என் மலர்
நீங்கள் தேடியது "ஆர்டர்கள்"
- தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பவர்டேபிள் எனப்படும் தையல் நிறுவனங்கள் உள்ளன.
- இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
திருப்பூரில் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு பவர் டேபிள் நிறுவனங்கள் ஜாப் ஒர்க் முறையில் பின்னலாடைகளை உற்பத்தி செய்து கொடுக்கின்றனர். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பவர் டேபிள் சங்கத்தினர் கூலி உயர்வு ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். அதன்படி கடந்த 2022ம் ஆண்டு 2 சங்கத்தினர் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இதில் பவர் டேபிள் நிறுவனங்களுக்கு முதல் ஆண்டு 17 சதவீத கூலி உயர்வும் , அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு தலா 7 சதவீதமும் வழங்க ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. ஆண்டுதோறும் இவை முறையாக பின்பற்றப்பட்டு வரக்கூடிய நிலையில் கடந்த ஜூன் 6-ந்தேதி முதல் உயர்த்தப்பட வேண்டிய 7 சதவீத கூலி உயர்வு சில நிறுவனங்கள் வழங்கினாலும் ஒரு சில நிறுவனங்கள் வழங்காமல் கால நீட்டிப்பு செய்து வருவதால் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும் என கடந்த 7ம் தேதி முதல் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்களில் இருந்து ஆர்டர்கள் எடுப்பதையும் , செய்து முடித்த ஆர்டர்களை கொடுப்பதையும் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 15 நாட்களுக்குள் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்கள் கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும். பவர் டேபிள் சங்கம் உற்பத்தி நிறுத்தத்தை செய்வதால் தொழில் பாதிக்கக்கூடும் என சைமா சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பவர் டேபிள் சங்கம் சார்பில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்களுடனான முழு அளவிலான உற்பத்தி நிறுத்தம் இன்று முதல் தொடர உள்ளதாகவும் , கூலி உயர்வை அமல்படுத்தினால் அதற்குள்ளாக போராட்டத்தை கைவிடுவது , இல்லாத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிப்பது என தெரிவித்தனர்.
இதையடுத்து இன்று முதல் பவர் டேபிள் உரிமையாளர்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் ஆடை உற்பத்தி பணிகள் முடங்கி உள்ளது.
- பின்னலாடை ஏற்றுமதியின் தலைநகராக விளங்கிய திருப்பூர் இதுவரை இல்லாத சவால்களை கடந்த ஆண்டு சந்தித்தது.
- புதிய ஆர்டர் வரத்து இல்லாமல் திருப்பூரின் வர்த்தகம் ஸ்தம்பித்தது.
திருப்பூர்:
உலகின் மிகப்பெரிய மூலப்பொருள் ஏற்றுமதி நாடுகளிடையே நிலவும் போர் சூழலால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார மந்தநிலைக்கு ஆளாகியுள்ளன. போர் சூழல் காரணமாக பொருளாதார தடை விதிக்கப்பட்டதால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆட்டோமொபைல் உட்பட பல்வேறு தொழில்களும், விவசாயமும் பாதித்தது. கோதுமை, பார்லி உற்பத்தியிலும், சூரியகாந்தி சமையல் எண்ணெய் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.உக்ரைன் போர் சூழல் காரணமாக உலக மக்களின் வாங்கும் திறன் குறைந்து போயுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் போரின் எதிர்விளைவுகளை சந்திக்க தங்களின் இயல்பு வாழ்க்கையை மாற்றிக்கொண்டனர். ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொண்டனர்.
இதன் காரணமாக இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகமும் நேரடியாக பாதித்தது. திருப்பூரின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு மட்டும் 75 சதவீதம். கடந்த ஆண்டு பஞ்சு விலை உயர்வுக்கு பிறகு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருந்து புதிய ஆர்டர் வெகுவாக குறைந்துவிட்டது.
பின்னலாடை ஏற்றுமதியின் தலைநகராக விளங்கிய திருப்பூர் இதுவரை இல்லாத சவால்களை கடந்த ஆண்டு சந்தித்தது. சாயக்கழிவு சுத்திகரிப்பு, நூல் விலை, மூலப்பொருள் விலை உயர்வு, மின் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளை சந்தித்து அதிலிருந்து எளிதாக மீண்டு வந்த திருப்பூருக்கு உக்ரைன் போர் சூழல் எதிர்பாராத சவாலாக மாறிவிட்டது.புதிய ஆர்டர் வரத்து இல்லாமல் திருப்பூரின் வர்த்தகம் ஸ்தம்பித்தது. உக்ரைன் போர் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. அதற்கு பிறகும் அந்நாடுகள் போராடி வருகின்றன.
இருப்பினும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்த நிலை மாறி அந்நாட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆங்கில புத்தாண்டில் இருந்து அமெரிக்கா இயல்பு நிலைக்கு வந்துவிட்டது. ஐரோப்பிய நாடுகளும் படிப்படியாக இயல்பான இயக்கத்துக்கு மாறி வருகின்றன.இந்த நிதியாண்டை சமாளித்தால் போதும். வழக்கமான அளவு ஆர்டர்கள் வரத்துவங்கியதும் திருப்பூரில் மீண்டும் பரபரப்பு கூடிவிடும் என தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.






