என் மலர்

    காஞ்சிபுரம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
    • பருவமழை அதிக அளவில் பெய்தால் ஆற்றில் வெள்ளநீர் போக வழியில்லாமல் பாலங்கள் உடைந்து விடும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் வேகவதி ஆறு தாமல் ஏரி அருகே உற்பத்தியாகிறது. பின்னர் காஞ்சிபுரம் நகரப்பகுதிக்குள் பாய்ந்து அதன்பிறகு திம்ம ராஜம்பேட்டை பகுதியில் பாலாற்றில் கலக்கிறது.

    இந்த ஆறு காஞ்சிபுரம் நகரபகுதிக்குள் பெருமளவில் ஓடுவதால் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.

    வேகவதி ஆற்றின் பெரும் பகுதி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளதால் ஆண்டு தோறும் இந்த ஆற்றில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால் காஞ்சிபுரம் நகரில் வேகவதி ஆற்றின் அருகில் உள்ள பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து விடுகிறது.

    இதனால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வேகவதி ஆற்று பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த பிரச்சினை தொடர்கதையாக உள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் வேகவதி ஆற்றில் வெள்ளம் செல்வதற்கு வசதியாக மழைக் காலங்களில் தூர்வாரும் பணி தொடங்கும். இந்நிலையில் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. இதனால் காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கை தடுக்க தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

    ஆனாலும் பருவமழை அதிக அளவில் பெய்தால் ஆற்றில் வெள்ளநீர் போக வழியில்லாமல் பாலங்கள் உடைந்து விடும். அதேபோல் இந்த ஆண்டும் அதிக மழை பெய்தால் பாலங்கள் உடைந்து விடும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.

    எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு சஞ்சய் தனது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
    • காதலியை பிரித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள புதுப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசங்கர். இவரது மகன் சஞ்சய் (வயது21). பல்லாவரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவரும் புதுப்பேர் அருகே உள்ள சக்திநகரில் வசிக்கும் இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு கடும் எதிர்ப்புஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சஞ்சய் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இதுபற்றி போலீசுக்கு தெரிவிக்காமல் உடலை எரிக்க முடிவு செய்தனர்.

    அதன்படி சஞ்சய் உடலை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் வைத்து எரிக்க தொடங்கினர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்ததும் சோமங்கலம் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் பாதி எரிந்த நிலையில் இருந்த மாணவர் சஞ்சயின் உடலை மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் காதல் திருமணம் செய்த காதலியை பிரித்ததால் மனவேதனையில் சஞ்சய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சஞ்சய் தனது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி சோமங்கலம் போலீசில் புகார் அளித்து உள்ளனர். அப்போது ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்த சஞ்சய் மற்றும் இளம்பெண்ணை போலீசார் மீட்டு விசாரித்தனர். பின்னர் சஞ்சய்யிடம் இருந்து பிரித்து காதலியை அவரது பெற்றோருடனும் அனுப்பியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சஞ்சய் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக இரு தரப்பு பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். காதலியை பிரித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விவசாயிகள் ஆகியோர் கடந்த 424 நாட்களாக அறவழியில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
    • ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

    காஞ்சிபுரம்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம் கட்டுவதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட கோரி ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோர் கடந்த 424 நாட்களாக அறவழியில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் பொதுமக்களின் போராட்டத்தையும் மீறி, நீர்நிலைகளை மட்டுமே அளக்கிறோம் என்று கூறி அதிகாரிகள் ஒட்டுமொத்த விமான நிலைய திட்டத்தை குறிக்கும் வரைபடத்தை மார்க் செய்து உள்ளனர். போராட்டம் நடத்தும் மக்களிடம் முறையான அறிவிப்பு ஏதும் செய்யாமல் விமான நிலைய திட்ட வரைபடத்தை வரைந்தது யார் என்ற கேள்விக்கு இதுவரை மாவட்ட நிர்வாகத்தால் பதில் அளிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் நீர்நிலைகளை ஆய்வு செய்ய பேராசிரியர் மச்சநாதன் தலைமையிலான வல்லுநர்களை கொண்ட உயர்மட்ட குழு வருகிற 26-ந்தேதி பரந்தூருக்கு வருகிறது. இந்த குழுவினருடன் விமான நிலைய திட்டத்திற்காக நிலங்களை ஒப்படைக்க கூடிய டிட்கோவின் இயக்குனரும் வருவதால், இந்த குழு வருவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், டாக்டர் அம்பேத்கார் சிலை அருகே நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு கருப்பு கொடியுடன் சாலைமறியல் போராட்டம் நடத்த இருக்கிறார்கள்.இந்த போராட்டத்துக்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொது இடங்களில் உள்ள குப்பைகள், மழைநீர் தேங்கும் கட்டமைப்புகள் ஆகியவற்றை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.
    • நோய்த் தடுப்பு பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொற்று நோய் தடுப்பு குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த ஆய்வு கூட்டத்தில் ஒவ்வொரு துறையும் மேற்கொள்ள வேண்டிய நோய் தடுப்பு நடவடிக்கைகளை குறித்து அதிகாரிகளுக்கு கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தினார். பொது சுகாதாரத் துறைக்கு காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் தொடர் சிகிச்சை, களப்பணியில் தோழமை துறைகளை ஒருங்கிணைத்து நோய்த் தடுப்பு பணிகளை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டது.

    வீடுகளிலும், வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழைநீர் தேங்காமலும், தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும். ஊரக வளர்ச்சி துறையினர் கொசுப்புழு ஒழிப்பு பணிகளை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். குளோரினேஷன் செய்யப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறினார்.

    டெங்கு நோய் தடுப்பு பணிகளை துரிதப்படுத்த ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தேவையான நோய்த் தடுப்பு தற்காலிக பணியாளர்களை நியமித்து நோய்த் தடுப்பு பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டார்.

    பொது இடங்களில் உள்ள குப்பைகள், தேவையற்ற டயர்கள், மழைநீர் தேங்கும் கட்டமைப்புகள் ஆகியவற்றை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது. பள்ளிக்கு தினசரி வருகை தரும் குழந்தைகளுக்கு ஏதேனும் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பெற்றோருக்கு தெரிவித்து, சிகிச்சை அளிக்கவும், மேலும், பள்ளிக்கு வராத குழந்தைகளுக்கு ஏதேனும் காய்ச்சல் இருக்கிறதா என அறிந்து அவர்கள் விவரம் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உடனடியாக தெரிவிக்குமாறும், அதற்கான பொறுப்பு ஆசிரியரை நியமிக்கவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 3 பேரும் சிறையில் இருக்கும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது.
    • 2 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றிய தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    சோழிங்கநல்லூர்:

    செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு 7-வது அவென்யுவில் வசித்து வந்தவர் அருண்குமார் (வயது 24). தனியார் கம்பெனியில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். கடந்த 17-ந்தேதி அதிகாலை வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிளை காணாது அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தீவிர விசாரணை மேற்கொண்டார்.

    இந்த நிலையில் சோழிங்கநல்லூர் கே.கே.சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது நம்பர் பிளேட் இல்லாமல் ஒரே மோட்டார் சைக்கிளிள் வந்த 3 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த இளவரசன் (24), யாழின்ராஜ் (24), செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை சேர்ந்த அசோக் (24) என்பது தெரியவந்தது. அவர்கள் திருட்டு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்ததும் தெரியவந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி சென்னை மணலி புதுநகர் பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது.

    தொடர் விசாரணையில் இளவரசன் மீது திருச்சி, துறையூர் போலீஸ் நிலையத்தில் திருட்டு, வழிப்பறி, உள்ளிட்ட பல வழக்குகளில் பலமுறை சிறை சென்று வந்ததுள்ளார் என்பதும் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

    அசோக் மீது அடிதடி, திருட்டு, வழிப்பறி, மிரட்டல், கத்தியால் வெட்டி பணம் பறிப்பு உள்ளிட்ட பலவழக்குகள் நிலுவையில் உள்ளது. பலமுறை சிறை சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. யாழின்ராஜ் மீது கடந்த 2021-ம் ஆண்டு பெண் கடத்தல் வழக்கு, ஆள் கடத்தல் வழக்குகளில் சிறை சென்றதும், 12-ம் வகுப்பு முடித்து விட்டு டாக்டருக்கு படிக்க பிலிப்பைன்ஸ் சென்று வந்ததும், கடைசியாக சுகாதார ஆய்வாளராக தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று பணி உத்தரவுக்காக காத்திருப்பதும் தெரியவந்தது. 3 பேரும் சிறையில் இருக்கும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தால் அசோக் சென்னையில் திருடும் மோட்டார் சைக்கிள்களை திருச்சிக்கு எடுத்து சென்று இளவரசன் மற்றும் யாழின்ராஜிடம் விற்பனைக்கு கொடுத்துள்ளார்.

    இடையில் துறையூர் போலீசாரின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து இளவரசன், யாழின் ராஜ் இருவரும் அங்குள்ள கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். யாழின்ராஜின் மனைவிக்கு வலிப்பு நோய் உள்ளதால் அதை சரி செய்ய சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டதால் கம்பெனியில் வேலை பார்த்தால் போதுமான பணம் கிடைக்காது என்பதால் திருட்டு தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றிய தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஓட்டலுக்கு வந்த திருமலை தனக்கு ஓசியில் சாப்பாடு கேட்டு ரகளையில் ஈடுபட்டார்.
    • தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் திருமலை (வயது50). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதி காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் ஓட்டலில் அடிக்கடி சாப்பிடுவது வழக்கம். இந்த நிலையில் திருமலை தனக்கு ஓசியில் சாப்பாடு தரும்படி அடிக்கடி ஓட்டல் நடத்திவரும் பச்சையம்மாளிடம் கேட்டார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று மாலையும் ஓட்டலுக்கு வந்த திருமலை தனக்கு ஓசியில் சாப்பாடு கேட்டு ரகளையில் ஈடுபட்டார்.

    இதனை ஓட்டலில் ஊழியராக வேலைபார்த்து வந்த காஞ்சிபுரம் ரெயில்வே சாலை, சன்னதி தெருவை சேர்ந்த ராமு என்கிற ராமச்சந்திரன்(40) என்பவர் கண்டித்தார். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் அருகில் கிடந்த சவுக்கு கட்டையால் திருமலையை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டலில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனே கொலையாளி ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதே பகுதியில் பதுங்கி இருந்த ராமச்சந்திரனை கைது செய்தனர். அவரிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பலத்த மழையாக விட்டு விட்டு பெய்ததால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.
    • திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்தது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தின் மேல்பகுதியில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டியது

    இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை கொட்டியது. இதனால் காலை முதலே குளிர்ச்சியான சூழல்நி லவியது.

    பலத்த மழையாக விட்டு விட்டு பெய்ததால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர். இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, வெள்ளை கேட், ஒலிமுகமது பேட்டை, தாமல், ஏனாத்தூர், வையாவூர், அய்யம்பேட்டை, வாலாஜாபாத், குருவிமலை, பரந்தூர், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் விடிய விடிய மழை பெய்தது.

    அதிகாலையில் பலத்த மழை கொட்டியதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறும்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலாண்டு தேர்வுகள் நடைபெறுவதால் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். மிதமான மழையே பெய்து வருவதால் வழக்கம்போல் கல்லூரிகளும் செயல்படும் என்றார்.

    திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர். முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

    தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி மழைநீர் மற்றும் கிருஷ்ணா கால்வாய் மூலம் 630 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி ஆகும். தற்போது ஏரியில் 2624 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார்.
    • விஜயேந்திரரின் உருவப்படம் மற்றும் பிரசாதத்தை ஸ்ரீமடத்தின் நிர்வாகிகள் கவர்னருக்கு வழங்கினார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், காமாட்சி அம்மன் கோவில் மற்றும் சங்கரமடம் ஆகியவற்றில் கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

    பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார்.

    கோவிலுக்கு வந்த அவரை அறங்காவலர் குழுவின் உறுப்பினர் வ.ஜெகன்னாதந், காஞ்சிபுரம் சரக அறநிலையத்துறை இணை ஆணையர் ரா.வான்மதி, உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதி, கோவில் செயல் அலுவலர்கள் முத்துலட்சுமி, தியாக ராஜன், சீனிவாசன் மற்றும் கோவில் அர்ச்சகர் கே.ஆர்.காமேசுவர சிவாச்சாரியார் ஆகியோர் பூரண கும்ப மரியாதையுடன் கோவிலுக்குள் அழைத்து சென்றனர்.

    மகாசக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வரும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை கோவில் ஸ்தானீகர்கள் சியாமா சாஸ்திரிகள், நடன சாஸ்திரிகள், கோவில் மணியக்காரர் சூரியநாராயணன், சங்கர மடத்தின் நிர்வாகி ஜெயராமன் ஆகியோர் வரவேற்றனர்.

    காஞ்சி சங்கரமடத்தில் உள்ள மகாபெரியவர் அதிஷ்டானத்துக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை மடத்தின் நிர்வாகி கீர்த்தி வாசன், சங்கரா கண் மருத்துவமனையின் தலைவர் பம்மல் விஸ்வநாதன் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர். பிருந்தாவனத்தில் மகா பெரியவர் கிரீடம் அணிந்தும் தங்க ஹஸ்தத்துடனும் ஜெயேந்திரர் மயில்தோகை அலங்காரத்திலும் காட்சி அளித்தார்.

    பிருந்தாவனத்தின் அர்ச்சகர் பாலாஜி சங்கர மடத்தின் சிறப்புகள் மற்றும் காஞ்சி மடாதிபதிகளின் சிறப்புகளை விரிவாக விளக்கிக் கூறினார். விஜயேந்திரரின் உருவப்படம் மற்றும் பிரசாதத்தை ஸ்ரீமடத்தின் நிர்வாகிகள் கவர்னருக்கு வழங்கினார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பசு மாடுகளை விநாயக மூர்த்தி அவிழ்த்து விட்ட நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடுகள் நீண்ட நேரமாக வரவில்லை.
    • மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து உள்ளனர்.

    வாலாஜாபாத்:

    காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா தொள்ளாழி கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 53). விவசாயி. இவர் தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக 4 கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். நாள்தோறும் பசு மாடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடுவது வழக்கம்.

    இந்த நிலையில் பசு மாடுகளை விநாயக மூர்த்தி அவிழ்த்து விட்ட நிலையில் மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடுகள் நீண்ட நேரமாக வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விநாயகமூர்த்தி மேய்ச்சல் நிலத்திற்கு சென்று பார்த்தபோது அருகில் உள்ள விவசாய நிலத்தில் இருந்த மின்கம்பம் உடைந்து விழுந்து, மின்சார கம்பிகள் கீழே கிடப்பதை கண்டு திடுக்கிட்டு உடனடியாக வாலாஜாபாத் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    இதன் பேரில் மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து உள்ளனர்.

    அருகில் சென்று பார்த்தபோது மின்சாரக்கம்பம் உடைந்து மின் கம்பிகள் அறுந்து கீழே விழுந்ததால் அங்கே மேய்ந்து கொண்டிருந்த 4 கறவை மாடுகள் மீது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்து காணப்பட்டது.

    இதுகுறித்து சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பேரன்கள் லட்சன், திலக் ஆகிய இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • மகாதேவன் வீட்டின் அருகே செங்குளவி இருந்த பகுதிகளில் ரசாயன மருந்து கலந்த தண்ணீரை பீச்சியடித்து குளவிகளை விரட்டினர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த விட்டிலாபுரத்தை சேர்ந்தவர் மகாதேவன் (வயது50). கட்டிட தொழிலாளி. இவர் வீட்டின் அருகே உள்ள முட்புதரை சுத்தம் செய்தார். அந்த நேரத்தில் அருகில் இருந்த பனை மரத்தின் காய்ந்த ஓலை ஒன்று கீழே விழுந்தது. அதில் இருந்த விஷமுள்ள செங்குளவிகள் பறந்து வந்து மகாதேவன் மற்றும் அருகில் நின்ற பேரன்கள் லட்சன், திலக் ஆகியோரை கொட்டியது. இதில் அவர்கள் 3 பேரும் வலியால் அலறி துடித்தனர். மேலும் அவர்களது உடல்நிலையும் மோசம் அடைந்தது.

    இதைத்தொடர்ந்து மகாதேவன் உள்பட 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகாதேவன் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது பேரன்கள் லட்சன், திலக் ஆகிய இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மகாதேவன் வீட்டின் அருகே செங்குளவி இருந்த பகுதிகளில் ரசாயன மருந்து கலந்த தண்ணீரை பீச்சியடித்து குளவிகளை விரட்டினர்.

    இதுகுறித்து சதுரங்கபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print