search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "taxation"

    • ராமநாதபுரத்தில் பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க மாநாடு நடந்தது.
    • இதில் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா கட்சியின் வர்த்தக பிரிவு சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க வணிகர்கள் மாநாடு ராமநாதபுரம் கேணிக்கரையில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    மோடி ஆட்சியில் ரூ. 29 ஆயிரம் கோடி கொரோனா மருந்துகளை 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இலவசமாக கொடுத்துள்ளன. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பல மாநிலங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளன. காஷ்மீர் மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாற்றப்பட்டுள்ளது. ஜி-20 நாடுகளுக்கு இந்தியா இன்று தலைமை ஏற்றுள்ளது. பிரதமர் மோடி இந்தியாவை உலகளவில் திரும்பி பார்க்க வைத்துள்ளார். ரூ. 4 லட்சம் கோடி அந்நிய செலா வணியை ஈட்டுத்தந்துள்ளது.

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மிக மோசமாக இருந்த சாலைகள் இன்று தரமானதாக மாற்றப்பட்டுள்ளது. ரூ. 29 லட்சம் கோடி ஜன்தன் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை வரும் பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து வரிகளை செலுத்த வேண்டும்.
    • கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து கொள்ளவும்.

    காங்கயம்

    காங்கயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    காங்கயம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வரிவிதிப்பு செய்யப்படாத கட்டிடம் மற்றும் ஏற்கனவே வரிவிதிப்பு செய்யப்பட்டு அதன் பின் கூடுதலாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு வரி விதிக்கப்படாமல் இருந்தால் அது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து வரிகளை செலுத்த வேண்டும். அவ்வாறு வரியினங்களை செலுத்த முன் வராத பட்சத்தில் குழு ஆய்வு செய்யும்போது கட்டிடங்கள் கண்டறியப்பட்டால் 6 ஆண்டுகளுக்கான வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும். எனவே கட்டிட உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி விதிப்பு செய்து கொள்ளவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மண்டல அலுவலகங்களில் நேரடியாக விண்ணப்பித்து வரி விதிப்பு செய்து கொள்ளலாம்
    • சொத்துவரி பொது சீராய்வு நடைபெற்று வந்ததால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் புதிய கட்டிடங்களுக்கு ஆவணங்களை சமர்ப்பித்து வரி விதிப்பு செய்து கொள்ளலாம் என ஆணையர் அசோக்குமார் தெரி வித்துள்ளார்.

    இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

    "வேலூர் மாநகராட்சியில் சொத்துவரி பொது சீராய்வு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைபெற்று வந்தன. இதன் காரணமாக, புதிய கட்டிடங்களுக்கு வரி விதிப்புகள் செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது சொத்துவரி பொது சீராய்வு பணிகள் முடிவுற்றுள்ளன.

    வரி விதிப்பு செய்யப்படாத கட்டிடங்களுக்கு புதிய வரி விதிப்பு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    எனவே, பொதுமக்கள் புதிய வரி விதிப்பு செய்ய சொத்து உரிமைக்கான பத்திரப்பதிவு நகல் மற்றும் கட்டிட அனுமதி உள்ளிட்ட ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் நேரடியாக விண்ணப்பித்து வரி விதிப்பு செய்து கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.

    • நிதி சார்ந்த பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
    • ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் நிதி சார்ந்த பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஊராட்சி பொது நிதி மற்றும் மத்திய, மாநில அரசுகளில் மானியக்குழு நிதி, மாவட்ட திட்ட நிதி என பல்வேறு நிதி ஒதுக்கீடுகளின் கீழ், அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

    பொதுமக்கள் நேரடியாக செலுத்தும் சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, வணிக நிறுவனங்களின் உரிம கட்டணம், தொழில் வரி வருவாய் உள்ளிட்டவை பொது நிதி கணக்கில் சேர்க்கப்படுகிறது.இருப்பினும், சில ஊராட்சிகளில், முறையான அனுமதி பெறாமலும், தொழில் மற்றும் சொத்துவரி செலுத்தாமலும் வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    இது குறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:- ஊராட்சி அனுமதி பெறாமல், அதிகப்படியான தொழில் நிறுவனங்கள் துவக்கப்பட்டு வருகின்றன. தொழில் நிறுவனங்கள் செயல்படத்துவங்கினால், பணியாளர்களின் நலன் கருதி, அதனை தடை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. சொத்து வரி செலுத்தாமல் இருப்பது, தொழில் உரிமம் பெறாமலும், புதுப்பிக்காமல் இருத்தல் என வரி ஏய்ப்பும் செய்யப்படுகிறது. இதனால், ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.வரி ஏய்ப்பு செய்யும் தொழில் நிறுவனங்களைக்கண்டறிய அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மத்திய-மாநில அரசுகள் வரிகளை விதித்து மக்களுக்கு வலிகளை தருகிறது என பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
    • தமிழகத்தின் அரசியல் தலைநகரம் மதுரையாகும் மதுரை மண்ணில் தான் தேமுதிக தொடங்கப்பட்டது.

    மதுரை

    மதுரையில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி. வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இந்த ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க. துணை பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் அப்போது அவர் பேசியதாவது-

    தமிழகத்தின் அரசியல் தலைநகரம் மதுரையாகும் மதுரை மண்ணில் தான் தேமுதிக தொடங்கப்பட்டது. எங்களது திருமணம் மற்றும் குலதெய்வ வழிபாடு, அரசியல் மாநாடுகள் என்று அனைத்துமே மதுரையில் தான் தே.மு.தி.க. நடத்தி வருகிறது.

    இந்த மதுரை மண்ணில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து இன்றைக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தே.மு.தி.க. ஆளும் கட்சி அல்ல, ஆண்ட கட்சியும் அல்ல. ஆனாலும் மக்கள் இங்கு திரண்டு இருக்கிறீர்கள் ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் நூறும் பீரும் கொடுத்து கூட்டம் கூட்டுகிறார்கள் அந்த வரிசையில் தற்போது பாரதிய ஜனதாவும் சேர்ந்திருக்கிறது.

    தமிழகத்தில் ஆளுகின்ற தி.மு.க. அரசு தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் கொடுக்காத வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது மின்கட்டணத்தை உயர்த்துவோம் என்று தேர்தலுக்கு முன்பு சொல்லவில்லை. ஆனால் இப்போது மின்கட்டணத்தை அதிகரித்து இருக்கிறார்கள். அதுபோல மத்திய அரசு ஜி.எஸ்.டி. என்ற போர்வையில் மக்கள் மீது தினமும் வரியை சுமையை ஏற்படுத்தி வருகிறது கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள் மீது மத்திய-மாநில அரசுகள் வரி என்ற பெயரில் வலியை ஏற்படுத்தி வருகின்றன. இதனை தே.மு.தி.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் 140 அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
    • ரூ. 300 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை

    மத்திய அரசு அரிசி, கோதுமைக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது. இதற்கு அரிசி வியாபாரிகள் கடும் கண்டனம் தெரிவித்து இன்று தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கடையடைப்பு போராட்டாம் நடைபெறும் என்று அறிவித்து இருந்தனர்.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் வேலைஅரிசி வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி கடைகளும் இன்று மூடப்பட்டு இருந்தன.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்க செயலாளர் அன்பரசன் கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்தில் 140 அரிசி ஆலைகள் உள்ளன. 300 வியாபாரிகள் கடை நடத்தி வருகின்றனர். மாவட்டத்தில் தினமும் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும். தமிழக அரிசி ஆலைகளுக்கு கர்நாடகா, ஆந்திரா மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நெல் மூட்டைகள் அரவைக்கு வருகிறது.

    இந்த வகையில் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.300 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும்.பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாக திகழும் அரிசி மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை நீக்க கோரி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகிறோம். மத்திய அரசு உடனடியாக 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வேண்டும்.

    மதுரை மாவட்டத்தில் 140 அரிசி ஆலைகளை சார்ந்து தொழிலாளர்கள், லாரி உரிமையாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், அரிசி வணிகர்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் தொழில் செய்து வருகின்றனர். மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாக பொதுமக்கள் மட்டுமின்றி வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் பொதுமக்களின் அத்தியாவசிய உணவு பொருட்கள் மீது வரி விதித்தால், ஏழை எளியோர் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

    வரி விதிப்பு என்பது, உள்ளாட்சிகளின் வருவாய் ஆதாரத்தை பெருக்க, அதன் மூலம், வளர்ச்சிப்பணி மேற்கொள்ள உதவும்.

    அவிநாசி:

    மாநில அரசின் வழிகாட்டுதல் படி சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு, புதிய விகிதாச்சார அடிப்படையில், வரி விதிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. நகராட்சியாக உருவெடுத்த திருமுருகன்பூண்டியிலும் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

    இதுகுறித்து தி கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் தலைவர் காதர் பாஷா கூறுகையில்:

    வரி விதிப்பு என்பது, உள்ளாட்சிகளின் வருவாய் ஆதாரத்தை பெருக்க, அதன் மூலம், வளர்ச்சிப்பணி மேற்கொள்ள உதவும்.அதே நேரம், புதிய வரி விதிப்பு நேர்மையானதாக இருக்க வேண்டும். சரியான முறையில் வரி விதிப்பு இருக்கும் வகையில் அதிகாரிகள் செயலாற்ற வேண்டும் என்றார்.

    சினிமா மற்றும் பிறவகை கேளிக்கை துறைகளுக்கு குறைவான, சமச்சீரான வரிவிதிப்பை ஏற்படுத்தி தருமாறு பிரதமர் மோடியை இன்று திரையுலக பிரமுகர்கள் சந்தித்து வலியுறுத்தினார். #Delegation #FilmandEntertainment #Industry #PMModi
    மும்பை:

    மெட்ரோ ரெயில் சேவை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலத்துக்கு வந்தார்.

    சினிமா, தனியார் தொலைக்காட்சி, வானொலி மற்றும் பிறவகை கேளிக்கை துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் குழுவாக சென்று மும்பை நகரில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தினர்.

    உலகளாவிய அளவில் தங்களது துறைகள் மிகப்பரவலாக வளர்ச்சி அடைந்து வருவதாக குறிப்பிட்ட இந்த குழுவினர்,  இந்த துறைகளுக்கு குறைவான, சமச்சீரான வரிவிதிப்பை ஏற்படுத்தி தருமாறு பிரதமர் மோடியை வலியுறுத்தினர்.

    உலக அரங்கில் இந்தியாவின் ஹாலிவுட் ஆக திகழ்ந்து வரும் மும்பை நகரத்தின் முன்னேற்றத்துக்கு உதவுமாறு பிரதமரை அவர்கள் கேட்டுகொண்டனர்.  தங்களது துறைக்கு குறைவான, சமச்சீரான வரிவிதிப்பு முறையை ஏற்படுத்தி தருமாறும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.



    அவர்களின் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பாக பரிசீலனை செய்து நல்ல முடிவை அறிவிப்பதாக மோடி வாக்குறுதி அளித்ததாக பிரதமரின் அலுவலகம் இன்று மாலை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.

    பிரதமருடனான இந்த சந்திப்பில் பாலிவுட் நடிகர்கள் அக்‌ஷய் குமார், அஜய் தேவகன், தயாரிப்பாளர் ராகேஷ் ரோஷன், கதாசிரியரும் பாடலாசிரியருமான பிரசூன் ஜோஷி, தயாரிப்பாளர்கள் கரண் ஜோஹர், சித்தார்த்த ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். #Delegation #FilmandEntertainment #Industry #PMModi
    சூலூர் பகுதியில் உள்ள வீட்டு உபயோக மின்சார பயன்பாட்டாளர்களிடம் 65 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி வசூல் செய்து வருவதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    சூலூர்:

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பொது மக்களின் வீட்டு உபயோக மின்சார பயன்பாட்டிற்கான கட்டணத்திற்கு 65 சதவீத சேவை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

    பாப்பம்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்த சென்ற போது 95 ரூபாய் மின் கட்டணத்திற்கு மத்திய அரசின் பொருட்கள் மற்றும் சேவை வரியாக 31.50 ரூபாயும்,மாநில அரசின் பொருட்கள் மற்றும் சேவை வரியாக 31.50 ரூபாய் என 158 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

    இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து மின்வாரிய அலுவலர்களிடம் கேட்டபோது, இது அதிகாரிகளின் உத்தரவு கம்பயூட்டரில் வந்த பதிவுப்படி தான் வசூலிக்கிறோம் என கூறினர்.

    100 யூனிட் வரை பயன்படுத்தும் பயனாளிகளுக்கு அரசு இலவச மின்சாரம் வழங்கும் போது அதற்கு 9 ரூபாய் வரி வசூலிப்பதாக பாதிக்கப்பட்ட ஆறுமுகம் குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் கூறுகையில் இந்த மாதிரியான வரி எங்கும் இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் உள்ளது. இலவசத்திற்கும் வரிவிதிப்பது இங்குதான் .இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக பொதுமக்களுக்கு நல்ல தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறினார்.
    கோவை விமான நிலையத்தில் இரவு நேரத்தில் தங்கும் விமானங்களுக்கு எரி பொருள் வரிச்சலுகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #CoimbatoreAirport #TNCM #Edappadipalanisamy
    கோவை:

    கோவையில் போலீஸ் அருங்காட்சியகத்தை திறந்து வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது-

    வரலாற்று சிறப்பு மிக்க போலீஸ் அருங்காட்சியகம் இன்று திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் ஆதிகாலம் முதல் தற்போதைய நவீன காலம் வரை உள்ள பல்வேறு ஆயுதங்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    140 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இங்கு காவல் துறை சார்பில் பல்வேறு ஆயுதங்கள் இடம் பெற்றுள்ளது.

    இந்த அருங்காட்சியகத்தை பொதுமக்கள், மாணவர்கள் பார்த்து தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது.

    கோவை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பல்வேறு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு இரவு நேரத்தில் தங்கும் விமானங்களுக்கு எரி பொருள் நிரப்ப வரிச்சலுகை தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் கோவையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்க வசதியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #CoimbatoreAirport #TNCM #Edappadipalanisamy
    டெல்லியில் நடந்த அமைச்சர்கள் குழு கூட்டத்தில் சர்க்கரை மீதான மேல் வரி விதிப்பு குறித்து ஆலோசனை நடைபெற்றது.
    சென்னை:

    சர்க்கரை மீது மேல்வரி விதிப்பது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழு கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது.

    கூட்டத்தில், மீன்வளம் மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் கா. பாலச்சந்திரன், முதன்மைச் செயலாளர், மற்றும் வணிகவரி ஆணையர் சோமநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    4.5.2018 அன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்ற 27வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டத்தின்போது சர்க்கரை மீதான 5% ஜி.எஸ்.டி. வரி தவிர்த்து கிலோ ஒன்றுக்கு ரூ.3 மேல்வரி விதிப்பதற்கான மத்திய அரசின் கருத்துரு விவாதிக்கப்பட்டது. இந்த மேல்வரி விதிக்கும் முறையானது ஜி.எஸ்.டி. சட்டத்தின் கொள்கைக்கு மாறாக உள்ளதால் தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதாக இல்லை என்று அமைச்சர். டி.ஜெயக்குமார் அன்றையக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

    தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களும் சர்க்கரை மீது மேல்வரி விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, இது தொடர்பாக மேலும் ஆய்வு செய்யும் பொருட்டு ஜி.எஸ்.டி. மன்றமானது அமைச்சர்கள் குழு ஒன்றினை 4.5.2018 அன்று ஏற்படுத்தி உள்ளது. இந்தக் குழுவில் தமிழ்நாடு, அசாம், உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் அமைச்சர்கள் உள்ளடங்குவர். இந்தக் குழுவானது, சர்க்கரை மீதான மேல்வரி விதிப்பது மற்றும் அது தொடர்பான இனங்கள் குறித்து விவாதித்து அறிக்கை ஒன்றினை ஜி.எஸ்.டி. மன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

    புதுடெல்லியில்14.5.2018 அன்று நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில் சர்க்கரை மீது 5% ஜி.எஸ்.டி. வரி தவிர்த்து கிலோ ஒன்றுக்கு ரூ.3 மேல்வரி விதிப்பதற்கு அரசியல் சாசன கூறுகள் அனுமதிக்கின்றனவா என்பது குறித்து மத்திய சட்ட அமைச்சகத்தின் கருத்தினை ஜி.எஸ்.டி. மன்ற செயலகமானது பெற்று வழங்க வேண்டுமென அமைச்சர் டி.ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.

    மேலும், ஜி.எஸ்.டி அமலாக்கத்திற்கு முன்பு இருந்த சர்க்கரை வளர்ச்சி நிதியில் வசூலிக்கப்பட்ட தொகை மற்றும் எந்தெந்த காரணத்திற்காக, எந்தெந்த மாநிலத்திற்காக, எவ்வளவு நிதி வழங்கப்பட்டது. குறித்தான விவரத்தினையும் மத்திய அரசின் நுகர்வோர் நடவடிக்கைகள், உணவு மற்றும் பொது விநியோக துறையிடமிருந்து ஜி.எஸ்.டி. மன்ற செயலகமானது பெற்று இக்குழுவிற்கு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    இந்த விவரங்களின் அடிப்படையில், சர்க்கரை மீது மேல்வரி விதிப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. அமைச்சர்கள் குழுவின் அடுத்தக் கூட்டத்தினை வருகின்ற ஜூன் மாதம் 3-ந்தேதி நாள் நடத்துவதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    ×