என் மலர்
டெல்லி
- காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூனக கார்கே வீட்டில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- ராகுல்காந்தி உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமான தோல்வியை தழுவியது. 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. கடந்த தேர்தலில் 19 தொகுதிகளை கைப்பற்றியது. தற்போது 13 இடங்களை இழந்தது.
பீகாரில் ஏற்பட்ட தோல்வி குறித்து காங்கிரஸ் கட்சி இன்று அவசர ஆலோசனை நடத்தியது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூனக கார்கே வீட்டில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், ராகுல்காந்தி உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் பங்கேற்றனர். பீகாரில் ஏற்பட்ட மோசமான தோல்வி குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
- சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- 4 மருத்துவர்களும் இனிமேல் மருத்துவர்களாக செயல்பட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந்தேதி கார் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகத்தில் படித்த சிலர் மற்றும் அங்கு பணியாற்றியவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பல்கலைக்கழகம் புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
முன்னதாக ஜம்மு காஷ்மீர், அரியானா, உத்தரபிரதேச மாநிலங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 2,900 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக அல்பலா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக அரியானா மாநிலம் நூ மாவட்டத்தை சேர்ந்த மேலும் 2 டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்களில் ஒருவர் அல்பலா பல்கலைக்கழகத்தில் கடந்த 2-ந்தேதி பணி பயிற்சி காலத்தை நிறைவு செய்துள்ளார். மற்றொருவர் அந்த பல்கலைக்கழத்தின் முன்னாள் மாணவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையே டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மருத்துவர்கள் முசாபர் அகமது, அதீல் அகமது ராதர், முசாமில் ஷகீல், ஷஹீன் சையீத் ஆகியோரது பெயர்கள் தேசிய மருத்துவ பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. எனவே இந்த 4 மருத்துவர்களும் இனிமேல் மருத்துவர்களாக செயல்பட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
- தமிழ், மலையாளம் உள்ளிட்ட 24 மொழிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.
- இந்த விருதை சாகித்ய அகாடமியின் தலைவர் மாதவ் கவுசிக் வழங்கினார்.
புதுடெல்லி:
தமிழில் 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற சிறார் கதைகளுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சாகித்ய அகாடமி–யின் 2025-ம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது வழங்கும் விழா டெல்லி சாகித்ய அகாடமி அரங்கில் நேற்று நடைபெற்றது.
தமிழ், மலையாளம் உள்ளிட்ட 24 மொழிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. விருதை சாகித்ய அகாடமியின் தலைவர் மாதவ் கவுசிக் வழங்கினார்.
தமிழில் ''ஒற்றை சிறகு ஓவியா'' என்ற நாவலுக்காக பால புரஸ்கார் விருதை திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் பெற்றார்.
மேலும், தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையும் அவருக்கு வழங்கப்பட்டது.
- ஆரம்பம் முதலே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றது.
- தேசிய ஜனநாயகக் கூட்டணி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
பாட்னா:
பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. ஆரம்பம் முதலே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்தது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளைவிட தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைத்தது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி 200க்கும் அதிகமான தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 30க்கும் அதிகமான தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் அங்கு ஆட்சி அமைக்கவுள்ளது.
இந்நிலையில் பீகார் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது:
எங்கள் கூட்டணி மீது நம்பிக்கை வைத்த பீகாரில் உள்ள லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பீகாரில் இந்த முடிவு உண்மையிலேயே ஆச்சரியமளிக்கிறது. ஆரம்பத்திலிருந்தே நியாயமற்ற முறையில் நடந்த தேர்தலில் நாம் வெற்றி பெற முடியவில்லை.
அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம் இது.
காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணியும் இந்த முடிவை ஆழமாக மதிப்பாய்வு செய்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற தங்கள் முயற்சிகளை இன்னும் திறம்படச் செய்யும் என தெரிவித்துள்ளார் .
- பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.
- பீகார் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.
பீகாரில் 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 6 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக-ஜேடியுவின் என்டிஏ கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் - ஆர்ஜேடியின் மகபந்தன் கூட்டணி 17 இடங்களில் வென்றுள்ளது.
இதைத்தொடர்ந்து ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.
இந்த வெற்றியால் நாடு முழுவதும் பாஜக அலுவலகங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவகத்தில் தேர்தல் வெற்றி விழா நடைபெற்றது.
இதில் அமித் ஷா, ஜே.பி நட்டா, பிரதமர் மோடி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய மோடி, "நாம் மக்களின் சேவகர்கள். நாம் நம் கடின உழைப்பால் மக்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டே இருக்கிறோம். மேலும் மக்களின் இதயங்களை நாம் திருடி விட்டோம். அதனால்தான் ஒட்டுமொத்த பீகாரும் மீண்டும் ஒருமுறை என்டிஏ அரசை தேர்ந்தெடுத்துள்ளது.
நான் பீகார் தேர்தல்களில் காட்டு ராஜ்ஜியம் மற்றும் அராஜக ஆட்சி பற்றிப் பேசியபோது, ஆர்ஜேடி கட்சி எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் அது காங்கிரஸின் மனதை நோகடித்தது.
இன்று நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன், 'காட்டு ராஜ்ஜியம்' ஒருபோதும் பீகாருக்குத் திரும்பி வராது. பீகார் மக்கள் விக்சித் (வளர்ந்த) பீகாருக்காக வாக்களித்துள்ளனர்.
பீகாரில் சில கட்சிகள் சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் முஸ்லீம் - யாதவ் பார்முலா ஒன்றை உருவாக்கியிருந்தன. ஆனால், இன்றைய வெற்றி ஒரு புதிய நேர்மறையான மஹிளா(பெண்கள்) மற்றும் இளைஞர்கள் பார்முலாவை உறுதி செய்துள்ளது.
இன்று, பீகார் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.
இதில் ஒவ்வொரு மதத்தையும், ஒவ்வொரு சாதியையும் சேர்ந்த இளைஞர்கள் அடங்குவர். அவர்களுடைய ஆசைகள், அவர்களுடைய கனவுகள், காட்டு ராஜ்யம் செய்தவர்களின் பழைய வகுப்புவாத முஸ்லீம் - யாதவ் பார்முலாவை முழுவதுமாகத் தகர்த்துவிட்டன.
மேலும், ஜம்மு காஷ்மீரில் உள்ள நக்ரோட்டா மற்றும் ஒடிசாவில் உள்ள நுவாபடா பகுதி மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இடைத்தேர்தல்களில் பாஜகவின் வெற்றியை உறுதி செய்துள்ளனர்.
இது என்டிஏ-வுக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, இது ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி. இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கான வெற்றி இது. இந்தத் தேர்தல், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
நான் தேர்தல் ஆணையம், நமது பாதுகாப்புப் படைகள் மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய பீகார் வாக்காளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை நினைத்து நாடு பெருமை கொள்கிறது.
பீகார் தேர்தல்கள் மற்றொரு விஷயத்தையும் நிரூபித்துள்ளன. இப்போது, நாட்டின் வாக்காளர்கள், குறிப்பாக நமது இளம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு அமோக ஆதரவு அளித்துள்ளனர்.
இன்றைய வெற்றி ஒரு புதிய பயணத்தின் தொடக்கம். பீகார் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை, எங்கள் தோள்களில் இன்னும் பெரிய பொறுப்பைச் சுமத்தியுள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் பீகார் அதிவேகத்தில் முன்னேறும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
பீகாரில் புதிய தொழில்கள் நிறுவப்படும். பீகார் இளைஞர்கள் பீகாருக்குள்ளேயே வேலைவாய்ப்பைப் பெறுவதை உறுதிசெய்ய நாங்கள் அயராது உழைப்போம். பீகாருக்கு முதலீடுகள் வரும். இந்த முதலீடுகள் அதிக வேலைவாய்ப்புகளைக் கொண்டு வரும்.
பீகாரில் சுற்றுலாத் துறை விரிவடையும். பீகாரின் புதிய ஆற்றலை உலகம் காணும். நமது புனித யாத்திரை ஸ்தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் நமது வரலாற்று பாரம்பரியங்கள் புத்துயிர் பெறும்.
இன்று நான் நாடு முழுவதிலுமிருந்து மற்றும் உலகத்திலிருந்தும் வரும் முதலீட்டாளர்களுக்குச் சொல்கிறேன், பீகார் உங்களை வரவேற்கத் தயாராக உள்ளது.
நாடு முழுவதிலும் மற்றும் உலகத்திலும் வாழும் பீகாரைச் சேர்ந்த பிள்ளைகளிடம் நான் சொல்கிறேன், பீகாரில் முதலீடு செய்வதற்கு இதுவே மிகவும் பொருத்தமான நேரம்" என்று தெரிவித்துள்ளார்.
- நிதிஷ் குமார் கட்சி 101 இடங்களில் 92 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
- பாஜக 84 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேசிய ஜனநாயக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. தற்போது வெற்றிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது. இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, "பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வரலாற்று வெற்றி, நரேந்திர மோடி மற்றும் நிதிஷ் குமார் அரசாங்கங்களின் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் மீதான நம்பிக்கையின் முத்திரை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் நேருவின் நினைவிடத்தில் மரியாதை.
- கிரண் ரிஜ்ஜூ, கே.சி.வேணுகோபால் உள்பட பலர் மலர் தூவி மரியாதை.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு முக்கிய தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், நேருவின் நினைவிடத்தில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் நேருவின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அவர்களுடன், மாநிலங்களவை துணை தலைவர் கிரண் ரிஜ்ஜூ, கே.சி.வேணுகோபால் உள்பட பலர் நேருவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.
- குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர்.
- எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கடந்த திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர். இதில் காயமடைந்து, எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
சம்பவம் நடந்த அன்றைய இரவு டெல்லி முதல்வர் ரேகா குப்தா மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்தார்.
இதற்கிடையே பூட்டானில் இருந்து திரும்பியவுடன் நேற்று எல்என்ஜேபி மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர் மோடி, காயமடைந்தவர்களை சந்தித்தார். இதன் புகைப்படங்கள் வெளியாகின.
இந்நிலையில் ரேகா குப்தா சந்தித்தபோது காலில் கட்டு போடப்பட்டிருந்த நோயாளிக்கு நேற்று மோடி சந்திக்கும்போது கூடுதலாக கையில் கட்டுபோடப்பட்டிருந்தது.
இந்த புகைப்படங்களை பகிர்ந்த ஆம் ஆத்மி மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ் இரு புகைப்படங்களிலும் உள்ள வேற்றுமையை குறிப்பிட்டு இது அவசர அவசரமாக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் தான் என்று விமர்சித்துள்ளார்.
- இந்த விபத்தில் விமானத்தில் இருந்த மற்றும் வெளியே இருந்த 260 பேரும் உயிரிழந்தனர்.
- சர்வதேச நிபுணர்களைக் கொண்ட தொழில்நுட்பக் குழுவை நியமிக்கக் கோரியிருந்தார்.
ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணை யாரையும் பழிவாங்கும் முயற்சி அல்ல என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமான நிலையம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த மற்றும் வெளியே இருந்த 260 பேரும் உயிரிழந்தனர். ஒரு பயணி அதிசயமாக உயிர் தப்பினார்.
இந்த விபத்துக்கு விமானி மீது குற்றம்சாட்டப்படுவதாக விமான விபத்தில் இறந்த கேப்டன் சுமித் சபர்வாலின் தந்தை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
விசாரணையில் விமானிகள் மீது குற்றம் சாட்ட வாய்ப்புள்ளதாகக் குற்றம் சாட்டிய தந்தை, விசாரணை நடத்த சர்வதேச நிபுணர்களைக் கொண்ட தொழில்நுட்பக் குழுவை நியமிக்கக் கோரியிருந்தார்.
இது தொடர்பாக மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த நோட்டீஸுக்கு மத்திய அரசு தற்போது இவ்வாறு பதிலளித்துள்ளது.
இந்நிலையில் நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜெயமல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுபோன்ற விசாரணையின் நோக்கம், துயரத்திற்கான காரணத்தைக் கண்டறிவதும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தடுப்பதும் ஆகும் என்றும், தனிநபர்கள் மீது பழி சுமத்துவதோ அல்லது யார் தவறு செய்தார்கள் என்று சொல்வதோ அல்ல என்றும் கூறியது.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தரத்தின்படி விசாரணை நடத்தப்படுவதாகவும், விசாரணை யாரையும் பழிவாங்க முற்சிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
- அகமதாபாத் ஏர் விமான விபத்தில் மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
- விமானத்தின் தலைமை விமானியாக இருந்த சுமித் சபர்வாலும் விபத்தில் இறந்தார்.
கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
விமானத்தின் தலைமை விமானியாக இருந்த சுமித் சபர்வாலும் விபத்தில் இறந்தார். விமானி எரிபொருள் ஸ்விட்சை அணைத்ததே விபத்துக்கு காரணம் என அமெரிக்க ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கூறப்பட்டு வந்தது.
மேலும் இந்த ஆண்டு ஜூலை மாதம் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (ஏஏஐபி) வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இரண்டு என்ஜின்களுக்கும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.
இரண்டு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் விரைவாக "கட்ஆஃப்" நிலைக்குச் சென்றதாக அறிக்கை கூறியது. சுமார் 10 வினாடிகளுக்குப் பிறகு, சுவிட்சுகள் மீண்டும் இயக்கப்பட்டன, ஆனால் என்ஜின்கள் ஏற்கனவே அணைந்து விமானம் விபத்துக்குள்ளானது என்று அறிக்கை கூறியது.
இந்த அறிக்கையை எதிர்த்து சுமித் சபர்வால் தந்தை புஷ்கராஜ் சபர்வால் மற்றும் இந்திய விமானிகள் கூட்டமைப்பு (எஃப்ஐபி) இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.
அவர்களின் மனுக்களை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இன்றைய விசாரணையில், ஏஏஐபி அறிக்கையுடன் உடன்படவில்லை என்றும் விமானியை குறை சொல்ல முடியாது என்றும் தெரிவித்தது.
மேலும் இதுகுறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (டிஜிசிஏ) உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.
இந்நிலையில், அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி காரணம் அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில் இத்தகவல் தெரியவந்துள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.
- தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.
- போலீசாரும் தீயணைப்பு படையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்ததனர்.
டெல்லியில் கடந்த திங்கள்கிழமை மாலை செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே ஏற்பட்ட கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை போலீஸ் அவசர எண்ணுக்கு ஒரு பெண் அழைத்தார்.
குருகிராம் சென்று கொண்டிருந்தபோது மஹிபால்பூர் பகுதியில் உள்ள ராடிசன் ஹோட்டலுக்கு அருகில் வெடிப்பு சத்தம் கேட்டதாக அவர் கூறினார்.
போலீசாரும் தீயணைப்பு படையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்ததனர்.
இருப்பினும், அங்கு எந்த சந்தேகத்திற்கிடமான சம்பவமும் நடக்கவில்லை என்று தெரியவந்தது.
உள்ளூர்வாசிகள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் விசாரித்தபோது டெல்லி போக்குவரத்துக் கழக பேருந்து அந்த வழியாகச் சென்றபோது பின்புற டயர் வெடித்து பலத்த சத்தம் ஏற்பட்டது என்று தெரியவந்தது.
பின்னர் சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்து வெடிப்பு எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
- டெல்லி கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர்.
- காரின் டிரைவர் சீட்டில் உமர் அமர்ந்திருக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது.
டெல்லி செங்கோட்டை அருகே கார் ஒன்றில் குண்டு வெடித்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. சுமார் 3 மணி நேரமாக செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்டிருந்த ஹுண்டாய் ஐ20 கார் மாலை 6.48 மணியளவில் சிக்னல் அருகே மெதுவாக நகர்த்தப்பட்டு பின்னர் வெடித்து சிதறியது.
இதில், 13 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கார் வெடிக்கும் முன் அந்த காரின் டிரைவர் சீட்டில் உமர் அமர்ந்திருக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியானது.
அந்த காரை ஓட்டி வந்தது காஷ்மீர் புல்வாமாவை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
உமர் முகமது ஓர் பயங்கரவாதி என்பதும் அரியானாவில் வெடிகுண்டு வைத்திருந்ததாக கைதான மருத்துவர் ஷகீரின் கூட்டாளி என்பதும் அம்பலமானது.
இந்நிலையில், டெல்லி பயங்கரவாத குண்டுவெடிப்பு சம்பவத்தில், டெல்லி காவல்துறையினரால் உறுதிப்படுத்தப்பட்ட வைரலான சிசிடிவி காட்சிகளில், குற்றம் சாட்டப்பட்ட டாக்டர் உமர் உன் நபி செங்கோட்டைக்கு அருகிலுள்ள துர்க்மேன் கேட் மசூதியில் காணப்பட்டுள்ளார்.
இதன் சிசிடிவி காட்சியின் புகைப்படம் வெளியாகி உள்ளது.






