search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Censor Board"

    மெரினா புரட்சி பட விவகாரத்தில் 7 நாட்களுக்குள் முடிவெடுக்க தணிக்கைத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #MarinaPuratchi #CensorBoard
    2017 ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தன்னெழுச்சியாக 8 நாட்கள் நடத்திய போராட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட 'மெரினா புரட்சி' திரைப்படத்திற்கு 100 நாட்களாகியும் தணிக்கை தரப்படவில்லை. காரணம் சொல்லாமல் 2 முறை நிராகரித்துள்ளனர். 

    வரலாற்றுச் சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக நாச்சியாள் பிலிம்ஸ் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்கள். மெரினா புரட்சி திரைப்படத்தை பொங்கலுக்குள் தணிக்கை முடித்து திரையிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்கள். 

    இந்த சூழ்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், 



    1. இந்த தீர்ப்பு நகல் கிடைத்த 2 நாட்களுக்குள் படத்தின் இயக்குனர் எம்.எஸ்.ராஜ் தன்னிடமுள்ள ஆதாரங்கள் விளக்கங்கள், நியாயங்களுடன் ரிவைசிங் கமிட்டி முன்பு ஆஜராக வேண்டும்.

    2. அதிலிருந்து 7 நாட்களுக்குள் தணிக்கைத்துறை, படத்திலுள்ள நல்ல நோக்கங்கள் மற்றும் அதன் தன்மை அடிப்படையில்  முடிவெடுக்க வேண்டும்.

    என உத்தரவிட்டுள்ளார். இதற்கு இப்படத்தின் இயக்குனர் எம்.எஸ்.ராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.
    தமிழ் சினிமாவில், கதாநாயகன், வில்லன் என்று பெயர் பெற்ற நடிகர் அரவிந்த் சாமி, சென்சாரில் அரசியல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். #ArvindSwami
    மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘தளபதி’ படம் மூலம் அறிமுகமானவர் அரவிந்த் சாமி. ரோஜா, பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்தவர் தற்போது ரீ எண்ட்ரியில் வில்லனாக நடித்து வருகிறார். பத்திரிகை நடத்திய மாநாட்டில் நடிகர் அரவிந்த் சாமி கலந்துகொண்டார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

    கேள்வி:- மணிரத்னம் படங்களில் அதிகம் நடித்தது ஏன்?

    பதில் நான் நடிகனாக வேண்டும் என எப்போதும் நினைத்ததில்லை. அது தற்செயலாக நடந்த விபத்து. பணம் கிடைக்கிறதே என விளம்பரப் படங்களில் நடித்து வந்தேன். அதை பார்த்து தளபதி படத்தில் நடிக்க மணிரத்னம் என்னை அழைத்தார். எனக்கு என்ன வரும், வராது என்பது மணிரத்னத்திற்கு நன்றாக தெரியும். எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவருடைய படப்பிடிப்பின் போது தளத்தில் ஒரு ஒழுங்கு இருக்கும். அதன் மூலம் தான் நான் நடிக்க கற்றுக்கொண்டேன்.

    கேள்வி:- இன்றைய சினிமாவுக்கு இருக்கும் முக்கிய பிரச்சினை என்ன?

    பதில்:- சென்சார் போர்டு என்ற அமைப்பு இப்போதும் இருக்கிறது. ஆனால் அவர்கள் வகுத்துள்ள வரையறைகள் இன்றைய கால சூழலுக்கு ஏற்புடையதாக இல்லை.

    தமிழ் சினிமாவில் ஒரு ஆணும் பெண்ணும் முத்தம் கொடுக்கும் காட்சியை வைத்தால் யூ சான்றிதழ் கிடைக்காது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய படங்களுக்கு யூ சான்று கிடையாது. அதேபோல அன்பை வெளிப்படுத்தும் முத்தக்காட்சிக்கும் அனுமதி கிடையாது.



    சென்சாரில் அரசியல் இருக்கிறது. இங்கே நிறைய கோபக்கார கும்பல் இருக்கிறது. நாங்கள் அவர்களுடைய உணர்வுகளை புண்படுத்த மாட்டோம் என அவர்களுக்கு தெரிய வேண்டும். ஒரு நடிகனின் வேலை மற்றவர்களை காயப்படுத்துவது அல்ல, அவர்களை சிந்திக்க வைப்பது. சினிமா வேலை போதிப்பது அல்ல. மக்களை சந்தோ‌ஷப்படுத்துவது. ஆனால் அதேநேரம், படம் பார்த்த ஒருவர், தனது வீட்டிற்கு என்ன எடுத்து செல்கிறார் என்பதும் முக்கியம். அதேபோன்ற சர்ச்சைக்குரிய படங்களில் நான் நடிக்க மாட்டேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×