என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வர்த்தகம்"

    • தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பவர்டேபிள் எனப்படும் தையல் நிறுவனங்கள் உள்ளன.
    • இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

    திருப்பூரில் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு பவர் டேபிள் நிறுவனங்கள் ஜாப் ஒர்க் முறையில் பின்னலாடைகளை உற்பத்தி செய்து கொடுக்கின்றனர். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பவர் டேபிள் சங்கத்தினர் கூலி உயர்வு ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். அதன்படி கடந்த 2022ம் ஆண்டு 2 சங்கத்தினர் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

    இதில் பவர் டேபிள் நிறுவனங்களுக்கு முதல் ஆண்டு 17 சதவீத கூலி உயர்வும் , அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு தலா 7 சதவீதமும் வழங்க ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. ஆண்டுதோறும் இவை முறையாக பின்பற்றப்பட்டு வரக்கூடிய நிலையில் கடந்த ஜூன் 6-ந்தேதி முதல் உயர்த்தப்பட வேண்டிய 7 சதவீத கூலி உயர்வு சில நிறுவனங்கள் வழங்கினாலும் ஒரு சில நிறுவனங்கள் வழங்காமல் கால நீட்டிப்பு செய்து வருவதால் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே உடனடியாக கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும் என கடந்த 7ம் தேதி முதல் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்களில் இருந்து ஆர்டர்கள் எடுப்பதையும் , செய்து முடித்த ஆர்டர்களை கொடுப்பதையும் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் 15 நாட்களுக்குள் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்கள் கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும். பவர் டேபிள் சங்கம் உற்பத்தி நிறுத்தத்தை செய்வதால் தொழில் பாதிக்கக்கூடும் என சைமா சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் பவர் டேபிள் சங்கம் சார்பில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்களுடனான முழு அளவிலான உற்பத்தி நிறுத்தம் இன்று முதல் தொடர உள்ளதாகவும் , கூலி உயர்வை அமல்படுத்தினால் அதற்குள்ளாக போராட்டத்தை கைவிடுவது , இல்லாத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிப்பது என தெரிவித்தனர்.

    இதையடுத்து இன்று முதல் பவர் டேபிள் உரிமையாளர்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் ஆடை உற்பத்தி பணிகள் முடங்கி உள்ளது.

    • தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பவர்டேபிள் எனப்படும் தையல் நிறுவனங்கள் உள்ளன.
    • இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

    திருப்பூரில் 'பவர்டேபிள்' என்று அழைக்கப்படும் 'பனியன் தையல் உரிமையாளர்கள்' சங்கத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. கட்டிங் செய்த ஆடைகளை தைத்து, செக்கிங் செய்து பேக்கிங் செய்யும் பணிகளை இந்த நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

    பனியன் தயாரிப்பாளர்களிடம் இந்த பவர்டேபிள் சங்கம் கடந்த 2022ம் ஆண்டு ஜுன் மாதம் 6ம் தேதி புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் அமைத்தது. அதன்படி முதல் ஆண்டு 17 சதவீதம், அதைத்தொடர்ந்து மீதம் உள்ள 3 ஆண்டுகளுக்கு தலா 7 சதவீதம் என கூலி உயர்வு பெறுவது என்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

    அதன்படி தற்போது 2025ம் ஆண்டு ஜுன் மாதம் 6ம் தேதியில் இருந்து 7 சதவீத கூலி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் பல பனியன் உற்பத்தி நிறுவனங்கள் புதிய கூலி உயர்வை வழங்காமல் இழுத்தடிப்பு செய்வதாக 'பவர்டேபிள்' உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

    இதனால் 7ம் தேதி முதல் கூலி உயர்வு பிரச்சினை தீரும்வரை டெலிவரி எடுப்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை என அறிவித்துள்ளனர். எங்களது பாதிப்புகளை உணர்ந்து உற்பத்தி நிறுவனங்கள் புதிய கூலி உயர்வை தடையின்றி வழங்க முன்வர வேண்டும் என திருப்பூர் பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்க செயலாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    திருப்பூர் மட்டுமின்றி அவிநாசி, பெருமாநல்லூர், ஈரோடு, சேலம், செங்கப்பள்ளி என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பவர்டேபிள் எனப்படும் தையல் நிறுவனங்கள் உள்ளன. இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். திருப்பூரில் உள்ள தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கமான 'சைமா' மூலம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் அமைக்கப்பட்டு நடைமுறை ப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தாண்டிற்கான புதிய கூலி உயர்வை சில நிறுவனங்கள் தராமல் காலம் தாழ்த்தி வருவதால் எங்கள் தொழில் துறையினர் கவலை அடைந்துள்ளனர். பலமுறை நேரில் சென்றும், கடிதங்கள் அனுப்பியும் எங்களுக்கு எவ்வித பலனும் ஏற்படவில்லை. இதனால் மீண்டும் 'சைமா' சங்கத்தை அணுகியுள்ளோம்.

    புதிய கூலி உயர்வு வழங்காமல் காலதாமதம் செய்யும் நிறுவனங்களை அழைத்து பேசி இப்பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வு ஏற்படுத்த 'சைமா' நிர்வாகிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அதனால் பல்வேறு இடங்களில் பனியன் உற்பத்தி பணிகள் முடங்கி வருகின்றன. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடை உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படும்" என்று கூறினார்.

    • நான்கு இந்துஜா சகோதரர்களில் இவர் இரண்டாமவர் ஆவார்.
    • தற்போது டாடா, பிர்லா, அம்பானி ஆகியோரின் குழுமங்களுடன் இந்துஜா குழுமமும் இந்தியாவின் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றாக உள்ளது.

    இந்துஜா குழுமத்தின் தலைவரான கோபிசந்த் பி. இந்துஜா நேற்று லண்டனில் காலமானார். அவருக்கு வயது 85.

    இவர் 2023-ஆம் ஆண்டுதான் இந்துஜா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். நான்கு இந்துஜா சகோதரர்களில் இவர் இரண்டாமவர் ஆவார். மூத்த சகோதரரான ஸ்ரீசந்த் இந்துஜா 2023-ல் காலமானார்.

    இவர்களது தந்தை பரமானந்த் இந்துஜா இந்தியவின் மும்பை மற்றும் ஈரானின் தெஹ்ரான் இடையே வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் இரும்புத் தாது ஆகியவற்றை ஏற்றுமதி செய்து விற்றதன் மூலம் வியாபார சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.

    தற்போது டாடா, பிர்லா, அம்பானி ஆகியோரின் குழுமங்களுடன் இந்துஜா குழுமமும் இந்தியாவின் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றாக உள்ளது.

    இந்துஜா சகோதரர்கள் 

     

    தற்போது ஆட்டோமொபைல், பேங்கிங், தொழில்நுட்பம்., ரியல் எஸ்டேட் உட்பட 11 துறைகளில் இக்குழுமம் வர்த்தகம் செய்கிறது.

    அசோக் லேலண்ட், இண்டஸ்இண்ட் வங்க, என்.எக்ஸ்.டி டிஜிட்டல் லிமிடெட் போன்றவை இக்குழுமத்தின் முக்கிய நிறுவனங்கள் ஆகும்.

    கோபிசந்த் இந்துஜா 1997-ல் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றார். சண்டே டைம்ஸின் 2025 பணக்காரர்கள் பட்டியலில், கோபிசந்த் இந்துஜாவின் குடும்பம் 32.3 பில்லியன் பவுண்டுகளுடன் பிரிட்டனின் பணக்காரக் குடும்பமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    கோபிசந்த் இந்துஜாவுக்கு சுனிதா இந்துஜா என்ற மனைவியும் சஞ்சய் இந்துஜா, தீரஜ் இந்துஜா, ரீட்டா இந்துஜா ஆகிய பிள்ளைகளும் உள்ளனர்.

    • இது 2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த வர்த்தக பற்றாக்குறையில் 37 சதவீதமாக இருக்கும் என்று அறிக்கை கூறுகிறது.
    • வர்த்தகப் பற்றாக்குறை, நாட்டின் நாணயத்தின் மதிப்பையும், பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும்

    சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (Free trade அக்ரீமெண்ட்)நடைமுறைக்கு வந்ததிலிருந்து ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது என்று எகனாமிக் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இந்தியா அதன் ஏழு வர்த்தக கூட்டாளர்களில் ஐந்து பேருடன் வர்த்தக பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

    இது 2025 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த வர்த்தக பற்றாக்குறையில் 37 சதவீதமாக இருக்கும் என்று அறிக்கை கூறுகிறது.

    2025 நிதியாண்டில் ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 45.2 பில்லியன் டாலர்கள் என்றும் அறிக்கை கூறுகிறது.

    2021 முதல், இந்தியா, மொரிஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம் (EFTA) மற்றும் ஆஸ்திரேலியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை செய்துள்ளது.

    இருப்பினும், 2022 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது. 

    10 நாடுகளைக் கொண்ட ASEAN கூட்டமைப்புடனான பற்றாக்குறை 2019 நிதியாண்டில் 21.8 பில்லியன் டாலர்களில் இருந்து 2025 நிதியாண்டில் 45.2 பில்லியன் டாலராக உயர்ந்தது.

    வர்த்தகப் பற்றாக்குறை என்பது ஒரு நாட்டின் இறக்குமதிகள், ஏற்றுமதிகளை விட அதிகமாக இருக்கும்போது ஏற்படும் நிலை. ஒரு நாடு வாங்கும் பொருட்களின் மதிப்பு, அது விற்கும் பொருட்களின் மதிப்பை விட அதிகமாக இருக்கும்போது வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படுகிறது.

    வர்த்தகப் பற்றாக்குறை, நாட்டின் நாணயத்தின் மதிப்பையும், பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும் முக்கிய காரணி ஆகும்.

    • கனடா அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவை வரியை விதிப்பதாக அறிவித்துள்ளது.
    • இது நமது நாட்டின் மீது நேரடியான மற்றும் வெளிப்படையான தாக்குதலாகும் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    பால் பொருட்கள் மீது பல ஆண்டாக விவசாயிகளிடம் 400 சதவீதம் வரை வரி விதித்து வருகிறது கனடா.

    வர்த்தகம் செய்வதற்கு மிகவும் கடினமான நாடான கனடா, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவை வரியை விதிப்பதாக அறிவித்துள்ளது.

    இது நமது நாட்டின் மீது நேரடியான மற்றும் வெளிப்படையான தாக்குதலாகும். அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை நகலெடுக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

    ஐரோப்பிய ஒன்றியமும் இதே காரியத்தைச் செய்துள்ளது. தற்போது எங்களுடன் பேச்சுவார்த்தையில் உள்ளது.

    இந்த மோசமான வரியின் அடிப்படையில் கனடா உடனான வர்த்தகம் குறித்த அனைத்து விவாதங்களையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருகிறோம்.

    அமெரிக்காவுடன் வணிகம் செய்ய அவர்கள் செலுத்த வேண்டிய வரியை அடுத்த 7 நாளுக்குள் கனடாவுக்குத் தெரிவிப்போம் என பதிவிட்டுள்ளார்.

    • அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பதிலடியாக சீனாவும் வரி விதித்தது.
    • இதனால் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வெகுவாக குறைந்தது.

    டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக 2ஆவது முறை பதவி ஏற்றதும், அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை உலக நாடுகள் குறைக்க வேண்டும். இல்லையென்றால் பரஸ்பர வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

    அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை அமல்படுத்தினார். பல்வேறு நாடுகள் கேட்டுக்கொண்டதன் விளைவாக 90 நாட்களுக்கு அந்த முடிவை நிறுத்தி வைத்துள்ளார். அதேளையில் சீனா பதில் வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் இந்த வருடம் மே மாதம் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 35 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு மே மாதம் 44 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு சீனா அமெரிக்காவுக்கு ஏற்றமதி செய்திருந்தது. தற்போது கடந்த மாதம் இது 28.8 பில்லியன் அமெரிக்க டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது. 10.8 பில்லியன் டாலர் வீழ்ச்சியடைந்துள்ளது.

    அதேவேளையில் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் 12 சதவீதமாக இருந்தது. தற்போது 14.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேசியாவிற்கான ஏற்றுமதி குறிப்பிடத்தகுந்த வகையில் அதிகரித்துள்ளது. ஜெர்மனிக்கான ஏற்றுமதி 12 சதவீத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

    கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது மொத்த ஏற்றுமதி 4.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இறக்குமதி 3.4 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் வர்த்தக உபரி 103.2 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

    கடந்த வாரம் டொனால்டு டிரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் பேசினார். அப்போது வர்த்தக பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இருவரும் ஒப்புக்கொண்டனர்.

    • அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.
    • அதிபர் டிரம்ப் இந்தியா மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்.

    இந்தியாவின் நடவடிக்கைகள் அமெரிக்காவை எரிச்சலடையச் செய்துள்ளதாக அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.

    அமெரிக்க-இந்திய மூலோபாய கூட்டாண்மை மன்றத்தின் (USISPF) எட்டாவது கூட்டத்தில் லுட்னிக், அதிபர் டிரம்ப் இந்தியா மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்.

    இருப்பினும் ரஷியாவிடமிருந்து இராணுவ உபகரணங்களை வாங்குவது, டாலரைச் சார்ந்திருப்பதைக் குறைக்க பிரிக்ஸ் அமைப்புடன் இணைந்து செயல்படுவது போன்ற சில விஷயங்கள் அமெரிக்காவை எரிச்சலடையச் செய்ததாக தெரிவித்தார். 

    அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் வெகு தொலைவில் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

    • இந்தியா-பாகிஸ்தானில் உள்ள தலைவர்கள் சிறந்த தலைவர்கள்.
    • உலகின் மிகச்சிறந்த ராணுவம் எங்களிடம் உள்ளது.

    காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா-பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

    இதில் பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்கள் மற்றும் ராணுவ நிலைகளை இந்தியா தாக்கியது. மேலும் பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்தது. 4 நாட்கள் சண்டைக்கு பிறகு இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதலை நான் பேச்சுவார்த்தை மூலம் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் அதை இந்தியா மறுத்தது. இருந்தபோதிலும் டிரம்ப் தனது கருத்தை தொடர்ந்து தெரிவித்து வந்தார்.

    இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட நான்தான் காரணம் என்று மீண்டும் திட்டவட்டமாக டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

    அவர் வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்த போது கூறியதாவது:-

    இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டையிடுவதை நாங்கள் தடுத்து நிறுத்தினோம். அது ஒரு அணுசக்தி பேரழிவாக மாறியிருக்கலாம். அதை தடுத்து நிறுத்தினோம். ஒருவருக்கொருவர் துப்பாக்கிச் சூடு நடத்துபவர்களுடனும், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடியவர்களுடனும் நாங்கள் வர்த்தகம் செய்ய முடியாது' என்று இரு நாடுகளிடமும் தெரிவித்தோம்.

    இந்தியா-பாகிஸ்தானில் உள்ள தலைவர்கள் சிறந்த தலைவர்கள். அவர்கள் புரிந்துகொண்டு போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டார்கள். சண்டையை நிறுத்தி விட்டார்கள். இந்திய தலைவர்கள், பாகிஸ்தான் தலைவர்கள் மற்றும் என் மக்களுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

    நாங்கள் மற்றவர்களும் சண்டையிடுவதைத் தடுக்கிறோம். எங்களால் எவரையும் விட சிறப்பாகப் போராட முடியும். உலகின் மிகச்சிறந்த ராணுவம் எங்களிடம் உள்ளது. உலகின் மிகச்சிறந்த தலைவர்கள் எங்களிடம் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியும் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
    • கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு ஏற்றுமதியாகியுள்ளது.

    திருப்பூர்:

    இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் மாதந்தோறும் கணக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். கடந்த ஏப்ரல் மாதத்துக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது ரூபாய் மதிப்பில் 17.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதாவது கடந்த 2024-25-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.9 ஆயிரத்து 995 கோடியே 40 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்துள்ளது. நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதம் ரூ.11 ஆயிரத்து 733 கோடியே 40 லட்சத்துக்கு ஆயத்த ஆடை வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

    திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியும் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு ஏற்றுமதியாகியுள்ளது. பின்னலாடை வர்த்தகம் அதிகரிக்க தொடங்கியுள்ளது திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

    இது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) துணை தலைவர் சக்திவேல் கூறியதாவது:-

    அமெரிக்காவின் வரி உயர்வு கொள்கை மற்றும் வங்கதேச உள்நாட்டு குழப்பங்கள் போன்ற பிரச்சனைகளுக்கு இடையிலும், நமது பின்னலாடை ஏற்றுமதியாளர்களின் சிறந்த செயல்திறனால் பின்னலாடைத்துறை புதிய நிதியாண்டிலும் வலுவான வளர்ச்சிப்பாதையில் தொடர்கிறது. அதாவது கடந்த ஏப்ரல் மாதம் 1.37 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு 1.20 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 15 சதவீத வளர்ச்சியை காட்டுகிறது. இந்த சீரான, நிலையான மாதாமாத வளர்ச்சி தொடரும்போது, திருப்பூர் பின்னலாடை வர்த்தக இலக்கான ரூ.50 ஆயிரம் கோடியை இந்த நிதியாண்டில் எட்டுவதில் எந்தவித தடையும் இருக்காது. நடப்பு ஆண்டின் தொடக்க மாதமே வளர்ச்சியோடு தொடங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.7,000 முதல் 8,000 வரை விற்பனையானது.
    • கடந்த வாரம் ஒரு ஆடு ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை விற்பனை செய்யப்பட்டது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் வாரச்சந்தையில் தங்கம் முதல் தக்காளி வரை விற்பனை செய்யப்படுகிறது.

    பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் இந்த சந்தையில் ஒரு திருமணத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கிறது.

    இந்த சந்தை தமிழகத்தில் மிகப்பெரிய சந்தை ஆகும். இதனால் போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு அதிகாலை முதலே ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள்.

    இதை சேலம், ஈரோடு, திருபத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்வார்கள்.

    இதனிடையே நாளை மறுநாள் (புதன்கிழமை) யுகாதி பண்டிகையை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் கொண்டாடுவது வழக்கம்.

    அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் யுகாதி பண்டிகை கொண்டாடி வருகிறார்கள். யுகாதி பண்டிகை முன்னிட்டு கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் கறி விருந்துக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கறி விருந்து வைப்பது வழக்கம்.

    இதனால் நேற்று கூடிய போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. சந்தையில் வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர். 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.7,000 முதல் 8,000 வரை விற்பனையானது. கடந்த வாரம் ஒரு ஆடு ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை விற்பனை செய்யப்பட்டது.

    யுகாதி பண்டிகையை முன்னிட்டு வாரச்சந்தையில் ஒரு ஆட்டின் மீது ஆயிரம் ரூபாய் விலை அதிகரித்தது. இதனால் நேற்று மட்டும் ரூ.4 கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • ரூ.1 கோடி திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனத்துக்கு வழங்க வேண்டும்.
    • ரூ.30 லட்சத்தை பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    திருப்பூர் :

    நெதர்லாந்து நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு பையர் மூலமாக பனியன் ஆர்டர் வழங்கப்பட்டு, திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தினர் ஆடைகளை தயாரித்து அனுப்பி வைத்தனர். இதற்கான தொகையாக ரூ.1 கோடி திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனத்துக்கு வழங்க வேண்டும். கடந்த ஜனவரி மாதம் பணத்தை முழுவதும் வழங்க வேண்டும். ஆனால் பிப்ரவரி மாதம் வரை வழங்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில், சம்பந்தப்பட்ட ஏற்றுமதியாளர் முறையிட்டார். ஏற்றுமதியாளர்கள் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டு நெதர்லாந்தில் உள்ள நிறுவனத்திடம் இருந்து ரூ.70 லட்சத்தை பெற்றுக்கொடுத்தது. மீதம் உள்ள ரூ.30 லட்சத்தை பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    ஏற்றுமதியாளர்கள் சட்டவிதிமுறைக்கு உட்பட்டு உரிய ஆவணங்களுடன் ஏற்றுமதி வர்த்தகம் செய்தால், ஆவணங்களின் அடிப்படையில் இதுபோல் பணத்தை பெறுவது எளிது. எனவே முறைப்படி உரிய ஆவணங்களுடன் ஏற்றுமதி வர்த்தகம் செய்ய வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • அரியலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளம், சூரியகாந்தி, வேப்பங்கொட்டை ஏலம் நடைபெற்றது
    • ரூ.1.42 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது

    அரியலூர்,

    அரியலூர் ரயில் நிலையம் அருகேயுள்ள ஒழங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் மக்காச்சோளம், சூரியகாந்தி, வேப்பங்கொட்டை ஆகிய பொருள்கள் திங்கள்கிழமை ஏலம் போனது.அரியலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், திங்கள்கிழமை மறைமுக ஏலத்துக்கு வந்த 5 விவசாயிகளுடைய 3,102 கிலோ மக்காச்சோளம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.22.91}க்கும் குறைந்த பட்சமாக ரூ.22.81க்கும் ஏலம் கேட்கப்பட்டு மொத்தம் ரூ ரூ.70,907 விலைபோனது.அதனை தொடர்ந்து 2 விவசாயிகளுடைய 1,155 கிலோ சூரியகாந்தி அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.40.21}க்கும், குறைந்தபட்சமாக ரூ.32.09}க்கும் ஏலம் கேட்கப்பட்டு மொத்தம் ரூ.41,782}க்கு விலைபோனது .இதே போல் விவசாயி ஒருவருடைய 439 கிலோ வேப்ப வத்தல் கிலோ ஒன்றுக்கு ரூ.48.42 கேட்கப்பட்டு ரூ.21,256 விலைபோனது. மேலும் ஒரு விவசாயினுடைய 72 கிலோ வேப்பங்கொட்டை கிலோ ஒன்றுக்கு 120.2 விலை கேட்கப்பட்டு 8,654}க்கு விலைக்கு போனது. ஆக மொத்தம் ரூ.1,42,599க்கு வர்த்தகம் நடைபெற்றது.

    ×