என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "taxation"

    • பிரதமர் மோடியுடன் எங்களுக்கு ஒரு அற்புதமான உறவு இருக்கிறது.
    • இப்போது அவர்கள் ரஷிய எண்ணெயைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர்.

    இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக நியமனான செர்ஜியோ கோர் பதவியேற்பு விழா அதிபர் டிரம்ப் முன்னிலையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.

    இதன்போது பேசிய டிரம்ப், அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவு முக்கியமானது. இந்தியா உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்று. மேலும், உலகின் மிகப்பெரிய நாடு. இந்தியா மிக வேகமாக வளரும் நடுத்தர வர்க்கத்தையும் கொண்டுள்ளது. பிரதமர் மோடியுடன் எங்களுக்கு ஒரு அற்புதமான உறவு இருக்கிறது.

    ரஷிய எண்ணெய் காரணமாக இந்தியா மீதான நமது வரிகள்மிக அதிகமாக உள்ளன. இப்போது அவர்கள் ரஷிய எண்ணெயைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர். அது மிகவும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எனவே நாங்கள் வரிகளை குறைக்கப் போகிறோம். எதோ ஒரு கட்டத்தில் நாங்கள் அவற்றைக் குறைப்போம்" என்று கூறினார். மேலும் இந்தியா-அமெரிக்கா இடையே எல்லோருக்கும் பயனளிக்கக்கூடிய ஒரு வரி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மிக அருகாமையில் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

    முன்னதாக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக இந்திய பொருட்கள் மீது அபராதமாக அமெரிக்காவால் 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் அதிகளவில் இறக்குமதி வரி விதித்தார்.
    • வரி பணம் 37 டரில்லியன் டாலர் தேசிய கடனை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றபிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்தார். இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் அதிகளவில் இறக்குமதி வரி விதித்தார்.

    அவரின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு கிளம்பினாலும் தனது முடிவில் அவர் பிடிவாதமாக இருந்து வருகிறார். இறக்குமதி வரிகள் தான் தனது வலிமையான பொருளாதார ஆயுதம் என்றும் இந்த கொள்கை அமெரிக்காவை வலிமையானதாகவும், செல்வந்தராகவும் மாற்றி உள்ளது என்றும் அவர் கூறி வருகிறார். மேலும், அவர் தனது வர்த்தக கொள்கைகளை எதர்ப்பவர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    இந்த நிலையில் டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலை தளபக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    இறக்குமதி வரிகள் மூலம் அமெரிக்கா டிரில்லியன் கணக்கான டாலர்களை வருவாய் ஈட்டி வருகிறது. இந்த பணம் 37 டரில்லியன் டாலர் தேசிய கடனை குறைக்க பயன்படுத்தப்படுகிறது. விரைவில் எனது நிர்வாகம் அதனை செலுத்த உள்ளது.

    இந்த வருவாய் மூலம் அதிக வருமானம் உள்ளவர்களை தவிர அமெரிக்கர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் தலா 2 ஆயிரம் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1 லட்சத்து 77 ஆயிரம்) ஈவுத்தொகை வழங்கப்படும்.

    தனது நிர்வாகம் அமெரிக்காவை மிகவும் பணக்கார நாடாகவும், மிகவும் மதிக்கத்தக்க நாடாகவும் மாற்றி இருக்கிறது. கிட்டத்தட்ட பணவீக்கம் எதுவும் இல்லை. பங்கு சந்தை விலையில் சாதனை படைத்து இருக்கிறது.

    எனது வரிக்கொள்கை உள்நாட்டு முதலீடு அதிகரிப்பதற்கு வழி வகுக்கிறது. கட்டணங்களால் மட்டுமே அமெரிக்காவில் தொழில்கள் குவிகின்றன. வரிகளை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள். அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகின்றன.

    இவ்வாறு டிரம்ப் கூறினார்.

    • இந்தியா போன்ற ஒரு நாட்டின் மக்கள் அரசியல் தலைமை எடுக்கும் முடிவுகளை உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள்.
    • அமெரிக்கா ரஷியாவிலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வாங்குகிறது.

    ரஷியாவுடனான எரிசக்தி உறவுகளைத் துண்டிக்க இந்தியா, சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவை அதிபர் புதின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    ரஷியாவின் சோச்சி (Sochi) நகரில் நேற்று நடைபெற்ற வால்டாய் மன்ற (Valdai Forum) நிகழ்வில் அந்நாட்டு அதிபர் புதின் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "இந்தியா நமது எரிசக்தி விநியோகங்களை மறுத்தால், அது ஒரு குறிப்பிட்ட இழப்பைச் சந்திக்கும். நிச்சயமாக, இந்தியா போன்ற ஒரு நாட்டின் மக்கள் அரசியல் தலைமை எடுக்கும் முடிவுகளை உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள். 

    தலைகுனிவை ஏற்படுத்தும் முடிவுகளை அவர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். மேலும், பிரதமர் மோடியை நான் அறிவேன். அவர் ஒருபோதும் இதுபோன்ற எந்த நடவடிக்கையையும் எடுக்க மாட்டார்

    அமெரிக்காவின் தண்டனை வரிகளால் இந்தியா எதிர்கொள்ளும் இழப்புகள் ரஷியாவில் இருந்து எண்ணை இறக்குமதியால் சமப்படுத்தப்படும்.

    இந்தியா இறக்குமதி செய்வது முற்றிலும் ஒரு பொருளாதார கணக்கீடு. இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்குவதை இந்தியா நிறுத்தினால் 9 பில்லியன் டாலர் முதல் 10 பில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படும்.

    ரஷியாவின் வர்த்தக பங்காளிகளுக்கு அதிகவரிகள் விதிக்கப்படுவது உலகளாவிய விலைகளை உயர்த்தும். இத்தகைய நடவடிக்ககைள் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்.

    மேற்கத்திய நாடுகள் தடை விதித்த போதிலும் நேர்மையான பொருளாதார வளரர்ச்சியை தக்க வைத்து கொள்வதே ரஷியாவின் நோக்கமாகும்.

    உக்ரைனுக்கு அமெரிக்கா நீண்ட தூர ஏவுகணைகளை வங்குவது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். போர்க்களத்தில் எங்களது நிலைப்பாட்டை மாற்றி கொள்ள மாட்டோம்" என்று தெரிவித்தார். 

    மேலும் அமெரிக்கா ரஷியாவிலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வாங்கும் அதே வேளையில், மற்ற நாடுகள் ரஷிய எரிசக்தி பொருட்களை வாங்குவதை நிறுத்துமாறு அழைப்பு விடுப்பதாக புதின் சுட்டிக் காட்டினார்.

    2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்காவுக்கு சுமார் 1.2 பில்லியன் டாலர் மதிப்புடைய யுரேனிய விநியோகம் இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு 800 மில்லியனுக்கும் அதிகமாக கூட இருக்கலாம் எனவும் புதின் தெரிவித்தார்.

    "அமெரிக்கர்கள் எங்கள் யுரேனியத்தை வாங்குகிறார்கள், ஏனெனில் அது லாபகரமானது, அவர்கள் சரியானதைச் செய்கிறார்கள். இந்த விநியோகங்களை சீராகவும் நம்பகத்தன்மையுடனும் தொடர நாங்கள் தயாராக உள்ளோம்." என்று புதின் மேலும் கூறினார். 

    ரஷியாவின் கச்சா எண்ணெய் கொள்முதல் தொடர்பாக இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில் இந்த கருத்து வந்துள்ளது.    

    • முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.
    • 2026-27 நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாகக் குறையும் எனவும் கணித்துள்ளது.

    ஆசிய வளர்ச்சி வங்கி (ADB), நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாகக் குறையும் என கணித்துள்ளது.

    2025-26 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.

    ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய பொருட்கள் மீது விதித்த 50 சதவீத வரியால் ஆண்டின் இரண்டாம் பாதியில் வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளதாக ADB தெரிவித்துள்ளது.

    அதேபோல் 2026-27 நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாகக் குறையும் எனவும் கணித்துள்ளது.

    அமெரிக்க வரிவிதிப்பால் இந்தியாவில் இருந்து பொருட்கள் ஏற்றுமதி (Goods Exports) குறைந்தாலும், சேவை ஏற்றுமதி (Service Exports) வலுவாக இருக்கும் என ADB தெரிவித்துள்ளது.  

    • பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் பேசினார்.
    • இதே போன்ற தடைகள் விதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரிட்டன் பயணத்தின் போது இந்தியாவுடனும் பிரதமர் நரேந்திர மோடியுடனும் தனக்கு வலுவான தனிப்பட்ட உறவு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

    பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிரம்ப்,  "நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். நான் இந்தியப் பிரதமருடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். எங்களுக்குள் மிகச் சிறந்த உறவு உள்ளது" என்று  கூறினார்.

    சமீபத்தில் தனது 75வது பிறந்தநாளைக் கொண்டாடிய பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், அதற்கு நன்றி தெரிவித்து மோடி ஒரு அழகான அறிக்கை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    இருப்பினும், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக அமெரிக்கா விதித்த தடைகளை டிரம்ப் நியாயப்படுத்தினார்.

    ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனாவுக்கும் இதே போன்ற தடைகள் விதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

    ரஷியா-உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து பேசிய அவர், "மிக எளிமையாகச் சொன்னால், எண்ணெய் விலை குறைந்தால், புதின் வெளியேறப் போகிறார். அவருக்கு வேறு வழியில்லை. அவர் அந்தப் போரிலிருந்து விலகப் போகிறார்" என்று டிரம்ப் கூறினார்.

    முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பிரச்னையை தான் தீர்த்ததாக டிரம்ப் மீண்டும் தெரிவித்தார்.  

    இதற்கிடையே டிரம்ப்பின் இந்த பயணத்தின்போது அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.  

     

    • உக்ரைன் போரை ஆதரிக்கும் இந்தியாவுக்கு இந்த வரிவிதிப்பு அபராதம் என டிரம்ப் கூறினார்.
    • இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த பிறகு இரு நாடுகளும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிப்பது இதுவே முதல் முறை.

    இந்திய பொருட்களுக்கு கடந்த மாதம் 50 சதவீத வரிவிதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தது இரு நாட்டு உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியது.

    ரஷியாவிடம் இருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஆதரிக்கும் இந்தியாவுக்கு இந்த வரிவிதிப்பு அபராதம் என டிரம்ப் கூறினார்.

    இந்நிலையில் பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த நேற்று (செவ்வாய்க்கிழமை) பிராடன் லிஞ்ச் தலைமையிலான அமெரிக்க குழு டெல்லி விரைந்து இந்திய குழுவுடன் பேச்சுவராத்தை நடத்தியது.

    இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த பிறகு இரு நாடுகளும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிப்பது இதுவே முதல் முறை.

     "இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பிராடன் லிஞ்ச் மற்றும் வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் இடையே நடந்த விவாதங்கள் ஒரு நல்ல அறிகுறியாகும்" என்று அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

    இருப்பினும், இருதரப்பு ஒப்பந்தம் குறித்த ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை தற்போது நடைபெறவில்லை, மாறாக ஆரம்பகட்ட விவாதங்கள் மட்டுமே நடந்தன என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.  

    • இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது.
    • இந்தியா சீனா மற்றும் ரஷியாவுடன் நெருக்கம் காட்டியது.

    அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள இந்தியாவுக்கு டொனால்டு டிரம்ப் காலக்கெடு நிர்ணயித்திருந்தார். ஆனால், அந்த காலகெடுவுக்குள் ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இந்திய பொருட்கள் மீது 25 சதவீதம் வரி விதித்தார்.

    ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மறுப்பு தெரிவித்ததால் மேலும் 25 சதவீதம் வரி விதித்தார். இதனால் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. 100 ரூபாய் பொருள் மீது 50 ரூபாய் வரி விதித்துள்ளது.

    இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததால் இந்தியாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்திருந்தார்.

    இதற்கிடையே இந்தியா சீனா மற்றும் ரஷியாவுடன் நெருக்கம் காட்டியது. இதனால் இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு ஆவலுடன் இருப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் இன்று இந்தியா-அமெரிக்கா இடையே தடைபட்டிருந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்த பிறகு நடைபெறும் முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.

    ஏற்கனவே 5 சுற்றுகள் பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், ஆகஸ்ட் 25-ல் நடக்க இருந்த 6வது சுற்று பேச்சுவார்த்தை அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் தடைபட்டது குறிப்பிடத்தக்கது.

    • ரூ.45 ஆயிரம் கோடி ஆடைகளில் பாதி அளவு அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • ரூ.5000 கோடி மதிப்பிலான ஆடைகள் தேங்கி கிடக்கிறது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த 50 சதவீத வரி விதிப்பால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் - ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஆண்டுதோறும் திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ரூ.45 ஆயிரம் கோடி ஆடைகளில் பாதி அளவு அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இதன் மூலம் ரூ.15ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி பாதிக்கும் சூழல் உள்ளது. 50 சதவீத வரி விதிப்பு நடைமுறைக்கு வந்த நிலையில், அமெரிக்க இறக்குமதியாளர்கள் இப்போதைக்கு ஆடைகளை அனுப்ப வேண்டாம் என்று கூறியதால் தற்போது திருப்பூர் பனியன் நிறுவனங்களில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்த ரூ.5000 கோடி மதிப்பிலான ஆடைகள் தேங்கி கிடக்கிறது. நிலைமை சரியானதும் அனுப்புமாறு அமெரிக்க இறக்குமதியாளர்கள் கூறியுள்ளதால் என்னசெய்வதென்று தெரியாமல் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக சில பனியன் நிறுவனங்களில் ஆடைகள் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூரில் பல ஆண்டுகளாக ஆடை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வரும் பீகாரை சேர்ந்த பிரதான் குமார் கூறியதாவது:- அமெரிக்க வரி தாக்கத்தால் ஏற்படும் நிதி மந்தநிலையால் அச்சத்தில் உள்ளோம்.30 ஆண்டுகளாக சுறுசுறுப்புடன் இயங்கி வந்த எனது நிறுவனம் இப்போது அமைதியாகி விட்டது.

    கடந்த 3 வாரங்களாக வேலை ஆர்டர்கள் வெகுவாகக் குறைந்ததால்,தொழிலாளர்கள் சிலரை மட்டும் பணியில் அமர்த்தி உள்ளேன். மற்றவர்களை பணிநீக்கம் செய்துள்ளேன். வேலை செய்பவர்களில் ஒரு சிலர் மதியம் வரை மட்டுமே வேலை செய்கிறார்கள்.இதனை நான் இதற்கு முன்பு பார்த்திராத ஒரு பேரழிவு.

    நான் 20 வருடங்களுக்கு முன்பு திருப்பூருக்கு வந்தேன். பனியன் நிறுவனங்களில் சிறிய வேலைகளை செய்தேன். ஆடை உற்பத்தியில் உள்ள நுணுக்கங்களை படிப்படியாகக் கற்றுக்கொண்டேன். பின்னர் பெரிய நிறுவனங்களில் துணி வாங்குதல், வெட்டுதல் மற்றும் பின்னல் போன்ற முழு அளவிலான வேலைகளையும் அவுட்சோர்ஸ் செய்து , பின்னர் ஆடை உற்பத்தியில் ஈடுபட்டேன்.

    முன்னேற்ற நிலையில் இருந்த திருப்பூர் இப்போது அமெரிக்க வரி விதிப்பால் ஒரு மோசமான சூழ்நிலையில் உள்ளதை பார்க்கிறேன்.பள்ளியில் படிக்கும் எனது 3 குழந்தைகளுக்கு கட்டணம் செலுத்த முடியவில்லை. இ.எம்.ஐ. செலுத்த முடியாமல் தவிக்கிறேன் என்றார்.

    இவரைப்போலவே, வட இந்திய மாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வந்து தொழில் செய்யும் பலர் அமெரிக்காவின் வரி விதிப்பால் பாதிப்பை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

    சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு பீகாரில் இருந்து திருப்பூர் வந்த சனோஜ் குமார் கூறுகையில், நான் பனியன் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறேன். அமெரிக்க வரி விதிப்பு பாதிப்பு காரணமாக ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திருப்பூரை விட்டு வெளியேறிவிட்டனர். தற்போது தங்கியிருப்பவர்களுக்கு வாரத்தில் சில நாட்கள் மட்டும் வேலை வழங்கப்படுகிறது. கொரோனாவின் போது இதேபோன்ற நெருக்கடி ஏற்பட்டது. வேலை இல்லாததால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக திருப்பூரை விட்டு வெளியேறினர். அமெரிக்க வரி விதிப்பால் தற்போது, நாங்கள் 40 சதவீத வேலைகளை மட்டுமே செய்ய முடிகிறது. தற்போதுள்ள தொழிலாளர்களுக்கு கூட வேலை இல்லாததால், எனது சொந்த ஊரில் உள்ளவர்கள் திருப்பூருக்கு வர வேண்டாம் என்று தெரிவித்துள்ளேன். எனது நிறுவனத்தில் பணியாற்றிய சிலர் கட்டுமானப் பணிகளுக்கு மாறியுள்ளனர் என்றார்.

    அமெரிக்க வரி பாதிப்பு திருப்பூர் பனியன் தொழிலை மட்டுமின்றி உள்ளூர் வர்த்தகத்தையும் பாதித்துள்ளது. இது குறித்து செல்போன் கடை நடத்தி வரும் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், நான் திருப்பூர் வந்த போது வெறுங்கையுடன் வந்தேன். அணிந்திருந்த ஆடைகள் மட்டுமே இருந்தன. நான் முதலில் ஒரு உதவியாளராக பணியை தொடங்கினேன், தேநீர் வாங்குவது, கார்களை சுத்தம் செய்வது மற்றும் நிறுவனங்களில் பிற வேலைகளை செய்தேன். பல ஆண்டுகளாக வேலையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். இப்போது திருப்பூரில் 3 செல்போன் உதிரிபாகங்கள் கடைகளை நடத்தி வருகிறேன்.அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூரில் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.இதனால் வர்த்தகமும் பாதிக்கும் நிலை உள்ளது என்றார்.

    திருப்பூரில் பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள், தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த ஊரில் உள்ள குடும்பத்தினருக்கு வாரத்திற்கு பணம் அனுப்புவார்கள். ஆனால் கடந்த ஒரு மாதமாக பணம் அனுப்ப முடியாமல் தவிப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்தியா மிகப்பெரிய வாடிக்கையாளராக இருக்கிறது.
    • ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது 50 சதவீத வரி விதித்தேன்.

    நியூயார்க்:

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அபராதத்துடன், இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமை காட்டியுள்ளார். இது இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தி இருப்பதை அவர் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார்.

    செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து அவர் கூறுகையில், 'இந்தியா மிகப்பெரிய வாடிக்கையாளராக இருக்கிறது. ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது 50 சதவீத வரி விதித்தேன். இது எளிதான காரியம் அல்ல. அது மிகப்பெரிய விஷயம். அது இந்தியாவுடன் விரிசலையும் ஏற்படுத்தி விட்டது. ஆனாலும் அதை செய்தேன். நிறைய செய்துவிட்டேன்' எனக்கூறினார்.

    இந்த பேட்டியிலும் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் தெரிவித்தார்.

    • இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் செய்தியாளர்களை சந்தித்தார்.
    • இந்தியாவை விமர்சிக்கும்போது, அவர் பிரதமர் மோடியைப் பாராட்ட முன்வருகிறார். அவர்களுக்கு இடையே ஒரு நம்பமுடியாத உறவு உள்ளது

    ரஷியாவிடம் குறைந்த விலையில் எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக இந்தியாவின் பொருட்களுக்கு 50 சதவீதம் விதித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதைதொடர்ந்து இந்தியா - அமெரிக்கா உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக பேச்சுவார்தைகளிலும் சுணக்கம் உருவானது.

    இந்நிலையில் இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், " ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தச் செய்வது எங்கள் நிர்வாகத்தின் முன்னுரிமை.

    வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து நாம் வெகு தொலைவில் இல்லை. அவர்கள்(இந்தியா) இந்த ஒப்பந்தத்தின் விவரங்களைப் பற்றி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    மற்ற நாடுகளை விட சில நேரங்களில் இந்தியாவிடமிருந்து நாங்கள் அதிகமாக எதிர்பார்க்கிறோம். அடுத்த சில வாரங்களில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    மேலும் டிரம்ப் - மோடி உறவு குறித்து பேசிய கோர், " நீங்கள் கவனித்திருந்தால் தெரியும். அதிபர் டிரம்ப் மற்ற நாடுகள் மீது வரி விதிக்க நேரும்போதெல்லாம் அந்த நாடுகளின் தலைவர்களை அவர் குறிவைக்கிறார். ஆனால் இந்தியாவை விமர்சிக்கும்போது, அவர் பிரதமர் மோடியைப் பாராட்ட முன்வருகிறார். அவர்களுக்கு இடையே ஒரு நம்பமுடியாத உறவு உள்ளது" என்று தெரிவித்தார்.  

    இதற்கிடையே அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், "வர்த்தக ஒப்பந்த விவாகரத்தில் மிகவும் நல்ல முறையில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் இந்தாண்டு நவம்பர் மாதத்துக்குள் ஒரு நல்ல ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இருதரப்பிலும் திருப்தியடைந்துள்ளனர்'' என்று தெரிவித்தார்.

    அதேநேரம், இந்தியாவுடனான வர்த்தகம் குறித்து அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹாவர்ட் லூட்னிக் பேசுகையில், ''ரஷியாவுடன் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால் மட்டுமே, வர்த்தகப் பிரச்னைகள் தீர்க்கப்படும்'' என்று தெரிவித்தார்.

    இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திச் செய்வதே அமெரிக்காவின் முதன்மை நோக்கமாக இருக்கும் நிலையில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என்று இரு தரப்பும் கூறுவதில் முரண்பாடு எழுந்துள்ளது.

    இதனால் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்துகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் எந்த காரணம் கொண்டும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மாட்டோம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.  

    • அமெரிக்க பருத்தி இறக்குமதிக்கு 11 சதவீத கலால் வரியை தள்ளுபடி செய்யும் மோடி அரசின் முடிவை கெஜ்ரிவால் விமர்சித்தார்.
    • கடனில் மூழ்கிய விவசாயி தற்கொலையின் விளிம்பில் இருக்கிறார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பொருட்களுக்கு விதித்த 50 சதவீத வரிக்கு இந்தியா வலுவான பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய கெஜ்ரிவால், "பிரதமர் கொஞ்சம் தைரியம் காட்ட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். முழு நாடும் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறது.

    இந்திய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நீங்கள் 75 சதவீத வரி விதிக்கவேண்டும். வரியை மட்டும் விதித்து பாருங்கள். பின்னர் டிரம்ப் இறங்கி வருகிறாரா என்று பார்ப்போம்" என்று தெரிவித்தார்.

    மேலும், டிசம்பர் 31, 2025 வரை அமெரிக்க பருத்தி இறக்குமதிக்கு 11 சதவீத கலால் வரியை தள்ளுபடி செய்யும் மோடி அரசின் முடிவை கெஜ்ரிவால் விமர்சித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட பதவில், இறக்குமதி மீதான 11% வரியை அரசாங்கம் நீக்கியுள்ளதால் ஜவுளி நிறுவனங்கள் ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து மலிவான பருத்தியை இறக்குமதி செய்துள்ளன.

    நமது நாட்டு விவசாயிகள் இப்போது எங்கு செல்ல வேண்டும்? அவர்களின் பருத்தி சந்தையில் விற்கப்படாது. கடனில் மூழ்கிய விவசாயி தற்கொலையின் விளிம்பில் இருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார். 

    • அந்நியச் செலாவணியுடன் பெரிதும் பிணைக்கப்பட்டுள்ள எண்ணெயை எங்கு வாங்குவது என்பது முற்றிலும் நமது தேவைகளைப் பொறுத்தது.
    • இந்த வரிவிதிப்பு கடந்த ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வந்துள்ளது.

    ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் விஷயத்தில் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு இந்தியா அடிபணியப் போவதில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    நேற்று தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்த நிர்மலா சீதாராமன், "ரஷிய எண்ணெய்யாக இருந்தாலும் சரி அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி, எங்களுக்கு ஏற்ற முடிவை எடுப்போம்.

    குறிப்பாக விலை மற்றும் போக்குவரத்து போன்ற காரணிகளை நாங்கள் கருத்தில் கொள்வோம். அந்நியச் செலாவணியுடன் பெரிதும் பிணைக்கப்பட்டுள்ள எண்ணெயை எங்கு வாங்குவது என்பது முற்றிலும் நமது தேவைகளைப் பொறுத்தது.

    எனவே, நாங்கள் நிச்சயமாக ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்குவோம்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக ரஷியாவிடம் குறைந்த விலையில் எண்ணெய் வாங்கி இந்தியா உக்ரைன் போருக்கு உதவுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரிவிதிப்பு கடந்த ஆகஸ்ட் 27 முதல் அமலுக்கு வந்துள்ளது.

    ×