என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GST Tax"

    • ஆகஸ்ட் மாதம்- ரூ.1.86 லட்சம் கோடி வசூல்.
    • கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான தொகையை விட 9.1 சதவீதம் அதிகமாகும்.

    ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. கடந்த மாதத்துடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் வெளியிடப்பட்டு வருகிறது.

    அதன்படி, நடப்பு ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரூ.1.89 லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான தொகையை விட 9.1 சதவீதம் அதிகமாகும்.

    இதற்கிடையே, ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் அமலானது. ஜிஎஸ்டியில் இருந்த 4 வரி அடுக்குகள் தற்போது 2 அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்துள்ளது.

    ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் எதிரொலி அடுத்த மாத ஜிஎஸ்டி வசூலில் தெரியவரும். கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் மட்டும் ரூ.10.04 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா போன்ற ஒரு நாடு யாரையும் சார்ந்து இருப்பது இனி ஏற்றுக் கொள்ள முடியாதது.
    • இந்தியாவின் பொருளாதாரம் வலுவடையும் போது மக்கள் மீதான வரிச்சுமை மேலும் குறையும்.

    பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் நடந்த உத்தரபிரதேச சர்வதேச வர்த்தக கண்காட்சி 2025-யை தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை மோடி பார்வையிட்டார். இக்கண்காட்சியில் ரஷியாவும் பங்கேற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    உலகளவில் பல்வேறு இடையூறுகள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும் இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக இருந்து வருகிறது. எந்த தடைகளும் நம்மை தடுக்கவில்லை.

    இந்தியா போன்ற ஒரு நாடு யாரையும் சார்ந்து இருப்பது இனி ஏற்றுக் கொள்ள முடியாதது.

    சுயசார்பு இந்தியா திட்டத்தில் அரசு கவனம் செலுத்துகிறது. சிப் முதல் கப்பல் வரை அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாடு சுயசார்புடையதாக மாற வேண்டும், ஒவ்வொரு தயாரிப்பும் இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும்.

    நமது ஆயுத படைகள் மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்க விரும்புகின்றன. இந்தியாவில் ஒரு துடிப்பான பாதுகாப்பு த் துறையை நாங்கள் உருவாக்கி வருகிறோம். ரஷியாவுடன் இணைந்து உத்தரபிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் ஏ.கே-203 துப்பாக்கிகளின் உற்பத்தி விரைவில் தொடங்கப்படும். ஒவ்வொன்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற அடையாளத்தைக் கொண்ட சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி வருகிறோம்.

    அடுத்த தலைமுறை ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தங்கள் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான வரிகளை கணிசமாகக் குறைத்துள்ளன. இந்த சீர்திருத்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு புதிய சிறகுகளை வழங்க உள்ளன. இந்தியாவின் பொருளாதாரம் வலுவடையும் போது மக்கள் மீதான வரிச்சுமை மேலும் குறையும்.

    2014-ம் ஆண்டுக்கு முந்தைய தோல்விகளை மறைக்க, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களிடம் பொய் சொல்கின்றன. இந்திய மக்களின் வருமானத்தையும் சேமிப்பையும் அதிகரித்துள்ளோம். அத்துடன் நாங்கள் நிறுத்தப் போவதில்லை. நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதைத் தொடர்ந்து, வரிகளை குறைப்பதைத் தொடர்வோம். ஜி.எஸ்.டி சீர்திருத்தங்களின் செயல்முறை வரும் நாட்களிலும் தொடரும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • போகோ சி71 மாடல் 4 ஜிபி ரேமுடன் ரூ.6,299 விலையில் கிடைக்கிறது.
    • கூகுள் பிக்சல் ஃபோல்டு மாடலின் விலையையும் ரூ.60 ஆயிரம் வரை குறைந்திருக்கிறது.

    ஜிஎஸ்டி 2.0 சீர்திருத்தத்திற்கு பிறகு, ஸ்மார்ட்போன்கள் உட்பட பல்வேறு டிஜிட்டல் பொருட்களின் விலை குறைந்திருக்கிறது. இந்நிலையில், ஆன்லைன், ஆஃப்லைன் வர்த்தக தளங்களில் சலுகை விலையுடன் விற்பனையாகும் சில ஸ்மார்ட்போன்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

    ஏ.ஐ. பிளஸ் பல்ஸ் ஸ்மார்ட்போன், பானாசோனிக் பி110 ஆகிய ஸ்மார்ட்போன்கள் ரூ.4,999 முதல் விற்பனைக்கு கிடைக்கின்றன. குறைந்தபட்ச பயன்பாடு கொண்டவர்கள், தொலைபேசி அழைப்பிற்கு மட்டும் பயன்படுத்துபவர்கள், இந்த டச்-ஸ்கிரீன் ஸ்மார்ட்போன்களை வாங்கலாம்.

    சோலோ 1எக்ஸ், லாவா இசட் 1எஸ், ரெட்மி 5ஏ போன்ற மாடல்கள் ரூ.5,299 விலையிலும், போகோ சி71 ரூ.5,599 விலையிலும், ரெட்மி ஏ2 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் ஆகியவை ரூ.5,900 விலையிலும் விற்பனையாகின்றன. இவையனைத்தும் 1 ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள்.

    ரெட்மி ஏ3எக்ஸ், ரெட்மி ஏ5, ரெட்மி 5ஏ ஆகிய ஸ்மார்ட்போன்கள் 3 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரியுடன் ரூ.5,999 விலையில் கிடைக்கின்றன. போகோ சி71 மாடல் 4 ஜிபி ரேமுடன் ரூ.6,299 விலையில் கிடைக்கிறது.

    ஏ.ஐ. பிளஸ் பல்ஸ் மாடலின் 6 ஜிபி ரேம் மாடல் 128 ஜிபி மெமரியுடன், 50MP கேமரா மற்றும் 5000mAh பேட்டரியுடன் ரூ.6,499 விலையிலேயே கிடைக்கிறது.

    சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்டு ஸ்மார்ட்போனிற்கு ரூ.50 ஆயிரத்திற்கு மேலாக சலுகை வழங்கி அதன் விலையை ரூ.1.6 லட்சத்தில் இருந்து ரூ.1.10 லட்சமாக குறைத்திருக்கிறார்கள். அதேபோல கூகுள் பிக்சல் ஃபோல்டு மாடலின் விலையையும் ரூ.60 ஆயிரம் வரை குறைந்திருக்கிறது. அதுவும், ரூ.1.10 லட்சத்தில் விற்பனையாகிறது.

    • பொள்ளாச்சி, காங்கயம், கடலூர் ஆகிய இடங்களில் முக்கிய நார் மையங்கள் இருக்கிறது.
    • திருச்சி மாவட்டத்தின் மணப்பாறை முறுக்கு புவிசார் பெற்றது.

    சென்னை:

    ஜி.எஸ்.டி. குறைப்பால் பல்வேறு பொருட்களின் விலை குறைந்து உள்ளது, இதனால் தமிழகத்திற்கு என்னென்ன நன்மைகள் கிடைத்து இருக்கிறது என்பதனை மத்திய அரசு பட்டியலிட்டு தெரிவித்துள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    ஜவுளித்துறை:-

    தமிழகத்தின் ஜவுளித்துறை இந்தியாவின் மிகப்பெரிய தொழில்களில் ஒன்றாகும். அதனால் திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கோடிக்கணக்கான மக்கள் இதன்மூலம் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர். "இந்தியாவின் பின்னலாடை தலைநகர்" என்று அழைக்கப்படும் திருப்பூரில் மட்டும் 10 லட்சம் மக்கள் வேலை செய்கின்றனர். இந்தியாவின் பின்னலாடை துணி ஏற்றுமதியின் 90 சதவீத பங்களிப்பும், அதாவது சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு இங்கிருந்தே வருகிறது. குறைந்த மதிப்புள்ள ஆடைகள், எம்பிராய்டரி மற்றும் அணிகலன்களுக்கு ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 ஆகக் குறைக்கப்பட்டதால், உற்பத்திச் செலவு 6 முதல் 11 சதவீதம் வரை குறையும்.

    காஞ்சிபுரம் பட்டு:-

    இந்த பட்டு உலகப்புகழ் பெற்றது. அங்குள்ள நெசவாளர்கள், பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் இதன்மீது தான். இந்த பட்டுக்கான தேவையான ஜரி, ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டதால், மூலப்பொருள் செலவு 7 சதவீதம் குறையும். அதனால் இறுதி பட்டு விலையும் 2 முதல் 4 சதவீதம் வரை குறையும்.

    கைத்தறிப் பொருட்கள்:-

    ஈரோட்டின் பவானி ஜமுக்காளம், மதுரையின் சுங்குடி போன்ற புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் 6 சதவீதம் வரை மலிவாக இருக்கும். இவை உள்நாட்டுச் சந்தையில் அதிகமாக விற்பனையாகும். ஏற்றுமதிக்கும் அதிக வாய்ப்பு உண்டு.

    வெண்கலச் சிலைகள்:-

    தஞ்சை மாவட்டத்தில் சுமார் 1,200 கைவினைஞர்கள் இழந்த மெழுகு வார்ப்பு முறையில் சிலைகள் உருவாக்குகின்றனர். ஆண்டுக்கு ரூ.20 முதல் 30 கோடி மதிப்பிற்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைந்ததால் விலையும் 6 சதவீதம் குறையும்.

    நாகர்கோவில் கோவில் நகை:-

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோவில் நகை செய்யும் தொழிலில் சுமார் 500 கைவினைக்குடும்பங்கள் ஈடுபட்டுள்ளனர். 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீத குறைவால் விலை குறையும்.

    பித்தளை, கல், மர கைவினை பொருட்கள்:

    தஞ்சாவூர், கும்பகோணம், மாமல்லபுரம் போன்ற இடங்களில் உள்ள சிற்பிகள் உற்பத்தி செய்யும் பித்தளை, கல், மர கைவினை பொருட்கள் 6 முதல் 7 சதவீதம் வரை குறையும். சுற்றுலா சந்தையிலும், ஆன்லைன் விற்பனையிலும் அதிக ஆதாயம் உண்டு.

    பாரம்பரிய பொம்மைகள்:

    தஞ்சை, சேலம், காஞ்சிபுரம் பகுதிகளில் தயாரிக்கப்படும் பொம்மைகள், 5 சதவீத ஜி.எஸ்.டி.யால் விலை மலிவாகி, வெளிநாட்டு பிளாஸ்டிக் பொம்மைகளுக்கு போட்டியாகும்.

    தென்னை நார்:-

    பொள்ளாச்சி, காங்கயம், கடலூர் ஆகிய இடங்களில் முக்கிய நார் மையங்கள் இருக்கிறது. பெண்கள் அதிகம் ஈடுபடும் இந்தத் துறையில், ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைந்ததால் தென்னை பாய், கயிறு, டெக்ஸ்டைல் போன்றவை 6 முதல் 7 சதவீதம் மலிவாகிறது. உள்நாட்டு, ஏற்றுமதி சந்தையில் போட்டித்திறன் உயரும்.

    ஆவின்:-

    பால் பொருட்கள் பன்னீர், வெண்ணெய் போன்றவை ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதம் குறைந்ததால் அதன் விலையும் 4 முதல் 11 சதவீதம் வரை குறைந்து இருக்கிறது. ஆவினில் தினசரி 37 லட்சம் லிட்டர் பால், 5 லட்சம் விவசாயிகளிடமிருந்து வாங்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. குறைவால் ஆவின் நெட்வொர்க் வலுவடையும்.

    மணப்பாறை முறுக்கு:

    திருச்சி மாவட்டத்தின் மணப்பாறை முறுக்கு புவிசார் பெற்றது. இந்த சிற்றுண்டி மூலம் 3 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். அதன் விலை 6 சதவீதம் மலிவாகி இருக்கிறது.

    மீன்பிடித்துறை:-

    தமிழகத்தின் கடலோர 14 மாவட்டங்களில் 10.48 லட்சம் மீனவர்கள் வாழ்கின்றனர். மீன், இறால், கடல் உணவுகளுக்கு ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைக்கப்பட்டதால், விலை 7 சதவீதம் மலிவாகி இருக்கிறது. அதனால் தூத்துக்குடி, நாகப்பட்டினம், ராமநாதபுரம், கடலூர் மாவட்டங்கள் அதிக நன்மை பெறும்.

    நோட் புத்தகம்:-

    சிவகாசி, பெரம்பூர் ஆகிய இடங்களில் அச்சு, ஸ்டேஷனரி தொழில் வலுவாக உள்ளது. நோட் புத்தகம், மற்றும் ஸ்டேஷனரி ஜி.எஸ்.டி. குறைவால் வியாபாரம் அதிகரிக்கும்.

    எலெக்ட்ரானிக்ஸ்:-

    ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் எலெக்ட்ரானிக்ஸ் தொழில் மையங்கள் உள்ளன. டிவி, மானிட்டர் 28 சதவீதத்தில் இருந்து18 சதவீதமாக குறைந்து இருப்பதால் உற்பத்தி அதிகரிக்கும்.

    டிரோன்கள்:-

    சென்னை, ஓசூர், கோவை ஆகிய இடங்களில் டிரோன் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. ஜி.எஸ்.டி. 18, 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் குறைந்ததால் விலை 18 சதவீதம் குறைந்து உற்பத்தி அதிகரிக்கிறது.

    ஆட்டோமொபைல்:-

    கடந்த 2023-ல் இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தியில் 40 சதவீத பங்கு வகித்த தமிழகம், 22 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளது. ஜி.எஸ்.டி. 28-ல் இருந்து 18 சதவீதம் குறைவதால் வாகன விலை 8 சதவீதம் குறையும்.

    பாதுகாப்பு:-

    சென்னை ஆவடி, கோவை, திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் பாதுகாப்புத் தொழில் உற்பத்தி மையங்கள்உள்ளன. ஏவுகணைகள், போக்குவரத்து விமானங்கள், சிமுலேட்டர்கள் ஆகியவை இப்போது பூஜ்ஜிய ஜி.எஸ்.டி. என்பதால் விலைகுறைந்து உற்பத்தி அதிகரிக்கிறது.

    ரெயில் பெட்டிகள்:-

    சென்னை ஐ.சி.எப். உலகின் மிகப்பெரிய ரெயில் பெட்டி உற்பத்தியாளர். 8,200 பேர் பணிபுரிகின்றனர். ஜி.எஸ்.டி. 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம் குறைவால், உற்பத்தி செலவு 5 சதவீதம் மிச்சமாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கவாசகி Z900 பைக்கில் 948cc, இன்லைன்-4 சிலிண்டர் எஞ்சின் உள்ளது.
    • இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் பல்வேறு பொருட்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த ஜி.எஸ்.டி. வரிகள் மாற்றியமைக்கப்பட்டு அவை அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்தும், குறைக்கப்பட்டும் இருக்கின்றன. அந்த வரிசையில், ஜிஎஸ்டி 2.0 வரி அமலுக்கு வந்த பிறகு கவாசாகி Z900 மோட்டார்சைக்கிள் விலை அதிகரித்துள்ளது.

    அதன்படி இன்லைன்-4, ஸ்டிரீட் நேக்கட் கவாசகி Z900 பைக்கின் விலை இப்போது ரூ.10.18 லட்சமாக மாறியுள்ளது. இது முந்தைய விலையை விட ரூ.66,000 அதிகம் ஆகும். புதிய வரி விதிப்பு பெரிய பைக்குகளை வாங்குபவர்களின் திட்டங்களை நிச்சயமாக பாதிக்கும். மேலும் பல பைக்குகளின் விலைகள் உயரும்.

    2025ஆம் ஆண்டிற்காக, இந்த பைக் ஏராளமான புதுப்பிப்புகளைப் பெற்றுள்ளது. 'சுகோமி' வடிவமைப்பு கொண்டுள்ளது. மேலும், இதில், புதிய LED ஹெட்லைட், நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்ட டேங்க் எக்ஸ்டென்ஷன்களுடன் கூடிய ஃபியூவல் டேன்க் மற்றும் புதிய LED டெயில் லைட்டுடன் கூர்மையான தோற்றமுடைய டெயில் பகுதியைப் பெறுகிறது.



    கவாசகி Z900 பைக்கில் 948cc, இன்லைன்-4 சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இது 123hp பவர் மற்றும் 97.4Nm டார்க்கை உருவாக்குகிறது. மேலும் இது 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் ப்ளூடூத் இணைப்புடன் கூடிய புதிய வண்ண TFT டிஸ்ப்ளே, இரண்டு பவர் மோட்கள், ரைடு மோட்கள், IMU-அசிஸ்ட், கார்னரிங் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் கார்னரிங் ABS ஆகியவற்றைப் பெறுகிறது.

    இந்த பைக் ரூ.10.86 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் உள்ள ட்ரையம்ப் ஸ்ட்ரீட் டிரிபிள் ஆர் உடன் போட்டியிடுகிறது.

    • வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்து கலந்துரையாடினார்.
    • நமது இந்தியாவும் வளர்ந்து வருகிறது என தெரிவித்தார்.

    கோவை:

    ஜி.எஸ்.டி. வரி குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள், உணவு பொருட்கள் மற்றும் டி.வி, ஏசி உள்பட பல்வேறு பொருட்களின் விலையும் குறைந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஜி.எஸ்.டி. வரி குறைப்பை தொடர்ந்து கோவையில் உள்ள டீக்கடை, உணவு பொருள் விற்பனை செய்யும் நிறுவனங்களில் பொருட்கள் விலை குறைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. அங்கு நேரில் சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்டறிந்து கலந்துரையாடினார்.

    காந்திபுரத்தில் உள்ள ஒரு இனிப்பு கடைக்கு சென்ற வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., ஜி.எஸ்.டி. வரி குறைப்புக்கு பிறகு அங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.

    அப்போது கடையின் ஊழியர், முன்பு ஒரு கிலோ மைசூர் பாகு ரூ.420-க்கு விற்பனையானது. ஜி.எஸ்.டி குறைப்புக்கு பிறகு ரூ.380-க்கு விற்பனையாகி வருகிறது.

    சிப்ஸ் ஒரு கிலோ ரூ.640-க்கு விற்பனையாகியது. தற்போது ஒரு கிலோ சிப்ஸ் ரூ.540-க்கு விற்பனையானது. விலை குறைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    வாடிக்கையாளர்களும் சந்தோஷமாக பொருட்கள் வாங்கி செல்கின்றனர். நாங்களும் மன நிறைவோடு இருக்கிறோம். 2 பொருட்கள் வாங்கிய வாடிக்கையாளர்கள் தற்போது விலை குறைந்ததை தொடர்ந்து 3 பொருட்கள் வாங்கி செல்கின்றனர் என்றார்.

    அப்போது வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. இதற்கு நடவடிக்கை எடுத்தது யார் தெரியுமா? என கடையின் ஊழியரிடம் கேட்டார். அதற்கு அவர் பிரதமர் மோடி என்றார். உடனே அவருக்கு நன்றி கூறுங்கள் என அவர் தெரிவித்தார். கடை ஊழியரும் நிச்சயமாக பிரதமருக்கு நன்றி. பிரதமர் வந்த பிறகு நிறைய முயற்சிகள் எடுத்து வருகிறார். நமது இந்தியாவும் வளர்ந்து வருகிறது என தெரிவித்தார்.

    அதன்பின் கடைக்கு வந்த வாடிக்கையாளர்களிடம் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கருத்து கேட்டறிந்தார். அப்போது ஒரு வாடிக்கையாளர், நான் மோட்டார் சைக்கிள் வாங்க வாகன ஷோரூமுக்கு சென்றேன். அவர்கள் இன்னும் சில நாட்களில் ஜி.எஸ்.டி. வரி குறைந்துவிடும். அதன்பின்னர் வந்து எடுத்து கொள்ளுங்கள் என்றனர். மேலும் இந்த கடையில் பொருட்கள் வாங்கும் போது, நேற்றை விட பொருட்கள் விலை குறைத்து விற்கப்படுவதகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறும்போது, பிரதமரின் ஒரே நோக்கம் விலை குறைப்பு என்பது சாதாரண மக்களிடம் சென்றடைய வேண்டும் . எவ்வளவு குறைக்கப்பட்டு உள்ளது. 5 மற்றும் 15 சதவீதம் என்று குறைந்துள்ளது. அது மக்களுக்கு தெரியவேண்டும் என அவர் தெரிவித்தார். 

    • அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    • விற்பனை மேலும் அதிகரிக்கும் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஜி.எஸ்.டி. 12%, 28% வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறைப்பு குறித்த குறித்த அறிவிப்பு வெளியானது முதல் மொபைல், ஏசி, கார், டிவி உள்ளிட்டவைகளில் விலைகளும் குறையும் என்பதால் அதனை வாங்க நினைத்தவர்கள் செப்டம்பர் 22-ந்தேதிக்காக காத்திருந்தனர்.

    இதனை தொடர்ந்து ஜி.எஸ்.டி. சீரமைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பு நடவடிக்கையால் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இந்த நிலையில், ஜி.எஸ்.டி. சீரமைப்பு அமலுக்கு வந்த முதல் நாளான நேற்று நாட்டின் பல்வேறு நகரங்களில் ஏ.சி., டி.வி.க்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக வர்த்தக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    மேலும் பண்டிகை காலம் நெருங்கி வருவதால், விலை மற்றும் ஜி.எஸ்.டி குறித்த குழப்பம் தெளிவான பின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர். 

    • ஆவின் விற்பனை மூலம் வருகின்ற வருவாய் 90% க்கு மேல் பால் உற்பத்தியாளர்களுக்கே வழங்கப்படுகிறது.
    • பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களின் நலன் சார்ந்த பால் உபபொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

    ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாகவும், பண்டிகை கால சலுகையாகவும் ஆவின் நெய், பனீர் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ஆவினின் அனைத்து வகை நெய்யும் லிட்டருக்கு ரூ.40 வரை குறைத்து சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    தனியார் நிறுவனத்தைவிட ரூ.50 வரை குறைவாக 500 கிராம் வெண்ணெய் ரூ.275க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    200 கிராம் பனீர் சலுகை விலையில் ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஆவின் நிறுவனத்தில் ஜி.எஸ்.டி வரி குறைப்பின் காரணமாகவும் பண்டிகை கால சலுகையாகவும், ஒரு லிட்டர் ஜார் நெய் ரூ. 690/- லிருந்து ரூ.650/-குறைக்கப்பட்டுள்ளது.

    ரூ.120/-க்கு விற்பனை செய்யப்பட்ட 200 கிராம் பனீர் ரூ.110/-க்கும், ரூ.300/- க்கு விற்பனை செய்யப்பட்ட 1/ 2 கிலோ பனீர் ரூ.275/- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இந்திய அளவில் கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்களை காட்டிலும் ஆவின் நிறுவளம் பொதுமக்கள் நலன் கருதி மிகவும் குறைந்த விலையில் தரமான பால் மற்றும் பால் உப பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

    மேலும், ஆவின் விற்பனை மூலம் வருகின்ற வருவாய் 90% க்கு மேல் பால் உற்பத்தியாளர்களுக்கே வழங்கப்படுகிறது.

    மேலும் அவ்வப்பொழுது சந்தை நிலவரத்திற்க்கு ஏற்றவாறு இதர கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்கள் போல் பால் மற்றும் பால் பொருட்களின் விNைDI மாற்றியமைக்காமல், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களின் நலன் சார்ந்த பால் உபபொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

    ஆவின் நிறுவனம் பொதுமக்கள் நலன் கருதி குறைந்த விலையில் uns மற்றும் பால் உப பொருட்களை கர்வோருக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசால் கடந்த 2021 ஆம் ஆண்டு அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 3/-குறைந்து ஆணையிட்டது. இதன் மூலம் தினமும் சுமார் 1.5 கோடி நுகர்வோர் பயனடைந்து வருகின்றனர்.இதுவரை பொதுமக்கள்கு 1073/- கோடியை சேமித்துள்ளனர்.

    2023 ஆம்ஆண்டுமாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள். பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலுக்கு ஊக்கத்தொகையாக லிட்டர் ஒன்றுக்கு ரூபாம் 3 வழக உத்தரவிட்டுள்ளார்.

    இதன் மூலம் சுமார் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுகின்றனர். 18.12.2023 முதல் இதுவரை ரூ 635 கோடி தமிழ்நாடு அரசால் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசால் இணையம், ஒன்றியங்கள் மற்றும் சங்கங்களின் நிதி கட்டமைப்பை வலுபடுத்திட சுமார் 675 கோடி ரூபாயை பங்கு மூலதனமாக வழங்கப்பட்டுள்ளது.

    தற்சமயம் ஒன்றிய அரசாங் GST வரி விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு குறைந்த விலையில் பால் மற்றும் பால் உபபொருட்களை விற்பனை செய்வதாலும் மற்றும் பால் தரத்திற்கேற்ப உரிய விலையில் பால் கொள்முதல் செய்வதாலும் ஆவின் நிறுவனம் நிதி சுமையை கவனத்தில் கொண்டு சந்தையில் குறைவான விலையில் தாந்துடன் அனைத்து பால் பொருட்களையும் விற்பனை செய்துவருகிறது.

    தற்பொழுது ஜிஎஸ்டி (GST) சதவிகிதகுறைப்பின் காரணமாகவும் மற்றும் பண்டிகை கால சலுகையாகவும் ஆவினின் அனைத்து வகையான நெய்களுக்கும் லிட்டர் ஒன்றுக்கு சுமார் 40/- ரூபாய் விலை குறைத்து பொது மக்களுக்கு சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

    மேலும் வெண்ணெய் விலையானது இந்தியாவிலுள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களை விட ரூ.10/- முதல் ரூ.50/- வரை குறைவான விலையில் (அரை கிலோ வெண்ணெய் ரூபாய் 275/- ) ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

    மேலும் ஆவின் 200 கிராம் பனீர் ரூபாய் 110/- என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • 500 கிராம் பனீர் பாக்கெட் 300 ரூபாய் இருந்து 275 ரூபாயாக குறைப்பு.
    • 15 கிலோ நெய் ரூ.10,900-ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி குறைப்பு இன்று முதல் நாடு முழுவதும் அமலான நிலையில், ஆவின் பொருட்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

    அதன் படி, ஒரு லிட்டர் நெய்யின் விலை 690 ரூபாயில் இருந்து 650 ரூபாயாகவும், 250 கிராம் பனீர் பாக்கெட் விலை 120 ரூபாயில் இருந்து 110 ரூபாயாகவும், 500 கிராம் பனீர் பாக்கெட் 300 ரூபாய் இருந்து 275 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் 50 மில்லி லிட்டர் நெய் ரூ.45, 5 லிட்டர் நெய் ரூ.3,300, 15 கிலோ நெய் ரூ.10,900-ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

    • பால்பொருள்களின் விலையை உயர்த்தி மக்களைக் கொள்ளையடிப்பதை ஆவின் நிறுவனம் வாடிக்கையாகவே வைத்திருக்கிறது.
    • தனியார் நிறுவனங்கள் கூட குறுகிய காலத்தில் இந்த அளவுக்கு விலையை உயர்த்தியதில்லை.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஜி.எஸ்.டி. எனப்படும் பொருள்கள் மற்றும் சேவை வரிகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் பால் பொருள்களின் விலைகளை கணிசமாக குறைத்திருக்கும் நிலையில், தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மட்டும் அத்தகைய விலைக் குறைப்பை செய்யாமல் உயர்த்தப்பட்ட விலைகளிலேயே பால் பொருள்களை விற்பனை செய்து வருகிறது. அதிக விலைக்கு பால்பொருள்களை விற்பனை செய்து மக்களைச் சுரண்டும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

    உறைகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் பால்களுக்கு தொடக்கம் முதலே ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் பன்னீர், ஐஸ்கிரீம், சுவையூட்டப்பட்ட பால் வகைகள், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருள்களுக்கு 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வந்தது. ஜி.எஸ்.டி வரிச் சீர்திருத்தங்களின் ஒரு கட்டமாக பால் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி வரி 5% ஆக குறைக்கப்பட்டு விட்டது. அதன் பயனாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பொதுத்துறை பால் நிறுவனமான அமுல், கர்நாடகப் பொதுத்துறை நிறுவனமான நந்தினி மற்றும் தனியார் நிறுவனங்கள் பால் பொருள்களின் விலையை ரூ.25 முதல் ரூ.40 வரை குறைத்துள்ளன. ஆனால், ஆவின் நிறுவனம் வரி குறைக்கப்பட்ட பிறகும் விலைகளை குறைக்கவில்லை.

    ஜி.எஸ்.டி வரி எனப்படுவது பால் பொருள்களின் விலைகள் மீது வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் தொகையாகும். அந்த வரிகள் குறைக்கப்பட்ட பிறகு அதன் பயன்கள் வாடிக்கையாளர்களையே சென்றடைய வேண்டும். அப்படியில்லாமல் அதே விலையில் விற்க வேண்டும் என்றால் பால் பொருள்களின் அடிப்படை விலையை உயர்த்த வேண்டும். ஜிஎஸ்டி வரிக்குறைப்பு நடைமுறைக்கு வந்த பிறகும் பழைய விலையிலேயே ஆவின் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பதால் அவற்றின் விலை உயர்த்தப்பட்டிருப்பதாகவே பொருள். ஆவின் பால் பொருள்களின் விலைகள் உயர்த்தப்பட்டு விட்டனவா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.

    அமுல் நிறுவனம் 700-க்கும் மேற்பட்ட பால் பொருள்களின் விலைகளை குறைத்துள்ளது. நந்தினி 15 வகையான பொருள்களின் விலைகளை குறைத்துள்ளது. தனியார் நிறுவனங்களும் பத்துக்கும் மேற்பட்ட வகையான பால் பொருள்களின் விலைகளை குறைத்துள்ளன. அவ்வாறு இருக்கும் போது ஆவின் நிறுவனம் மட்டும் விலைகுறைப்பு செய்ய மறுப்பதன் நோக்கம் என்ன? ஆவின் பொருள்களை பயன்படுத்தும் ஏழை மக்களை சுரண்டி அதிக லாபம் ஈட்டும் நோக்கத்தைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

    பால்பொருள்களின் விலையை உயர்த்தி மக்களைக் கொள்ளையடிப்பதை ஆவின் நிறுவனம் வாடிக்கையாகவே வைத்திருக்கிறது. ஆவின் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பால் பொருள்களின் விலை 4 முறை உயர்த்தப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.515 ஆக இருந்த ஒரு கிலோ நெய்யின் விலை இப்போது ரூ.185 உயர்த்தப்பட்டு, ரூ.700 ஆகியுள்ளது. இது 36% உயர்வு ஆகும். தனியார் நிறுவனங்கள் கூட குறுகிய காலத்தில் இந்த அளவுக்கு விலையை உயர்த்தியதில்லை.

    ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்ட போது அதைக் காரணம் காட்டி பால் பொருள்களின் விலைகளை உயர்த்திய தமிழக அரசு, வரிகள் குறையும் போது விலையைக் குறைப்பது தான் அறம். ஆனால், அறத்திற்கும் திமுகவுக்கும் இடைவெளி மிகவும் அதிகம். ஆவின் பால் பொருள்களை பயன்படுத்தும் மக்கள் ஏழைகள் தான். அவர்களைச் சுரண்டி பிழைப்பது மனிதநேயமற்ற செயலாகும். எனவே, இனியும் தாமதிக்காமல் ஜி.எஸ்.டி வரிக் குறைப்புக்கு ஏற்ற வகையில் ஆவின் பால் பொருள்களின் விலைகளை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

    • ஜிஎஸ்டி சீர்திருத்தம் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும்.
    • பீகார் மாநில மக்கள் நாட்டின் மிக ஏழைகள் என்றார்.

    பாட்னா:

    பீகாரின் நாலந்தாவில் ஜன் சுராஜ் கட்சி நிறுவனரான பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பிரதமர் மோடியின் உரைகளை நாங்கள் 15 ஆண்டுகளாகக் கேட்டு வருகிறோம்.

    நாளை மாற்றம் வரப்போகிறது, நாளை இந்தியா உலகத் தலைவராக மாறும், நாளை நமது பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்பதை நாங்கள் கேட்டு வருகிறோம். இதுவரை இதைத்தான் நாங்கள் கேட்டு வருகிறோம்.

    ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் பீகார் மக்கள் கணிசமாக பயனடைவார்கள் என்று அர்த்தமல்ல.

    ஜிஎஸ்டி சீர்திருத்தம் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும். பீகார் மக்கள் நாட்டின் மிக ஏழைகள்.

    நீங்கள் கார்கள் மீதான வரியைக் குறைத்தீர்கள். பீகாரில் ஒவ்வொரு 100 பேரில் 2 பேர் கார்களை வைத்திருக்கிறார்கள்.

    எனவே, வாகனங்களுக்கான ஜிஎஸ்டியைக் குறைத்தால், பீகாரில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு அது பயனளிக்காது என தெரிவித்தார்.

    • இந்திய சந்தையில் ஜிஎஸ்டி 2.0-க்குப் பிறகு மாருதி சுசுகி வாகனங்களின் நெக்சா சீரிஸ் மாடல்கள் விலை குறைப்பு பெற்றுள்ளன.
    • பிரீமியம் டீலர்ஷிப்கள் இந்த நன்மைகளை செப்டம்பர் 22ஆம் தேதி முதல் நுகர்வோருக்கு வழங்க உள்ளன.

    மத்திய அரசு பல்வேறு பொருட்களுக்கு சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த வரி விதிப்பில் மாறுதல்களும் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

    இந்த மாற்றங்கள் ஜிஎஸ்டி 2.0 என அழைக்கப்படுகிறது. ஜிஎஸ்டி 2.0 அறிவிப்புக்கு பிறகு பல்வேறு பொருட்களின் விலைகள் மாறியுள்ளன. அதன்படி முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தங்களது வாகனங்கள் விலையை குறைத்து வருகின்றன.

    இந்திய சந்தையில் ஜிஎஸ்டி 2.0-க்குப் பிறகு மாருதி சுசுகி வாகனங்களின் நெக்சா சீரிஸ் மாடல்கள் விலை குறைப்பு பெற்றுள்ளன. பிரீமியம் டீலர்ஷிப்கள் இந்த நன்மைகளை செப்டம்பர் 22ஆம் தேதி முதல் நுகர்வோருக்கு வழங்க உள்ளன. அதன்படி நெக்சா பிராண்டு மாடல்களின் விலை குறைப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.

    புதிய விலை விவரங்கள்:

    இக்னிஸ் மாடலின் விலை ரூ. 71,300 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 5,35,100 என மாறியுள்ளது.

    பலேனோ மாடலின் விலை ரூ. 86,100 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 5,98,900 என மாறியுள்ளது.

    ஃப்ராங்க்ஸ் மாடலின் விலை ரூ. 1,12,600 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 6,84,900 என மாறியுள்ளது.

    கிராண்ட் விட்டாரா மாடலின் விலை ரூ. 1,07,000 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 10,76,500 என மாறியுள்ளது.

    எக்ஸ்எல் 6 மாடலின் விலை ரூ. 52,000 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 11,52,300 என மாறியுள்ளது.

    ஜிம்னி மாடலின் விலை ரூ. 51,900 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 12,31,500 என மாறியுள்ளது.

    இன்விக்டோ மாடலின் விலை ரூ. 61,700 குறைக்கப்பட்டு தற்போது ரூ. 24,97,400 என மாறியுள்ளது.

    ×