என் மலர்
நீங்கள் தேடியது "Monkeys"
- அபிராமம் தெருக்களில் சுற்றித்திரியும் குரங்குகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- வனத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, சாயல்குடி. அபிராமம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் போதிய உணவு, தண்ணீர், கிடைக்காமல் குரங்குகள் வெளியேறி அபிராமம் டவுன் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சுற்றிதிரிகின்றன.
அபிராமம், வல்லகுளம், விரதக்குளம், பள்ளபச்சேரி உள்ளிட்ட கிராம பகுதிகளில் தென்னைமரங்களில் தாவி குதித்து வருவதுடன் தென்னை மரங்களையும், தென்னங்காய்களையும் நாசம் செய்து வருகின்றன. மேலும் அபிராமம் தெருக்களில் குரங்குகள் சுற்றிதிரிவதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் அச்சத்துடன் செல்லும் சூழ்நிலை நிலவுகிறது.
அபிராமம் தெருக்க ளிலும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிக்கரைகளிலும் நடமாடும் குரங்குகளுக்கு அவர்கள் உணவளிப்பார்கள்.
- குற்றாலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடமாடும் குரங்குகளுக்கு பொதுமக்கள் உணவளிப்பதை நிறுத்த வேண்டும்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் காலங்களில் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வருவார்கள். அப்போது மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிக்கரைகளிலும் நடமாடும் குரங்குகளுக்கு அவர்கள் உணவளிப்பார்கள்.
இதனால் சமீப காலமாக குரங்குகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து அதிக அளவில் புறப்பட்டு அருவிக்கரைகளில் நடமாட தொடங்கிவிட்டன. இதனால் அவை உணவுக்காக கடைகளில் புகுவதும், சுற்றுலா பயணிகளை கடித்து காயப்படுத்துவதும் என பல்வேறு விரும்ப தகாத சம்பவங்கள் நடைபெறுவதாக வனத்துறையினருக்கு புகார்கள் சென்றது.
இதையடுத்து இன்று மெயினருவி கரையில் வனத்துறை சார்பில் ஒரு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், குற்றாலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடமாடும் குரங்குகளுக்கு பொதுமக்கள் உணவளிப்பதை நிறுத்த வேண்டும். அவைகளுக்கு மனிதர்கள் உணவளிப்பது தவறு.
இது அவைகளை இடையூறு செய்வதற்கு சமம். எனவே குரங்குகளுக்கு இனி யாரேனும் உணவளித்தால் வன உயிரின சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வனச்சரக அலுவலர் பெயரில் வைக்கப்பட்டுள்ள அந்த பலகையில் எழுதப்பட்டுள்ளது.
- நொச்சிபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக 3 குரங்குகள் சுற்றித் திரிகின்றன.
- குரங்குகளைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி நொச்சிபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக 3 குரங்குகள் சுற்றித் திரிகின்றன. இவைகள் ஆளில்லாத வீடுகளுக்குள் புகுந்து உணவு தேடி விட்டு, எதுவும் கிடைக்காத நிலையில் வீடுகளில் உள்ள பாத்திரங்கள், துணிகள் உள்ளிட்டவற்றை தூக்கிச் செல்கின்றன.
திடீரென வீடுகளுக்குள் வருவதால் சிறுவர்கள், பெண்கள் அச்சமடைகின்றனர். இதனால் குரங்குகளைப் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வாழைகளின் குருத்துக்களை குரங்குகள் முறித்து போட்டுள்ளன.
- விவசாயிகளுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
களக்காடு:
திருக்குறுங்குடியில் இருந்து வனத்துறை சோதனை சாவடிக்கு செல்லும் சாலையில் செட்டியாபத்து பகுதியில் குரங்குகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்த குரங்குகள் 100-க்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்துள்ளன. வாழைகளின் குருத்துக்களை குரங்குகள் முறித்து போட்டுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நாசமான வாழைகள் 3 மாதமே ஆன மட்டி ரக வாழைகள் ஆகும். எனவே நாசமான வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- மலையடிபுதூர் பகுதியில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
- இதுவரை 50-க்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகளை குரங்குகள் நாசம் செய்துள்ளன.
களக்காடு:
திருக்குறுங்குடியை அடுத்துள்ள மலையடிபுதூர் பகுதியில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
அங்குள்ள மரங்கள் மற்றும் பொத்தையில் தஞ்சமடைந்துள்ள குரங்குகள் கூட்டம், கூட்டமாக வீடுகளுக்குள் சென்று பொருட்களை நாசம் செய்து வருகின்றன. வீட்டு தோட்டங்களில் வளர்க்கப்படும் கொய்யா, மாதுளை போன்ற மரங்களை ஒடித்து விடுகின்றன. தென்னை மரங்களில் தேங்காய்களை பறித்து வீசுகின்றன.
மலையடிபுதூரில் உள்ள விளைநிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள வாழைகளையும் குரங்குகள் நாசம் செய்து வருகின்றன. நடப்பட்டு 1 மாதமே ஆன வாழைக்கன்றுகளின் குருத்துக்களை குரங்குகள் தின்று நாசம் செய்வதால் விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதுவரை 50-க்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகளை குரங்குகள் நாசம் செய்துள்ளன.
இரவு மற்றும் பகல் நேரங்களிலும் குரங்குகளின் அட்டகாசம் நீடிப்பதால் விவசாயிகள் அவைகளை விரட்ட முடியாமல் தவிக்கின்றனர்.
எனவே அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குரங்குகள் நாசம் செய்த வாழைக்கன்றுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
‘அல்ஷமீர்’ எனப்படும் மறதி நோய் உள்ளிட்ட பல நோய்கள் மரபணு வழியாக சந்ததிகளுக்கு பரவுகின்றன. எனவே இந்த நோயை தடுக்க விஞ்ஞானிகள் புதுவித முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தாயின் வயிற்றில் வளர்ந்த இரட்டைக்குழந்தைகளின் நோயை மரபணுவிலேயே நீக்கி சீன விஞ்ஞானி சாதனை படைத்தார். அதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை. அனுமதி பெறாமல் இந்த பரிசோதனை மேற்கொண்டதாக விஞ்ஞான உலகம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிலையில் மரபணு கோளாறு நீக்கப்பட்ட 5 குரங்குகளை ‘குளோனிங்’ முறையில் சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இவை மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் தூக்கமின்மை பிரச்சனை, மன அழுத்தம் மற்றும் ‘அல்ஷமீர்’ எனப்படும் மறதி நோய் உள்ளிட்ட நோய்களை தடுக்க ஆய்வு மேற்கொள்ளப்படும்.
முதன் முறையாக குளோனிங் முறையில் மரபணு கோளாறு நீக்கப்பட்ட குரங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது குறித்த 2 ஆய்வு கட்டுரைகள் அறிவியல் இதழில் வெளியாகி உள்ளன.
‘குளோனிங்’ குரங்குகள் ஷாங்காயில் உள்ள சீன அறிவியல் அகாடமியில் நரம்பியல் அறிவியல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசி, மதுரா, லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. அங்குள்ள வீடு, கடைகளுக்குள் கூட்டமாக நுழையும் குரங்குகள் பொருட்களை நாசப்படுத்துவதுடன், திண்பண்டங்களையும் சில வீடுகளில் தூங்கி கொண்டிருக்கும் குழந்தைகளையும் தூக்கிச் சென்று விடுவதுண்டு.
இந்நிலையில், இங்குள்ள பக்பட் மாவட்டத்தை சேர்ந்த 70 வயது முதியவரை செங்கல் மற்றும் அரைக்கல்லால் தாக்கி கொன்ற குரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால், இந்த சம்பவத்தை போலீசார் வேறுவிதமாக விவரிக்கின்றனர். உயரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கல் குவியல் அருகில் தரம்பால் படுத்து தூங்கியுள்ளார். அதன்மீது குரங்குகள் குதித்ததால் செங்கல் சரிந்து அவர்மீது விழுந்ததில் படுகாயமடைந்த தரம்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. #stonedtodeath #stonedtodeathbymonkeys #monkeymenance