என் மலர்
கோயம்புத்தூர்
- வெளிநாடுகளில் மதிப்பு கூட்டுப் பொருட்களாக தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
- தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கி கிடப்பதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி பகுதியில் தென்னை நார் தொழில் பிரதானமாக உள்ளது.
தென்னை மட்டையில் இருந்து நார் துகள்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் 60 ஆயிரம் தென்னை நார் தொழிற்சாலைகளும், தமிழகத்தில் 12 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன.
பொள்ளாச்சியில் உள்ள ஆலைகளில் உற்பத்தியாகும் தென்னை நார் துகள் மற்றும் நார்கள் சென்னை, தூத்துக்குடி, கொச்சி போன்ற துறைமுகங்களுக்கு கன்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கப்பல் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் மதிப்பு கூட்டுப் பொருட்களாக தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது ஈரான்-இஸ்ரேல், அமெரிக்க இடையே போர் நடைபெற்று வருகிறது. இதனால் ஈரான் தனது கடல் எல்லையை மூடி விட்டதால் வர்த்தக கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி மற்றும் கேரளத்தின் கொச்சி துறைமுகங்களில் தென்னை நார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கி கிடப்பதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய தென்னை நார் கூட்டமைப்பினர் கூறியதாவது:-
இந்தியாவில் ஆண்டுக்கு 11 லட்சம் டன் தென்னை நாரும், 20 லட்சம் டன் தென்னை நார் துகளும் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை 125 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏற்கனவே அமெரிக்க விதித்த வரி உயர்வு காரணமாக இந்த தொழில் பாதிக்கப்பட்டு இருந்தது. பின்னர் வரி குறைப்பின் காரணமாக சிறிய முன்னேற்றம் காணப்பட்டது.
தற்போதைய போரால் ஈரான் தனது கடல் எல்லையை மூடியதால் வெளிநாடுகளுக்கு தென்னை நார் பொருட்களின் ஏற்றுமதி குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் ரூ.100 கோடிக்கு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்கள் போர் நீடித்தால் ரூ.1000 கோடி வரை தென்னை நார் மற்றும் நார் துகள் ஏற்றுமதி பாதிக்க வாய்ப்புள்ளது.
மத்திய அரசு உள்நாட்டு வணிகத்தை அதிகப்படுத்தும் சாத்திய கூறுகளை கயிறு வாரியம் மூலம் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கயிறு வாரியம், உற்பததியாளர்கள் கொண்ட குழுவை அமைத்து சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா, நேபாளம், பூடான், ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு அழைத்து சென்று தொழில் முன்னேற்றத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ராம்குட்டி மற்றும் அவரது சகோதரிகள் அவ்வப்போது இங்கு வந்து தாய் கஸ்தூரியை பார்த்து செல்வார்கள்.
- வீட்டிற்குள் மூதாட்டி துணியால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தார்.
கோவை:
கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள குடியிருப்பை சேர்ந்தவர் கஸ்தூரி(வயது82). இவரது கணவர் குட்டி இறந்து விட்டார்.
கஸ்தூரிக்கு ராம்குட்டி என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகன் ராம்குட்டி டாக்டராக உள்ளார். மேலும் அவர் கோவை பிச்சனூரில் மருத்துவமனையும் நடத்தி வருகிறார். கஸ்தூரியின் மகன், மகள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
இவர்கள் அனைவரும் அருகருகே வசித்து வந்தனர். இந்த வீட்டில் கஸ்தூரி மட்டும் தனியாக வசித்து வந்தார். அவருக்கு உதவியாக நேபாளத்தை சேர்ந்த பெண் ஒருவர் நியமிக்கப்பட்டு இருந்தார்.
ராம்குட்டி மற்றும் அவரது சகோதரிகள் அவ்வப்போது இங்கு வந்து தாய் கஸ்தூரியை பார்த்து செல்வார்கள். மேலும் தினமும் காலையில் தங்களது தாய்க்கு போன் செய்து விசாரிப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தனர்.
இன்று காலை டி.வி.எஸ்.நகரில் வசித்து வரும் கஸ்தூரியின் மகள், தனது தாயாருக்கு போன் செய்தார். ஆனால் போன் நீண்ட நேரமாகியும் எடுக்கப்படவில்லை. இதனால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து தனது தாயார் வீட்டின் அருகே வசிக்க கூடிய ஒரு பெண்ணுக்கு போன் செய்து, தகவலை தெரிவித்து, வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறினார்.
அந்த பெண்ணும், கஸ்தூரியின் வீட்டிற்கு சென்றார். வீட்டின் கதவு திறந்து கிடந்தது. மேலும் வீட்டிற்குள் கஸ்தூரி துணியால் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தார். அருகே சென்று பார்த்தபோது கஸ்தூரி உயிரிழந்த நிலையில் இருந்தார்.
இதனால் அந்த பெண் அதிர்ச்சியானார். உடனடியாக சம்பவம் குறித்து அந்த பெண், கஸ்தூரியின் மகளுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அவர் தனது தாயின் வீட்டிற்கு வந்தார். மேலும் சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி கமிஷனர் வசந்தராஜ் மற்றும் ராமநாதபுரம் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர்.
அப்போது வீட்டிற்குள் மூதாட்டி துணியால் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தார். இதையடுத்து அவர் எதற்காக கொல்லப்பட்டார்? நகை ஏதாவது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கஸ்தூரி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி, காதில் அணிந்திருந்த கம்மல் உள்ளிட்டவை அப்படியே இருந்தது. 2 பவுன் செயின் மட்டும் மாயமாகி இருந்தது. இதனால் நகைக்காக தான் இந்த கொலை நடந்திருப்பது உறுதியானது.
இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மோப்பநாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிய மோப்பநாய் பின்னர் நின்று விட்டது.
இதையடுத்து போலீசார் உயிரிழந்த கஸ்தூரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு அதில் யாராவது சந்தேகத்திற்கிடாக வந்து சென்றுள்ளனரா? என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் கொலை நடந்த வீடு உள்ள பகுதியில் ஏராளமான வீடுகளும் உள்ளன. இந்த குடியிருப்பின் நுழைவு வாயிலில் காவலாளிகளும் பணியில் உள்ளனர். எனவே வெளியில் இருந்து வந்து ஆட்கள் கொலையை செய்து நகையை கொள்ளை அடிக்க வாய்ப்பு இல்லை என கூறப்பட்டது. மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்த நபர் யாராவது தான் இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த கோணத்தில் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையே இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், கஸ்தூரியை பார்த்து கொள்வதற்காக நியமிக்கப்பட்ட நேபாள பெண் இன்று காலை முதல் வேலைக்கு வரவில்லை. இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரை பிடித்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அவரை பிடிக்கவும் போலீசார் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவையில் தனியாக இருந்த டாக்டரின் தாயை கொலை செய்து, நகையை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கோவை-ஷார்ஜா இடையே வாரத்தில் 5 நாட்களும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- ஈரான்-இஸ்ரேல் போர் பதட்டம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளி மூடப்பட்டுள்ளது.
கோவை:
கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதராபாத், புனே, கோவா ஆகிய உள்நாட்டு பகுதிகளுக்கும், சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக கோவையில் இருந்து அபுதாபிக்கு வாரத்தில் 4 நாட்களும், கோவை-ஷார்ஜா இடையே வாரத்தில் 5 நாட்களும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தற்போது ஈரான்-இஸ்ரேல் போர் பதட்டம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளி மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவையில் இருந்து அபுதாபி மற்றும் ஷார்ஜா இடையேயான விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த 2 விமானங்கள் ரத்து வருகிற 9-ந் தேதி வரை தொடரும் எனவும், இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு ஏர் அரேபியா விமான பயணிகள், 9087778081 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கோவை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
- போர் பதற்றம் காரணமாக பெரும்பாலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு செயற்கை நூலிழையின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை:
தொழில் நகரான கோவையில் இருந்து ஜவுளி, வெட்கிரைண்டர், மோட்டார் பம்ப், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வளைகுடா நாடுகளான குவைத், ஷார்ஜா, சவுதி அரேபியா உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
தற்போது ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தாக்குதல், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் நிலைகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
போர் பதற்றம் காரணமாக பெரும்பாலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் செங்கடல் பகுதியில் நிலவும் பதற்றத்தால் சரக்கு கப்பல்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் கோவையில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, வெட்கிரைண்டர் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. இந்த வழித்தடமானது எண்ணெய் போக்குவரத்து மட்டுமின்றி, வளைகுடா நாடுகளுக்கும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஜவுளி உள்ளிட்ட பொருட்களை எடுத்தும் செல்லும் முக்கிய வழித்தடமாகவும் இருந்து வந்தது.
தற்போது இந்த வழித்தடம் மூடப்பட்டுள்ளதாலும், இந்த வழியாக சரக்கு போக்குவரத்து நடத்தப்படாது என முக்கிய சரக்கு போக்குவரத்து நிறுவனங்கள் அறிவித்துள்ளதாலும், நன்னம்பிக்கை முனை வழியாக ஆப்பிரிக்காவை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சரக்கு போக்குவரத்து 20 முதல் 25 நாட்கள் வரை தாமதமாகிறது என தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால், நன்னம்பிக்கை முனை வழியாக ஆப்பிரிக்காவை சுற்றி செல்லும்போது தாமதம் ஏற்படுகிறது. இந்த தாமதத்தால் குறித்த நேரத்தில் வர்த்தகம் நடைபெறுவது தடைபடுகிறது. அத்துடன் போக்குவரத்து செலவு, ஆர்டர்கள் ரத்து, கட்டாயத் தள்ளுபடி விலைக்கு விற்க வேண்டிய நிலை போன்ற அபாயங்களும் ஏற்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு செயற்கை நூலிழையின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஆண்டு 2 பில்லியன் டாலர், வளைகுடா நாடுகளுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆடைகள் ஏற்றுமதியாகின்றன. இந்த போர் பதற்றத்தால் ஏற்றுமதியில் சரிவு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதேபோன்று வெட்கிரண்டர் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான்-அமெரிக்க போர் பதற்றத்தால் வெட்கிரைண்டர்கள் கொள்முதலை வியாபாரிகள் நிறுத்தி விட்டனர்.
இதுதொடர்பாக வெட்கிரைண்டர்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-
கோவையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்கு ஆண்டுதோறும் 10 ஆயிரம் கிரைண்டர்கள் ஏற்றுமதியாகின்றன.
மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர் பதற்றத்தால் கடந்த சில நாட்களில் வெளிநாட்டு வர்த்தகர்கள் தங்களின் ஆர்டர்களை ரத்து செய்து விட்டனர். இதனால் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அனுப்பப்படாமல் தேங்கியுள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளில் விற்பனைக்காக அனுப்பப்பட்ட ரூ.22 லட்சம் மதிப்பிலான 450 வெட் கிரைண்டர்கள், ஐக்கிய அரசு அமீரகத்தின் ஜபல் அலி துறைமுகத்தில் முடங்கியுள்ளது.
வாடிக்கையாளர்களிடம் இருந்து பொருளுக்கான பணம் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுகிறது. ஏற்கனவே மூலப்பொருட்கள் விலை உயர்வால் வெட்கிரைண்டர் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.
எனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போர் பதற்றத்தால் உயர்ந்துள்ள செலவினங்களை ஈடுகட்டும் வகையில் ஏற்றுமதிக்கான சலுகைகளை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- வீடியோ காட்சி அந்த பகுதியில் உள்ள அனைவரது செல்போன்களிலும் பரவியது.
- சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்று கண்காணித்தனர்.
கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் பாலம் அருகே ரயில்வே குடியிருப்புகள் உள்ளன. காட்டுப் பகுதியான இங்கு நேற்று முந்தினம் இரவு அங்கு உள்ள பாலம் அருகில் சிறுத்தை ஒன்று நடமாடுவதாக தகவல் பரவியது.
ரோட்டில் அமர்ந்து இருந்த சிறுத்தை திடீரென்று குடியிருப்பு பகுதியில் காம்பவுண்டு சுவரை தாவிகுதித்து சென்றதாக தகவல் பரவியது.
சிறுத்தை தாவி செல்வது போல ஒரு வீடியோ காட்சியும் அந்த பகுதியில் உள்ள அனைவரது செல்போன்களிலும் பரவியது.
இதனால் அங்கு உள்ள மக்கள் பீதி அடைந்தனர். இரவில் அனைவரும் சாலையில் குவிந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் அவசர போலீஸ் உதவி நம்பரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடனே விரைந்து சென்றனர். சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்று கண்காணித்தனர். ஆனால் அப்படி எதுவும் சிறுத்தை நடமாடியதற்கான அறிகுறிகள் இல்லை என தெரிய வந்தது.
அதன் பிறகு இரவில் எடுக்கப்பட்ட அந்த செல்போன் வீடியோ காட்சியை போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பார்த்தனர். அப்போது அது சிறுத்தை புலி அல்ல பெரிய காட்டுப் பூனை என்று தெரியவந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
அந்த காட்டு பூனையை சிறுத்தை என நினைத்து படம்பிடித்து வாட்ஸ் அப்பில் பரப்பிய வாலிபர் யார் என போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இம்ரான் கான் என்ற வாலிபர் காட்டுப் பூனையை படம் பிடித்து சிறுத்தை என்று பரப்பியது தெரியவந்தது.
டிரைவர் ஆக வேலை பார்த்து வரும் இம்ரான் கான் இரவில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி சென்றபோது வழியில் காட்டுப் பூனை நின்றதை பார்த்து சிறுத்தை என நினைத்து செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். பிறகு அதை அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.
அது அந்த பகுதி முழுவதும் பரவி உள்ளது. இதைத்தொடர்ந்து இம்ரான் கானை விசாரித்த போலீசார் இனி இதுபோன்று உறுதியில்லாத தகவல்களை அனுப்பி வீண் வதந்தியை பரப்பக் கூடாது என்று எச்சரிக்கை செய்தனர். சிறுத்தை அல்ல புலி என்று உறுதியானதும் அந்த பொதுமக்கள் வீட்டிற்கு சென்று நிம்மதியாக தூங்கினர். இந்த சம்பவத்தால் போத்தனூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழையையொட்டி பல்வேறு கிராமங்களில் தக்காளி சாகுபடி அதிகளவில் இருந்தது.
- கடந்த சில நாட்களாக மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.12க்கு ஏலம் போனது.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி சுற்று வட்டார கிராம பகுதிகளில் காய்கறி சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் வடக்கிபாளையம், புரவிபாளையம், டி.நல்லிக்கவுண்டன் பாளையம், ஜமீன் காளியா புரம், பெரும்பதி, கோவிந்தனூர், மாப்பிள்ளை கவுண்டன்புதூர், சூலக்கல், நெகமம், கோமங்கலம், தேவனூர்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழையையொட்டி பல்வேறு கிராமங்களில் தக்காளி சாகுபடி அதிகளவில் இருந்தது. அதன் விளைச்சல் கடந்த மாதம் இறுதியில் இருந்து அதிகமாக இருந்ததால் அறுவடைக்கு தயாரானது. இதன் காரணமாக கடந்த 3 வாரத்துக்கும் மேலாக சந்தைகளுக்கு தக்காளி வரத்து அதிகமாகி குறைந்த விலைக்கு விற்பனையானது.
அதிலும் கடந்த ஒரு வாரமாக மார்க்கெட்டில் தக்காளி விலை இறக்கத்துடன் இருப்பதுடன், அதற்கு உரிய விலை கிடைக்காமல் போகிறது. கடந்த சில நாட்களாக மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.12க்கு ஏலம் போனது.
இதனால் விவசாயிகள் பலர் கிராமங்களில் சாகுபடி செய்துள்ள தக்காளிகளை பறிக்காமல் அப்படியே செடியிலேயே விட்டு விட்டனர்.
முத்தூர், ஆர்.பொன்னாபுரம், தாளக்கரை, வடக்கிபாளையம், சூலக்கல் உள்ளிட்ட இடங்களில் செடிகளில் தக்காளி பழுத்த நிலையில் கொத்துக் கொத்தாக தொங்குகின்றன.
விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் தக்காளிக்கு உரிய விலை இல்லாமல் போனதால் பல கிராமங்களில் தக்காளியை செடியில் இருந்து பறிக்காமல் அப்படியே விட்டு விடுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.
- கோவை விமான நிலையத்தில் ஜனவரி மாதத்தில் மொத்தம் 1,871 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
- கடந்தாண்டு ஜனவரி மாதத்தை காட்டிலும் 8.3 சதவீதம் குறைவாகும்.
கோவை:
கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதராபாத், புனே, கோவா ஆகிய உள்நாட்டு பகுதிகளுக்கும், சிங்கப்பூர், ஷார்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே கோவை விமான நிலையத்தில் விமானங்கள் இயக்கம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற விமான போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து குறித்த விவரங்களை விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி கோவை விமான நிலையத்தில் ஜனவரி மாதத்தில் மொத்தம் 1,871 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. இது கடந்தாண்டு ஜனவரி மாதத்தை காட்டிலும் 8.3 சதவீதம் குறைவாகும்.
இந்த மாதத்தில் கோவை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு நகரங்களுக்கு 26 ஆயிரத்து 733 பேர் பயணம் செய்துள்ளனர். இது கடந்தாண்டை விட 9.3 சதவீதம் குறைவாகும். அதேசமயம் உள்நாட்டு நகரங்களுக்கு 2 லட்சத்து 82 ஆயிரத்து 731 பேர் பயணம் செய்துள்ளனர். இது கடந்தாண்டை விட 7.4 சதவீதம் அதிகமாகும்.
ஜனவரி மாதத்தில் மொத்தம் 3 லட்சத்து 9 ஆயிரத்து 464 பேர் பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 5.7 சதவீதம் அதிகமாகும். விமான இயக்கங்களின் எண்ணிக்கை குறைந்து இருந்தாலும், விமான பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
இதேபோன்று கோவை விமான நிலையத்தில் வெளிநாட்டு நகரங்களுக்கு 130.5 மெட்ரிக் டன் சரக்குகளும், உள்நாட்டு நகரங்களுக்கு 830 மெட்ரிக் டன் சரக்குகளும் என மொத்தம் 960.5 மெட்ரிக் டன் சரக்குகளும் கையாளப்பட்டுள்ளது.
- சிறுமி வெண்பா உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவை கே.எம்.சி.எச் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
- சிறுமியின் பெற்றோரான கவுன்சிலர் சந்தோஷ், அவரது மனைவி சுகன்யா ஆகியோரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
கோவை:
கோவை தெலுங்குபாளையம் ராமசாமி கவுண்டர் லே-அவுட்டை சேர்ந்தவர் சந்தோஷ். மாநகராட்சி 73-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராகவும், நகரமைப்பு குழு தலைவராகவும் உள்ளார். இவரது மனைவி சுகன்யா. இவர்களது மகள் வெண்பா(வயது8).
இந்த நிலையில் சிறுமி வெண்பா உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவை கே.எம்.சி.எச் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், சிறுமி மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது. இதனை டாக்டர்கள் கவுன்சிலர் சந்தோஷ் மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். அவர்கள் தங்களது மகள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.
தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், எலும்பு மற்றும் தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டது. சிறுமியின் உடல் உறுப்பு தானத்தால் 7 பேர் மறுவாழ்வு பெற்றனர்.
இந்த நிலையில் கோவைக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடல் உறுப்பு தானம் செய்த சிறுமி வெண்பாவின் வீட்டிற்கு சென்றார்.
அங்கு சிறுமியின் பெற்றோரான கவுன்சிலர் சந்தோஷ், அவரது மனைவி சுகன்யா ஆகியோரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது அவருடன் அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உடனிருந்தனர்.
- அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்.
- திமுக முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி பிரபாகர் தவெகவில் இணைந்தார்.
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார். இதனிடையே அதிமுகவில் இருந்து நிறைய தலைவர்கள் தவெகவில் இணைந்து வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். இதையடுத்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி பிரபாகர் மற்றும் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.
இந்நிலையில், கோவையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்றவர்கள் தற்போது அங்கு உரிய அங்கீகாரம் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே பதவியும், மரியாதையும் வழங்கப்பட்டால் மீண்டும் அதிமுகவிற்கே வர அவர்கள் தயாராக உள்ளனர்" என்று தெரிவித்தார்.
எஸ்.பி. வேலுமணியின் ந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- விஜய் அண்மையில் அதிமுகவை ஊழல் சக்தி என்று விமர்சித்து வருகிறார்.
- விஜயை அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறார். திமுகவின் மீது கடுமையாகந விமர்சனங்களை முன்வைத்து வரும் விஜய் அண்மையில் அதிமுகவை ஊழல் சக்தி என்று விமர்சித்து வருகிறார்.
இதையடுத்து விஜயை அதிமுக அத்தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.அவ்வகையில் கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விஜயை கடுமையாக தாக்கி பேசினார்.
கோவை கூட்டத்தில் பேசிய எஸ்.பி.வேலுமணி, "விஜய் கரூர் செல்கிறார். 41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் அதை கண்டுகொள்ளாமல் சென்னை சென்ற விஜய் திரும்பி வரவே இல்லை.." அவர் உடனே மருத்துவமனைக்கு போயிருக்க வேண்டாமா... காப்பாத்தியிருக்க வேண்டாமா... இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.
விஜய்யின் பட ரிலீஸ் பிரச்னையின்போது அவர் என் வீட்டில் இருந்தார், நான்தான் அவரை காரில் அழைத்துச் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வைத்து, படத்தை ரிலீஸ் செய்ய உதவினேன்" என்று தெரிவித்தார்.
- வெண்பாவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
- சிறுமியின் மூளை செயல் இழந்து அவர் மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது.
ரத்தினபுரி:
கோவை மாநகராட்சி 73-வது வார்டு கவுன்சிலரும், நகரமைப்பு குழு தலைவருமாக இருப்பவர் சந்தோஷ் என்ற சோமு.
இவருக்கு 8 வயதில் வெண்பா என்ற மகள் இருந்தார். கடந்த திங்கட்கிழமை வெண்பாவிற்கு திடீரென தலைவலி, வாந்தி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சிறுமியின் தந்தை, மகளை கோவை ரேஸ்கோர்சில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில், சிறுமிக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள், மேல் சிகிச்சைக்காக வேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுங்கள் என தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து கவுன்சிலர் சந்தோஷ் என்ற சோமு தனது மகள் வெண்பாவை, அவினாசி சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது என்றும், இதற்காக ஆப்ரேஷன் செய்வது என்பது பெரும் சிக்கலான விஷயம் என்று கூறினர். இருப்பினும் ஆபரேஷன் செய்து பாருங்கள் என சிறுமியின் குடும்பத்தினர் தெரிவிக்கவே, சிறுமிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிறுமியின் மூளை செயல் இழந்து அவர் மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது.
இதனை டாக்டர்கள் கவுன்சிலர் சந்தோஷ் என்ற சோமுவிடம் தெரிவித்தனர். இதையடுத்து கவுன்சிலர் சந்தோஷ் மற்றும் குடும்பத்தினர் தங்களது மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். மாணவியிடம் இருந்து சிறுநீரகம், கல்லீரல், தோள், கண் உள்ளிட்ட 4 உறுப்புகள் எடுக்கப்பட்டு 4 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது.
8 வயதில் மூளைச்சாவு அடைந்த சிறுமியின் உடல் உறுப்பு தானத்தால் தற்போது 4 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
- இந்து கோவில்களுக்கு உரிய மரியாதை கொடுக்கக்கூடாது என்பது தி.மு.க.வினுடைய ரத்தத்திலேயே ஊறி இருக்கிறது.
- ஆன்மிக சக்தியை எந்த ஒரு அரசியல் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.
கோவையில் பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர் கூட மாநில அரசு அந்த உத்தரவை நிறைவேற்றாமல் வேண்டுமென்றே எந்தவித முகாந்திரமும் இல்லாமல் அதை தடுத்து நிறுத்தினார்கள்.
சட்டம் ஒழுங்கு என்ற ஒரு பொய் காரணத்தை சொல்லி தீபத் திருநாள் அன்று தீபம் ஏற்றுவதை தடுத்தது இந்த தி.மு.க. அரசு.
தமிழகம் எப்போதும் தெய்வீக மண். இங்கு இருக்கக்கூடிய கோவில்கள், இறை தெய்வங்கள், கோவிலையொட்டி இருக்கக்கூடிய கலாச்சாரம், பண்பாடு எல்லாம் தான் தமிழர்களுடைய அடையாளம்.
தமிழ்நாடு என்றாலே ஒரு கோபுர சின்னத்தை வைத்தது நம் முன்னோர்கள். கோபுர சின்னம் கோவிலின் அடையாளம் என்பதை தாண்டி அது தமிழகத்தின் அடையாளமாகவே இருந்து கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட தமிழர்களுடைய அடையாளத்தை அழிக்கின்ற விதமாக திராவிட மாடல் தி.மு.க. அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதில் ஒன்று தான் திருப்பரங்குன்றத்தில நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் தீபத்தூணில் தீபம் ஏற்ற முடியாமல் போனதற்கு காரணம். நீதிமன்றத்தில் போய் வெட்கமில்லாமல் மன்னிப்பு கேட்டது தி.மு.க. அரசு. அவர்களுடைய நோக்கம் என்பது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்த வேண்டும். இந்து கோவில்களுக்கு உரிய மரியாதை கொடுக்கக்கூடாது என்பது தி.மு.க.வினுடைய ரத்தத்திலேயே ஊறி இருக்கிறது.
ஆன்மிக சக்தியை எந்த ஒரு அரசியல் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.
ஊழல்வாதிகளை மிரட்டி தான் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறி உள்ளாரே?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருடைய அமைச்சரவையில் உள்ள கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டு எத்தனை மாதம் ஆகிறது. அதெல்லாம் ஊழலாக தெரியவில்லையா?
அமைச்சரவையில் ஊழல் அமைச்சர்களை வைத்துக்கொண்டு, ஊழல் வழக்குகளை நடத்திக்கொண்டிருக்கக்கூடிய அமைச்சர்களை வைத்துக்கொண்டு, ஊழல் குற்றச்சாட்டிற்காக ஒரு சிட்டிங் அமைச்சரை வீட்டுக்கு அனுப்பிய பெருமைக்குரியவர் முதலமைச்சர் ஸ்டாலின்.
தி.மு.க. கூட்டணி கல்லா பெட்டி கூட்டணி என்று விஜய் கூறியிருக்கிறாரே?
விஜய் எந்தவிதமாக புதுபுது வார்த்தைகள் வைத்து பேசினாலும் அல்ட்டிமேட்டா தி.மு.க.வை வீழ்த்தப்போவது தேசிய ஜனநாயக கூட்டணிதான். அதனால் மேடை ஏறலாம். வசனம் பேசலாம். கூட்டத்தை கூட கூட்டிக்காட்டலாம். ஆனால் வாக்குகள் விழுவது என்பது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான். ஏனென்றால் அவர்களை வீழ்த்த முடிகின்ற சக்தி தேசிய ஜனநாயக கூட்டணிக்குதான் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






