search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vanathi Srinivasan"

    • அண்ணாமலை சர்வதேச அரசியல் படிப்பதற்காக லண்டன் செல்ல உள்ளார்.
    • படிப்பு முடிந்து திரும்புவதற்கு 6 மாதங்களுக்கு மேல் ஆகும்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் தொடர்பாக படிப்பதற்காக லண்டன் செல்ல உள்ளார். அடுத்த மாதம் (ஆகஸ்டு) 28-ந் தேதி அவர் லண்டன் செல்கிறார்.

    அவர் படிப்பு முடிந்து திரும்புவதற்கு 6 மாதங்களுக்கு மேல் ஆகும். இந்த கால கட்டத்தில் கட்சி பணியை பார்ப்பது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக பா.ஜ.க. அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் டெல்லி செல்கிறார். அங்கு தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனையின் போது அண்ணாமலைக்கு பதிலாக புதிய தலைவராக யாரையாவது நியமிக்கலாமா? அல்லது தற்காலிகமாக செயல் தலைவராக யாரையாவது நியமிக்கலாமா என்றும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

    புதிய தலைவருக்கான பரிசீலனையில் நயினார் நாகேந்திரன் பெயர் அடிபடுவதாக கூறப்படுகிறது. இது பற்றி அந்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது, தற்காலிகமாக தலைவரை நியமிப்பது சாத்தியமில்லை.

    ஏற்கனவே மத்திய மந்திரி எல். முருகன் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகி மத்திய மந்திரி ஆனபோது 8 மாதம் தலைவர் இல்லாமல் தான் இருந்தது. அதேபோல் இப்போதும் அப்படியே விட்டு விட அதிக வாய்ப்பு இருக்கிறது.

    ஒரு வேளை புதிய தலைவரை நியமிக்க முடிவு செய்தால் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகிய மூவரில் ஒருவரை நியமிக்கலாம் என்றார்.

    • காவல்துறையினர் முழுக்க முழுக்க திமுக நிர்வாகிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதால், அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை.
    • திமுகவின் வட்டச் செயலாளர், கிளைச் செயலாளர் முதல் உயர்மட்ட நிர்வாகிகள் வரை காவல்துறைக்கு உத்தரவிடுகின்றனர்.

    சென்னை :

    பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தலைநகர் சென்னையில் அதுவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    எம்.எல்.ஏ.வாக உள்ள கொளத்தூர் அருகே ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் கொல்லப்பட்டிருப்பது, தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

    அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளாக ரவுடிகளின் அட்டகாசம் தலைதூக்கி இருக்கிறது. காவல்துறையினர் முழுக்க முழுக்க திமுக நிர்வாகிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதால், அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. திமுகவின் வட்டச் செயலாளர், கிளைச் செயலாளர் முதல் உயர்மட்ட நிர்வாகிகள் வரை காவல்துறைக்கு உத்தரவிடுகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கும் இதுதான் காரணம். தலைநகர் சென்னையில் ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கும் இதுதான் காரணம். ஆம்ஸ்ட்ராங் படுகொலையால் சென்னை மாநகர மக்கள் குறிப்பாக வடசென்னை மக்கள் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உறைந்துள்ளனர்.

    ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படுகொலையில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கண்டறிந்து கடும் தண்டனை வழங்க வேண்டும். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது தான் ஒரு மாநில அரசின் முதல் கடமை அந்த கடமையிலிருந்து திமுக தவறியிருக்கிறது. காவல்துறையை தன் வசம் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திமுக அரசு பின்னணியில் இருந்து இயக்குகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
    • பிரிவினை சித்தாந்தத்தை மக்களிடம் விதைப்பதற்கு, ஓர் ஆயுதமாக 'நீட் எதிர்ப்பை கையில் எடுத்துள்ளது.

    தேசிய மகளிரணி தலைவரும், பாஜக தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது,

    நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி பகுதியில், சாலையோர சுவர்களில், 'INDIA Impose NEET, Tamil Nadu Quit India' (நீட் தேர்வை இந்தியா திணிக்கிறது. இந்தியாவிலிருந்து தமிழ்நாடு வெளியேற வேண்டும்), 'இந்தியா ஒழிக' என்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

    மருத்துவ படிப்புகளுக்கு சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு என்பது, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக நீட் நுழைவுத் தேர்வு இந்தியா முழுவதும் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்து கொண்டிருந்த நேரத்தில், நீட் தேர்வு நடந்ததால், பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு புகார்கள் வந்துள்ளன. மத்திய பாஜக அரசின் உத்தரவுப்படி, இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. நீட் தேர்வை வெளிப்படை தன்மையுடன், நியாயமான முறையில் நடத்திட நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. அரசு கொண்டுவரும் எந்த ஒரு திட்டத்தையும் ஜனநாயக வழியில் எதிர்க்க அனைவருக்கும் உரிமை உள்ளது. அதன்படி, நீட் தேர்வை எதிர்த்து குரல் கொடுக்கலாம். போராடலாம். அதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால், 'நீட் எதிர்ப்பு' என்ற பெயரில், தேச பிரிவினையை தூண்டுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது. இது மன்னிக்கவே முடியாத குற்றம்.

    நீலகிரி மாவட்டத்தின் கோத்தகிரி பகுதியில், சாலையோர சுவர்களில் எழுதப்பட்டுள்ள வாசகங்களில், 'இந்தியா ஒழிக' என்பது மட்டும் கைகளால் எழுதப்பட்டுள்ளது. ஆனால், 'INDIA Impose NEET, Tamil Nadu Quit India' என்ற பிரிவினையை தூண்டும் வாசகங்கள் அதற்கான பிரின்டிங் பிளாக்' தயாரிக்கப்பட்டு இதிலிருந்து தேசப்பிரிவினை பிரச்சாரத்தை அமைப்பு ரீதியாக திட்டமிட்டு செயல்படுத்துவது தெளிவாகத் தெரிகிறது. தேசப் பிரிவினையை தூண்டும், நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயல்படும் சக்திகளை திமுக அரசு பின்னணியில் இருந்து இயக்குகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

    ஏனெனில், திமுக, 'தனித் தமிழ்நாடு' என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட கட்சி, நமது அரசியல் சட்டம் உருவான பிறகு, பிரிவினை கோரிக்கையை வெளிப்படையாக முன் வைத்தால், கட்சி நடத்த முடியாது. ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முடியாது என்பதால் பிரிவினை கோரிக்கையை அக்கட்சி கைவிட்டது. ஆனாலும், மக்களிடம் பிரிவினை எண்ணத்தை விதைப்பதை ஒருபோதும் கைவிடவில்லை.

    இப்போது பிரிவினை சித்தாந்தத்தை மக்களிடம் விதைப்பதற்கு, ஓர் ஆயுதமாக 'நீட் எதிர்ப்பை கையில் எடுத்துள்ளது. தேசத்திற்கு எதிரான அதுவும் பிரிவினை சித்தாந்தத்தை விதைக்கும் எந்த ஒரு செயல்பாட்டையும் அனுமதிக்க கூடாது. அவர்களை இரும்புக் கரம் கொண்டு கொடுக்க வேண்டும். பிரிவினையைத் தூண்டும் வாசகங்களை எழுதியவர்களை கண்டறிந்து உடனடியாக கைது செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பிரிவினைவாதிகளுக்கு எந்த இடமும் இல்லை என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் சிறுவர்கள் கைகளில் கஞ்சா, நடுத்தர வயதுடையவர்களிடம் டாஸ்மாக்.
    • விசாரணை கமிஷன் அமைத்தாலும், அதிகாரிகளை மாற்றினால் இழந்த உயிர்கள் இழந்ததுதான்.

    சென்னை:

    உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் 10-வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மயிலாப்பூரில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பார்க்கில் யோகா பயிற்சியை இப்பகுதி மக்களுடன் சேர்ந்து செய்வதற்காக பாஜக சார்பில் ஏற்பாடு செய்து இருந்தோம்.

    கட்சி நிர்வாகி அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். நேற்று இரவு யோகா பயிற்சிக்கு அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டனர். இன்று காலை வழக்கமாக நாகேஸ்வரராவ் பார்க்கில் பயிற்சி செய்பவர்களையும் வர விடாமல் பார்க்கை மூடி விட்டனர். மிகவும் சிறுபிள்ளைத்தனமான அரசாங்கத்தின் நடவடிக்கையாக இதை பார்க்கிறோம்.

    சர்வதேச யோகா தினத்தில் மக்களோடு இணைந்து கட்சி நிர்வாகிகளும் ஆதரவாளர்களும் மக்களுடன் சேர்ந்து யோகா செய்வதில் என்னவாகி விடப்போகிறது.

    தமிழக அரசு எதற்கெல்லாம் கவனம் கொடுக்க வேண்டுமோ அதற்கு எல்லாம் கவனம் கொடுக்கவில்லை.

    கள்ளக்குறிச்சியில் நடந்திருக்கக்கூடிய சம்பவம் அத்தனை பேரின் மனதையும் உலுக்கிக்கொண்டிருக்கிறது. கள்ளச்சாராய சாவை தடுக்க முடியவில்லை. கள்ளச்சாராயம் விற்கும் கட்சியினரை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் யோகா செய்யும் கட்சி நிர்வாகிகளை, சாதாரணமாக வரும் பொதுமக்களையும் பார்க்கை பூட்டி வைத்து தடை செய்யக்கூடியதுதான் இந்த அரசாங்கம் நிலைமை.

    உங்கள் தவறுகளை பேசும் எதிர்க்கட்சிகளை முடக்க நினைத்து பார்க்கில் செய்யும் யோகா நிகழ்ச்சிகளை தடை செய்கிறீர்கள்.

    பா.ஜக. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் யோகா பயிற்சி செய்பவர்களுடன் இணைந்து கட்சி நிர்வாகிகள் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். சர்வதேச யோகா தினத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் எத்தனையோ முயற்சி எடுத்து யோகா செய்யும் தன்னார்வலர்களுக்கு என்னுடைய பாராட்டுகள். யோகா பயிற்சியை மேற்கொள்ளும் மக்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

    தமிழகத்தில் பெண்களும் மதுப்பழக்கத்திற்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இது எங்கு நடக்கிறது என்று பார்த்தால் குறிப்பாக, உடல் உழைப்பை சார்ந்து உள்ள சமுதாயத்தில் உடல் வலியை மறக்க, மறைப்பதற்காக என்று நினைத்துக்கொண்டு இந்த மது பழக்கத்திற்கு ஆளாகி கொண்டிருக்கிறார்கள்.

    இன்று தமிழகத்தில் சிறுவர்கள் கைகளில் கஞ்சா, நடுத்தர வயதுடையவர்களிடம் டாஸ்மாக், வறுமை இருக்கக்கூடிய மக்கள் இருக்கும் பகுதிகளில் ஆளும்கட்சிக்காரர்களின் துணையுடன் விலை குறைவாக இருக்கும் கள்ளச்சாராயம் ஆறாக போய்க்கொண்டிருக்கிறது.

    இது முதல் தடவை இல்லை. ஒரு வருடத்திற்குள் இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது என்றால் மாநிலத்தின் முதல்வருக்கு தம்முடைய துறையின் மீது கட்டுப்பாடு இல்லை என்று அர்த்தம். ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதரவால்தான் இதுபோன்ற சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது.

    விசாரணை கமிஷன் அமைத்தாலும், அதிகாரிகளை மாற்றினால் இழந்த உயிர்கள் இழந்ததுதான்.

    ஒவ்வொரு தெருவுக்கும் மதுக்கடைகளை திறந்துவைத்தும் கூட இன்று கள்ளச்சாராயம் இந்த நிலைக்கு வந்திருக்கிறது என்றால் மாநில அரசு யாருடைய பாக்கெட்டை நிரப்ப ஏழைகள், அப்பாவிகளின் உயிரை பழிவாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.

    • பா.ஜ.க.வை பொறுத்தவரை மக்களுக்கு பணி செய்வதை தான் கடமையாக கொண்டு செயல்படும்.
    • பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் கோடிக்கணக்கான திட்டங்களோடு வருகிறார்.

    கோவை:

    வானதி சீனிவாசன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கோவை பாராளுமன்ற தொகுதியில் பாஜகவுக்கு அதிகமான வாக்குகளை மக்கள் அளித்துள்ளனர். மாநில தலைவர் அண்ணாமலை மிகப்பெரிய எழுச்சியை கொடுத்துள்ளார். கூட்டணி இல்லாமல் அவர் அதிகமான வாக்குகள் பெற்று மக்கள் ஆதரவை பெற்றுள்ளார். இதற்காக மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் பா.ஜ.க.வை பொறுத்தவரை மக்களுக்கு பணி செய்வதை தான் கடமையாக கொண்டு செயல்படும்.

    பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். அவர் கடந்த 10 ஆண்டுகளில் ஏழை, எளிய பெண்கள், விவசாயிகள், பட்டியலின மக்களின் நலனுக்காக எப்படி உழைத்தாரோ, அதை விட கூடுதலாக பணியாற்றுவார்.

    கோவையில் நடந்த முப்பெரும் விழாவில் பேசியவர்கள் தமிழகத்தில் மீண்டும் 2026-ல் ஆட்சியை பிடிப்பதாக கனவு கண்டு வருகின்றனர். நாங்கள் 40 இடத்தை பிடித்து விட்டோம், பாராளுமன்றத்தில் பாருங்கள் என கூறுவதால் வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்ய முடியாது. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.விற்கு எதிரான மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் மக்கள் விரும்பக்கூடிய கட்சியாக பா.ஜ.க. உள்ளது தென்னிந்தியாவில் ஏற்கனவே காலை பதித்து விட்டோம் தமிழகத்தில் ஆழமாக பதிந்துள்ளது. அதை நீங்கள் பார்க்க தான் போகிறீர்கள்.

    பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் கோடிக்கணக்கான திட்டங்களோடு வருகிறார். ஆனால் தமிழக அரசின் மின் கட்டண, பத்திரப்பதிவு உள்ளிட்ட விலை உயர்வால் தொழில்துறையினர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் அதிக வாக்குகளை மக்கள் அளித்துள்ளனர். இனி சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி வியூகங்களை வகுத்து பணிகளை தொடங்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் மோடி 3-வது முறையாக களம் இறங்கியுள்ள வாரணாசி தொகுதியிலும் 1-ந்தேதி தான் தேர்தல் நடக்க உள்ளது.
    • மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, டெல்லி, மத்திய பிரதேசம், பஞ்சாப், சண்டிகர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டுள்ளேன்.

    கோவை:

    இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? இந்தியாவை அடுத்து ஆளப்போகும் கட்சி எது என்பதை அறியும் 18-வது பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நடந்து வருகிறது.

    கடந்த 19-ந்தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 6 கட்டங்கள் முடிந்து விட்டன. பாராளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வருகிற 1-ந்தேதி நடக்கிறது.

    இதனையொட்டி இறுதி கட்ட தேர்தல் நடக்க உள்ள இடங்களில் நாளை மாலையுடன் பிரசாரம் நிறைவடைய உள்ளது. இதனையொட்டி அங்கு இறுதிகட்ட அனல் பறக்கும் பிரசாரத்தில் தலைவர்கள், வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    பிரதமர் மோடி 3-வது முறையாக களம் இறங்கியுள்ள வாரணாசி தொகுதியிலும் 1-ந்தேதி தான் தேர்தல் நடக்க உள்ளது. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வாகன பேரணி நடத்தி பிரசாரம் மேற்கொண்டார். மகளிர் அணி சார்பில் பிரமாண்ட மாநாடும் நடத்தப்பட்டது.

    பிரதமருக்கு ஆதரவாக மத்திய, மாநில மந்திரிகள், கட்சியினரும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் இருந்தும் பா.ஜ.க நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பலரும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாரணாசி மட்டுமின்றி வடமாநிலங்கள் முழுவதும் தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் மற்றும் தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், மகளிர் அணியினர், பா.ஜ.க தொண்டர்கள் அனைவரும் முகாமிட்டு, ஒவ்வொரு கிராமம், கிராமமாக சென்று பா.ஜ.கவுக்கு ஆதரவு திரட்டினர். வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ளனர்.

    அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பா.ஜ.கவுக்கு ஆதரவான அலைவீசுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து பா.ஜ.க மகளிர் அணி தேசிய தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் மாலைமலர் நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.


    அப்போது நாம் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி: வாரணாசி தொகுதி கள நிலவரம் எப்படி உள்ளது?

    பதில்: வாரணாசி தொகுதியின் களநிலவரம் நன்றாகவே உள்ளது. இங்கு பாரதிய ஜனதாவுக்கான ஆதரவு அலை அதிகமாக உள்ளது. பிரதமர் மோடியின் மீது அங்குள்ள மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். எல்லோருமே பிரதமருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இங்கு பிரதமர் இந்த முறை சாதனை வெற்றியை பதிவு செய்வார்.

    கேள்வி: வாரணாசி தொகுதியில் உள்ள தமிழர்கள் என்ன சொல்கிறார்கள்?

    பதில்: வாரணாசியில் தமிழர்கள் அதிகம் பேர் உள்ளனர். குறிப்பாக பண்டிட்கள், பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர்கள் இங்கு உள்ளனர். 150 வருடத்திற்கும் மேலாக பாரம்பரியமாகவே இங்கும் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    பிரதமர் மோடி மீது இங்கு வாழ்ந்து வரக்கூடிய தமிழ் மக்கள் அனைவரும் மிகுந்த அன்பு கொண்டுள்ளனர். அவர்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கான ஆதரவே காணப்படுகிறது. அனைவரும் பா.ஜ.க.வுக்கே எங்கள் ஆதரவு என்று சொல்லி வருகிறார்கள்.

    கேள்வி: நீங்கள் வாரணாசியில் எத்தனை நாள் பிரசாரம் மேற்கொண்டீர்கள்?

    பதில்: வாரணாசியில் நான் கடந்த 25 மற்றும் 26-ந் தேதிகளில் பிரசாரம் மேற்கொண்டேன். வாரணாசி தெற்கு, வாரணாசி வடக்கு உள்பட வாரணாசி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 3 சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டேன். நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பா.ஜ.கவுக்கான ஆதரவு அலையே காணப்பட்டது.

    இதுதவிர மகளிர் அணி சார்பில் தனியாக மாபெரும் மாநாட்டையும் நடத்தினோம். அந்த மாநாடு மிகப்பெரிய வெற்றி மாநாடாக அமைந்தது.

    கேள்வி: வேறு எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் நீங்கள் பிரசாரம் மேற்கொண்டீர்கள்? அங்கு பா.ஜ.கவுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

    பதில்: மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, டெல்லி, மத்திய பிரதேசம், பஞ்சாப், சண்டிகர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டுள்ளேன். இன்று இமாச்சல் பிரதேசத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ளேன். நான் பிரசாரம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் மக்களிடம் பா.ஜ.கவுக்கு மகத்தான ஆதரவு உள்ளது. மக்கள் அனைவரும் பா.ஜ.க ஆட்சியை விரும்புகிறார்கள்.

    கேள்வி: தமிழ்நாட்டில் இருந்து வேறு தலைவர்கள் யாராவது வாரணாசி பிரசாரத்துக்கு வந்துள்ளனரா?

    தமிழகத்தில் இருந்து பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிலர் வந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று மக்களை நேரில் சந்தித்து பிரதமருக்கு வாக்கு சேகரித்து வருகிறார்கள். தற்போது பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் அவர்கள் மக்களை நேரடியாக சந்தித்து பிரதமருக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    கேள்வி: மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்வது குறித்து?

    பதில்: ஒவ்வொரு தேர்தல் முடிந்த பின்னரும் எப்போதும் பிரதமர் ஒரு இடத்திற்கு சென்று தியானம் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் தமிழகத்திற்கு வருகிறார். பிரதமர் தமிழகத்திற்கு வருவது சந்தோஷம். அதுவும் விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்வது சிறப்பு வாய்ந்தது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சகித்துக் கொள்ள முடியாமல் அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றது.
    • எதிர்த்து பேசுபவர்கள் மீது வழக்கு போட்டு கொண்டிருக்கிறது.

    வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை, குடிநீர் பிரச்சினை ஆகியவற்றை தி.மு.க. அரசு கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை.

    தி.மு.க. குடும்பத்திற்கு எதிராக டுவிட்டர், சமூக வலைதளங்களில் விமர்சித்து பேசுபவர்களை கைது செய்வதிலேயே அக்கறை காட்டுகிறது.

    பத்ரி சேசாத்ரி, மாரிதாஸ் என தொடர்ச்சியாக பல்வேறு நபர்களை கைது செய்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக தற்போது சவுக்கு சங்கரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சவுக்கு சங்கர், பா.ஜ.க.வை பற்றி செய்யாத விமர்சனங்களே இல்லை. நான் தி.மு.க.விற்கு போக போகின்றேன் என்று கூட சொன்னார்.

    ஆனால் தி.மு.க.வோ விமர்சனங்களை சகித்துக் கொள்ள முடியாமல் அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

    தண்ணீர் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை, போதை கலாச்சாரம் இருக்கின்றது. இதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

    பாராளுமன்ற தேர்தலின் போது பல்வேறு இடங்களில் எதிர்ப்பு இருப்பது தி.மு.க.வுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் பழிவாங்கும் நோக்கில் எதிர்த்து பேசுபவர்கள் மீது வழக்கு போட்டு கொண்டிருக்கிறது.

    பெண்களை இழிவுபடுத்தி விட்டதாக கைது செய்யப்பட வேண்டும் என்றால் தி.மு.க.வினர் பாதி பேர் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவுண்டம்பாளையத்தில் 830 ஓட்டுகள் காணவில்லை என பா.ஜ.க.வினர் புகார் கூறியுள்ளனர்.
    • உள்ளாட்சி தேர்தலில் 1353 ஓட்டு இருந்தன, தற்போது 523 ஓட்டு மட்டுமே இருப்பதாகவும் கூறி பா.ஜ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கவுண்டம்பாளையம்:

    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் வாக்குப்பதிவு 51.41 சதவீதமாக உள்ளது. அதிகபட்சமாக தருமபுரியில் 57.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    கோவை தொகுதியில் 50.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், கவுண்டம்பாளையத்தில் 830 ஓட்டுகள் காணவில்லை என பா.ஜ.க.வினர் புகார் கூறியுள்ளனர்.

    அங்கப்பா பள்ளி பூத் எண் 214-ல் 523 ஓட்டு மட்டுமே உள்ளதாகவும், உள்ளாட்சி தேர்தலில் 1353 ஓட்டு இருந்தன, தற்போது 523 ஓட்டு மட்டுமே இருப்பதாகவும் கூறி பா.ஜ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனிடையே எஞ்சியோரையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டுமென தேர்தல் அதிகாரியிடம் முறையிட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த கோரிக்கை விடுத்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வர மாட்டார். அவருக்கு தகுதி இருப்பதாகவே பார்க்கிறேன்
    • அன்புமணி ராமதாஸ்- சவுமியாவின் மகள் சங்கமித்ராவின் திருமணம் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது

    பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த தொகுதியின் வேட்பாளராக பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவியும், பசுமை இயக்கத்தின் நிர்வாகியுமான சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வருவாரா?, மாட்டாரா? என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் கேட்டனர்.

    அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வர மாட்டார். அவருக்கு தகுதி இருப்பதாகவே பார்க்கிறேன் என தெரிவித்தார். பசுமை இயக்கத்துக்கு அவர் வேலை செய்து இருக்கிறார். அவர் ஒன்றும் 24 வயதில் சீட் கேட்கவில்லை,30 வயதில் சீட் கேட்கவில்லை,35 வயதில் சீட் கேட்கவில்லை,50 வயதிலும் சீட் கேட்கவில்லை என தெரிவித்தார். சௌமியா அன்புமணிக்கு குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கும் திருமணமான பின்புதான் அரசியலுக்கே வந்துள்ளார் என்று குழப்பமான பதிலை கூறினார்.

    இவரது பேச்சை கேட்டு, அங்கு கூடியிருந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் சிரிக்க தொடங்கினர்.

    மேலும், கே.என்.நேரு பையனையும், டி.ஆர்.பி.ராஜாவையும் தயவு செய்து சவுமியா அன்புமணியுடன் ஒப்பிட வேண்டாம் எனவும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்- சவுமியாவின் மகள் சங்கமித்ராவின் திருமணம் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. சவுமியா அன்புமணியின் மகளுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், பேத்திக்கு திருமணம் நடைபெற்றது என்று அண்ணாமலை மாற்றி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • தேர்தல் தேதி அறிவித்தால் அதில் கூட அரசியல் செய்கிறார்கள்.
    • சொத்துவரி, பத்திரப்பதிவு வரி உயர்வு என மக்கள் தாங்க முடியாத சுமையை மக்கள் மீது திணித்துள்ளது.

    கோவை:

    கோவை வி.கே.கே.மேனன் ரோட்டில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடியின் கோவை வருகையை பா.ஜ.க.வினரும், பொதுமக்களும் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். பிரதமரும் நம்மை பார்க்க ஆவலாக இருக்கிறார். பிரதமரை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கோவை மக்களுக்கு கிடைத்துள்ளது.

    எதிர்கட்சியினர் எல்லாவற்றையும் அரசியல் செய்து வருகின்றனர். தேர்தல் தேதி அறிவித்தால் அதில் கூட அரசியல் செய்கிறார்கள்.

    பிரதமர், தேர்தல் ஆணையத்தின் மீது பழிபோடுவதை எதிர்கட்சிகளின் முன்தோல்வியாக தான் பார்க்கிறோம். பா.ஜ.க ஆளும் மாநிலங்களை விட தமிழகத்திற்கு அதிகமான நிதியை மத்திய அரசு கொடுத்துள்ளது.

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 28 பைசா மோடி என தரக்குறைவாக விமர்சித்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது. போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்குடன் பழக்கம் உள்ள உங்களை டிரக் உதயநிதி என்று அழைக்கலாமா?.

    தி.மு.க அரசானது மக்களுக்கு விரோதமான அரசாக உள்ளது. சொத்துவரி, பத்திரப்பதிவு வரி உயர்வு என மக்கள் தாங்க முடியாத சுமையை மக்கள் மீது திணித்துள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக விளக்கம் கொடுக்க தயார் என மத்திய மந்திரி சொல்லியுள்ளார். இங்குள்ளவர்கள் 3 ஆண்டுகள் ஆட்சியில் எவ்வளவு வாங்கினீர்கள் என்று சொல்ல முடியுமா?

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக பா.ஜ.கவை கேள்வி கேட்கும் எதிர்கட்சிகளிடம், அது குறித்து விளக்கம் கேட்டால் பதில் இல்லை. பா.ஜ.க வெளிப்படை தன்மையுடன் ஆட்சி நடத்தி வருகிறது.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக நிறைய வதந்திகள் வருகிறது. பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்டதாக கூறப்படுவது வதந்தியாக இருக்கும். இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே தேர்தல் பத்திரங்கள் கொடுக்க முடியும்.

    அதானி, அம்பானி அரசை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு சொல்லி வந்த நிலையில், அந்த நிறுவனங்கள் இல்லாதது அவர்களுக்கு ஏமாற்றமாக அமைந்திருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வேட்பாளராக நின்று மக்களிடம் பேச முடியாத அவர், பிரசாரத்துக்கு வந்து மட்டும் என்ன பயன்?
    • கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்து இருந்தாலும், மீண்டும் வந்து மக்களை சந்தித்து இருக்கலாம்.

    கோவை:

    பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தி.மு.க. கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை. மாநிலங்களவையில் மட்டும் ஒரு இடம் கொடுக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    கமல்ஹாசன் ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் கோவையில் போட்டியிட்டபோது, பொதுமக்கள் அணுக முடியாத அளவுக்குதான் இருந்தார். அவருக்கு சரியான பதிலை கோவை தெற்கு தொகுதி மக்கள் அளித்தனர். இப்போது மீண்டும் போட்டியிடும் மனநிலையில் இருந்து மாறியுள்ளார். கோவையில் மூக்கு உடைபட்டாலும் நான் வருவேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தார். நாங்களும் ஆவலுடன் காத்திருந்தோம். அவர் போட்டியிடாதது எங்களுக்கு ஏமாற்றம்தான்.

    தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவேன் என்று சொல்லி வந்தார். ஆட்சி அமைக்க போகிறேன் என்று சொல்லி வந்த கமல்ஹாசன், தனது அரசியல் பயணத்தில் எந்த கட்சியை விமர்சித்தாரோ, அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

    வேட்பாளராக நின்று மக்களிடம் பேச முடியாத அவர், பிரசாரத்துக்கு வந்து மட்டும் என்ன பயன்? அரசியல் ஆசைக்காக அந்த பதவியை எடுத்துள்ளார்.

    அவர் நட்சத்திர பேச்சாளர். அந்த நட்சத்திர பேச்சாளருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி விலை அவ்வளவுதான். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்து இருந்தாலும், மீண்டும் வந்து மக்களை சந்தித்து இருக்கலாம். இப்போது அவரது அரசியல் சாயம் வெளுத்துவிட்டது.

    இவ்வாறு வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.

    • தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்திட குழு அமைத்துள்ளது பாஜக
    • இந்த மாநில அளவிலான குழுவில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்திடவும். ஒருங்கிணைத்திடவும் மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது என பாஜக அறிவித்துள்ளது.

    இந்த மாநில அளவிலான குழுவில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இக்குழுவில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக தேசிய இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேத்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.இராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    ஏற்கனவே பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×