என் மலர்
நீங்கள் தேடியது "Thirumavalavan"
- கடந்த தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகள் போட்டியிட்டது. 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
- 2024 தேர்தலில் தங்களுக்கு 3 தொகுதிகள் வேண்டும் என்று ஏற்கனவே விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை வைத்துள்ளது.
சென்னை:
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிவு அரசியல் களத்தில் புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ஜனதாவை விட்டு வெளியே வந்துவிட்டதால் அடுத்த கட்டமாக தன் பக்கம் மேலும் சில கட்சிகளை இழுத்து கூட்டணியை பலப்படுத்தும் வியூகங்களை எடப்பாடி பழனிசாமி வகுத்து வருகிறார்.
தங்கள் கூட்டணியில் பா.ஜனதா இல்லாததால் சிறுபான்மையினர் வாக்குகள் சிதறாமல் தங்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
அந்த எதிர்பார்ப்புக்கு வலுசேர்க்கும் வகையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியும் அ.தி.மு.க.வின் முடிவை வரவேற்றுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் பா.ஜனதா இல்லாத அ.தி.மு.க. கூட்டணியில் இணைய தயார் என்று சில மாதங்களுக்கு முன்பு திருமாவளவன் வெளிப்படையாகவே அறிவித்தார்.
அப்போது அ.தி.மு.க. பா.ஜனதா கூட்டணி உறுதியாக இருந்ததால் திருமாவளவனின் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.
ஆனால் இப்போது திருமாவளவன் சொன்னது போலவே நடந்துவிட்டது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இல்லை.
எனவே திருமாவளவன் அணி மாறுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறது என்று அந்த கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு நேற்று அறிவித்தார்.
இந்த நிலையில் வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போனில் தொடர்பு கொண்டு அவரது உடல் நலம் பற்றி விசாரித்துள்ளார்.
இந்த திடீர் பாசம் கூட்டணி மாற்றத்துக்கு அச்சாரம் போடுவதாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.
கடந்த தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகள் போட்டியிட்டது. 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
2024 தேர்தலில் தங்களுக்கு 3 தொகுதிகள் வேண்டும் என்று ஏற்கனவே விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை வைத்துள்ளது.
ஆனால் ஒரு சீட் மட்டுமே ஒதுக்க தி.மு.க. முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி திருமாவளவனுடன் பேசியது உடல் நலத்தை விசாரிக்கத்தான். இதில் அரசியல் எதுவும் கிடையாது என்கிறார்கள்.
ஆனால் அரசியல் கட்சிகள் இப்படித்தான் சந்தர்ப்பத்தை பயன்படுத்தும் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.
இதே போல் காங்கிரசுக்கும் கடந்த தேர்தலில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த முறை அந்த கட்சியும் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையை சாதகமாக்கி காங்கிரசை இழுக்கும் முயற்சியும் நடப்பதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க. தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி வகுத்து வரும் வியூகம் எந்த மாதிரி அமையும் என்பது போக போகத்தான் தெரியும்.
- திருமாவளவனுக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
- நின்றுகொண்டே கட்சி நிர்வாகிகளையும், பார்வையாளர்களையும் சந்தித்தார் திருமாவளவன்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு சென்னை வந்த திருமாவளவன் முதுகு எரிச்சல் காரணமாக அவதிப்பட்டார். வடபழனி கட்சி அலுவலகத்தில் அவர் மணிக்கணக்கில் நின்றுகொண்டே கட்சி நிர்வாகிகளையும், பார்வையாளர்களையும் சந்தித்ததில் மிகவும் சோர்வடைந்து விட்டார்.
உடல் வலி அதிகமாகி காய்ச்சலும் அவருக்கு வந்துவிட்டது. இதனால் அவர் வடபழனியில் உள்ள ஆஸ்பத்திரியில் நேற்றிரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் திருமாவளவனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
- திமுக தலைமையிலான கூட்டணி, பாஜகவையும் சனாதனத்தையும் வலுவாக எதிர்க்கும் கூட்டணியாக தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
- பாஜகவை அதிமுக எதிர்ப்பது கோட்பாட்டு அடிப்படையில் இல்லை என்பதை விடுதலைச்சிறுத்தைகள் சரியாக புரிந்து கொண்டுள்ளோம்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் வன்னியரசு தனது 'எக்ஸ்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல் கொண்ட தலைவர் யாரும் இருக்கிறார்களா? புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கை வழியில் சனாதனத்தை எதிர்த்து எப்படி எமது தலைவர் திருமாவளவன் களமாடுகிறாரோ அப்படித்தான்
ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டே களமாடி வருகிறார் முதல்வர் அவர்கள்.
திமுக தலைமையிலான கூட்டணி, பாஜகவையும் சனாதனத்தையும் வலுவாக எதிர்க்கும் கூட்டணியாக தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் தான் விடுதலைச்சிறுத்தைகள் திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக இருக்கிறது.
கடந்த 2021ல் நடைப்பெற்ற சட்டப்பேரவைத்தேர்தலில் 6 இடங்களே ஒதுக்கப்பட்ட போதும், பாஜகவை வீழ்த்தவே திமுக கூட்டணியில் இடம் பெற்றோம்.
ஆகவே, திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் இடம் பெற்றிருப்பது நாட்டை பாதுகாக்கவே.
இச்சூழலில்,பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் கூட்டணி இல்லை என்று நேற்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தவுடன்,
விடுதலைச்சிறுத்தைகள் அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும் எனவும் வரப்போகிறது எனவும் கக்கத்தில் பையை வைத்துக்கொண்டு ஜோசியம் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் அரசியல் புரோக்கர்கள்.
பாஜகவை அதிமுக எதிர்ப்பது கோட்பாட்டு அடிப்படையில் இல்லை என்பதை விடுதலைச்சிறுத்தைகள் சரியாக புரிந்து கொண்டுள்ளோம். எங்களிடம் எந்த ஊசலாட்டமும் இல்லை.
திமுக தலைமையிலான கூட்டணியால் மட்டுமே பாஜக எனும் தீய சக்தியை அழித்தொழிக்க முடியும். அந்த வகையில், அரசியல் புரோக்கர்களின் கேடு செயல் நிறைவேறாது. விடுதலைச்சிறுத்தைகள் அரசியல் புரோக்கர்களின் அற்ப ஆசைக்கு வைக்கப்பட்ட களிமண் அல்ல; காட்டாற்று வெள்ளத்தையே திசைதிருப்பும் கற்பாறை என எச்சரிக்க கடமைப்பட்டுள்ளோம்.
இந்த கற்பாறையில் அரசியல் புரோக்கர்கள் அடிபடப்போவது உறுதி!
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு சென்னை வந்த திருமாவளவன் முதுகு எரிச்சல் காரணமாக அவதிப்பட்டார்.
- வடபழனியில் உள்ள ஆஸ்பத்திரியில் நேற்றிரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வைரஸ் காய்ச்சல் காரணமாக வடபழனியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு சென்னை வந்த திருமாவளவன் முதுகு எரிச்சல் காரணமாக அவதிப்பட்டார்.
வடபழனி கட்சி அலுவலகத்தில் அவர் மணிக்கணக்கில் நின்றுகொண்டே கட்சி நிர்வாகிகளையும், பார்வையாளர்களையும் சந்தித்ததில் மிகவும் சோர்வடைந்து விட்டார். உடல் வலி அதிகமாகி காய்ச்சலும் அவருக்கு வந்துவிட்டது.
இதனால் அவர் வடபழனியில் உள்ள ஆஸ்பத்திரியில் நேற்றிரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் 2 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெறுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
- சந்திரயான்-3 வெற்றி குறித்து பாராளுமன்றத்தில் அனைத்து கட்சியினரும் விண் வெளித்துறை விஞ்ஞானிகளை வானளாவ புகழ்ந்தார்கள்.
- வீரமுத்துவேல் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது கூடுதல் மகிழ்ச்சி என்றார்.
சந்திரயான்-3 வெற்றி குறித்து பாராளுமன்றத்தில் அனைத்து கட்சியினரும் விண் வெளித்துறை விஞ்ஞானிகளை வானளாவ புகழ்ந்தார்கள்.
திருமாவளவன் எம்.பி. பேசும்போது, "மங்கல்யான்-1 மயில்சாமி அண்ணாத்துரை, மங்கல்யான்-2 வனிதா என்று ஃபுளோவாக தமிழில் அடுக்கினார். அதே பாணியில் வாய் தவறி இப்போது மங்கல்யான்-3 வீரமுத்துவேல். இவர்களெல்லாம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி என்றார்.
சந்திரயானுக்கு பதிலாக மங்கல்யான் என்று சொன்னதை வலைத்தள வாசிகள் விடுவார்களா? வறுத்தெடுக்கிறார்கள்.
- வேங்கைவயல், நாங்குனேரி சம்பவங்களில் மேற்கொண்ட அணுகுமுறையால் பட்டியலினத்தவர்கள் மத்தியில் செல்வாக்கு சரிந்துள்ளது என்பதை சுட்டி காட்டி பேசி இருக்கிறார்கள்.
- அ.தி.மு.க. அணியில் சேர்ப்பதற்கான முயற்சியையும் கொங்கு மண்டலத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் முன்னெடுத்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தனது கட்சியினரை தனித்து போட்டியிடவும் தயாராக இருங்கள் என்று உஷார்படுத்தியது அரசியல் களத்தில் பலரது புருவங்களையும் உயர்த்தியது.
அப்படின்னா தி.மு.க. கூட்டணியில் இருக்க மாட்டாரா? என்ன பிரச்சனை? என்ற கேள்விகள் எழுந்தது. இது தொடர்பாக அந்த கட்சி நிர்வாகிகள் கூறிய தகவல்கள் மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர்கள் கூறியதாவது:-
கூட்டணி நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது. இடையில் பா.ம.க.வை சேர்க்க நடந்த முயற்சிகள் அண்ணனுக்கு பிடிக்கவில்லை.
இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டை விரைவாக முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். தற்போது சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் சிறுத்தைகள் கைவசம் உள்ளன. வருகிற தேர்தலில் 3 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டுள்ளோம். ஆனால் தி.மு.க. தலைமையோ கூடுதல் தொகுதி தர முடியாது. இரண்டு தொகுதிகள்தான் தர முடியும். வேங்கைவயல், நாங்குனேரி சம்பவங்களில் மேற்கொண்ட அணுகுமுறையால் பட்டியலினத்தவர்கள் மத்தியில் செல்வாக்கு சரிந்துள்ளது என்பதை சுட்டி காட்டி பேசி இருக்கிறார்கள். இது அண்ணனுக்கு கூடுதல் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. அணியில் சேர்ப்பதற்கான முயற்சியையும் கொங்கு மண்டலத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் முன்னெடுத்துள்ளார். அ.தி.மு.க. தரப்பும் அண்ணனை வரவேற்க தயாராகி விட்டார்கள். இனி அண்ணன்தான் முடிவெடுக்க வேண்டும். கொடுக்கும் 2 தொகுதிகளை பெற்றுக்கொள்வதா? அல்லது கூட்டணிக்கு 'கல்தா' கொடுப்பதா? என்பதை விரைவில் முடிவு செய்வார் என்றனர்.
- 'ஜெய்பீம்' திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்காதது குறித்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் முரண்பாடான படம் என்று திருமாவளவன் கூறினார்.
69-வது தேசிய விருது பெரும் படங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில், 'ஜெய்பீம்' திரைப்படத்திற்கு விருது அறிவிக்காதது குறித்து பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆட்சியாளர்கள் கலைத்துறையை எப்படி கையாளப்பார்க்கிறார்கள் என்பது 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்திற்கு விருது வழங்கியதில் இருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது:- 'ஜெய்பீம்' திரைப்படம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய படம். அனைவரின் பாராட்டையும் பெற்ற படம் அந்த படத்திற்கு விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது, கிடைக்காததால் விமர்சனம் வருகிறது. 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் முரண்பாடான படம். ஆட்சியாளர்கள் என்ன சிந்தனையோட்டத்தில் இருக்கிறார்கள் கலைத்துறையை எப்படி கையாளப்பார்க்கிறார்கள் என்பது 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படத்திற்கு விருது வழங்கியதில் இருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
பொதுவாக ஆட்சியில் இருப்பவர்கள் அவர்களின் கருத்து சார்ந்த எழுத்திற்கோ, படைப்பிற்கோ விருது வழங்குவது வாடிக்கையான ஒன்று. இந்த அரசு திரைப்படத் துறையையும் தங்களுக்கான ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வெகுவாக விரும்புகிறது. அதில் அதிகமாக தலையீடு செய்கிறது. அவர்கள் விரும்புகிற வெறுப்பு அரசியலை விதைப்பதற்கு திரைத்துறையை பயன்படுத்திக் கொள்கிறது என்று கூறினார்.
- மண்டல செயலாளர் வீ.கிட்டுவின் தாயார் படத்தை வி.சி. கட்சி தலைவர் திருமாவளவன் திறந்து வைத்தார்.
- கட்சியின் மாவட்ட செயலாளர் பதவியில் 10 சதவீதம் பெண்களுக்கு என ஒதுக்கியுள்ளோம் என்றார்.
மாமல்லபுரம்:
காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வீ.கிட்டுவின் தாயார் நாகம்மாளின் 16ம் நாள் படத்திறப்பு நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு படத்தை திறந்து வைத்து, மலர்தூவி, மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பதவியில், 10 சதவீதம் பெண்களுக்கு என ஒதுக்கியுள்ளோம். இந்திய நாட்டிலேயே எந்தக் கட்சியும் வழங்காத ஒரு வாய்ப்பை பெண்களுக்கு வழங்கியுள்ளோம்.
பெண்கள் அரசியலுக்கு வெட்கம் இல்லாமல், தைரியமாக வரவேண்டும். இதுதவிர மாற்று சமுதாயம் சார்ந்தவர்களுக்கும் 10 சதவீதம் கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் விடுதலை செழியன், இ.சி.ஆர்.அன்பு, சாலமன், ஐயப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- திருமாவளவன் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலர் வாழ்த்து.
- வாழ்த்து கூறிய நடிகர் விஜய்-க்கு திருமாவளவன் டுவீட் மூலம் பதில்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று (ஆகஸ்ட் 17) தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வி.கே. சசிகலா மற்றும் பல்வேறு அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலதரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அந்த வகையில், திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், திருமாவளவனுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இதற்கு திருமாவளவன் தனது X (முன்பு டுவிட்டர்) பதிவில் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் அரசியலில் களமிறங்க இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் கூறி இருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
- இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் தொல். திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.