என் மலர்
நீங்கள் தேடியது "TVK Vijay"
- நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார்.
- அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார்.
நடிகரும், தவெக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு 73வது எண்ணாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், விஜய்க்கு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சங்கீதா பரபரப்பு குற்றச்சாட்டை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை கொண்டிருந்தார் விஜய். இது எனக்கு 2021 ஏப்ரலில் தெரியவந்தது.
நான் இதை கண்டுபிடித்த பிறகும் இரக்கமே இல்லாமல் அந்த உறவை தொடர்ந்தார். இதனால் நான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டேன்.
இது வலியையும், மன உளைச்சலையும் கொடுத்தது. இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம்.
விஜயுடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை 'அந்த நடிகை' சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது என்னையும் எனது குழந்தைகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.
அந்த பதிவுகளுக்கு விஜய் மறுப்புத் தெரிவிக்காமல் மறைமுகமாக ஆதரித்தார்.
நடிகையுடன் உறவை முறித்துக் கொள்வதாக முதலில் கூறியும், நடவடிக்கையில் மாற்றமில்லை.
திருமணத்தை மீறிய அந்த உறவை தட்டிக் கேட்டதால், வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார். கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தினார்.
நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள கள்ள உறவை வெளிப்படுத்தும் ஆதாரங்களை வழங்குவேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ்நாடுதான் விஜய், விஜய்தான் தமிழ்நாடு!
- தூயசக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுக-வுக்கும்தான் போர்!
வேலூரில் நடைபெற்ற தவகெ கூட்டத்தில், திமுக-வையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் நேரடியாக தாக்கிப்பேசிய விஜய், உண்மையில் இந்த தேர்தல் எதுக்கான தேர்தல் என்று சொல்லட்டுமா..? எனக் கேள்வி எழுப்பி தொடர்ச்சியாக உரையாற்றினார்.
இந்த தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கும் போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் லஞ்சத்துக்கும் நடக்கும் போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் சரியாக நிர்வாகம் செய்யத் தெரியாத திமுக-வுக்கும் நடக்கும் போர். அதாவது தமிழ்நாட்டு மக்களுக்கும் உங்க ஆட்சிக்கும் நடக்கும் போர். தமிழ்நாட்டு மக்களுக்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர். இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர். இதற்கு நடுவில் டெல்லி, என்டிஏ.. போன்றவை என்ன லாஜிக் என்றே புரியவில்லை சார். தமிழ்நாடுதான் விஜய், விஜய்தான் தமிழ்நாடு. தூயசக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுக-வுக்கும் தான் இந்த போர் என்று தவெக தலைவர் விஜய் ஆக்ரோஷமாக பேசினார்.
விஜய்யின் உரையை கேட்ட தவெக தொண்டர்கள், கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
- தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு காணாமல் போய்விட்டது.
- எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது.
வேலூர் மாவட்டம் அகரம்சேரி தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு காளை குட்டிக்கதையுடன் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு வீட்டில் உயிராய் உணர்வாய் இருக்கும் நான் எல்லாரையும் உங்கள் இடத்திற்கே வந்து சந்திக்க ஆசைப்படுகிறேன்
தவெக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்திற்கும் நான் நேரடியாக வந்து உங்கள் எல்லாரையும் சந்திப்பேன்
தங்களுக் பாதுகாப்பு இல்லை என பெண்களே கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு காணாமல் போய்விட்டது.
சட்டம்-ஒழுங்கு குறித்து நான் பேசுவதால் முதல்வருக்கு சங்கடம். திமுகவை ஸ்விட்ச் ஆப் செய்ய வேண்டும்.
எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
- கரூர் விவகாரம் குறித்து முதல் முறையாக பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ளார்.
- தனிப்பட்ட முறையில் நீங்கள் எப்படி இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை.
வேலூர் மாவட்டம் கொல்லமங்கலத்தில் த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் பங்கேற்றார். அப்போது அவர், கரூர் விவகாரம் குறித்து முதல் முறையாக பொதுவெளியில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய விஜய், "எனக்கு ஒரு புதிய நண்பர் கிடைத்துள்ளார். அந்த நண்பர் முதல்வர் அவர்கள் தான். சமீபத்தில் நிருபர் கேட்ட கேள்விக்கு எனக்கு எதிரிகள் யாரும் கிடையாது, அவர்கள் அனைவரும் எனக்கு நண்பர்கள் தான் என்று முதல்வர் பதிலளித்தார். உண்மையில் நாங்கள் உங்களுக்கு நண்பர் எனில், ஏன் கரூர் விஷயத்தில் என் மீது பழி போட்டீர்கள்? உங்களுக்கு மனசாட்சி இருந்தால் அப்படி பேசி இருப்பீர்களா?
நாங்கள் உங்களுக்கு நண்பர் எனில், நிகழ்வுகளுக்கு ஏன் அனுமதி கொடுக்க மறுக்கின்றீர்கள். எல்லாவற்றையும் நீங்களே செய்துவிட்டு, போகிற போக்கில் பொய்களை அடித்துவிடுகின்றீர்கள். உங்களது உண்மையான நண்பர்கள் யாரென்று சொல்லட்டுமா? லஞ்சம், ஊழல், அரசியல் ஆதாயம் - இதெல்லாம் தான் உங்களது உண்மையான நண்பர்கள்.
தனிப்பட்ட முறையில் நீங்கள் எப்படி இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. நமக்கு அது அவசியமும் இல்லை. ஆனால், உங்களது ஆட்சி தான் தப்பான ஆட்சி. தமிழ்நாட்டிற்கே தேவையில்லாத ஆட்சி," என்றார்.
- இந்த தேர்தல் தூய சக்தியான தவெகவுக்கும், தீய சக்தியான தவெகவுக்குமான போர்.
- இந்த தேர்தல் முடிந்ததும் ஒவ்வொரு கிராமங்களுக்கும் நேரில் வருவேன்.
வேலூர் மாவட்டம் அகரம்சேரி தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு காளை குட்டிக்கதையுடன் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் மக்களை நேசிக்கும் ஒரு நல்ல தலைமை இல்லை.
சட்டமன்ற தேர்தல் டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்குமான தேர்தல் அல்ல. விஜய்க்கும் ஸ்டாலின சாருக்குமான போர்.
இந்த தேர்தல் தூய சக்தியான தவெகவுக்கும், தீய சக்தியான தவெகவுக்குமான போர்.
வரும் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் வழக்கமான தேர்தல் அல்ல. 50 ஆண்டுக்கு ஒருமுறை வருவது போன்ற தேர்தல்.
தவெகவுக்கும் நமக்கும் எதிரான சூழ்ச்சிகள் உங்களுக்கு நன்றாக தெரியும்.
இந்த தேர்தல் முடிந்ததும் ஒவ்வொரு கிராமங்களுக்கும் நேரில் வருவேன்.
இந்த தேர்தல் வழக்கமான தேர்தல் கிடையாது அதிசய தேர்தல். ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்ந்து நம்மை எதிர்க்கிறார்கள்.
காமராஜர், அண்ணா, எம்ஜிஆ் இருந்தபோது நல்ல ஆட்சி. அவர்கள் ஆண்டபோது தான் தமிழ்நாடு சூப்பர் ஸ்டாராக இருந்தது.
எனக்கு எதிரான செயல்கள் அனைத்தும் மக்களுக்கு எதிரானது. நானும் மக்களும் ரத்தமும் சதையும் போல்.
இந்த தமிழ்நாடு விஜயை நம்புகிறார்களா? ஸ்டாலின் சாரை நம்புகிறார்களா? என நிரூபிக்கும் தேர்தல்.
நாம் ஏதாவது பேசினால் களத்தில் இல்லாதவர்கள் wanted ஆக வண்டியில் ஏறுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேலூரில் நடைபெற்று வரும் தவெக கூட்டத்திற்கு ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
- தவெக நிர்வாகிகள் வித்தியாசமான விஜய் புகைப்படங்களை பதாகைகளாக கொண்டு வந்திருந்தனர்.
வேலூரில் நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்பில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று பேசினார்.
வேலூரில் நடைபெற்று வரும் தவெக கூட்டத்திற்கு ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது நிர்வாகிகள் வித்தியாசமான விஜய் புகைப்படங்களை பதாகைகளாக கொண்டு வந்திருந்தனர்.
குறிப்பாக தலையில் குல்லா மற்றும் கையில் வேலுடன் இருக்கும் விஜய் படம் ஒன்றை தொண்டர் ஒருவர் கையில் வைத்திருந்தது இணையத்தில் வைரலானது. அதே போல் விஜய், ஜோசப், முகமது என்று 3மத அடையாளங்களுடன் விஜய் இருக்கும் புகைப்படத்தை தொண்டர் ஒருவர் வைத்திருந்ததும் இணையத்தில் வைரலானது.
- தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார்.
- 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி என தவெக திட்டவட்டம்.
வேலூர் மாவட்டம் கொல்லமங்கலத்தில் நண்பகல் 12 முதல் 3 மணிவரை தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார்.
நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் QR Code உடன் நுழைவுச்சீட்டு பெற்ற 4,900 பேருக்கு மட்டுமே அனுமதி என தவெக திட்டவட்டம்.
தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு கர்ப்பிணி, முதியோர், மாணவ- மாணவியர் உள்ளிட்டோர் கட்டாயமாக வரவேண்டாம் என தவெக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த ஆர். டி. சேகர் உள்ளார்.
சென்னை வியாசர்பாடியில் பெரம்பூர் சட்டசபை தொகுதி த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒருவேளை பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட்டால் வெற்றி பெறமுடியுமா?
தற்போது பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த ஆர். டி. சேகர் உள்ளார். 2021 தேர்தலில் அதிமுகவை வீழ்த்தி 52.93% வாக்குகள் பெற்று ஆர். டி. சேகர் அபார வெற்றி பெற்றார்.
1962க்கு பிறகு பெரம்பூர் தொகுதியில் நடைபெற்ற 14 தேர்தல்களில் 1991, 2001, 2011,2016 ஆகிய தேர்தல்களை தவிர மற்ற 10 தேர்தல்களில் திமுக தான் வெற்றி பெற்றுள்ளது.
ஆகவே திமுகவின் கோட்டையான பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட்டால் வெற்றி பெறுவது சற்று சிரமம் தான் என்பதை கடந்த கால தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.
- ஓ.பி.எஸ் தி.மு.க.வில் இணைந்தால் செல்வாக்கை இழப்பார்.
- 75 ஆண்டுகால தி.மு.க.வை வீழ்த்தியே தீரவேண்டும் என்ற நம்பிக்கையோடு களத்தில் நிற்கின்றார்.
தென்காசி மத்திய மாவட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது
இதில் கலந்து கொள்ள வருகை புரிந்த தமிழக வெற்றிக்கழக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
த.வெ.க தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டத்தை பார்க்கும்போது, பல கூட்டத்தை நடத்தியவன் என்ற முறையில் சொல்கிறேன் 39 ஆண்டு காலத்தில் நான் இதேபோல் மிகப்பெரிய கூட்டத்தை பார்த்தில்லை.
அவருக்கு தமிழகத்தில் கிடைக்கும் வரவேற்பு, வளர்ச்சி தமிழகத்தில் புதிய அத்தியாயம் படைக்கும்.
அவர் 75 ஆண்டுகால தி.மு.க.வை வீழ்த்தியே தீரவேண்டும் என்ற நம்பிக்கையோடு களத்தில் நிற்கின்றார். தி.மு.க. திகைத்து நிற்கிறது.
சட்டம்-ஒழுங்கு கெட்டு தமிழகம் சாம்பல் மேடாக மாறி உள்ளது. இதனை எதிர்த்து கேள்வி கேட்கும் ஆளுமையும், ஆண்மையும் எதிர்கட்சிகள் இழந்துள்ளன. இதனை எதிர்க்கும் ஒரே கட்சி த.வெ.க.
ஓ.பி.எஸ் தி.மு.க.வில் இணைந்தால் இதுவரை பெற்று வந்த செல்வாக்கை இழப்பார் என நினைக்கிறேன். வைகோ தி.மு.க.வுடன் இணைந்துள்ளார்.
தி.மு.க.வுடன் உள்ளோம், இனியும் இருப்போம் என காங்கிரஸ் கூறவில்லை.
மார்ச் 9-ந்தேதி தி.மு.க ஒரு மாநாட்டை திருச்சியில் நடத்துகிறது. அன்று எங்கள் பொலிடிகல் பாம் வெடிக்கும். ராகுல் காந்தியும், விஜய்யும் ஒரே மேடையில் நின்றால் தி.மு.க.வுக்கு மாரடைப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிமுகவிற்கு அடுத்த பலம் வாய்ந்த கட்சி திமுகதான்.
- எங்களுக்கு எதிரி திமுக, இதுதான் கள நிலவரம்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:-
தவெகவைப்பற்றி யாரும் கண்டுகொள்வது கிடையாது, களத்தில் அதிமுகதான்; எங்களுக்கு எதிரி திமுக, இதுதான் கள நிலவரம்.
அதிமுகவிற்கு அடுத்த பலம் வாய்ந்த கட்சி திமுகதான். எடப்பாடி பழனிசாமியிலான தலைமையிலான கூட்டணியும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியும் களத்தில் நிற்கும்;
தவெக என்பது பரிதாபத்திற்குரிய கட்சியாக இந்த தேர்தலோடு முடிந்து விடும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது.
- சுமார் 33 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அடுத்த அகரம்சேரி பகுதியில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி பிப். 23-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். சுமார் 33 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதற்கிடையில், தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தவெக தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தலைமையில் வருகிற 23-ந் தேதி அன்று நடைபெறவிருந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது, தற்போது நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்க 4,900 நிர்வாகிகளுக்கு க்யூ ஆர் கோடு வசதியுடன் கூடிய நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த சீட்டுகள் ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே நிர்வாகிகள் அரங்குக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இது முற்றிலும் கட்சி நிர்வாகிகளுக்கான சந்திப்பு என்பதால், குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், உடல்நலக்குறைவு உள்ள வர்கள் மற்றும் நுழைவுச்சீட்டு இல்லாதவர்கள் நேரில் வருவதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கட்சியின் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை கருதி அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தவெக சார்பில் புதிய உத்தரவை அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
- வரும் 1ம் தேதி முதல் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த உத்தரவு.
அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது.
ஒரு பக்கம் கூட்டணி தாவும் கட்சிகள், மறுபக்கம் தேர்தல் பிரச்சாரக் களத்திலும் இறங்கியுள்ளன.
இந்நிலையில், தவெக சார்பில் புதிய உத்தரவை அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த விஜய் உத்தரவிட்டுள்ளது.
வரும் 1ம் தேதி முதல் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் பணிகள் தொடர்பாக நிர்வாகிகளை வழிநடத்த மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.






