search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arjun"

    • மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார்.
    • படத்தின் செகண்ட் லுக் தற்பொழுது வெளியாகியுள்ளது.

    மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித்தின் 62 - வது ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கிறார்கள். நடிகைகள் ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின் வடமாநிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது.

    இந்த படத்தில் அஜித்குமார் 'டூப்' இல்லாமல் துணிச்சலாக நடித்து இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது.

    இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் கடந்த வாரம் வெளியிட்டனர். விடாமுயற்சி படத்தின் தலைப்பிற்கு கீழ் திருவினையாக்கும் என பதிவிட்ட போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது.

    அதைத்தொடர்ந்துபடத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது.இதில் ஒரு போஸ்டரில் கார் சேசிங் காட்சி அமைந்துள்ளது. மற்றொரு போஸ்டரில் அஜித் கையில் பெரிய ஷாட்கன்னுடன் நெஞ்சில் கைவைத்தப்படி நிற்கிறார்.

    போஸ்டரில் எஃபர்ட் நெவர் ஃபையில் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. கண்டிப்பாக படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மிரட்டலான காட்சிகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
    • இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

    மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் 'விடாமுயற்சி' என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் கதாநாயகியாக திரிஷா மற்றும் அர்ஜூன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் உள்பட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர் பைஜானில் நடந்து வருகிறது.

    முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தாமதமானதால் அஜித் 'குட் பேட் அக்லி' என்ற படத்தில் நடிக்க தொடங்கினார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. இதையொட்டி விடாமுயற்சி படப்பிடிப்பு பற்றி ரசிகர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

    இந்நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. கடந்த வாரம் அஜர் பைஜானில் தொடங்கிய படத்தின் படப்பிடிப்பில் அஜித் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. தொடர்ந்து கார் சேசிங் காட்சிகள் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. இந்த காட்சியில் அஜித் ஓட்டி வந்த கார் அந்தரத்தில் பறப்பது போல் மிரட்டலான காட்சிகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

    அடுத்த கட்டமாக நேற்று மாலை விடாமுயற்சி படத்தில் அஜித் முதல் தோற்றம் வெளியானது. இதில் அஜர்பைஜான் சாலையில் தனியாக பையுடன் கூலிங்கிளாஸ் அணிந்தபடி நடந்து வரும் காட்சிகள் அஜித் ரசிகர்களுக்கு உற்சாக விருந்தாக அமைந்துள்ளது.

    அஜர் பைஜானில் சில நாட்களும், பின்னர் இறுதியாக இந்தியாவில் சில நாட்களும் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். தற்போது அஜர்பைஜானில் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் முதல் 15 மணி நேரம் வரை படப்பிடிப்பு நடக்கிறது. இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

    படத்தில் திரிஷாவும், அஜித்தும் கணவன்-மனைவியாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இரண்டாம் கட்டப்பிடிப்பில் ஜூலை 5-க்கும் மேல் படக்குழுவினருடன் இணையுள்ளார் திரிஷா. படப்பிடிப்பு பணிகள் ஆகஸ்டு 2-ம் வாரத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விடாமுயற்சி படத்தில் அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
    • இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

    நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

    அனிருத் இசையமைக்கும் இந்த படம் தொடர்பாக டைட்டில் லுக் தவிர வேறு எந்தவிதமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கியது. பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது.

    இந்த நிலையில், விடாமுயற்சி படம் தொடர்பான புது அப்டேட்-ஐ நடிகர் அர்ஜூன் கொடுத்துள்ளார். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து பேசிய அவர், இந்த படம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இன்னும் 20-இல் இருந்து 30 சதவீத படப்பிடிப்பு மட்டுமே பாக்கி உள்ளது என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் அஜர்பைஜானில் இம்மாதம் துவங்க இருக்கிறது. இத்துடன் படப்பிடிப்பு பணிகள் முழுமை பெற்றுவிடும் என்று தெரிவித்தார். விரைவில் இந்த படம் குறித்த அப்டேட் வெளியாகுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

    • ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் திருமணம் நடந்துள்ளது.
    • இன்று இவர்களுடைய ரிசப்ஷன் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.

    'ஆக்ஷன் கிங்' என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன், நடிகர் உமாபதிக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகர் அர்ஜுனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோவிலில் நண்பர்கள், உறவினர்கள் சூழ எளிமையாக இந்த நிகழ்வு நடந்தது.

    இந்நிலையில், நேற்று, ஐஸ்வர்யா மற்றும் உமாபதியின் திருமணம் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    இதனையடுத்து திருமணத்தின் பொழுது எடுத்த புகைப்படங்களை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    இன்று இவர்களுடைய ரிசப்ஷன் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அதில் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இவருடைய மகன் உமாபதி ராமையாவும் திரைத்துறையில் நடிகராக இயக்குனராகவும் வலம் வருகிறார். நடிகர் அர்ஜூனின் மகளை விரைவில் மணம் முடிக்கவுள்ளார்.
    • மாணிக்க வித்யா இந்த படத்தை இயக்கியுள்ளார். மோசஸ் இந்த படத்திற்கு இசையமைக்க எஸ் என் வெங்கட் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.

    பிரபல நடிகர் தம்பி ராமையா, நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அந்த வகையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் தம்பி ராமையா ஒரு இயக்குனராகவும் வலம் வருகிறார். இவருடைய மகன் உமாபதி ராமையாவும் திரைத்துறையில் நடிகராக இயக்குனராகவும் வலம் வருகிறார். நடிகர் அர்ஜூனின் மகளை விரைவில் மணம் முடிக்கவுள்ளார்.

    அதன்படி ஏற்கனவே அதாகப்பட்டது மகாஜனங்களை , மணியார் குடும்பம் போன்ற படங்களில் நடித்துள்ள உமாபதி ராமையா 'ராஜகிளி' என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்பொழுது உமாபதி ராமையா, 'பித்தல மாத்தி' எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதில் உமாபதி ராமையாவுடன் தம்பி ராமையா, பால சரவணன், தேவதர்ஷினி, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இந்த படம் காமெடி கலந்த கதைகளத்தில் உருவாகியுள்ளது. மாணிக்க வித்யா இந்த படத்தை இயக்கியுள்ளார். மோசஸ் இந்த படத்திற்கு இசையமைக்க எஸ் என் வெங்கட் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படம் ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தயாராகி உள்ளது.

    இந்நிலையில் இப்படம் வருகின்ற ஜூன் 14 உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குழு தற்பொழுது ப்ரோமோஷன் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். அது தொடர்பாக பசத்தில் நடித்த பால சரவணன் படத்தில் நடித்த அவனுபவத்தை பற்றி பேசி ஒரு வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன், நடிகர் உமாபதிக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
    • ஐஸ்வர்யாவும் விஷாலுடன் 'பட்டத்து யானை' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.

    'ஆக்ஷன் கிங்' என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன், நடிகர் உமாபதிக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகர் அர்ஜுனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோவிலில் நண்பர்கள், உறவினர்கள் சூழ எளிமையாக இந்த நிகழ்வு நடந்தது.

    அர்ஜுன் தொகுத்து வழங்கிய 'சர்வைவர்' நிகழ்ச்சி மூலம் ஐஸ்வர்யாவுக்கு அறிமுகமானவர் உமாபதி. நிகழ்ச்சியில் உமாபதியின் நற்குணம் அர்ஜுனுக்குப் பிடித்துப் போக தனது வீட்டு மாப்பிளையாக பச்சைக் கொடி காட்டினார்.

    உமாபதி அதாகப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், தண்ணி வண்டி, சேரன் இயக்கிய திருமணம் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    ஐஸ்வர்யாவும் விஷாலுடன் 'பட்டத்து யானை' உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிக்கக் கூடாது என தம்பி ராமையா குடும்பம் கேட்டுக் கொண்டதாக தகவல் பரவியது. ஆனால், இது குறித்து ஐஸ்வர்யா இன்னும் தெளிவுப்படுத்தவில்லை. இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்து ஆறு மாதங்களான நிலையில் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

    வரும் ஜூன் 10-ம் தேதி கிருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனின் தோட்டத்தில் தான் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதி திருமணம் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலருக்கும் அழைப்பிதழ் வைக்கும் பணியை அர்ஜுன் ஆரம்பித்துள்ளார்.

    தனது மகள் திருமணத்துக்காக அழைப்பிதழ் வைக்கும் பணியை ஆரம்பித்துள்ள நடிகர் அர்ஜுன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு குடும்பத்துடன் சென்று அழைப்பு விடுத்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. தம்பி ராமைய்யாவும் தனது குடும்பத்துடன் உடன் சென்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • அதைத்தொடர்ந்து அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

    துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். நீண்டநாட்களாக கிடப்பில் இருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதமாக, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க, ரெஜினா, அர்ஜூன், ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    கடந்த மாதம் படத்தில் அஜித் செய்த ஸ்டண்ட் காட்சி ஒன்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.

    அதைத்தொடர்ந்து அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இது அஜித் நடிக்கும் 63-வது திரைப்படமாகும். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

    இத்திரைப்படத்தை மார்க் ஆண்டனி படத்தின் மூலம் பிரபலம் அடைந்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். தெலுங்கில் பிரபலமாக இருக்கும் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் நிறுவனம் இத்திரைப்டத்தை தயாரிக்கிறது. இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது. இருப்பினும் இந்த படப்பிடிப்பில் அஜித் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அஜித்தின் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
    • குட் பேட் அக்லி திரைப்படம் 2025-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும்.

    விடாமுயற்சியை அடுத்து நடிகர் அஜித்தின் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

    இப்படத்திற்கு 'குட் பேட் அக்லி' என பெயரிட்டுள்ளது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர்.

    படம் 2025-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதியை படக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர்.

    அதன்படி, குட் பேட் அக்லி திரைப்படம் வரும் 10ம் தேதி ஐதராபாத்தில் தொடங்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்
    • இப்படத்திற்கு 'குட் பேட் அக்லி' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது

    அஜித்தின் அடுத்த படமான ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு 'குட் பேட் அக்லி' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். படம் 2025-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிடப்படுகிறது.

    இந்நிலையில், நடிகர் அஜித்குமாரை சந்தித்து இப்படத்தின் தயாரிப்பாளர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்த படமான குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.
    • படம் 2025-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.

    பிரபல நடிகர் அஜித் - திரிஷா நடிக்கும் புதிய படம் விடாமுயற்சி. இதனை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜூன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார்.

    அனிரூத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. தொடர்ந்து 3 மாதம் அங்கு ஷூட்டிங் நடந்தது. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. சில வாரங்களுக்கு முன் வெளியாகிய அஜித் கார் ஓட்டும் ஸ்டண்ட் காட்சி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது.

    இந்நிலையில்  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்த படமான குட் பேட் அக்லி படத்தில் அஜித்   நடிக்கவுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். படம் 2025-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியது.

    மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் படத்தின் கதாநாயகியான ஸ்ரீ லீலா 'குட் பேட் அக்லி' படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை உண்டாக்கியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மே 1 ஆம் தேதி அஜித் குமார் 53- வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.
    • 2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், மகத், என பலர் நடித்து வெளியான திரைப்படம் மங்காத்தா.

    வெங்கட் பிரபு தற்பொழுது விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தை இயக்கி வருகிறார். கோட் திரைப்படம் இந்தாண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான விசில் போடு சில நாட்களுக்கு முன் வெளியாகி மிக வைரலானது.

    வெங்கட் பிரபு இயக்கும் படங்கள் அனைத்தும் காமெடிக் கலந்து வித்தியாசமான கதைக்களத்துடன் இருக்கும். அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு அஜித், திரிஷா, அர்ஜூன், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், மகத், என பலர் நடித்து வெளியான திரைப்படம் மங்காத்தா.

    இன்ஸ்பக்டர் விநாயக் மகாதேவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் அஜித் மிகவும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்திருப்பார். ஒரு கடத்தல்காரனை தப்பிக்க விட்டதற்காக அவரை ச்ஸ்பண்ட் செய்து விடுவார்கள். அப்பொழுது அவர் ஒரு கும்பலை சந்திக்கிறார். அவர்கள் 500 கோடி ரூபாய் பணத்தொகையை கடத்த திட்டம் போடுகிறார்கள். அதற்கு அஜித் உதவுவதாக கூறுவார் அதற்கு அடுத்து என்ன நடந்தது என்பதே கதைக்களம்.

    இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். படத்தின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கும். படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்டண்ட் காட்சிகளும், அஜித் ஒற்றை வீலில் பைக் ஓட்டும் காட்சிகள் மக்களை பிரமிக்க வைத்தது.

    மே 1 ஆம் தேதி அஜித் குமார் 53- வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அதை மேலும் சிறப்பிக்கும் வகையில் மங்காத்தா படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய பட்க்குழு திட்டமிட்டுள்ளனர். இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' .
    • டிரிப்பில் அஜித் தனது நண்பர்களுக்கு பிரியாணி சமைத்து தரும் வீடியோ டிரெண்டிங் ஆனது.

    பிரபல நடிகர் அஜித்குமார்- திரிஷா நடிக்கும் புதிய படம் 'விடாமுயற்சி' . இதனை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார்.

    இப்படத்தில் வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஆரவ் நடிக்கின்றனர். மேலும் நடிகை ரெஜினா கசெண்ட்ரா நடிக்கிறார். இப்படத்தை 'லைகா' நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

    இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கியது. படப்பிடிப்பின் போது ஆரவ் எடுத்த அஜித் குமாரின் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலானது.

    அஜித் குமார் அவர்களின் நண்பர்களோடு பைக் டூர் செல்லும் பழக்கம் உடையவர். சமீபத்தில் அவர் மீண்டும் நண்பர்களுடன் பைக் டிரிப் சென்றார். அதில் நடிகர் ஆரவும் உடனிருந்தார். அந்த டிரிப்பில் அஜித் தனது நண்பர்களுக்கு பிரியாணி சமைத்து தரும் வீடியோ டிரெண்டிங் ஆனது.

    கடந்த வாரம் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சி ஒன்றின் வீடியோவை படக்குழு வெளியிட்டது. விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து அஜித் குமாரும் ஆரவும் மிக நல்ல நண்பர்களாக இருக்கின்றனர்.

    இந்நிலையில் அஜித் குமார் ஆரவுக்கு ரூ. 35 லட்சம் மதிப்பிளான ரேசிங் பைக்கை பரிசளித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×