search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mother"

    • கட்டிட மேஸ்திரியின் மனைவிக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசை இருந்தது.
    • குடும்ப கட்டுப்பாடு செய்யாமலேயே குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டதாக கணவரிடம் பொய் கூறினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், வேமகிரி கணபதி நகரை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி. இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் அங்குள்ள பள்ளிகள் படித்து வருகின்றனர்.

    கட்டிட மேஸ்திரியின் மனைவிக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசை இருந்தது. இதனால் குடும்ப கட்டுப்பாடு செய்யாமலேயே குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டதாக கணவரிடம் பொய் கூறினார்.

    இந்த நிலையில் அவர் கர்ப்பமானார். நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

    பெண் குழந்தை பிறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் குழந்தையை தனது நைட்டியில் சுற்றி எடுத்துச் சென்று 20 அடி பள்ளத்தில் வீசிவிட்டு வீட்டுக்கு வந்தார்.

    குழந்தை அழும் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் குழந்தையை மீட்டு எடுத்து வந்தனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த கட்டிட மேஸ்திரி குழந்தைக்கு சுற்றப்பட்டுள்ள நைட்டி தனது மனைவி உடையது என்று கண்டுபிடித்தார். பின்னர் வீட்டிற்கு வந்து மனைவியிடம் கேட்டபோது ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் கர்ப்பத்தை மறைத்ததாக கூறினார்.

    இதையடுத்து மனைவி மற்றும் மகளை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • நிலத்தை அளவீடு செய்ய ஏற்கனவே முனியம்மாள் மற்றும் அவரது மகள் மாதம்மாள் (40) எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
    • அதிர்ச்சியடைந்த நில அளவீடு செய்யவந்த நில அளவயர் ஜோதி, தொப்பூர் போலீசில் புகார் அளித்தார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தண்டுக்காரம்பட்டியில் சாலம்மாள் (வயது50).

    இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக, 85 சென்ட் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தால் அதன் அருகில் உள்ள சாலம்மாளின் சகோதரியான முனியம்மாள் (60) என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதில், சாலம்மாள் தன்னுடைய நிலத்தை நில அளவயர் மூலம் முழுமையாக அளவீடு செய்ய முடிவு செய்தார். அதன்படி நிலத்தை அளவீடு செய்ய தாசில்தாரிடம் மனு அளித்து, தொப்பூர் போலீசார் பாதுகாப்புடன் பாகலஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் மாதேஷ், நில அளவயர் ஜோதி உள்ளிட்டோர் தண்டு காரம்பட்டி ஏரி அருகே உள்ள நிலத்தை அளவீடு செய்ய சென்றனர்.

    இந்த நிலத்தை அளவீடு செய்ய ஏற்கனவே முனியம்மாள் மற்றும் அவரது மகள் மாதம்மாள் (40) எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில், அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை கண்டதும் கோபமடைந்து அதிகாரிகளிடம் முனியம்மாளும், மாதம்மாளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, நில உரிமையாளர் சாலம்மாள் அவருடன் வந்த உறவினர் மற்றும் தொப்பூர், எஸ்.எஸ்.ஐ., சரவணன் உள்ளிட்டோர் மீது முனியம்மாள் அவரது மகள் மாதம்மாள் கரைத்து வைத்திருந்த மாட்டு சாணத்தை ஊற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இச்சம்பவத்தால், அதிர்ச்சியடைந்த நில அளவீடு செய்யவந்த நில அளவயர் ஜோதி, தொப்பூர் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்பட 2 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து முனியம்மாள், அவரது மகள் மாதம்மாள் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைதான 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறி கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார்.
    • குழந்தையை கொடூரமாக கொன்ற நீத்துவை போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டம் மல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நீத்து (வயது21). அவர் திருச்சூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு திருமணமாகாத நிலையில், நீத்து கர்ப்பமாகியதாக தெரிகிறது.

    இருந்தபோதிலும் காதலர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீத்துவுக்கு சுமத்ரா பகுதியில் உள்ள வீட்டில் வைத்து குழந்தை பிறந்திருக்கிறது. அந்த குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறி கோட்டயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார்.

    ஆனால் அந்த குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்பு அந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அந்த குழந்தையின் மூக்கில் தண்ணீர் புகுந்ததால் மூச்சு திணறி இறந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் குழந்தையின் தாயிடம் விசாரணை நடத்தினர். ஆனால் தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தபடி இருந்திருக்கிறார். இருந்தபோதிலும் போலீசார் தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதால், தனது குழந்தையை கொன்றதை நீத்து ஒப்புக்கொண்டார்.

    அவர் தனது குழந்தையின் முகத்தில் தொடர்ந்து தண்ணீரை ஊற்றி மூச்சு திணறடித்து கொடூரமாக கொலை செய்திருக்கிறார். திருசூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை நீத்து காதலித்து வந்த நிலையில், அவர்களுக்கிடையே நெருக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் நீத்து கர்ப்பமாகி இருக்கிறார். அதன்பிறகும் இருவரும் திருமணம் செய்யாமலேயே இருந்தனர்.

    இந்நிலையில் அவருக்கு குழந்தை பிறந்துவிட்டது. திருமணமாகாத நிலையில் குழந்தை பிறந்திருக்கிறது என்று மற்றவர்களுக்கு தெரிந்தால் அவமானமாகிவிடும் என்பதால் வீட்டில் வைத்தே குழந்தை பெற்றெடுத்து கொன்றிருக்கிறார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற நீத்துவை போலீசார் கைது செய்தனர்.

    • குழந்தை அதன்யாஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மொளசி அருகே உள்ள முனியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி (30) கூலித்தொழிலாளி.

    இவரது மனைவி சசிகலா (25). இவர்களுக்கு இலக்கியா (9), அதன்யாஸ்ரீ (4 1/2), சபரீசன் (1 1/2) என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று காலை பரமத்திவேலூர் தாலுகா ஜமீன் இளம்பள்ளி அருகே உள்ள கள்ளுக்கடை மேடு பகுதிக்கு வேலைக்கு வந்த வேலுசாமி தனது மனைவி வருகைக்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். முனியப்பம்பாளையத்தில் இருந்து தனது குழந்தைகளுடன் கள்ளுக்கடை மேடு பஸ் நிறுத்தத்தில் வந்து சசிகலா இறங்கியுள்ளார்.

    அப்போது குழந்தை அதன்யாஸ்ரீ எதிர் திசையில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த தனது தந்தையை பார்த்ததும் ஜேடர்பாளையம்- சோழசிராமணி சாலையை கடக்க வேகமாக ஓடியதாக கூறப்படுகிறது.

    அப்போது ஜேடர்பாளையத்தில் இருந்து பெருந்துறை நோக்கி சென்ற ஏ.டி.எம்.மிற்கு பணம் நிரப்பும் வாகனம் எதிர்பாராத விதமாக குழந்தை அதன்யாஸ்ரீ மீது மோதியது.

    இதில் குழந்தை அதன்யாஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் உடனடியாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் பலியான குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • கதவை திறக்க கோரி நீண்ட நேரம் சத்தமிட்டும் கதவு திறக்கவில்லை.
    • குழந்தை கழுத்தை இறுக்கி கொலை செய்யபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நந்தியாலா காந்தி நகரை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி ஷன்னூபி. இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    கடந்த ஆண்டு ஷன்னூபிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 19-வது நாளில் இறந்தது.

    இந்நிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி மீண்டும் ஷன்னூபிக்கு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் காலை மகேஷ் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் மகேஷின் தாய் மற்றும் தங்கைகள் இருந்தனர்.

    அப்போது ஷன்னூபியின் அறையில் இருந்து குழந்தை அலறல் சத்தம் கேட்டது. இதனால் பதறிப்போன மகேஷின் தாய் மற்றும் தங்கைகள் ஷன்னூபியின் அறைக்கு சென்று பார்த்தபோது அறை கதவு உள் பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது.

    கதவை திறக்க கோரி நீண்ட நேரம் சத்தமிட்டும் கதவு திறக்கவில்லை. இதனையடுத்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது குழந்தை கழுத்தில் இருந்து ரத்தம் வழிந்தபடி உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தான்.

    குழந்தையை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    மேலும் குழந்தை கழுத்தை இறுக்கி கொலை செய்யபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து மகேஷின் தாய் போலீசில் புகார் செய்தார் போலீசார் ஷன்னூயை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கடந்த ஆண்டு பிறந்த பெண் குழந்தை மற்றும் இந்த குழந்தையும் ஷன்னூபி கழுத்தை நெரித்து கொலை செய்ததும். மேலும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை முடிந்த பிறகு விசாரணை நடத்தி கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

    • கல்விச் செல்வத்தை பெற்று பகுத்தறிவுடன் இன்புற்று வாழ வேண்டும்.
    • ஒரு நாட்டின் நம்பிக்கையாக மாணவர்கள் கருதப்படுகிறார்கள்.

    நாம் பிறக்கையில் எதையும் கொண்டு வருவது இல்லை. இறக்கையில் கொண்டு போவதும் இல்லை. வாழும் வாழ்க்கையின் இடைப்பட்ட காலத்தில் கல்வி செல்வத்தை பெற்று பகுத்தறிவுடன் இன்புற்று வாழ வேண்டும். மாணவர்களை தன்பிள்ளை என எண்ணி எப்போதும் காத்திருக்கும் ஆசிரியர் உறவே முக்கியமான, முதன்மையான உறவு. ஒவ்வொரு ஆசிரியரின் குறிக்கோள், மாணவர்கள் நல்லறிவுடனும் சமுதாயத்தில் வளமுடனும் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான். மாணவர்களின் வெற்றியே ஆசிரியரின் வெற்றி. இவர்களை விடவும் குழந்தைகள் மீது அக்கறை கொள்பவர் வேறு எவரும் இருக்க முடியாது. கடவுள் தன்னால் எல்லா இடங்களிலும் இருந்து கவனிக்க முடியாது என்பதினால் தான் ஆசிரியரை படைத்தார் என்று கூட கூறலாம்.

    மாதா, பிதா, குரு, தெய்வம் என்பர். அதில் `ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி' என்பன மனித வரலாற்றில் வழிவழி வந்த மணிமொழியாக போற்றி பாராட்டினர். குருவாகிய ஆசிரியர் தாயாகவும், தந்தையாகவும் விளங்கி அறிவையும், ஆற்றலையும் மாணவர்களுக்கு அளித்து தெய்வத்தை உணரவைப்பார்கள் ஆசிரிய பெருமக்கள்.

    இன்றைய காலக்கட்டத்தில் நம் நாட்டில் மட்டுமல்ல உலகெங்கிலும் முன் எப்போதையும் விட இப்போது மாணவர்களை பற்றி அதிகம் பேசப்படுகிறது. ஒரு நாட்டின் நம்பிக்கையாக மாணவர்கள் கருதப்படுகிறார்கள். அதனால் ஆசிரியர்களும், மாணவர்களை எதிர்பார்ப்பு என்னும் குறுகிய வட்டத்திற்குள் விலக்கி வைக்காமல் அவர்களின் திறமைகளை தனித்தன்மைகளை காட்ட வழிவகுக்கின்றனர். இதற்கென கட்டுப்பாடுகளை தளர்த்தி, சுதந்திர சுயசிந்தனையால் மாணவர்கள் வளர அவர்களுக்கு பாதையமைத்து கொடுக்கின்றனர்.

    மாணவர்கள் சுதந்திரமாக காற்றாடிபோல் வான் உயரப் பறந்து வெற்றி சாதனைப் படைக்கின்றனர். கட்டுப்பாட்டிற்காக ஆசிரியர்களின் கையில் நூல் இருக்குமே தவிர அதுவே அவர்கள் விண்ணோட்டத்திற்கு தடையாக அமைந்து விடாது.

    மாணவர்கள் தங்கள் வாழ்க்கையிலும், கல்வியிலும், உணவு-உறக்கம் மறந்து உழைத்த உழைப்பையும், சந்தித்த சோதனைகளையும், அடைந்த இழப்புகளையும் பெற்ற வேதனைகளையும் பார்த்தால் அவனால் சாதனையாளனாக வர வாய்ப்பில்லாமல் போகலாம். தடைக்கல்லே உனக்கோர் படிக்கல் என்ற ஊக்கத்தையும், உணர்வுகளையும் ஆசிரியர் ஊட்டுவதினாலேயே மாணவர்கள் சாதனையாளர்களாக மாறுகின்றனர். ஒவ்வொரு சாதனைக்கு பின்னாலும் ஆசிரியர்களின் பங்கு ஒருவிதத்தில் ஒளிந்திருக்கிறது.

    உழைத்து வளர்த்த திறமையை, தகுதியை தக்க தருணத்தில் வெளிக்கொணர்ந்து வாய்ப்புகள் அளித்து வழிகாட்டி மேம்படுத்துபவர் ஆசிரியர். மாணவர்களுக்கு குண நலம், தன்னம்பிக்கை, அடிப்படை கடமைகள், சுயகட்டுப்பாடு, பொது நலம், தலைமைத்தகுதி, நல்லொழுக்கம், நாட்டுப்பற்று போன்றவற்றை கற்பிக்க ஒரு உந்துதலாக ஆசிரியர்கள் செயல்படுகின்றனர். ஒவ்வொரு மாணவனின் பலத்தையும், பலவீனத்தையும் கண்டறிந்து அடையாளப்படுத்துபவர்கள் ஆசிரியர்கள். நாட்டின் கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கம், மரபு, நாகரிகம் போன்ற அனைத்தும் இக்காலக்கட்டத்தில் குழித்தோண்டி புதைக்கக்கூடிய அவலநிலைக்கு ஆளாகி இருக்கிறோம். இன்று, குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது எடுத்து சொல்ல கூட்டுக்குடும்பங்கள் காணாமல் போய்விட்டன. தாய் ஊட்டாத பாலை பசு ஊட்டும் என்பதுப்போல, இல்லம் புகட்டாத இயல்பை ஆசிரியர் புகட்டுவார்.

    இன்றைய பெருவாரியான மாணவர்கள் பலவீனமாக இருப்பதற்கு தைரியம் இல்லாமையே காரணம். நன்கு படித்து நன்மதிப்பெண் பெற்றிருந்தும் வாழ்க்கை சிக்கலுக்கு தீர்வுகாண முடியாமல் திணறுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கை திறமைக்குரிய தைரியத்தையும், தன்னம்பிக்கையும் ஊட்டும் ஆசனாக ஆசிரிய பெருமக்கள் விளங்குகின்றனர்.

    ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல, தொண்டு. மாணவர்களின் உடல் வளர்ச்சியோடு உள்ள வளர்ச்சியையும் ஆராய கூடியவர்கள் மற்ற துறையினர் செய்யும் தவறுகள் அந்தத் துறையோடு நின்றுவிடும். ஆனால் கல்வித்துறையில் ஏற்படும் தவறுகள் எதிர்காலத்தை சீரழித்து விடும். சேவை என கருதப்படும் பணிகள் பல இருந்தாலும் அவை அனைத்திற்கும் முதன்மையானதாகவும், சிறப்பித்து போற்றப்படுவதுமான ஆசிரிய பணியே மிகச்சிறந்த பணி.

    • செஞ்சி அருகே 2 குழந்தைகளின் தாய் மாயமானார்.
    • இருளர் பாது காப்பு சங்கத்தில் பொறுப்பா ளராக இருந்த வந்த பிரியா திடீரென மாயமானார்.

    விழுப்புரம்:

    செஞ்சி தாலுக்கா பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் மனைவி பிரியா (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இருளர் பாது காப்பு சங்கத்தில் பொறுப்பா ளராக இருந்த வந்த பிரியா திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த ராஜேஷ், பிரியாவை பல இடங்களில் தேடினார்.

    எங்கும் கிடைக்க வில்லை. இது குறித்து நல்லாண் பிள்ளை பெற்றால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமி மஞ்சுளாவின் உடலை தேடி வருகின்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து லலிதாவை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பிஜனபள்ளி மண்டலம், மங்கனூருவை சேர்ந்தவர் சரபண்டா. இவரது மனைவி லலிதா.

    தம்பதியின் குழந்தைகள் மகாலட்சுமி (வயது 5). சரிதா (4), மஞ்சுளா (3) மற்றும் மரு கொண்டையா (7 மாத குழந்தை).

    கடந்த 10 நாட்களாக கணவன் மனைவி இடையே தகராறு நடந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சரபண்டா மனைவியை சரமாரியாக தாக்கினார்.

    இதில் ஆத்திரம் அடைந்த லலிதா நேற்று காலை பிஜன பள்ளி போலீசில் கணவர் மீது புகார் செய்தார். இதையடுத்து வீட்டிற்கு வந்த லலிதா வேலைக்கு செல்வதாக கூறி விட்டு தனது குழந்தைகளை அழைத்துச் சென்றார். பின்னர் கல்வ குர்தி என்ற இடத்தில் செல்லும் பாசன கால்வாய் சென்றார்.

    அங்கு தனது குழந்தைகளை ஒருவர் பின் ஒருவராக கால்வாயில் தள்ளினார். அங்கிருந்தவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சலிட்டனர். இதுகுறித்து போலீசார் மட்டும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    லலிதா அங்கிருந்து தப்பிச் சென்றார். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    பாசன கால்வாயில் இருந்து மருகொண்டா மகாலட்சுமி, சரிதா ஆகியோரின் பிணங்களை மீட்டனர். சிறுமி மஞ்சுளாவின் பிணத்தை தேடி வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லலிதாவை தேடி வருகின்றனர்.

    பெற்ற குழந்தைகள் என்றும் பாராமல் கால்வாயில் தள்ளி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • வெற்றி விஸ்வா சென்னையை சேர்ந்த ஒரு கப்பல் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.
    • 3 மாடிகளை கொண்ட கப்பல் முழுவதும் தேடியும் வெற்றி விஸ்வா கிடைக்கவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    பாளை டேனியல் தாமஸ் தெருவை சேர்ந்த மகாராஜா என்பவரது மனைவி மகாலட்சுமி மற்றும் அந்த பகுதி மக்கள் திரளானோர் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலக பகுதிக்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணிக்கு நின்ற போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவாயில் கதவை அடைத்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    தொடர்ந்து மகாலட்சுமி கண்ணீர் மல்க கூறியதாவது:-

    எங்களது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் தேவர்குளம். எனது கணவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். எங்களது மூத்த மகன் வெற்றி விஸ்வா. இவர் கடற்படை துறையில் இளங்கலை அறிவியல் படிப்பு முடித்துவிட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒரு கப்பல் நிறுவ னத்தில் பணிக்கு சேர்ந்தார்.

    கடந்த 7-ந் தேதி இரவு எனது மகன் வீடியோ கால் மூலமாக எங்களிடம் பேசி விட்டு அதிகாலை 4 மணிக்கு பணிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றார். அதன் பின்னர் அவர் போன் எதுவும் செய்யவில்லை.

    இந்நிலையில் தனியார் கப்பல் நிறுவனத்தில் இருந்து அதிகாலை 5 மணிக்கு எங்களுக்கு செல்போனில் அழைப்பு வந்தது. அப்போது அவர்கள் பேசும்போது, உங்களது மகனை காணவில்லை. செல்போன் மற்றும் அவரது உடமைகள் மட்டும் கப்பலிலேயே உள்ளது என்று தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, வெற்றியை 3 மாடிகளை கொண்ட கப்பல் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. அவர் எங்கே சென்றார்? என்பது தெரியவில்லை. அதனால் தகவல் கிடைத்தவுடன் தொடர்பு கொள்வதாக கூறிவிட்டு அதன் பின்னர் அழைப்பை ஏற்கவில்லை.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாயமான எனது மகனை மீட்டு தர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தலைமை செயலகத்துக்கு வந்த அவர்கள் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
    • சில நேரங்களில் ரித்திக் தனியாக சென்று வீடியோ எடுத்து அதனை சமூகவலை தளங்களில் வெளியிட்டு வந்தார்.

    சென்னை:

    செங்கல்பட்டைச் சேர்ந்தவர் ரித்திக். இவர் ஜார்ஜியா நாட்டில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களோடு ஜார்ஜியாவில் தங்கி இருந்து படித்து வரும் ரித்திக் அந்நாட்டில் உள்ள மலை மற்றும் காட்டுப் பகுதிக்கு சென்று வீடியோ எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

    சில நேரங்களில் ரித்திக் தனியாக சென்று வீடியோ எடுத்து அதனை சமூக வலை தளங்களில் வெளியிட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரித்திக் வழக்கம் போல காட்டுக்குள் சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மாணவன் ரித்திக் மலைப்பகுதிக்கு சென்ற இடத்தில் என்ன ஆனார்? அவரது கதி என்ன? என்பது தெரியவில்லை.

    இதுதொடர்பாக ஜார்ஜியாவில் உள்ள ரித்திக்கின் நண்பர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரித்திக்கின் பெற்றோர் மகனின் நிலை என்ன ஆனது? என்பது தெரியாமல் கலங்கிப் போய் உள்ளனர்.

    இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்து முறையிட முடிவு செய்தனர்.

    இதற்காக தலைமை செயலகத்துக்கு வந்த அவர்கள் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தங்களது மகன் மாயமாகி 4 நாட்களுக்கு மேலாகியும் அவனைப் பற்றி எந்த தகவலும் இல்லை. எனவே, தமிழக அரசு அதிகாரிகள் எங்கள் மகனை கண்டுபிடித்து கொடுக்க உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மாணவர் ரித்திக்கின் தாய் கதறி அழுதார். அவரை சமாதானப்படுத்திய அதிகாரிகள் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

    இதை தொடர்ந்து அவர் கண்ணீர் மல்க புகார் அளித்தார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அவரை அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, இந்திய தூதரகம் மூலமாக ஜார்ஜியா நாட்டு அதிகாரிகளிடம் மாணவன் விவகாரத்தில் நடந்தது என்ன? என்பது பற்றி கேட்டுள்ளோம். அங்கிருந்து கிடைக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் என்று தெரிவித்தனர்.

    • ரஞ்சனி நேற்று இரவு 9.30 மணிக்கு அவரது வீட்டில் புடவையால் தூக்குபோட்டு கொண்டார்.
    • மருத்துவர் பரிசோதித்ததில் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லூர் புதுகாலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மணவி ரஞ்சனி (29),இவர்களுக்கு திருமணமாகி 13ஆண்டுகள் ஆகிறது.2 மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், ரஞ்சனி நேற்று இரவு 9.30 மணிக்கு அவரது வீட்டில் புடவையால் தூக்குபோட்டு கொண்டார்.இவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர் பரிசோதித்ததில் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார். இது பற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்குபதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

    • அன்னக்கிளி நேராக தொட்டியம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.
    • மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அழகரை அரியானம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரபோஸ். இவர் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (வயது 35) இவர் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதியருக்கு ஹேமேஸ் (வயது4) என்ற மகன் உள்ளார்.

    இந்த மகன் பிறந்த பின்னர் மஞ்சுளாவுக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் லால்குடி தாளக்குடியில் வசிக்கும் தனது தாய் வீட்டில் கடந்த ஒரு மாதமாக தங்கி இருந்தார்.

    பின்னர் நேற்று தமிழக அரசின் கலைஞர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பம் கொடுப்பதற்காக மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்தார். அவருடன் தாய் அன்னக்கிளியும் வந்துள்ளார்.

    அப்போது சென்னையில் இருந்து ஊருக்கு வந்திருந்த கணவர், மனைவி மஞ்சு ளாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்தார். ஆனால் அதற்கு மஞ்சுளா ஒப்புக் கொள்ள மறுத்தார். தாய் சொல்லியும் கேட்கவில்லை.

    இதனால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இரவு அவர்கள் படுத்து தூங்கிவிட்டனர்.

    இந்நிலையில் அன்னக்கிளிக்கு மகளின் மீது தீராத வெறுப்பு, கோபம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்லாமல் இப்படி மருமகன் மற்றும் தன்னிடம் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறாரே என ஆத்திர மடைந்த அவர் மஞ்சுளா தூங்கிக் கொண்டிருந்த போது அவரது தலையில் இன்று அதிகாலை பாறாங் கல்லை எடுத்து போட்டுள்ளார்.

    இதில் அவர் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    பின்னர் அன்னக்கிளி நேராக தொட்டியம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.

    உடனே தகவல் அறிந்த முசிறி துணை போலி சூப்பிரண்டு யாஸ்மின், தொட்டி யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஆசை தம்பி ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் கொலை செய்யப்பட்ட மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவமனைக்கு செல்ல மறுத்து அடம்பிடித்த மகளை தாய் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×