என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Cinema"

    • இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களின் டிரெய்லர்கள், ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
    • சூப்பர்ஸ்டார்கள் முதல் இளம் நட்சத்திரங்கள் வரை, அனைவரின் படங்களும் யூடியூப்பில் வியூஸ்களை அள்ளின

    2025 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் உயிர்பெற்று, டிஜிட்டல் தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த காலகட்டத்தில், யூடியூப் போன்ற தளங்கள் சினிமா ரசிகர்களின் முதல் தேர்வாக மாறின.

    இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களின் டிரெய்லர்கள், ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. சூப்பர்ஸ்டார்கள் முதல் இளம் நட்சத்திரங்கள் வரை, அனைவரின் படங்களும் யூடியூப்பில் கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தன.

    இந்தக் கட்டுரையில், 2025 ஆம் ஆண்டு யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட 10 தமிழ் சினிமா டிரெய்லர்களைப் பார்க்கலாம்

    1. கூலி (Coolie) – 54 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 28M + 10M +16M)

    நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.

    இந்தபெரும் எதிரிபார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

    2. தக் லைஃப் (Thug Life) - 50 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 35M + 6.5M +8.8M)

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'தக் லைஃப்'. நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னம் - கமல் கூட்டணியில் இப்படம் உருவானதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 2 ஆம் இடம் உள்ளது.

    3. குட் பேட் அக்லி (Good Bad Ugly) – 39 மில்லியன் பார்வைகள் (டீசர்)

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தின் மீதான பெரும் எதிர்பார்ப்பினால் இப்படத்தின் டீசர் தமிழில் மட்டும் 39 மில்லியன் பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 3 ஆம் இடம் உள்ளது.

    4. ரெட்ரோ (Retro) 32 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 24M + 4.6M + 3.3M)

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான படம் ரெட்ரோ. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். கார்த்திக் சுப்பராஜ் - சூர்யா கூட்டணியில் உருவான இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 4 ஆம் இடம் உள்ளது.

    5. டிராகன் (dragon) - 26 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 21M + 5M )

    இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியான டிராகன் திரைப்படம் 10 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்து சாதனை படைத்தது.

    லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பின்பு வெளியான பிரதீப் ரங்கநாதன் படம் என்பதால் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 5 ஆம் இடம் உள்ளது.

    6. விடாமுயற்சி (Vidaamuyarchi) – 20 மில்லியன் பார்வைகள்

    நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவான திரைப்படம் விடாமுயற்சி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

    நீண்ட நாட்களாக உருவாகி வந்த இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பினால் இப்படத்தின் டிரெய்லர் தமிழில் மட்டும் 20 மில்லியன் பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 6 ஆம் இடம் உள்ளது.

    7. இட்லி கடை (Idli Kadai) – 20 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 16M + 4M)

    தனுஷ் இயக்கி நடித்த படம் இட்டலி கடை. இப்படத்தில் நித்யா மேனன், அருண் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ராயன் வெற்றிக்கு பிறகு தனுஷ் இயக்கி நடிக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இதன் காரணமாக இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 7 ஆம் இடம் உள்ளது.

    8. மதராசி (Madharasi) – 20 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 19M + 1M)

    பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் 'மதராஸி'. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்திருந்தார். மேலும், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.

    அமரன் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து மதராஸி படம் வெளியானதால் இப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எழுந்தது. இதன் காரணமாக இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 8 ஆம் இடம் உள்ளது.

    9. பைசன் காலமாடன் (Bison Kaalamaadan) – 17 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 15M + 2M)

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த ஸ்போர்ட்ஸ்-டிராமா படம் பைசன் காளமாடன். கபடி வீரரின் வாழ்க்கையை வெளிப்படுத்திய இப்படத்தில் பசுபதி, அமீர், லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு காரணமாக இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 9 ஆம் இடம் உள்ளது.

    10. காந்தா (Kaantha) – 14 மில்லியன் பார்வைகள் (அனைத்து மொழிகளிலும் - 6M + 7M + 1M)

    துல்கர் சல்மான், ராணா டகுபதி நடித்த பீரியட்-டிராமா படம் காந்தா. இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கியிருந்தார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.

    இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பினால் இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் அதிக பார்வைகளை பெற்று இப்பட்டியலில் 10 ஆம் இடம் உள்ளது.

    முடிவுரை:

    2025 தமிழ் சினிமாவுக்கு யூடியூப் ஒரு பெரிய ஆயுதமாக மாறியது. இந்த டிரெய்லர்கள் வெறும் ப்ரோமோக்கள் அல்ல; அவை ரசிகர்களின் உற்சாகத்தை அளவிடும் அளவுகோல்கள். சூப்பர் ஸ்டார்களின் படங்கள் டாப்பில் இருந்தாலும், இளம் இயக்குநர்களின் படங்களும் தங்கள் இடத்தைப் பிடித்தன. இது தமிழ் சினிமாவின் பன்முகத்தன்மையை காட்டுகிறது. அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்!

    • லோ பட்ஜெட்டில் தயாராகி, பல மடங்கு லாபத்தை இந்தாண்டு சில படங்கள் குவித்தன.
    • இந்த படங்கள், தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரே நேரத்தில் நம்பிக்கை ஊட்டின.

    பெரும் நட்சத்திரங்கள், நூறு கோடி பட்ஜெட், பிரம்மாண்ட விளம்பரம் அசெய்தால் தான் படம் வெற்றி பெறும் என்ற பார்முலாவை மாற்றி நல்ல கதை, சுவாரசியமான திரைக்கதை ஆகியவற்றால் 2025-ல் சில தமிழ் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்தன.

    "சிறிய பட்ஜெட் = சிறிய வசூல்" என்ற பழைய கணக்கை முறியடித்து, லோ பட்ஜெட்டில் தயாராகி, பல மடங்கு லாபத்தை இந்தாண்டு சில படங்கள் குவித்தன. இந்த படங்கள், தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரே நேரத்தில் நம்பிக்கை ஊட்டின.

    OTT, சிங்கிள் ஸ்க்ரீன், மல்டிப்ளெக்ஸ் என எல்லா தளங்களிலும் பொதுமக்களின் பாராட்டும், குடும்ப ஆதரவும் கிடைத்த படங்கள் தான் 2025-ன் உண்மையான பாக்ஸ் ஆபிஸ் ஹீரோக்கள். அவ்வகையில் இந்தாண்டு குறைந்த பட்ஜெட்டில் தயாராகி பல மடங்கு லாபம் கொடுத்த டாப் 5 வெற்றி படங்களை இந்த தொகுப்பில் காணலாம்

    1. டூரிஸ்ட் பேமிலி:

    பட்ஜெட்: ரூ.7 - 8 கோடி

    வசூல்: ரூ.90 கோடி

    சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவான படம் 'டூரிஸ்ட் பேமிலி'. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கிய இப்படம் உலக அளவில் பெரும் வரவெற்பிற் பெற்று வசூலை வாரி குவித்தது.

    இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாயை வசூலில் கடந்தது. உலகளவில் சுமார் ரூ.90 கோடி வசூலை குவித்தது.கம்மியான பட்ஜெடில் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்ட மில்லியன் டால்டர் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு 10 மடங்கு லாபம் கொடுத்து மாபெரும் வெற்றியை கொடுத்துது.

    2. தலைவன் தலைவி:

    பட்ஜெட்: ரூ.25 கோடி

    வசூல்: ரூ.100 கோடி

    விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமாக உருவான 'தலைவன் தலைவி' படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    ரூபாய் 25 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம், ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. ஒரு மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம், மிகப்பெரிய வெற்றியை இந்த ஆண்டு பதிவு செய்தது.

    3. டிராகன்:

    பட்ஜெட்: ரூ.35 கோடி

    வசூல்: ரூ.150 கோடி

    இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியான டிராகன் திரைப்படம் 10 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்து சாதனை படைத்தது.

    லவ் டுடே படத்தை தொடர்ந்து டிராகன் படமும் பிரதீப் ரங்கநாதனுக்கு வெற்றி படமாக அமைந்தது. இப்படம் மொத்தமாக உலக அளவில் 150 கோடி ரூபாய் வசூலை கடந்தது.

    பட்ஜெட் அளவில் இப்படம் இந்த பட்டியலில் உள்ள மற்ற படங்களைவிட சற்றுக் கூடுதலானாலும், அதன் அபாரமான வசூல் காரணமாக தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது

     4. மாமன்:

    பட்ஜெட்: ரூ.10 கோடி

    வசூல்: ரூ.50 கோடி

    பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவான படம் மாமன். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

    இப்படத்தில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக தயாரான இப்படம் கிராம மக்களை வெகுவாக கவர்ந்தது.

    ரூபாய் 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 50 கோடி வரை வசூல் செய்து கோலிவுட் சினிமா வட்டாரத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    5. குடும்பஸ்தன்:

    பட்ஜெட்: ரூ.8 கோடி

    வசூல்: ரூ.28 கோடி

    இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்து வெளியான படம் 'குடும்பஸ்தன்'. இப்படத்தில் சான்வி மேகனா கதாநாயகியாக நடித்திருந்தார்.

    ஒரு நடுத்தர குடும்ப ஆண்மகன் படும் பண கஷ்டங்களை மிக நகைச்சுவையாக இப்படம் கையாண்டது.

    வெறும் ரூ.8 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.28 கோடி வசூலை குவித்து சிறிய படங்களும் பெரிய வசூலை குவிக்கும் என்று இந்தாண்டு தொடக்கத்தில் எடுத்துக்காட்டியது.

    நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகை, பல படங்களில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சேமித்து வைத்திருந்தாராம். இந்த பணத்தை எல்லாம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த நிலையில், அவரது கணவர், புதிய தொழில் ஒன்றை தொடங்கலாம் என்று ஐடியா கொடுத்தாராம். நடிகையும் நல்லா இருக்கே... என்று சம்மதம் தெரிவித்தாராம். இதற்காக பல கோடி முதலீடு செய்தாராம் நடிகை.

    ஆனால், எதிர்ப்பார்த்த படி அந்த தொழில் சூடு பிடிக்க வில்லையாம். இதனால், நொந்து போன நடிகை, கணவரை நம்பி பணத்தை முதலீடு செய்ய கூடாது என்று முடிவு செய்து இருக்கிறாராம். இருந்தாலும் நடிகையின் கணவர் பல ஐடியாக்களோடு வலம் வந்துக் கொண்டிருக்கிறாராம்.

    ஒரு படத்திலேயே பல இளசுகளை தன்வசப்படுத்திய நடிகைக்கு தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறாராம். அதற்கு நடிகையை வைத்து முதல் படத்தை இயக்கிய இயக்குனரே காரணமாம். அப்படி என்ன என்று விசாரித்தால், நடிகையை தேடி வரும் படங்களை எல்லாம், கதை சரியில்லை, அந்த ஹீரோ வேண்டாம், படம் நன்றாக வராது என்று பல காரணங்களை சொல்லி நடிகையை இயக்குனர் நடிக்க விடாமல் செய்து வருகிறாராம்.

    இயக்குனரின் இந்த செயல் நடிகையின் நல்லதுக்கா.... இல்லை... வேற எதுக்கா... என்று கோடம்பாக்கத்தினர் அரசல் புரசலாக பேசி வருகிறார்கள்.

    நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த நடிகை, திருமணத்திற்கு முன்பு இரண்டு படங்களுக்கு அட்வான்ஸ் தொகையாக ரூ.10 கோடி வாங்கினாராம். அதன்பிறகு படம் நடித்து தர தாமதிக்கிறாராம். இதனால் கொடுத்த பணத்தை படக்குழு திரும்பி கேட்டார்களாம். ஆனால் அவர்களுக்கு பதில் அளித்த நடிகை புதிய படத்தில் நடித்து தருகிறேன். பணத்தை திரும்பி கேட்காதீங்க என்று சொல்லாமல் சொல்லி விட்டாராம். இதனால் பணம் கொடுத்தவர்கள் குழம்பி பணத்தை எப்படி திரும்பி பெறுவது என்று யோசித்து வருகின்றார்களாம்.

    டாப் ஹீரோக்களுடன் நடித்த நடிகை திடீரென திருமணம் செய்து கொண்டாராம். பின்னர் நடிக்க வந்த நடிகைக்கு வாய்ப்பு தர யாருக்கும் மனசு இல்லையாம். இதனால் விரக்தியடைந்த நடிகை என்ன செய்வது என்று யோசித்து நைட் பார்ட்டிக்கு ஹீரோக்களை அழைத்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம். அதுமட்டுமல்லாமல் சில இடங்களுக்கு அழையா விருந்தாளியாக செல்லும் நடிகை அட்ஜஸ்ட்மெண்ட் செய்யக்கூட தயார் என்று சொல்லியிருக்கிறாராம்.


    தன் இடுப்பழகில் ரசிகர்களை கிறங்கடித்த முன்னணி நடிகையின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என பல நடிகர்கள் ஏக்கத்துடன் இருந்தார்களாம். ஆனால் நடிகையோ நடிகர் ஒருவரை காதலிக்க தொடங்கினாராம். நடிகையின் மூலம் தயாரிப்பாளரான நடிகர் தன் முதல் படத்தில் அந்த நடிகையை நடிக்க வைத்தாராம்.

    இதற்கு சம்பளம் கேட்ட நடிகையிடம் நீ என் வருங்கால மனைவி ஆகப்போகிறாயே என்று ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றி வந்தாராம். பின்னர் சில வருடங்கள் இருவரும் உறவில் இருந்தார்களாம். அதன்பிறகு நடிகையின் மார்க்கெட் குறையவே நடிகர் கம்பி நீட்டிவிட்டாரம்.

    இதனால் நொந்துபோன நடிகை சொந்த ஊரில் மாப்பிளையை பார்த்து திருமணம் செய்து கொண்டாராம். ஆனால் இன்று வரை தன்னை ஏமாற்றிய அந்த நடிகர் மீது கடும் கோப்பத்தில் உள்ளாராம் நடிகை.

    நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் முன்னணி நடிகரின் படத்தில் நடித்த நடிகை ஒருவர், தெலுங்கு பக்கம் சென்றாராம். அங்கு முன்னணி நடிகரின் படத்தில் ஒப்பந்தமானாராம். அந்த படத்திற்காக பெரிய தொகையை சம்பளமாக கேட்டாராம். ஆனால் படக்குழு இதற்கு ஒப்புக் கொள்ளாமல் படத்தில் இருந்து விலக்கி விட்டார்களாம்.

    பின்னர் அந்த நடிகை, நான் அதிக படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதால் இந்த படத்தில் இருந்து நானே விலகி விட்டேன் என்று பில்டப் விட்டு வருகிறாராம்.

    முன்னணி ஹீரோக்களுடன் நடித்த நடிகை ஒருவர் டாப் ஹீரோ ஒருவருடன் நடிக்காததை பெரிய குறையாக நினைத்து வந்தாராம். இவருக்கு போட்டியாக இருக்கும் நடிகை அந்த நடிகருடன் இணைந்து நடித்து கெமிஸ்ட்ரியில் பின்னிவிட்டாராம். இதனால் கடுப்பான நடிகை இந்த தடவை வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்று நினைத்து பலபேரை தூது அனுப்பினாராம்.

    தூது ஒர்க்கவுட் ஆகவே அந்த டாப் ஹீரோவும் நடிகையும் நேரில் சந்தித்தார்களாம். பின்னர் ஹீரோவுடன் மூன்று நாட்கள் தனிமையில் பொழுதை கழித்த நடிகைக்கு கிரீன் சிக்னல் கிடைத்துவிடவே தன் படத்தில் ஏற்கனேவே கமிட் செய்திருந்த ஹீரோயினை தூக்கி விட்டு நடிகையை புக் செய்துவிட்டாராம்.

    இதனால் குஷியான நடிகை ஹீரோவின் அடுத்தப்படத்திலும் நடிக்க தூது அனுப்பவே ஒரு முறைதான் வாய்ப்பு என ஹீரோ கண்டிப்பாக சொல்லிவிட்டாராம்.

    ஒரு சில படங்களில் நடித்து பெரிய அளவில் வெளியே தெரியாத நடிகை ஒருவர் தேசிய விருது வாங்கிய பின்னர் பிசியான நடிகையாக மாறினாராம். பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தாராம். திருமணம் ஆன பின்னரும் இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம்.

    இவரை இயக்குனர்களும், நடிகர்களும் முத்தக் காட்சி, ஆபாச காட்சிகளில் நடிக்க வற்புறுத்தி வந்தார்களாம். இதனால் கோபமான நடிகை என் கணவருக்கு இந்த மாதிரி காட்சிகளில் நடிப்பது பிடிக்காது என்றும் நான் இது போன்ற காட்சிகளில் நடிக்க விருப்பபடவில்லை என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம். இதனால் முத்த காட்சிகள் இடம்பெறும் கதைகள் அவரிடம் வந்தால் ஆளவிடுங்கடா சாமி என்று எஸ்கேப் ஆகிவிடுகிறாராம்.

    பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இளம் நடிகை சிறிது காலம் சினிமாவில் இருந்து ஓய்வெடுத்து வந்தாராம். அதன்பின்னர் மீண்டும் நடிக்க வந்த நடிகை, பிரபல நடிகருடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டாராம். அந்த நடிகையின் பிறந்தநாளில் நடிகர் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தாராம்.

    அப்போது திடீரென நடிகை ஆண்டி ஆகிவிட்டார் என்றும் அவருக்கு வயது 31 கடந்து விட்டது என்றும் நடிகர் தெரிவித்தாராம். பொதுவெளியில் நடிகையின் வயதை கூறியதால் அவர் கோபத்தில் உள்ளாராம்.

    ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானாராம். எப்படியாவது நடிகையுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என பலர் தவம் கிடந்தார்களாம். ஒரு கட்டத்தில் மார்க்கெட் குறையவே நடிகை திருமணம் செய்து கொண்டாராம்.

    அதன்பின்னர், வரும் படங்களை தட்டிக்கழிக்காமல் நடித்து வருகிறாராம். ஒரு படப்பிடிப்பின் போது நடிகை மீது ஆசைப்பட்ட முன்னணி நடிகர் எதாவது சொல்லி நடிகையின் சுண்டுவிரலையாவது தொட்டுவிட வேண்டும் என இயக்குனருடன் சேர்ந்து பல தில்லாலங்கடி வேலை பார்த்து வந்தாராம். இதை தெரிந்து கொண்ட நடிகை முடியவே முடியாது என ஸ்டிரிக்டாக சொல்லிவிட்டாரம்.

    ×