search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madras High Court"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னை ஐகோர்ட்டில் சசிகலா மேல்முறையீடு செய்தார்.
    • அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. அவர் உயிரோடு இருக்கும் வரை அ.தி.மு.க.வில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்.

    ஜெயலலிதா மறைவை தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான தீர்மானங்களும் இயற்றப்பட்டன.

    இந்த நிலையில் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றதும் கட்சியில் காட்சிகள் மாறியது.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூடி சசிகலா, தினகரன் ஆகியோரை அந்த பதவிகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கியது. அதற்கு பதிலாக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

    இதை எதிர்த்து தன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கியது செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உரிமையியல் கோர்ட்டில் சசிகலா வழக்கு தொடர்ந்தார்.

    அந்த வழக்கை நிராகரிக்க கோரி ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் மனுதாக்கல் செய்தனர்.

    அந்த மனுவை ஏற்றுக்கொண்ட உரிமையியல் நீதிமன்றம் சசிகலாவின் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து சசிகலா சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோரை கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது.

    இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் சசிகலா தான்தான் கட்சியின் பொதுச்செயலாளர் என்று கூறி வந்தார்.

    இதற்கிடையில் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட ஒற்றை தலைமை பிரச்சனையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையே போட்டி ஏற்பட்டது.

    இதில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டார். அதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்ட சட்ட போராட்டம் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. கட்சி முற்றிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் வந்தது.

    சசிகலாவின் மேல்முறையீட்டு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது. இறுதிக்கட்ட விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று நீதிபதிகள் தீர்ப்பை வழங்கினார்கள்.

    அதில் சசிகலாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதும், கட்சியில் இருந்து நீக்கியதும் செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மனுதாரர்கள் தங்கள் குறைகளுக்கு அரசை அணுகி நிவாரணம் கோரலாம்.
    • கட்டட உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூட, டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஜூன் 20ந் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

    பொதுநலனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவை எதிர்த்து நில உரிமையாளர்கள் வழக்கு தொடர முடியாது.

    மனுதாரர்கள் தங்கள் குறைகளுக்கு அரசை அணுகி நிவாரணம் கோரலாம். இது சம்பந்தமான முறையீட்டை பரிசீலித்து அரசு முடிவெடுக்கலாம்.

    இதைத்தொடர்ந்து கட்டட உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விசாரணைக்கு ஆஜராகாமல் ஆர்.கே.சுரேஷ் துபாய்க்கு சென்றுவிட்டார்.
    • மனுதாரர் ஆர்.கே.சுரேஷ் வருகிற 12-ந்தேதி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்.

    சென்னை:

    வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறி, ஏராளமானோரிடம் இருந்து, 2 ஆயிரத்து 438 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக, ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த மோசடி வழக்கில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பா.ஜனதா மாநில ஓ.பி.சி., பிரிவு துணைத்தலைவரான ஆர்.கே.சுரேசுக்கு தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பினர்.

    ஆனால், விசாரணைக்கு ஆஜராகாமல் ஆர்.கே.சுரேஷ், துபாய்க்கு சென்றுவிட்டார். இதனால், அவரை தேடப்படும் நபராக அறிவித்து `லுக் அவுட்' நோட்டீசை போலீசார் பிறப்பித்தனர்.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆர்.கே.சுரேஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது. ஆர்.கே.சுரேஷ் தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வருகிற 10-ந்தேதி அவர் நாடு திரும்புவதாக கூறப்பட்டு இருந்தது.

    போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் பாபு முத்து மீரான், "இந்த மோசடி வழக்கில் இருந்து குற்றவாளிகளை காப்பாற்றுவதாகவும், இதற்காக சில முக்கிய நபர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று ரூசோ என்பவர் மூலம் ஆர்.கே.சுரேஷ் ரூ.12½ கோடியை பெற்றுள்ளார். இது போலீசாருக்கு தெரியவந்தவுடன் வெளிநாடு தப்பிச்சென்றுள்ளார்'' என்று கூறினார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் ஆர்.கே.சுரேஷ் வருகிற 12-ந்தேதி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஆர்.கே.சுரேசை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், இந்த ஐகோர்ட்டின் முன் அனுமதியை போலீசார் பெற வேண்டும். இந்த வழக்கு விசாரணையை 18-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்'' என்று உத்தரவிட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாவட்ட கலெக்டர்களுக்கு சம்மனை அனுப்ப அமலாக்கத்துறைக்கு அதிகார வரம்பு இல்லை.
    • மாநில அரசின் அனுமதியில்லாமல் அமலாக்கத்துறை மேற்கொள்ளும் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிா்ணயித்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்ட விரோதமாகப் பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதைத் தொடா்ந்து சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் மாதம் 12-ந்தேதி ஒரே நேரத்தில் 34 இடங்களில் சோதனை நடத்தினர்.

    2 நாட்களுக்கு மேல் நீடித்த இந்தச் சோதனையில் மணல் குவாரி அதிபா் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீா்வளத்துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்கம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1,024 கிராம் தங்கம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த சோதனையைத் தொடா்ந்து, 10 மாவட்ட கலெக்டர்கள், நீா்வளத்துறை முதன்மைப் பொறியாளா் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப் பணித்துறைப் பொறியாளா் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக கூறி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

    இந்த சம்மனை தொடா்ந்து நீா்வளத்துறை முதன்மைப் பொறியாளா் முத்தையா நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானாா்.

    இந்த நிலையில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு எதிராக தமிழக அரசின் பொதுப் பணித்துறைச் செயலா், நீா்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலா், திருச்சி, தஞ்சாவூா், கரூா், அரியலூா் மற்றும் வேலூா் என 5 மாவட்ட கலெக்டர்கள் சாா்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    அதில், 'குஜராத், உத்தரபிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்களில் ஆயிரக்கணக்கான கனிமவள கொள்ளை தொடா்பான வழக்குகள் நிலுவையில் உள்ளபோது, அங்கு நடவடிக்கை எடுக்காமல், தமிழகத்தில் நடவடிக்கை எடுத்து அதிகார துஷ்பிரயோகம் செய்கின்றனா்.

    மாநில நிா்வாகத்தைச் சீா்குலைக்கும் வகையில் அமலாக்கத்துறை செயல்படுவதுடன், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவளச் சட்டம் சோ்க்கப்படாத நிலையில், மாவட்ட கலெக்டர்களுக்கு சம்மனை அனுப்ப அமலாக்கத்துறைக்கு அதிகார வரம்பு இல்லை.

    மாநில அரசின் அனுமதியில்லாமல் அமலாக்கத்துறை மேற்கொள்ளும் இந்த விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும். மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தனா்.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், சுந்தா் மோகன் அமா்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கலெக்டர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞா், அமலாக்கத்துறை எந்த அறிவிப்பும் வெளியிடாமல் கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பியது சட்ட விரோதமானது எனத் தெரிவித்தாா்.

    அப்போது நீதிபதிகள், வழக்கு பதிவு செய்யப்பட்டும் தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்காததால், அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதை எப்படி சட்ட விரோதமாக கருத முடியும் என மனுதாரரிடம் கேள்வி எழுப்பினா்.

    மேலும், அமலாக்கத்துறை எந்த அடிப்படையில் நடவடிக்கை எடுத்தது? அதற்கான ஆதாரங்கள் என்ன? சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா? என அமலாக்கத்துறையினரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

    அமலாக்கத்துறை சாா்பில் ஆஜரான வழக்கறிஞர், நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. தொடா் விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை ஆவணங்களைத் திரட்ட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் தீா்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா். அதன்படி இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள்.

    மாவட்ட கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு மட்டும் நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். அதே நேரத்தில் சம்மன் அனுப்பாமல் விசாரணை நடத்துவதற்கும், ஆவணங்களை கேட்டுப் பெறுவதற்கும் எந்தவித தடையும் இல்லை என்றும் நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.

    இந்த வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளுக்கு எதிராக ஆவணங்களுடன் கூடிய ஆட்சேபனை மனுவை அமலாக்கத்துறை தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவுக்கு பதில் அளிப்பதற்கு அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. அதை ஏற்றுக்கொண்டு நீதிபதிகள் 3 வாரம் அவகாசம் வழங்கினார்கள். பின்னர் இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 19-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    அன்றைய தினம் தமிழக அரசு விளக்க மனு தாக்கல் செய்த பிறகு வழக்கின் மீதான இறுதி விசாரணைக்கான தேதி குறிப்பிடப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மனு மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்க கோரி ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பில் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டு உள்ளது.
    • ஆட்சேபம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை தள்ளி வைக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட நீக்க தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்து சென்னை ஐகோர்ட்டு கடந்த மார்ச் 28-ந்தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பில், பொதுக்குழு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளதால், 2,460 பொதுக்குழு உறுப்பினர்களும் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லுபடியாகக் கூடியவையே என நீதிபதி தெளிவுபடுத்தி இருந்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனடியாக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு, தடை விதிக்க மறுத்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

    இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பில் வக்கீல் கவுதம்சிவசங்கர் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த அக்டோபர் 5-ந்தேதி மேல்முறையீடு செய்தார்.

    இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் இந்த மனு மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்க கோரி ஓ.பன்னீர்செல்வத்தின் சார்பில் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டது.

    இதற்கு ஆட்சேபம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 'சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துவிட்டு, சிவில் கோர்ட்டில் நடைபெறும் வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதற்கு வசதியாக விசாரணையை தள்ளிவைக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்கக்கூடாது' என்று கூறப்பட்டிருந்தது.

    சுப்ரீம் கோர்ட்டில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இரு தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டனர். பிறகு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை ஏற்றனர்.

    அதன்படி அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 1991-96-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த டி.எம். செல்வகணபதி.
    • செல்வகணபதி உள்ளிட்டோர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் 2014-ம் ஆண்டு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    சென்னை:

    1991-ம் ஆண்டு முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் 1995 மற்றும் 1996-ம் ஆண்டு களில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்த டி.எம்.செல்வ கணபதி சுடுகாடுகளுக்கு கொட்டகை அமைக்கும் திட்டத்தில் 23 லட்சம் ரூபாயை அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்திருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், செல்வகணபதி, ஐஏஎஸ் அதிகாரிகள் ஜெ.டி.ஆச்சார்யலு, எம்.சத்திய மூர்த்தி உள்பட 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்ப ளித்தது. அதேசமயம், கூட்டுச் சதி குற்றச்சாட்டில் இருந்து இவர்களை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது.

    கூட்டுசதி குற்றச்சாட்டில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பிலும், சிறை தண்டனையை எதிர்த்து செல்வகணபதி உள்ளிட்டோர் தரப்பிலும் சென்னை ஐகோர்ட்டில் 2014-ம் ஆண்டில் மேல்மு றையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த வழக்குகள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை நடைபெற்றபோது, குற்றவாளிகள் தரப்பில், பணிகள் முடித்து 3 ஆண்டுகள் கழித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதன்பின்னர் ஒன்றரை ஆண்டிற்கு பிறகே அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும், சுடுகாடுகளுக்கு சுற்றுச்சுவர் இல்லாததாலும், திறந்தவெளி அமைந்திருந்ததாலும், அப்பகுதியில் உள்ளவர்களாலேயே கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.

    புகார் அளித்த வழக்கறிஞர் ரவிச்சந்திரனிடம் விசாரிக்கவில்லை என்றும், உரிய ஆய்வு நடத்தாமல் இருந்த சி.பி.ஐ. திடீரென அறிக்கை தாக்கல் செய்ததை சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதும், தண்டனை வழங்கியதும் தவறு என்பதால், தீர்ப்பை ரத்து செய்து தங்களை விடுதலை செய்ய வேண்டுமெனவும் வாதிடப்பட்டது.

    சி.பி.ஐ. தரப்பில், மத்திய அரசு திட்ட நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது, 100 சுடுகாடுகளுக்கு மேற்கூரை அமைக்க ஒப்புதல் அளித்துவிட்டு 96 சுடுகாடுகாடுகளுக்கு மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது, அதிலும் தலா 23 லட்சம் ரூபாய் தொகையை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் 17 லட்சம் ரூபாய் அளவிற்கு மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது என வாதிடப்பட்டது. எனவே சிறப்பு நீதிமன்ற தண்ட னையை உறுதிசெய்வதுடன், கூட்டுச்சதி குற்றச்சாட்டிலும் அனைவரையும் தண்டிக்க வேண்டுமென வாதிடப்பட்டது.

    அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 9-ந் தேதி முடிவடைந்தது. இதையடுத்து வழக்கு மீதான தீர்ப்பை நீதிபதி ஜெயச்சந்திரன் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.

    இந்த மேல்முறையீடு வழக்குகளில் இன்று காலை நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.

    தற்போது செல்வ கணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்து நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன.
    • எங்களின் தலையீட்டால் தான் இந்த வழக்கை முதலமைச்சர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றினார்.

    சென்னை:

    தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக இருக்கும் போது தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமைகள் நடக்கின்றன என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டினார்.

    வேங்கைவயல் பிரச்சினையில் 5 ஆயிரம் பேரை திரட்டி போராட்டம் நடத்தினோம். தலித்துகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல் நடக்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. சமீபத்தில் ஓசூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்பட்டது.

    ஆளும் தி.மு.க. கட்சிக்கு எதிராக தென் மாவட்டங்களில் தலித்துகள் மீதான வன்கொடுமைகளை கண்டித்து மதுரை, திருநெல்வேலியில் போராட்டங்களை நடத்தியுள்ளோம். தி.மு.க.வுக்கு எதிராக விடுதலை சிறுத்தை போராட்டம் நடத்தவில்லை என்று கூறுவது எங்கள் மீதான அரசியல் வெறுப்பை காட்டுகிறது.

    தி.மு.க., அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக இருக்கின்ற போது தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கின்றன. தலித்துகள் மீதான தாக்குதலுக்கு ஆளுங்கட்சி மட்டும் பொறுப்பேற்க முடியாது.

    சமீபத்தில் சென்னையில் நடந்த விடுதலை சிறுத்தை உயர்மட்ட குழு கூட்டத்தில் தி.மு.க. அரசை விமர்சிக்கும் வகையில் 2 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

    தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் மாவட்டங்களில் "சனாதன சக்திகளால் ஆதி திராவிடர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் சாதியக் கொடுமைகளை கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


    பஞ்சமி நிலங்களை தலித்துகளுக்கு வழங்கவும் எஸ்.சி.-எஸ்.டி. துணை திட்ட சட்டங்களை சட்ட சபையில் நிறைவேற்றவும் சமூக-பொருளாதார ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    நகர்புறங்களில் மட்டுமின்றி கிராமப் பகுதியிலும் போதைப் பொருள் பெருக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளோம்.

    வேங்கைவயல் விவகாரத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க விரும்புகிறார். டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்வோம் என்றும் போலீசார் கூறுவதால் தாமதம் ஏற்படுகிறது. எங்களின் தலையீட்டால் தான் இந்த வழக்கை முதலமைச்சர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றினார்.

    இதில் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என முதலமைச்சர் விரும்புகிறார். ஆனால் போலீசார் கைது செய்வதை தாமதப்படுத்துகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் தொடரும் பட்சத்தில், திராவிட மாடல், சமூக நீதி என்று பேசும் தி.மு.க.வுடன் கூட்டணி வலுவிழந்து விடுமா? என்ற கேள்விக்கு, தலித்துகளுக்கான நீதி விஷயத்தில் தி.மு.க.வும் விடுதலை சிறுத்தையும் ஒரே பக்கம் தான்.

    ஆனால் 'சிஸ்டம்' அதை அனுமதிக்கவில்லை. நாங்கள் அதை நியாயப்படுத்தவோ அல்லது ஏற்றுக் கொள்ளவோ இல்லை என்று திருமாவளவன் பதிலளித்தார்.

    பா.ஜனதாவுக்கு எதிராக தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம். ஒரு பிரச்சினைக்கு அப்பால் ஒரு வருக்கொருவர் இணைந்து செயல்பட வேண்டும். விடுதலை சிறுத்தை தனது நிலைப்பாட்டை நீர்த்து போகச் செய்வது விட்டதோ, தலித்துகளுக்காக போராடும் தன்மையை இழந்து விட்டோமோ என்று அர்த்தமில்லை என்று விளக்கமளித்தார் திருமாவளவன்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கேள்விகள் இடம் பெற்றுள்ளன.
    • அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்த தேர்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும்.

    சென்னை:

    போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கு பயிற்சி அளிக்கும் மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கேள்விகள் இடம்பெற்றுள்ளன. அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்த தேர்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி கங்கா புர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. பின்பு டிசம்பர் 6-ந்தேதிக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் அ.ம.பரமசிவம்.
    • கடந்த 2015-ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பரமசிவம் மரணம் அடைந்தார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் அ.ம.பரமசிவம்.

    இவரும், இவரது மனைவி நல்லம்மாளும் வருமானத்துக்கு அதிகமாக சுமார் ரூ.38 லட்சத்துக்கு சொத்துச் சேர்த்ததாக 1997-ம் ஆண்டு தி.மு.க., ஆட்சிக்காலத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட்டு, பரமசிவத்துக்கு 2 ஆண்டு, அவரது மனைவி நல்லம்மாளுக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2000-ம் ஆண்டு பரமசிவம் நல்லம்மாள் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கு சுமார் 23 ஆண்டுகளாக ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது. இதற்கிடையில் கடந்த 2015-ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பரமசிவம் மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கீழ் கோர்ட்டு வழங்கிய தண்டனையை உறுதி செய்தார். மேலும் இவர்கள் மீது வருமானத்துக்கு அதிகமாக 417 சதவீதம் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே இவர்களை விடுதலை செய்ய முடியாது. இந்த ஓராண்டு சிறை தண்டனையை நல்லம்மாள் அனுபவிக்க வேண்டும்.

    இதற்கு முன்பு அவர் விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தால் அந்த காலத்தை தண்டனையில் இருந்து கழிக்க வேண்டும். மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று நீதிபதி கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo