என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajendra Balaji"

    • அரசியல் கட்சி தலைவர்களும் அதி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
    • தேசத்தை பாதுகாக்கும் பா.ஜ.க.வோடு தேச பக்தரான அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.

    நெல்லை:

    கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை வர்த்தக மையத்தில் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நடந்த மாநாட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

    பின்னர் அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவரான எடப்பாடி பழனிசாமி தான் முடிவுகளை எடுப்பார். பா.ஜ.க. மற்றும் தோழமை கட்சிகளின் ஆதரவுடன் சட்டமன்ற தேர்தலில் 220-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெறும். சமூக, சமுதாய அரசியல் அமைப்புகளும் அ.தி.மு.க.விற்கு ஆதரவு அளித்து வருகின்றன.

    தமிழக வெற்றிக்கழகம் விரும்பினால் அவர்களுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுவார். தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற நினைக்கும் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் பணிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்வார். தி.மு.க. வேண்டாம் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். அரசியல் கட்சி தலைவர்களும் அதி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

    இரட்டை வாக்களர்கள், போலி வாக்காளர்களை நீக்கும் பணியை தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர். மூலம் செய்கிறது. இந்த பணியை எடப்பாடி பழனிசாமி வரவேற்கிறார். பீகார் தேர்தல் முடிவு தான் தமிழகத்திலும் வரும். அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவார்.

    பா.ஜ.க. தேசத்தை பாதுகாப்பதாக உள்ளது. தேச பக்தராக அ.தி.மு.க. உள்ளது. தேசத்தை பாதுகாக்கும் பா.ஜ.க.வோடு தேச பக்தரான அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராஜேந்திர பாலாஜி போன்றவர்களை இ.பி.எஸ். அடக்கி வைக்க வேண்டும்.
    • சிறுபான்மை மக்களை ஆதரித்தால் பயங்கரவாதியா?

    விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள். காங்கிரஸ் கட்சி நாட்டுக்கும் தேவையில்லை, ஊருக்கும் தேவையில்லை. காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்திற்கும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில் சென்னை அம்பத்தூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசியல் நாகரிகம் இல்லாதவர்.

    * காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடலாம் என்று பேசிய ராஜேந்திர பாலாஜிக்கு நாவடக்கம் வேண்டும்.

    * கடந்த 1996-ம் ஆண்டில் அ.தி.மு.க. எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது.

    * எங்களது சொந்த தந்தையை தான் டாடி என அழைப்போம். ஆனால் அ.தி.மு.க.வினர் யாரையோ டாடி என்கின்றனர்.

    * ராஜேந்திர பாலாஜி போன்றவர்களை இ.பி.எஸ். அடக்கி வைக்க வேண்டும்.

    * சிறுபான்மை மக்களை ஆதரித்தால் பயங்கரவாதியா?

    * ராகுல் காந்தி பற்றி ராஜேந்திர பாலாஜிக்கு என்ன தெரியும்.

    * தனிநபர் செய்த தவறுகளுக்கு ஒரு சமூகத்தை குறை கூறுவது கொடுமையானது.

    * காங்கிரஸ் குறித்த தனது கருத்தை ராஜேந்திர பாலாஜி திரும்ப பெற்று மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் கட்சி நாட்டுக்கும் தேவையில்லை, ஊருக்கும் தேவையில்லை.
    • தமிழகத்தில் 220 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெல்லும்.

    விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    * காங்கிரஸ் தலைவர்களுக்கு நாட்டை பற்றிய கவலை இல்லை.

    * காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள்

    * காங்கிரஸ் கட்சி நாட்டுக்கும் தேவையில்லை, ஊருக்கும் தேவையில்லை.

    * தற்போது இருக்கும் காங்கிரஸ் கட்சி நாட்டை காட்டி கொடுக்கும் கட்சி.

    * காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்திற்கும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது.

    * தமிழகத்தில் 220 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெல்லும்.

    * அடுத்த ஆண்டு மே 5-ந்தேதி இ.பி.எஸ். முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

    * பீகாரில் நடந்தது தமிழகத்திலும் நடக்கும்.

    * தமிழகத்தில் 220 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிமுக ஆட்சியில் தான் சிவகாசியில் புதிய ரயில்வே மேம்பாலங்களுக்கு அனுமதி கிடைத்தது.
    • மத்திய அரசிடம் உங்களால் அனுமதி வாங்க முடியுமா?

    கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி பிரதமர் மோடி தான் எங்கள் டாடி என்று பேசியது அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பாஜக கூட்டணியில் அதிமுக மீண்டும் இணைந்த நிலையில் 'மோடி தான் எங்கள் டாடி' என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் பேசியுள்ளார்.

    சிவகாசியில் பேசிய ராஜேந்திர பாலாஜி, "அதிமுக ஆட்சியில் தான் சிவகாசியில் புதிய ரயில்வே மேம்பாலங்களுக்கு அனுமதி கிடைத்தது. மத்திய அரசிடம் உங்களால் அனுமதி வாங்க முடியுமா? மத்திய அரசில் இருப்பது உங்க ஐயா இல்லை. எங்கள் ஐயா மோடி தான் இருக்கிறார். எங்கள் டாடி தான் இருக்கிறார்" என்று தெரிவித்தார்.

    • 41 குடும்பங்களிடம் மனம் விட்டு பேச வேண்டும் என விஜய் நேரில் வரவழைத்துள்ளார்.
    • விஜயின் மாஸ், ஓட்டாக மாற தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் தேவை.

    அதிமுகவுடன் விஜய் கூட்டணிக்கு வருவது பாதுகாப்பாக அமையும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

    அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைப்பது அவரது எதிர்காலத்திற்கு நல்லது.

    மீண்டும் கரூருக்கு சென்றால் அசம்பாவிதம் நிகழலாம் என்பதால் விஜய் அங்கு செல்லவில்லை.

    41 குடும்பங்களிடம் மனம் விட்டு பேச வேண்டும் என விஜய் நேரில் வரவழைத்துள்ளார்.

    விஜயின் மாஸ், ஓட்டாக மாற தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் தேவை.

    அதிமுக கூட்டணிக்கு வந்தால் விஜய்க்கு நல்லது, வரவில்லை என்றாலும் அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை.

    விஜயை கூட்டணிக்கு அழைக்கவில்லை.. வந்தால் வரவேற்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் 31 ஆண்டுகள் ஆட்சி செய்த அ.தி.மு.க.வை குறைத்து மதிப்பிட்டு பேசுவது அவருடைய வீழ்ச்சியின் முதல் படிக்கட்டு.
    • ஒரு சிலர் எழுதி தருகின்ற வசனங்களை பேசி மதுரையில் நடித்துவிட்டு சென்றிருக்கிறார்.

    சிவகாசி:

    சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் அ.தி.மு.க. குறித்து பேசியது சிறுபிள்ளைத்தனமானது. எடப்பாடி பழனிசாமி தினசரி மாநாடு நடத்தி வருகிறார். அப்படிப்பட்ட தலைவரைப் பற்றி அடையாளம் தெரியாத தலைவரைப் போல பேசியுள்ளார். தமிழகத்தில் 31 ஆண்டுகள் ஆட்சி செய்த அ.தி.மு.க.வை குறைத்து மதிப்பிட்டு பேசுவது அவருடைய வீழ்ச்சியின் முதல் படிக்கட்டு. தேர்தலில் அவருக்கு எந்த ஒரு வெற்றியும் கிடைக்க வாய்ப்பில்லை.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை கண்டு தி.மு.க.வே கண்டு அஞ்சும்போது ஒன்றரை வயதுள்ள தொட் டில் குழந்தையாக இருக்கின்ற விஜய்யும் அவரது கட்சியும் அ.தி.மு.க. குறித்து பேசுவது கேலிக்குரியது.

    வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., த.வெ.க.வுக்கு இடையேதான் போட்டி என்று அவர் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். களத்தில் நிற்க முடியாது. இவரைப் போன்று பலரை பார்த்து விட்டோம். அ.தி.மு.க.வை சிறுபிள்ளைத்தனமாக பேசியவர்கள் காணாமல் போய் உள்ளார்கள் என்பதற்கு தமிழக அரசியல் வரலாறு உள்ளது.

    ஒரு சிலர் எழுதி தருகின்ற வசனங்களை பேசி மதுரையில் நடித்துவிட்டு சென்றிருக்கிறார். அவரது நாடகக் கச்சேரி இரண்டு நாட்களில் முடிந்துவிட்டது. அவரது பேச்சில் கருத்துக்களும் இல்லை, மக்களை கவரக்கூடிய எதிர்கால திட்டங்களும் இல்லை. தமிழக அரசியலில் துருவ நட்சத்திரமாக எடப்பாடி பழனிசாமி புறப்பட்டு உள்ளார். எங்களுடைய கூட்டணி கட்சிகள் அதிகமான இடங்களில் வெற்றிபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • என்னை மிரட்டி பணிய வைக்க தி.மு.க. நினைத்தது.
    • கொலை குற்றச்சாட்டு சொல்லியிருந்தால் கூட ஏற்றுக் கொண்டிருப்பேன்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வருகிற 7 மற்றும் 8-ந்தேதிகளில் இந்த மாவட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி சுற்றுப்பயணம் செய்கிறார். அவருக்கு அளிக்க வேண்டிய வரவேற்பு தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமாகிய கே.டி.ராஜேந்திர பாலாஜி கண்கலங்கியபடி பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் என் மீது குறிவைத்து பொய் வழக்கு போட்டு கைது செய்தனர். தனிமை சிறையில் தவித்தேன். ஆனாலும் நான் யாருக்கும் பயப்படமாட்டேன். என்னை மிரட்டி பணிய வைக்க தி.மு.க. நினைத்தது. என்னைத்தான் அழிக்க நினைத்தார்கள்.

    கொலை குற்றச்சாட்டு சொல்லியிருந்தால் கூட ஏற்றுக் கொண்டிருப்பேன். யாரிடமாவது நான் வேலைக்காக பணம் வாங்கியதாக வரலாறு உண்டா? எடப்பாடியாரின் பிரசார முகமாக இருப்பதால் என்னை குறி வைக்கின்றனர். சிவகாசி சட்டமன்ற தொகுதியில்தான் வரும் சட்டமன்ற தேர்தலில் நிற்பேன். சிவகாசி என்னுடைய மண். யார் போட்டியிட்டாலும் நான் வெற்றி பெறுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • என்றைக்கும் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கின்ற பிரதமராகத்தான் நம்முடைய நரேந்திர மோடி இருக்கிறார்.
    • தமிழ்நாட்டு மக்கள் மீது ஒரு அளப்பரிய அன்பை பிரதமர் மோடி வைத்திருக்கிறார் என்பது நிரூபணம் ஆகி உள்ளது.

    சிவகாசி:

    காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிவகாசியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி பலமாக இருப்பதற்கு சாட்சியாகவும், அத்தாட்சியாகவும் எடப்பாடி பழனிசாமியும், பிரதமர் நரேந்திர மோடி சந்தித்திருக்கின்றனர். கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜராஜ சோழனின் ஆயிரமாவது ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதன் வாயிலாக தமிழ்நாட்டு மக்கள் மீது ஒரு அளப்பரிய அன்பை பிரதமர் மோடி வைத்திருக்கிறார் என்பது நிரூபணம் ஆகி உள்ளது.

    ராமேஸ்வரத்தில் பிறந்து இந்திய ஜனாதிபதியாக உயர்ந்த அப்துல் கலாமை நினைவு கூறுகின்ற வகையில், என்றைக்கும் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கின்ற பிரதமராகத்தான் நம்முடைய நரேந்திர மோடி இருக்கிறார். ஆகவே அவரை வாழ்த்துவது அவரை வரவேற்பது தமிழருடைய கடமை உரிமை.

    சிதம்பரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான திருமாவளவன் பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் கலந்து கொண்டுள்ளார். அவர் தி.மு.க. கூட்டணியில் இருந்தபோதும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வரவேற்றது போற்றக்கூடியதாகும். அவர் ஒரு அற்புதமான பாராளுமன்ற உறுப்பினர்.

    அவர் தமிழகத்தின் மீது வைத்திருக்கின்ற பெருமையையும், புகழையும் பிரதமர் மோடியும் வைத்திருக்கிறார் என்று தெரிந்து அந்த நிகழ்ச்சியிலே அவர் கலந்து கொண்டது சிறப்புக்குறியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் மு.க.ஸ்டாலினுக்கு என்ன?.
    • வேறு யாரும் கூட்டணி குறித்து தேவையில்லாத கருத்துக்களை கூற வேண்டாம்.

    பெத்தநாயக்கன்பாளையம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிபேட்டையில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ராஜ ராஜ சோழன் தலைமை தாங்கினார். ஆத்தூர் நகர செயலாளர் மோகன் வரவேற்றார். எம்.எல்.ஏ.க்கள் ஜெயசங்கரன், நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன், மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

    கடந்த 4 ஆண்டுகளாக கும்பகர்ணன் போல் தூங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது தான் எழுந்துள்ளார். மக்களை ஏமாற்றுவதற்காக 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற நாடகத்தை தொடங்கி உள்ளார். இதில் மக்கள் ஏமாற கூடாது. மக்களை ஏமாற்றும் தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப நாம் போராட வேண்டும்.

    அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் மு.க.ஸ்டாலினுக்கு என்ன?. அவர்கள் வாஜ்பாய் காலத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தனர். வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். இதற்காக தான் மக்களும் காத்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியை கோட்டைக்கு அனுப்ப வேண்டும், மு.க.ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

    2026-ல் அதிமுக ஆளுங்கட்சியாகவும், அதிமுக கூட்டணி கட்சி எதிர்க்கட்சியாகவும் வரும். அதிமுக- பாஜக கூட்டணி ஒரு தெளிந்த நீரோடை, அதில் கல்லெறியாதீர்கள். தெளிந்த நீரோடையில் கல்லெறிபவர்கள் காணாமல் போவார்கள். கூட்டணி அரசு என அமித்ஷா கூறவில்லை. கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி- அமித்ஷா பேசிவிட்டார்கள். வேறு யாரும் கூட்டணி குறித்து தேவையில்லாத கருத்துக்களை கூற வேண்டாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் வர்த்தக அணி துணை செயலாளர் வரதராஜன், விவசாய அணி ஜெயசாமி, ஒன்றிய செயலாளர்கள் ரஞ்சித்குமார், வி.பி.சேகர், மோகன், முருகேசன், மாவட்ட பாசறை தலைவர் வாசுதேவன், இணை செயலாளர் வீரபாண்டி பாலாஜி, தகவல் தொழில்நூட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜ.க. என்ன தீண்டத்தகாத கட்சியா?
    • நாட்டின் நலனுக்காக, மாநிலத்தின் நலனுக்காக பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கூட்டணி அமைந்துள்ளதால் பா.ஜ.க.வின் பிரச்சனையை அ.தி.மு.க. பேசத்தான் செய்யும். அ.தி.மு.க.வின் பிரச்சனையை பா.ஜ.க.வும் பேசும்.

    * பா.ஜ.க. என்ன தீண்டத்தகாத கட்சியா?

    * அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைந்ததில் இருந்து தி.மு.க. அச்சத்தில் உள்ளது.

    * நாட்டின் நலனுக்காக, மாநிலத்தின் நலனுக்காக பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது.

    * காலமும், சூழலும் மாறும்போது கூட்டணி அமைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.
    • கூட்டணியில் யாருக்கு எவ்வளவு சீட் என்பதை எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுப்பார்.

    புதுக்கோட்டை:

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் கூட்டணி உறுதி செய்யப்பட்டது.

    இருப்பினும், அதிமுக- பாஜக கூட்டணி ரெய்டுக்கு பயந்து அமைந்த கூட்டணி என கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறியதற்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து இருந்தார்.

    இந்த நிலையில், 'தினத்தந்தி' நாளிதழுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டியில், 2026-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும். தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். முதலமைச்சர் அ.தி.மு.க.வில் இருந்து வருவார்.

    மேலும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா..? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, தேர்தலுக்கு இன்னும் போதுமான காலஅவகாசம் இருக்கிறது. எனவே இன்னும் சில காலம் காத்திருங்கள். அனைத்தும் தெளிவாகிவிடும் என்று கூறினார்.

    அமித்ஷாவின் இந்த பேட்டி தமிழக அரசியல் மட்டுமின்றி அதிமுக தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்டளை தளபதி எடப்பாடி பழனிசாமி தான். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். கூட்டணியில் யாருக்கு எவ்வளவு சீட் என்பதை எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுப்பார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க இணைவதற்கு வாய்ப்புள்ளது. அதற்கான நகர்வுகள் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.

    • தமிழக அரசியலை பொறுத்தவரை சாமானியர்கள் இன்று உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு முழு முதற்காரணம் அண்ணா, பெரியார்தான்.
    • அ.தி.மு.க. தலைமை தான் தி.மு.க.விற்கு வலுவான எதிர்ப்பை கொடுக்கும்.

    சிவகாசி:

    மதுரையில் நேற்று இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், வீடியோ படம் ஒன்று திரையிடப்பட்டது. அதில் பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம் மற்றும் அண்ணா, பெரியார் போன்றோரை விமர்சிப்பது போன்ற காட்சிகளும், நாத்திக நரி, அதர்மம், போலி திராவிடம், வழிபாடு இல்லாத ஆலயமா, கட வுளை காணக்கூட நாணயமா? போன்ற வசனங்களுடன் இடம் பெற்றிருந்தன.

    அதே வேளையில் இந்த மாநாட்டில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ ஆகியோர் பங்கேற்று இருந்தனர். இந்த வீடியோ திரையில் ஒளிப ரப்பானபோது, அவர்கள் எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மாநாடு நிறைவு பெற்ற நிலையில் அண்ணா, பெரியார் குறித்து முருகன் மாநாட்டில் எழுந்த விமர்சனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுதொடர்பாக சிவகாசியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணிக்கு ஒரு பயத்தை, ஒரு பீதியை முருக பக்தர்கள் மாநாடு உருவாக்கியிருக்கிறது. இதனால் அவர்கள் மாநாடு குறித்து மாற்று கருத்து தான் கூறுவார்கள். முருக பக்தர்கள் மாநாடு ஆன்மீகத்தின் அடையாளமாக ஒரு எழுச்சி மாநாடாக தான் அமைந்திருந்தது. முருக பக்தர்கள் மாநாட்டில் மக்கள் குவிந்ததன் காரணமாக மக்கள் மத்தியில் ஒரு மாற்றம் வந்திருக்கிறது. ஆளுகின்ற தி.மு.க. அரசிற்கு ஏமாற்றம் கிடைத்துள்ளது.

    அ.தி.மு.க.வில் பா.ஜ.க. இருப்பதால்தான் தங்களால் அ.தி.மு.க. கூட்டணிக்கு செல்ல முடியாது என திருமாவளவன் கூறியுள்ளார். அவரது கருத்துக்கள் அவர் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து வரக்கூடிய கருத்துக்கள். தி.மு.க. கட்சியோடு மனதளவில் உறவை முடித்துக் கொண்டார். பெயரளவில் மட்டுமே உறவு வைத்துள்ளார். திருமாவளவன் அ.தி.மு.க. கூட்டணி வருவது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார்.

    அ.தி.மு.க. ஏற்படுத்தியுள்ள கூட்டணி வலுவான கூட்டணி. இதில் மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் சிறிதளவும் கிடையாது. தி.மு.க. கூட்டணியில் உள்ள வி.சி.க., ம.தி.மு.க., த.வா.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் உட்பட தி.மு.க. தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர்.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிக சீட்டுகள் வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றார்கள் என்று சொன்னால் அங்கே பூகம்பம் வெடித்துள்ளது என்று தான் அர்த்தம். தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணி முறியக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாவை விமர்சனம் செய்யும் வகையில் வீடியோவை ஒளிபரப்பியது வருத்தமளிக்கிறது.

    மறைந்த முன்னாள் தலைவர்களை விமர்சிக்கும் வகையில், அதிலும் அண்ணா, பெரியாரை சிறுமைப்படுத்தும் வீடியோவை இந்த முருக பக்தர்கள் ஆன்மீக மாநாட்டில் இந்து முன்னணியினர் வெளியிட்டது தவறு, அதனை தவிர்த்திருக்கலாம். அறிஞர் அண்ணாவின் பேச்சு, செயல், எழுத்துக்கள் சிலரின் மனதை புண்படுத்தி இருக்கலாம். அதனுடைய வெளிப்பாடாக வீடியோ வெளியிட்டு இருக்கலாம்.

    தமிழக அரசியலை பொறுத்தவரை சாமானியர்கள் இன்று உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு முழு முதற்காரணம் அண்ணா, பெரியார்தான். அவர்கள் இல்லையென்றால் என்னை போன்றவர்கள் கூட அரசியலுக்கு வந்திருக்க முடியாது. அப்பேற்பட்ட தலைவர்கள் பற்றி முருகன் மாநாட்டில் திரையிடப்பட்ட வீடியோ, விமர்சனம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

    தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினராலும் போற்றும் கடவுள் முருகன். அதேபோல் அனைத்து மதங்களையும் மதித்து போற்றும் கட்சி அ.தி.மு.க. என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எந்த மதம் சார்ந்த விழாக்கள், நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க. தலைவர்கள் கலந்துகொள்வது பழக்கமாகவும், வழக்கமாகவும் இருக்கிறது. மாற்றுக்கருத்தையும், மாற்று மதத்தினரையும் மதிக்கக்கூடியவர்கள் அ.தி.மு.க.வினர்.

    நேற்று நடைபெற்ற முருகன் மாநாட்டில் அண்ணா குறித்த விமர்சனங்களை தவிர்த்து இருக்கலாம். அப்போது நாகரீகம் கருதி நாங்கள் எதையும் கூறவில்லை. அடித்தட்டு, உழைக்கும் மக்களுக்காகவும், அவர்கள் ஆட்சி, அதிகாரத்திற்கு வருவதற்கும் காரணமாக இருந்தவர்களை விமர்சிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. அ.தி.மு.க. எப்போதும் மக்களுக்காக உழைக்கும் கட்சி.

    ஆன்மீக திருவிழாக்கள் எதுவாக இருந்தாலும், எந்த மதத்தை சார்ந்திருந்தாலும் நாங்கள் கலந்துகொள்வோம். அதில் மிகுந்த பக்குவம் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி. ஒரு நிகழ்ச்சியில் நடக்கின்ற நல்ல நிகழ்வுகளைப் பற்றி பேசுவோம். அதில் நடந்த ஒரு நிகழ்வைப் பற்றி பேசி அதனுடைய ஒட்டுமொத்த மாநாட்டின் நல்ல கருத்துக்களை புறக்கணிக்க, இன்றைய அரசியல் சூழலில் மறைந்த தலைவர்களின் நல்ல நிகழ்வுகளை பற்றி பேசுவதுதான் சாலச் சிறந்தது. முன்னாள் தலைவர்களின் ஒரு போக்கு சிந்தனைகளையும் அந்த நேரத்தில் எடுத்த முடிவுகளைப் பற்றி தற்போது விமர்சனம் செய்வது தேவை யற்ற விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தி.மு.க. ஆட்சியை எதிர்க்கும் கட்சிகள், அ.தி.மு.க. தலைமையில் இணையும் காலம் விரைவில் வரும். எடப்பாடி பழனிசாமியை தொட்டுப் பார்க்கவோ, அவரது வாழ்வியல் முறையிலோ, கருத்தியல் முறையிலோ தாக்குதல் நடத்தினால் அ.தி.மு.க.வின் எதிர்தாக்குதல் கடுமையாக இருக்கும். எங்கள் வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தைகள் வெடிகுண்டாக வரும். தி.மு.க. ஐ.டி. பிரிவு தனது மூர்க்கத்தனமான செயல்பாடுகளை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    எடப்பாடி பழனிசாமியை அசிங்கப்படுத்த நினைத்தவர்கள் இன்று ஓரமாக ஒதுங்கி இருக்கிறார்கள். தி.மு.க. அப்படி நினைத்தால் அவர்களும் ஓரமாக ஒதுங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். தி.மு.க.வின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற எண்ணுகின்ற தலைவர்களில் ஒருவராக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இருக்கிறார். விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு வர வேண்டும்.

    அ.தி.மு.க. தலைமை தான் தி.மு.க.விற்கு வலுவான எதிர்ப்பை கொடுக்கும். தி.மு.க.வை வெல்ல வேண்டும் என்றால், அ.தி.மு.க.வால் மட்டுமே முடியும் என்பதால் விஜய் பக்க பலமாக, உரமாக அ.தி.மு.க.வோடும், எடப்பாடி பழனிசாமியோடும் கைகோர்ப்பதுததான் சாலச் சிறந்த முடிவு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×