என் மலர்
நீங்கள் தேடியது "Actor"
பிரபல நடிகர் ஒருவர் திரைப்பட இசை வெளியீட்டிற்கு சென்றிருந்தாராம். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினியை குறிவைத்த நடிகர் மேடையிலேயே அவரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டாராம். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக நடிகர்கள் கொந்தளித்து பிரபல நடிகரை மன்னிப்பு கேட்க வற்புறுத்தினார்களாம். இந்த விஷயம் பெரிய சர்ச்சையாகிவிடக் கூடாதே என்று எண்ணிய நடிகர் மேடையிலேயே பகிரங்கமாக மன்னிப்பு கேட்டாராம்.
திரையுலகின் உச்சத்தில் இருக்கும் இசையமைப்பாளர் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறாராம். இசை என்றாலே அந்த பிரபலத்தை தேடி பலர் செல்ல நண்பர் ஒருவரும் தன் படத்திற்கு இசையமைக்குமாறு கேட்டாராம். ஆனால், இசையமைப்பாளரோ புகழ் போதையில் அதலாம் செய்ய முடியாது என்று கூறிவிட்டாராம்.
இசையமைப்பாளர் ஏன் இப்படி சொன்னார் என்று யோசித்த நண்பருக்கு அதற்கு பிறகு தான் தெரிந்ததாம் இந்த செயலுக்கு பின்னால் பெரிய தலைகளின் தலையீடு உள்ளது என்று. இதனால் மனம் வெறுத்த நண்பர் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறாராம்.
சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நடிகை ஒரு சில படங்களுக்கு பின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினாராம். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறாராம். இதனால் ரசிகர்கள் பலர் நடிகையிடம் ஆபாசமான கேள்விகளை கேட்டு அது சர்ச்சையாகியும் உள்ளதாம்.
இப்படி பரபரப்பாக சுற்றும் நடிகை ஒரு முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க ஆடிஷனுக்கு சென்றாராம். அங்கு இயக்குனர் நடிகையை பார்த்ததும் படுக்கையறைக்கு அழைக்கவே பயந்து போன நடிகை விட்டா போதும் சாமி என்று அங்கிருந்து தலைத்தெறிக்க ஓடிவிட்டாராம்.
- நடிகர் ராமராஜன் நடித்த நம்ம ஊரு ராசா, சுப்பிரமணிய புரம், திண்டுக்கல் சாரதி, வியூகம், மோசடி உள்ளிட்ட பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து ள்ளேன்.
- தற்போது வேலை இல்லாத காரணத்தால் பாட்டில் சேகரித்து அதனை விற்று பிழைப்பு நடத்தி வருகிறேன்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு பாட்டில் சேகரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் அந்தோணி (வயது 40). இவர் அதே பகுதியில் பல மாதங்களாக இதே பணியில் ஈடுபட்டு வரு கிறார். பாட்டில் கிடைக்காத சமயங்களில் திரைப்பட பாடல்களை பாடியபடியும், ரஜினி ஸ்டைலில் தீக்குச்சியை தன் உடலில் பற்ற வைத்தும் அப்பகுதி மக்களை மெய்சிலிர்க்க வைத்தார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், நடிகர் ராமராஜன் நடித்த நம்ம ஊரு ராசா, சுப்பிரமணிய புரம், திண்டுக்கல் சாரதி, வியூகம், மோசடி உள்ளிட்ட பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து ள்ளேன்.
பட வாய்ப்பு இல்லாத சமயங்களில் எனது சொந்த ஊருக்கு வந்து விடுவேன். தற்போது வேலை இல்லாத காரணத்தால் பாட்டில் சேகரித்து அதனை விற்று வருகிறேன். நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் பலரை தனக்கு தெரியும் என்றும், தன்னால் மிமிக்கிரி உள்ளிட்ட பல திறமைகளை செய்து காட்ட முடியும் என கூறினார்.
குறிப்பாக ரஜினிகாந்த் படத்தில் வரும் பல்வேறு வசனங்களை பேசிய அந்தோணி அவரைப் போலவே தீக்குச்சியை தனது உடலில் பற்ற வைத்து எரிய வைத்தார். தனக்கு வருவாய் கிடைத்தால் அதில் பாதியை இல்லாதவர்களுக்கு உதவுவேன் என்று தெரிவித்தார்.
தற்போது கிடக்கும் வருவாய் போதுமானதாக இருந்தபோதிலும் சினிமாவில் நடித்து பெயர் ெபற வேண்டும் என்பதே தனது ஆசை என்றார்.
பிரபல தொகுப்பாளினி பல முன்னணி நடிகர்களின் படங்களின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாராம். அப்போது நடிகர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தில் அவர்களுடன் பார்ட்டி, பப் என்று சுற்றி வந்தாராம். ஒரு நாள் முன்னணி நடிகருடன் பார்ட்டிக்கு சென்ற நடிகை தலைக்கேறும் அளவிற்கு குடித்துவிட்டு பார்க்கிங்கில் மயங்கி கிடந்தாராம்.
இதனை பார்த்த அந்த முன்னணி நடிகர் தனக்கு தேவையானதை முடித்துவிட்டு நடிகையை அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டாராம். அதன்பின் வந்த தொகுப்பாளினியின் நண்பர்கள் அவரை அழைத்து சென்றார்களாம்.
பிரபல நடிகர் ஒருவர் என்னதான் தன்னை வெளியில் நல்லவராக காட்டிக் கொண்டாலும் தன்னுடன் படத்தில் நடிக்கும் நடிகைகளை தனக்கு இரையாக்க வேண்டும் என துடித்து வந்தாராம். அம்மா- மகள் என இருவரையும் அடைந்துவிட வேண்டும் என நினைத்து கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்தாராம். அவரது ஆசைக்கு ஓகே சொல்லவில்லை என்றால் அவர்களை தயாரிப்பாளர்களிடம் சொல்லி படத்தில் இருந்து தூக்கிவிட்டு அடுத்த ஹீரோயினை கரெக்ட் செய்ய ஆரம்பித்துவிடுவாராம்.
திரைத்துறையில் பிரபலமாக வேண்டுமே என்று நினைக்கும் நடிகைகள் என்ன செய்வது எல்லாம் விதி என்று தலையில் அடித்துக் கொண்டு நடிகருடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து வருகிறார்களாம்.
தன் முதல் படத்திலேயே பிரபலமான நடிகை அதே நடிகருடன் தொடர்ந்து ஜோடி சேர்ந்து வந்தாராம். திடீரென நடிகருக்கு திருமணம் நடக்கவே நடிகையோ சில காலமாக சினிமா பக்கமே வராமல் இருந்தாராம். அதன்பின் நடிக்க தொடங்கிய நடிகையின் படங்கள் சரியாக ஓடவில்லையாம்.
அதனால் காதல் கதையை விட்டு திரில்லரில் கவனம் செலுத்திய நடிகைக்கு படங்கள் வரவேற்பை பெற தொடங்கியதாம். இதனால் தயாரிப்பாளர்கள் பலர் இதுமாதிரியான கதையில் நடிக்க நடிகையை அணுகினார்களாம். ஆனால் நடிகை மறுத்ததால் கடுப்பான தயாரிப்பாளர் இனி நடிகையை எந்த படத்திலும் நடிக்க வைக்கக்கூடாது என்று முடிவெடுத்துள்ளாராம்.
அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பல படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறாராம். நடிகையின் மீது ஆசை கொண்ட இயக்குனர்கள் பலர் அட்ஜஸ்ட்மென்டுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் கேட்டு வந்தார்களாம். இதற்கு மறுத்த நடிகை ஒரு நாள் காரில் சென்று கொண்டிருக்கும் போது கார் வேறு பக்கமாக திரும்பியதாம். இதனால் பயந்து போன நடிகை என்ன நடக்குமோ என்று நினைக்கும் போது ஒருவர் திடீரென காரின் முன் பாய்ந்து காரை நிறுத்தினாராம். உடனே கீழே இறங்கிய நடிகை அவர்களை பளார் என்று கண்ணத்தில் ஒன்று வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாராம்.
பிரபல நடிகர் ஒருவர் தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த நடிகையை ஆசை.. ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். இருவரும் சில வருடங்கள் மகிழ்ச்சியாக இருந்த நிலையில் திடீரென நடிகை விவாகரத்து கேட்டாராம். நடிகரும் எந்தவித ஆட்சேபனையும் இல்லாமல் விவாகரத்து கொடுத்துவிட்டாராம். நடிகை மீது தவறு இருப்பதால் தான் நடிகர் எதுவும் சொல்லாமல் விவாகரத்து கொடுத்துவிட்டார் என்று பலரும் பேசி வந்தார்களாம்.
ஆனால், நடிகர், நடிகை இருக்கும்போதே வேறு ஒரு ஹீரோயினுடன் தொடர்பில் இருந்துள்ளாராம். இது தெரிந்து தான் நடிகை, நடிகரை விட்டு பிரிந்து சென்றுவிட்டாராம். நடிகை சென்றதும் இதுதான் வாய்ப்பு என்று நினைத்த நடிகர் காதலியின் வீட்டில் தஞ்சம் புகுந்துவிட்டாராம்.
ஊருக்கு அறிவுரை சொல்லும் பிரபல நடிகருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறதாம். இவர் அறிவுரை மட்டுமல்லாமல் பலபேருக்கு உதவி செய்தும் வருகிறாராம். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பொது கருத்துகளை கூறி வரும் நடிகர் பல படங்களிலும் நடித்து வருகிறாராம்.
நல்லவர் என பெயர் எடுத்த நடிகர், நடிகை மீது ஏற்பட்ட மோகத்தால் பிளேபாய் ஆகிவிட்டாராம். இவர் கமிட்டான படங்களிலுள்ள நடிகைகளுடன் ஊர் சுற்றி வருவதால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் இருகிறார்களாம்.
பல படங்களில் நடித்து பிரபலமான நடிகைக்கு வயது ஏற ஆரம்பித்தவுடன் மார்க்கெட் குறைய ஆரம்பித்துவிட்டதாம். பிரபலமாகிவிட்டோமே அதை தக்க வைத்து கொள்ள வேண்டுமே என நினைத்த நடிகை சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து சம்பாரித்து வந்தாராம். ஆனாலும் அவர் நினைத்த பாப்புலாரிட்டி கிடைக்கவில்லை என்றதும் ஆசை வார்த்தைகளை கூறி இயக்குனரை வளைத்துபோட்டு ஜாலியாக சுற்றி வருகிறாராம்.