என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பராசக்தி படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்
    • சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம்.

    ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.

    இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளது.

    இதனிடையே இப்படத்தின் அடி அலையே, ரத்னமாலா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான, நமக்கான காலம் பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அதன் ஒருபகுதியாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி படத்தின் WorldOfParasakthi என்ற நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் குடும்பத்தினர் 'World of Parasakthi' கண்காட்சிக்கு வந்து பார்வையிட்டனர். 

    • 'மார்கோ' படத்தை தயாரித்த கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
    • நியோக் திரைக்கதை எழுதுகிறார் .

    மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தள்ளுமலா, ஆலப்புழா ஜிம்கானா, அனுராக கரிக்கின் வெள்ளம் போன்ற படங்களை இயக்கிய மலையாளத் திரைத்துறையின் முக்கிய இளம் இயக்குநரான கலித் ரஹ்மான் இப்படத்தை இயக்குகிறார்.

    கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'உண்டா' படத்திற்குப் பிறகு இந்த கூட்டணி இணையும் இரண்டாவது படம் இதுவாகும். நடிகர் உன்னி முகுந்தனின் ஆக்ஷன் த்ரில்லர் படமான 'மார்கோ' படத்தை தயாரித்த கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரஹ்மான் இயக்கும் இந்தப் படத்திற்கு நியோக் திரைக்கதை எழுதுகிறார் .

    நடிகர்கள், மற்ற தகவல்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


    • பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்கியுள்ளார்.
    • கடைசியாக 2014-ல் வெளியான 'ராமானுஜன்' திரைப்படத்தில் அப்பாஸ் தோன்றினார்.

    இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ்-ன் அடுத்த படத்தை அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

    இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

    மேலும் இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஹேப்பி ராஜ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹேப்பி ராஜ் படத்தின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இந்த படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு அப்பாஸ் கம்பேக் கொடுக்கிறார். புரோமோவில் அப்பாஸின் அறிமுகம் வைரலாகி வருகிறது.

    90-களில் தமிழ் சினிமாவின் இளம்பெண்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த 'சாக்லேட் பாய்' அப்பாஸ் 'காதல் தேசம்', 'VIP', 'படையப்பா' போன்ற படங்களில் தனது வசீகரமான தோற்றத்தாலும், மயக்கும் புன்னகையாலும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்தவர் ஆவார்.

    கடைசியாக 2014-ல் வெளியான 'ராமானுஜன்' திரைப்படத்தில் காணப்பட்ட அப்பாஸ், நீண்ட காலமாக நடிக்காமல் இருந்தார். தற்போது, அந்த ஏக்கத்திற்கு 11 வருட இடைவெளிக்குப் பிறகு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.   

    • அப்போது மது போதையில் அதிவேகமாக காரில் வந்த ஒரு நபர், நோராவின் கார் மீது பயங்கரமாக மோதினார்.
    • என் கண்கள் முன்னே என் வாழ்க்கை முடிந்துவிடும் என்று நினைத்தேன்.

     பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி, மும்பையில் நேற்று மதியம் ஒரு கார் விபத்தில் சிக்கினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

    மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள லிங்க் ரோடில், நோரா தனது காரில் 'சன்பர்ன்' இசை நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் அதிவேகமாக காரில் வந்த ஒரு நபர், நோராவின் கார் மீது பயங்கரமாக மோதினார்.

    இந்த மோதலின் வேகத்தில் நோரா காரின் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்குத் தூக்கி எறியப்பட்டார். இதில் அவரது தலை காரின் ஜன்னலில் பலமாக மோதியது. அவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது.

    இந்த விபத்து குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட நோரா, "என் கண்கள் முன்னே என் வாழ்க்கை முடிந்துவிடும் என்று நினைத்தேன். இது மிகவும் பயங்கரமான அனுபவம். 2025-ஆம் ஆண்டிலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது குறித்து நாம் பேசிக்கொண்டிருப்பது வருத்தமாக இருக்கிறது. தயவுசெய்து குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    விபத்தை ஏற்படுத்திய வினய் சக்பால் (27) என்ற நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.  

    • 225 படங்களுக்கு மேற்பட்ட படங்களில் ஸ்ரீனிவாசன் நடித்துள்ளார்.
    • தனது நகைக்சுவை நடிப்பால் தமிழக ரசிகர்களையும் ஸ்ரீனிவாசன் கவர்ந்தவர்.

    மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் காலமானார். 69 வயதான ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

    225 படங்களுக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீனிவாசன், சமூகத்தில் நடக்கும் விஷயங்களை தனது காமெடி வாயிலாக வெளிப்படுத்தி ரசிகர்களால் கவரப்பட்டவர்.

    மலையாளம் மட்டுமின்றி தமிழ் சினிமாக்களிலும் நடித்துள்ள அவர், தனது நகைக்சுவை நடிப்பால் தமிழக ரசிகர்களையும் கவர்ந்தவர். திரைப்பட துறையில் நடிப்பு மட்டுமின்றி, பல படங்களில் இயக்குனராகவும் இருந்துள்ளார். மேலும் திரைக்கதை எழுத்தாளராகவும் திகழ்ந்தார். இவர் இயக்கிய பல படங்கள் மாநில மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது.

    இந்நிலையில், ஸ்ரீனிவாசன் உயிரிழந்த பிறகு மம்முட்டி குறித்தும் மதம் குறித்தும் அவர் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில் "தனக்கு திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை. ஆனால் அதற்கான அடிப்படை செலவுக்குக் கூட என்னிடம் பணம் இல்லை. அப்போது அப்போது இன்னசென்ட் (குணசித்திர நடிகர்) தனது மனைவி ஆலிஸின் வளையல்களை அடகு வைத்து ரூ. 400 கொடுத்து உதவினார்

    தனது தாயார், இந்து முறையில் தாலி கட்டவேண்டும் என்று வற்புறுத்தினார். அதற்காக மம்முட்டியிடம் தாலிக்குத் தங்கம் வாங்க ரூ.2000 கேட்டேன். அவரும் தந்து உதவினார். அந்த பணத்தில் தாலி வாங்கி, அடுத்த நாள் நானும் விமலாவும் ரெஜிஸ்டர் ஆபீசில் திருமணம் செய்து கொண்டும்.

    என் திருமணத்திற்கு ரூ.400 கொடுத்தவர் ஒரு கிறிஸ்தவர். ஒரு முஸ்லிம் மம்மூட்டி தாலி வாங்க கொடுத்த பணத்தால் என் இந்து மனைவிக்கு தாலி கட்டினேன். என்ன மதம், யாருடைய மதம், அது எங்கே இருக்கிறது? வாழ்க்கையில் மதம் முக்கியமில்லை, மனிதனும் மனிதநேயமும் தான் முக்கியம்" என்று ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

    நடிகர் ஸ்ரீனிவாசன் நம்மை விட்டு மறைந்தாலும், அவர் கூறிய இந்த மனிதநேயக் கதை நமக்கு வழிகாட்டும் விளக்காக இருக்கும் என்றால் அது மிகையாகாது.

    • டெல்லி பெல்லி படத்தை இயக்கியவர் பிரபல இந்தி நகைச்சுவை நடிகர் வீர் தாஸ்.
    • அமீர் கான் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வீர் தாஸ், 'ஹேப்பி படேல்: கதர்னக் ஜசூஸ்' என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார்.

    தமிழில் ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி நடிப்பில் வெளியான 'சேட்டை' படத்தை யாராலும் மறந்துவிட முடியாது. இது இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த 'டெல்லி பெல்லி' படத்தின் ரிமேக் ஆகும்.

    இந்த டெல்லி பெல்லி படத்தில் நடித்தவர் பிரபல இந்தி நகைச்சுவை நடிகர் வீர் தாஸ். இந்நிலையில் அமீர் கான் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வீர் தாஸ், 'ஹேப்பி படேல்: கதர்னக் ஜசூஸ்' என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார்.

    வீர் தாஸுடன், மோனா சிங், மிதிலா பால்கர் மற்றும் ஷரிப் ஹாஷ்மி ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

    மேலும் இதில் டெல்லி பெல்லியல் நடித்த நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.

    எனவே நீண்ட வருடம் கழித்து டெல்லி பெல்லி கூட்டணியில் உருவாகி உள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

    இந்த படம் வரும் ஜனவரி 16 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

    இதில் அமீர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். டெல்லி பெல்லியை போல நகைச்சுவை மற்றும் அதிரடி காட்சிகளுடன் ஹேப்பி படேல் டிரெய்லர் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.  

    • தேனி, சிறுமலை உள்ளிட்ட தென்னிந்திய இடங்களில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
    • படத்தின் வெளியீட்டு தேதி குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    தேசிய விருது பெற்ற 'குற்றம் கடிதல்' படத்தின் தொடர்ச்சியான 'குற்றம் கடிதல் 2' தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தில் முன்னணி வேடத்தில் JSK சதீஷ்குமார் நடித்தும், தயாரித்தும் உள்ளார்.

    தேனி, சிறுமலை உள்ளிட்ட தென்னிந்திய இடங்களில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு அரசு பள்ளி ஆசிரியை ஓய்வு பெறும் முன் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களை சந்திக்கும் கதையே இப்படத்தின் மையமாகும்.

    இப்படத்தில் பாண்டியராஜன், அப்புக்குட்டி, பாலாஜி முருகதாஸ், தீபக், சந்தினி தமிழரசன், வீஜி சந்திரசேகர், ஜோவிதா, ரோஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்த நிலையில், 'குற்றம் கடிதல் 2 படத்தின்' படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.



    • எர்ணாகுளத்தில் கந்தநாட்டில் உள்ள அவரது வீட்டில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.
    • ரஜினிகாந்தும் ஸ்ரீவிவாசனுடன் வகுப்புத் தோழனாக இருந்ததை குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார்.

    மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 69.

    கடந்த சிலநாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீனிவாசன் நேற்று மரணமடைந்தார்.

    ஸ்ரீனிவாசனின் இறுதிச் சடங்கு இன்று காலை எர்ணாகுளத்தில் கந்தநாட்டில் உள்ள அவரது வீட்டில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது.

    இந்நிலையில் படப்பிடிப்பு தொடர்பாக எர்ணாகுளம் சென்றிருந்த நடிகர் சூர்யா, ஸ்ரீனிவாசன் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்த வந்தார்.

    செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா, நான் சினிமாவில் நுழைவதற்கு முன்பில் இருந்தே அவரது படங்களைப் பார்க்கிறேன். ஸ்ரீனிவாசனின் மரணச் செய்தியைக் கேட்டதும் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

    நேரில் வந்து அவரைப் பார்க்க வேண்டும் என்ற தோன்றியது. சினிமாவுக்கு அவரது பங்களிப்புகள், அவர் கற்றுக்கொடுத்த விஷயங்கள் மற்றும் அவரது எழுத்துக்கள் எப்போதும் அனைவரின் மனதிலும் இருக்கும்" என்று தெரிவித்தார். முன்னதாக நகுடிகர் ரஜினிகாந்தும் ஸ்ரீவிவாசனுடன் வகுப்புத் தோழனாக இருந்ததை குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்திருந்தார். 

    நடிகரும், இயக்குநருமான ஸ்ரீனிவாசன் மலையாளம், தமிழ் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார். தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் எழுத்தாளர்.

    நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளராக அவரது பங்களிப்புகளுக்காக பல வாழ்நாள் சாதனையாளர் அங்கீகாரங்கள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

    ஸ்ரீனிவாசனுக்கு விமலா என்ற மனைவியும், வினீத் ஸ்ரீனிவாசன் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் என்ற மகன்களும் உள்ளனர். இருவரும் மலையாள சினிமாவில் முக்கிய நபர்களாக உள்ளனர்.   

    • ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
    • கடந்த மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பை பெறவில்லை.

    கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்து வெளியான படம் 'ரிவால்வர் ரீட்டா'. இப்படத்தை தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. சரஸ்வதி சபதம் படத்தை இயக்கிய ஜே.கே. சந்துரு இப்படத்தை எழுதி இயக்கி இருந்தார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    கடந்த மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில், 'ரிவால்வர் ரீட்டா' படம் ஓ.டி.டி.யில் வெளியாவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

     

    அதன்படி, 'ரிவால்வர் ரீட்டா' வருகிற 26-ந்தேதி முதல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நெட் ஃபிளிக்ஸ் ஓ.டி.டி.தளத்தில் கண்டு களிக்கலாம். 

    • இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்து உள்ளார்.
    • இனிவரும் நாட்களில் , ‘D54’ படத்தின் குறித்த அப்டேட்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நடிகர் தனுஷ்- விக்னேஷ் ராஜா கூட்டணியில் உருவாகி உள்ள படம் 'D54'. 'போர் தொழில்' பட இயக்குநரான விக்னேஷ் ராஜா இயக்கி உள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஐசரி கணேஷ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்து உள்ளார். மேலும் இப்படத்தில் கருணாஸ், கே.எஸ். ரவிக்குமார், பிருத்வி பாண்டியராஜன், குஷ்மிதா மற்றும் நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை 3 மாதத்திற்குள் முடித்துவிட திட்டமிட்ட படக்குழு அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

    இந்த நிலையில், 'D54' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக, படத்தின் படப்பிடிப்பு நிறைவு கொண்டாட்டங்களில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளதால் இனிவரும் நாட்களில் , 'D54' படத்தின் குறித்த அப்டேட்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 



    ரகு நந்தனின் இசையில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் கேட்கும் ரகம்.

    னந்த் முருகன் மதுரையையே ஆட்டிப்படைக்கும் பிரபல ரவுடியின் சிஷ்யனாக இருக்கிறார்.பின்னர், ஆனந்த் முருகன் குருவின் இடத்தை பிடித்து மதுரையில் மேலோங்கி நிற்கிறார்.

    ஆனந்த் முருகனை கதையின் நாயகன பாலஹாசன் தனது நண்பர்ளுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிடுகிறார். இவர், அப்பா, அம்மா, மனைவி, குழந்தை என குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் ஆனந்த் முருகனை கொலை செய்ய திட்டிமிடுகிறார்.

    பாலஹாசன், மதுரையின் மிகப்பெரிய சக்தியாக திகழும் ரவுடி ஆனந்த் முருகனை கொலை செய்ய முயற்சிப்பது ஏன் ? அவரது முயற்சி வெற்றி பெற்றதா ? இல்லையா ? என்பதே படத்தின் மீதிகதை.

    நடிகர்கள்

    அறிமுக நடிகர் ஆனந்த் முருகன் ரவுடி கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான தேர்வாக இருக்கிறார்.மிக நேர்த்தியாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். கதையின் நாயகனாக நடித்திருக்கும் பாலஹாசன், படத்திற்கு படம் கதாபாத்திரங்களில் வித்தியாசத்தை காட்டுவதோடு, தனது நடிப்பிலும் வேறுபாட்டை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்கிறார்.

    சீரியல் நாயகன் ஸ்ரீதேவா, யாசர், விஜே ஆண்ட்ரூஸ் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்திருக்கிறார்கள்.

    நாயகனின் தங்கையாக நடித்திருக்கும் காயத்ரி ரெமா, சோசியல் மீடியா மோகத்தினால் வாழ்க்கையை தொலைக்கும் பெண்களை எச்சரிக்கும் விதமாக நடித்திருக்கிறார்.

    இயக்கம்

    மதுரையை ஆட்டிப்டைக்கும் அசாதாரண மனிதன் ஒருவனை சாதாரணமான ஒருவன் வீழ்த்த முடிவு செய்வதும், அந்த முடிவை செயல்படுத்த போராடுவதையும் விறுவிறுப்பாக காட்டியிருகிறார். படத்தில் ஆங்கங்கே தொய்வும் இருக்கிறது. கதை ஓட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலம்.

    இசை

    ரகு நந்தனின் இசையில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் கேட்கும் ரகம். ஜோஸ் ஃபிராங்கிளினின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைக்கதைக்கு பலம்.

    ஒளிப்பதிவு

    கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் குகநேசன் சோனைமுத்து, பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்துவிடுகிறார்.

    ரேட்டிங்- 2/5

    • கணவன்- மனைவி இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் பரவின.
    • திடீரென உங்களுக்கு எல்லாமே தவறாகப் போகும்.

    தமிழ் சினிமாவில் காதலை வித்தியாசமான கோணத்தில் சொன்னவர், இயக்குனர் செல்வராகவன். 'துள்ளுவதோ இளமை', 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். அதோடு சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறார். இவர், தற்போது '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தை இயக்கி வருகிறார். இவர் ஆரம்பத்தில் தன் படங்களில் நடித்த சோனியா அகர்வாலை திருமணம் செய்தார். பின்னர் அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. இதையடுத்து செல்வராகவன், கீதாஞ்சலி என்பவரை மணந்துகொண்டார்.

    சமீபத்தில் அவரது மனைவி கீதாஞ்சலி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள செல்வராகவனுடனான புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியதாக கூறப்பட்டது. இதனால் கணவன்- மனைவி இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் பரவின.

    இந்த நிலையில் செல்வராகவன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில்,''திடீரென உங்களுக்கு எல்லாமே தவறாகப் போகும். சுற்றியுள்ள அனைவரும் துரோகம் செய்வது நன்றாய் தெரியும். 'நீயெல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டிருப்பேன்' என்று பிதற்றுவீர்கள். அதுபோன்ற நேரங்களில் அமைதியாக இருங்கள். சில காலத்தில் பெரும் மலை, பனியாய் போகும். அனைத்தும் சரியாகிவிடும்" என்று கூறியுள்ளார்.

    இந்தப் பதிவின் மூலம், செல்வராகவனின் குடும்பத்தில் ஏதோ ஒரு பிரச்சனை நடந்திருப்பது உறுதியாகி உள்ளது. அதைத்தான் இந்தப் பதிவின் மூலம் அவர் சொல்லியிருக்கிறார் என்று பலரும் பின்னூட்டம் செய்து வருகிறார்கள்.

    ×