என் மலர்
நீங்கள் தேடியது "Tiruppur"
- பட்டியல் வெளியான பிறகு படிவங்கள் வந்துசேரும்.
- விண்ணப்ப படிவங்கள் சட்டசபை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்படும்.
திருப்பூர் :
இந்திய தேர்தல் கமிஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் திருத்தப்படுகிறது. தகுதியான வாக்காளர் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், திருத்தம், ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் போன்ற பணிகள் நடக்கும்.வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள போட்டோவை மாற்றவும், முகாமில் விண்ணப்பிக்கலாம். நடப்பு ஆண்டில் செப்டம்பர் மாதத்திற்கு பிறகு சுருக்கமுறை திருத்த பணி நடக்க உள்ளது. அதற்காக மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கு 1.50 லட்சம் விண்ணப்ப படிவங்கள் வந்துள்ளன.வரைவு பட்டியல் வெளியான பிறகு படிவங்கள் வந்துசேரும். இ
ந்தாண்டு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்த விண்ணப்ப படிவங்கள் சட்டசபை தொகுதி வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்படும். பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய, வாக்காளர்கள் தற்போதும் விண்ணப்பிக்கலாம்.தாலுகா அலுவலகங்களில் தேவையான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து ஆவண நகல்களுடன் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
- அக்கம் பக்கத்தினர் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
- அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் அடுத்த குள்ளே கவுண்டன் புதூரை சேர்ந்தவர் ரேவதி இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.
இதில் வேல்முருகன் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல சமையல் செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு கணவன் மனைவி இருவரும் அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைக்கு சென்றுள்ளனர்.
சிறிது நேரத்தில் இவர்களது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. அருகில் சென்று பார்த்த போது வீட்டின் உள் தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வேல்முருகனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் மேலும் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இரண்டு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் வீட்டின் மேற்கூரை கதவு மற்றும் வீட்டில் உள்ளே இருந்த டிவி பிரிட்ஜ் கட்டில் பீரோ என 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ஆகியது. இந்த தீ விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மாநகரில் பிற்பகல் முதலே வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
- மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் சாரல் மழை நீடித்தது.
திருப்பூர் :
திருப்பூா் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. மாநகரில் பிற்பகல் முதலே வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதைத்தொடா்ந்து, திருப்பூா் பழைய பேருந்து நிலையம், ரெயில் நிலையம், காந்திநகா், மங்கலம் சாலை, ஊத்துக்குளி சாலை, காங்கயம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் சாரல் மழை நீடித்தது. மழையின் காரணமாக பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள், பணிமுடிந்து சென்ற தொழிலாளா்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.மேலும் திருப்பூரில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை ஏற்படும்.
- திருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
திருப்பூர் :
தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை அவினாசிசாலை, புஷ்பா தியேட்டர், காலேஜ் சாலை, ஓடக்காடு, பங்களா பஸ் நிறுத்தம், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, கே.ஆர்.இ. லே அவுட், எஸ்.ஆர்.நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா நகர், எம்.ஜி.ஆர்.நகர், பாரதி நகர், வளையங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோநகர், காமாட்சிபுரம், பூத்தார்நகர், சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர் பகுதி, கல்லம்பாளையம், எஸ்.ஏ.பி.தியேட்டர் பகுதி, ஆசர்நகர், நாராயணசாமிநகர், காந்திநகர், டிடிபி மில்லின் ஒரு பகுதி, சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணாகாலனி, ஜீவாகாலனி, அங்கேரிபாளையம் சாலை, சிங்காரவேலர் நகர் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- உலக வெறிநோய் தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது.
- தடுப்பூசி போட்டு நோய் வராமல், தடுத்துவிடலாம்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- உலக வெறிநோய் தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது. வெறிநாய் கடித்து விட்டால், கடிபட்ட நாளிலிருந்து 0,3,7,14,28ம் நாட்களில் தவறாமல் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் தடுப்பூசி போடுவது அவசியம்.
நாய் கடித்தவுடன் கடிபட்ட இடத்தை உடன் குழாய் தண்ணீரில் அல்லது தண்ணீரை புண்மேல் ஊற்றி வழிந்தோடும் படி செய்து கழுவ வேண்டும். கார்பாலிக் அமிலம் கலந்த சோப்பு போட்டு கழுவினால் வைரஸ் கிருமி அழியும். டிஞ்சர் அயோடின் பஞ்சில் நனைத்து, காயத்தில் வைக்க வேண்டும். மேற்கூறியபடி செய்வதன் மூலம் காயத்தில் வைரஸ் கிருமியின் எண்ணிக்கையை குறைத்து, நோய் உண்டாகும் காலத்தை நீட்டித்து, அதற்குள் தடுப்பூசி போட்டு நோய் வராமல், தடுத்துவிடலாம். உடன் மருத்துவரை அணுகி, தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து கால்நடை மருந்தகம் மற்றும் மருத்துவ நிலையங்களில் நாளை 28-ந்தேதி அன்று நடைபெறும் இலவச தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தங்கள் நாய்கள் மற்றும் பூனைகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போட்டு கால்நடைகளை வெறிநோயிலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- திருவனந்தபுரம்-மும்பை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் குளிர்சாதன பெட்டி இணைக்கப்படுகிறது.
- புனே-கன்னியாகுமரி ரெயிலில் 3 அடுக்கு குளிர்சாதன பெட்டி 2 இணைக்கப்படுகிறது.
திருப்பூர் :
திருவனந்தபுரம்-மும்பை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (எண்.16332) வருகிற 17-ந் தேதி முதல் 3 அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டி இரண்டு நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இதுபோல் மும்பை-திருவனந்தபுரம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (எண்.16331) வருகிற 18-ந் தேதி முதல் 3 அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டி இரண்டு நிரந்தரமாக இணைக்கப்படுகிறது.
மேலும் கன்னியாகுமரி-புனே செல்லும் தினசரி ரெயிலில் (எண்.16382) 3 அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டி 2 வருகிற 22-ந் தேதி முதல் நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. அதுபோல் புனே-கன்னியாகுமரி செல்லும் தினசரி ரெயிலில் 3 அடுக்கு குளிர்சாதன பெட்டி 2 வருகிற 23-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது. இந்த ரெயில்கள் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படுகிறது. இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது.
- சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் வழக்கமான உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது. திருப்பூர் டவுன் ஹால் செல்வவிநாயகர் கோவில், குலாலர் பிள்ளையார் கோவில் , செரீப் காலனி சித்தி விநாயகர், ஜான் ஜோதி கார்டன் செல்வவிநாயகர், எஸ்.ஆர்.நகர் நவக்கிரக விநாயகர்,
கருவம்பாளையம் மேற்கு விநாயகர் கோவில், எஸ்.வி.,காலனி, வலம்புரி ரத்தின விநாயகர், ராயபுரம் ராஜவிநாயகர், மண்ணரை செல்வ விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் நடந்த பூஜைகளில் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், கதித்தமலை வெற்றி வேலாயுத சுவாமி கோவில், கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில், அலகுமலை பாலதண்டாயுதபாணி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்லடம், தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில், ஊத்துக்குளி வட்டார கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. இதுதவிர வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிலும் விநாயகர் சிலை அமைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது.
- தெய்வ தரிசனம் நிகழ்ச்சியில் திருப்பூர் மகாலட்சுமி ஆலயத்தின் சிறப்புகள் பற்றி ஒளிபரப்பாகிறது.
- 31ந் தேதி காலை 7 மணிக்கு சன் டி.வி.யில் தெய்வ தரிசனம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு.
திருப்பூர் :
ஆதிமூல சற்குரு ஸ்ரீ வீரபோக வசந்தராயர் மகான் ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிகள் நாளை 31ந் தேதி காலை 7 மணிக்கு சன் டி.வி.யில் தெய்வ தரிசனம் நிகழ்ச்சியில் திருப்பூர் மகாலட்சுமி ஆலயத்தின் சிறப்புகள் பற்றி சொற்பொழிவாற்றும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அனைவரும் இதனை பார்த்து சுவாமிகளின் திருவருளையும் அம்பாளின் பேரருளையும் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
- மாதாந்திர மின்சார பாராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படும்
திருப்பூர் :
திருப்பூர், பல்லடம், வீரபாண்டி, ஆண்டிப்பாளையம், குமார்நகர், சந்தைப்பேட்டை,பலவஞ்சிபாளையம் ஆகிய துணை மின்நிலைய பகுதிகளில் நாளை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வி.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருப்பூர், வீரபாண்டி, ஆண்டிப்பாளையம், குமார்நகர், சந்தைப்பேட்டை, பலவஞ்சிபாளையம் ஆகிய துணை மின்நிலைய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:-
வீரபாண்டி, ஆண்டிப்பாளையம்
வீரபாண்டி துணை மின்நிலையத்திற்குட்பட்ட வீரபாண்டி, பாலாஜிநகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிப்பாளையம், (வாய்க்கால்மேடு) குளத்துப்பாளையம், கரைபுதூர், குப்பாண்டம்பாளையம், எம்.ஏ.நகர், லட்சுமிநகர், சினனக்கரை, முல்லைநகர், டி.கே.டி.மில்.
ஆண்டிப்பாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட இடுவம்பாளையம், ஆண்டிப்பாளையம், முத்துநகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவாநகர், சின்னியகவுண்டன்புதூர், கே.என்.எஸ்.நகர், முல்லை நகர், இடும்பன் நகர், ஆர்.கே.காட்டன் ரோடு, காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர்,லிட்டில் பிளவர் நகர்.
குமார்நகர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட ராமமூர்த்திநகர், பி.என்.ரோடு, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி.நகர், கொங்குநகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின் ரோடு, வ.ஊ.சி. நகர், டி.எஸ்.ஆர்.லே அவுட், முத்துநகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம்,என்.ஆர்.கே.புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலை நகர், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ் நிலையம் மற்றும் லட்சுமிநகர்.
சந்தைப்பேட்டை துணை மின்நிலையத்திற்குட்பட்ட அரண்மனைபுதூர், தட்டான் தோட்டம், எம்.ஜி.புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரீப் காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.நகர், கே.எம்.ஜி. நகர், பட்டுக்கோட்டையார் நகர், திரு.வி.க.நகர், கருப்பகவுண்டம்பாளையம், கோபால்நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி. நகர், கே.வி.ஆர்.நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, பெரியார் காலனி, சபாபதி புரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில் ரோடு, மிஷின்வீதி, காமராஜ் ரோடு, புதுமார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, காதர்பேட்டை, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதூர் மெயின் ரோடு, தாராபுரம் ரோடு ஆகிய பகுதிகள்.
பலவஞ்சிபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட சந்திராபுரம், கரட்டாங்காடு, செரங்காடு, டி.ஏ.பி.நகர், என்.பி.நகர், காளிநாதம்பாளையம், பலவஞ்சிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் தடைசெய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பல்லடம் நாரணாபுரம், பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேடபாளையம், 63வேலம்பாளையம், வலையபாளையம், ஆறுமுத்தாம்பாளையம், நாரணாபுரம், அறிவொளி நகர், சேகாம்பாளையம், ஆட்டையம்பாளையம், தெற்குபாளையம், கல்லம்பாளையம், இந்திராநகர், மங்கலம் ரோடு ஒரு பகுதி, பனப்பாளையம், மாதப்பூர்,கணபதிபாளையம், குங்குமம்பாளையம், சிங்கனூர், பெத்தாம்பாளையம், நல்லா கவுண்டம்பாளையம், மாதேஸ்வரன் நகர், ராயர்பாளையத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.இந்த தகவலை பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் ரத்தினகுமார் தெரிவித்துள்ளார்.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வீரபாண்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.
- வீரபாண்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வி.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- வீரபாண்டி துணைமின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை வீரபாண்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பார்க் காலேஜ் ரோடு, லட்சுமிநகர் நால்ரோடு, கரைபுதூர் ரோடு, கோட்டைக்காடு ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.
இதேபோல் பணப்பாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட மாதேஸ்வரன் நகர், நல்லூர்பாளையம், கவுண்டம்பாளையம், கவுண்டம்பாளையம்புதூர், மலையம்மன்பாளையம், கிருஷ்ணாபுரம், சிட்கோ.
திருப்பூர் துணைமின்நிலையத்திற்குட்பட்ட சி.எஸ்.ஐ. சர்ச் வீதி, இந்திராநகர், இட்டேரி ரோடு, போஸ்டல் காலனி, திரு.வி.க. நகர் 1,2,3 வீதிகள் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.