என் மலர்

    பெண்கள் உலகம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இனிமையான மண வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை.
    • கருத்து வேறுபாடுகளால் மணமுறிவுகள் அதிகமாகி வருகின்றன.

    இனிமையான மண வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. கருத்து வேறுபாடுகளால் மணமுறிவுகள் அதிகமாகி வருகின்றன. விவாகரத்து செய்யாவிட்டாலும் சலிப்புடன் திருமண வாழ்க்கை வாழ்பவர்கள் பலர். இன்னொருபுறம் எனக்கு திருமணமே வேண்டாம், தனியாக வாழ்கிறேன் என்று திருமணத்தையே நிராகரிக்கும் போக்கும் சிலரிடம் நிலவுகிறது.

    வேலைக்கு போனதும் திருமணம் என்ற சமூக நியதி மெல்ல மெல்ல மாறி, சொந்தமாக ஒரு வாகனம், வீடு என்று வாங்கியதும் திருமணம் என்ற முடிவில் பலர் இருக்கிறார்கள். இதனால் வயதும் கூடிப்போகிறது. நிலைமை உயர உயர எதிர்பார்ப்புகள் எகிற ஆரம்பிக்கின்றன. இதனாலும் திருமணங்கள் தடைபடுகின்றன.

    திருமணம் எனும் அமைப்பு மிகுந்த சிக்கலான விஷயமாக மாறி வருவது உண்மை. இதற்கு முக்கிய காரணம் திருமணம் என்பது இன்றைக்கு குடும்ப நிகழ்வாக இல்லாமல் தனி மனித ஏற்பாடாக மாறியதுதான் அதற்கு காரணம். திருமணம் என்றில்லை, எல்லா உறவுகளிலும் ஏமாற்றம் வருவதற்கு காரணம் எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போவதுதான்.

    திருமணத்துக்கு தயாராதல் என்பது வீட்டை சரிசெய்து ஷோ செய்வது அல்ல. வரப்போகும் பந்தத்துக்காக தன்னை தயார்செய்துகொள்வது. மேலை நாடுகளில் இதற்கு கவுன்சலிங் போகிறார்கள்.

    கையில் இருக்கும் 'ஆப்'பை தட்டினால் அரை மணி நேரத்தில் எதுவும் வீடு தேடி வரும் என்ற மனப்பான்மை இன்றைய 20 வயசுக்காரர்களை பெரிதும் பலவீனப்படுத்தி விட்டது. "பிடிக்கலையாம், அதான் பிரிஞ்சிட்டாங்களாம்" என்று ஒற்றை வரியில் திருமண முறிவுக்கு பதில் தருகிறார்கள்.

    எனவே பொறுமையாக இருந்தால் சரியாகும் என்ற பழைய அறிவுரை போதாது. அடிப்படை மாற்றம் நிகழ வேண்டிய இடம் திருமணம் பற்றிய எண்ணங்கள், எதிர்பார்ப்புகளில்தான்.

    அதேபோல் உங்கள் மேல் உங்கள் வாழ்க்கைத் துணை கொண்ட எதிர்பார்ப்புகள் என்னவாக இருக்கும் என யூகித்து பட்டியல் இடுங்கள். பட்டியலை பரிமாறிக்கொள்ளுங்கள். இது பிரச்சினையை தீர்க்காது. ஆனால், பிரச்சினை எங்கு இருந்து தொடங்கி இருக்கிறது? என்பதை புரிய வைக்கும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நகை வடிவமைப்பில் புதுமைகள் வந்துகொண்டே இருக்கின்றன.
    • கலாசார ரீதியாக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    பெண்களின் நகை வடிவமைப்பில் ஏராளமான புதுமைகள் வந்துகொண்டே இருக்கின்றன. அதிலும், ஆடையை அணிகலன்களுடன் இணைத்து வடிவமைப்பது கலாசார ரீதியாக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வரிசையில் துணிகளில் போடப்படும் விதவிதமான பாரம்பரிய எம்பிராய்டரி தையலை பயன்படுத்தி 'எம்பிராய்டரி நகைகள்' வடிவமைக்கப்படுகின்றன.

    பாரம்பரிய தையல் கலையையும் புதுவித அணிகலள் தயாரிப்பையும் ஒருங்கிணைந்து எம்பிராய்டரி நகைகள் வடிவமைக்கப்பட்டாலும், இன்றைய இளசுகளை கவரும் வகையில் டிரெண்டில் உள்ள நகை அமைப்புகளை கொண்டு இருப்பதே இதன் சிறப்பம்சம் ஆகும்.

    இந்த எம்பிராய்டரி நகைகள் பாரம்பரியம், மாடர்ன் மற்றும் டிரெண்டியான உடைகளுக்கும் பொருந்தும் வகையில் இருப்பதோடு இலகுவான எடையுடன் அணிவதற்கு சவுகரியமாக இருக்கும் வகையிலும் தயாரிக்கப்படுகின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?
    • சம்பந்தப்பட்ட முடிவுகளை தானே எடுக்க வேண்டும்.

    இரண்டு மன்னர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான், நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலை சொன்னால் உன் நாடு உனக்கே என்றான்.

    கேள்வி:- ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்? என்று கேட்டான். (வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியை கேட்டுவிட்டு விடை சொன்னால்தான் நமக்கு திருமணம் என்று சொல்லியிருந்தாள்.)

    தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான். விடை கிடைக்கவில்லை. கடைசியாக சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரகிழவியிடம் சென்று கேட்டான். அவள் சொன்னாள், விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு திருமணம் ஆகும். உனக்கு நாடு கிடைக்கும். ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?. அதற்கு அவன் என்ன கேட்டாலும் தருகிறேன் என்று சொன்னான்.

    சூனியக்கார கிழவி சம்பந்தப்பட்ட முடிவுகளை தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம் என்றாள். இந்த பதிலை அவன் போரில் வென்ற மன்னனிடம் சென்று கூறினான், அந்த பதிலை அவன் தன் காதலியிடம் சொன்னான். எனவே அவர்களது திருமணம் நடந்தது. இவனுக்கு நாடும் கிடைத்தது. அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான். வேண்டியதை கேள் என்றான். அவள் நீ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற அவனும் ஒப்பு கொண்டான்.

    உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறி காட்சியளித்தாள். அவள் சொன்னாள், நாம் வீட்டில் தனியாக இருக்கும்போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன். ஆனால் நான் வெளியே வரும்போது கிழவியாக இருந்தால் வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக இருப்பேன். இதில் எது உன் விருப்பம் என்று கேட்டாள்.

    அவன் சற்றும் யோசிக்காமல், இது உன் சம்பந்தப்பட்ட விஷயம். முடிவு நீதான் எடுக்க வேண்டும் என்று சொன்னான். அவள் சொன்னாள், முடிவை என்னிடம் விட்டுவிட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்க தீர்மானித்துவிட்டேன் என்றாள்.

    ஆம்! பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும்போது சூனியக்கார கிழவியாகி விடுகிறாள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • துணிகளுக்கு நறுமணமும் அளிக்கக்கூடியவை ஃபேப்ரிக் சாஃப்ட்னர்கள்.
    • ஃபேப்ரிக் சாஃப்ட்னர்களை விட்டிலேயே தயார் செய்ய முடியும்.

    நாம் உடுத்தும் துணிகளுக்கு மென்மையும், நறுமணமும் அளிக்கக்கூடியவை ஃபேப்ரிக் சாஃப்ட்னர்கள். இவை துணிகளை நீண்டகாலம் சிறந்த முறையில் பராமரிக்க உதவுவதோடு, அவற்றின் நிறங்களை மங்காமல் பாதுகாக்கும். ஃபேப்ரிக் சாஃப்ட்னர்களை விட்டிலேயே தயார் செய்ய முடியும். இல்லத்தரசிகள் இதை சுயதொழிலாக மேற்கொண்டு வருமானம் ஈட்டலாம். ஃபேப்ரிக் சாஃப்ட்னர் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன? மூலப்பொருட்கள் எங்கே கிடைக்கும். எவ்வாறு தயாரிப்பது எப்படி சந்தைப்படுத்துவது என்பதை தெரிந்து கொள்வோம்.

    தேவையான பொருட்கள்:

    ஆர்.ஓ.அல்லது மினரல் வாட்டர் - 900 மி.லி

    சாப்ட்னர் பிளேக்ஸ் 100 கிராம்

    ஐசோபுரோபைல் ஆல்கஹால் - 50 மி.லி

    வாசனை திரவியம் - 20 மி.லி விருப்பமான வண்ணம் - 3 துளிகள்

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி லேசாக சூடுபடுத்தவும். பிறகு அதில் சாப்ட்னர் பிளேக்சை போட்டு அது கரையும் வரை நன்றாக கலக்கவும். பின்னர் அந்த கலவையை ஆற வைக்கவும். பின்னர் அதில் ஐசோபுரோபைல் ஆல்கஹால், வாசனை திரவியம், வண்ணம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது ஒரு லிட்டர் அளவுள்ள 'ஃபேப்ரிக் சாஃப்ட்னர்" கிடைக்கும். இதனை காற்று புகாத உலர்ந்த பாட்டில்களில் ஊற்றி வைக்கவும்.

    மூலப்பொருட்கள் எங்கே கிடைக்கும்?

    ரசாயனங்கள் விற்பனை செய்யும் கடைகளில் மேற்கூறிய பொருட்கள் கிடைக்கும். உங்கள் பகுதியில் அத்தகைய 'கெமிக்கல் ஸ்டோர்' எங்கு இருக்கிறது என தெரிந்து கொள்ளுங்கள். இந்த பொருட்களை இணையத்தின் வழியாகவும் வாங்க முடியும்.

    முக்கிய குறிப்புகள்:

    `ஃபேப்ரிக் சாஃப்ட்னர்' தயாரிப்பதற்கு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது கண்ணாடி பாத்திரத்தை மட்டும் பயன்படுத்துங்கள். நீங்கள் வாங்கும் வாசனைத் திரவியம் தண்ணீரில் கரையக்கூடியதாக இருக்க வேண்டும். வண்ணம் சேர்த்தால் தான் 'ஃபேப்ரிக் சாஃப்ட்னர்' பார்க்க அழகாக இருக்கும்.

    சந்தைப்படுத்தும் முறைகள்:

    உங்கள் தயாரிப்பை முறையாக சந்தைப்படுத்த வேண்டுமெனில், கவர்ச்சியான பிராண்ட் பெயருடன். பேக்கிங் அழகான பாட்டிலில் செய்வது அவசியமாகும். உங்கள் தயாரிப்பு தரமானதாகவும், நியாயமான விலையிலும் இருக்க வேண்டும். நீங்கள் தயாரித்ததை முதலில் உங்கள் வீட்டில் பயன்படுத்தி பாருங்கள். அப்போதுதான் குறைகள் இருந்தால் மாற்றிக்கொள்ள முடியும். சமூக வலைத்தளங்களில் இதைப்பற்றி பகிர்ந்து வாடிக்கையாளர்களை அதிகரிக்கலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆப் சீசனில்' பயணம் செய்வது பல விதங்களில் பணத்தை சேமிக்க உதவும்.
    • ஒரே பையுடன் பயணம் செய்வது லக்கேஜ்ஜுக்கு ஏற்படும் செலவுகளை தவிர்க்க உதவும்.

    பயணத்திக்காக பலரும் பல்வேறு வழிகளில் பணத்தை சேமிப்பார்கள். ஆனால், பயணத்தின்போது பணத்தை சேமிப்பதை இழந்துவிடுவார்கள். அப்படி பயணத்தின்போது சேமிக்க சில ஆலோசனைகள் இங்கே..

    எப்போதும் ஆப் சீசனில்' பயணம் செய்வது பல விதங்களில் பணத்தை சேமிக்க உதவும். குறுகிய கால பொது விடுமுறை உள்ள நாட்களை பயணத்துக்காக தேர்ந்தெடுத்தால், பயணத்துக்கான செலவு, தங்குமிடம், உணவு பொருட்கள், நினைவுப் பொருட்கள் என அனைத்தும் மலிவாக கிடைக்கும்.

    வருடத்தில் சில மாதங்கள் அல்லது சில நாட்களில் எந்த சீசனும் இருக்காது. அப்படிப்பட்ட நாட்களை தேர்வு செய்து பயணத்துக்கான டிக்கெட்டுகளை குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்யுங்கள். குறைவான கட்டணத்தில் சிறந்த தள்ளுபடியுடன் டிக்கெட்டுகள் கிடைக்கும்.

    நீண்ட தூர பயணத்தின்போது தொடர்ச்சியாக செல்லக்கூடிய ஒரு வழி பயணத்தை தேர்ந்தெடுப்பது சலிப்பை ஏற்படுத்தினாலும், பயனத்துக்கான செலவை குறைக்கும்.

    பயண காலத்துக்கு ஏற்றவாறு நாமே உணவு, தின்பண்டங்கள், தண்ணீர் ஆகியவற்றை எடுத்துச் செல்வது சேமிப்புடன் ஆரோக்கியத்துக்கும் நல்லது. அதேநேரம் உணவு மற்றும் தேவையான பொருட்களை கொண்டு செல்ல தனி பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து, ஒரே ஒரு பையுடன் பயணத்தை மேற்கொள்வது லக்கேஜ்ஜுக்கு ஏற்படும் செலவுகளை தவிர்க்க உதவும்.

    அதுமட்டுமில்லாமல், பயணத்தின்போது தேவையின்றி வாங்கக்கூடிய பொருட்களின் மீதுள்ள நாட்டத்தை குறைத்து பணத்தை மிச்சப்படுத்தலாம். தேவைக்கேற்ப நாம் தங்கும் இடங்களை நாள் கணக்கில் பதிவு செய்வதை விட, மணிக்கணக்கிற்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் முன்பதிவு செய்வது செலவை குறைக்க சிறந்த வழி.

    பயண நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் உணவுக்கான செலவை கட்டுப்படுத்த நீங்கள் உண்ணும் உணவின் தன்மையை தெளிவாக முடிவு செய்யுங்கள். பயணத்தின்போது பொரித்த எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்குவதையும். சாப்பிடுவதையும் தவிர்க்கலாம். அவை அதிக செலவை ஏற்படுத்துவதுடன், ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

    பயணத்தின்போது நாம் பொதுவாக செய்யும் மற்றொரு தவறு. சுற்றுலா சென்ற இடத்தில் நாம் பயன்படுத்தும் லோக்கல் வாகனங்கள். சுற்றுலாவின்போது நமக்கென தனியாக வாகனங்களை' பயன்படுத்தாமல் பொது போக்குவரத்தை பயன்படுத்துவது வீண் செலவை குறைப்பதுடன், சுற்றுலா செல்வதன் அசல் உணர்வை உணரும்படியான புதிய அனுபவத்தை பெறவும், சுய ஒழுக்கத்தை மேம்படுத்தவும் உதவும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • லெஹங்கா உடைகள், சமீபகாலமாக தென்னிந்தியாவிலும் ‘டிரெண்டிங்’கில் இருக்கின்றன.
    • திருமணத்திற்கு தயாராகும் ‘டீன்-ஏஜ்’ பெண்களும், ‘லெஹங்கா’வை விரும்புகிறார்கள்.

    'லெஹங்கா அணிவது ஒரு கலை'… ஆரம்பமே உற்சாகமாக பேசினார் காஸ்டியூம் டிசைனர், அனாமிகா. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த அனாமிகாவிற்கு, 52 வயதாகிறது. வட இந்தியாவின் பிரபல காஸ்டியூம் டிசைனராக இவர், லெஹங்கா உடைகளை வடிவமைப்பதிலும், தைப்பதிலும் ஸ்பெஷலிஸ்ட்.

    பாலிவுட் நட்சத்திரங்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு, பெரும்பாலும் இவரே லெஹங்கா உடைகளை வடிவமைத்து கொடுப்பார். இவர், லெஹங்கா உடைகள் பற்றியும், அதை அணியும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.

    ''வட இந்தியாவில் பிரபலமான லெஹங்கா உடைகள், சமீபகாலமாக தென்னிந்தியாவிலும் 'டிரெண்டிங்'கில் இருக்கின்றன.

    சினிமா நட்சத்திரங்களை தாண்டி, திருமணத்திற்கு தயாராகும் 'டீன்-ஏஜ்' பெண்களும், 'லெஹங்கா'வை விரும்புகிறார்கள். தாலி கட்டும் நிகழ்வின்போது பட்டுப்புடவைகளையும், திருமண வரவேற்பிற்கு 'லெஹங்கா' உடைகளையும் அணியும் கலாசாரம், தமிழ்நாட்டிற்குள்ளும் புகுந்துவிட்டது'' என்றவர், லெஹங்கா நிற தேர்வில் கவனமாக இருக்க சொல்கிறார்.

    ''காலம் காலமாக தென்னிந்திய பட்டுப் புடவைகளுக்கு வட இந்திய பெண்களும், வட இந்திய லெஹங்காக்களுக்கு தென்னிந்திய பெண்களும் ஆசைப்படுவது புதிது இல்லை. ஆனால் எதை எப்படி அணிய வேண்டுமோ அதை அப்படிதான் அணிய வேண்டும்.

    எப்படி முகூர்த்தப் பட்டுப்புடவைகளில் 'பெய்ஜ்', 'பீச்', 'பேஸ்டல்' போன்ற நிறங்களில் அணியும்போது அவ்வளவு பிரைட் 'லுக்' கொடுக்காதோ அதேபோல் லெஹங்கா அணிவதிலும் சில விதிமுறைகள் இருக்கிறது.

    நம்மூர் பெண்கள் பெரும்பாலும் 'டஸ்கி', 'டார்க் பியூட்டிகள்'. அந்த பெண்கள் லெஹங்கா அணியும்போது நிறங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கிளிப்பச்சை, அடர்ந்த சிவப்பு, மெரூன் சிவப்பு பயன்படுத்தலாம். சிக்னல் லைட் சிவப்பு நிறத்தை நிச்சயம் பயன்படுத்தக்கூடாது.

    அதேபோல் அடர்ந்த பஞ்சு மிட்டாய் நிற 'பிங்க்' மாதிரியான ரேடியம், லேசர் லைட் நிறங்கள் அறவே கூடாது. கரும்பச்சையிலேயே கொஞ்சம் மங்கலான பச்சை, பிரவுன் நிறம் இவைகளையும் தவிர்ப்பது நல்லது'' என்னும் அனாமிகா, லெஹங்கா ஸ்டைலிங் குறித்து மேலும் விவரித்தார்.

    ''பொதுவாகவே தென்னிந்திய பெண்களுக்கு இடைப்பகுதி கொஞ்சம் நீளம் குறைவுதான். அதேபோல் பின்பக்கமும் கொஞ்சம் பருமனாக இருக்கும். அடிப்படையிலேயே புடவைக்கும், தாவணிக்குமான உடல்வாகு தென்னிந்தியப் பெண்களுக்கு உண்டு.

    மார்பு, இடைப்பகுதிகள் கொஞ்சம் பப்ளியாக இருக்கும். லெஹங்காவை அந்த அழகை 'ஹைலைட்' செய்யும் மாதிரியில் டிசைன் செய்து கொண்டால் அழகாக இருக்கும். உங்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.

    அடுத்ததாக லெஹங்கா அணிய வேண்டும். ஆனால் இடுப்பு அவ்வளவாக தெரியக்கூடாது என்பது தென்னிந்திய பெண்களின் விருப்பம். அந்த மாதிரியான பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு லெஹங்காவையே தாவணி ஸ்டைலில் போட்டுக்கொள்வதுதான்.

    அடுத்த தீர்வு இடைப்பகுதியில் கொஞ்சம் லேஸ் அல்லது வலை மாதிரியான துணி கொடுத்து மேலும் அழகு சேர்க்கலாம்.

    சராரா ஸ்டைலில் லெஹங்கா அல்லது கிராண்ட் ஓவர் கோட் போலவும் தைக்கலாம்'' என்றவர், லெஹங்காவை தென்னிந்திய பெண்கள் மிக குறைவாக பயன்படுத்துகிறார்கள் என்கிறார்.

    ''வட இந்திய பெண்கள், ஒருமுறை வாங்கிய லெஹங்காவை குறைந்தது 20 நிகழ்ச்சிகளுக்காவது அணிவது உண்டு. ஆனால் தென்னிந்திய பெண்கள், வரவேற்பு நிகழ்ச்சியில் அணிவதோடு சரி, அதை ஓரங்கட்டிவிடுகிறார்கள். அதனாலேயே வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பெரும்பாலும் லெஹங்கா வேண்டாம் என கூறிவிடுகிறார்கள். ஒருமுறை பயன்படுத்த எதற்கு அவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்று கோபப்படுகிறார்கள். அதிலும் முகூர்த்தங்களுக்கு குறைந்தது ரூ.20 ஆயிரம் கொடுத்தால் கூட நல்ல பட்டுப்புடவை கிடைத்துவிடும்.

    ஆனால் லெஹங்காக்களுக்கு ரூ.30 ஆயிரமாவது செலவழித்தால் தான் கிராண்ட் 'லுக்' கிடைக்கும். அப்படி செலவு செய்து வாங்கும், லெஹங்காக்களை குறைந்தது 10 விழாக்களுக்காவது அணிய பழகிக் கொள்ளுங்கள். அப்போதுதான் பெரியவர்களும், லெஹங்காக்களை ஆதரிப்பார்கள்'' என்றவர், லெஹங்கா உடை அணியும்போது செய்யக்கூடிய மேக்கப் விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்.

    ''பாரம்பரிய புடவைக்கு உரிய மேக்கப் வேறு. லெஹங்காவிற்கு உரிய மேக்கப் வேறு. தென்னிந்திய புடவை என்றாலே 'பேபி பிங்க்' அல்லது 'ஸ்கின் டோன்' லிப்ஸ்டிக்குகளுடனான லைட் மேக்கப்தான் போட வேண்டும். லெஹங்கா என்றால் கொஞ்சம் இண்டோ-வெஸ்டர்ன் டார்க் நிற லிப்ஸ்டிக், மினுமினுக்கும் ஐ-ஷேடோஸ், பிளஷ், குளோ இப்படி எல்லாமே பளிச்சென்று மேக்கப் செய்யலாம். அப்போதுதான், லெஹங்காவிற்கு மேட்சாக இருக்கும்.

    அணிகலன்களை பொறுத்தவரை, லெஹங்காக்களுக்கு ஒரே ஒரு கிராண்ட் நெக்லெஸ் மற்றும் கிராண்ட் தோடு போதும்'' என்றவர், ''அடுத்த 10 வருடங்களில், சுடிதார் போலவே, லெஹங்காவும் தமிழகத்தில் சர்வ-சாதாரண உடையாக மாறியிருக்கும்'' என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுரைக்காய் தமிழர் உணவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • சுரைக்காயை அனைத்து வகையான மண் உள்ள நிலங்களிலும் சாகுபடி செய்ய முடியும்.

    உடலுக்கு குளிர்ச்சியானது என்ற வகையில் சுரைக்காய் தமிழர் உணவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப காலங்களில் உணவுக்காக மட்டுமல்லாமல் தண்ணீர் சேமிக்கும் கலன் (சுரைக் குடுவை) ஆக சுரைக்காய் பயன்படுத்தப்பட்டது. தற்போது உணவுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பந்தல் சாகுபடியில் சுரைக்காய் உற்பத்தி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    சுரைக்காயை அனைத்து வகையான மண் உள்ள நிலங்களிலும் சாகுபடி செய்ய முடியும். ரசாயன உரங்களைப் பயன்படுத்தி சாகுபடி செய்வதை விட இயற்கை முறையில் அதிக மகசூல் ஈட்ட முடியும். பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து, பூக்கும் சமயத்தில் கொடியின் வேர்பகுதியில் ஊற்றினால் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பொதுவாக சுரைக்காய் சாகுபடியில் நோய் தாக்குதல் குறைவாகவே காணப்படும். எனவே இயற்கை முறையில் சாகுபடி செய்வது எளிது.

    சுரைக்காய் கொடிகளை தரையில் படர விட்டும், குச்சிகளை ஊன்றி அதன் மீது படர விட்டும், பந்தல் அமைத்தும் சாகுபடி செய்யலாம். கிராமங்களில் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் கூரை மீது சுரைக்காய் கொடியை படர விடுவதும் உண்டு. ஆனால் பந்தல் சாகுபடி தவிர்த்து மற்ற முறைகளில் பயிர் செய்யும் போது மழை, ஈரப்பதம் போன்றவற்றால் சுரைக்காயின் மகசூல் பாதிப்புக்கு வாய்ப்பு உள்ளது.

    ஆனால் பந்தல் சாகுபடியில் அதிக மகசூல் கிடைப்பதுடன் செடிகளின் ஆயுள் காலமும் அதிகரிக்கும். ஆரம்ப கட்டங்களில் பந்தல் அமைக்க அதிக அளவில் செலவு பிடிக்கும் என்பதால், அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் பந்தல் சாகுபடியில் ஈடுபடுவதில்லை. ஆனால் ஒரு முறை பந்தல் அமைத்தால் பல ஆண்டுகள் அதனை பயன்படுத்த முடியும்.

    அதுமட்டுமல்லாமல் அரசு தோட்டக்கலைத்துறை மூலம் பந்தல் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. மேலும் சுரைக்காய் மட்டுமல்லாமல் பாகற்காய், புடலங்காய் உள்ளிட்ட பந்தல் காய்கறிகளை மாற்றி மாற்றி சாகுபடி செய்து ஆண்டு முழுவதும் வருவாய் ஈட்ட முடியும். வீரிய ஒட்டு ரகங்கள் நாட்டு விதைகள் மூலம் சாகுபடி செய்யும் போது ஆண்டுக்கு ஒரு பட்டத்தில் மட்டுமே சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி ஆடி மாதத்தில் விதைத்தால் தை மாதம் தொடங்கி சித்திரை மாதம் வரை மகசூல் கிடைக்கும். ஆனால் தற்போது பல வீரிய ஒட்டு ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆண்டு முழுவதும் சுரைக்காய் சாகுபடி செய்யப்படுகிறது.

    சுரைக்காயை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு வெளியேற சிறந்த மருந்தாக செயல்படும். பெண்களுக்கு உண்டாகும் ரத்த சோகையைப் போக்கும், ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். குடல் புண்ணை ஆற்றும். மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்தாகும். சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதிதாக உருவாக்கப்பட்ட இனத்தை தான் வண்ணக் கோழிகள் என்று அழைக்கிறார்கள்.
    • வண்ணக்கோழி ரகங்களை எளிதான முறையில் வீடுகளில் வளர்க்க முடியும்.

    நாட்டுக் கோழி இனத்தில் இருந்து கால்நடை பல்கலைக்கழகத்தால் புதிதாக உருவாக்கப்பட்ட இனத்தை தான் வண்ணக் கோழிகள் என்று அழைக்கிறார்கள். வண்ணக்கோழி ரகங்களை எளிதான முறையில் வீடுகளில் புறக்கடை முறையில் வளர்க்க முடியும்.

    நந்தனம் 1 மற்றும் 2, கிரிராஜா, கிரிராணி, வனராஜா, சுவர்ணதாரா என பல்வேறு இனக் கோழிகள் சமீபகாலங்களில் கால்நடை பல்கலை கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வண்ணக் கோழி இனங்கள் உருவ ஒற்றுமையில் நாட்டுக்கோழி போன்றே காணப்பட்டாலும், இவை நாட்டு கோழிகளை விட மேம்பட்டவை. வண்ணக் கோழிகளை வீடுகளில் புறக்கடை முறையில் எளிதாக வளர்த்து பொருளாதாரம் ஈட்டலாம்.

    நாட்டு கோழிகளை வணிகரீதியாக வளர்க்கும் போது சில குறைபாடுகள் உள்ளன. ஆனால், நாட்டு கோழிகளில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள வண்ணக்கோழிகளில் அந்த குறைபாடுகள் களையப்பட்டுள்ளன. வண்ணக்கோழிகள் நாட்டுக் கோழிகளை விட துரிதமாக எடை கூடும். இவை அனைத்து வகையான தட்பவெப்ப நிலையிலும் வளரக் கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

    மேலும், நாட்டுக்கோழிகளை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியும், அதிக முட்டைகள் இடும் திறனும் கொண்டது. இதன் முட்டைகள் நாட்டுக் கோழி முட்டைகளை போலவே பழுப்பு நிறம் கொண்டதால் நாட்டுக் கோழி முட்டைகளின் விலைக்கே விற்பனை செய்யலாம்.

    பொதுவாக, கோழிகளுக்கு வழக்கமான தீவனத்துடன் கரையான்களை உணவாக அளிக்கும் போது கோழியின் உடல் வளர்ச்சி வளர்ச்சி விகிதம் 15 சதவீதம் வரை அதிகரிக்கிறது. கரையான்களில் 36 சதவீதம் புரதம், 44 சதவீதம் கொழுப்பு உள்ளது.

    கரையான்களை உணவாக கொடுப்பதால் கோழிகளின் இதனால் தீவனச்செலவு பெரும்பகுதி குறைந்து விடும். கரையான்களை வீட்டின் அருகிலேயே உற்பத்தி செய்யலாம். கிழிந்த கோணிப்பை, பழைய துணி, காய்ந்த மாட்டு சாணம், உலர்ந்த இலை, கூழான மரக்கட்டைகள் மற்றும் வைக்கோல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒரு மண் பானைக்குள் போட்டு அந்த பானையில் அடைத்து, நீர் தெளித்து தரையில் கவிழ்த்து வைக்கவும். 24 மணி நேரத்தில் இதில் கரையான் உற்பத்தி ஆகி இருக்கும்.

    வண்ணக்கோழிகளுக்கு கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு ஆகியவற்றை 30 முதல் 35 பங்கும், கடலைப் புண்ணாக்கு 15 பங்கும், தவிடு வகைகள் 15 பங்கும், சமையலறை கழிவுகள் 5 சதவிகிதமும், கரையான் 10 பங்கும், புளியங்கொட்டை 10 பங்கும், கருவாட்டு தூள் 5 பங்கு, தாது உப்பு 1 பங்கு மற்றும் வைட்டமின் கலவை 1 பங்கும் எடுத்து நன்றாக இவற்றை கலந்து கொண்டு கோழி தீவனம் தயாரிக்கலாம்.

    இவைதவிர வேலி மசால், குதிரை மசால் மற்றும் அசோலா போன்ற நீலப்பச்சை பாசியை 5 முதல் 10 சதவிகிதம் அறுவடை செய்து கொடுக்கலாம். வேலிமசால், குதிரை மசால் போன்ற பசுந்தீவனங்களை அளிக்கலாம்.

    வண்ணக்கோழிகளை நோய்களில் இருந்து பாதுகாக்க தகுந்த காலகட்டத்தில் தடுப்பூசிகளை அளிப்பது நல்லது. இந்த வகை கோழிகளின் குஞ்சுகளுக்கு பிறந்த 6-வது நாள் லசோட்டா தடுப்பூசியும், 12-வது நாள் கம்போரா தடுப்பூசியும், 27-ம் நாள் மீண்டும் லசோட்டா தடுப்பூசியும், இரண்டாவது மாதத்தில் ராணிகெட் தடுப்பூசியும், தொடர்ந்து 3 மாதத்திற்கு ஒரு முறை ராணிகெட் தடுப்பூசி அளிக்கப்பட வேண்டும்.

    நாட்டுக் கோழிகளை ஒப்பிடும் போது வண்ணக் கோழிகள் அதிக அளவு சிறப்பம்சங்களை கொண்டுள்ளன. நாட்டுக் கோழிகள் 8 வார கால அளவில் 600 முதல் 800 கிராம் எடை அளவே எடை கூடுகிறது. ஆனால், வண்ணக் கோழிகள் இதே 8 வாரங்களில் ஆயிரத்து 500 முதல் ஆயிரத்து 600 கிராம் எடையை அடைகிறது. அதே போல், நாட்டு கோழிகள் ஆண்டுக்கு அதிகபட்சமாக 7௦ முட்டைகள் வரை இடுகிறது.

    ஆனால், வண்ணக் கோழிகள் 100 முதல் 120 முட்டைகளை இடுகிறது.மேலும், நாட்டுக் கோழி முட்டையின் எடை 45 முதல் 50 கிராம் அளவே இருக்கிறது.ஆனால், வண்ணக் கோழிகளின் முட்டை 55 முதல் 65 கிராம் வரை இருக்கிறது. எனவே, தொழில்முனைவோர் வண்ணக் கோழிகளை வளர்த்து லாபம் பெறலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வறட்சி நிலவினால் பயிரினை வாடாமல் காப்பதும் பண்ணை குட்டைதான்.
    • மழைநீரை தேக்கினாலே ஆண்டு முழுவதும் பாசனத்திற்கு தேவையான நீரை பெற முடியும்.

    இறங்கி வரும் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும், மண் அரிப்பை தடுக்கவும், பயிர் விளைச்சலில் மகசூல் கிடைத்திடவும், கால்நடைகள் நீர் பருகுவதற்கு வாய்ப்பாக அமைவதும், பழமரக்கன்றுகள், மரக்கன்றுகள் அமைத்து கூடுதல் வருமானத்தை பெருக்கவும் பண்ணை குட்டைகள் உதவுகின்றன.

    மானாவாரி விவசாயிகள் தங்கள் நிலங்களில் மழைநீரை தேக்கும் பண்ணை குட்டைகளை அமைத்தால் ஆண்டு முழுவதும் நீர் பெற முடியும். பருவ மழையை மட்டுமே நம்பி வாழும் மானாவாரி விவசாயிக்கு இயற்கை தரும் கொடையான மழைநீரை தனது சொந்த நிலத்தில் சேகரிப்பது பண்ணை குட்டைகள்தான்.

    இறுதிப்பாசனத்திற்கும், அதன் இடையே தேவைப்படும் உயிர் பாசனத்திற்கும், வறட்சி நிலவினால் பயிரினை வாடாமல் காப்பதும் பண்ணை குட்டைதான்.

    புவியியல் அமைப்புப்படி தமிழகம் குறைந்த மழைப்பொழிவையே கொண்டது. தமிழகத்துக்கு 32 சதவீத மழை தென்மேற்கு பருவமழை காலத்திலும், 48 சதவீதம் வடகிழக்கு பருவமழையாலும், 5 சதவீதம் குளிர்காலத்திலும், 15 சதவீதம் கோடைகாலத்திலும் மழை பொழிவு கிடைக்கிறது.

    இந்த மழைநீரை தேக்கினாலே ஆண்டு முழுவதும் பாசனத்திற்கு தேவையான நீரை பெற முடியும். பண்ணை குட்டைகளை விவசாய நிலங்களில் அமைக்கலாம். இதற்காக தேர்வு செய்யப்படும் இடம், வயல்களில் மொத்த வடிகால்களையும் ஒருங்கிணைப்பதாக இருக்க வேண்டும்.

    ஒரு ஏக்கர் நிலத்தில் குறைந்தது 1 சென்ட் பரப்புக்கு 8-க்கு 5 மீட்டர் அல்லது 10-க்கு 4 மீட்டர் அளவில் 1 மீட்டர் ஆழத்திற்கு குழி வெட்ட வேண்டும். மானாவாரியில் 40-க்கு 40 மீட்டர் நீள அகலம் உள்ளதாக அமைப்பது நல்லது. ஆழம் 2 மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    சமமான நிலங்களில் சாலை வசதி இருப்பின் சாலை ஓரங்களிலோ அல்லது வயலின் நடுவிலோ வெட்டலாம். லேசான சரிவு நிலங்களில் தாழ்வான பகுதியை அறிந்து குழிவெட்ட வேண்டும். வெட்டி எடுக்கும் மண்ணில் பெரும்பகுதியை வயலில் வரப்பினை பலப்படுத்தவும், குழிப்பகுதியை சுற்றி அணைக்கவும் பயன்படுத்தலாம். ஒரு சென்ட் பரப்பளவில் அமைக்கப்படும் குழியின் கொள்ளளவு 40 கனமீட்டர் அதாவது 40 ஆயிரம் லிட்டர் தேக்கி வைக்கும் அளவாக இருக்கும். மழை பெய்யும் போது ஒரு ஏக்கர் பரப்பளவில் மண் கண்டம் நனைந்த பிறகு வழிந்தோடும் மழைநீர் தானாக பண்ணைக்குட்டை குழிக்குள் வந்து சேரும்.

    பண்ணைக்குட்டையில் இருக்கும் நீரை மோட்டார் அல்லது மனித சக்தி மூலம் இறைத்து பயன்படுத்தலாம். மானாவாரி நிலங்களில் பயிர் செய்யப்படும் கம்பு, சோளம், பருத்தி, பயறு வகை, சிறுதானியங்கள் போன்ற பயிர்களுக்கு இந்த பண்ணை குட்டை நீரால் பாசனம் செய்து பலன் பெற முடியும். பண்ணை குட்டைகளை ஆண்டுதோறும் தூர்வாருதல் அவசியம். அதில் வளர்ந்து காணப்படும் பாசி தாவரங்களை அகற்ற வேண்டும். குட்டைகளை சுற்றி மரங்கள் வளர்த்து சுற்றுச்சூழல் பேண வேண்டும்.

    பண்ணைக் குட்டைகளில் நீர் தேக்குவதால் மழைநீர் வீணாவது தடுக்கப்படுகிறது. இது போல், மழைநீரை ஒரு இடத்தில் தேக்கும் போது சுற்றி உள்ள இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். சுற்றுப்புறத்தில் குளிர்ந்த காற்று வீசும்.

    உபரிநீரின் அளவை பொறுத்து பண்ணை குட்டையில் மீன் வளர்க்கலாம். வீட்டுத்தோட்டம் அமைக்கவும், பண்ணைக்காடுகள் வளர்க்கவும், நாற்றுகள் பராமரிக்கவும், கால்நடைகளை பராமரிக்கவும் இந்த நீரை பயன்படுத்தலாம்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வங்கிகள், தபால் நிலையங்கள் என பணத்தை சேமிப்பதற்கு பல வழிகள் உள்ளன.
    • இல்லத்தரசிகள் பலரும் தேர்ந்தெடுப்பது சீட்டு பிடிப்பதைதான்.

    வங்கிகள், தபால் நிலையங்கள் என பணத்தை சேமிப்பதற்கு பல வழிகள் இருக்கின்றன. எனினும் காலம் காலமாக சேமிப்பிற்கு இல்லத்தரசிகள் பலரும் தேர்ந்தெடுப்பது அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து சீட்டு பிடிப்பதைதான். சேமிக்கும் பணம் கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கும். சிறிய தொகையை முதலீடாக செலுத்தலாம். அவசரகால தேவைக்கு சுலபமாக பெற்றுக்கொள்ளலாம் ஆகிய காரணங்களால்தான் இந்த முறையில் பணத்தைச் சேமிக்க பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

    இந்த சீட்டு பிடிக்கும் குழுவில் 10 முதல் 20 பெண்கள் வரை உறுப்பினர்களாக இருப்பார்கள். சீட்டு நடத்துபவர் அந்த உறுப்பினர்களில் ஒரு வராகவோ அல்லது தனி நபராகவோ இருப்பார். தனி நபராக இருக்கும் பட்சத்தில் அவருக்கு மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷனாக வழங்கப்படும். இம்மாதிரியான சீட்டுகள் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அத்தனை மாதங்கள் நடத்தப்படும். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை ஒரு உறுப்பினருக்கு வழங்குவார்கள். உதாரணமாக ஆயிரம் ரூபாயை உறுப்பினர்கள் அனைவரும் சீட்டு நடத்துபவரிடம் கொடுப்பதாக வைத்துக்கொள்வோம்.

    இவ்வாறு சேர்த்த பணத்தை அந்த மாதம் யாருக்கு கொடுக்கலாம் என்பதை இரண்டு முறைகளில் தேர்வு செய்வார்கள். ஒன்று, குலுக்கல் முறை. மற்றொன்று ஏலம் முறை

    .குலுக்கல் முறையில், உறுப்பினர்களின் பெயர்களை துண்டுச் சீட்டில் எழுதிப்போட்டு குலுக்கல் மூலம் தேர்ந்தெடுப்பார்கள். இந்த முறை மூலம் அனைவருக்கும் சாமான வாய்ப்பு கிடைக்கும். ஏலம் முறையில் ஒருவர் கேட்கும் தொகையை பொறுத்து, யாருக்கு சீட்டு என்பது நிர்ணயம் செய்யப்படும். இப்படித்தான் சீட்டுப் பிடிக்கும் சேமிப்பு திட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் தனிநபர் நம்பிக்கையின் மூலம் மட்டுமே பணத்தை முதலீடு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே, உங்களுக்கு மிகவும் பரீட்சயமான, நம்பிக்கையான நபராக இருந்தால் மட்டுமே இதில் முதலீடு செய்ய வேண்டும்.

    மேலே கூறப்பட்டுள்ள இரண்டு முறைகளில் குலுக்கல் முறையை பின்பற்றுபவர்களிடம் சீட்டுப் போட்டு முதலீடு செய்வது நல்லது.

    ஏலம் முறையில், ஒரே நபர் பலமுறை ஏலம் கேட்கும் வாய்ப்பு அதிகம். இதனால் அவசியத்தேவை இருக்கும் போது உங்களுக்கு பணம் கிடைக்காமல் கூட போகலாம். சொற்பமான செலவுகளுக்காக மட்டுமே சீட்டுப் போடுவது நல்லது. அதிக முதலீடு செய்யும் போது இதில் பணத்தை இழக்கக்கூடிய அபாயமும் உள்ளது. இது நம்பிக்கையின் பெயரில் மட்டுமே நடத்தப்படும் சேமிப்பு திட்டம் என்பதால், இதில் அதிக தொகையை முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print