search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nainar nagendran"

    • தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்திட குழு அமைத்துள்ளது பாஜக
    • இந்த மாநில அளவிலான குழுவில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்திடவும். ஒருங்கிணைத்திடவும் மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது என பாஜக அறிவித்துள்ளது.

    இந்த மாநில அளவிலான குழுவில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இக்குழுவில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக தேசிய இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேத்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.இராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    ஏற்கனவே பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சபாநாயகர் மரவை மீறியதால், கவர்னர் புறப்பட்டு சென்றார்.
    • தேசிய கீதத்தை முதலில் பாடுவதில் தவறில்லை.

    சென்னை:

    சட்டசபை நிகழ்விற்கு பின்னர் வெளியே வந்த பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்தின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கவர்னர் முறைப்படி சட்டசபைக்கு அழைக்கப்பட்டார்.

    * கோட்சே, சாவர்க்கர் வழி வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் இல்லை தமிழ்நாட்டு சட்டமன்றமும் சரி என்று சபாநாயகர் கூறினார்.

    * சபாநாயகர் மரவை மீறியதால், கவர்னர் புறப்பட்டு சென்றார்.

    * பாஜக வெளிநடப்பு செய்திருக்கலாம், ஆனால் அவை மாண்புக்கான அமர்ந்திருந்தோம்.

    * கவர்னர் கூறிய திருத்தங்களை சபாநாயகர் ஏற்கவில்லை.

    * அவை மரபை மீறி, நிதி கோரிக்கை மற்றும் சாவர்க்கர், கோட்சே பற்றி சபாநாயகர் பேசி உள்ளார்.

    * கோட்சே என்று பேசி மரபில் இல்லாத வழியை சபாநாயகர் பின்பற்றி உள்ளார்

    * தேசிய கீதத்தை முதலில் பாடுவதில் தவறில்லை.

    * சபாநாயகர் தேவையில்லாத விஷயங்களை பேசியதால், கவர்னர் அவையில் இருந்து வெறியேறினார் என்று அவர் கூறினார்.

    • மோசடியாக ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க முயன்ற பாஜக எம்எல்ஏ மகன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
    • இந்திய தண்டனை சட்டம் 463, 470 ஆகியவற்றின்படி பத்திரப்பதிவு மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதனை ரத்து செய்யலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பா.ஜனதாவை சேர்ந்த நயினார் நாகேந்திரன் இருந்து வருகிறார். இவரது மூத்த மகன் நயினார் பாலாஜி.

    இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான சென்னை விருகம்பாக்கம் அருகே ஆற்காட்டில் உள்ள சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 1.3 ஏக்கர் நிலத்தை ரூ.46 கோடிக்கு பேரம் பேசி அதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23-ந்தேதி மோசடியாக ஒப்பந்த பத்திரம் போட்டதாகவும், அதற்கு முன்தொகையாக ரூ.2.50 கோடி கொடுத்ததாகவும் அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்திருந்தது.

    அவர்களது புகாரில், ஆற்காட்டில் தற்போது சர்ச்சைக்குரிய இடம் குலாப்தாஸ் நாராயணன் என்பவரது பேரன் ஜெயேந்திர ஓராவுக்கு சொந்தமானது என்று கூறி அவரிடம் இருந்து இளையராஜா என்பவர் அந்த இடத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2-ந்தேதி பத்திரம் கிரயம் முடித்துள்ளார். பின்னர் அந்த இடத்தை அவரிடம் இருந்து வாங்க முடிவு செய்து நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் அவரது மகன் நயினார் பாலாஜி ஆகியோர் இணைந்து நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் போலியாக ஒப்பந்த பதிவு செய்துள்ளனர்.

    இதில் குலாப்தாஸ் நாராயணன் என்பவர் கடந்த 1946 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் வைத்து இறந்துவிட்டார் என்று கூறி அதற்கான இறப்பு சான்றிதழை இளையராஜாவும், நயினார் பாலாஜியும் காட்டுகின்றனர். ஆனால் அவர் சென்னையில் கடந்த 1944-ம் ஆண்டு இறந்ததாக சென்னை மாநகராட்சி இணையதளத்தில் இறப்பு சான்றிதழ் ஆதாரம் இருக்கிறது. எனவே இந்த பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும். மோசடியாக ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க முயன்ற நயினார் பாலாஜி மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை கவனத்தில் எடுத்த பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, இதுகுறித்து 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி மோசடி நிரூபணமாகும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் முழுமையான விசாரணைக்கு பின்னர், இந்திய தண்டனை சட்டம் 463, 470 ஆகியவற்றின்படி இந்த பத்திரப்பதிவு மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதனை ரத்து செய்யலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டது.

    இதையடுத்து நெல்லை மண்டல துணை பதிவுத்துறை தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வின் மகன் நயினார் பாலாஜி பதிவு செய்த பத்திரத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    • காவல்துறை அதிகாரிகளுக்கு அதிக மன உளைச்சல் உள்ளது.
    • காவல்துறைக்கு சுதந்திரமாக செயல்பட முழு அதிகாரத்தை வழங்க வேண்டும்.

    நெல்லை:

    பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. இன்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொது சிவில் சட்டம் எல்லோருக்கும் வேண்டும். உங்களுக்கு ஒரு சட்டம், எனக்கு ஒரு சட்டம் என்பது ஏற்புடையதாக இருக்காது. பொது சிவில் சட்டம் நாட்டில் கண்டிப்பாக தேவை.

    பா.ஜ.க. தலைவர்கள் எங்களுடன் கூட்டணி குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஓ.பி.எஸ். தெரிவிப்பதாக கூறுகின்றனர்.

    தேர்தல் காலங்களில் எங்களோடு இருந்தவர்களை நாங்கள் நினைத்துப் பார்ப்போம் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சொல்லியுள்ளார். ஆனால் ஓ.பி.எஸ். சொல்வது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை கலைக்க போவதாக யாரும் இதுவரை சொல்லவில்லை. ஆட்சி கலைப்பது தொடர்பான வார்த்தையை முதலமைச்சர் பயன்படுத்தி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

    காவல்துறை அதிகாரிகளுக்கு அதிக மன உளைச்சல் உள்ளது. அவர்களின் மன உளைச்சலை குறைப்பதற்கு முதலமைச்சர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறைக்கு சுதந்திரமாக செயல்பட முழு அதிகாரத்தை வழங்க வேண்டும்.

    ஆட்சிக்கு வந்தவுடன் முதல் நாளில் இருந்து மகளிர் உதவித்தொகை ரூ. 1000 வழங்கப்படும் என தெரிவித்தார்கள். இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்ற பிறகு அண்ணா பிறந்த நாளில் கொடுக்கப் போகிறோம் என சொல்லி உள்ளனர்.

    பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு மகளிர் உரிமைத்தொகை கொடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மகளிர் உரிமைத்தொகையை அனைத்து மகளிர்க்கும் கொடுக்க வேண்டும்.

    பொது மக்கள் மகளிர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த திட்டம் பெயரளவில் தான் செயல்படுத்தப்படும். பாராளுமன்ற தேர்தல் நிறைவு பெற்றபின் இந்த திட்டம் நிறுத்தப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் 48.90 கோடி விவசாயிகளுக்கு ரூ.6000 உதவித் தொகை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
    • நடிகர்கள் மட்டுமல்ல, எந்த துறையில் இருப்பவரும் அரசியலுக்கு வரலாம்.

    நெல்லை:

    பாரதிய ஜனதா சட்டமன்ற குழு தலைவரும், நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதலமைச்சர் மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை, செய்யவில்லை என சொல்லி வருகிறார். இலவச வீடு கட்டும் திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டம், மகளிருக்கான வேலைவாய்ப்பு திட்டம், 59 லட்சம் கழிவறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

    ஆயூஸ்மான் பாரத் திட்டத்தில் ரூ.28 லட்சத்து 75 ஆயிரம் பயனாளிகள் தமிழகத்தில் பயன்பெற்றுள்ளனர். சுமார் 1.43 கோடி வங்கி கணக்குகள் மத்திய அரசால் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தில் தமிழகத்தில் ரூ1.32 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. மலிவு விலை மருந்தகம் தமிழகத்தில் 820 கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 48.90 கோடி விவசாயிகளுக்கு ரூ.6000 உதவித் தொகை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு அதிகமான திட்டத்தை தந்துள்ளது. விலைவாசி உயர்வை மாநில அரசுகள் தான் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

    பெட்ரோல், டீசல் விநியோகத்திற்கான புதிய திட்டங்கள் உருவாக்குவதற்கான செலவுகளும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கும் காரணம். அமலாக்கதுறை தனி நிர்வாகம்.

    அடுத்த முதலமைச்சர் என நடிகர் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அவர் ரசிகர்கள் ஆசைப்படுவது தவறில்லை. பா.ஜனதா எந்த மதத்தையும் விமர்சனம் செய்வதில்லை. நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்களுடைய விருப்பம்.

    நடிகர்கள் மட்டுமல்ல, எந்த துறையில் இருப்பவரும் அரசியலுக்கு வரலாம். அவர்கள் அரசியல் இருக்கையில் அமர்ந்த பின்னர் அவர்களது திறமை வெளிப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நடிகர் விஜயை பா.ஜ.க.வுடன் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுப்பீர்களா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதில் அளித்த நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தேர்தல் நேரத்தில் பா.ஜ.க.வுடன் இணைந்து பணியாற்ற அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றார்.

    • நெல்லை மாவட்டம் போதிய மழை இல்லாததால் வறட்சியாக உள்ளது என நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.
    • அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட ஆனந்தபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சத்தில் சமூதாய நலக்கூடம் கட்ட இன்று அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

    இதில் நயினார் நாகேந்தி ரன் எம்.எல்.ஏ., துணைமேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். பின்னர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-

    வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

    வேளாண் பட்ஜெட்டில் பரவலாக அதிக திட்டங்கள் சொல்லப்பட்டுள்ளது. வேளாண் பட்ஜெட்டில் குறிப்பிட்ட சில நபர்களுக்கும், சில மாவட்டங்களுக்கும் மட்டுமே திட்டங்கள் ஒதுக்கப் பட்டுள்ளது. போதிய மழை இல்லாததால் நெல்லை மாவட்டம் வறட்சியாக உள்ளது. அதனை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

    நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த நெல் ஆராய்ச்சி மையத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தடுப்பணைகள் இதுவரை செயல்படுத்தபடாமல் உள்ளது. இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப இருக்கி றோம்.

    அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி

    தமிழகத்தில் மிகப்பெரிய கட்சிகளில் அ.தி.மு.க.வும் ஒன்று. தற்போது வரை அ.தி.மு.க.வுடன் உள்ள கூட்டணி யில் தான் பா.ஜ.க. உள்ளது.இந்திய அளவில் பா.ஜ.க. மிகப்பெரிய கட்சி.

    உலக அளவில் அதிக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை கொண்ட கட்சி. அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை. கீழ் மட்டத்தில் ஒன்றிண்டு பேர் அங்கொன்றும், இங்கொன்று மாக சில பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றனர்.

    அ.தி.மு.க.- பா.ஜ.க. கொள்கை அடிப்படையில் உள்ள கூட்டணிகட்சிகள். தேர்தல் அறிவிக்கும்போது பிரச்சனைகள் இருக்கலாம். வேட்பாளர்கள் அறிவிக் கும்போது ஒன்றுபட்டு வேலைபார்ப்பதில் எந்த கருத்து வேறுபாடும் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • ஸ்ரீபுரம் முதல் ஊருடையான்குடியிருப்பு வரை சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
    • தாமரை சின்னம் பொறித்த குடையை பிடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

    நெல்லை:

    நெல்லையில் ஸ்ரீபுரத்தில் இருந்து தச்சநல்லூர் செல்லும் ஊருடையான் குடியிருப்பு சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை மற்றும் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வந்தது.

    எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தார்

    இதன் காரணமாக அப்பகுதி வியாபாரிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். மந்த நிலையில் நடைபெற்று வந்த அந்த பணியை விரைந்து முடிக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது பணிகள் முடிவடைந்து. இன்று தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    அதன்படி ஸ்ரீபுரம் முதல் ஊருடையான்குடியிருப்பு வரை 831 மீட்டர் சாலை ரூ.1 கோடியில் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இதனை எம்.எல்.ஏ. க்கள் அப்துல்வகாப், நயினார்நாகேந்திரன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். இதில் மாநகராட்சி துணை மேயர் ராஜூ, கவுன்சிலர் ரவீந்தர், தச்சை மண்டல உதவி கமிஷனர் வாசுதேவன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சலசலப்பு

    ஸ்ரீபுரத்தில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைப்பதற்காக அப்துல்வகாப் எம்.எல்.ஏ. மற்றும் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் வந்திருந்த நிலையில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக நயினார் நாகேந்திரனுக்கு அக்கட்சியின் நிர்வாகிகள் பா.ஜனதா கட்சி கொடி கலரில் இருந்த குடையை விரித்து பிடித்தனர்.

    அப்போது அங்கு வந்த அப்துல்வகாப் எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்கள் தாமரை சின்னம் பொறித்த குடை பிடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

    பேட்டி

    பின்னர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அனைவரையும் ஒன்றிணைத்து போட்டியிடுகிறோம். பா.ஜனதா ஆதரவு கொடுத்துள்ள அ.தி.மு.க ஈரோடு இடைத்தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறும்.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு கடலில் தான் பேனா சின்னம் வைக்க வேண்டும் என்ற தேவை இல்லை. கடலில் பேனா சின்னம் அமைத்தால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும். அதிகமான செலவு ஏற்படும். அதற்கு மாற்றாக அதே செலவில் வேறொரு இடத்தில் பேனா சின்னத்தை நிறுவலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளது.
    • குறிப்பாக கஞ்சா மற்றும் போதை பழக்கங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகமாகவே உள்ளது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. சட்டசபை குழு தலைவரும், எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-

    தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அபரீதமான வளர்ச்சி அடைந்துள்ளது. அதை நாங்கள் சொல்வதை விட தி.மு.க அமைச்சரே கூறியிருக்கிறார்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி ஜி.கே.வாசனை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தமட்டில் மாநில தலைவர் அண்ணாமலை எடுக்கும் முடிவிலேயே போட்டியானது இருக்கும்.

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் நாங்கள் ஏற்கனவே ஒரு முறை வெற்றி பெற்றுள்ளோம்.

    வருகிற தேர்தலிலும் கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டியிடும் போது நிச்சயம் தாமரை சின்னத்தில் இங்கு தேர்தலில் போட்டியிடுவோம்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளது. குறிப்பாக கஞ்சா மற்றும் போதை பழக்கங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகமாகவே உள்ளது.

    இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    டாஸ்மாக் கடைகள் முன்பு பள்ளி, மாணவர்கள் பெண்கள் அதிகமாக நிற்பதை காண முடிகிறது. இது தொடர்பாக வீடியோ காட்சிகளும் வந்துள்ளது.

    இதுகுறித்து நான் பலமுறை சட்டசபையில் கருத்து தெரிவித்துள்ளேன். ஆனால் இதுவரை அதற்கு தீர்வு கண்டதாக தெரியவில்லை.

    எனவே தமிழகத்தில் டாஸ்மாக் கடையின் நேரங்களை குறைப்பதுடன் மதுக்கடைகளையும் குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அமைச்சர் என்பதால் நீட் தேர்வு விவகாரத்தில் விளையாட்டாக பேசியிருப்பார்.
    • நடுசென்டர் என்று கூறினால் அதில் நடு என்பதும் ஒன்றுதான், சென்டர் என்பதும் ஒன்றுதான். எனவே தமிழ்நாடு, தமிழகம் இரண்டும் ஒன்று தான்.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூரில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா போட்டியிட்டது. தற்போது இடைத்தேர்தலில் யார் போட்டியிட வேண்டும் என்பதை கட்சி மேலிடம் பேசி முடிவு செய்யும். அங்கு ஏற்கனவே 8,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். எனவே இந்த முறை நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

    அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தேர்தல் வரும்போது இணைந்து செயல்படுவோம். காங்கிரஸ் கட்சியில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

    ஆளுநர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறார். நீட் தேர்வு விவகாரத்தில் ஏற்கனவே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. எனவே இதை அரசியல் ஆக்க வேண்டும் என்று திரும்பத் திரும்ப தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தால் அதற்கு ஆளுநர் பொறுப்பாக மாட்டார்.

    உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அமைச்சர் என்பதால் நீட் தேர்வு விவகாரத்தில் விளையாட்டாக பேசியிருப்பார்.

    நடுசென்டர் என்று கூறினால் அதில் நடு என்பதும் ஒன்றுதான், சென்டர் என்பதும் ஒன்றுதான். எனவே தமிழ்நாடு, தமிழகம் இரண்டும் ஒன்று தான்.

    பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை பா.ஜ.க. தொடங்கி விட்டது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை யார் எப்படி பேசினாலும் அவர்கள் ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால் தான் அ.தி.மு.க.வுக்கு பலம். கருத்து வேறுபாட்டோடு தேர்தலில் போட்டியிட்டால் பலவீனம் தான் ஏற்படும்.

    அ.தி.மு.க.வை பா.ஜ.க. பலவீனப்படுத்தவில்லை. அப்படி இருந்தால் ஏன் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்க வேண்டும்.

    பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் வரும் போது கட்சி தலைமை அறிவிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம், எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக்கியது பா.ஜ.க. தானா? என்று கேள்வி எழுப்பிய போது, பா.ஜ.க. ஆதரவோடுதான் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சரானார் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

    • கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் சோலார் பிளான்ட் அமைப்பதற்கு விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது.
    • பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் கருத்து வேறுபாடு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் நாங்கள் இதுவரை அ.தி.மு.க. கூட்டணியில்தான் இருந்து வருகிறோம்.

    நெல்லை:

    நெல்லை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் இன்று நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவிடம் மனு ஒன்று அளித்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை மாநகர பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. அதனை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன்.

    கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் சோலார் பிளான்ட் அமைப்பதற்கு விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. இதற்கு அந்த பகுதியில் உள்ள ஏராளமான கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக ஏற்கனவே 2 முறை சட்டமன்றத்தில் நான் பேசி உள்ளேன்.

    விளை நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்த்து புறம்போக்கு நிலங்களை பயன்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடமும் கோரிக்கை விடுத்தேன். ஆனால் கடந்த 2017-18-ம் ஆண்டிலேயே அதற்கான பணிகள் வருவாய்த் துறையினரால் தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகிறது. எனவே இது தொடர்பாக அமைச்சரிடம் தொடர்ந்து பேசி வருகிறேன்.

    பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் கருத்து வேறுபாடு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் நாங்கள் இதுவரை அ.தி.மு.க. கூட்டணியில்தான் இருந்து வருகிறோம். தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி சேர்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

    இது தொடர்பாக கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். அரசுக்கு சொந்தமான இடங்களில் குவாரி அமைக்கப்பட்டால் அதனை பாரதிய ஜனதா நிச்சயமாக எதிர்க்கும். பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் நடை பயணம் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கூட்டணிகளை நம்பியே உள்ளது.
    • தனியாக தேர்தலை சந்திப்போம் என எந்த கட்சியும் சொல்ல முடியாது.

    நெல்லை:

    கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.சிதம்பரனாரின் நினைவு தினத்தையொட்டி நெல்லை டவுன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் போட்டியிட விரும்புகிறேன். கட்சி தலைமை அனுமதித்தால் போட்டியிடுவேன்.

    அ.தி.மு.க.வில் யார் தலைமை என்பதை விட அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடரும் என்பதை கூறிக்கொள்கிறேன்.

    பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் பார்த்து செல்கின்றனர்.

    10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்பது எதிலும் இல்லை. இட ஒதுக்கீட்டில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என பலதரப்பினரும் உள்ளனர். இந்த இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இந்த இடஒதுக்கீட்டை தமிழகத்தில் உடனடியாக அமலுக்கு கொண்டு வரவேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை செய்து வருகிறோம்.

    அ.தி.மு.க. நான்கு பிரிவுகளாக பிரிந்து இருப்பதாக கூறுகிறீர்கள். இருகைகள் தட்டினால் தான் ஓசை வரும். எனவே அவர்கள் இணைவது நல்லது. அவ்வாறு இணைந்தால் கூட்டணி இன்னும் பலம் பெறும்.

    தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கூட்டணிகளை நம்பியே உள்ளது. தனியாக தேர்தலை சந்திப்போம் என எந்த கட்சியும் சொல்ல முடியாது.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு கட்சி தொடங்கினால் கூட்டணியை வைக்ககூடாது என சட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். கூட்டணியாக இருந்தால் பலமாக இருக்கும். கூட்டணி என்பது தேர்தலுக்கு மட்டுமே. கொள்கை அளவில் யாரும் யாருடனும் கூட்டணி கிடையாது.

    கவர்னரை எந்த ஒரு செயலை செய்யவும் நிர்பந்தித்தால் அது சரியாகாது.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும், முன்னாள் பிரதமர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதையும் கவனிக்க வேண்டும். எனவே இதில் இருதரப்பினரையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் சிகிச்சை குறைபாடு உள்ளது என்பதை மறுக்க முடியாது. அந்த மருத்துவமனையில் அதற்கான வசதிகள் இருந்ததா? என்பதை ஆராய வேண்டும்.

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த சம்பவம் காங்கிரஸ் உட்கட்சி பிரச்சினை. அதுகுறித்து கருத்து கூற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்த்துக் கொண்டால் அக்கட்சி வளரும். அ.தி.மு.க.வில் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை என்று கூறினால் பா.ஜ.க.வில் சேர்ந்தால் நாங்கள் அவரை வரவேற்போம். அது பாரதிய ஜனதா கட்சிக்கு உறுதுணையாக இருக்கும். இதற்கான முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஏன் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்று தி.மு.க. கூறியது. ஆனால் இரண்டு முறை தற்போது பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்து விட்டது, இருப்பினும் தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க தயாராக இல்லை. பெயரளவிற்கு பெட்ரோல் விலையை மட்டும் சிறிது குறைத்து விட்டு அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு வருகின்றனர்.

    மத்திய அரசு என்று கூறுவதை தி.மு.க.வினர் பெருமையாக கருதுகின்றனர். தி.மு.க. தங்களை பெருமைப்படுத்திக் கொள்வதை முன்னெடுத்து செல்கிறதே தவிர, மக்கள் பிரச்சினையை, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற கருத்தை அவர்கள் முன்னெடுக்கவில்லை

    தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்வர் கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது கையில் உள்ள துண்டு சீட்டில் உள்ள விவரங்கள் அனைத்தும் பொய்யானது என்று பிரதம மந்திரியை வைத்துக்கொண்டு ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை குறித்து பேசியது ஒரு சாட்சி. ஜி.எஸ்.டி. இழப்பு நிலுவைத் தொகை தமிழகத்திற்கு ஜூன் மாதம் மட்டும் தான் பாக்கி உள்ளது.

    கச்சத்தீவு குறித்து பேசுவதற்கு பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும் தான் அருகதை உண்டு. ஏனென்றால் 1974 ஆம் ஆண்டு கச்சத்தீவை தாரை வார்த்த போது அதை எதிர்த்து வழக்குப் போட்டது பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி தான். அதை பாராளுமன்றத்தில் எதிர்த்தது அடல் பிகாரி வாஜ்பாய் தான்.

    தற்போது உள்ள சூழ்நிலையை பார்த்தால் கச்சத்தீவு நமக்கு வந்து விடும் என்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தாங்கள் தான் முயற்சி செய்தோம் என்று பொய் பி ரசாரம் செய்வதற்காக தமிழக முதல்வர் தற்போது பிரதம மந்திரி முன்னிலையில் கச்சத்தீவு குறித்து பேசி நாடகம் நடத்தியுள்ளார்.

    கச்சத்தீவு குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஊராட்சி தலைவர் அதாவது முதல்வருக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை. தமிழ் மொழியை வழக்கிலும் என்று கூறிக்கொண்டு பிற மொழியை வெறுக்கின்ற வெறுப்பு அரசியல் தமிழகத்தில் நடைபெறுகிறது. இதனை தி.மு.க. கைவிட வேண்டும்.

    தமிழ் மொழிக்கு ஆட்சியில் இருக்கும் தி.மு.க. ஒன்றும் செய்யவில்லை. மொழிகளுக்கு இடையே உள்ளது தேசிய மாடல். அதை தான் பா.ஜ.க. செய்து வருகிறது. பிறமொழிகளை எதிர்ப்பது திராவிட மாடல். இது தமிழ் மொழி வளர்ச்சிக்கு பயன்படாது.

    பா.ஜ.க.வின் 8 ஆண்டு கால சாதனையை தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பூத்திற்கும் சென்று பொதுமக்களிடையே எடுத்து கூறுவதுதான் பா.ஜ.க.வின் அடுத்த இலக்கு. தேர்தல் அறிக்கையில் தி.மு.க. கூறியவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும். அதுவரை பா.ஜ.க.வின் போராட்டமானது தொடரும்.

    மத்திய அரசின் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்படாமலேயே அரசு அதிகாரிகள் நிதி முறைகேடு செய்துள்ளனர். இதுதான் திராவிட மாடல். ஒன்றரை லட்சம் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் சுட்டுக் கொன்றபோது உண்ணாவிரதம் என்ற பெயரில் நான்கு மணி நேரம் நாடகம் போட்டது கருணாநிதி தான். அது தான் தற்போது தமிழ் சமுதாயத்தையே பாதித்துக் கொண்டு இருக்கிறது.

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் 5-க்கும் மேற்பட்ட லாக்கப் டெத் கொலைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இதுதான் அமைதிப் பூங்கா லட்சணமா? தமிழ்நாடு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் காட்சியாக நடந்து வருகிறது, அதற்கு முடிவு கட்ட வேண்டும். இருபத்தி நான்கு மாதத்திற்குள் இதற்கு ஒரு முடிவு கட்டி பாராளுமன்றத் தேர்தலோடு தமிழகத்திற்கும் தேர்தல் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×