என் மலர்tooltip icon

    டெல்லி

    • புதிய ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ஆற்றலையும், நேர்மறையான மாற்றத்தையும் குறிக்கிறது.
    • இது சுய பிரதிபலிப்பு மற்றும் புதிய தீர்மானங்களுக்கான ஒரு வாய்ப்பாகும் என்றார்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. தலைநகர் டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டன.

    புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பானதாகவும், ஏற்றமிகு வாழ்க்கையை அளிப்பதாகவும் அமைய வேண்டும் என அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்திய குடிமக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது:

    புத்தாண்டின் மகிழ்ச்சியான தருணத்தில் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதிய ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ஆற்றலையும், நேர்மறையான மாற்றத்தையும் குறிக்கிறது.

    இது சுய பிரதிபலிப்பு மற்றும் புதிய தீர்மானங்களுக்கான ஒரு வாய்ப்பாகும். இந்த சந்தர்ப்பத்தில், நாட்டின் வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நமது உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துவோம்.

    2026-ம் ஆண்டு நமது வாழ்வில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டு வந்து, வலுவான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க புதிய ஆற்றலை புகுத்தட்டும் என தெரிவித்துள்ளது.

    • பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றார்.
    • 29 நாடுகள் அவருக்கு சர்வதேச விருதுகளை அளித்து கவுரவப்படுத்தி உள்ளன.

    புதுடெல்லி:

    அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, புளோரிடாவில் அதிபர் டிரம்பைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பின் போது அதிபர் டிரம்ப், தனது இரண்டாவது பதவி காலத்தின் முதல் ஆண்டில் மட்டும் 8 போர்களை நிறுத்தியுள்ளேன் என பெருமையுடன் பேசினார்.

    நீண்டகால போர்களை முடிவுக்கு கொண்டுவந்த தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ராஜதந்திரமாக இத்தனை போர்களை நிறுத்தியும் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.

    ஆனால், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கோ வெளிநாடுகள் அனைத்தும் தங்களின் உயரிய விருதுகளை வழங்கி கவுரவித்து வருகின்றன.

    பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றதில் இருந்து அவருக்கு பல நாடுகள் சர்வதேச விருதுகளை அளித்து கவுரவப்படுத்தி உள்ளன. இந்த ஆண்டு மட்டும் 10 நாடுகள் தங்களின் உயரிய விருதுகளை வழங்கியுள்ளன.

    இதுவரை 29 நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். அதன் விவரம் வருமாறு:


    2016:

    ஏப்ரல் 3: சவுதி அரேபியா - ஆர்டர் ஆஃப் அப்துல் அஜீஸ் அல் சவுத்

    ஜூன் 4: ஆப்கானிஸ்தான் - ஸ்டேட் ஆர்டர் ஆப் காஜி அமீர் அமானுல்லா கான் விருது.

    2018, பிப்ரவரி 10: பாலஸ்தீனம் - கிராண்ட் காலர் ஆஃப் தி ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன விருது

    2019

    ஜூன் 8: மாலத்தீவு - ஆர்டர் ஆஃப் தி டிஸ்டிங்குவிஷ்ட் ரூல் ஆஃப் நிஷான் இசுதீன் விருது.

    ஆகஸ்ட் 24: ஐக்கிய அரபு அமீரகம் - ஆர்டர் ஆஃப் சயீத் விருது.

    ஆகஸ்ட் 24: பஹ்ரைன் - கிங் ஹமத் ஆர்டர் ஆஃப் தி ரினைசன்ஸ் விருது.

    2020, டிசம்பர் 21: அமெரிக்கா - லீஜியன் ஆப் தி மெரிட் விருது.

    2023:

    மே 22: பிஜி - கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் பிஜி விருது

    மே 22: பப்புவா நியூ கினியா - கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் லோகோ விருது.

    மே 22: பலாவ் - பலாவ் குடியரசு எபகல் விருது.

    ஜூன் 25: எகிப்து - ஆர்டர் ஆப் தி நைல் விருது.

    ஜூலை 14: பிரான்ஸ் - கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் விருது.

    ஆகஸ்ட் 25: கிரீஸ் - தி கிராண்ட் கிராஸ் ஆப் ஆர்டர் ஆப் ஹானர் விருது.

    2024:

    மார்ச் 22: பூடான் - ஆர்டர் ஆஃப் தி ட்ரூக் கியால்போ விருது.

    ஜூலை 9: ரஷியா - ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ விருது.

    நவம்பர் 17: நைஜீரியா - கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர் விருது.

    நவம்பர் 20: டொமினிகா -டொமினிகோ அவார்ட் ஆஃப் ஹானர் விருது.

    நவம்பர் 20: கயானா - ஆர்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் விருது.

    டிசம்பர் 22: குவைத் - தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர் விருது.


    2025:

    மார்ச் 5: பார்படாஸ் - ஹானரி ஆஃப் பிரீடம் விருது.

    மார்ச் 11: மொரீஷியஸ் - ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் மற்றும் கீ ஆஃப் தி கிராண்ட் கமாண்டர் விருது.

    ஏப்ரல் 5: இலங்கை - மித்ர விபூஷணயா விருது.

    ஜூன் 16: சைப்ரஸ் - கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மகாரியோஸ் III விருது.

    ஜூலை 2: கானா - தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா விருது.

    ஜூலை 4: டிரினிடாட் மற்றும் டொபாகோ - தி ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட் அண்ட் டொபாகோ விருது

    ஜூலை 8: பிரேசில் - தி கிராண்ட் காலர் ஆஃப் தி நேஷனல் ஆர்டர் ஆஃப் தி சதர்ன் கிராஸ் விருது.

    ஜூலை 9: நமீபியா - ஆர்டர் ஆஃப் தி மோஸ்ட் ஏன்சியன்ட் வெல்விட்சியா மிராபிலிஸ் விருது.

    டிசம்பர் 16 : எத்தியோப்பியா - கிரேட் ஹானர் ஆப் எத்தியோப்பியா விருது

    டிசம்பர் 18 : ஓமன் - தி ஃப்ர்ஸ்ட் கிளாஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஓமன் விருது.

    • சுமார் 317-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் பல்வேறு என்கவுண்டர்களில் கொல்லப்பட்டனர்.
    • 860-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    2025 ஆம் ஆண்டு இந்திய வரலாற்றில் நக்சலிசத்திற்கு எதிரான போரில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. மத்திய அரசு "2026 மார்ச் 31-க்குள் நக்சலிசம் இல்லாத பாரதம்" என்ற இலக்கை நிர்ணயித்து, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி, இந்த ஆண்டில் மட்டும் பாதுகாப்புப் படைகள் நக்சலைட்டுகளுக்கு எதிராக மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளன. சுமார் 317-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் பல்வேறு என்கவுண்டர்களில் கொல்லப்பட்டனர்.

    சுமார் 1,973-க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு பொதுவாழ்விற்குத் திரும்பியுள்ளனர். குறிப்பாக சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இது அதிகளவில் நிகழ்ந்துள்ளது.

    860-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், நக்சல் இயக்கத்தின் முதுகெலும்பாகக் கருதப்பட்ட உயர்மட்டத் தலைவர்கள் இந்த ஆண்டில் வீழ்த்தப்பட்டனர்.

    மத்வி ஹித்மா: நக்சல் இயக்கத்தின் மிகவும் தேடப்பட்ட மற்றும் கொடூரமான கமாண்டர்களில் ஒருவரான இவர், நவம்பர் 2025-ல் சத்தீஸ்கர்-ஆந்திரா எல்லைப் பகுதியில் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்டார். இவர் மீது பல கோடி ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. 

    கணேஷ் உய்கே: மத்திய குழு உறுப்பினர் மற்றும் ஒடிசா மாநில பொறுப்பாளரான இவர், டிசம்பர் 2025-ல் ஒடிசாவின் கந்தமால் பகுதியில் கொல்லப்பட்டார். இவர் மீது ரூ.1.1 கோடி வெகுமதி இருந்தது. 

    கேசவ ராவ் (எ) பசவராஜ்: ஜூன் 2025-ல் மற்றொரு மூத்த தலைவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    சலபதி மற்றும் அருணா: ஜனவரி 2025-ல் சத்தீஸ்கர்- ஒடிசா எல்லையில் நடந்த தாக்குதலில் மத்திய குழு உறுப்பினர் சலபதி மற்றும் அவரது மனைவி அருணா உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர். ஆப்பரேஷன் பிளாக் ஃபாரஸ்ட் 2025-ம் ஆண்டின் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.


    சத்தீஸ்கரின் கர்ரேகுட்டா மலைப்பகுதிகளில் 21 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இந்த வேட்டையில், 27 கடினமான நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். இங்கிருந்த மிகப்பெரிய ஆயுதத் தொழிற்சாலை மற்றும் பயிற்சி முகாம்களைப் பாதுகாப்புப் படைகள் தகர்த்தன.

    நக்சல் பாதிப்பு குறைந்த மாவட்டங்கள்

    அரசின் தீவிர நடவடிக்கையால் நக்சல் பாதிப்பு உள்ள பகுதிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. 2014-ல் 126 ஆக இருந்த நக்சல் பாதிப்பு மாவட்டங்கள், 2025-ல் வெறும் 11 ஆகக் குறைந்துள்ளது. இதில் மிகத் தீவிர பாதிப்புள்ள மாவட்டங்கள் வெறும் 3 மட்டுமே மிஞ்சியுள்ளன.

    அபுஜ்மர் (Abujhmad) மற்றும் வடக்கு பஸ்தர் போன்ற பல ஆண்டுகளாக நக்சல் கோட்டைகளாக இருந்த இடங்கள் இப்போது "நக்சல் அற்ற பகுதிகள்" என அறிவிக்கப்பட்டுள்ளன.


    வெறும் ஆயுதப் போர் மட்டுமின்றி, "பேச்சுவார்த்தை - பாதுகாப்பு - ஒருங்கிணைப்பு" என்ற மும்முனை உத்தியையும் மத்திய அரசு கையாண்டது. சரணடையும் நக்சலைட்டுகளுக்கு நிதி உதவி மற்றும் வாழ்வாதாரத்தை அரசு வழங்குகிறது.

    நக்சல் பகுதிகளில் 17,500 கி.மீ சாலைகள், 5,000 மொபைல் கோபுரங்கள் மற்றும் 900-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் 2025-க்குள் நிறுவப்பட்டுள்ளன.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தபடி, 2026 மார்ச் மாதத்திற்குள் நக்சலிசம் இந்தியாவில் முழுமையாக ஒழிக்கப்படும் என்ற இலக்கை நோக்கி 2025-ம் ஆண்டின் வெற்றிகள் ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளன.

    • இன்று 3-வது நாளாக நடந்த விசாரணைக்கு த.வெ.க. நிர்வாகிகள், கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆஜரானார்கள்.
    • சி.பி.ஐ. விசாரணைக்கு த.வெ.க. நிர்வாகிகள் குழு முழு ஒத்துழைப்பு வழங்கியது.

    கரூரில் நடந்த த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    முதற்கட்ட விசாரணை கரூரில் நடந்தது. விசாரணை யில் த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்த், சி.டி.நிர்மல்குமார் மற்றும் த.வெ.க. நிர்வாகிகளிடமும் போலீஸ் அதிகாரிகளிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர். அடுத்தகட்ட விசாரணைக்காக த.வெ.க. நிர்வாகிகள் புதுடெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

    இதைத் தொடர்ந்து கடந்த 2 நாட்கள் நடந்த விசாரணையில் த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, சி.டி.நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் கலெக்டர் தங்கவேலு, போலீஸ் சூப்பி ரண்டு ஜோஸ் தங்கையா மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடந்தது.

    தொடர்ந்து இன்று 3-வது நாளாக நடந்த விசாரணைக்கு த.வெ.க. நிர்வாகிகள், கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் ஆஜரானார்கள். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் த.வெ.க. நிர்வாகிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது.

    இதையடுத்து த.வெ.க. இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * டெல்லியில் 3 நாட்களாக நடந்து வந்த விசாரணை நிறைவடைந்தது.

    * சி.பி.ஐ. விசாரணைக்கு த.வெ.க. நிர்வாகிகள் குழு முழு ஒத்துழைப்பு வழங்கியது.

    * எங்களிடம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் முறையாக பதில் அளித்துள்ளோம்.

    * தேவைப்பட்டால் விசாரணைக்கு மீண்டும் அழைப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    * 41 பேரின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா இன்று காலமானார்.
    • அவரது மறைவுக்கு அவாமி லீக் கட்சி தலைவரான ஷேக் ஹசீனா இரங்கல் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80), இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இதற்கிடையே, கலிதா ஜியா சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். கலிதா ஜியா கடந்த 1991-96 மற்றும் 2001-06 என இரு முறை வங்கதேச பிரதமராக இருந்தவர். கலிதா ஜியாவின் இறுதிச்சடங்கு டாக்காவில் நாளை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், கலிதா ஜியாவின் இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்கிறார். இதற்காக ஜெய்சங்கர் நாளை வங்கதேச தலைநகர் டாக்கா செல்கிறார்.

    வங்கதேசம் உடனான உறவில் விரிசல் நிலவி வரும் சூழ்நிலையில், வெளியுறவுத்துறை மந்திரியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    • 2025-26 நிதியாண்டின் 2-வது நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர்.
    • இதன் மூலம் 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

    4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா 4-வது இடத்தை பிடித்துள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. 2030-க்குள் 3-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளும் எனவும் தெரிவித்துள்ளது.

    தொடர்ந்து சிறந்த வளர்ச்சி எண்ணிக்கையால், இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கியமான பொருளாதார நாடாக உள்ளது என்று தெரிவித்துள்ளது. 2025-26 நிதியாண்டின் 2-வது காலாண்டில் இந்தியாவின் உண்மையான உள்ளாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.2 சதவீதமாகும். முதல் காலாண்டில் 7.4 சதவீதமாக இருந்த நிலையில், 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    அமெரிக்கா உலகின் முதல் பெரிய பொருளாதார நாடாக உள்ளது. சீனா 2-ஆவது இடத்தில் உள்ளது. 2026-ல் இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. ஐஎம்எஃப் 2025-ல் 6.6 சதவீதமாகும், 2026-ல் 6.2 சதவீதமாக இருக்கும் என கணித்தள்ளது.

    • இஸ்ரோ தனது 100-வது ராக்கெட்டை கடந்த ஜனவரி 29-ல் விண்ணில் ஏவி சாதனை படைத்தது.
    • விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் நிலவை ஆய்வு செய்வதற்காக 'சந்திரயான்', செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 'மங்கல்யான்', சூரியனை ஆய்வு செய்வதற்காக 'ஆதித்யா' உள்ளிட்ட திட்டங்கள் மூலம் செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதே சமயம், இஸ்ரோவின் கனவு திட்டங்களில் ஒன்றான விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    வரும் 2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 விண்ணில் ஏவப்படும். இது சந்திரனுக்கு சென்று திரும்பும்போது மண், பாறை மாதிரி எடுத்து வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இஸ்ரோ தனது 100-வது ராக்கெட்டை கடந்த ஜனவரி 29-ல் விண்ணில் ஏவி சாதனை படைத்தது.


    2026 டிசம்பர் முதல் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பயன்பாட்டுக்கு வரும்.

    2027-க்குள் இந்தியாவின் ககன்யான் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான திட்டம்.

    இந்தியாவுக்காக 2035-ல் ஒரு விண்வெளி நிலையம் அமைக்கத் திட்டத்துக்காக முதல் கட்ட ஒப்புதல்.

    இந்தியாவில் 5 ஆண்டுகளில் 50 ராக்கெட்களை ஏவுவதற்கு இலக்கு நிர்ணயம்.

    அடுத்த 3 ஆண்டுகளில் 150 செயற்கைக் கோள்களாக உயர்த்த திட்டம்.

    இஸ்ரோவின் திட்டங்கள் இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே கண்டறிந்து, மக்களை காப்பாற்ற உதவுகின்றது.

    அமெரிக்க அரசு விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்புகளை மீறி தாம் கொண்டுள்ள இலக்குகளை நோக்கி செயல்படும் விதமாக இந்திய அரசு இஸ்ரோவுக்கான நிதிகளை தாராளமாக ஒதுக்கி வருகிறது.

    இஸ்ரோவில் பணியாற்றிய தமிழர்கள்

    முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், விஞ்ஞானி மயில்சாமி, சிவன் உள்ளிட்ட பலர்.


    இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி. நாராயணன் கடந்த ஜனவரி முதல் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் இஸ்ரோவில் கிட்டத்தட்ட 4 தசாப்தங்களாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெங்காலி பேசும் மக்கள் நாட்டின் மற்ற பகுதிகளில் ஊடுருவல்காரர்களாக நடத்தப்படுகிறார்கள்.
    • அவர்கள் பெங்காலியில் பேசுகிறார்கள் என்பது மட்டும் அவர்களுடைய ஒரே குற்றம்.

    பெங்காலி (மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்) பேசும் மக்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் குடியெர்ந்து வேலைபார்த்து வருகிறார்கள். அவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தலையிடுமாறு பிரதமர் மோடியை நேரடியாக சந்தித்து மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தியுள்ளார்.

    பிரதமரை சந்தித்தபோது, வெளிமாநிலத்தில் குடிபெயர்ந்து வேலை பார்க்கும் பெங்காலி பேசும் மக்கள் தாக்கப்படும் விவகாரத்தில் தலையிட வேண்டும். அதேபோல் பிற்படுத்தப்பட்ட மதுவா சமுதாயம் மேற்கு வங்கத்தில் பிரச்சினையை மேற்கொண்டு வருகின்றனர் என வலியுறுத்தியுள்ளார்.

    பெங்காலி பேசும் மக்கள் தாக்கப்படும் சூழ்நிலையை தான் கவனித்துக் கொண்டிருப்பதாகவும், இது நடக்கக் கூடாது என பிரதமர் உறுதி அளித்ததாகவும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்கத்தில் அடுத்த வருடம் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இந்த சந்திப்பில் அரசியல் முக்கியத்துவம ஏதும் இல்லை. சில நாட்களுக்கு முன்னதாக நான் டெல்லி வந்திருந்தேன். அப்போது, தற்செயலாக பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது என்றார்.

    மோடியிடம் ஒரு கடிதம் வழங்கியுள்ளார். அதில் "பெங்காலி பேசும் மக்கள் நாட்டின் மற்ற பகுதிகளில் ஊடுருவல்காரர்களாக நடத்தப்படுகிறார்கள். அவர்கள் பெங்காலியில் பேசுகிறார்கள் என்பது மட்டும் அவர்களுடைய ஒரே குற்றம்.

    சம்பந்தப்பட்ட நிர்வாகத்தால் அவர்கள் பெரும்பாலும் அண்டை நாடான வங்கதேசத்தை சேர்ந்தவர்களாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, ஊடுருவல்காரர்களாகக் கருதப்படுகிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியாவின் துணை ஜனாதிபதியாக 2022 முதல் செயல்பட்டு வந்தவர் ஜகதீப் தன்கர்.
    • ஜூலையில் தனது பதவியை ராஜினாமா செய்த அவர், டெல்லியில் தனியார் பண்ணை வீட்டிற்கு மாறினார்.

    புதுடெல்லி:

    இந்தியாவின் துணை ஜனாதிபதியாக 2022 முதல் செயல்பட்டு வந்தவர் ஜகதீப் தன்கர் (74).

    கடந்த ஜூலை 21ம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவை தலைவராக இருந்த அவர், முதல் நாள் கூட்டத்தில் பங்கேற்றார். அன்றைய தினமே, அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ஜூலையில் பதவியை ராஜினாமா செய்த பிறகு, ஜகதீப் தன்கர் டெல்லி சத்தர்பூரில் உள்ள ஒரு தனியார் பண்ணை வீட்டிற்கு மாறினார்.

    அரசு விதிகளின்படி, முன்னாள் துணை ஜனாதிபதி வசிப்பதற்கான பங்களாவை நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒதுக்க வேண்டும்.

    இந்நிலையில், துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்து 5 மாதங்கள் ஆன நிலையிலும் ஜகதீப் தன்கருக்கு அரசு பங்களா ஒதுக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.

    அரசு விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் துணை ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்களுக்கு, டில்லியில் உள்ள லுட்யென்ஸ் அரசு தோட்டத்தில் டைப் - 8 பங்களா அல்லது அவர்களின் சொந்த ஊரில், 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.
    • பொருளாதார நிபுணர்களை பிரதமர் மோடி இன்று சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார்.

    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அடுத்த நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.

    இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி உள்ளிட்ட சூழல்களுக்கு மத்தியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    இந்நிலையில், மத்திய பட்ஜெட் தொடர்பான கருத்துகளைக் கேட்பதற்காக, புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார்.

    இந்தக் கூட்டத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி, நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

    • வங்காளதேசத்தின் வளர்ச்சிக்கும், இந்தியா-வங்கதேச உறவுகளுக்கும் கலிதா ஜியா ஆற்றிய முக்கியப் பங்களிப்புகள் எப்போதும் நினைவு கூரப்படும்.
    • 2015-ஆம் ஆண்டு டாக்காவில் அவரை நான் சந்தித்த இனிய சந்திப்பை நினைவுகூர்கிறேன்.

    புதுடெல்லி:

    வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

    வங்காளதேச முன்னாள் பிரதமரும், வங்காளதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா மரணம் அடைந்த செய்தியறிந்து ஆழ்ந்த வருத்தம டைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், வங்காளதேச மக்கள் அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இந்தத் துயர இழப்பைத் தாங்கிக்கொள்ள அவரது குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல இறைவன் மன வலிமையை வழங்க பிரார்த்திக்கிறேன். வங்காளதேசத்தின் முதல் பெண் பிரதமராக, வங்காளதேசத்தின் வளர்ச்சிக்கும், இந்தியா-வங்கதேச உறவுகளுக்கும் கலிதா ஜியா ஆற்றிய முக்கியப் பங்களிப்புகள் எப்போதும் நினைவு கூரப்படும்.

    2015-ஆம் ஆண்டு டாக்காவில் அவரை நான் சந்தித்த இனிய சந்திப்பை நினைவுகூர்கிறேன். அவரது தொலைநோக்குப் பார்வையும், மரபும் நமது கூட்டாண்மைக்குத் தொடர்ந்து வழிகாட்டும் என்று நம்புகிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

    இவ்வாறு மோடி தெரிவித்து உள்ளார்.

    • உன்னாவ் பாலியல் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கியது.
    • உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

    உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப்சிங் செங்கார் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    மேலும், பாதிக்கப்பட்ட பெண் உள்பட உறவினர்கள் காரில் சென்றபோது லாரி மோதி 2 பேர் பலியானார்கள். பாதிக்கப்பட்ட சிறுமி படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் குல்தீப்சிங் செங்காருக்கு டெல்லி கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.

    இதை எதிர்த்து குல்தீப் சிங் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட் கடந்த சில தினங்களுக்கு முன் அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்ததோடு, ஜாமீனும் வழங்கி உத்தரவிட்டது. இதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட் முன் மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே, டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது. இதற்காக சிறப்பு மனுவை தாக்கல் செய்யப்பட்டது. அதில், குல்தீப் சிங் செங்காரின் ஆயுள் தண்டனையை நிறுத்திய டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும் என முறையிடப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண், உச்சநீதிமன்றத்தை நாடுவோம். எங்களுக்கு அங்கு நீதி கிடைக்கும் எனத் தெரிவித்தார்.

    இந்த நிலையில், சி.பி.ஐ.யின் மேல் முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, உன்னாவ் தொகுதி முன்னாள் பாஜக எம்எல்ஏ செங்காரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பாதிக்கப்பட்ட பெண் வரவேற்றுள்ளார். மேலும், குற்றவாளியான முன்னாள் எம்.எல்.ஏ. செங்காருக்கு மரண தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

    உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது:-

    இந்த முடிவால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். உச்சநீதிமன்றத்தில் இருந்து நீதியை பெற்றுள்ளேன். தொடக்கத்தில் இருந்தேன நீதிக்காக நான் எனது குரலை உயர்த்தி வந்தேன். எந்த நீதிமன்றத்தின் மீதும் நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை. நான் அனைத்து நீதிமன்றங்களின் மீது நாம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால், உச்சநீதிமன்றம் எனக்கு நீதி வழங்கியுள்ளது. தொடர்ந்து அவ்வாறு செய்யும்.

    செங்காருக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் வரை நான் ஓயமாட்டேன். நான் தொடர்ந்து போராடுவேன். அப்போதுதான் எனக்கும் என் குடும்பத்திற்கும் நீதி கிடைக்கும். இன்றும் எங்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன.

    இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

    ×