என் மலர்
நீங்கள் தேடியது "Tiruppur"
- கப்பல்கள் மாற்று பாதையில் சுற்றிச்செல்ல 20 நாட்கள் கூடுதல் அவகாசம் தேவைப்படும்
- பதற்றமான சூழலில் சரக்கை அனுப்ப வேண்டாமென, வர்த்தகர்கள் கூறிவிட்டனர்.
ஈரான் - இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போர் சூழல் காரணமாக கப்பல் போக்குவரத்து தடையால் திருப்பூர் ஆடை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தியான ரூ. 300 கோடி மதிப்பிலான ஆடைகள் திருப்பூரிலேயே தேக்கமடைந்துள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், துபாய் வழியாக அரபு நாடுகளுக்கு செல்லும் பின்னலாடைகள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி கடல்வழி பாதையை அடைத்து வைத்துள்ளதால் கப்பல்கள் மாற்று பாதையில் சுற்றிச்செல்ல 20 நாட்கள் கூடுதல் அவகாசம் தேவைப்படும். இதனால் செலவுகள் அதிகரிக்கும்.
பதற்றமான சூழலில் சரக்கை அனுப்ப வேண்டாமென, வர்த்தகர்கள் கூறிவிட்டனர். ரம்ஜான் பண்டிகை விற்பனைக்கான ஆடைகளை கடந்த மாதங்களில் அனுப்பிவிட்டோம் என்றார்.
திருப்பூர் நிட்பிரின்டர்ஸ் அசோசியேஷன் (டெக்பா) தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில், "பிரின்டிங், சாய ஆலைகள், 'ஹீட் செட்டிங்' 'பினிஷிங்', சென்டர் போன்ற பிரிவுகளில், கியாஸ் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பின்னலாடை தயாரிப்பில் கியாஸ் பயன்பாடு தவிர்க்க இயலாதது.
கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சில 'ஜாப் ஒர்க்' பிரிவுகளில் உற்பத்தி முடங்கும் அபாயம் உள்ளது. மின்சாரத்தை பயன்படுத்தினால் உற்பத்தி செலவு அதிகரிக்கும். பின்னலாடை தொழில்துறையினருக்கு தடையின்றி கியாஸ் கிடைக்க மத்திய அரசு ஆவணம் செய்ய வேண்டும்" என்றார்.
- 2-வது மாடியில் அயனிங் மற்றும் பேக்கிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.
- இன்று காலை நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது.
திருப்பூர்:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் தனஞ்ஜெயன். திருப்பூர் வளையங்காடு பகுதியில் குடியிருந்து வருகிறார். இவர் லட்சுமி நகர் பகுதியில் உள்ள 2 மாடி கட்டிடத்தின் 2-வது மாடியில் அயனிங் மற்றும் பேக்கிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இதில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு வேலை முடிந்து நிறுவனமானது பூட்டப்பட்டு தொழிலாளர்கள் வீட்டிற்கு சென்றனர். இன்று காலை நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் மளமளவென தீப்பிடித்து எரிந்தது.இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடக்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் நிறுவனத்தில் இருந்த ஏராளமான பின்னலாடைகள், காட்டன் பாக்ஸ்கள், பாலி பேக்குகள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. அவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும்.
மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போர் காரணமாக நீர்வழிப்போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளது.
- போர் சூழல் பெரும் பொருளாதார இழப்பையும் வேலைவாய்ப்பு இழப்பையும் ஏற்படுத்தும்.
ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி குண்டு வீசி கொல்லப்பட்ட நிலையில் ஈரான்- இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நிலைகள் உள்ள வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் (துபாய்), கத்தார், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் கடல் வழி போக்குவரத்து மற்றும் வான்வழி போக்குவரத்து கடும் சிக்கலை சந்தித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் சரக்குகள் பெரும்பாலும் துபாய் சென்று அங்கிருந்து மீண்டும் செல்லும் வகையில் அனுப்பப்பட்டு வருகிறது.
வான்வழி சரக்கு அனுப்புவது கூடுதல் செலவு என்பதால் அவ்வகை ஏற்றுமதி அரிதாகவே செய்யப்படுகிறது . இத்தகைய சூழலில் கடல்வழிப் பாதையில் மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் பாப்-எல்-மண்டேப் ஆகிய பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சூயஸ் கால்வாய் வழியாக செல்வதற்கு பதிலாக ஆப்பிரிக்காவை சுற்றிச்செல்லும் நீண்ட பாதையை கப்பல்கள் தேர்ந்தெடுக்கின்றன. இதனால் பயண நேரம் 15 முதல் 20 நாட்கள் வரை அதிகரித்துள்ளது.
மார்ச் 2, 2026 நிலவரப்படி மெர்ஸ்க் , எம்.எஸ்.சி., ஹபாக் போன்ற முன்னணி கப்பல் நிறுவனங்கள் இந்த வழியாக செல்லும் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. கப்பல் நிறுவனங்கள் போர்க்கால கூடுதல் கட்டணம் வசூலிக்க தொடங்கியுள்ளன. இதனால் ஒரு கண்டெய்னருக்கு இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை கூடுதல் செலவாகிறது. இது 20 முதல் 50 சதவீத போக்குவரத்து செலவை ஏற்படுத்தும் . அதே போல் வான் வழி போக்குவரத்தில் ஏர் இந்தியா , இண்டிகோ மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களான எமிரேட்ஸ் , கத்தார் ஏர்வேஸ் போன்றவை வளைகுடா நாடுகளுக்கான விமானங்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளன.
ஈரான், இஸ்ரேல், லெபனான், ஈராக் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் வான்வெளிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா செல்லும் இந்திய விமானங்கள் மாற்றுப் பாதையில் செல்வதால் பயண நேரம் அதிகரித்துள்ளது. மேலும் துபாய் போன்ற முக்கிய விமான நிலையங்கள், துறைமுகத்தில் செயல்பாடுகள் குறைந்திருப்பதால் ஏற்கனவே அங்கு அனுப்பப்பட்ட ஏராளமான சரக்குகளும் தேக்கமடைந்திருக்க வாய்ப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் கே. எம். சுப்பிரமணியன் கூறுகையில், "போர் காரணமாக நீர்வழிப்போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளதால் சரக்கு ஏற்றுமதி கடும் சிக்கலை சந்தித்து உள்ளது . வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் சாதகமான நிலையில் இருந்தாலும் போர் சூழல் பெரும் பொருளாதார இழப்பையும் வேலைவாய்ப்பு இழப்பையும் ஏற்படுத்தும். எனவே போர் இல்லாத உலகம் மட்டுமே வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் துபாய் இந்திய நாட்டு ஏற்றுமதியின் மையமாக செயல்படுவதால் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்படும் சரக்குகள் அங்கே வைத்து பிரித்து பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பக்கூடிய சூழலில் அங்கு ஏற்பட்டுள்ள போர்பதட்டம் காரணமாக ஏராளமான சரக்குகள் தேங்கி இருக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் எவ்வளவு பொருட்கள் தேக்கமடைந்துள்ளது என தெரியவரும். போரின் பாதிப்பு குறித்த தாக்கம் அடுத்த ஓரிரு வாரங்களில் முழுமையாக தெரியும் என்றார்.
இந்த சூழலில் இழப்புகளை சந்திப்பதை தவிர்க்கும் பொருட்டு இந்திய அரசு இது தொடர்பாக அவசர கூட்டங்களை நடத்தி வருகிறது. நிலைமை சீராகும் வரை புதிய ஏற்றுமதி ஒப்பந்தங்களைச் செய்யும் போது எப்.ஓ.பி., (சரக்கு ஏற்றிய பின் பொறுப்பு வாங்குபவருடையது) என்ற அடிப்படையில் ஏற்றுமதி செய்ய ஏற்றுமதியாளர்களுக்கு அறிவுறுத்தப்ப ட்டுள்ளது. போர் காரணமாக பின்னலாடை துறை மட்டுமல்லாது விவசாய பொருட்கள் ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளே சென்று பார்த்தபோது ஒவ்வொரு நிறுவனத்திலும் வைக்கப்பட்டிருந்த பணம் மட்டும் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
- போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் கல்லூரி சாலை அணைப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பின்னலாடை மற்றும் உப நிறுவனங்கள் என அடுத்தடுத்து 4 நிறுவனங்களின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.
வழக்கம் போல நிறுவனத்தில் பணிக்கு வந்த ஊழியர்கள் பனியன் நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் இதே போல அடுத்தடுத்த 3 நிறுவனங்களின் பூட்டுகள் உடைக்கப்பட்டு உள்ளே பொருட்கள் சிதறி கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ஒவ்வொரு நிறுவனத்திலும் வைக்கப்பட்டிருந்த பணம் மட்டும் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கையில் இரும்பு ராடு, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நள்ளிரவில் சுற்றித்திரிவதும் பின்னர் பூட்டுகளை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் 15 வேலம்பாளையம் போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் கையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே மிகப்பெரிய அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு முகமூடி கொள்ளை யர்களை கண்டுபிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடந்த சில நாட்களாகவே பூக்களின் விலை சரிவை சந்தித்து வருகிறது
- சந்தைக்கு கொண்டு வரும் பூக்களை எப்படியாவது விற்பனை செய்ய வேண்டும் என விலை குறைத்து விற்பனை செய்து வருகிறோம்.
திருப்பூர்:
திருப்பூர் பெருமாள் கோவில் அருகே பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்களை கொண்டு வருகிறார்கள். இதுபோல் விவசாயிகளிடம் இருந்தும் வியாபாரிகள் வாங்கி வந்தும் விற்பனை செய்கிறார்கள்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாகவே பூக்களின் விலை சரிவை சந்தித்து வருகிறது. இதனால் விற்பனையாகாத பூக்களை ஆங்காங்கே கொட்டி வரும் அவலம் நடந்து வருகிறது.
இது குறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது:-
திருப்பூர் பூ மார்க்கெட்டிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் பூக்களை வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். தற்போது முகூர்த்த தினம் , கோவில் நிகழ்ச்சி இல்லாத காரணத்தினால் பூக்களின் தேவை குறைவாக உள்ளது. ஆனால் வரத்து அதிகமாக உள்ளது.
இதனால் சந்தைக்கு கொண்டு வரும் பூக்களை எப்படியாவது விற்பனை செய்ய வேண்டும் என விலை குறைத்து விற்பனை செய்து வருகிறோம்.
இருப்பினும் விற்பனையாகாத பூக்களை மீண்டும் கொண்டு சென்றால் அதற்கான வண்டி வாடகை உள்ளிட்ட செலவுகள் அதிகம் ஆகும். மீண்டும் இந்த பூக்களை விற்பனை செய்ய முடியாததால் சந்தையிலேயே குப்பையில் கொட்டி செல்கிறோம் என்றனர்.
- போராட்டத்தின்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
- போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியில் தினசரி சேகரமாகும் குப்பைகளை இடுவாய் அடுத்த சின்னகாளிபாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பை கிடங்கு அமைத்து கொட்டுவதை எதிர்த்து அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் 3 பேர் மற்றும் போலீசார் 4 பேர் காயமடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனை கண்டித்து நேற்று பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து போலீசார் அண்ணாமலை உள்பட 600க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்களை இரவு விடுதலை செய்தனர்.
இந்தநிலையில் அனுமதியின்றி தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 600 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது தடையை மீறி ஆர்ப்பா ட்டம் செய்தது, அனுமதியின்றி ஒன்று கூடுதல், போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- மாநகராட்சிக் கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு மாதமாக பொதுமக்கள் போராட்டம்
- போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
திருப்பூர் சின்னகாளிபாளையத்தில் மாநகராட்சிக் கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு மாதமாக பொதுமக்கள் போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது வழக்குப்பதிவு செய்தததைக் கண்டித்து இன்று மீண்டும் போராட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
- கர்நாடகா அரசால் நந்தினி பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- ரூ. 57 லட்சம் மதிப்புள்ள 8 ஆயிரம் லிட்டர் கலப்பட நெய் பறிமுதல்
கர்நாடக கூட்டுறவுப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பினரால் நந்தினி பால், நெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தென்னிந்தியாவின் மதிப்புமிக்க பால் பொருட்களின் பிராண்டாக மாறியுள்ள நந்தினி பெயரில் கலப்பட நெய் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கர்நாடக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், சாமராஜ்பேட்டை நஞ்சம்பா அக்ரஹாராவில் உள்ள கிருஷ்ணா எண்டர்பிரைசஸ் என்ற கிடங்கில் போலீஸ் மற்றும் உணவுப் பொருள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அங்கு கலப்பட நெய் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக கிடங்கின் உரிமையாளர் மகேந்திரா மற்றும் மகன் தீபக், முனிராஜு, மற்றும் அபிஅரசு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1.26 கோடி ரொக்கமும், ரூ. 57 லட்சம் மதிப்புள்ள 8 ஆயிரம் லிட்டர் கலப்பட நெய், டால்டா, பாமாயில், தேங்காய் எண்ணெய் மற்றும் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 4 சரக்கு வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கலப்பட நெய் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு கர்நாடகாவில் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக, கர்நாடக போலீசார் தமிழ்நாட்டு போலீசுடன் இணைந்து விசாரணை நடத்தியதில் திருப்பூரில் உள்ள ஆலையில் கலப்பட நெய் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. பின்னர் அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பவர்டேபிள் எனப்படும் தையல் நிறுவனங்கள் உள்ளன.
- இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
திருப்பூரில் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு பவர் டேபிள் நிறுவனங்கள் ஜாப் ஒர்க் முறையில் பின்னலாடைகளை உற்பத்தி செய்து கொடுக்கின்றனர். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பவர் டேபிள் சங்கத்தினர் கூலி உயர்வு ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். அதன்படி கடந்த 2022ம் ஆண்டு 2 சங்கத்தினர் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இதில் பவர் டேபிள் நிறுவனங்களுக்கு முதல் ஆண்டு 17 சதவீத கூலி உயர்வும் , அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு தலா 7 சதவீதமும் வழங்க ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. ஆண்டுதோறும் இவை முறையாக பின்பற்றப்பட்டு வரக்கூடிய நிலையில் கடந்த ஜூன் 6-ந்தேதி முதல் உயர்த்தப்பட வேண்டிய 7 சதவீத கூலி உயர்வு சில நிறுவனங்கள் வழங்கினாலும் ஒரு சில நிறுவனங்கள் வழங்காமல் கால நீட்டிப்பு செய்து வருவதால் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும் என கடந்த 7ம் தேதி முதல் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்களில் இருந்து ஆர்டர்கள் எடுப்பதையும் , செய்து முடித்த ஆர்டர்களை கொடுப்பதையும் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 15 நாட்களுக்குள் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்கள் கூலி உயர்வை அமல்படுத்த வேண்டும். பவர் டேபிள் சங்கம் உற்பத்தி நிறுத்தத்தை செய்வதால் தொழில் பாதிக்கக்கூடும் என சைமா சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பவர் டேபிள் சங்கம் சார்பில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் கூலி உயர்வு வழங்காத நிறுவனங்களுடனான முழு அளவிலான உற்பத்தி நிறுத்தம் இன்று முதல் தொடர உள்ளதாகவும் , கூலி உயர்வை அமல்படுத்தினால் அதற்குள்ளாக போராட்டத்தை கைவிடுவது , இல்லாத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிப்பது என தெரிவித்தனர்.
இதையடுத்து இன்று முதல் பவர் டேபிள் உரிமையாளர்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் ஆடை உற்பத்தி பணிகள் முடங்கி உள்ளது.
- தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பவர்டேபிள் எனப்படும் தையல் நிறுவனங்கள் உள்ளன.
- இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
திருப்பூரில் 'பவர்டேபிள்' என்று அழைக்கப்படும் 'பனியன் தையல் உரிமையாளர்கள்' சங்கத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. கட்டிங் செய்த ஆடைகளை தைத்து, செக்கிங் செய்து பேக்கிங் செய்யும் பணிகளை இந்த நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
பனியன் தயாரிப்பாளர்களிடம் இந்த பவர்டேபிள் சங்கம் கடந்த 2022ம் ஆண்டு ஜுன் மாதம் 6ம் தேதி புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் அமைத்தது. அதன்படி முதல் ஆண்டு 17 சதவீதம், அதைத்தொடர்ந்து மீதம் உள்ள 3 ஆண்டுகளுக்கு தலா 7 சதவீதம் என கூலி உயர்வு பெறுவது என்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி தற்போது 2025ம் ஆண்டு ஜுன் மாதம் 6ம் தேதியில் இருந்து 7 சதவீத கூலி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் பல பனியன் உற்பத்தி நிறுவனங்கள் புதிய கூலி உயர்வை வழங்காமல் இழுத்தடிப்பு செய்வதாக 'பவர்டேபிள்' உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
இதனால் 7ம் தேதி முதல் கூலி உயர்வு பிரச்சினை தீரும்வரை டெலிவரி எடுப்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை என அறிவித்துள்ளனர். எங்களது பாதிப்புகளை உணர்ந்து உற்பத்தி நிறுவனங்கள் புதிய கூலி உயர்வை தடையின்றி வழங்க முன்வர வேண்டும் என திருப்பூர் பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்க செயலாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
திருப்பூர் மட்டுமின்றி அவிநாசி, பெருமாநல்லூர், ஈரோடு, சேலம், செங்கப்பள்ளி என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பவர்டேபிள் எனப்படும் தையல் நிறுவனங்கள் உள்ளன. இந்த தொழிலை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர். திருப்பூரில் உள்ள தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கமான 'சைமா' மூலம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் அமைக்கப்பட்டு நடைமுறை ப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தாண்டிற்கான புதிய கூலி உயர்வை சில நிறுவனங்கள் தராமல் காலம் தாழ்த்தி வருவதால் எங்கள் தொழில் துறையினர் கவலை அடைந்துள்ளனர். பலமுறை நேரில் சென்றும், கடிதங்கள் அனுப்பியும் எங்களுக்கு எவ்வித பலனும் ஏற்படவில்லை. இதனால் மீண்டும் 'சைமா' சங்கத்தை அணுகியுள்ளோம்.
புதிய கூலி உயர்வு வழங்காமல் காலதாமதம் செய்யும் நிறுவனங்களை அழைத்து பேசி இப்பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வு ஏற்படுத்த 'சைமா' நிர்வாகிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அதனால் பல்வேறு இடங்களில் பனியன் உற்பத்தி பணிகள் முடங்கி வருகின்றன. இதனால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடை உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படும்" என்று கூறினார்.
- போலீசார் நைஜீரிய நாட்டை சேர்ந்த 4 பேரின் ஆவணங்களை பரிசோதனை செய்தனர்.
- அவர்களிடம் இருந்த பாஸ்போர்ட் மற்றும் விசா தேதி காலாவதியாகி விட்டது
அவினாசி:
திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் பின்னலாடை சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள்.
குறிப்பாக வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் இங்கு வந்து பல்வேறு பகுதிகளில் லட்சக்கணக்கில் தங்கியுள்ளனர். இவர்களில் சிலர் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக தகவல் கிடைத்து அவ்வப்போது போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்வதும் நடந்து வருகிறது.
அந்த வகையில், அவினாசியை அடுத்த கணேசபுரம் வைஷ்ணவி கார்டன் பகுதியில் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருப்பதாக அவினாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையொட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அங்கு தங்கி இருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த 4 பேரின் ஆவணங்களை பரிசோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்த பாஸ்போர்ட் மற்றும் விசா தேதி காலாவதியாகி விட்டது தெரியவந்தது. ஆனாலும் அவர்கள் சட்ட விரோதமாக தங்கி இருந்தனர்.
இதையடுத்து நைஜீரிய நாட்டை சேர்ந்த ஐகென்னா மேக்னஸ் (வயது 50), அவரது மனைவி ரீட்டா அவியான்போ (43), பிடிலிஸ் ஓனெரெக்லோ (46), இசுசுக்குவு ஜான் (40) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்கள் 4 பேரும் அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- கடந்த 5 ஆண்டுகளில் ரூ.500 கோடியாக இருந்த வங்கதேச ஆடை இறக்குமதி ரூ.5,200 கோடியை தாண்டியது.
- உள்நாட்டு சந்தைகளில் வங்கதேச ஆடைகள் கடும் போட்டியாக மாறின.
ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் இந்தியாவுக்கு போட்டியாக மாறியிருந்த வங்கதேசம் கடந்த 2017ம் ஆண்டு முதல் உள்நாட்டு சந்தையிலும் போட்டியை உருவாக்கியது. ஜி.எஸ்.டி., அமலான பின், கட்டுப்பாடு தளர்ந்து படிப்படியாக வங்கதேச ஆடை இறக்குமதி அதிகரித்தது.
முன்னணி பிராண்டடு நிறுவனங்கள், வங்க தேசத்தில் இருந்து ஆடைகளை உற்பத்தி செய்து நம் நாட்டில் விற்பனை செய்தன. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.500 கோடியாக இருந்த வங்கதேச ஆடை இறக்குமதி ரூ.5,200 கோடியை தாண்டியது. இதன் எதிரொலியாக உள்நாட்டு சந்தைகளில் வங்கதேச ஆடைகள் கடும் போட்டியாக மாறின.
இதற்கிடையே வங்கதேசத்தில் உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டு நிலைமை தலைகீழாக மாறியது. இந்திய பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், அந்நாட்டின் தரைவழி இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதன் எதிரொலியாக அந்நாட்டில் இருந்து ஆயத்த ஆடை இறக்குமதி குறைந்தது.முன்னணி பிராண்டடு நிறுவனங்களும், வங்க தேசத்துடன் வர்த்தகம் செய்ய முடியாது என உணர்ந்து உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுடன் கரம் கோர்த்தன. அதன்படி திருப்பூரில் இயங்கும் முன்னணி நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ், ஜோடியாக், வி.மார்ட் உள்ளிட்ட பிராண்டடு நிறுவனங்களின் ஆர்டர்கள் வரத்தொடங்கி உள்ளன.
இது குறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சண்முக சுந்தரம் கூறுகையில், "உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி சீராக இயங்கி வருகிறது. பெரிய சவாலாக இருந்த வங்கதேச ஆடை இறக்குமதி கட்டுக்குள் வந்துவிட்டது. கடந்த 4 மாதங்களாக ஆடை இறக்குமதி குறைந்ததால், உள்நாட்டு சந்தைகளில் திருப்பூர் ஆடைகளின் தேவை அதிகரித்துள்ளது. வங்கதேசத்துக்கு ஆர்டர் கொடுத்து வந்த முன்னணி பிராண்டடு நிறுவனங்கள் நேரடியாக மீண்டும் திருப்பூருக்கே ஆர்டர் கொடுக்க துவங்கியுள்ளன என்றார்.






