என் மலர்
நீங்கள் தேடியது "thoothukudi"
- தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி பயிற்சி பட்டறை கலைஞர் அரங்கில் மாவட்ட அமைப்பாளர் அபிராமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
- ஓவ்வொரு நாளும் முதல்-அமைச்சர் அறிவிக்கும் திட்டங்கள், அறிக்கைகள் அனைத்தையும் சமூகவலைதளங்களில் தெரியப்படுத்த வேண்டும் என்று கீதாஜீவன் கூறினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி பயிற்சி பட்டறை கலைஞர் அரங்கில் மாவட்ட அமைப்பாளர் அபிராமிநாதன் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு பேசியதாவது:-
உடனடி பதிலடி
தமிழக முதல்-அமைச்சரின் திட்டங்கள், செயல்பாடுகள் அனைத்தையும் வெளி உலகத்திற்கு எடுத்து சொல்லும் தகவல் தொழில்நுட்பத்துறையின் பணி மிகவும் மகத்தானது. ஓவ்வொரு நாளும் முதல்-அமைச்சர் அறிவிக்கும் திட்டங்கள், அறிக்கைகள் அனைத்தையும் சமூகவலைதளங்களில் தெரியப்படுத்த வேண்டும்.
பா.ஜ.க.வினர் பல்வேறு பழைய தகவல்களையும், நடைபெறாத சம்பவங்களையும் நமது திட்டங்களுக்கும், கட்சிக்கும் எதிராக பதிவு செய்து வருகின்றனர். அதற்கு உடனடியாக நாமும் பதிலடி கொடுக்கும் வகையில் நமது சாதனைகளை பதிவு செய்ய வேண்டும்.
எந்த மதத்தையும் குறைத்து மதிப்பிடும் கட்சி தி.மு.க. கிடையாது. எல்லா மதத்தையும் மதிக்கிறோம். மதவெறியை எதிர்க்கிறோம். பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு எம்மதமும் சம்மதம். ஓன்றே குலம் ஓருவனே தேவன் என்ற வழியில் பணியாற்றி வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசும் போது, ஓவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் குறைந்தபட்சம் 50 ஆயிரம் பேரிடம் சென்று சேரும் வகையில் முதல்-அமைச்சரின் திட்டங்களை, செயல்பாடுகளை, தி.மு.க.வின் வரலாறுகளை கொண்டு சேர்க்க வேண்டும். அப்படி சேர்க்கும் பட்சத்தில் 75 ஆயிரம் வாக்குகளை நாம் பெற்றால் எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெற்று விடலாம். அதற்கு உங்களுடைய பங்கு அவசியம் என்று கேட்டுக்கொண்டார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் பிரமிளா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், பிரபு, நாகராஜன், அருணாதேவி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வக்கீல் பாலகுருசாமி, பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாகராட்சி மண்டலத்தலைவர் கலைச்செல்வி, கவுன்சிலர்கள் வைதேகி, ஜெயசீலி, சரண்யா, சுப்புலட்சுமி, விஜயகுமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாநகர அணி அமைப்பாளர் ஜெயக்கனி, மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அண்ணாதுரை, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், தகவல் தொழில்நுட்ப அணி பகுதி அமைப்பாளர்கள் மார்க்கிஸ்ட்ராபட், சுரேஷ்குமார், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் காவல்துறையின் அனுமதி பெற்று வைக்கப்பட்ட 85 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது.
- தமிழகத்தின் பாரம்பரிய மேல தாளங்கள் மற்றும் கேரளாவின் செண்டை மேளம் என 12 வகையான மேளங்கள் முழங்க சிலம்பாட்டம், முளைப்பாரிகளுடன் ஊர்வலம் நடைபெற்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி நகரம் மற்றும் புறநகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகள் விஜர்சன விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி நகரின் முக்கிய சாலைகளின் வழியாக விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. அதன்படி தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் காவல்துறையின் அனுமதி பெற்று வைக்கப்பட்ட 85 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டது.
தூத்துக்குடி நகர பகுதியில் இருந்து வரக்கூடிய 74 விநாயகர் சிலைகள், புதுக்கோட்டை பகுதியில் இருந்து வரக்கூடிய விநாயகர் 11 சிலைகள் மற்றும் வீடுகளில் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகள் உட்பட விநாயகர் சிலைகள் அனைத்தும் திரேஸ்புரம் மற்றும்
முத்தையாபுரம் வழியாக தூத்துக்குடி புதியதுறைமுகம் கடலில் கரைக்கப்பட்டது.
முத்தையாபுரம் வழியாக 32 விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு அய்யம்பாண்டி தலைமை தாங்கினார். பா.ஜ.க. தெற்கு மண்டல தலைவர் மாதவன், இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் நாராயணராஜ், விநாயகர் ஊர்வல பொறுப்பாளர் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி வர்த்தக பிரிவு மாநில துணைத்தலைவர் ஜெகன் கலந்து கொண்டு பேசினார். விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலத்தை தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி பொதுச்செயலாளர் உமரி சத்தியசீலன் தொடங்கி வைத்து பேசினார்.
தமிழகத்தின் பாரம்பரிய மேல தாளங்கள் மற்றும் கேரளாவின் செண்டை மேளம் என 12 வகையான மேளங்கள் முழங்க சிலம்பாட்டம், முளைப்பாரிகளுடன் ஊர்வலம் நடைபெற்றது. இதில் பாலசுப்பிரமணியன், ஆறுமுகம் என மூத்த காரியத்தர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் விநாயகர் சிலை கமிட்டி பொறுப்பாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் பால்மாணிக்கம், செல்வி, துர்க்கையப்பன், பிரபு முருகேசன், முருகன் மற்றும் பொறுப்பாளர்கள் ஆண்கள்- பெண்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக விநாயகர் சிலைகள் விஜர்சன விழா மற்றும் ஊர்வலத்தை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர டி.எஸ்.பி. சத்யராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், பிரேம் ஆனந்த், அய்யப்பன், ராஜாராம், சண்முகம், வின்சென்ட் அன்பரசி, செந்தில்குமார், அலெக்ஸ் ராஜ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி தூத்துக்குடிக்கு அடுத்த படியாக இரண்டாவது பெரிய தொழில் நகரமாகும்.
- ஆனால் இந்த ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்லாது என்பது இப்பகுதி மக்களிடம் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் நெல்லையில் இருந்து சென்னைக்கு புதிதாக விடப்பட்டுள்ள வந்தே பாரத் ெரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. ெரயில்வே அமைச்சர் மற்றும் தென்னக ெரயில்வே பொது மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி தூத்துக்குடிக்கு அடுத்த படியாக இரண்டாவது பெரிய தொழில் நகரமாகும். இங்கிருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பஸ் மற்றும் ெரயில் மூலம் சென்னை சென்று வருகின்றனர்.
தற்போது நெல்லையில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ெரயில் இன்று முதல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வழியாக இயக்கப்படுகிறது.
ஆனால் இந்த ெரயில் கோவில்பட்டியில் நின்று செல்லாது என்பது இப்பகுதி மக்களிடம் மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே கோவில்பட்டி, தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார ஊர்களில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் சென்னையில் கல்வி பயின்று வரும் மாணவ மாணவிகள் பயன்பெறும் வண்ணம் வந்தே பாரத் ெரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
- மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டியை அமைச்சர் கே.என். நேரு மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
- தொடர்ந்து காலை 8.30 மணிக்கு தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் ஸ்டீம் பார்க்கை திறந்து வைக்கின்றனர்.
தூத்துக்குடி:
அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அமைச்சர் நேரு-கனிமொழி எம்.பி.
தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என். நேரு, தி.மு.க. துணைப் பொதுச்செயலளாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி ஆகியோர் வருகிற 30-ந் தேதி (சனிக்கிழமை) தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
அந்த வகையில் அன்று காலை 7 மணிக்கு தூத்துக்குடி மீளவிட்டான் என். பெரியசாமி திடலில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டியை அமைச்சர் கே.என். நேரு மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
பஸ் நிலையம் திறப்பு
தொடர்ந்து காலை 8.30 மணிக்கு தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் ஸ்டீம் பார்க்கை திறந்து வைக்கின்றனர். பின்னர் காலை 9 மணிக்கு தூத்துக்குடி அண்ணா பஸ் நிலைய வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள அண்ணா பஸ் நிலைய திறப்பு விழா மற்றும் பள்ளிக் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், அரசு சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- உமரிக்காடு மற்றும் ஆலடியூர் அனைத்து பொதுமக்களுக்கும் முக்கிய சாலை வழியாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டது.
- இதனை பொதுமக்கள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பெற்றனர்.
தூத்துக்குடி:
உமரிக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் உமரிக்காடு மற்றும் ஆலடியூர் அனைத்து பொதுமக்களுக்கும் முக்கிய சாலை வழியாக லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டது. இதனை ஊராட்சி மன்ற தலைவரும், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மாவட்ட தலைவருமான டாக்டர் எஸ்.ராஜேஷ்குமார் தனது சொந்த நிதியில் வழங்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் உமரிக்காடு ஊர் தலைவர் கார்த்திசன், ஆலடியூர் ஊர் தலைவர்கள் ஜெயச்சந்திரன், சேகர் மற்றும் உமரிக்காடு ஊராட்சியின் 9 வார்டுகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். லாரிகள் மூலம் குடிநீரை ஒவ்வொரு தெருவாக, வீடு வீடாக சென்று நேரடியாக வழங்கப்பட்டது. இதனை பொதுமக்கள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பெற்றனர். குடிநீர் விநியோகம் செய்த ஊராட்சி தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- அன்பு ராஜா என்பவர் கிருஷ்ணனை வழி மறித்து அவரது சட்டை பையில் இருந்து பணத்தை பறிக்க முயன்றுள்ளார்.
- அதனை கிருஷ்ணன் தடுத்ததால் அவரை அரிவாளால் வெட்ட முயன்றதுடன் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புதுக்கோட்டை ராஜூவ் நகரை சேர்ந்தவர் கிருஷ் ணன் (வயது 62). இவர் சம்பவத்தன்று புதுக் கோட்டை சாலை யில் வரும்போது குலையன் கரிசலை சேர்ந்த அன்பு ராஜா( 31) என்பவர் வழி மறித்து கிருஷ்ணனின் சட்டை பையில் இருந்து பணத்தை பறிக்க முயன்றுள்ளார்.
அதனை கிருஷ்ணன் தடுத்ததால் அவரை அரிவாளால் வெட்ட முயன்றதுடன் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப்பதிவு செய்து அன்புராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- தூத்துக்குடி மீனாட்சிப்பட்டி ஹோலிகிராஸ் என்ஜினீயரிங் கல்லூரி 15 -ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
- புதுக்கோட்டை செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் ராபின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ -மாணவிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மீனாட்சிப்பட்டி ஹோலிகிராஸ் என்ஜினீயரிங் கல்லூரி 15 -ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் கே. ஆர். பிரகாஷ் ராஜ்குமார் தலைமை தாங்கினார். கல்லூரியின் தாளாளர் வக்கீல் டி.எஸ். கே. ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். சாயர்புரம் சேகர குரு மனோகர் விழாவை தொடங்கி வைத்தார். கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியா ரெவெரென்ட் மெர்சி பத்மாவதி சிறப்புரை யாற்றினார்.
விழாவில் புதுக்கோட்டை செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் ராபின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ -மாணவி களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். கல்லூரியின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் பிரகாஷ் ராஜ்குமார் பேசம் போது, ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியின் சிறப்புகளையும், கல்விப் பணியில் தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் கல்லூரி புரிந்து வரும் சாதனைகளையும் விளக்கினார்.
விழாவில் பரியா பிரகாஷ் ராஜ்குமார் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி முதல்வர் அருண்மொழி செல்வி நன்றி கூறினார்.
- பெருமாள் கோவில்களுக்கு செல்ல 3 பஸ்கள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது
- 3 பஸ்களும் காலை 7 மணிக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
நெல்லை:
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த நாட்களில் பெருமாள் கோவில்களுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்வார்கள். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோவில்களுக்கு பக்தர்கள் அதிகளவு செல்வது வழக்கம்.
இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சனிக்கிழமைகளில் நவ திருப்பதி கோவில்களுக்கு பக்தர்கள் சென்று தரிசனம் செய்து விட்டு திரும்பி வரும் வகையில் சிறப்பு பஸ்கள் ஆண்டுதோறும் இயக்கப்படும். அதன்படி இந்த ஆண்டும் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்று காலை புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ் இயக்கத்தின் தொடக்க விழா நடைபெற்றது. நெல்லை அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் சரவணன் இந்த பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பெருமாள் கோவில்களுக்கு செல்ல 3 பஸ்கள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த பஸ்களில் அனைத்து இருக்கைகளும் நிரம்பின. ஒரு பஸ்சுக்கு 55 பக்தர்கள் வீதம் மொத்தம் 165 பக்தர்கள் இன்று கோவிலுக்கு புறப்பட்டனர். இந்த பயணத்திற்கு கட்டண தொகையாக ரூ.500 வசூலிக்கப்பட்டது. இந்த 3 பஸ்களும் காலை 7 மணிக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. பஸ்சில் சென்ற பக்தர்களுக்கு பிரசாத பை மற்றும் கோவில்கள் வரலாறு குறித்த விளக்க கையேடு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
இதில் கோட்ட மேலாளர்கள் சசிகுமார், பூல்ராஜ், கோபால கிருஷ்ணன், சுப்பிரமணியன், சுடலைமணி, மாரியப்பன், தாமிரபரணி கிளை மேலாளர் கோபால கிருஷ்ணன், பைபாஸ் பணிமனை கிளை மேலாளர் விஜயகுமார், புதிய பஸ் நிலைய பொறுப்பாளர் முனியசாமி மற்றும் அலுவலர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பஸ் நவ திருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில், நத்தம் விஜயாசன பெருமாள் கோவில், திருப்புளியங்குடி காய்சினவேந்த பெருமாள் கோவில், இரட்டை திருப்பதி அரவிந்த லோசனார் பெருமாள் கோவில், தேவர் பிரான் கோவில், பெருங்குளம் மாயக்கூத்தர் கோவில், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோவில், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் ஆகிய 9 கோவில்களுக்கும் சென்று இரவு மீண்டும் புதிய பஸ் நிலையம் வருகிறது.
இதேபோல் வருகிற 30-ந்தேதி மற்றும் அக்டோபர் மாதம் 7-ந்தேதி, 14-ந்தேதிகளிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இனிவரும் வாரங்களில் செல்வதற்கு விருப்ப முள்ளவர்கள் புதிய பஸ் நிலையத்தில் கடந்த 14-ந்தேதி முதல் அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களும் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர்.
இதேபோல் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து திருவேங்கட நாதபுரம், கருங்குளம், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், வள்ளியூரில் இருந்து களக்காடு வழியாக திருக்குறு ங்குடிக்கும், வீரவநல்லூரில் இருந்து அத்தாள நல்லூரு க்கும் பக்தர்கள் வசதிக்காக பஸ்கள் இயக்கப்பட்டன.
- முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அடுத்த மாதம் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- தற்காலிக ஓய்வு கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா அடுத்த மாதம் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 24-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்கார விழா நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
பக்தர்களுக்கு ஓய்வுகூடம்
இந்த தசரா திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு ஓய்வுகூடம் அமைப்பதற்காக குலசேகரபட்டினம் சிதம்பரேஸ்வரர் கோவில் அருகே ரூ. 58 லட்சம் மதிப்பில் பக்தர்கள் தங்குவதற்கான தற்காலிக ஓய்வு மற்றும் தற்காலிக கழிப்பறை, குடிநீர் வசதி ஆகிய அடிப்படை வசதிகள் செய்வது குறித்து தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அன்புமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
தசரா திருவிழாவில் இந்த தற்காலிக ஓய்வு கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
தூய்மைப்படுத்தும் பணி
இந்த ஆய்வின்போது கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், கோவில் சூப்பிரண்டு வெங்கடேஸ்வரி, ஆய்வாளர் பகவதி மற்றும் கோவில் கணக்கர் டிமிட்ரோ மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர். மேலும் கடற்கரை வளாகப் பகுதிகளில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் தூய்மைப்படுத்தும் பணியினையும் நேரில் ஆய்வு செய்தார். தசரா திருவிழாவிற்கு முன்பு அடிப்படை பணிகள் அனைத்தையும் முடித்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரி உத்தரவிட்டார்.
- தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் புதிய தார்சாலை பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருகின்றன.
- தனசேகரன்நகர் கிழக்கு பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் புதிய தார்சாலை பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வருகின்றன. அப்பணிகள் முழுமையாக நல்ல முறையில் நடைபெறு கிறதா? என்று சூழற்சி முறையில் எல்லா பகுதி களிலும் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் 13-வது வார்டுக்குட்பட்ட தனசேகரன்நகர் கிழக்கு பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணியை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.