search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kollywood"

    • தமிழில் பல திறமையான இயக்குனர்கள் உள்ளனர் என்றார் அனில் கபூர்
    • இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்க நான் தயங்கியதில்லை என்றார் அனில் கபூர்

    80களிலும், 90களிலும் இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர், அனில் கபூர் (67).

    சில தினங்களுக்கு முன் அனில் கபூர் சென்னை வந்திருந்த போது அவரிடம் அவரது திரைப்பயணம் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டன.

    அதற்கு அவர் பதிலளித்ததாவது:

    இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நான் நடித்திருந்தாலும் தமிழ் படத்தில் நடிக்காதது எனக்கு வருத்தம்தான்.

    தமிழில் திறமையான இயக்குனர்கள் இருக்கிறார்கள்; ஆனால், எனக்கு இதுவரை எவரும் வாய்ப்பு அளிக்கவில்லை.

    இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்க நான் என்றுமே தயங்கியதில்லை. தமிழில் வெற்றி பெற்ற "முதல்வன்" மற்றும் தெலுங்கில் வெற்றி பெற்ற "ஸ்வாதி முத்யம்" ஆகிய படங்கள் இந்தியில் உருவான போது அந்த இயக்குனர்களை நானாக தேடிச் சென்றுதான் வாய்ப்பு கோரினேன். அவை இன்றும் பேசப்படுகின்ற திரைப்படங்கள்.


    கே. பாக்யராஜ் அவர்களின் பல வெற்றி படங்களின் இந்தி உருவாக்கத்தில் நான் பங்கேற்றதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

    கலைத்துறையின் சிறப்பே கலை படைப்புகள் குறித்து மாறுபட்ட கருத்துகள் உருவாவதுதான்.

    நல்ல எதிர்காலத்திற்காக, நிகழ்காலத்தில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அனில் கபூர் கூறினார்.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் கன்னட மொழியில் உருவாக்கிய "பல்லவி அனுபல்லவி" திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் அனில் கபூர். அதில் தோன்றும் பல காட்சிகளை மீண்டும் மணிரத்னம் "மவுன ராகம்" திரைப்படத்தில் கார்த்திக்-ரேவதி பங்கேற்கும் காட்சிகளில் கையாண்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

    90களின் இறுதி வரையில் இந்தி திரையுலகில் மிகக் குறைவான நடிகர்கள்தான் திரையில் மீசை வைத்து கொண்டு நடித்தனர். ஆங்கில பட கதாநாயகர்கள் போல் மீசை மற்றும் தாடி இல்லாமல் நடிப்பதுதான் அங்கு வழக்கமாக இருந்தது.


    சத்ருகன் சின்கா, நானா படேகர் போன்ற ஒரு சிலர் மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருந்தனர்.

    அவர்களை போன்றே அனில் கபூரும், மீசையுடனே தனது படங்களில் நடித்தார்.

    கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்து நடிப்பதில் அனில் கபூர் கவனம் செலுத்துபவர்.

    எடுத்துகாட்டாக, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமானுக்கு ஆஸ்கர் விருதை பெற்று தந்த "ஸ்லம்டாக் மில்லியனர்", 2011ல் ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோ, டாம் க்ரூயிஸ் (Tom Cruise) கதாநாயகனாக நடித்த "மிஷன் இம்பாசிபிள் – கோஸ்ட் ப்ரோடோகால்", 2023ல் வெளிவந்த "அனிமல்" உள்ளிட்ட படங்களில் அவர் ஏற்ற முக்கிய கதாபாத்திரங்கள் விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்று தந்தது.


    எப்போதும் இளமை குன்றாத தோற்றத்துடன் இருக்கும் அனில் கபூர், 2019ல் ஒரு பேட்டியில் தனது இளமைக்கு காரணம் தான் விரும்பி உண்ணும் தென்னிந்திய இட்லி, சாம்பார், சட்னி, அரிசி, ரசம் ஆகியவை என கூறியிருந்தார்.

    • இந்தி ரசிகர்கள் தென்னிந்திய படங்களையும் விரும்ப தொடங்கி உள்ளனர்
    • நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை ஈர்க்க இயக்குனர்கள் முயல்கின்றனர்

    தென்னிந்திய மாநிலங்களில் இருந்து நாடு முழுவதும் வெளியிடப்படும் திரைப்படங்கள் பெரும் வசூலை அள்ளி குவிக்கின்றன. புஷ்பா, கேஜிஎஃப்-2, காந்தாரா, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்கள் இதற்கு உதாரணங்கள்.

    தற்போதைய இயக்குனர்களும், முன்னணி தென்னிந்திய கதாநாயகர்களும் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தங்கள் படங்கள் உருவாக வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர்.

    ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முன்னணி நடிகரை தங்கள் திரைப்படங்களில் ஒரு வேடத்தில் இடம்பெற செய்து நாடு முழுவதும் உள்ள பல மாநில ரசிகர்களையும் ஈர்க்க தொடங்கி உள்ளனர்.

    இவ்வருடம் வெளியாகப் போகும் 7 தென்னிந்திய திரைப்படங்கள், பாலிவுட்டில் பெரும் வசூலை குவிக்கப் போவதாக திரைப்பட வர்த்தகர்கள் கணிக்கின்றனர்.

    அந்த திரைப்படங்கள் பின்வருமாறு:

    1. கல்கி 2898 ஏ.டி. - பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள படம். பிரபாஸ் மற்றும் தீபிகா ஆகியோருடன் கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் நடிப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


    2. புஷ்பா 2, தி ரூல் - அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் இப்படம், முதல் பாகத்தை விட சிறப்பாக உருவாக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


    3. காந்தாரா, சேப்டர் 1 - காந்தாரா முதல் பாகத்தை விட பெரும் வெற்றி பெறும் முனைப்பில், ரிஷப் ஷெட்டி இப்படத்திற்காக உழைத்து வருகிறார்.


    4. தேவரா பாகம் 1 - ஆர்ஆர்ஆர் வெற்றிக்கு பிறகு ஜுனியர் என்டிஆர் ரசிகர்களுக்கு தரும் இவ்வருட பரிசு. இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் தெலுங்கு திரையுலகில் நுழைகிறார்.


    5. கேம் சேஞ்சர் - முன்னணி தெலுங்கு ஹீரோவான ராம்சரணும், தமிழ் திரையுலகின் மூத்த இயக்குனர் ஷங்கரும் இணைந்துள்ள படம். அரசியல் நெடி அதிகம் உள்ள இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.


    6. இந்தியன் 2 - 1996ல் நாடு முழுவதும் சக்கைபோடு போட்ட கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணியில் உருவான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம். சேனாபதியாக மீண்டும் மிரட்ட வருகிறார் கமல்.


    7. கங்குவா - நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் ஹீரோ சூர்யா நாயகனாக நடிக்கும் படம். இதுவரை இல்லாத சாதனையாக 38 மொழிகளில் உருவாகிறது.


    இப்படங்கள் ரசிகர்களிடம் எவ்வளவு தூரம் வரவேற்பை பெறும் என்பது வரும் மாதங்களில் தெரிந்து விடும்.

    வம்பு நடிகர் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். இதில் இவருக்கு ஜோடியாக ராசியான நடிகையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம்.
    வம்பு நடிகர் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். இதில் இவருக்கு ஜோடியாக ராசியான நடிகையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். நடிகையும் நடிக்க ஒப்புக்கொண்டு, படப்பிடிப்புக்காக காத்திருக்கிறாராம். இந்த நிலையில், நடிகர் இந்த நடிகை வேண்டாம், சின்ன நம்பர் நடிகைதான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறாராம்.

    தற்போது சின்ன நம்பர் நடிகைக்கு வரவேற்பு அதிகம் இருப்பதால், நடிகர் அடம்பிடிப்பதாக கூறுகிறார்களாம். ஆனால், இதைக்கேட்ட படக்குழுவினர் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்களாம்.
    வனமகளாக வந்த நடிகை குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தாராம்.
    வனமகளாக வந்த நடிகை குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தாராம். முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று பலரும் பேசி வரும் நிலையில், கடைசியாக நடித்த சாக்லெட் பாய் நடிகருடன் காதல் கிசுகிசுவில் இணைந்தாராம். இதையடுத்து அவருடன் விரைவில் திருமணம் என்ற செய்தி வெளியானதாம்.

    இதனால், நடிகைக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கி இருக்கிறதாம். பல இடங்களில் இந்த நடிகையா, வேண்டவே வேண்டாம். திருமணம் எப்போது செய்து கொள்வார் என்று தெரியவில்லை. படப்பிடிப்பு பாதியில் திருமணம் செய்து கொண்டால் படம் என்ன ஆகும் என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
    மலையாளத்தில் காதல் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகையை, தமிழில் அழைத்து வர பல இயக்குனர்கள் போட்டி போட்டார்களாம்.
    மலையாளத்தில் காதல் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகையை, தமிழில் அழைத்து வர பல இயக்குனர்கள் போட்டி போட்டார்களாம். இதில் ஒரு இயக்குனர் விடாபிடியாக இருந்து, நடிகையை தமிழுக்கு அழைத்து வந்தாராம். நடிகை நடித்த படம் ரசிகர்களை கவர, தொடர்ந்து ரவுடியான பாடலுக்கு நடனம் ஆட, அவரின் மார்க்கெட் திடீர் என உயர்ந்ததாம்.

    பல இயக்குனர்கள் நடிகை அதிக சம்பளம் கேட்பாரோ என்று பேச, நடிகையோ ஸ்கிரிப்ட் கரெக்டா இருந்தா, எனக்கு முக்கியத்துவம் இருந்தா சம்பளத்தை குறைத்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறாராம். பட வாய்ப்புக்காக நடிகையின் புது டெக்னிக் என்று பலரும் பேசி வருகிறார்களாம்.
    தந்தை பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டிருக்கும் இளம் கதாநாயகியிடம் புத்தாண்டு பலன் சொன்னாராம், ஒரு ஜோதிடர்.
    தந்தை பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டிருக்கும் இளம் கதாநாயகியிடம் புத்தாண்டு பலன் சொன்னாராம், ஒரு ஜோதிடர். 

    “இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளாதே, பட உலகில் உனக்கு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது. ‘நம்பர்-1’ தென்னிந்திய கதாநாயகி ஆவதற்கான யோகம் உன் ஜாதகத்தில் இருக்கிறது” என்று அவர் நம்பிக்கையூட்டினாராம். என்றாலும் அந்த நடிகையின் பெற்றோர்கள், மகளுக்கு மாப்பிள்ளை தேடுவதில் மும்முரமாக இருக்கிறார்களாம்!
    சமீபத்தில் கிரிக்கெட் படத்தில் விளையாடிய நடிகை, தான் நடித்த படத்தின் வெற்றி விழாவில் கலந்துக் கொண்டாராம்.
    சமீபத்தில் கிரிக்கெட் படத்தில் விளையாடிய நடிகை, தான் நடித்த படத்தின் வெற்றி விழாவில் கலந்துக் கொண்டாராம். அதில் நடிகை பேசும்போது, "பலர் வெற்றி பெறாத படங்களுக்குக்கூட வெற்றி விழா நடத்துகின்றனர். இது தான் உண்மையான வெற்றி விழா" எனப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினாராம்.

    இதனால், சமூக வலைத்தளத்தில் பெரிய பிரச்சனை நடைபெற்றதாம். சமீபத்தில் வெளியான பெரிய நட்சத்திரங்களின் படங்களைத்தான் நடிகை குறிப்பிட்டு சொல்லியதாக சண்டை எற்பட்டதாம். இதையறிந்த நடிகை, நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. தவறாக சொல்லியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டாராம். இதன் பிறகுதான் ரசிகர்கள் அமைதியானார்களாம்.
    முன்னணி நடிகை என்று பெயர் பெற்று, நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து இருக்கும் நடிகை, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டும் நடித்து வந்தாராம்.
    முன்னணி நடிகை என்று பெயர் பெற்று, நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து இருக்கும் நடிகை, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டும் நடித்து வந்தாராம். சமீபத்தில் விஸ்வாசமான படத்தில் நடிகருடன் நடிக்க சம்மதித்தாராம். 

    இதையடுத்து தளபதியார் நடிக்க இருக்கும் படத்தில் நடிகையை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்ததாம். நடிகையும் நடிக்க சம்மதித்தாராம். ஆனால், சில நிபந்தனைகள் போட்டிருக்கிறாராம் நடிகை. அதிக பட்சமாக சம்பளம். குறைந்த நாட்கள் தான் கால்ஷீட் என படக்குழுவினருக்கு நிபந்தனை போட்டிருக்கிறாராம்.
    சமீப காலமாக வாரிசு நடிகைக்கும், திருமணத்திற்குப் பிறகும் பல படங்களில் நடித்து வரும் நடிகைக்கும் போட்டி நடந்து வருகிறதாம்.
    சமீப காலமாக வாரிசு நடிகைக்கும், திருமணத்திற்குப் பிறகும் பல படங்களில் நடித்து வரும் நடிகைக்கும் போட்டி நடந்து வருகிறதாம். சமீபத்தில் ஒரு இயக்குனரின் புதிய படத்தில் நடிப்பது தொடர்பாக, 2 கதாநாயகிகளுக்குள் போட்டி இருந்து வருகிறதாம்.

    இந்த படத்தை பிடிப்பதற்காக இரண்டு பேருமே தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக வாக்குறுதி கொடுத்து இருக்கிறார்களாம். இந்த நிலையில், வாரிசு நடிகை மேலும் சம்பளம் குறைக்க இறங்கி வந்திருக்கிறாராம். 
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த வீரமான நடிகை, சமீபத்தில் உருவான படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும்...
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த வீரமான நடிகை, சமீபத்தில் உருவான படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டாராம். அந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாம். இதைப் பார்த்த பல இயக்குனர்கள், பல தயாரிப்பாளர்கள் நடிகையை அணுகி எங்கள் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுங்கள் என்று கேட்டிருக்கிறார்களாம்.

    ஆனால், நடிகை ஒரு பாடலுக்கு இனி நடனம் ஆட மாட்டேன் என்று கூறிவிட்டாராம். அந்த பாடலுக்கு ஆடியதால் தன்னுடைய இமேஜ் போய் விட்டது என்று நினைத்து, இனிமேல் அந்த தவறை செய்ய மாட்டேன் என்று பலரிடமும் கூறி வருகிறாராம். 
    பால் நடிகை தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழி படங்களில் நடித்து வருகிறாராம்.
    பால் நடிகை தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழி படங்களில் நடித்து வருகிறாராம். அதனால் அவர் அடிக்கடி வானத்தில் பறந்து கொண்டே இருக்கிறாராம். படங்களில் நடிப்பதுடன், அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வருகிறாராம்.

    சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து அவரிடம் கதை சொல்வதற்கு டைரக்டர்கள் வரிசையில் நிற்கிறார்களாம். இந்த நிலையில், படுகவர்ச்சியான புகைப்படங்களையும், சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படங்களையும் வெளியிடுவது, ஒரு பெரிய நடிகைக்கு அழகு அல்ல என்று நடிகைக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்களாம்.
    போராட்ட பெண்ணாக இருந்தவர் பெரிய முதலாளிக்கு வீட்டுக்கு சென்று மிகவும் பிரபலமானாராம்.
    போராட்ட பெண்ணாக இருந்தவர் பெரிய முதலாளிக்கு வீட்டுக்கு சென்று மிகவும் பிரபலமானாராம். அப்போது இருந்தே அம்மணியை சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்களாம். சமீபத்தில் அம்மணி சாமி படத்திலும், டாக்டர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்தாராம்.

    இதற்கு நடிகையை சாமி வேடமா, டாக்டர் வேடமா என்று மீண்டும் கலாய்க்க தொடங்கினார்களாம். நீண்ட காலமாக சமூக வலைதளத்தில் எந்த புகைப்படத்தையும் போட நடிகை, இரு தினங்களுக்கு முன்பு புது படத்தில் நடிப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டாராம்.

    இதைப்பார்த்த நெட்டிசன்கள், முதலில் நடித்த படமே வரல... அதுகுள்ள அடுத்த படமா என்று மீண்டும் கலாய்க்க தொடங்கி இருக்கிறார்களாம்.
    ×