என் மலர்
நீங்கள் தேடியது "thirumavalavan"
- இந்த அறிவிப்பு களத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
- திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்
2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று (பிப்.24) வெளியிட்டார்.
அதில், அதிமுக ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணைத்தொகை ஒருமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது "உதவித்தொகை" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இந்நிலையில் இந்த பெரும்தொகை அறிவிப்பு தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன்,
'இது ஒரு தேர்தல் வித்தை. தாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என்று அவர்கள் (அதிமுக) நம்புகிறார்கள், அதனால்தான் இவ்வளவு பெரிய தொகையை அறிவித்திருக்கிறார்கள். திமுக ஏற்கனவே மக்களுக்காகப் பல நலத்திட்டங்களை அறிவித்து, அவை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இப்போது அதிமுகவும் தங்கள் வெற்றிக்காகப் பல திட்டங்களை அறிவித்துள்ளது. இது களத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும்" என தெரிவித்துள்ளார்.
- பிப்.1ஆம் தேதி நல்லக்கண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக 13 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தியாகியுமான நல்லகண்ணு நூற்றாண்டை தாண்டியுள்ள நிலையில், வயது முதிர்வு தொடர்பான பிரச்சினைகள் அடிக்கடி எழுந்துவருகிறது. இதனால் அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்.
அந்தவகையில் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளால் இம்மாத தொடக்கத்தில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் 20 நாட்களுக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தற்போது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணு உடல்நலம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சென்று கேட்டறிந்தார்.
இதுகுறித்து வர வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா நல்லக்கண்ணு அவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து மருத்துவர்களிடம் அவரது உடல் நிலை குறித்து கேட்டறிந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
- திருமாவளவன் மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
- குறித்த காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை
கடந்த 2014 இல் புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலைவர் திருமாவளவன் மீது ஓதியம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை புதுச்சேரி அமர்வு நீதிமன்றம் கடந்தாண்டு தள்ளுபடி செய்தது.
உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் குறித்த காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி திருமாவளவன் மீது பதியப்பட்ட வழக்கில் இருந்து அவரை விடுவித்தும் கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
- நிச்சயதார்த்த விழாவிற்கான அழைப்பிதழை செல்வப்பெருந்தகை நேரில் வழங்கி அழைப்பு விடுத்தார்.
- இது தொடர்பான புகைப்படங்களை செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது மகள் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கான அழைப்பிதழை முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுக்கு வழங்கி அழைப்பு விடுத்து வருகிறார்.
அவ்வகையில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு தனது மகள் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கான அழைப்பிதழை செல்வப்பெருந்தகை நேரில் வழங்கி அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பான புகைப்படங்களை செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும் அவரது தாயார் பெரியம்மாள் அவர்களுக்கும் இன்று 22.02.2026 எனது மகளின் நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கினேன்" என்று தெரிவித்தார்.
- இ.பி.எஸ்.காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார்
- அதிமுக வெற்றிபெற்றால் RSS தான் நாட்டை ஆளும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழக அரசியல் தலைவர்களும் தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காவி நிறத்திலான உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார். இதற்கு திமுக எம்.பி. கனிமொழி மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், காவி உடையில் திருவள்ளுவர் இருக்கும் படத்தை இபிஎஸ் பதிவிட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "அதிமுக காவி மயமாகி வருகிறது, பாஜக பிடியில் சென்றுவிட்டது என்பதை பிரதிபலிக்கும் செயல் இது. அதிமுக வெற்றிபெற்றால் RSS தான் நாட்டை ஆளும்" என்று தெரிவித்தார்.
- பா.ம.க.வை தி.மு.க.வில் சேர்க்க வேண்டாம் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை.
- விஜய்யுடன் ஒரு கட்சி கூட இதுவரை கூட்டணி சேரவில்லை.
செஞ்சி:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அம்பேத்கர் மக்கள் கட்சியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இணைப்பு, தலித் இளைஞர்களின் அரசியல் எழுச்சி மற்றும் ஒன்று சேர் மாநாடு, 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு நிதியளிப்பு விழா என நடைபெற்ற முப்பெரும் விழா மற்றும் செஞ்சி தொகுதி மாவட்ட செயலாளர் அலுவலகம் திறப்பு விழா ஆகியவை செஞ்சி-விழுப்புரம் சாலையில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி கலந்து கொண்டார். அவர் வக்கீல் மழைமேணிபாண்டியன் மற்றும் அவரது தலைமையில் இணைந்த முக்கிய நிர்வாகிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சால்வை அணிவித்து வரவேற்றார். இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது :-
அம்பேத்கர் மக்கள் கட்சி வேற எந்த அரசியல் கட்சியிலும் இணையாமல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இணைந்தது அவர்களின் அம்பேத்கர் கொள்கை பற்றை காட்டுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உள்ளவர்கள் புயலே அடித்தாலும் என்னை விட்டு போகாமல் இருப்பதே எனக்கு வியப்பை தருகிறது.விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தவுடன் வி.சி.க.வினர் அங்கு போய்விட்டார்கள் என்று சொன்னார்கள்.
ஆனால் அதற்கு பிறகு தான் வி.சி.க. மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது. அம்பேத்கர் பெயரில் கட்சி நடத்துவது அவரது கொள்கைகளை பின்பற்றும் அமைப்புகளை பெயரளவிற்கு மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அங்கீகாரம் பெற்றது சாதாரணமான விஷயம் அல்ல. நடிகர் ரஜினிகாந்த் சொல்வது போல் ஒரு தடவை சொன்னால் நூறு தடவை சொன்னது போல் வி.சி.க. ஒரு எம்.எல்.ஏ.மற்றும் எம்.பி. பெற்றால் நூறு பேரை பெற்றதை போன்றது.
மேலும் திருமாவளவன் அ.தி.மு.க. கூட்டணி மற்றும் விஜய் கூட்டணியில் சேர முடியாதா? என்றால் முடியும். ஆனால் பா.ஜ.க. தமிழ்நாட்டில் கால் ஊன்ற கூடாது என்பதால் தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறோம். 5 சீட்டு 6 சீட்டுக்கு தி.மு.க.வுடன் இருக்கிறீர்கள் என்று நம்மை ஆத்திர மூட்டுவார்கள். இதற்கு எல்லாம் திருமாவளவன் அசைந்து கொடுக்கவில்லை. நாங்கள் கொள்கை கூட்டணியில் இருக்கிறோம். பா.ஜ.க. கட்சி தமிழ்நாட்டில் காலூன்ற பார்க்கிறது. அதற்கு அதிமுக கட்சியின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி காவிய கொடியை ஏற்ற பார்க்கிறார்கள்.அதனால் தான் பல வழிகளில் பெரியாரை குறி வைத்து விமர்சனம் செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு தலித் தலைவர்கள் தேசிய அளவில் இருந்த போதும் அம்பேத்கரை முன்னிறுத்தினார் பெரியார். எதனால் சனாதான தர்மத்தை அழிக்க வேண்டும் என்பது தான் இருவரின் நோக்கமும் அதுதான். அம்பேத்கர் பேசினதை தான் பெரியார் பேசினார். திமுகவை பலவீனபடுத்தினால் அது பெரியார் அரசியலை பலவீனம் படுத்தும் அரசியல் ஆகும்.
பா.ம.க.வை தி.மு.க.வில் சேர்க்க வேண்டாம் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. நான் ஒருபோதும் அப்படி நெருக்கடி கொடுக்கவில்லை. எங்கள் கட்சி நலன் காரணமாக தான் பா.ம.க. இடம் பெறும் கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என்று ஏற்கனவே சொல்லி விட்டோம். அதற்கு தர்மபுரி நாயக்கன் கொட்டாய் சம்பவமும் அதனைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட தலித் அல்லாத கூட்டணி என்ற சோசியல் என்ஜினியரிங் தான் முக்கிய காரணம். எங்களுக்கு எம்.எல்.ஏ., எம்.பி இல்லை என்றாலும் அம்பேத்கர் கொள்கையை கடைபிடிக்கிறோம். அந்த வகையில் வேற கட்சியில் இணையாமல் அம்பேத்கர் மக்கள் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்துள்ளதை வரவேற்கிறோம். தி.மு.க. கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெறும்.அதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி காரணமாக இருக்க வேண்டும்.
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது. இது எடப்பாடிக்கு தலைமையில் இடியே விழுந்து போல் இருக்கும். உரிமை தொகை 5 ஆயிரம் வழங்கியபோது அவருக்கு அடி வயிற்றில் இடி விழுந்தது போல் இருக்கும்.இப்போது தே.மு.தி.க . தி.மு.க. உடன் கூட்டணியில் இணைந்தது எடப்பாடிக்கு உச்சந்தலையில் இடி விழுந்தது போல் இருக்கும். விசில் காரங்க ஆட்சியில் பங்கு தர நாங்க ரெடி நீங்க ரெடியா என்று கேட்டார்கள். ஆட்சியில் பங்குக்கு நாங்க ரெடி அதை எங்களால் அமைத்துக் கொள்ள முடியும் ஆனால் உங்க கூட வர நாங்க ரெடி இல்லை என்று சொல்லி விட்டோம். விஜய்யுடன் ஒரு கட்சி கூட இதுவரை கூட்டணி சேரவில்லை. அதே போல் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர கட்சிகள் தயக்கம் காட்டுகின்றனர்.
தி.மு.க. கூட்டணி வெற்றி பெற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும்.
இவ்வாறு தொல் திருமாவளவன் பேசினார்.
- தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்திருப்பது பெருமகிழ்வளிக்கிறது.
- அரசியல் பகைவர்களின் அடிவயிறு குமையும்.
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இன்று இணைந்தது. இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்திருப்பது பெருமகிழ்வளிக்கிறது. இக்கூட்டணி மேலும் வலிமை மிக்கதாக மாறியுள்ளது.
எம் உறுதியான வெற்றிக்கு ஏதுவாக அமையும். அரசியல் பகைவர்களின் அடிவயிறு குமையும்.
தி.மு.க. கூட்டணி உடையும் என்கிற அவர்களின் கனவில் மண் விழுந்தது.
கலைஞரின் கனவு நனவாகும் வகையில் பழம் நழுவி பாலில் விழுந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இளைய தலைமுறையை பாதுகாக்க வேண்டும், தமிழ் சமூகத்தை பாதுகாக்க வேண்டும்.
- எங்களது கோரிக்கைகளை பேச்சுவார்த்தையில் வைப்போம்.
திருச்சி:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. அரியலூரில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்தார். பின்னர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் உள்ளது. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. தி.மு.க. கூட்டணியில் தான் காங்கிரசும் உள்ளது. தி.மு.க. கூட்டணி மிகவும் கட்டுக்கோப்பாக உள்ளது. மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கான கோரிக்கை அல்ல, ஒட்டு மொத்தமாக மக்களின் கோரிக்கை. இந்தியா முழுவதும் போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது. புள்ளி விவரங்கள் இந்த உண்மையை தெரிவிக்கிறது.
தமிழகத்தில் மதுக்கடைகளை அடுத்தடுத்து படிப்படியாக குறைத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை எங்கள் கட்சி மாநாட்டில் வலியுறுத்தி வருகிறோம். அந்த நிலைப்பாட்டில் இன்றும் உறுதியாக உள்ளோம். அது தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லை என்பது கவலை அளிக்கிறது. மறுபடியும் ஆளும் கட்சியான தி.மு.க.விற்கு இந்த கோரிக்கையை நினைவூட்டுகிறேன்.
இளைய தலைமுறையை பாதுகாக்க வேண்டும், தமிழ் சமூகத்தை பாதுகாக்க வேண்டும். எனவே மது மற்றும் போதை பொருளை கட்டுப்படுத்துவதற்கும், முற்றிலுமாக ஒழிப்பதற்கும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முன்வர வேண்டும்.
இந்த பட்ஜெட்டில் மகளிர் சுய உதவி குழுவிற்கு ரூ.1.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே கொடுத்த தொகையை மக்கள் செலுத்தவில்லை என கூறுகிறீர்கள். இது குறித்து அரசு தான் கவலைப்பட வேண்டும். இது நல்லெண்ணத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது. அதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி நிதி கொடுத்து இந்த ஒன்றிய அரசு தள்ளுபடி செய்துள்ளது. அதைப் பற்றி இந்த நாடு கவலைப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்பது பேச்சுவார்த்தையில் முடிவாகும். அவ்வாறு அவர்கள் கேட்பதால் கூட்டணி உடையாது.
உழைக்கிறோம், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்பது தவறு கிடையாது. தமிழக அரசியலுக்கு அது பொருந்தாது என முதல்வர் தெரிவித்திருக்கிறார். எப்படி பொருந்தி வராது என்பதை அவர் விளக்குவார். எங்களைப் போல காங்கிரஸ் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று கிடையாது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்களது கோரிக்கைகளை பேச்சுவார்த்தையில் வைப்போம். தி.மு.க. கூட்டணியில் பிரச்சனை இல்லை என்றார்.
- நூறுநாள் திட்டமும், மகளிர் உரிமைத்தொகை திட்டமும் ஒன்றுதான்
- ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் செலுத்துவோம் என்று நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார்.
தமிழ்நாட்டில் தகுதியுள்ள மகளிருக்கு மாதா மாதம் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு ரூ.1000 அளித்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்கான தொகை, மற்றும் கோடை சிறப்பு தொகை என மொத்தம் ரூ.5000 இன்று மகளிரின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் திமுக தலைவர் திருமாவளவன் இதனை செயல்படுத்தியதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசால் இன்று அவர்களது வங்கிக் கணக்கில் ஐந்தாயிரம் ரூபாய் செலுத்தப்பட்டிருக்கிறது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான தொகை 3000. கோடைக்கால இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கு உதவித்தொகை 2000 என ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இது மகளிரை மனம் குளிரச் செய்யும் மகத்தான அறிவிப்பாகும். இதைச் செயல்படுத்திய முதலமைச்சர் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிறகு ஏறத்தாழ ஒன்றரை கோடி மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தைத் திமுக தேர்தல் வாக்குறுதியாக அளித்தபோது இது சாத்தியமே இல்லை என்று அதிமுக விமர்சித்தது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளால் வழிமொழியப்பட்டது.
பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்தியாவின் பிற மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தபோது அதேபோல் மகளிருக்கு உதவித்தொகை வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தன. தமிழ்நாட்டில் திமுக அரசு நடைமுறைப்படுத்தும் இந்தத் திட்டத்தைப் பார்த்து இப்போது அசாம், டெல்லி, ஒடிசா, கர்நாடகா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் முதலான மாநிலங்களில் மாதம் தோறும் மகளிருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இப்படி இந்தியாவுக்கே முன்மாதிரியாக இந்தத் திட்டம் அமைத்துவிட்டது.
உரிமைத் தொகையைப் பெறும் பெண்கள் அந்தத் தொகையை சிறு சிறு கடன்களை அடைப்பதற்கும் தமது குழந்தைகளின் கல்வி, முதியோரின் மருத்துவச் செலவுகள் ஆகியவற்றை ஈடு கட்டுவதற்கும் பயன்படுத்துகின்றனர். சிறிய அளவில் அவர்கள் சேமிக்கவும் செய்கின்றனர். இந்த உரிமைத் தொகை பெண்களுக்கு குறிப்பாகக் கிராமப்புறப் பெண்களுக்குப் பொருளாதாரத் தற்சாற்பை அளித்திருக்கிறது.
தேர்தல் நெருங்கிவிட்ட நேரத்தில் இந்தத் திட்டத்தை நிறுத்துவதற்கு பாஜக - அதிமுக கூட்டணியினர் சதி செய்துள்ளனர். நீதிமன்றத்தின் மூலமாகத் தடை ஆணை பெறுவதற்கும் முயற்சி செய்து இருக்கிறார்கள். இதை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கும் முன்பணமாக 1000 ரூபாயும், கோடை காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை எதிர்கொள்வதற்காக 2000 ரூபாய் உதவித்தொகையும் சேர்த்து ஐந்தாயிரம் ரூபாயை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிட்டுள்ளார்.
ஒரே நேரத்தில் ஐந்தாயிரம் ரூபாய் மகளிருக்கு இன்று கிடைத்திருக்கிறது இது அவர்களுடைய மனம் குளிரச் செய்யும் அறிவிப்பு மட்டுமல்ல கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அறிவிப்பும் ஆகும். கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலக நாடுகள் பலவற்றின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த போது இந்திய ஒன்றிய அரசு 100 நாள் வேலை திட்டத்திற்குக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து கிராமப்புற மகளிருக்கு அந்தத் தொகை கூலியாகக் கிடைப்பதற்கு வழி செய்தது. இதனால் கிராமப்புற பொருளாதாரம் சற்று பாதுகாக்கப்பட்டது.
'கொரோனா காலத்தில் இந்தியப் பொருளாதாரம் பெரிய அளவில் வீழ்ச்சி அடையாமல் தடுத்ததில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி முக்கிய பங்கு வகித்தது' என்று பொருளாதார நிபுணர்கள் கூறினர். அதைப் போலத்தான் மகளிர் உரிமைத் திட்டமும் செயல்படுகிறது. இந்தத் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 74% பேர் கிராமப்புறப் பெண்களாவர்.
பெண்களிடம் பணத்தைக் கொடுத்தால் அதை அவர்கள் ஆக்கபூர்வமான வழிகளில் தான் செலவு செய்வார்கள். அது பண சுழற்சியை ஏற்படுத்தி பொருளாதார மேம்பாட்டுக்கு வழி வகுக்கும். மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தமிழ்நாட்டில் அதைத்தான் செய்திருக்கிறது.
'அடுத்து அமையப் போகிற திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை மாதம் 2000 ரூபாய் என உயர்த்தி வழங்கப்படும்' என்றும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இது யாரும் எதிர்பாராத ஒரு அறிவிப்பாகும். திமுக அரசின் நலத்திட்டங்களால் பயன்பெற்று வரும் பெண்கள் 'மீண்டும் திமுகவைத்தான் ஆட்சியில் அமத்துவோம்!' என்று உறுதி எடுத்து இருக்கிறார்கள். இந்த அறிவிப்பு அவர்களுக்கெல்லாம் ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது.
2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் செலுத்துவோம் என்று நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். அது பொய்யான வாக்குறுதி என்பது அம்பலமானது. 15 லட்சம் அல்ல 15 ரூபாயைக் கூட அவர்கள் கொடுக்கவில்லை.
மோடியைப் போல வாயால் வடை சுடுபவரல்ல நமது முதலமைச்சர். மிகச் சிறப்பாக மகளிர் உரிமைத் திட்டத்தை அவர் செயல்படுத்திக் காட்டியுள்ளார். எனவே, அடுத்துவரும் திமுக ஆட்சியில் 2000 ரூபாயும் உறுதியாக வழங்கப்படும் என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். 2021 இல் தான் அளிற்ற வாக்குறுதிகளை மட்டுமின்றி அளிக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றிக் காட்டியவர் நமது முதலமைச்சர். காலை உணவுத் திட்டம் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்படவில்லை. ஆனால், அந்தத் திட்டத்தையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
மக்கள் நல அரசாக, சமூக நீதி அரசாக, இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில், கல்வி வளர்ச்சியில், சுகாதாரக் கட்டமைப்பில் முதல் மாநிலம் என்ற பெருமைகொண்ட அரசாகத் தமிழ்நாடு அரசைத் தலைநிமிரச் செய்திருக்கிறார் நம்முடைய முதலமைச்சர். அவருடைய சாதனை தொடர்வதற்கு தமிழ்நாட்டு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் அவரது தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் அமைய ஆதரவு தரவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- பேசுவதற்கான சூழல் அமைந்தால் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காதது குறித்து கேள்வி எழுப்புவோம். உரிமைக் குரல் எழுப்புவோம்.
- தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை என்ற கேள்வியை நாங்கள் எழுப்புவோம்.
ஆலந்தூர்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆளும் பா.ஜ.க.விற்கு பாராளுமன்றத்தை நடத்துவதற்கே விருப்பமில்லை. தற்போது நடைபெறும் கூட்டத்தொடரில் ஆளும் கட்சியினர் அடாவடித்தனமாக நடந்து கொள்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை, நூல்களில் இருந்தும் இதழ்களில் இருந்தும் மேற்கோள் காட்டி பேசுவது வழக்கமான ஒன்றுதான்.
ஆனால் ராகுல் காந்தி பேசும் போது வெளியிடப்படாத ஒரு நூலை காட்டி பேசக்கூடாது என்று கூறி அவரை பேச விடாமல் தடுத்து நிறுத்தி கடந்த வாரம் கூட்டதொடரையே அவர்கள் நடத்தவில்லை.
இந்த வாரமும் அதே நிலை நீடிக்கும் என நாங்கள் கருதுகிறோம். பேசுவதற்கான சூழல் அமைந்தால் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காதது குறித்து கேள்வி எழுப்புவோம். உரிமைக் குரல் எழுப்புவோம்.
தமிழ்நாட்டிற்கு கல்வி உள்ளிட்ட பல துறைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை இன்னும் ஒதுக்காமல் இருக்கின்றனர். அதேபோல் ஒவ்வொரு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மாநில வாரியாக கணிசமான தொகையை ஒதுக்கீடு செய்யும் போது தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை என்ற கேள்வியை நாங்கள் எழுப்புவோம்.
பா.ஜ.க. ஆளாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களை திட்டமிட்டு வஞ்சித்து நிதிகளை ஒதுக்காமல் மாநிலங்களை புறக்கணித்து வருகின்றனர். தமிழ்நாடு அந்த வரிசையில் ஒன்று. அதேபோல் மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும் பா.ஜ.க. அரசு ஓரவஞ்சனை காட்டுகிறது என்றார்.
- அமெரிக்கவின் வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு எதிரானது .
- புதுச்சேரியில் இந்தியா கூட்டணிக்கு யார் தலைமை என்பது குறித்து பேச்சு வார்த்தையில் முடிவு செய்வோம்.
புதுவை வில்லியனூர் ஜி.என். பாளையம்பேட் குழந்தை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய மந்திரி பியூஸ் கோயல் பதவி விலக வேண்டும் என்ற விவசாயி களின் கோரிக்கைக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு அளிக்கிறது. அமெரிக்கவின் வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கு எதிரானது .
அமெரிக்க அதிபர் டிரம்பின் சதிக்கு மோடி பலியாகி விட்டார். இந்திய நாட்டின் நலனை விட கார்ப்பரேட் மீது அக்கறை காட்டுகிறார். வர்த்தக ஒப்பந்தத்தை இந்திய மக்கள் எதிர்க்கி றார்கள். எனவே, மோடி ஒப்பந்தத்தை பரிசீலிக்க வேண்டும்.
கூட்டணிக்கு பா.ம.க. வந்தால் ஏற்பீர்களா.? என்பது யூகமான கேள்வி. ஒரு சமூகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கிடையாது. பா.ம.க. ஏற்கனவே எடுத்த சோசியல் என்ஜினியரிங் நிலைப்பாட்டால் வி.சி.க.வின் வெளிப்படை யான முடிவை அறிவித் தோம். அந்த முடிவைதான் மறுபடி மறுபடி சொல்கி றேன். இதில் மேற்கொண்டு கருத்து சொல்ல விரும்ப வில்லை.
கூட்டணியில் விடுதலை சிறுத்தைக்கு கூடுதல் இடம் கிடைக்குமா.? என்பது பேச்சுவார்த்தையில் தான் தெரிய வரும். புதுச்சேரியில் இந்தியா கூட்டணிக்கு யார் தலைமை என்பது குறித்து பேச்சு வார்த்தையில் முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2023-ம் ஆண்டு சின்னத்திரை நடிகையான சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.
நெல்சன் இயக்கத்தில் வெளியான 'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியவர் ரெடின் கிங்ஸ்லி . இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. இந்த படத்தில் தனது நகைச்சுவையினால் அனைவரையும் கவர்ந்தார். இப்படத்திற்கு பின்னர் நகைச்சுவை நடிகராக தொடர்ந்து நடித்து வந்தார் ரெடின்.
நடிகர் சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தில் இவரது நகைச்சுவை அனைவரையும் கவர்ந்தது. அதன்பின்னர் விஜயுடன் 'பீஸ்ட்' மற்றும் ரஜினியுடன் 'ஜெயிலர்' படத்தில் நடித்து இருந்தார்.
இதனிடையே கடந்த 2023-ம் ஆண்டு சின்னத்திரை நடிகையான சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், விசிக தலைவர்திருமாவளவனை ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா தம்பதி சந்தித்துள்ளனர். அப்போது ரெடின் கிங்ஸ்லி குழந்தையை திருமாவளவன் தூக்கி கொஞ்சினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.






