என் மலர்
நீங்கள் தேடியது "Director"
- வேளாண்வளர்ச்சி திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு தோட்டக்கலைத்துறை இயக்குனர் டாக்டர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்றது.
- 8 வகையான காய்கறி விதைகள் மற்றும் 2 கிலோ மண்புழு உரம் உள்ளிட்வற்றை பயனாளிகளுக்கு வழங்கினார்.
தென்காசி:
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தென்காசி மாவட்ட கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்வளர்ச்சி திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வு தோட்டக்கலைத்துறை இயக்குனர் டாக்டர் பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்றது.
கடையநல்லூர் வட்டாரம் நயினாரகரத்தில் விவசாயிகளிடம் கலந்துரையாடினார். குத்துக்கல்வலசை பஞ்சாயத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட பயனாளிகளுக்கு 8 வகையான காய்கறி விதைகள் மற்றும் 2 கிலோ மண்புழு உரம் உள்ளிட்வற்றை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதேபோல் வாசுதேவநல்லூர் வட்டாரம் ராமசாமியாபுரம், குற்றாலம் அரசு சுற்றுசூழல் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் அவர் ஆய்வு செய்தார்.
இதில் தென்காசி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி, வேளாண் இணை இயக்குனர் தமிழ்மலர், உதவி செயற்பொறியாளர் சங்கர், உதவி இயக்குனர் ராஜா, தோட்டக்கலை அலுவலர் விவேகானந்த பத்மநாபன் மற்றம் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- குமாரபாளையம் அருகே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகளுக்கு வட்ட வடிவமான தடுப்பு நோய் பரவி வருகிறது.
- பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து வருகிறார்கள்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு, வீ.மேட்டூர், தட்டான்குட்டை, சத்யா நகர், எலந்தகுட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகளுக்கு வட்ட வடிவமான தடுப்பு நோய் பரவி வருகிறது. கால்நடை மருத்துவர்கள் இது பற்றி தகவலறிந்து அனைத்து பகுதிகளுக்கும் சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
நாமக்கல் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், கால்நடை உதவி டாக்டர்கள் ரமேஸ்குமார், சதீஷ், செந்தில்குமார், உமேஷ் பூபாலன் ஆகியோர் நேற்று நோய் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.இதுபற்றி டாக்டர்கள் கூறியதாவது:-
தற்போது வந்துள்ள நோய் ஒருவகை வைரஸ் நோய், அம்மை வகையை சேர்ந்தது. தடுப்பூசியால் நோய் குணமாகி, வட்டமான தடிப்பு மறைந்து விடும். இல்லாவிடில் அது காய்ந்து தானே விழுந்து விடும். கால்நடைகளுக்கு ஆபத்து இல்லை. அனைத்து பகுதிகளுக்கும் சென்று நோய் பரவாமல் தடுக்க தடுப்பூசி போட்டு வருகிறோம்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து வருகிறோம். கால்நடைகள் வளர்ப்போர் இது குறித்து அச்சப்பட வேண்டியதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் பயிர் வகை விதைச்சான்றுகளை உதவி இயக்குநர் ஆய்வு செய்தார்.
- தரமான விதைகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
பரமத்திவேலூர்:
பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் நிலக்கடலை, பயறுவகை, நெல், சிறுதானியம் போன்ற பயிர்களில் விதைப்பண்ணைகள் அமைத்து தரமான விதைகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் மேல்சாத்தம்பூர், நடந்தை, ராமதேவம், ஆகிய கிராமங்களில் நிலக்கடலை டிஎம்வி-14, கதரி பிஎஸ்ஆர்-2, தரணி ஜிஜேஜி-32, போன்ற பயிர்களில் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விதைப்பண்ணைகளை நாமக்கல் மாவட்ட விதைசான்று உதவி இயக்குநர் சித்திரைசெல்வி ஆய்வு செய்தார். ஆய்வின் போது உதவி விதை அலுவலர் மோகன்ராஜ் உடன் இருந்தார்.
- நசியனூர் அடுத்த மலையம்பாளையத்தில் சித்ரா என்ற விவசாயி உயர் விளைச்சல் தரும் உளுந்து வம்பன் 10 ரகத்தை பயிரிட்டு விதைப்பண்ணையாக பதிவு செய்துள்ளனர். இந்த விதை பண்ணையை சென்னை வேளாண் துறை கூடுதல் இயக்குனர் (மத்திய திட்டம்) சிவகுமார் ஆய்வு செய்தார்.
- இந்த உயர் விளைச்சல் ரகமானது 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு வரும். மஞ்சள் தேமல் நோய், இலைச்சுருள் நோயை எதிர்த்து வளரக்கூடியது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் தரக்கூடியது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நசியனூர் அடுத்த மலையம்பாளையத்தில் சித்ரா என்ற விவசாயி உயர் விளைச்சல் தரும் உளுந்து வம்பன் 10 ரகத்தை பயிரிட்டு விதைப்பண்ணையாக பதிவு செய்துள்ளனர். இந்த விதை பண்ணையை சென்னை வேளாண் துறை கூடுதல் இயக்குனர் (மத்திய திட்டம்) சிவகுமார் ஆய்வு செய்தார்.
ஈரோடு வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி, துணை இயக்குனர் (மாநில திட்டம்) அசோக், ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மோகனசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆய்வின் போது கூடுதல் இயக்குனர் சிவகுமார் கூறியதாவது:
இந்த உயர் விளைச்சல் ரகமானது 70 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு வரும். மஞ்சள் தேமல் நோய், இலைச்சுருள் நோயை எதிர்த்து வளரக்கூடியது. சராசரியாக ஒரு ஏக்கருக்கு 400 கிலோ மகசூல் தரக்கூடியது.
உளுந்து விதை பண்ணை அமைக்கும் விவசாயிகளுக்கு அரசு உற்பத்தி மானியம் வழங்குகிறது. இவ்விதை பண்ணை கலவன்கள் இன்றி வயல் தரத்தில் தேர்ச்சி பெற்றவுடன் பாதுகாப்பான முறையில் அறுவடை செய்யப்பட்டு விதை சுத்தி நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும்.
விதை சுத்தி நிலையத்தில் சுத்தி செய்யப்பட்டு விதை மாதிரி எடுத்து விதை பரிசோதனை நிலைய த்துக்கு அனுப்பப்படும். விதை பரிசோதனையில் பகுப்பாய்வு முடிவில் தேர்ச்சி பெற்றதும் சான்றட்டை இணைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈரோடு விதைச்சான்று அலுவலர் ஹேமாவதி, கணேசமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.
- மாவட்ட அளவில் வலைப்பந்து போட்டி நடைபெற்றது.
- எம்.ஜி.ஆர் அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த மாணவிகள்மாவட்ட த்திலேயே முதலிடம் பெற்று வெற்றி பெற்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட அளவில் வலைப்பந்து போட்டி நடைபெற்றது.
இதில் புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த மாணவிகள்மாவட்ட த்திலேயே முதலிடம் பெற்று வெற்றி பெற்றனர்.
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவிக ளுக்கு புத்தூர் கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி, உடற்கல்வி இயக்குனர் பிரபாகரன்,
கொள்ளிடம் சீனிவாசா மெட்ரிக் பள்ளி நிர்வாகி முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவி களுக்கு பரிசு மற்றும் ரொக்கம் வழங்கி பாராட்டினர்.
நிகழ்ச்சியில் பெற்றோர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி, பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அந்த நோட்டுகளை நவம்பர் 10-ந் தேதி முதல், டிசம்பர் 30-ந் தேதிவரை வங்கி கணக்கில் செலுத்தலாம் என்று கூறினார்.
முதலில், மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் இந்த நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கருப்பு பணம் போடப்படும் என்ற சந்தேகத்தால், 5 நாட்களில், அதாவது நவம்பர் 14-ந் தேதியுடன் இந்த அனுமதி நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே, பணமதிப்பு நீக்க காலத்தின்போது, பொதுத்துறை வங்கி, மாநில கூட்டுறவு வங்கி, மாவட்ட கூட்டுறவு வங்கி என ஒவ்வொரு வங்கியிலும் எவ்வளவு செல்லாத நோட்டுகள் பெறப்பட்டன என்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மும்பையைச் சேர்ந்த மனோரஞ்சன் ராய் என்பவர் கேள்வி கேட்டு இருந்தார். அதற்கு ‘நபார்டு’ வங்கியின் தலைமை பொது மேலாளரும், மேல்முறையீட்டு ஆணையருமான எஸ்.சரவணவேல் பதில் அளித்துள்ளார்.
மொத்தம் உள்ள 21 பொதுத்துறை வங்கிகளில், 7 வங்கிகள் மட்டுமே இந்த விவரங்களை அளித்துள்ளன. 14 வங்கிகள் அவற்றை அளிக்க மறுத்து விட்டன. ஆனால், அனைத்து மாநில கூட்டுறவு வங்கிகளும், அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் விவரங்களை அளித்துள்ளன.
அதன்படி, மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் அதிக அளவாக ரூ.745 கோடியே 59 லட்சம் செல்லாத நோட்டுகள் பெறப்பட்டுள்ளன. ஐந்தே நாட்களில் இந்த நோட்டுகள் வந்துள்ளன. இதன் இயக்குனராக இருப்பவர், பா.ஜனதா தலைவர் அமித்ஷா என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக அவர் அப்பொறுப்பில் இருந்து வருகிறார். 2000-ம் ஆண்டு, அவ்வங்கியின் தலைவராகவும் இருந்தார்.
அந்த வங்கிக்கு பிறகு, அதிகமான செல்லாத நோட்டுகளை பெற்றது, ராஜ்கோட் மாவட்ட கூட்டுறவு வங்கி ஆகும். அது, ரூ.693 கோடியே 19 லட்சம் பெற்றுள்ளது. அதன் தலைவராக இருப்பவர், குஜராத் மாநில மந்திரி ஜெயேஷ்பாய் வித்தல்பாய் ராடாடியா.
குஜராத் மாநில கூட்டுறவு வங்கியே வெறும் ரூ.1 கோடியே 11 லட்சம் செல்லாத நோட்டுகளை பெற்றிருக்கும்போது, மேற்கண்ட 2 மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் அதை விட பலமடங்கு அதிகமாக பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் உரிமை சட்டத்தில் இந்த விவரங்களை பெற்ற மனோரஞ்சன் ராய் இதுகுறித்து கூறியதாவது:-
மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட செல்லாத நோட்டுகளின் மதிப்பை பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது.
7 பொதுத்துறை வங்கிகளில் ரூ.7 லட்சத்து 57 ஆயிரம் கோடியும், 32 மாநில கூட்டுறவு வங்கிகளில் ரூ.6 ஆயிரத்து 407 கோடியும் 370 மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ரூ.22 ஆயிரத்து 271 கோடியும், 39 தபால் நிலையங்களில் ரூ.4 ஆயிரத்து 408 கோடியும் செல்லாத நோட்டுகள் பெறப்பட்டுள்ளன.
மேற்கண்ட வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மட்டும் மொத்தம் ரூ.7 லட்சத்து 91 ஆயிரம் கோடி செல்லாத நோட்டுகள் பெறப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்ட மொத்த செல்லாத நோட்டுகளே ரூ.15 லட்சத்து 28 ஆயிரம் கோடிதான். ஆனால், மேற்கண்ட வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மட்டும் 52 சதவீத செல்லாத நோட்டுகள் பெறப்பட்டுள்ளன.
இதன்மூலம், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்கள் அளிக்காத 14 பொதுத்துறை வங்கிகள், ஊரக, நகர்ப்புற வங்கிகள், தனியார் வங்கிகள், உள்ளூர் கூட்டுறவு வங்கிகள், ஜனகல்யாண் வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கி உரிமம் பெற்ற நிறுவனங்கள் ஆகியவற்றில் எவ்வளவு செல்லாத நோட்டுகள் பெறப்பட்டு இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதில் இல்லாததால், பலத்த சந்தேகம் எழும்புகிறது.
மேலும், கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் சமயத்தில், மாநில கூட்டுறவு வங்கிகளும், மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் தங்களிடம் உள்ள செல்லாத நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் செலுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இவ்வங்கிகளில் பெரும்பாலானவை, அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளவை.
மாநில கூட்டுறவு வங்கிகளில் மராட்டிய மாநில கூட்டுறவு வங்கி அதிக அளவாக ரூ.1,128 கோடி செல்லாத நோட்டுகளை செலுத்தியது. வெறும் 4 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட அந்தமானில் உள்ள மாநில கூட்டுறவு வங்கி ரூ.85 கோடியே 76 லட்சம் செல்லாத நோட்டுகளை செலுத்தியது சந்தேகத்துக்குரியதாக உள்ளது.
இவ்வாறு மனோரஞ்சன் ராய் கூறினார்.