய் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. பெட்ரோல் குழாய்களை உடைத்து கும்பல்கள் எண்ணெய் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக சாலமங்கா நகரில் உள்ள ஒரு பெட்ரோலிய நிறுவனத்துக்கு சொந்தமான குழாய்களை உடைத்து கொள்ளை நடைபெறுகிறது. எனவே அக்கும்பல் அங்குள்ள ஒரு இரவு விடுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    உடனே அந்த இரவு விடுதியை சுற்றி வளைத்த போலீசார் நேற்று அதிகாலையில் உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினார்கள். பதிலுக்கு அவர்களும் சுட்டனர்.

    இத்தாக்குதலில் 15 பேர் குண்டு பாய்ந்து அதே இடத்தில் பலியாகினர். அவர்கள் விவரம் வெளியிடப்படவில்லை. மேலும் 4 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 3 பேர் ஆண்கள், ஒருவர் பெண் ஆவார், இவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ×