என் மலர்
நீங்கள் தேடியது "Tenkasi"
- படுகாயங்களுடன் மீட்கப்பட்ட வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி கவலைக்கிடமாக நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- தென்காசி மாவட்ட வழக்கறிஞர்கள் நெல்லை-தென்காசி பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி என்பவர் கூலக்கடை பஜார் என்ற இடத்தில் அவரது அலுவலகத்திலேயே வைத்து அவர் மர்ம நபரால் அரிவாளால் வெட்டப்பட்டார்
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி கவலைக்கிடமாக நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வழக்கறிஞர் முத்துக்குமாரசாமியை வெட்டிவிட்டு, எந்த பயமும் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அரசு வழக்கறிஞர் மீதான கொலைவெறி தாக்குதலை கண்டித்து தென்காசி மாவட்ட வழக்கறிஞர்கள் நெல்லை-தென்காசி பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி, களக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
- தூத்துக்குடி மாநகர பகுதியில் 7 மில்லிமீட்டர் மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாகவே காட்சியளித்தது. வெயில் தலைகாட்டவில்லை. இந்நிலையில் மாலையில் திடீரென மாநகரின் முக்கிய பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியது. மேலும் மின்னலும் பலமாக இருந்தது.
வண்ணார்பேட்டை, சந்திப்பு, டவுன், பேட்டை, பாளையங்கோட்டை, பெருமாள்புரம், சமாதானபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் கொக்கிரகுளம் பழைய ஆற்றுப்பாலம், பாளையங்கோட்டை மார்க்கெட் மற்றும் பெருமாள்புரத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது.
சுமார் 2 மணி நேரம் டவுன் பகுதியில் பெய்த கனமழையால் டவுன் வ.உ.சி. தெருவில் மழைநீர் செல்வதற்கு வழியில்லாமல் தேங்கி கிடந்தது. ஏற்கனவே வாறுகால் அடைப்புகளால் சாக்கடை நிரம்பிய நிலையில் இரவு முழுவதும் சாக்கடை நீர் மழைநீருடன் கலந்து செல்வதற்கு வழியின்றி தேங்கியது. அதில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். பாளையங்கோட்டை மற்றும் நெல்லையில் தலா 3 சென்டிமீட்டர் மழை கொட்டியது.
நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி, களக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பகலில் வறண்ட வானிலை காணப்பட்ட நிலையில், மாலையில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. மூலைக்கரைப்பட்டி சுற்றுவட்டாரத்தில் அதிகபட்சமாக 3½ சென்டி மீட்டர் மழை பதிவாகியது. அம்பையில் இன்று காலை விட்டு விட்டு மழை பெய்தது.
அணைகளை பொறுத்தவரை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லை. பாபநாசம் அணை நீர்மட்டம் 109 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 98½ அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 116 அடியாகவும் இருக்கிறது. 52 அடி கொண்ட கொடுமுடியாறு அணையில் 45 அடி நீர் இருப்பு உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் ராமநதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 5 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணைக்கு வினாடிக்கு 35 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நீர்மட்டம் 67¾ அடியாக உள்ளது. கடனா அணை நீர்மட்டம் 60 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 130½ அடியாக வும் உள்ளது.
நகர் பகுதிகளை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதியான சிவகிரி சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து மாலை நேரங்களில் சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், நேற்றும் கனமழை கொட்டியது. இதனால் குளிர்ச்சியான நிலை அந்த பகுதிகளில் நிலவி வருகிறது.
அதிகபட்சமாக சிவகிரியில் 32 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் லேசான சாரல் அடித்தது. இன்று காலை முதலே புளியங்குடி, சிவகிரி, பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் விட்டு விட்டு சாரல் பெய்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பூர், கழுகு மலை, திருச்செந்தூர் சுற்று வட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது. காடல்குடி, வைப்பார், சூரங்குடியில் பெய்த பரவலான மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
விளாத்திகுளம், கோவில்பட்டி, எட்டயபுரத்தில் சாரல் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாநகர பகுதியில் 7 மில்லிமீட்டர் மழை பெய்தது.
- தென்காசி மாவட்ட மாற்று திறனாளிகள் ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்படும்.
- கடனா நதி அணை ரூ.4 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
* தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு ரூ.15 கோடியில் 11 புதிய குடியிருப்புகள் கட்டப்படும்.
* தென்காசி மாவட்ட மாற்று திறனாளிகள் ஒருங்கிணைந்த சேவை மையம் அமைக்கப்படும்.
* ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரிக்கு ரூ.1 கோடி செலவில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.
* கடனா நதி அணை ரூ.4 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
* அடவி நயினார் அணைத்திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியில் அணைக்கட்டுகள், கால்வாய்கள், குளங்கள் சீரமைக்கப்படும்.
* ரூ.52 கோடி மதிப்பீட்டில் தென்காசி மாவட்டத்திற்கு புதிய குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும்.
* வீரகேரளம்புதூர் வட்டத்தில் உள்ள மாறாந்தை கால்வாய் ரூ.2 கோடி செலவில் சீரமைக்கப்படும்.
* கடையநல்லூர் வட்டம் வரட்டாறு பாசன அணைக்கட்டுகள், குளங்கள் ரூ.4 கோடியில் மேம்படுத்தப்படும்.
* தென்காசியில் கண்மாய்கள் ரூ.12 கோடியில் சீரமைக்கப்படும்.
* கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ரூ.6 கோடியில் புதிய கட்டடம், சிவசைலம் கடனா அணை ரூ.4 கோடியில் சீரமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எங்கும் இயற்கை எழில் கொஞ்சும் தென்காசி மண்.
- தமிழ்நாடு முழுவதும் இதுவரை 9 லட்சம் பேருக்கு புதிதாக முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.
தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் கூறியதாவது:
* எங்கும் இயற்கை எழில் கொஞ்சும் தென்காசி மண்.
* வடக்கே ஒரு காசி என்றால் தெற்கே ஒரு தென்காசி என சொல்லும் அளவிற்கு பெருமை வாய்ந்த நகரம் தென்காசி.
* தூறலும் சாரலும் கொண்டு மக்களை குளிர்விக்கும் மண் தென்காசி.
* காலுக்கு கீழே நிலமும், தலைக்கு மேலே கூரையும் வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவு.
* கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் கட்டப்பட்ட ஒரு லட்சமாவது வீட்டை பயனாளிக்கு ஒப்படைத்தது பெருமை.
* வருவாய் துறை சார்பில் 17 விதமான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
* 10 லட்சம் பேருக்கு இதுவரை இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
* அன்பு மகள் பிரேமாவிற்கு கொடுத்த வாக்குறுதிப்படி நடைபெறும் வீடு கட்டும் பணியை நேரில் பார்வையிட்டேன். வீடு கட்டும் பணி வேகமாக நடைபெறுகிறது.
* தமிழ்நாடு முழுவதும் இதுவரை 9 லட்சம் பேருக்கு புதிதாக முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.
* 15 ஊர்களில் ஊராட்சி மன்ற கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
* எல்லோருக்கும் எல்லாம் என்பதை நோக்கமாக கொண்டு அனைத்து மாவட்டங்களையும் வளர்த்து வருகிறோம்.
* தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் அனைத்து துறைகளையும் முன்னேற்றி வருகிறோம்.
* திராவிட மாடல் அரசு அமைந்த பின்னர் தமிழ்நாடு உயர்ந்துள்ளது.
* மாவட்டந்தோறும் அரசு விழாக்களில் பங்கேற்று அந்த மாவட்டங்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சீவநல்லூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் ஒரு லட்சமாவது வீட்டை திறந்து வைத்தார்.
- புளியங்குடி சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட ரூ.141 கோடியே 60 லட்சம் செலவிலான 117 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
தென்காசி:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து அரசு சார்பில் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.
மேலும் மாவட்டங்களில் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
ஏற்கனவே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து அரசு திட்டப்பணிகளை தொடங்கி வைத்திருந்தார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். இதற்காக நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அவர் அங்கிருந்து கார் மூலமாக கோவில்பட்டி வந்தார். அங்கு முதலமைச்சருக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கோவில் பட்டியில் நகர தி.மு.க. சார்பில் கட்டப்பட்டுள்ள அலுவலகம் மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச்சிலை ஆகியவற்றை திறந்து வைத்தார். பின்னர் நெல்லை மாவட்டம் அரிய நாயகிபுரம் சென்று தங்கினார்.
இன்று காலை நெல்லையில் இருந்து கார் மூலம் தென்காசி மாவட்டம் வந்த அவருக்கு ஆலங்குளத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் தென்காசி மாவட்டம் சீவநல்லூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் ஒரு லட்சமாவது வீட்டை திறந்து வைத்தார்.
அதன் பிறகு ஆய்க்குடி செல்லும் வழியில் அனந்தபுரம் என்ற இடத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளான தென்காசி மாவட்டம் மைய நூலகம், தென்காசி மகப்பேறு மையம் மற்றும் குழந்தைகள் நல கட்டிடம், மாறாந்தையில் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகள், புளியங்குடி சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட ரூ.141 கோடியே 60 லட்சம் செலவிலான 117 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
மேலும் ரூ.291 கோடியே 19 லட்சம் மதிப்பிலான 83 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து 2 லட்சத்து 44 ஆயிரத்து 469 பயனாளிகளுக்கு ரூ.587 கோடியே 39 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மொத்தத்தில் ரூ.1,020 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் ரூ.22,912 கோடியில் 6 லட்சத்து 3 ஆயிரத்து 246 பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.2,074 கோடியில் 37 ஆயிரத்து 221 வளர்ச்சி திட்டபணிகள் நடைபெற்றுள்ளது.
மொத்தத்தில் ரூ.24,986 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. வளர்ச்சி திட்டப்பணிகளும் நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- கழுநீர்குளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாகனத்தை நிறுத்தச்சொன்னார்.
- மாணவி பிரேமாவுக்கு போன் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
நெல்லை:
சென்னையில் கடந்த மாதம் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் படித்து, தனியார் நிறுவனத்தில் வேலை பெற்ற மாணவ-மாணவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி பேசினார்.
அப்போது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கழுநீர்குளத்தை சேர்ந்த பிரேமா என்பவர் பேசியபோது, தான் கல்லூரி விடுதியில் தங்கி படித்ததாகவும், கஷ்டப்பட்டு படிக்க வைத்த தன் தந்தை, மழையில் ஒழுகும் வீட்டில் வசிப்பதாகவும் கூறினார்.
இதையடுத்து உடனடியாக அவருக்கு, 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், புதிய வீடு கட்டி கொடுக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தொடர்ந்து கலெக்டர் கமல்கிஷோர் கடந்த 27-ந்தேதி சம்பந்தப்பட்ட மாணவியின் வீட்டுக்கே நேரடியாக சென்று கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கான ஆணையை வழங்கினார். தொடர்ந்து வீடு கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று தென்காசி மாவட்ட அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிகழ்ச்சி நடைபெறும் மேடைக்கு செல்லும் வழியில் உள்ள கழுநீர்குளத்தில் தனது வாகனத்தை நிறுத்தச்சொன்னார்.
திடீரென அவர் மாணவி பிரேமாவின் வீட்டிற்கு நேரடியாக சென்று கனவு இல்லம் கட்டுமான பணியை ஆய்வு செய்தார். தொடர்ந்து மாணவி பிரேமாவுக்கு போன் செய்து உணர்ச்சி பொங்க பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவியின் பெற்றோரிடமும் சிறிது நேரம் கலந்துரையாடினார். பின்னர் அங்கிருந்து விழா மேடைக்கு புறப்பட்டார்.
- மாவட்டங்களில் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
- சாலையோரம் சிலம்பம் சுற்றும் பயிற்சியில் மாணவ-மாணவிகள் ஈடுபட்டிருந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து அரசு சார்பில் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.
மேலும் மாவட்டங்களில் நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
ஏற்கனவே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து அரசு திட்டப்பணிகளை தொடங்கி வைத்திருந்தார்.
இந்நிலையில் தென்காசி மாவட்ட அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார்.
அப்போது கழுநீர்குளம் பகுதியில் சாலையோரம் சிலம்பம் சுற்றும் பயிற்சியில் மாணவ-மாணவிகள் ஈடுபட்டிருந்தனர். அதனை கண்ட முதலமைச்சர் தானும் காரில் இருந்து இறங்கி சென்று மாணவ-மாணவிகளுடன் சேர்ந்து சிலம்பம் சுற்றி அசத்தினார்.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
- பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, எம்.சி. பொய்கை, துரைச்சாமிபுரம்
செங்கோட்டை:
தென்காசி மின் கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயகசுந்தரம் (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவர்வடகரை உபமின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே அங்கிருந்து மின் விநியோகம் பெறும் தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம் பாறை, திரவியநகர், ராமச்சந்திரபட்டணம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளை வலசை, பெரிய பிள்ளை வலசை, பிரானூர், வல்லம், கற்குடி, புளியரை, தெற்கு மேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு, சுரண்டை, இடையர் தவணை, குலையனேரி, இரட்டைக் குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூர், ஆனைக்குளம், கரையாளனூர், அச்சங்குன்றம், சாம்பவர் வடகரை, சின்னத்தம்பி நாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, எம்.சி. பொய்கை, துரைச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
- இன்று மதியம் அறிவிக்கப்பட்டுள்ள மாதாந்திர தேர்வுகளை மற்றொரு நாளில் நடத்திட வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்கு பின்னர் இன்று நீர்நிலைகள் மற்றும் ஆறுகளில் கரைக்க பக்தர்கள் தயாராகி வருகிறார்கள்.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை 2 கட்டங்களாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 312 சிலைகளையும் ஊர்வலமாக சென்று இன்று நீர்நிலைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக தென்காசி அருகே கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்க அம்மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
விநாயகர் ஊர்வலத்தையொட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் இன்று அரைநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இன்று மதியம் அறிவிக்கப்பட்டுள்ள மாதாந்திர தேர்வுகளை மற்றொரு நாளில் நடத்திட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ்சின் பின் பக்கத்தில் உள்ள 2 சக்கரங்களும் தனியாக கழன்று சாலையில் ஓடியது.
- இந்த சம்பவத்தின்போது பின்னால் வேறு பஸ்கள் வராததால் அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
கடையநல்லூர்:
மதுரையில் இருந்து குற்றாலம் நோக்கி இன்று காலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த சங்கரன் (வயது 55) என்பவர் ஓட்டி சென்றார்.
பஸ் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் பகுதியில் உள்ள மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலை சென்றபோது திடீரென பஸ் சக்கரத்தின் அச்சு முறிந்தது.
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ்சின் பின் பக்கத்தில் உள்ள 2 சக்கரங்களும் தனியாக கழன்று சாலையில் ஓடியது. எனவே பஸ்சின் பின்பக்கம் அமர்ந்திருந்த 3 மாணவர்கள் உள்பட பஸ்சில் இருந்த 40 பயணிகளும் பஸ்சின் உள்ளே தூக்கி வீசப்பட்டனர். இதில் பின்பகுதியில் இருந்த 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று மாணவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மற்ற பயணிகள் பாதுகாப்பாக மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தின்போது பின்னால் வேறு பஸ்கள் வராததால் அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆய்க்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ்சின் சக்கரம் கழன்று சாலையில் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காலை மர்ம நபர்கள் இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
- மாவட்ட கலெக்டர் அலுவலகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் தென்காசி மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருந்து வரும் ஆனந்தன் அய்யாசாமிக்கும் இன்று காலை மர்ம நபர்கள் இ-மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்த கலெக்டர் அலுவலகம் தரப்பிலும், ஆனந்தன் அய்யாசாமி தரப்பிலும் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசாரின் முழு பாதுகாப்பின் கீழ் தென்காசி கலெக்டர் அலுவலகம் கொண்டு வரப்பட்ட நிலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் அனைத்து அரசு ஊழியர்களும், பொதுமக்களும் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மூலமாக முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மேலும் மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலையில் இருந்து அவ்வப்போது சாரல்மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
- குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் கொட்டி வருகிறது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
அரபிக்கடலில் இருந்து ஈரப்பதம் மிக்க காற்றானது தமிழக மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஊடாக இழுக்கப்படுகிறது. தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள நெல்லை, தென்காசி மலைகிராமங்களில் தற்காலிகமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது என தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இன்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. மாநகரில் டவுன், பேட்டை பகுதிகளில் காலையில் 1/2 மணி நேரம் சாரல் மழை பெய்தது. மாநகர் மற்றும் புறநகரின் அனைத்து இடங்களிலும் வானம் மேகமூட்டமாக காட்சியளிக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று மாலையில் இருந்து அவ்வப்போது சாரல்மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. அந்த வகையில் மேல் பாபநாசம் பகுதியில் காலையில் பலத்த மழை பெய்தது. பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் பகுதியில் பரவலாக பெய்யும் மழையால் அங்கு சாஸ்தா கோவிலில் தங்கி சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.
மலையடிவார பகுதியான அம்பை, வி.கே.புரம், கல்லிடைக்குறிச்சி சுற்றுவட்டாரத்திலும் சாரல் மழை நீடித்தது. மாஞ்சோலை மலைப்பகுதியில் சாரல் மழை பெய்துள்ளது. இன்றும் காலை முதலே நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட் பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட்டில் 18 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 14 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்தது.
கடந்த 2 நாட்களாக அந்த பகுதிகளில் இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. அணைகளை பொறுத்தவரை 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 85.42 அடி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 62 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் 88 அடியாகவும், சேர்வலாறில் 102.62 அடியும் நீர் இருப்பு உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகாலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து காலையில் ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் இன்று காலை லேசான சாரல் அடித்தது. கருப்பாநதி அணை பகுதியில் மட்டும் சற்று அதிகமாக மழை பெய்தது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மிதமான தண்ணீர் கொட்டி வருகிறது.






