என் மலர்
நீங்கள் தேடியது "vijay"
- ஜன நாயகன் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது
- ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி வரும் படம் ஜன நாயகன். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.
அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான "தளபதி கச்சேரி" வெளியாகி அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது. தொடர்ந்து படத்தின் இறுதிக்கப்பட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான ஒரே பேரே வரலாறு பாடல் தற்போது வெளியாகியுள்ளது
- ஏக்கத்திலேயே, கனவுகளிலேயே காலங்கள் கடந்து போய்விடக் கூடாது.
- போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த காவல் துறைக்கு எனது மனமார்ந்த நன்றி
கரூர் சம்பவத்திற்கு பிறகு, பொதுவெளியில் இன்று ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்தி முடித்துள்ளார் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய். இந்த கூட்டத்தில் ஈரோடு மாவட்ட செயலாளர்களை எல்லாம் அறிமுகப்படுத்தி மக்களுக்கு முகத்தை பரிட்சயப்படுத்தினார். மேலும் வழக்கம்போல திமுகவை சாடி, பெயர் குறிப்பிடாமல் அதிமுகவையும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் பிரச்சாரம் சுமூகமாக முடிந்தநிலையில் தனது கட்சி பொறுப்பாளர் செங்கோட்டையனுக்கும், காவல்துறைக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
"என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.
எப்போதும், என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் உடன் வருகிறீர்கள். நீங்கள் காட்டும் எல்லையில்லா அன்பினாலும், ஆதரவினாலும் பெரும் உத்வேகம் அடைந்து வருகிறேன். இந்த உத்வேகமே எனக்கு எப்போதும் மிகப் பெரிய உந்துசக்தியாக இருக்கிறது. எத்தனை அரசியல் கட்சிகள், எத்தனை ஆண்டுக்காலம் நம்மை ஆண்டாலும், வறுமையின் பிடியில் சிக்கியுள்ள என் அன்புக்கு உரியவர்களாகிய உங்களுக்கு ஒரு விடிவு காலம் கண்டிப்பாக வரவேண்டும். ஏக்கத்திலேயே, கனவுகளிலேயே காலங்கள் கடந்து போய்விடக் கூடாது. எனவே தான், வளர்த்து ஆளாக்கிய உங்களோடு இணைந்து உங்களுக்காக உழைக்கவே நாம் நம் அரசியல் பயணத்தைத் தொடங்கினோம்.
அந்தப் பயணத்தில், உங்களைச் சந்திப்பதற்கு நாம் புறப்பட்டதில் இருந்தே எவ்வளவோ தடைகள் தொடர்ந்து நமக்கு வந்தவண்ணம் இருந்தன. அவற்றில் உங்களுக்குத் தெரிந்தவை பல. உங்களுக்குத் தெரியாதவை பல. ஆனால், அவற்றையெல்லாம் உங்களின் பேராதரவு மற்றும் தூய அன்பின் துணையோடு முறியடித்து வெற்றி அடைந்து வருகிறோம். உங்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறோம்.
அந்த வகையில் இன்று மஞ்சள் மாநகரான ஈரோட்டில் நடைபெற்ற நமது சந்திப்பானது, வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தச் சந்திப்பில், அளப்பரிய அன்பும் ஆதரவும் அளித்த, என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
இந்த நெகிழ்ச்சிமிகு சந்திப்பை, மிகப் பிரம்மாண்டமாகவும் மிகுந்த பாதுகாப்புடனும் மெச்சத் தகுந்த வகையிலும் ஏற்பாடு செய்திருந்த நம் கழகத்தின் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்த நம் கழகப் பொதுச் செயலாளர் ஆனந்த்-க்கும், மாநில நிர்வாகிகளுக்கும், ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் M.பாலாஜி http://B.Com, ஈரோடு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் M.வெங்கடேஷ் B.E., MBA, ஈரோடு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் A.பிரதீப்குமார் DCE ஆகியோருக்கும், கழகத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும், தன்னார்வலர்களுக்கும் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த காவல் துறைக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மீண்டும் சந்திப்போம்!
வெற்றி நிச்சயம்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- களத்தில் இல்லாதவர்களை எதிர்ப்பதற்கான எந்த ஐடியாவும் இல்லை என்று விஜய் தெரிவித்தார்.
- அண்மைய காலமாக விஜயை சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் ஏறிநின்று கையசைத்த விஜயை கண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
இக்கூட்டத்தில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், "ஈரோட்டில் பிறந்த தந்தை பெரியார் நமது கொள்கை தலைவர். ஈரோடு கடப்பாரை பெரியார். தமிழ்நாட்டையே திருப்பிப் போட்ட நெம்புகோல். 100 ஆண்டுகளுக்கு முன்பே வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் கேட்டவர் பெரியார்" என்று புகழ்ந்து பேசினார்.
மேலும் பேசிய விஜய், "எதிரிகள் யார் என்று சொல்லிவிட்டுதான் வந்திருக்கிறோம். அதனால் அவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். அதுவும் 2026 தேர்தலில், களத்தில் இருப்பவர்களைதான் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களையும், களத்திற்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லாதவர்களையும் எதிர்ப்பதற்கான எந்த ஐடியாவும் இல்லை" என்று தெரிவித்தார்.
காலத்தில் இல்லாதவர்களை எதிர்க்க மாட்டோம் மற்றும் ஈரோடு கடப்பாரை பெரியார் என்று விஜய் பேசியது சீமானை விமர்சிக்கும் வையில் உள்ளது என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ்-சின் 'விஜில்' அமைப்பு சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பாரதியார் குறித்தும், பெரியார் குறித்தும் பேசியிருந்தார். "பார்ப்பனர் என்ற கடப்பாரையை கொண்டு திராவிடத்தை இடித்து தள்ளுவேன்" என்று அவர் பேசியிருந்தார்.
பார்ப்பனர் என்ற கடப்பாரையை கொண்டு திராவிடத்தை இடித்து தள்ளுவேன் என்று சீமான் பேசியதற்கு எதிர்வினையாக தான் ஈரோடு கடப்பாரை பெரியார் என்று விஜய் பேசியுள்ளதாக இணையத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
- ஈரோடு கூட்டத்தில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய் திமுகவை கடுமையாக தாக்கி பேசினார்.
- திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி என விஜய் ஆக்ரோஷமாக முழங்கினார்.
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் ஏறிநின்று கையசைத்த விஜயை கண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
இக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் திமுகவை கடுமையாக தாக்கி பேசினார். திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி என ஈரோடு பிரச்சார கூட்டத்தில் விஜய் ஆக்ரோஷமாக முழங்கினார்.
இந்நிலையில், ஈரோடு கூட்டத்தில் பெருந்திரளான மக்களிடம் எடுத்த செல்பி வீடியோவை விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
- உங்களுக்கு நீங்க கொள்ளையடிச்சு வெச்சுருக்கிற காசுதான் துணை.
- இந்த விஜய் சலுகைகளுக்கு எதிரானவன் இல்லை.
ஈரோடு:
ஈரோடு விஜயமங்கலத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் தி.மு.க. மீது தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் சரமாரியாக குற்றம்சாட்டினார். அப்போது விஜய் பேசியதாவது:-
உங்களுக்கு நீங்க கொள்ளையடிச்சு வெச்சுருக்கிற காசுதான் துணை. எனக்கு, என்மேல எல்லையில்லா பாசம் வெச்சுருக்கிற இந்த Mass- தான் துணை.
சலுகைகளை இலவசம் என்பதில் உடன்பாடு இல்லை. ஓசியில் போவதாகக் கூறி மக்களை அவமானப்படுத்துகின்றனர். கேட்பதற்கு ஆள் இல்லை என மக்களுக்கான சலுகைகளை கேவலப்படுத்துகிறீர்களா? இந்த விஜய் சலுகைகளுக்கு எதிரானவன் இல்லை என்றார்.
இதனிடையே, பிரசார பொதுக்கூட்டத்தில் விஜய் பேசிக்கொண்டிருக்கும் போது ஸ்பீக்கர் கம்பம் மீது ஏறிய தொண்டரை தம்பி கீழ இறங்குப்பா... ப்ளீஸ்... நீ இறங்குனா தான் முத்தம் கொடுப்பேன் என்று அறிவுரை கூறினார்.
- மக்கள் பணத்தில் மக்களுக்கு செய்வதை இலவசம் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.
- மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான். அவர்களுக்காக கேள்வி கேட்பான்.
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் ஏறிநின்று கையசைத்த விஜயை கண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். இக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசியதாவது:-
* ஈரோட்டில் மட்டுமல்ல எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்கும் பல பிரச்சனைகள் உள்ளன.
* ஒவ்வொரு மாவட்டங்களுக்குமான பிரச்சனையை எடுத்து பேசி வருகிறேன். இது அரசியல் கிடையாதா?
* மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுவது அரசியல் இல்லையா? இல்லை உங்களைப்போல அநாகரிகமாக பேச வேண்டுமா?
* நான் சலுகைகளுக்கு எதிரானவன் இல்லை, மக்கள் காசை மக்களுக்கு கொடுப்பது இலவசம் இல்லை.
* மக்கள் பணத்தில் மக்களுக்கு செய்வதை இலவசம் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.
* ஓசி ஓசி என்று மக்களை அசிங்கப்படுத்தினால் அதனை தட்டிக்கேட்க நான் வருவேன்.
* மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான். அவர்களுக்காக கேள்வி கேட்பான்.
* சொன்னா மட்டும் போதுமா? என கேட்கிறார்கள். நாங்கள் என்ன வாயிலேயே வடை சுட நாங்கள் என்ன தி.மு.க. வா...
* தி.மு.க. ஆட்சியில் பள்ளி இடைநிற்றல் அதிகரித்துள்ளது. 207 அரசு பள்ளிகள் மூடப்பட்டது யார் ஆட்சியில்?
* தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் சொந்தமாக வீடு உள்ளதா? அப்படி என்றால் வாடகை வீட்டில் யாரும் வசிக்கவில்லையா?
இவ்வாறு அவர் பேசினார்.
- ஈரோட்டில் பிறந்த தந்தை பெரியார் நமது கொள்கை தலைவர். அண்ணாவும் , எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து.
- பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் பெயரை ஏன் பயன்படுத்துகிறீர் என யாரும் கேள்வி கேட்க முடியாது.
ஈரோடு:
ஈரோட்டில் தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் பேசியதாவது:-
எனது 10 வயது முதல் தமிழக மக்களுடன் உள்ள தொடர்பை யாராலும் கெடுக்க முடியாது. உங்களை நம்பிதான் வந்திருக்கிறேன், உடன் நிற்பீர்கள் தானே? என்று விஜய் கேட்க கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
தொடர்ந்து விஜய் பேசியதாவது:-
* அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தினால் பலருக்கும் நன்மை ஏற்பட்டிருக்கும்.
* வள்ளுவர் கோட்டத்திற்கு காண்பித்த அக்கறையை மக்கள் மீதும் சிறிது காட்டியிருந்தால் பலருக்கு நன்மை ஏற்பட்டிருக்கும்.
* ஈரோட்டில் பிறந்த தந்தை பெரியார் நமது கொள்கை தலைவர். அண்ணாவும் , எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து.
* பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் பெயரை ஏன் பயன்படுத்துகிறீர் என யாரும் கேள்வி கேட்க முடியாது.
* பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு தயவுசெய்து கொள்ளை அடிக்காதீர்கள்.
* பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு கொள்ளை அடிக்கும் கும்பல் தான் நமது கொள்கை எதிரி.
* எதிரிகள் யார் என்று சொல்லிக்கொண்டு தான் களத்திற்கு வந்துள்ளோம். அவர்களுக்கும் நமக்கும் தான் போட்டி.
* தேர்தல் களத்தில் இல்லாதவர்களை எல்லாம் எதிர்க்க முடியாது.
* த.வெ.க. ஒரு பொருட்டே இல்லை என்றால் ஏன் கதறுகிறீர்கள்?
* எனக்கு பயமில்லை என சத்தம் போட்டு பாடுவது ஏன்?
* அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக. எதிரிகள் குறித்து மக்கள் புரிந்து கொண்டால் போதும்.
* 24 மணி நேரமும் தி.மு.க.வினரின் நோக்கம் விஜய், த.வெ.க.வை எப்படி முடக்கலாம் என்பதை பற்றித்தான் சிந்திக்கிறார்கள்.
* ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள் என் ஆய்வு செய்தால் ஒன்றும் இல்லை, ஜீரோ தான்.
* நெல் கொள்முதல் செய்வதிலும் ஊழல்.
* ஈரோட்டில் விளையும் மஞ்சளுக்கு தரமான விலை கொடுத்தால் குறைந்தா போய்விடுவீர்கள், அந்த யோசனை கூட கிடையாது.
* மக்களுக்கு என்ன செய்வது என நினைக்காமல் விஜயை எப்படி எதிர்க்கலாம் என்று தான் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
* ஆற்று மணலை கொள்ளையடிப்பதில் மட்டும் சிறப்பாக வேலை நடக்கிறது.
* தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளை தூர்வாராமல் ஆற்று மணலை மட்டும் கொள்ளை அடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
* மணல், மலை காணாமல் போனது போல் செம்மண்ணும் காணாமல் போக வாய்ப்புள்ளது.
* மற்ற மாவட்டங்களில் மணல், மலை காணாமல் போனது போல் ஈரோட்டில் செம்மண் காணாமல் போக வாய்ப்புள்ளது.
* ஈரோட்டில் மட்டுமல்ல எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்கும் பல பிரச்சனைகள் உள்ளது.
* பிரச்சனைக்கு தீர்வு காணாமல் மாடல் அரசு எனக்கூறிக்கொள்ள உங்களுக்கு கூச்சமாக இல்லையா?
* நான் எத்தனை நிமிடம் பேசினால் உங்களுக்கு என்ன சார்? நான் பேசும் விஷயங்களை பாருங்கள் என்றார்.
- இங்க ஒரு மகத்தான மனிதரைப் பற்றி பேசி ஆகணும்.
- மங்களகரமான மஞ்சள் விளையுற பூமிதான் இந்த ஈரோடு பூமி.
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் ஏறிநின்று கையசைத்த விஜயை கண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து இக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசியதாவது:-
* மஞ்சள்... மஞ்சள்... பொதுவாக நல்ல காரியம் செய்வதற்கு முன்னாடி மஞ்சள் எடுத்து வைத்து தான் ஆரம்பிப்பார்கள்.
* நம் வீட்டில் கூட அம்மாக்கள், சகோதரிகள் நமக்காக நாம் நல்லா இருக்கணும் என்பதற்காக மஞ்சள் நிற புடவையை கட்டி வேண்டிப்பாங்க.
* நம் கொடியில் கூட அந்த எனர்ஜெட்டிக்கான வைப் மஞ்சள் இருக்கும். அந்த மாதிரி மங்களகரமான மஞ்சள் விளையுற பூமிதான் இந்த ஈரோடு பூமி.
* இங்க வந்து மஞ்சள் பற்றி பேசாம வேறு எங்க போய் பேசுறது.
* அதுமட்டுமல்ல.. இங்க ஒரு மகத்தான மனிதரைப் பற்றி பேசி ஆகணும். இந்த ஈரோடு மண். விவசாயத்துக்கும் பெயர் போன மண்.
* இங்க நடக்கிற அந்த விவசாயத்துக்கு மிக முக்கிய கவசமாக இருப்பது காலிங்கராயன் அணை. காலிங்கராயன் கால்வாய்.
* காலிங்கராயன் அணை கட்டும் போதும் கால்வாய் வெட்டும்போதும், ரொம்ப சோர்வடைந்தாராம். அப்போது அவரது தாய் பார்த்து சொன்னாராம். மகனே கலிங்கா.. தயிர் விற்ற காசு தாழ்வாரம் வரைக்கும் இருக்கு.. மோர் விற்ற காசு முகடம் வரைக்கும் இருக்கு. அதை எடுத்துப்போட்டு போய் கால்வாய் வெட்டுரான் என்று தைரியம் கொடுத்தார்கள்.
* பெற்ற தாய் கொடுக்குற அந்த தைரியத்தை தாண்டி வேற எதுவும் கிடையாது. ஒரு மனிதனால் எதையும் சாதித்து காட்டமுடியும். அப்படி ஒரு தையரித்தை தான் நீங்கள்... என்னுடைய அம்மா, அப்பா, சகோதரிகள், நண்பிகள், தோழிகள் என எல்லாரும் எனக்கு கொடுத்து இருக்கீங்க.
* இதை எப்படி கெடுக்கலாம்.. என்னவெல்லாம் அவதூறு விஜய் மீது சொல்லி மக்களை நம்ப வைக்கலாம். இப்படி சூழ்ச்சிகளை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்துற சில சூழ்ச்சிக்கார கூட்டம் இதைச் செஞ்சிட்டுத்தான் இருக்கு. ஆனா அவங்களுக்கு தெரியாது.. இது இன்னிக்கு, நேத்து வந்த உறவு இல்ல.. கிட்டத்தட்ட 33 வருடத்திற்கு மேல் இருக்குற உறவு. இந்த விஜயை.. இந்த விஜிய மக்கள் ஒருநாளும் கைவிடமாட்டார்கள் என்று பேசினார்.
- தலைவரை பொறுத்தவரையில் மனிதநேயம் மிக்கவர்.
- உங்களுக்காக வாழ்ந்து கொண்டு இருப்பவர் என்பதை மறந்து விடக்கூடாது.
ஈரோடு:
ஈரோட்டில் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற த.வெ.க. தலைவர் விஜய், அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக கூட்டம் நடைபெறும் விஜயமங்கலத்திற்கு வந்தடைந்தார்.
இக்கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வரலாற்றை படைப்பதற்கு இங்கு பெருந்திரளாக வந்திருக்கிறீர்கள். அதோடு மட்டுமல்ல சில பேர் நினைக்கிறார்கள்.
தலைவரை பொறுத்தவரையில் மனிதநேயம் மிக்கவர். நல்லவர். வல்லவர்.
உங்களுக்காக வாழ்ந்து கொண்டு இருப்பவர் என்பதை மறந்து விடக்கூடாது. ஏன் என்று சொன்னால் ஒரு ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வருவாய், அதை தேவையில்லை என்று விட்டுவிட்டு மக்களுக்கு பணியாற்ற ஒரு தலைவர் வந்திருக்கிறார் என்று சொன்னால் உலக வரலாற்றில் புரட்சி தலைவரை பார்த்தேன். இன்றைக்கு புரட்சி தளபதியை காண்கிறேன். ஆகவே தான் மக்கள் இங்கு திரண்டு இருக்கிறார்கள்.
என்னை பொறுத்தவரையிலும் இது தீர்ப்பு அளிக்கிற கூட்டம். இது தீர்ப்பு அளிக்கிற கூட்டம் மட்டும் இல்ல. நீங்கள் திரண்டு வந்தால் நாடே தாங்காது என்கிற முறையில் தான் இங்கே ஆர்ப்பரித்து கொண்டு இருக்கிறீர்கள்.
உங்களை பொறுத்தவரையிலும் எதிர்காலம் பிரகாசம் உள்ள எதிர்காலமாக மாறப்போகிறது. நாளை தமிழகத்தை ஆள போவது தளபதி தான் என்று பேசினார்.
- விஜய் வாழ்க, விஜய் வாழ்க என கோஷமிட்டனர்.
- விஜயின் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கோவை:
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடக்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக கோவைக்கு வந்தார்.
த.வெ.க தலைவர் விஜய் கோவைக்கு வரும் தகவலை அறிந்ததும் இன்று காலை முதலே த.வெ.க நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கோவை விமான நிலையத்தில் திரண்டனர். அவர்கள் கைகளில் த.வெ.க கொடி வைத்திருந்தனர். சிலர் விஜயின் உருவம் பொறித்த டிசர்ட் உள்ளிட்டவற்றையும் அணிந்து வந்திருந்தனர்.
கோவை விமான நிலையத்தில் இருந்து விஜய் வெளியில் வந்ததும் அவருக்குதொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விஜய் வாழ்க, விஜய் வாழ்க என கோஷமிட்டனர். அவர்களை பார்த்து விஜய் கையசைத்தபடி வந்தார். பின்னர் விஜய் காரில் ஏறி ஈரோட்டுக்கு புறப்பட்டார்.
விமான நிலையத்தில் இருந்து அவினாசி சாலை வரையிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்று அவரை வரவேற்றனர்.
அவருக்கு த.வெ.க கொடிகளை காண்பித்தும், வாழ்த்து கோஷம் எழுப்பியும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட விஜய் பதிலுக்கு கைகூப்பி வணக்கம் தெரிவித்தபடியே காரில் பயணித்தார். ஆர்வமிகுதியில் தொண்டர்கள் பலர் அவரை பின்தொடர்ந்து ஓடியும், மோட்டார்சைக்கிள்களிலும் சென்றனர்.
விஜயின் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீசார் அங்கு கூட்ட நெரிசல் ஏற்படாமல் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
முன்னதாக ஈரோட்டில் கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதால் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் கோவை விமான நிலையத்திற்கு வர வேண்டாம் என மாவட்ட செயலாளர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனாலும் விஜயை வரவேற்பதற்காக காலை முதலே தொண்டர்கள் கோவை விமான நிலையத்தில் குவிந்திருந்ததை காண முடிந்தது.
- காலை 6 மணி முதல் தொண்டர்கள் குவியத் தொடங்கி உள்ளதால் அப்பகுதி முழுவதும் த.வெ.க. தொண்டர்களால் நிரம்பி உள்ளது.
- பரந்தூர், மாமல்லபுரத்திலும் வெங்கட்ராமன் தடுத்து நிறுத்தப்பட்டார்.
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
60 ஏக்கரில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தம், 20 ஏக்கரில் 2 சக்கர வாகனங்கள் நிறுத்தம் என வாகன நிறுத்தத்துக்காக மட்டும் 80 ஏக்கர் பரப்பளவில் இடம் தயார் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி முதல் 1 மணிவரை கூட்டம் நடைபெறுகிறது.
மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு நள்ளிரவு 12 மணி முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து த.வெ.க. தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து காலை 6 மணி முதல் மேலும் தொண்டர்கள் குவியத் தொடங்கி உள்ளதால் அப்பகுதி முழுவதும் த.வெ.க. தொண்டர்களால் நிரம்பி உள்ளது.
இந்நிலையில் ஈரோடு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு சென்ற த.வெ.க. பொருளாளரை போலீசார் தடுத்தி நிறுத்தினர். விவிஐபி லிஸ்டில் வெங்கட்ராமன் பெயர் இல்லாததால் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
ஏற்கனவே பரந்தூர், மாமல்லபுரத்திலும் வெங்கட்ராமன் தடுத்து நிறுத்தப்பட்டார். காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதையடுத்து அவர்களுடன் வெங்கட்ராமன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- இன்று காலை 11 மணி முதல் 1 மணிவரை கூட்டம் நடைபெறுகிறது.
- பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பாஸ் மற்றும் கியூஆர்கோடு அட்டைகள் தேவை இல்லை என அறிவிப்பு.
ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் இன்று த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
60 ஏக்கரில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தம், 20 ஏக்கரில் 2 சக்கர வாகனங்கள் நிறுத்தம் என வாகன நிறுத்தத்துக்காக மட்டும் 80 ஏக்கர் பரப்பளவில் இடம் தயார் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி முதல் 1 மணிவரை கூட்டம் நடைபெறுகிறது.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பாஸ் மற்றும் கியூஆர்கோடு அட்டைகள் தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்த்ததை விட தொண்டர்கள், பொதுமக்கள் அதிக அளவில் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு நள்ளிரவு 12 மணி முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து த.வெ.க. தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து காலை 6 மணி முதல் மேலும் தொண்டர்கள் குவியத் தொடங்கி உள்ளதால் அப்பகுதி முழுவதும் த.வெ.க. தொண்டர்களால் நிரம்பி உள்ளது. இன்னும் பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு நேரம் இருப்பதால் மேலும் த.வெ.க. தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.






