என் மலர்
நீங்கள் தேடியது "Jana Nayagan"
- விஜய் தரப்பினர் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன், ஆராய்ந்து சென்றிருக்க வேண்டும்.
- நான் விஜய்யின் ரசிகையாக, எல்லா படங்களையும் முதல் நாளே பார்த்திருக்கிறேன்.
விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்காததற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் விஜய் இதுகுறித்து இதுவரை வாய்திறந்து பேசவில்லை. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய பாஜக நிர்வாகி கஸ்தூரி, "தணிக்கை துறை ஜன நாயகன் படத்தை ரிவைஸிங் கமிட்டிக்கு அனுப்பி இருப்பதில் யாரும் தலையிட முடியாது.
விஜய் தரப்பினர் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன், ஆராய்ந்து சென்றிருக்க வேண்டும். இதனை சென்சாரிலேயே முடித்திருந்தால், இன்று திரைப்படம் வெளியிடப்பட்டிருக்கும். நான் விஜய்யின் ரசிகையாக, எல்லா படங்களையும் முதல் நாளே பார்த்திருக்கிறேன். இப்போது அவர் அமைதியாக இருக்கிறார்.
இவரை பாதிக்கப்பட்டவராக பார்ப்பதா? இல்லை செயலிழந்தவராக பார்ப்பதா? பாராலிஸ் வந்தவர் போல இருக்கிறார். யார் இறந்தாலும் பேசுவதில்லை. 41 பேர் இறந்த பிறகு, நான்கு நாள் கழித்து யோசித்து பேசுகிறார். அவர் படத்துக்கு ஒரு பிரச்னை வந்தாலும் பேசாமல் இருக்கிறார்" என்று தெரிவித்தார்.
- அரசியல் நஞ்சு, வகுப்புவாத விஷம், தனிநபர் அவதூறுகள், விவாதங்களால் நிறைந்துள்ளது.
- தணிக்கை வாரியம் இப்போது உண்மையில் செய்வது பாதுகாப்பு அல்ல, வெறும் நாடகம்தான். இது ஒரு அதிகாரச் சடங்கு.
தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாததால் விஜய்யின் ஜனநாயகன் படம் ஜனவரி 9 அன்று வெளியாகாமல் போனது. இந்த வழக்கு குறித்த விசாரணையை உயர்நீதிமன்றம் ஜான்வாரி 21 க்கு தள்ளி வைத்ததால் படம் பொங்கலுக்கு வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது. விஜய்க்கு ஆதரவாக தணிக்கை வாரியத்துக்கு எதிராக பல சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மா வெளியிட்ட எக்ஸ் பதிவில், "நடிகர் விஜய் அவர்களின் ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கைப் பிரச்சனைகள் என்ற சூழலில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், தணிக்கை வாரியம் இன்றும் பொருத்தமானதாக இருக்கிறது என்று நினைப்பது உண்மையிலேயே முட்டாள்தனமானது.
அதன் நோக்கம் எப்போதோ முடிந்துவிட்டது, ஆனால் அதன் தற்போதைய பொருத்தத்தைப் பற்றி விவாதிப்பதில் உள்ள சோம்பேறித்தனத்தால் அது இன்னும் உயிர்ப்புடன் உள்ளது.
நாம் வாழும் காலத்தில், ஒரு செல்போன் வைத்திருக்கும் 12 வயதுச் சிறுவனால் செல்போனில் படமாக்கப்பட்ட ஒரு பயங்கரவாதியின் மரணதண்டனையைப் பார்க்க முடிகிறது.
ஒரு 9 வயதுச் சிறுவன் தற்செயலாக ஆபாசப் படங்களைப் பார்க்க நேரிடுகிறது. இவை அனைத்தும் உடனடியாக, அநாமதேயமாக, எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் கிடைக்கின்றன.
அதே நேரத்தில், செய்தி சேனல்கள் முதல் யூடியூபர்கள் வரை, மற்ற செயலிகள் வரை சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஆபாசமான மொழியில் பேசுகிறார்கள்.
சினிமா ஒரு சக்திவாய்ந்த ஊடகம் என்ற அந்தக் கால நம்பிக்கையை நீங்கள் மேற்கோள் காட்டினால், சமூக ஊடகங்களுக்கு சினிமாவை விட அதிக சென்றடைதல் சக்தி உள்ளது என்ற உண்மையைப் புறக்கணிக்காதீர்கள்.
அது அரசியல் நஞ்சு, வகுப்புவாத விஷம், தனிநபர் அவதூறுகள், விவாதங்கள் என்ற பெயரில் நேரலையில், தணிக்கையற்ற கூச்சல் சண்டைகள் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது.
இந்த யதார்த்தத்தில், ஒரு திரைப்படத்தில் ஒரு வார்த்தையை நீக்குவது, ஒரு காட்சியைத் திருத்துவது அல்லது சிகரெட்டை மங்கலாக்குவது ஆகியவை சமூகத்தைப் பாதுகாக்கும் என்று தணிக்கை வாரியம் நம்புவது ஒரு கேலிக்கூத்து.
தணிக்கை வாரியம், படங்கள் அரிதாக இருந்த; அணுகல் குறைவாக இருந்த; அரசு, ஊடகங்களைக் கட்டுப்படுத்திய ஒரு காலத்தில் பிறந்தது.
திரையரங்குகள் மக்கள் கூடும் இடங்களாக இருந்தன. செய்தித்தாள்களுக்கு ஆசிரியர்கள் இருந்தனர். தொலைக்காட்சிகளுக்கு நிகழ்ச்சி நிரல்கள் இருந்தன. அப்போது கட்டுப்பாடு என்பது அர்த்தமுள்ளதாக இருந்தது.
ஆனால் இன்று, எந்த விதமான கட்டுப்பாடும் சாத்தியமற்றது, ஏனென்றால் மக்கள் எதைப் பார்க்க வேண்டும் அல்லது பார்க்கக்கூடாது என்பதை இனி யாராலும் தீர்மானிக்க முடியாது.
இன்றைய காலகட்டத்தில், தணிக்கை என்பது வெளிப்பாட்டைத் தடுப்பதில்லை. அது பார்வையாளர்களை அவமதிப்பது மட்டுமே.
நம்மை யார் ஆள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் புத்திசாலித்தனம் நமக்கு இருக்கிறது, ஆனால் நாம் எதைப் பார்க்க வேண்டும் அல்லது கேட்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் புத்திசாலித்தனம் இல்லையா?
தணிக்கை வாரியம் இப்போது உண்மையில் செய்வது பாதுகாப்பு அல்ல, வெறும் நாடகம்தான். இது ஒரு அதிகாரச் சடங்கு.
அங்கு கத்தரிக்கோல் சிந்தனைக்கு மாற்றாகிறது, மேலும் தார்மீகப் பொறுப்பு என்ற பாசாங்கு போர்வையில் வலம் வருகிறது.
சமூக ஊடகங்களில் வன்முறைக் காட்சிகளைத் தாராளமாகப் பார்க்கும் அதே சமூகம், ஒரு திரைப்படம் திரையரங்கில் அதைக் காட்டும்போது திடீரென்று கவலை கொள்கிறது.
இந்த இரட்டை வேடம் ஆபத்தானது.தணிக்கை என்பது மக்கள் என்றென்றும் குழந்தைகளாகவே இருப்பார்கள் என்று கருதுகிறது.
சினிமா என்பது பாடங்கள் கற்பிக்கப்படும் ஒரு வகுப்பறை அல்ல. அவை பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட கண்ணாடிகள் மற்றும் கருத்துக்கள்.
அவற்றைத் திருத்துவதோ அல்லது வெட்டி நீக்குவதோ அதிகாரிகளின் வேலை அல்ல, மாறாக குடிமக்கள் தாங்களாகவே முடிவு செய்வார்கள் என்று அவர்களை நம்புவதுதான் அவர்களின் வேலை.
இதுவே அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் முக்கிய அம்சமாகும்.
உலகம் ஏற்கனவே தணிகையில்லாத மற்றும் மேற்பார்வையற்ற பல தளங்களுக்கு நகர்ந்துவிட்டது.
எனவே, தாங்கள் காலாவதியாகிவிட்டோம் என்பதை ஒப்புக்கொள்ள அதிகாரிகளுக்குத் துணிச்சல் இருக்கிறதா, அதைவிட முக்கியமாக, ஒரு திரைப்படத் துறையாகிய நாம் கூட்டாக அவர்களைக் கேள்வி கேட்கும் மன உறுதி நமக்கு இருக்கிறதா என்பதுதான் வேதனையான கேள்வி.
எனவே, ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தின்போது மட்டும் இந்தத் விஷயத்தை அவ்வப்போது எழுப்புவதற்குப் பதிலாக, தணிக்கை வாரியத்தை உருவாக்கிய அந்த குறிப்பிட்ட சிந்தனை அமைப்புடன் தான் போராட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- கருத்துரிமைக்கு எதிரானது என மற்றவர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
- ஆனால் சம்மந்தபட்ட கதாநாயகன் வாயை திறக்காமல் இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது.
விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்காததற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சம்மந்தப்பட்ட ஜன நாயகன் வாயை திறக்காமல் மவுனமாக இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சண்முகம் கூறியதாவது:-
மத்திய தணிக்கை குழுவிற்கு படத்தை பார்த்து சான்றிதழ் வழங்குவதை விட வேறு வேலை கிடையாது. தணிக்கை குழுவில் U/A சான்றிதழ் கொடுக்கலாம் என 4 பேர் சொல்லும்போது, ஒருவர் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் நீதிமன்றம் செல்லப்பட்டுள்ளது.
பெரும்பான்மையினர் தெரிவிக்கும் சான்றிதழ் கொடுப்பது வழக்கமாக இருந்துள்ளது. இப்படி நடந்து கொண்டால் சினிமாத்துறையால் பிழைக்க முடியுமா? என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறேன்.
அரசியல் சூழ்நிலையில் மத்திய அரசு இதுபோன்ற நிர்ப்பந்தங்களை கொடுத்து விஜயை வளைத்து விடலாம் என்ற நோக்கத்தோடு இத்தகைய தொந்தரவுகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்களா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டியிருக்கிறது.
இப்படி தொந்தரவு கொடுக்கிறார்கள். அநீதி என்பதெல்லாம் தெரிந்து கொண்டும் ஜன நாயகன் வாயே திறக்கவில்லை. கருத்துரிமைக்கு எதிரானது என மற்றவர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சம்மந்தபட்ட கதாநாயகன் வாயை திறக்காமல் இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது.
மத்திய அரசின் தூண்டுதல் பேரில்தான் தணிக்கை குழு இப்படிப்பட்ட நெருக்கடி கொடுக்கிறார்கள் என்று சொன்னால் தனக்கு சங்கடமான, பின் விளைவுகளை ஏற்படுத்துமே என்ற காரணத்தினால் அவர் வாய் திறக்காமல் இருக்கிறாரா? என்பது தெரியவில்லை.
இவ்வாறு சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
- இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.
விஜய் நடிப்பில் வெளியான படம் 'தெறி'. அட்லி இயக்கத்தில் உருவான இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படம் இந்தியிலும் வருண் தவான் நடிப்பில் பேபி ஜான் என்ற பெயரில் கடந்த வருடம் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில் விரைவில் தமிழில் தெறி படம் பொங்கலை ஒட்டி ஜனவரி 15 அன்று ரீரிலீஸ் ஆக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படதிற்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டதால் அப்படம் குறித்தபடி ஜனவரி 9, நேற்று வெளியாகாதது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.
இந்நிலையில் தெறி படம் பொங்கலை ஒட்டி ரீரிலீஸ் ஆவது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜன நாயகனுக்கு சென்சார் சான்றிதழ் வழக்கும் வழக்கு விசாரணை ஜனவரி 21 க்கு நேற்று தள்ளி வைக்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் இன்று உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.
- தணிக்கை குழு சான்றிதழ் விவகாரம் தொடர்பாக ஜனநாயகன் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆகவில்லை.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படம் நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தணிக்கை குழு சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டதால் படம் குறிப்பிட்ட நாளில் ரிலீஸ் ஆகவில்லை.
தணிக்கை குழுவுக்கு எதிராக ஜன நாயகன் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தனி நீதிபதி, சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து தணிக்கை குழு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு தடைவிதித்து, வழக்கை 21-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதனால் 21-ந்தேதி வரை படம் ரிலீஸ் ஆகுமா? என்பது சந்தேகம்தான். படக்குழு தற்போது உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
இதற்கிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பராசக்தி படம் இன்று ரிலீஸ் ஆனது. இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் ஜனநாயகன் விவகாரம் குறித்து சிவகார்த்திகேயனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிவகார்த்திக்கேயன் "ஒரு ரசிகரின் கண்ணோட்டத்திற்கு அப்பாற்பட்டு, இந்தத் திரைப்படம் திரையுலகிற்கும் திரையரங்குகளுக்கும் மிகவும் முக்கியமானது. இது எப்போது வெளியானாலும், அது அனைவருக்கும் ஒரு கொண்டாட்டமாக இருக்கும்" என்றார்.
- ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படவில்லை
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தணிக்கை துறையை கண்டித்து பதிவிட்டிருந்தார்.
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்' நேற்று உலகம் முழுவதும் வெளியாக இருந்த நிலையில் தணிக்கை சான்று வழங்கப்படாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படாததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தணிக்கை துறையை கண்டித்து பதிவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த சீமான், "தணிக்கை துறை விருப்பு வெறுப்புக்கு ஏற்றமாதிரி செயல்படுகிறது. நான் நடித்த அடங்காதே படத்தில் நான் பேசிய வசனங்களை நீக்கி விட்டார்கள். அந்த படத்தில் 500 இடங்களுக்கு மேல் வெட்டி விட்டார்கள்.
திரையில வர்ற ஜனநாயகன் பத்தி பேசிட்டு இருக்கீங்க'.. தரையில நான் ஒரு ஜனநாயகன் இருக்கேன். என்ன கண்டுக்க மாட்ரீங்க...
ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக உடனே குரல் கொடுக்கும் முதலமைச்சர் ஏன் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு குரல் கொடுப்பதில்லை" என்று தெரிவித்தார்.
- தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான படம் 'தெறி'. அட்லி இயக்கத்தில் உருவான இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படம் இந்தியிலும் வருண் தவான் நடிப்பில் பேபி ஜான் என்ற பெயரில் கடந்த வருடம் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில் விரைவில் தமிழில் தெறி படம் ரீரிலீஸ் ஆக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளார்.
ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படதிற்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டதால் அப்படம் குறித்தபடி ஜனவரி 9, நேற்று வெளியாகாதது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.
இந்நிலையில் தெறி ரீரிலீஸ் செய்தி ஆறுதலாக அமைந்துள்ளது. தெறி படம் பொங்கலை ஒட்டி ரீரிலீஸ் ஆனால் நன்றாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜன நாயகனுக்கு சென்சார் சான்றிதழ் வழக்கும் வழக்கு விசாரணை ஜனவரி 21 க்கு நேற்று தள்ளி வைக்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் இன்று உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.
- படத்தை தணிக்கை செய்வது தொடர்பாக தணிக்கை வாரியத்திற்கு கால நிர்ணயம் செய்ய வேண்டும்
- தணிக்கைக்கு செல்லும் படத்தின் காட்சிகளை திருத்தவும் நீக்கவும் வெளிப்படைத்தன்மை அவசியம்
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்' நேற்று உலகம் முழுவதும் வெளியாக இருந்த நிலையில் தணிக்கை சான்று வழங்கப்படாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படாததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜன நாயகன் தணிக்கை விவகாரம் தொடர்பாக நடிகரும் மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "பகுத்தறிவால் வழிநடத்தப்படும் இந்திய அரசியலமைப்பு கருத்து சுதந்திரத்தை உத்தரவாதம் செய்கிறது.
இந்த தருணம் எந்த ஒரு படத்தையும் விட பெரியது, இது அரசியலமைப்பு ஜனநாயகத்தில் கலைக்கும் கலைஞர்களுக்கும் நாம் அளிக்கும் இடத்தை பிரதிபலிக்கிறது.
சினிமா என்பது ஒரு தனிநபரின் உழைப்பு மட்டுமல்ல, நியாயமான மற்றும் சரியான நேரத்தில் செயல்படும் ஒரு திட்டத்தைச் சார்ந்து வாழும் எழுத்தாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்கள் மற்றும் சிறு வணிகங்களின் கூட்டு முயற்சியாகும்.
தெளிவு இல்லாதபோது, படைப்பாற்றல் தடைபடுகிறது, பொருளாதார செயல்பாடு சீர்குலைகிறது. மேலும் பொது நம்பிக்கை பலவீனமடைகிறது.
தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் சினிமா ஆர்வலர்கள் கலைகளுக்கான ஆர்வம், பகுத்தறிவு மற்றும் முதிர்ச்சியைக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் மரியாதைக்கு தகுதியானவர்கள்.
இப்போது தேவைப்படுவது, தணிக்கை சான்றிதழுக்கான வரையறுக்கப்பட்ட காலக்கெடு, வெளிப்படையான மதிப்பீடு மற்றும் ஒவ்வொரு பரிந்துரைக்கப்பட்ட வெட்டு அல்லது திருத்தத்திற்கும் எழுதப்பட்ட, நியாயமான நியாயப்படுத்தலுடன் கூடிய சான்றிதழ் செயல்முறைகளை கொள்கை ரீதியான மறுபரிசீலனை செய்வதாகும்.
முழு திரைப்படத் துறையும் ஒன்றிணைந்து நமது அரசு நிறுவனங்களுடன் அர்த்தமுள்ள, ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபடுவதற்கான தருணம் இது. இத்தகைய சீர்திருத்தம் படைப்பு சுதந்திரத்தைப் பாதுகாக்கும், அரசியலமைப்பு மதிப்புகளை நிலைநிறுத்தும், அதன் கலைஞர்கள் மற்றும் அதன் மக்கள் மீது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தும்" என்று தெரிவித்தார்.
- 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்று வழங்கப்படாததால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- தணிக்கைத்துறையை விமர்சித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார்.
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்' நேற்று உலகம் முழுவதும் வெளியாக இருந்த நிலையில் தணிக்கை சான்று வழங்கப்படாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படாததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜன நாயகன் தணிக்கை விவகாரம் தொடர்பாக மத்திய தணிக்கைத்துறையை விமர்சித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "ஜனநாயகன் திரைப்படத்தின் மீது நம் தணிக்கைத்துறை நிகழ்த்தியிருப்பது அப்பட்டமான அநீதி தான். ஒரு படைப்பாளி என்கிற முறையில் இந்த அநீதியை எதிர்ப்பதன் மூலம் நம் ஜனநாயகத்தின் மீதும் நம் படைப்பு சுதந்திரத்தின் மீதும் வேகமாக படரும் பேரச்சத்தை துடைத்தெறிய பெருங்குரலெழுப்புவோம்" என்று பதிவிட்டுள்ளார்.
- 'ஜன நாயகன்' படம் தொடர்பாக வருகிற 21-ந்தேதி கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.
- மேல்முறையீட்டின் போது தங்களது தரப்பு பாதிப்புகளை எடுத்து கூறுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. 'ஜன நாயகன்' படம் தொடர்பாக வருகிற 21-ந்தேதி கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. இதற்கிடையில் பொங்கல் விடுமுறை வசூலை குறிவைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலும் படத்தை பொங்கலுக்குள் ரிலீஸ் செய்வதற்கான நடவடிக்கைகளை படக்குழுவினர் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
'ஜன நாயகன்' படத்துக்கான தணிக்கை தொடர்பாக மறு விசாரணை குழுவினருக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அவர்கள் உரிய பதில் அளிக்காத நிலையில் சட்ட ரீதியாக அதனை எதிர்கொண்டு படத்தை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது அடுத்த கட்ட ஆயத்த பணிகளை பட குழுவினர் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து படக்குழுவினர் கூறும் போது, பொங்கலுக்கு விஜயின் 'ஜன நாயகன்' படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் . விநியோகஸ்தர்கள் மற்றும் பட அதிபர்களின் நிலையை கருத்தில் கொண்டும், தொழில் மற்றும் வியாபார நஷ்டங்களை தவிர்க்கும் வகையிலும் 'ஜன நாயகன்' படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டில் தங்களது தரப்பு பாதிப்புகளை படக்குழு விரிவாக கூறியுள்ளது.
- ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை சான்று வழங்கும் முறையில் அரசியல் தலையீடுகளும், விளையாட்டும் வெளிப்பட்டு வருவதை மக்கள் எளிதில் உணர முடியும்.
- கலைத்துறையில் கருத்துக்களை அச்சமின்றி முன் வைக்கும் ஜனநாயக பண்புகள் மதிக்கப்பட வேண்டும்.
சென்னை:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கேவிஎன் புரோடெக்சன் நிகழ்கால அரசியல் போக்குகளை எதிரொலிக்கும் "ஜனநாயகன்" என்ற பெயரில் திரைப்படம் தயாரித்துள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட தேதி நிர்ணயிக்கப்பட்ட, இந்தத் திரைப்படம் கடந்த 2025 டிசம்பர் 15 தேதி தணிக்கை வாரியத்தின் ஒப்புதலுக்காக வழங்கப்பட்டுள்ளது.
தணிக்கை வாரியத்தின் மூலம் 16 பேர் படம் பார்த்து, பரிசீலித்ததன் அடிப்படையில் 25க்கும் மேற்பட்ட திருத்தங்கள் செய்யுமாறு பரிந்துரை செய்யப்பட்டு, படத்தை 16 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கலாம் என சான்று வழங்க முடிவு செய்துள்ளது.
தணிக்கைக் குழுவின் முடிவை எதிர்த்து, படத்தயாரிப்பாளர்கள் மீண்டும் சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளனர். சென்னை உயர்நீதி மன்றம் இது தொடர்பான விசாரணை நடத்தி வருகிறது.
ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை சான்று வழங்கும் முறையில் அரசியல் தலையீடுகளும், விளையாட்டும் வெளிப்பட்டு வருவதை மக்கள் எளிதில் உணர முடியும்.
கலைத்துறையில் கருத்துக்களை அச்சமின்றி முன் வைக்கும் ஜனநாயக பண்புகள் மதிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜனநாயகன் திரைப்படத்தை விரைந்து வெளியிட அனுமதிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, திரைப்படத் தணிக்கைக் குழுவை வலிறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
- மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது
- மத்திய தணிக்கைத்துறை சுதந்திரமாக செயல்படவும் குரலெழுப்புவோம்
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்' நேற்று உலகம் முழுவதும் வெளியாக இருந்த நிலையில் தணிக்கை சான்று வழங்கப்படாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்கப்படாததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜன நாயகன் தணிக்கை விவகாரம் தொடர்பாக மத்திய தணிக்கைத்துறையை விமர்சித்து இயக்குனர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது. தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அப்பட்டமாகவே தெரிகிறது.
அதே போல, 'பராசக்தி' திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் போன்றே, என் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களுக்கும், நீலம் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்களுக்கும் கொடுக்கப்பட்டதை பலமுறை பகிர்ந்திருக்கிறேன். ஆனால், ஜனநாயகன் படத்திற்கு நிகழ்ந்திருப்பதென்பது, தணிக்கைத்துறை தவறான வழிகாட்டுதலுக்குள் சிக்கியிருப்பதைக் காட்டுகிறது.
மேலும், மாற்றுக்குரல்கள் வராமல் தடுப்பதற்கான வேலையை மிகத்தீவிரமாகக் கடைபிடிக்கின்ற இது போன்ற மோசமான போக்கை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். படைப்புச்சுதந்திரம் பாதுகாக்கவும், வரும் காலங்களில் மத்திய தணிக்கைத்துறை சுதந்திரமாக செயல்படவும் குரலெழுப்புவோம்" என்று தெரிவித்துள்ளார்.






