என் மலர்

    நீங்கள் தேடியது "Rain"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்.

    கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும். நாளை 22-ந்தேதியும் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பலத்த மழையாக விட்டு விட்டு பெய்ததால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.
    • திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்தது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தின் மேல்பகுதியில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டியது

    இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை கொட்டியது. இதனால் காலை முதலே குளிர்ச்சியான சூழல்நி லவியது.

    பலத்த மழையாக விட்டு விட்டு பெய்ததால் காலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர். இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, வெள்ளை கேட், ஒலிமுகமது பேட்டை, தாமல், ஏனாத்தூர், வையாவூர், அய்யம்பேட்டை, வாலாஜாபாத், குருவிமலை, பரந்தூர், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் விடிய விடிய மழை பெய்தது.

    அதிகாலையில் பலத்த மழை கொட்டியதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறும்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலாண்டு தேர்வுகள் நடைபெறுவதால் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். மிதமான மழையே பெய்து வருவதால் வழக்கம்போல் கல்லூரிகளும் செயல்படும் என்றார்.

    திருவள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர். முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

    தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி மழைநீர் மற்றும் கிருஷ்ணா கால்வாய் மூலம் 630 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி ஆகும். தற்போது ஏரியில் 2624 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடியின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை வெள்ளத்தை ஊருக்குள் வரவிடாமல் தடுப்பதற்காகவும், போடியை சுற்றியுள்ள கண்மாய்களின் முக்கிய நீர்பிடிப்பு ஆதாரமாகவும் உருவாக்கப்பட்டது அணை பிள்ளையார் நீர்வீழ்ச்சி. சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நீர்வீழ்ச்சி போடியின் திற்பரப்பு என்று அழைக்கப்பட்டு வருகிறது.

    மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு குரங்கணி, கொம்பு தூக்கி, கொட்டகுடி, பிச்சங்கரை ஆகிய பகுதிகளில் பெய்த பரவலான மழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் போடி அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடந்த ஓரிரு மாதங்களாக மழையின்மை காரணமாக முற்றிலும் வறண்டு காணப்பட்டது. தற்போது பரவலாக மழை பெய்து தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் போடியை சுற்றியுள்ள மீனாட்சி அம்மன் கண்மாய், பங்காரு சாமி குளம் போன்ற குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் போடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சில நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.
    • சேலம் மாநகரில் இரவு 11 மணியளவில் தொடங்கிய மழை லேசான சாரல் மழையாக பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    குறிப்பாக சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதியான மேட்டூர், எடப்பாடி, கெங்கவல்லி பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்தது. மேட்டூரில் இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழையாக கொட்டியது.

    இதே போல எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கொங்கணாபுரம், செட்டிமாங்குறிச்சி, சித்தூர் ஆகிய பகுதிகளில் 12 மணிக்கு மேல் தொடங்கிய மழை 1 மணி நேரம் கன மழையாக கொட்டியது . பின்னர் விடிய விடிய தூறலாக நீடித்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் விவசாய பயிர்கள் செழித்து வளருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஏற்காட்டில் நேற்றிரவு 1.30 மணியளவில் தொடங்கிய மழை 2.30 மணி வரை சாரல் மழையாக நீடித்தது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் கடும் குளிரால் சுற்றுலா பயணிகள் நடமாட்டமின்றி ஏற்காட்டில் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    சேலம் மாநகரில் இரவு 11 மணியளவில் தொடங்கிய மழை லேசான சாரல் மழையாக பெய்தது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக மேட்டூரில் 43.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. எடப்பாடியில் 30.2, கெங்கவல்லியில் 14, ஓமலூர் 8.6, ஏற்காடு 4.4, சேலம் 1.6, சங்ககிரி 1.2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 103.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த காய்கறி பயிர்கள் நீரில் மூழ்கின.
    • கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் உள்ள அரசு பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் 3 மணி நேரம் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த மழையினால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    அருவிகள் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து சென்றனர். இதனிடையே வனத்துறைக்கு கட்டுப்பட்ட பேரிஜம் ஏரி, மோயர் பாயிண்ட், குணாகுகை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நேற்று 2-வது நாளாக கொடைக்கானல் நகர் மற்றும் மலை கிராமங்களில் கன மழை பெய்தது. இதனால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடும் குளிர் நிலவி வருகிறது.

    தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த காய்கறி பயிர்கள் நீரில் மூழ்கின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

    கொடைக்கானல் மேல்மலை, தாண்டிக்குடி, கீழ்மலைப்பகுதிகளில் 5 மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை ஏற்பட்டதால் கடும் சிரமத்தை மக்கள் சந்தித்தனர்.

    கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் உள்ள அரசு பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஊருக்கு வெளியே 6 கி.மீ தூரத்தில் உள்ள இந்த பள்ளிக்கு காலை 9 மணிக்கு வரும் அரசு பஸ்சில் ஏராளமான மாணவ-மாணவிகள் வருகின்றனர். கனமழை காரணமாக இப்பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் 2 ணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இங்கு வரும் அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டது.

    காலாண்டுத் தேர்வு நடந்து வரும் நிலையில் பள்ளிக்கு செல்ல தயார் நிலையில் இருந்த மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இதனையடுத்து தனியாருக்கு சொந்தமான லாரிகளில் மாணவ-மாணவிகள் ஏறி மாற்று வழியில் பள்ளிக்கு சென்றனர். ஒரு சில மாணவிகள் கூட்ட நெரிசலில் லாரியில் செல்ல தயங்கி மறுத்து விட்டனர். இதனால் அவர்கள் தேர்வை புறக்கணிக்கும் சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக மேலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது பூம்பாறை செல்லும் வழித்தடத்தில் மரங்கள் முறிந்து விழுந்ததால் அரசு பஸ் இயக்க முடியவில்லை. மரங்கள் வெட்டி அகற்றியபின் பஸ் இயக்கப்படும் என்றார்.

    மேல்மலை கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வைகை அணையின் நீர்மட்டம் 47.83 அடியாக உள்ளது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.55 அடியாக உள்ளது. 6 கனஅடி நீர் வருகிறது.

    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து அவ்வப்போது மழை பெய்வதும், சில நேரங்களில் ஏமாற்றி செல்வதுமாக உள்ளது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 415 கன அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் விவசாயத்திற்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 511 கனஅடியில் இருந்து 400 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 118.85 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.83 அடியாக உள்ளது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து இல்லாமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 378 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.50 அடியாக உள்ளது. 84 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.55 அடியாக உள்ளது. 6 கனஅடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கொடைக்கானல் வட்டக்கானல், வெள்ளக்கவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையால் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் குளிக்க, சுற்றி பார்க்க தடை விதிக்கப்படுவதாகவும், நீர்வரத்து சீரான பின்னர் அனுமதிக்கப்படும் என வனச்சரக அலுவலர் டேவி ட்ராஜன் தெரிவித்துள்ளார்.

    இதேபோல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் யானைகள் நடமாட்டம் காரணமாக கடந்த ஒரு வாரமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. இருந்தபோதும் யானைகள் அங்கேயே முகாமிட்டுள்ளதால் மறுஉத்தரவு வரும் வரை தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    பெரியாறு 2.8, தேக்கடி 1.4, கூடலூர் 1.6, உத்தமபாளையம் 1.2, சண்முகநாதி அணை 2, போடி 0.6, வைகை அணை 0.6, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 3, பெரியகுளம் 1.2, வீரபாண்டி 1.2, ஆண்டிபட்டி 6.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதியான தம்மம்பட்டியில் நேற்று 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது.
    • மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவும் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    குறிப்பாக சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதியான தம்மம்பட்டியில் நேற்று 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

    சேலம் மாநகரில் இடி, மின்னலுடன் நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கிய மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலை நேரத்தில் பெய்த திடீர் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியவர்கள் மழையில் நனைந்தபடியே வீட்டிற்கு திரும்பினர்.

    மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக தம்மம்பட்டியில் 38 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகரில் 14.3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 52.3 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தது.
    • பேராவூரணி உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

    தஞ்சாவூர்:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தது. நேற்று பகல் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இரவில் திடீரென குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. சிறிது நேரத்தில் கனமழை பெய்யத் தொடங்கியது.

    நேரம் செல்ல செல்ல மழையின் அளவு அதிகரித்தது.

    சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. தஞ்சை ,வல்லம், பட்டுக்கோட்டை , மதுக்கூர், பூதலூர், பேராவூரணி உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

    நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 219.90 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது .

    இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழை அளவு மி.மீ.யில் வருமாறு :-

    மதுக்கூர்-34.20, பூதலூர் -32.80, வெட்டிக்காடு -27.20, பட்டுக்கோட்டை -26.50, குருங்குளம் -17.60, வல்லம் -15.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அணை பகுதிகளை பொறுத்தவரை பாபநாசம், சேர்வலாறு பகுதியில் சாரல் மழை பெய்தது.
    • மணியாச்சியில் அதிகபட்சமாக 72 மில்லி மீட்டரும், ஓட்டப்பிடாரத்தில் 62 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. பாளை, நெல்லை டவுன், வண்ணார்பேட்டை, பேட்டை உள்ளிட்ட மாநகர பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக பாளையில் 4.4 மில்லிமீட்டரும், நெல்லையில் 2.6 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அம்பை, ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நாங்குநேரியில் 3 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை பாபநாசம், சேர்வலாறு பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1.41 கனஅடியாக உயர்ந்தது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை 62.90 அடியாகவும், சேர்வலாறு அணை 77.49 அடியாகவும் உள்ளது. இந்த அணை பகுதிகளில் 3 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மேற்குதொடர்ச்சி மலை பகுதியான மாஞ்சோலை வனப்பகுதியில் நாலுமுக்கு எஸ்டேட்டில் 10 மில்லி மீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் சில நாட்களாக வெயில் வாட்டிய நிலையில், நேற்று பெரும்பாலான இடங்களில் பலத்த மழை கொட்டியது. குறிப்பாக ஓட்டப்பிடாரம், மணியாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மணியாச்சியில் அதிகபட்சமாக 72 மில்லி மீட்டரும், ஓட்டப்பிடாரத்தில் 62 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    புதியம்புத்தூர் பகுதியில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தூரல் மழை பெய்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், நிலங்களை குளிர வைத்ததாக கூறினர். பாஞ்சாலங்குறிச்சி, பசுவந்தனை பகுதிகளில் மிதமான மழை பெய்தது. எட்டயபுரம், விளாத்திகுளம், சாயர்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. விளாத்திகுளத்தில் 26 மில்லிமீட்டர் மழை பெய்த நிலையில் சுமார் 1 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.

    மேலும் வைப்பாறு, சூரன்குடி, வேடநத்தம், கீழ அரசடி, ஸ்ரீவைகுண்டம், காயல்பட்டினம், திருச்செந்தூர், கடம்பூர், பசுவந்தனை, கழுகுமலை, கயத்தாறு, கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. தென்காசியில் நேற்று மாலை பெய்த மழையால் குளிர்ச்சி நிலவியது. அங்கு 20 மில்லிமீட்டர் மழை பெய்தது. செங்கோட்டையில் 4 மில்லிமீட்டரும், ஆய்குடியில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அணைகளை பொறுத்தவரை குண்டாறு அணை பகுதியில் பலத்த மழை பெய்தது. அங்கு 21 மில்லிமீட்டர் மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி 36 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 34.25 அடியாக உள்ளது.

    கருப்பாநதி அணையில் 7.5 மில்லி மீட்டரும், அடவிநயினாரில் 6 மில்லிமீட்டரும், கடனா மற்றும் ராமநதி அணைகளில் தலா 2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. அடவிநயினார் அணை நீர் இருப்பு 1 அடி அதிகரித்து 93 அடியானது. ராமநதியில் 55.50 அடியும், கருப்பாநதியில் 32.81 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யகூடும்.
    • சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

    இந்தநிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 19-ந் தேதி (இன்று) முதல் 21-ந் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யகூடும்.

    22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யகூடும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

    19-ந் தேதி (இன்று) மத்திய வங்க கடலின் மத்திய பகுதியிலும், 20-ந் தேதி (நாளை) மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளிலும் 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin