என் மலர்
நீங்கள் தேடியது "mother"
- செஞ்சி அருகே 2 குழந்தைகளின் தாய் மாயமானார்.
- இருளர் பாது காப்பு சங்கத்தில் பொறுப்பா ளராக இருந்த வந்த பிரியா திடீரென மாயமானார்.
விழுப்புரம்:
செஞ்சி தாலுக்கா பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் மனைவி பிரியா (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இருளர் பாது காப்பு சங்கத்தில் பொறுப்பா ளராக இருந்த வந்த பிரியா திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த ராஜேஷ், பிரியாவை பல இடங்களில் தேடினார்.
எங்கும் கிடைக்க வில்லை. இது குறித்து நல்லாண் பிள்ளை பெற்றால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறுமி மஞ்சுளாவின் உடலை தேடி வருகின்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து லலிதாவை தேடி வருகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், பிஜனபள்ளி மண்டலம், மங்கனூருவை சேர்ந்தவர் சரபண்டா. இவரது மனைவி லலிதா.
தம்பதியின் குழந்தைகள் மகாலட்சுமி (வயது 5). சரிதா (4), மஞ்சுளா (3) மற்றும் மரு கொண்டையா (7 மாத குழந்தை).
கடந்த 10 நாட்களாக கணவன் மனைவி இடையே தகராறு நடந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு மீண்டும் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சரபண்டா மனைவியை சரமாரியாக தாக்கினார்.
இதில் ஆத்திரம் அடைந்த லலிதா நேற்று காலை பிஜன பள்ளி போலீசில் கணவர் மீது புகார் செய்தார். இதையடுத்து வீட்டிற்கு வந்த லலிதா வேலைக்கு செல்வதாக கூறி விட்டு தனது குழந்தைகளை அழைத்துச் சென்றார். பின்னர் கல்வ குர்தி என்ற இடத்தில் செல்லும் பாசன கால்வாய் சென்றார்.
அங்கு தனது குழந்தைகளை ஒருவர் பின் ஒருவராக கால்வாயில் தள்ளினார். அங்கிருந்தவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சலிட்டனர். இதுகுறித்து போலீசார் மட்டும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
லலிதா அங்கிருந்து தப்பிச் சென்றார். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
பாசன கால்வாயில் இருந்து மருகொண்டா மகாலட்சுமி, சரிதா ஆகியோரின் பிணங்களை மீட்டனர். சிறுமி மஞ்சுளாவின் பிணத்தை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லலிதாவை தேடி வருகின்றனர்.
பெற்ற குழந்தைகள் என்றும் பாராமல் கால்வாயில் தள்ளி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- வெற்றி விஸ்வா சென்னையை சேர்ந்த ஒரு கப்பல் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.
- 3 மாடிகளை கொண்ட கப்பல் முழுவதும் தேடியும் வெற்றி விஸ்வா கிடைக்கவில்லை.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
பாளை டேனியல் தாமஸ் தெருவை சேர்ந்த மகாராஜா என்பவரது மனைவி மகாலட்சுமி மற்றும் அந்த பகுதி மக்கள் திரளானோர் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர்.
தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலக பகுதிக்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணிக்கு நின்ற போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவாயில் கதவை அடைத்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து மகாலட்சுமி கண்ணீர் மல்க கூறியதாவது:-
எங்களது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் தேவர்குளம். எனது கணவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். எங்களது மூத்த மகன் வெற்றி விஸ்வா. இவர் கடற்படை துறையில் இளங்கலை அறிவியல் படிப்பு முடித்துவிட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த ஒரு கப்பல் நிறுவ னத்தில் பணிக்கு சேர்ந்தார்.
கடந்த 7-ந் தேதி இரவு எனது மகன் வீடியோ கால் மூலமாக எங்களிடம் பேசி விட்டு அதிகாலை 4 மணிக்கு பணிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றார். அதன் பின்னர் அவர் போன் எதுவும் செய்யவில்லை.
இந்நிலையில் தனியார் கப்பல் நிறுவனத்தில் இருந்து அதிகாலை 5 மணிக்கு எங்களுக்கு செல்போனில் அழைப்பு வந்தது. அப்போது அவர்கள் பேசும்போது, உங்களது மகனை காணவில்லை. செல்போன் மற்றும் அவரது உடமைகள் மட்டும் கப்பலிலேயே உள்ளது என்று தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, வெற்றியை 3 மாடிகளை கொண்ட கப்பல் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. அவர் எங்கே சென்றார்? என்பது தெரியவில்லை. அதனால் தகவல் கிடைத்தவுடன் தொடர்பு கொள்வதாக கூறிவிட்டு அதன் பின்னர் அழைப்பை ஏற்கவில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாயமான எனது மகனை மீட்டு தர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
- தலைமை செயலகத்துக்கு வந்த அவர்கள் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
- சில நேரங்களில் ரித்திக் தனியாக சென்று வீடியோ எடுத்து அதனை சமூகவலை தளங்களில் வெளியிட்டு வந்தார்.
சென்னை:
செங்கல்பட்டைச் சேர்ந்தவர் ரித்திக். இவர் ஜார்ஜியா நாட்டில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களோடு ஜார்ஜியாவில் தங்கி இருந்து படித்து வரும் ரித்திக் அந்நாட்டில் உள்ள மலை மற்றும் காட்டுப் பகுதிக்கு சென்று வீடியோ எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
சில நேரங்களில் ரித்திக் தனியாக சென்று வீடியோ எடுத்து அதனை சமூக வலை தளங்களில் வெளியிட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரித்திக் வழக்கம் போல காட்டுக்குள் சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மாணவன் ரித்திக் மலைப்பகுதிக்கு சென்ற இடத்தில் என்ன ஆனார்? அவரது கதி என்ன? என்பது தெரியவில்லை.
இதுதொடர்பாக ஜார்ஜியாவில் உள்ள ரித்திக்கின் நண்பர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரித்திக்கின் பெற்றோர் மகனின் நிலை என்ன ஆனது? என்பது தெரியாமல் கலங்கிப் போய் உள்ளனர்.
இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்து முறையிட முடிவு செய்தனர்.
இதற்காக தலைமை செயலகத்துக்கு வந்த அவர்கள் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தங்களது மகன் மாயமாகி 4 நாட்களுக்கு மேலாகியும் அவனைப் பற்றி எந்த தகவலும் இல்லை. எனவே, தமிழக அரசு அதிகாரிகள் எங்கள் மகனை கண்டுபிடித்து கொடுக்க உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மாணவர் ரித்திக்கின் தாய் கதறி அழுதார். அவரை சமாதானப்படுத்திய அதிகாரிகள் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இதை தொடர்ந்து அவர் கண்ணீர் மல்க புகார் அளித்தார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அவரை அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, இந்திய தூதரகம் மூலமாக ஜார்ஜியா நாட்டு அதிகாரிகளிடம் மாணவன் விவகாரத்தில் நடந்தது என்ன? என்பது பற்றி கேட்டுள்ளோம். அங்கிருந்து கிடைக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் என்று தெரிவித்தனர்.
- ரஞ்சனி நேற்று இரவு 9.30 மணிக்கு அவரது வீட்டில் புடவையால் தூக்குபோட்டு கொண்டார்.
- மருத்துவர் பரிசோதித்ததில் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லூர் புதுகாலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மணவி ரஞ்சனி (29),இவர்களுக்கு திருமணமாகி 13ஆண்டுகள் ஆகிறது.2 மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், ரஞ்சனி நேற்று இரவு 9.30 மணிக்கு அவரது வீட்டில் புடவையால் தூக்குபோட்டு கொண்டார்.இவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர் பரிசோதித்ததில் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்தார். இது பற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்குபதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
- அன்னக்கிளி நேராக தொட்டியம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.
- மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொட்டியம்:
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அழகரை அரியானம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரபோஸ். இவர் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (வயது 35) இவர் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதியருக்கு ஹேமேஸ் (வயது4) என்ற மகன் உள்ளார்.
இந்த மகன் பிறந்த பின்னர் மஞ்சுளாவுக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் லால்குடி தாளக்குடியில் வசிக்கும் தனது தாய் வீட்டில் கடந்த ஒரு மாதமாக தங்கி இருந்தார்.
பின்னர் நேற்று தமிழக அரசின் கலைஞர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பம் கொடுப்பதற்காக மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்தார். அவருடன் தாய் அன்னக்கிளியும் வந்துள்ளார்.
அப்போது சென்னையில் இருந்து ஊருக்கு வந்திருந்த கணவர், மனைவி மஞ்சு ளாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்தார். ஆனால் அதற்கு மஞ்சுளா ஒப்புக் கொள்ள மறுத்தார். தாய் சொல்லியும் கேட்கவில்லை.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இரவு அவர்கள் படுத்து தூங்கிவிட்டனர்.
இந்நிலையில் அன்னக்கிளிக்கு மகளின் மீது தீராத வெறுப்பு, கோபம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு செல்லாமல் இப்படி மருமகன் மற்றும் தன்னிடம் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறாரே என ஆத்திர மடைந்த அவர் மஞ்சுளா தூங்கிக் கொண்டிருந்த போது அவரது தலையில் இன்று அதிகாலை பாறாங் கல்லை எடுத்து போட்டுள்ளார்.
இதில் அவர் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
பின்னர் அன்னக்கிளி நேராக தொட்டியம் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார்.
உடனே தகவல் அறிந்த முசிறி துணை போலி சூப்பிரண்டு யாஸ்மின், தொட்டி யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஆசை தம்பி ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் கொலை செய்யப்பட்ட மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்கு செல்ல மறுத்து அடம்பிடித்த மகளை தாய் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நலமாக உள்ள குழந்தை உடல்நலம் சரியில்லை எனக்கூறி மருத்துவம் பார்க்க வற்புறுத்தல்
- ஒருவகை நோயால் மனநோய்க்கு உள்ளாகி இவ்வாறு செய்திருக்கக் கூடும்
பல அரிய மனநல குறைபாடுகளில் ஒன்றாக கருதப்படுவது முன்சாஸன் சிண்ட்ரோம் (Munchausen's syndrome) மற்றும் அதன் ஒரு வகையான முன்சாஸன் சிண்ட்ரோம் பை பிராக்ஸி (Munchausen Syndrome by proxy).
இது ஒரு அரிய உளவியல் நடத்தை நிலை.
முதல் வகையில் ஒருவர், இல்லாத நோய் அறிகுறிகளை தனக்குள்ளேயே கற்பனையாக உருவாக்கிக் கொண்டு, தான் நோய்வாய்பட்டதாக தொடர்ந்து கூறிக்கொண்டிருப்பார்.
இரண்டாவது வகை "முன்சாஸன் சிண்ட்ரோம் பை பிராக்ஸி" என்பது ஒரு குழந்தை துஷ்பிரயோக குற்றமாக கருதப்படுகிறது. இதில் ஒரு குழந்தையின் பராமரிப்பாளர் (பெரும்பாலும் தாய்) போலியான நோய் அறிகுறிகளை தன் குழந்தைக்கு இருப்பதாக கூறி அக்குழந்தை உண்மையிலேயே நோய்வாய்பட்டிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி மருத்துவ சிகிச்சைகளுக்கு ஆட்படுத்துவார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வசிப்பவர் 27 வயதான ஜெசிகா கேஸர். இவர் சமூக ஊடக பிரபலமானவர். இவர் தற்போது முன்சாஸன் பை பிராக்ஸி என மனநோய்க்கு உள்ளாகியிருக்கிறார்.
டெக்சாஸ் மாநில சட்ட அமலாக்க மற்றும் நீதிமன்ற ஆவணங்களின்படி, கேஸர் தனது 3 வயது மகளுக்கு இல்லாத அரிய நோய்களை இருப்பதாக கூறி தேவையற்ற மருத்துவ நடைமுறைக்கு உட்படுத்தும்படி கட்டாயப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
டார்ரன்ட் கவுன்டி ஷெரீப் அலுவலகம் தனது முகநூல் பதிவில், கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஜெசிகாவுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.
டார்ரன்ட் கவுன்டி ஷெரீப் அலுவலகம் பதிவிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இந்த வழக்கு இந்த அரிய மனநோய்க்கான ஒரு நல்ல உதாரணம். இது தொடர்பாக நீங்கள் ஜெசிகாவுடன் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டிருந்தால், மைக்கேல் வெபர் எனும் காவல்துறை அதிகாரியை தொடர்பு கொள்ளவும் எனத் தெரிவித்துள்ளது.
ஜெசிகா தனது குழந்தைக்கு பல தேவையற்ற சிகிச்சைகளை அளிக்கும்படி வற்புறுத்தியிருக்கிறார். இந்த துஷ்பிரயோகம் எவ்வளவு காலம் தொடர்ந்தது என்பது இன்னும் உறுதியாகவில்லை.
கேஸர் தனது குழந்தையின் உடல்நலம் குறித்த தனிப்பட்ட செய்திகள் உட்பட முகநூலில் உள்ள தனது அனைத்து தரவுகளையும் நீக்கப்போவதாக தனது நண்பருக்கு செய்திகள் அனுப்பியுள்ளார்.
காவல்துறையினர் கடந்த வாரம் ரஸ்க் கவுண்டியில் ஜெசிகாவை கைது செய்து டாரன்ட் கவுண்டி சிறையில் அடைத்தனர்.
- இரவு வீட்டிற்கு வந்த கணவர் கீதா ஸ்ரீ குறித்து கேட்டபோது குழந்தை திடீரென காணாமல் போனதாக தெரிவித்தார்.
- குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு சடலம் மேலே வந்தது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துவாடாவை சேர்ந்தவர் சினேகா (வயது 18). இவரது 2 வயது குழந்தை கீதா ஸ்ரீ.
கடந்த 17-ந் தேதி மதியம் சினேகா குழந்தைக்கு உணவு ஊட்டினார். கீதா ஸ்ரீ உணவு சாப்பிட மறுத்து அடம் பிடித்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த சினேகா வீட்டிலிருந்த கரண்டியை எடுத்து வந்து குழந்தையின் தலையில் அடித்தார்.
தலையில் பலத்த காயம் அடைந்த கீதா ஸ்ரீ ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து பரிதாபமாக இறந்தது. ஆத்திரத்தில் அடித்ததில் மகள் இறந்ததை நினைத்து சினேகா கதறி துடித்தார்.
மகளை கொலை செய்தது தெரிந்தால் கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவார் என எண்ணிய சினேகா மகளை வீட்டின் முன்புறம் குழி தோண்டி புதைத்துவிட்டார்.
இரவு வீட்டிற்கு வந்த கணவர் கீதா ஸ்ரீ குறித்து கேட்டபோது குழந்தை திடீரென காணாமல் போனதாக தெரிவித்தார்.
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து மகளை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு பிணம் மேலே வந்தது.
அங்கிருந்த நாய்கள் குழந்தை பிணத்தை இழுத்துச் சென்றன. இதனைக் கண்ட பொது மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். குழந்தை உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிணமாக இருந்தது சினேகாவின் குழந்தை கீதா ஸ்ரீ என தெரியவந்தது.
சந்தேகத்தின் பேரில் போலீசார் சினேகாவை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.
போலீசாரின் விசாரணையில் கீதா ஸ்ரீ சாப்பிட மறுத்ததால் ஆத்திரத்தில் கரண்டியில் அடித்ததாகவும் எதிர்பாராத விதமாக குழந்தை இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து சினேகாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி திடீர் தற்கொலை செய்தார்.
- கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திரு–மங்கலம் அருகேயுள்ள கூடக்கோவில் போலீஸ் சரகத்திற்கு உட்பட் சின்ன உலகானி கிராமத்தை சேர்ந் த–வர் வேலுச்சாமி. இவரது மனைவி பாண்டி–யம்மாள். இந்த தம்பதிக்கு 3 மகள்க–ளும், ஒரு மகனும் உள்ளனர்.
இதில் மூத்த மகளான அன்புச்செல்வி (20) மது–ரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இதற்கிடையே விடுமுறை தினமான நேற்று அவரது தாய் துணிகளை துவைத்து தருமாறு மகள் அன்புச் செல்வியிடம் கூறியுள்ளார்.
ஆனால் துணிகளை அவர் துவைக்காமல் இருந் துள்ளார். இதனால் ஆத்தி–ரம் அடைந்த தாய் பாண்டி–யம்மாள் மகளை கண்டித் துள்ளார். இதில் மனம் உடைந்த அன்புச்செல்வி மல்லிகை செடிக்கு தெளிக் கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கினார்.
இதைப்பார்த்த அவரது பெற்றோர் மற்றும் அக்கம் பக் கத்தினர் அன்புச்செல் வியை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தீவிர சிகிச்சை அளித்தும் பலனிக்காமல் அன்புச் செல்வி பரிதாபமாக இறந் தார். இதுகுறித்து அவரது தந்தை வேலுச்சாமி கொடுத்த புகாரின்பேரில் கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா–ரணை நடத்தி வருகிறார்கள். தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள் ளது.
- ஏற்கனவே திருமணமாகி கார்த்திக் என்ற கணவரும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.
- பச்சிளம் குழந்தையை கல்நெஞ்சம் படைத்த தாயே ஏரியில் வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேளச்சேரி:
வேளச்சேரி, சசி நகர் அருகே உள்ள ஏரிப் பகுதியில் நேற்று மாலை பச்சிளம் பெண் குழந்தை உடல் மிதந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வேளச்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீ சார் நடத்திய விசாரணையில் சசிநகர், ஏரிக்கரை பகுதியை சேர்ந்த சங்கீதா (வயது26) என்பவர் கள்ளக்காதலன் மூலம் குழந்தை பிறந்ததால் அதனை ஏரியில் வீசி கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சங்கீதாவை போலீசார் கைது செய்தனர். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி கார்த்திக் என்ற கணவரும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. கார்த்திக் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். மனைவியின் செயலை அறிந்து அவர் அதிர்ச்சியில் உள்ளார்.
சங்கீதாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இந்த தொடர்பை சங்கீதா தனது கணவருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார். இதனால் அவர் மீது கணவருக்கும் பெரிய அளவில் சந்தேகம் ஏற்படவில்லை.
இதற்கிடையே சங்கீதா, கள்ளக்காதலன் மூலம் கர்ப்பம் அடைந்தார். அந்த குழந்தையை கலைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அவர் வயிற்றில் குழந்தை இருப்பதை அக்கம் பக்கத்தினருக்கு தெரியாமல் மறைத்தார்.
வயிறு பெரிதானதும் கணவர் மற்றும் உறவினர்கள் கேட்டபோது சாப்பிட்டு தூங்குவதால் வயிறு பெரிதாகி விட்டது என்று கூறி சமாளித்து உள்ளார்.
இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் சங்கீதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்று பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
பின்னர் கணவர் வருவதற்குள் அந்த பச்சிளம் குழந்தையை அருகில் உள்ள ஏரியில் வீசி விட்டு சங்கீதா வீட்டுக்கு வந்து உள்ளார். இதில் ஏரி தண்ணீரில் மூழ்கி குழந்தை இறந்து போனது.
2 நாட்களுக்கு பிறகு குழந்தையின் உடல் தண்ணீரில் மிதந்து கரை ஒதுங்கியதால் போலீசாரின் விசாரணையில் சங்கீதா சிக்கிக்கொண்டார்.
தவறான உறவின் மூலம் பிறந்ததால் குழந்தையை ஏரியில் வீசி கொலை செய்ததாக சங்கீதா எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்து உள்ளார்.
குழந்தை பெற்றதும் சங்கீதா ஏரிப்பகுதிக்கு சென்று குழந்தையை தண்ணீரில் வீசி இருக்க முடியாது என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
எனவே குழந்தை கொலையில் சங்கீதாவுக்கு கள்ளக்காதலன் உதவினாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்காதலில் பிறந்ததால் பச்சிளம் குழந்தையை கல்நெஞ்சம் படைத்த தாயே ஏரியில் வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.