என் மலர்
சினிமா செய்திகள்
- ‘ஜன நாயகன்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் நடிகர் தனுஷுடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.
- இந்த படத்தில் நடிக்க உள்ள பிற நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநராக வலம் வருபவர் எச்.வினோத். இவரது இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்' பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 9-ந்தேதி வெளியாக உள்ளது. விஜயின் கடைசி படம் 'ஜன நாயகன்' எனக்கூறப்படுவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.
'ஜன நாயகன்' படத்தை தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் நடிகர் தனுஷுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாக உள்ள இப்படத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இயக்குநர் எச்.வினோத்- நடிகர் தனுஷ் இணையும் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளார். இதனை அவரே உறுதிப்படுத்தி உள்ளார். இந்த படத்தில் நடிக்க உள்ள பிற நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
- விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும்.
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் 'அம்பாசமுத்திரம் அம்பானி', 'நெடுஞ்சாலை' படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து 'அசுரன்', 'விடுதலை-2' ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதற்கிடையே, நடிகர் தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.
இந்த நிலையில், கென் கருணாஸ் இயக்கி வந்த முதல் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கென் கருணாஸ் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படத்தை பார்வதா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு 'காதலன்' என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஸ்ரீதேவி, அனிஷ்மா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து 60 நாட்களில் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது.
இதனால் விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அவரது நடிப்பில் வெளியான படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.
- பிளாக் காபியில் நெய் கலந்து சாப்பிடும் யுக்தி, அவர் மூலமாகவே ‘டிரெண்ட்' ஆகி போயிருக்கிறது.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சரத்குமார், 71 வயதிலும் இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் நடித்துக் கொண்டிருக்கிறார். '3 பி.எச்.கே.', 'டியூட்', 'கொம்புசீவி' என வரிசையாக அவரது நடிப்பில் வெளியான படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.
நடிப்பு தாண்டி கட்டுடலுக்கும் சொந்தக்காரரான சரத்குமார், உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்க வழக்கங்களை (டயட்) கடைபிடித்து உடலை பேணிக்காத்து வருகிறார். பிளாக் காபியில் நெய் கலந்து சாப்பிடும் யுக்தி, அவர் மூலமாகவே 'டிரெண்ட்' ஆகி போயிருக்கிறது.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சரத்குமாரிடம் '71 வயதிலும் இப்படி உடற்கட்டுடன் இருக்க என்ன காரணம்?' என கேட்கப்பட்டது. அதற்கு, "71 வயதில் நான் இப்படி இருக்கிறேன் என்றால் நான் புகைப்பிடிப்பதில்லை, குடிப்பழக்கமும் கிடையாது. என்னிடம் நல்ல பழக்க வழக்கங்களே உள்ளன. அதுதான் இதற்கெல்லாம் காரணம் என்று நினைக்கிறேன்" என சரத்குமார் கூறியுள்ளார்.
- நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தற்போதுவரை 8 படங்கள் வெளியாகியுள்ளன
- படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும்
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தற்போதுவரை 8 படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இத்தயாரிப்பு நிறுவனத்தின் புதுப்படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இந்த புதிய படத்தை ஃபேஸன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இதன் அறிவிப்பு வீடியோ வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கபிலனின் பாடல் வரிகளுக்கு மிஷ்கின் இசையமைத்துள்ளார்.
- இம்மாத இறுதியில் படம் வெளியாக வாய்ப்புள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'தலைவன் தலைவி'. அதனைத்தொடர்ந்து தற்போது வெளியீட்டிற்கு தயாராக உள்ள படம் டிரெயின். யாரும் எதிர்பார்க்காத மிஸ்கின்-விஜய் சேதுபதி கூட்டணி என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஸ்ருதிஹாசன், நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ஃபௌசியா பாத்திமா மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீவத் மேற்கொள்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான கன்னக்குழிக்காரா தற்போது வெளியாகி உள்ளது.
இப்பாடலை நடிகை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். கபிலனின் பாடல் வரிகளுக்கு மிஷ்கின் இசையமைத்துள்ளார்.
- படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
- கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டீசர் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகான நடிக்கிறார். அவருடன் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அத்துடன், ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமான ஜேஎஸ்கே மீடியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக், டீசர் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி படத்தின் டீசர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ளது. தொடர்ந்து ரிலீஸ் தேதி தொடர்பான அறிவிப்புகள், பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்து வெளியான படம் 'ரிவால்வர் ரீட்டா'.
- கடந்த மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பை பெறவில்லை.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
மிடில் கிளாஸ்
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் முனிஷ்காந்த், விஜயலட்சுமி நடிப்பில் வெளியான படம் 'மிடில் கிளாஸ்'. திருமணமான குடும்பத் தலைவன் என்னென்ன சிக்கல்களையும் பிரச்சனைகளையும் சந்திக்கிறார் என்பதை நகைச்சுவையில் சொல்லப்பட்டு உள்ளது. இப்படம் நாளை முதல் ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் கண்டுகளிக்கலாம்.
ரஜினி கேங்
'பிஸ்தா' திரைப்படம், 'உப்பு புளி காரம்', 'கனா காணும் காலங்கள்' போன்ற வெப் தொடர்களை இயக்கிய எம்.ரமேஷ் பாரதி இயக்கியுள்ள படம், 'ரஜினி கேங்'. ரஜினி கிஷன் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திவிகா நடித்துள்ளார். மேலும், முனீஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், கல்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதனை தொடர்ந்த இப்படம் நாளை முதல் ப்ரைம் வீடியோ மற்றும் சிம்பிளி சௌத் ஓ.டி.டி. தளங்களில் கண்டு களிக்கலாம்.
ஆந்திரா கிங் தாலூகா
ராம் பொதினேனி, பாக்யஸ்ரீ போர்ஸ், யுபேந்திரா ஆகியோர் நடிப்பில் வெளியான தெலுங்கு சினிமா. 2002-ல் நடக்கும் கதை. கல்லூரி மாணவரான நாயகன், தெலுங்கு சினிமா நட்சத்திரமான சூர்யாவின் ரசிகர் என்ற மனநிலையை தாண்டி அவரை மானசீக குருவாக ஏற்கிறார். இந்தநிலையில் சூர்யாவின் 9 படங்கள் தொடர்ந்து தோல்வியடைகிறது. இதனால் அவருடைய செல்வாக்கு சரியதொடங்கி 10-வது படத்தை தயாரிக்க படத்தயாரிப்பாளர்கள் இல்லாதநிலை ஏற்படுகிறது. அப்போது நாயகன் தன்னுடைய நட்சத்திரத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட கூடாது என்றநோக்கில் மேற்கொள்ளும் முடிவே இதன் கதை. நெட்பிளிக்சில் வருகிற 25-ந்தேதி வெளியாகிற இதனை தமிழில் காணலாம்.
ரிவால்வர் ரீட்டா
கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்து வெளியான படம் 'ரிவால்வர் ரீட்டா'. இப்படத்தை தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கி இருந்தார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில், 'ரிவால்வர் ரீட்டா' வருகிற 26-ந்தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி.தளத்தில் கண்டு களிக்கலாம்.
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5 பாகம் 2
உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் மிகவும் விரும்பிப்பார்க்கப்படும் வெப் தொடர்களில் ஒன்று 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்'. இதன் முதல் சீசன் கடந்த 2016-ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. இந்த தொடர் உலகளவில் பார்வையாளர்களின் இதயங்களை வென்றதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த சீசன்கள் வெளியாகின. இதுவரை 4 முழு சீசன்கள் வெளியாகி உள்ளன. கடந்த நவம்பர் மாதம் டான் டிராட்சன்பெர்க் இயக்கிய 5-வது சீசனின் முதல் 4 எபிசோட்டுகள் வெளியாகி வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து வருகிற 26-ந்தேதி முதல் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் கண்டு மகிழலாம்.
இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும், ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் வெளியாக உள்ளது.
- முழுக்க முழுக்க சினிமா சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும்.
- ரசிகர்கள் கட்சி கொடி, டி-சர்ட், துண்டு அணிந்து வரக்கூடாது.
விஜய் நடித்த 'ஜன நாயகன்' படம் வருகிற 9-ந் தேதி திரைக்கு வருகிறது.
இதையொட்டி படத்தின் பாடல் வெளியீட்டு விழா வருகிற 27-ந்தேதி மலேசியாவில் நடக்கிறது.
விழாவுக்கு மலேசியா அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முழுக்க முழுக்க சினிமா சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும். யாரும் அரசியல் பேச கூடாது. ரசிகர்கள் கட்சி கொடி, டி-சர்ட், துண்டு அணிந்து வரக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை போன்ற நிபந்தனைகளை மலேசிய அரசு விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
- கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.
- படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீவத் மேற்கொள்கிறார்.
இயக்குநர் மிஸ்கின் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் "டிரெயின்" என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், நரேன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ஃபௌசியா பாத்திமா மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீவத் மேற்கொள்கிறார்.
இந்நிலையில், 'டிரெயின்' படத்தின் முதல் பாடல் 'கன்னங்குழிக்காரா...' இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகிறது. கபிலனின் பாடல் வரிகளில் மிஷ்கின் இசையமத்துள்ள இப்பாடலை நடிகை ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுஉள்ளார்கள்.
- மேட் டாமன், டாம் ஹாலண்ட், அன்னே ஹாத்வே, ஜெண்டயா, சார்லிஸ் தெரோன் என நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
- ஐமேக்ஸ் கேமராக்களிலேயே எடுக்கப்பட்ட படம் இது.
ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடைசியாக 2023இல் வெளியான 'ஓபன்ஹெய்மர்' திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகள் வென்றது. இது அணுகுண்டை கண்டுபிடித்த விஞ்ஞானி ஓபன்ஹெய்மர் உடைய வாழ்க்கை கதையாகும்.
இந்நிலையில் 'தி ஒடிஸி' என்ற புதிய படம் ஒன்றை நோலன் இயக்கி வருகிறார். இது இவரின் 13வது படம் ஆகும்.
இதில் மேட் டாமன், டாம் ஹாலண்ட், அன்னே ஹாத்வே, ஜெண்டயா, சார்லிஸ் தெரோன் என நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். புகழ்பெற்ற கவிஞர் ஹோமரின் காவிய கவிதையை தழுவி இப்படம் உருவாகி உள்ளது.
தற்போது 'தி ஒடிஸி' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. ஐமேக்ஸ் கேமராக்களிலேயே எடுக்கப்பட்ட இப்படம் அடுத்த ஆண்டு ஜூலை 17-ந்தேதி வெளியாக உள்ளது. ஜமாக்ஸ் திரையில் ஒரு ஒரிஜினல் ஜமாக்ஸ் படத்தை காண அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.
- படத்திற்கு ’ரவுடி ஜனார்தனா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
- முதல் முறையாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கடைசியாக கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவின் 15வது படம் ரவி கிரன் கோலா இயக்கத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தின் டைட்டில் கிலிம்பஸ் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி படத்திற்கு 'ரவுடி ஜனார்தனா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் முதல் முறையாக விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
கிங்டம் படம் விஜய் தேவரகொண்டாவுக்கு கை கொடுக்காத நிலையில் 'ரவுடி ஜனார்தனா' மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, சூர்யா உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
- மம்மூட்டியைச் சந்தித்து ஸ்ரீனிவாசனுடனான நினைவுகள் குறித்துப் பேசியிருக்கிறார்.
நடிகரும், இயக்குநருமான ஸ்ரீனிவாசன் மலையாளம், தமிழ் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார். தமிழில் லேசா லேசா, புள்ளக்குட்டிக்காரன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பெற்றவர் ஆவார். 69 வயதான இவர் கடந்த 20 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, சூர்யா உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
ஸ்ரீனிவாசனின் சொந்த ஊரான எர்ணாகுளம் மாவட்டத்தின் உதயம்பேரூரில் உள்ள அவரது வீட்டில் அரசு மரியாதையுடன் நேற்று உடல் அடக்கம் செய்யப்பட்டது.
நடிகர் ஸ்ரீனிவாசனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியப் நடிகர் பார்த்திபன், மம்மூட்டியைச் சந்தித்து ஸ்ரீனிவாசனுடனான நினைவுகள் குறித்துப் பேசியிருக்கிறார். இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பார்த்திபன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஒரு நீண்ட தூக்கத்தின் துக்கத்தை , ஒரு சிறிய தூக்கம் லேசாய் களைந்தெறிய, கண்களைத் துடைத்துக் கொண்டு அடுத்ததில் விரைகிறோமோ?
துக்க வீட்டில் நான் வெறுமையுடன் உரையாடிக் கொண்டிருப்பதை தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் மம்மூட்டி சாரிடம் சொல்லியிருப்பார் போல, ஶ்ரீனிவாசனின் இறுதி யாத்திரைக்கு நெருப்புப் படுக்கை தயாராகிக் கொண்டிருக்க ,அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த என்னால், அந்த உஷ்ணத்தை ஶ்ரீனயின் உடல் உணராது என்பதும் சுட்டது.
அதற்கு மேல் அங்கிருக்க இயலாமல் வருத்தத்துடன் வெளியேற, வாசலில் மம்முட்டியின் தயாரிப்பாளர் ஆறுதலாய் அழைத்துச் சென்றார்.
ஶ்ரீனியின் நினைவுகளை இருவரும் அசை போட்டபடி மாலைவரை அவரது அன்பான உபசரிப்பில்!!!நட்பிற்கில்லை மொழி பேதங்கள்" என்று தெரிவித்துள்ளார்.






