என் மலர்

    நீங்கள் தேடியது "Tenkasi"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் மற்றும் ஹோம் சாரிடபிள் டிரஸ்ட் இணைந்து நடத்திய முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் ஆலமரம் வட்டார தலைவர் கே.ஆர்.பி இளங்கோ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம் மற்றும் ஹோம் சாரிடபிள் டிரஸ்ட் இணைந்து நடத்திய முதியோ ர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    இவ்விழாவிற்கு பாவூர்ச த்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் செய லாளர் சசி ஞானசேகரன் தலைமை தாங்கி னார். சிறப்பு விருந்தி னராக கண்தான விழிப்பு ணர்வு குழு நிறுவனர், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் ஆலமரம் வட்டார தலைவர் கே.ஆர்.பி இளங்கோ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி கண்தான விழிப்புணர்வு உரை யாற்றி னார். ஹோம்சா ரிடபிள் டிர ஸ்ட் நிறுவ னரும், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க த்தின் பெரு ளாளரு மான டாக்டர் சினே கா பா ரதி வர வேற்று பேசி னார். ஹோம் சாரிடபிள் டிர ஸ்ட் மனே ஜிங் டிரஸ்ட்டி சாமி நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புல்லுகாட்டு வலசையில் பார்வை கிளை நிலையம் தொடக்க விழா நடைப்பெற்றது.
    • சிறந்த முறையில் கால்நடைகள் வளர்ப்போருக்கு விருது வழங்கப்பட்டன.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குறும்பலாபேரியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமினை தொடங்கி வைத்து, ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நான்கு கால்நடை மருந்தக கட்டிடங்களை மீன்வளம் மற்றும் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்.எம்.குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.

    கால்நடை பராமரிப்புத் துறையில் நபார்டு நிதியுதவியின் மூலம் ரூ.1.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 கால்நடை மருந்தகங்களின் (மாறாந்தை, வல்லம், ஆய்க்குடி, பொட்டல்புதுார்) புதிய கட்டிடங்கள் மற்றும் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் நிதியின் மூலம் கட்டப்பட்ட அரியப்பபுரம் பார்வை கால்நடை மருந்தகம் (கிளை நிலைய கட்டிடம்) திறப்பு விழா நடைபெற்றது.

    கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் அரியப்பபுரம் கிராமத்தில் புதிய பார்வை கால்நடை மருந்தகம் மற்றும் புல்லுகாட்டு வலசையில் பார்வை கிளை நிலையம் தொடக்க விழா நடைப்பெற்றது.

    பின்னர் மீன்வனம் மற்றும் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் ஆணையின் பேரில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறந்த கால்நடை பராமரிப்பு முறைகள் குறித்த விளக்கங்களும், செயலாக்கங்களும், மருத்துவ சேவைகளும் விவசாயிகளின் இருப்பிடங்களிலே வழங்கும் விதமாக தமிழ்நாட்டில் 7760 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு தென்காசி மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 20 முகாம்கள் வீதம் 10 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 700 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

    ஒரு முகாம் நடத்த ஆகும் மொத்த செலவு ரூ.10,000 வீதம் 200 முகாம்களுக்கான மொத்த செலவு ரூ.20,00,000 ஆகும். இன்று புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கால்நடை மருந்தகங்கள் மற்றும் தொடங்கப்பட்ட முகாம்கள் மூலம்

    தென்காசி மாவட்டத்தில் உள்ள கால்நடைகள் பயனடையும். மேலும் குறும்லாப்பேரி கிராமத்தில் நடைப்பெற்ற முகாமில் சுமார் 700- க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துதல், குடற்புழு நீக்கம்

    செய்தல் சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, மலடுநீக்க சிகிச்சை போன்றவை மேற்கொள்ளப்பட்டன. மேலும் கன்று மேலாண்மை, சினை மாடு மேலாண்மை, கறவைமாடு மேலாண்மை, தீவன

    மேலாண்மை போன்றவை குறித்த விழிப்புணர்வு கால்நடை வளர்ப்போரிடையே ஏற்படுத்தப்பட்டது. சிறந்த முறையில் கால்நடைகள் வளர்ப்போருக்கு விருதும், சிறந்த கிடேரி கன்றுகள் வளர்ப்போருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

    மேலும் பால் உற்பத்தியை அதிகரிக்க மற்றும் சினை பிடிப்பதற்கு தேவையான சத்துகள் அடங்கிய தாது உப்புகளும் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு முகாம்கள் மூலம் தொலைத்தூர குக்கிரா மங்களில் உள்ள கால்நடைகள் மற்றும் மக்களும் பயன்பெறுவார்கள் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், செயற்பொறியாளர் (பொதுப்பணி துறை கட்டிட மற்றும் கட்டுமானம்) அழகிரிசாமி, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் (கூ.பொ) (திருநெல்வேலி) தியோபிலாப் ரோஜர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தமிழ்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சிக் குழுத் துணை உதய கிருஷ்ணன், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் கீழப்பாவூர் காவேரி சீனித்துரை, ஆலங்குளம் திவ்யா மணிகண்டன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, சிவன் பாண்டியன், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் கீழப்பாவூர் முத்துக்குமார், கால்நடை பராமாரிப்புத் துறை உதவி இயக்குநர் மகேஷ்வரி, உதவி செயற் பொறியாளர்கள் பொதுப்பணி துறை கட்டிட மற்றும் கட்டுமானம் செல்வி, அனிதா சாந்தி, உதவி பொறியாளர்கள் நிர்மல் சிங், உதய குமார், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சாக்ரடீஸ், ஊராட்சி மன்ற தலைவர் குலசேகரப்பட்டி முத்துமாலையம்மாள் மதிசெல்வன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குலசேக ரப்பட்டி திருவளர்செல்வி சாமிராஜா ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கீழப்பாவூர் முருகேசன், புவனா மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சந்துரு தென்காசியில் உள்ள அவரது தாத்தா வீட்டில் இருந்து வந்துள்ளார்.
    • சமையலறையில் சிறுவன் சந்துரு தூக்கு போட்ட நிலையில் கிடந்துள்ளார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வடக்கு ரத வீதியில் வசித்து வரும் முருகன் என்பவரது மகன் சந்துரு (வயது 17). இவர் கடையநல்லூர் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சிறுவனு க்கு சரியாக படிப்பு வராததால் பள்ளிக்கு சரியாக செல்லாமல் இருந்து கொண்டு மாற்று சான்றிதழ் வாங்கி தருமாறு வீட்டில் கேட்டு சண்டை போட்டுள்ளார்.

    கடந்த ஒரு மாதத்திற்கு மேல் பள்ளிக்கூடம் செல்லாமல் இருந்த நிலையில், தென்காசியில் உள்ள அவரது தாத்தா சுப்பிரமணியன் வீட்டுக்கு வந்து இருந்து வந்துள்ளார். சிறுவனும், அவரது தாத்தா சுப்பிரமணியனும் (69) வீட்டில் இருந்துள்ளனர். அப்போது தாத்தா சாப்பாடு வாங்க சென்றுள்ளார்.

    சாப்பாடு வாங்கி விட்டு வந்து பார்த்தபோது சிறுவன் சந்துரு அந்த வீட்டின் சமையலறையில் சேலையால் தூக்கு போட்ட நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித் ததில் ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக தெரி வித்து ள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தென்காசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
    • விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொது மக்கள் கேட்டுக்கொள்ள ப்படு கிறார்கள் என்று கலெக்டர் கூறினார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழகம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப் பெரிய கடமை இருக்கிறது.

    நீர் நிலைகள் நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற 18-ந்தேதி விநா யகர் சதுர்த்தி விழா வினை கொண்டா டும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்ப தற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    வழிமுறைகள்

    பொதுமக்கள் களி மண்ணால் செய்யப்பட்ட, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டது மான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகா ப்பான முறையில் கரைக்க வேண்டும். மேலும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் வகுத்துள்ள படி விதிமுறை களை கடைபிடிக்க வேண்டும்.

    விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வா கத்தினால் கடையம் ராமநதி அணை, ஆழ்வார் குறிச்சி கடனா ஆறு, யானை பாலம் அருகில் சிற்றாறு, இலஞ்சி, தென்காசி, குற்றாலம், செங் கோட்டை குண்டாறு அணை, ஹரிகர ஆறு, லாலா குடியிருப்பு, புளி யரை, அச்சன்புதூர் அனுமான் ஆறு, கரிசல் குடியிருப்பு அருகில் பாவூர்சத்திரம் குளம், பாவூர்சத்திரம், கடைய நல்லூர் தாமரை குளம், மேல கடையநல்லூர், கடையநல்லூர் கருப்பாநதி அணை, நெற்கட்டும்செவல், வாசுதேவநல்லூர், ராயகிரி பிள்ளையார் மந்தையாறு ஆகிய இடங்களில் ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன.

    விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்கா தவாறு கொண்டா டும்படி பொது மக்கள் கேட்டுக ்கொள்ள ப்படு கிறார்கள். சிலைகள் வைப்பது, கரைப்பது தொடர்பான சந்தேகங்க ளுக்கு மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிர ண்டு மற்றும் மாவட்ட சுற்றுச்சூ ழல் பொறியாளர் ஆகி யோரை நேரில் அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    • கிருஷ்ணர், ராதை, முருகன் உள்ளிட்ட தெய்வங்களின் வேடம் அணிந்து சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்ட கண் கவர் ஊர்வலம் நடைபெற்றது.

    தென்காசி:

    கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அப்போது கோவிலில் இருந்து கிருஷ்ணர், ராதை, முருகன் உள்ளிட்ட தெய்வங்களின் வேடம் அணிந்து சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்ட கண் கவர் ஊர்வலம் நடைபெற்றது. இதில் குழந்தைகளின் பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு குழந்தைகளை கைகளில் பிடித்தவாறு அழைத்துச் சென்றனர். மேலும் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை தினம் என்பதால் தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மட்டுமின்றி முக்கிய கோவில்கள் அனைத்திலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொதுப் பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள தகுதி வாய்ந்த 310 குளங்கள் கண்டறியப்பட்டு தென்காசி மாவட்ட அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டு ள்ளது.
    • மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்காக 60 கிராம் கன மீட்டர் அளவும், சொந்த பயன்பாட்டிற்கு 30 கன மீட்டர் அளவும் கட்டணம் இல்லாமல் வெட்டி எடுத்து பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச் சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை பராமரிப்பில் உள்ள குளங்களில் இருந்து விவசாயம் மற்றும் மண்பாண்டம் தொழில் பயன்பாட்டிற்கு கட்டணம் இல்லாமல் வண்டல் மண் மற்றும் களிமண் வெட்டி எடுப்பதற்காக தென்காசி மாவ ட்டத்தில் பொதுப் பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள தகுதி வாய்ந்த 310 குளங்கள் கண்டறியப்பட்டு தென்காசி மாவட்ட அரசிதழில் அறிவி க்கை செய்யப்பட்டு ள்ளது.

    மேலும் தென்காசி மாவட்டத்தில் ராஜ பாளையம் மேல் வைப்பாறு வடிநில கோட்டம் கட்டுப் பாட்டில் உள்ள தகுதி வாய்ந்த 4 குளங்கள் கண்டறியப்பட்டு மாவட்ட அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. விவசாய பயன்பாட்டிற்காக நன்செய் நிலங்களை மேம்படுத்தும் வகைக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 ஏக்கர் நிலத்திற்கு 75 கன மீட்டர் அளவும், புன்செய் நிலங்களை மேம்படுத்து வதற்காக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 ஏக்கர் நிலத்திற்கு 90 கன மீட்டர் அளவும், மேலும் மண் பாண்ட தொழில் பயன் பாட்டிற்காக 60 கிராம் கன மீட்டர் அளவும், சொந்த பயன்பாட்டிற்கு 30 கன மீட்டர் அளவும் கட்டணம் இல்லாமல் வெட்டி எடுத்து பயன்படுத்த அனுமதிக்கப் பட்டுள்ளது.

    எனவே இச்சலு கையினை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலத்தின் தரத்தினை மேம்படுத்தும் வகைக்கு தங்களது விவசாய நிலம் தொடர்பான பட்டா, 10 (1) அடங்கல், சிட்டா, கிரைய பத்திரம் மற்றும் புலப்பட நகல் ஆகிய வற்றுடன் மண்பாண்ட தொழி லாளர்கள் சங்க உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் சான்று களுடனும் சம்பந்தப் பட்ட தாசில்தார்களிடம் உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழக அரசை கண்டித்து தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே மாவட்ட பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் ராமர் தலைமை தாங்கினார்.

    தென்காசி:

    பட்டியல் இன மக்களின் சமூக முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ஒதுக்கி வரும் நிதியினை தமிழக அரசு திருப்பி அனுப்பியதாக கூறி, தமிழக அரசை கண்டித்து தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே மாவட்ட பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் ராமர் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பாலகுருநாதன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் நகர தலைவர் மந்திரமூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பட்டியல் அணி மாநில பொதுச் செய லாளர் சிவந்தி நாராயணன், தென்காசி மாவட்ட பார்வையாளர் மகாராஜன், வர்த்தக பிரிவு மாநில செய லாளர் கோதை மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தற்போது தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அகரக்கட்டு பகுதியில் பனை மரங்கள் அதிக அளவு பட்டுப் போய்க் கொண்டிருக்கிறது.
    • தண்ணீர் இல்லாமல் தென்காசி மாவட்டம் மிகவும் வறட்சியாக காணப்படுகிறது. எனவே தென்காசி மாவட்டம் முழுவதும் வறட்சி மாவட்ட மாக அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.

    தென்காசி:

    தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து மனு கொடுத்த னர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    தென்காசி மாவட்டத்தில் தற்போது மழை இல்லாத காரணத்தால் மாவட்டம் முழுவதும் பனை மரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பட்டுப் போய் கொண்டு இருக்கிறது.

    குறிப்பாக 50 முதல் 60 ஆண்டு காலம் வரை வளர்க்கப்பட்ட பனை மரங்கள் கருகி வருகின்றன. பனை மரங்கள் பட்டுப்போனால் வறட்சி அதிகரிக்கும் என்று முன்னோர்கள் கூறுவார்கள்.

    அதன்படி தற்போது தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அகரக்கட்டு பகுதியில் பனை மரங்கள் அதிக அளவு பட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் பனைத் தொழிலாளர்கள் மிகவும் வேதனையோடு இருக்கிறார்கள். மீண்டும் இந்த இடத்தில் பனை விதை வைத்து வளர்த்து பலன் தருவதற்கு சுமார் 25 ஆண்டு காலம் ஆகும்.

    அதனால் பட்டுப்போன பனை மரங்களை கணக்கெடுத்து நிவாரணமாக ஒரு பனை மரத்திற்கு ரூ.25 ஆயிரம் வீதம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். மேலும் ஆறு, குளங்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடப்பதனால் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் .

    சிறுதானியங்கள் விவசாயம் செய்த விவசாயிகள் பயிர்கள் கருகி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி தண்ணீர் இல்லாமல் தென்காசி மாவட்டம் மிகவும் வறட்சியாக காணப்படுகிறது. எனவே தென்காசி மாவட்டம் முழுவதும் வறட்சி மாவட்ட மாக அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது மாநில துணைத் செயலாளர் ஜாண் டேவிட், தென்காசி மாவட்ட தலைவர் ராஜ்நயினார் சாம்பவர்வடகரை கிளை செயலாளர் விஜயன் ஆகியோர் உடன் இருந்தனர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுந்தரபாண்டியபுரம் டி.டி.டி.ஏ. தொடக்க பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
    • தொடர்ந்து இந்த புதிய திட்டம் குறித்து விளக்கி பயன்பெற வந்திருந்த பெண்களுக்கு பேரூராட்சித்தலைவரின் கணவர் புத்தகங்கள் வழங்கினார்.

    தென்காசி:

    சுந்தரபாண்டியபுரம் டி.டி.டி.ஏ. தொடக்க பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் தொடங்கப்பட்டது. சுந்தர பாண்டியபுரம் பேரூராட்சி தலைவரின் கணவர் எஸ்.எஸ்.எம். செல்வகுமார் தலைமை தாங்கினார். இதில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ் பயன் பெறும் பெண்கள் அனைவரும் பங்கேற்றனர். தொடர்ந்து இந்த புதிய திட்டம்குறித்து விளக்கி பயன் பெற வந்திருந்த பெண்களுக்கு பேரூராட்சித் தலைவரின் கணவர் புத்தகங்கள் வழங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் ரோஸ்லின் மரிய செல்வம் சிறப்பு விருந்தினர் செல்வகுமாருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். ஆசிரியர் சுகந்தி வரவேற்று பேசினார். கீதா தன்னார்வலராக பங்கேற்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு. க.ஸ்டாலின் அறிவித்துள்ள மாதாந்திர ஊதியத்திற்கு நன்றி தெரிவித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • தங்கள் வார்டு பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைநது வருகின்றனர் என்று கவுன்சிலர்கள் கூறினர்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி மன்ற சாதாரண கூட்டம் நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணை சேர்மன் சங்கரா தேவி முருகேசன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சுகந்தி தீர்மானம் குறித்து விளக்கி கூறி வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் நகராட்சி சேர்மன், துணைச் சேர்மன், கவுன்சிலர்களுக்கு, முதல்-அமைச்சர் மு. க.ஸ்டாலின் அறிவித்துள்ள மாதாந்திர ஊதியத்திற்கு நன்றி தெரிவித்து தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், கவுன்சிலருமான ஜெயபாலன் தீர்மானம் முன்மொழிந்தார் அதனை தொடர்ந்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பின்னர் தங்கள் வார்டு பகுதியில் குடிநீர் வினியோகம் சீராக வழங்கப்படவில்லை எனவும், சரிவர தண்ணீர் வினியோகம் செய்யாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைவதாகவும், சாலை வசதி மற்றும் கட்டிட அனுமதி வழங்கப்படாதது குறித்தும், புதிய நகராட்சியான சுரண்டை வளர்ச்சி பெற தடையாக நகராட்சிக்கு நிரந்தர ஆணையாளர், நகராட்சி பொறியாளர், நகர அமைப்பு அலுவலர் நியமிக்கப்படாமல் பொறுப்பு அதிகாரிகள் செயல்படுவதால் பணிகள் சரிவர நடக்கவில்லை எனக் கூறியும் கவுன்சிலர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நகராட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும், கவுன்சிலருமான சக்திவேல், வசந்தன், மாரியப்பன், ராஜேஷ், ராஜ்குமார், பால சுப்பிரமணியன், மாரியப்பன், வெயிலு முத்து, ரமேஷ், வினோத் குமார், பரமசிவன், ஜெயராணி வள்ளிமுருகன், பொன்ராணி ஜெபராஜா, கல்பனா அண்ண பிரகாசம், அம்சா பேகம், அந்தோணி சுதா, செல்வி, பூபதி, முருகேஸ்வரி உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.