என் மலர்
நீங்கள் தேடியது "UAE"
- துபாய், ஓமன், பஹ்ரைன், மஸ்கட் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் தற்போது ரம்ஜான் நோன்பு தொடங்கியுள்ளது.
- இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் தொற்று சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1,100-க்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் சுமார் 10 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. நாள்தோறும் சுமார் 70 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் நாமக்கல் பகுதியில் இருந்து மட்டுமே முட்டை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மஸ்கட் போன்ற ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஒரு சில ஆப்பிரிக்க நாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் துபாய், ஓமன், பஹ்ரைன், மஸ்கட் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் தற்போது ரம்ஜான் நோன்பு தொடங்கியுள்ளது. முட்டையின் நுகர்வு கணிசமாக குறைந்துள்ளது. இதனால் அந்நாடுகளுக்கான முட்டை ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல்லை சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர் செந்தில் கூறுகையில், நாமக்கல்லில் இருந்து வளைகுடா நாடுகளான துபாய், கத்தார், ஓமன், பஹ்ரைன், சார்ஜா ஆகிய நாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி ஆகி வந்தது. தற்போது ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் அந்த நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி 70 சதவீதம் வரை குறைந்துள்ளது. 10 லட்சம் முட்டைகள் மட்டுமே தற்போது ஏற்றுமதி ஆகி வருகிறது என்றார்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் தொற்று சமீபத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இந்தியாவில் இருந்து கோழி இறைச்சி, முட்டை இறக்குமதி செய்ய சவுதி அரேபியா தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பின் ஆலென் ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் நேற்று 5 ஆயிரம் ரன்களை (175 ஆட்டம்) கடந்தார்.
- நியூசிலாந்து- அமீரகம் இடையிலான நேற்றைய ஆட்டத்தை 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்.
டி20 உலகக் கோப்பை தொடரின் நேற்றைய ஆட்டத்தில் யுஏஇ- நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த யுஏஇ 173 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் அரங்கேறிய சாதனைகளை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.
அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் டிம் செய்பெர்ட்-பின் ஆலென் கூட்டணி தொடக்க விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் திரட்டியது. இதன் மூலம் 20 ஓவர் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு விக்கெட்டுக்கு அதிக ரன் எடுத்த ஜோடி என்ற சாதனையை படைத்தது. இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர்-அலெக்ஸ் ஹாலெஸ் ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்ததே ஒரு விக்கெட்டுக்கு அதிகபட்சமாக இருந்தது.
இந்த ஆட்டத்தில் பின் ஆலென் 5 சிக்சரும், டிம் செய்பெர்ட் 3 சிக்சரும் பறக்க விட்டதுடன், சர்வதேச 20 ஓவர் போட்டியில் 100 சிக்சர்களை அடுத்தடுத்து எட்டினர். இருவரும் முறையே இந்த மைல்கல்லை தொட்ட 4-வது. 5-வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றனர்.
20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் ஒரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இது 7-வது முறையாகும். நியூசிலாந்து அணி முதல்முறையாக இத்தகைய வெற்றியை ருசித்தது.
நியூசிலாந்து அணி 174 ரன் இலக்கை விக்கெட் இழப்பின்றி அடைந்தது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் விக்கெட் இழப்பின்றி விரட்டிபிடிக்கப்பட்ட 2-வது அதிகபட்ச இலக்கு இதுவாகும். 2022-ம் ஆண்டு கராச்சியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 200 ரன் இலக்கை பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி எட்டியதே சாதனையாக நீடிக்கிறது.
பின் ஆலென் ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் நேற்று 5 ஆயிரம் ரன்களை (175 ஆட்டம்) கடந்தார். குறைந்த பந்துகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்த சாதனையாளராக திகழ்கிறார். அவர் இந்த ஸ்கோரை அடைவதற்கு 2,854 பந்துகள் தேவைப்பட்டது. இதற்கு முன்பு இந்தியாவின் அபிஷேக் ஷர்மா 2,898 பந்தில் எட்டியதே சாதனையாக இருந்தது.
நியூசிலாந்து- அமீரகம் இடையிலான நேற்றைய ஆட்டத்தை 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்.
- பிரிவினைவாதிகளுக்கு கப்பலில் ஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
- துறைமுகம் மீது சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தின.
ஏமனில் பல ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை நடைபெற்று வருகிறது. வடக்குப் பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தெற்குப் பகுதியை பெரும்பாலான உலக நாடுகள் அங்கீகரித்த அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தெற்குப் பகுதியில் பிரிவினைவாதிகள் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. இந்த படைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் உதவி செய்து வருகிறது. அதேவேளையில் அரசுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில்தான் ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற கப்பல் ஏமனில் உள்ள துறைமுகத்தில் காணப்பட்டதாக கூறி, சவுதி கூட்டுப்படைகள் கப்பல் மீது வான் தாக்குதல் நடத்தியது. இன்று காலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதம் குறித்து இரு தரப்பிலும் முழுமையான விவரங்களை குறிப்பிடவில்லை.
இந்த நிலையில், ஏமனில் உள்ள மீதமுள்ள படைகளை திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. ஆனால் எப்போது திரும்ப பெறப்படும் என தெரிவிக்கப்படவில்லை.
- UAE புல்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது.
- அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 30 பந்துகளில் 98 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அபுதாபி டி 10 லீக் தொடரில் இறுதிப்போட்டிக்கு ஆஸ்பின் ஸ்டாலியன்ஸ் மற்றும் பொல்லார்ட் தலைமையிலான UAE புல்ஸ் அணிகள் தகுதி பெற்றன.
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த UAE புல்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 30 பந்துகளில் 98 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனையடுத்து 151 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்பின் ஸ்டாலியன்ஸ் 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் மட்டுமே எடுத்து 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
30 பந்துகளில் 98 ரன்களை குவித்த டிம் டேவிட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
- சம்பத்தப்பட்ட நபர் மீது கடை உரிமையாளர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
- தனது தவறுக்காக இளைஞர் மன்னிப்புக் கோரினார்.
ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் இணையதளத்தில் நெகடிவ் ரிவ்யூ பதிவிட்ட இளைஞருக்கு இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
அபராதம் விதிக்கப்பட்ட நபரின் ரிவ்யூவால் தனது கடையின் விற்பனை பாதிப்பு அடைந்துள்ளதாக தொழிலதிபர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில், தனது தவறுக்காக இளைஞர் மன்னிப்புக் கோரிய நிலையிலும், கடை உரிமையாளருக்கு இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.
- இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
- எஞ்சிய பிஎஸ்எல் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்திருந்தது.
இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வந்தது. அதேபோல் பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வந்தது. இரண்டு தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்படுகிறது. அதன்பின் சூழ்நிலை குறித்து விரிவாக ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
அதேவேளையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது. போட்டியை நடத்த அனுமதி கேட்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் வேண்டுகோளை யுஏஇ நிராகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் போர்டுக்கு எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு எப்போதுமே ஆதரவாக இருந்து வருகிறது. அதேவேளையில் இந்தியாவில் நடைபெறக் கூடிய போட்டிகளுக்கு எதாவது சிக்கல் ஏற்பட்டால் இந்த போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றது. அதேபோல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் அங்கு நடத்தப்பட்டுள்ளது. இந்த வருடம் தொடக்கத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெற்றன. இதனால் இந்திய கிரிக்கெட் போர்டுக்கும் எமிட்ரேட்ஸ் கிரிக்கெட் போர்டுக்கும் இடையில் நல்ல பிணைப்பு இருந்து வருகிறது.
தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை முன்னிட்டு பாதுகாப்பு கவலையை கருத்தில் கொண்டு நிராகரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- வளைகுடா நட்பு நாடுகளுடன் அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதே இந்தப் பயணத்தின் நோக்கமாகும்.
- சவுதி அரேபியா மற்றும் கத்தாரில் அமெரிக்காவின் முக்கிய ராணுவத் தளங்கள் உள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவுக்கு செல்கிறார். 1 டிரில்லியன் டாலர்களை அமெரிக்க நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ளதாக சவுதி அரேபிய அரசு தெரிவித்து இருந்த நிலையில் பயண அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் நடந்த நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடும் விழாவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் சவுதி அரேபியாவுக்குச் செல்லும் திட்டத்தை தெரிவித்தார்.
ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டபடி மே மாதத்தில் இந்தப் பயணம் நடக்குமா என்று கேட்டபோது, அது அடுத்த மாதம் நடக்கலாம், ஒருவேளை சிறிது தாமதமாகலாம் என்று டிரம்ப் பதில் அளித்தார்.
பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு போன்ற துறைகளில் வளைகுடா நட்பு நாடுகளுடன் அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதே இந்தப் பயணத்தின் நோக்கமாகும்.
சவுதி அரேபியா மற்றும் கத்தாரில் அமெரிக்காவின் முக்கிய ராணுவத் தளங்கள் உள்ளன, மேலும் பிராந்திய ராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்காவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
- ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்க அதிபர், பிரதமர் உத்தரவிட்டுள்ளனர்.
- பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் 1,518 கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டார்.
புனித ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள 500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கருணை அடிப்படையில் விடுவிக்கப்படுகின்றனர்.
ரம்ஜானை ஒட்டி கருணை அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவிக்க அதிபர் ஷேக் முகமது பின் சயீத், பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் உத்தரவிட்டுள்ளனர்.
அதிபர் ஷேக் முகமது பின் சயீத் 1,295 கைதிகளை விடுவிக்கவும், பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் 1,518 கைதிகளை விடுவிக்கவும் உத்தரவிட்டார்.
கருணை அடிப்படையில் விடுவிக்கப்படுபவர்களில் இந்திய நாட்டினர் 500-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகள் பிப்ரவரி மாத இறுதியில் செயல்படுத்தப்பட்டன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் நீண்டகால பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, வருடாந்திர ரமலான் மன்னிப்புகள் நாட்டின் கருணை மற்றும் இரண்டாவது வாய்ப்புகளுக்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.
புனித மாதத்தின் மதிப்புகளுடன் இணைந்து, இந்த நடவடிக்கை மன்னிப்பு, இரக்கம் மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை வலியுறுத்துகிறது. கூடுதலாக, பெருமளவிலான விடுதலை சிறைவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவுகிறது.
- ஆசிய கோப்பை போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என ஜெய் ஷா கூறியிருந்தார்.
- ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டம் பஹ்ரைனில் நடந்தது.
பஹ்ரைன்:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை செப்டம்பர் அல்லது அக்டோபரில் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்பதில் பிசிசிஐ உறுதியாக உள்ளது.
இந்திய அணியால் பாகிஸ்தானில் விளையாட முடியாததால் ஆசிய கோப்பை போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளருமான ஜெய் ஷா அறிவித்து இருந்தார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டம் பஹ்ரைனில் நடந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதியின் வலியுறுத்தலின் பேரில் இந்த அவசர கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அதேநேரத்தில் பாகிஸ்தானில் இருந்து இந்தப் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்ற திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அங்குள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகியவற்றில் போட்டி நடைபெற வாய்ப்பு உள்ளது.
ஆசிய கோப்பை போட்டி குறித்த இறுதி முடிவு அடுத்த மாதம் எடுக்கப்படுகிறது. கடந்த ஆசிய கோப்பை போட்டியும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- நேபாளத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் பார்வையிட்டனர்.
- போட்டிக்கான டிக்கெட் கிடைக்காமல், மைதானத்திற்கு வெளியே இருந்த ரசிகர்கள் மரங்களில் தொங்கியபடி கண்டு களித்தனர்.
நேபாளம் - அரபு அமீரகம் இடையேயான உலகக்கோப்பை லீக் தொடர் போட்டியை காண ரசிகர்கள் கடல் அலை போல் திரண்டனர். நேபாள நகரம் கீர்த்திப்பூரில் நேற்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் ரசித்தனர்.

மேலும் போட்டிக்கான டிக்கெட் கிடைக்காமல், மைதானத்திற்கு வெளியே இருந்த ரசிகர்கள் மரங்களில் தொங்கியபடியும் பேருந்தின் மீது நின்றபடியும் போட்டியை கண்டு ரசித்தனர்.

இந்த கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் நேரில் பார்வையிட்ட புகைப்படம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

- கஸ்ர்-அல்-வதன் ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்பட்டது.
- ஐக்கிய அரபு எமிரேட்சின் ஒருநாள் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி இந்தியாவுக்கு புறப்படுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரின் அழைப்பின் பேரில் பிரதமர் ஒரு நாள் பயணமாக இன்று அபுதாபி சென்றுள்ளார்.
அங்கு பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தார்.
இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும், அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் சமீத் அல் ரஹ்யானை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதற்கிடையே, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர், பிரதமர் மோடிக்கு முழு சைவ உணவு விருந்து அளித்துள்ளார்.
கஸ்ர்-அல்-வதன் ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்பட்டது. விருந்தில் முதலில், கோதுமை மற்றும் பேரீச்சம்பழ சாலட் உடன் கரிம காய்கறிகளை தொடர்ந்து, மசாலா சாஸில் வறுக்கப்பட்ட காய்கறிகளை ஸ்டார்டர்களாக பறிமாறப்பட்டது.
மேலும் உணவு பட்டியலில் கறுப்புப் பருப்பும், கோதுமை, காலிஃபிளவர் மற்றும் கேரட் தந்தூரி ஆகிய உணவு வகைகளை முக்கிய உணவாக வழங்கப்பட்டன.
இனிப்புக்காக உள்ளூர் பருவகால பழங்கள் அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் அனைத்து உணவுகளும் சைவ உணவுகள் மற்றும் தாவர எண்ணெய்களால் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் பால் அல்லது முட்டை பொருட்கள் இல்லை என்றும் விருந்துக்கான மெனு கார்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சின் ஒருநாள் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி இந்தியாவுக்கு புறப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐக்கிய அரபு அமரீகத்தை சாராத முதல் வெற்றியாளர் நடராஜன்.
- கல்வி கற்கும் போது எனக்கு பலர் உதவி செய்திருக்கின்றனர்.
ஆம்பூரை சேர்ந்த ஐ.டி. ஊழியர் மகேஷ் குமார் நடராஜன் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜாக்பாட் வென்றுள்ளார். இதன் மூலம் அவருக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 5.5 லட்சம் தொகை வழங்கப்பட இருக்கிறது.
49 வயதான நடராஜன் எமிரேட்ஸ் டிராவின் ஃபாஸ்ட் 5 பம்ப்பர் பரிசை வென்று இருக்கிறார். இதில் அவருக்கு ஒவ்வொரு மாதமும் 25 ஆயிரம் DH (மாதம் ரூ. 5.6 லட்சம்) தொகை 25 ஆண்டுகளுக்கு பரிசு தொகையாக வழங்கப்பட இருக்கிறது. ஐக்கிய அரபு அமரீகத்தை சாராத முதல் வெற்றியாளர் நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
"வாழ்க்கையில் பல்வேறு சவால்களை சந்தித்து இருக்கிறேன். நான் கல்வி கற்கும் போது எனக்கு பலர் உதவி செய்திருக்கின்றனர். தற்போது சமூகத்திற்கு எனது பங்களிப்பை வழங்குவதற்கான நேரம் வந்துவிட்டது. சமூகத்தில் தேவையானோருக்கு என் சார்பில் நிச்சயம் உதவிகளை செய்வேன்," என்று பம்ப்பர் பரிசை வென்ற நடராஜன் தெரிவித்து உள்ளார்.
"இது மிகவும் நம்ப முடியாத தருணம். இது என் வாழ்நாளில் மிகவும் மறக்க முடியாத நாளாக மாறி இருக்கிறது. பரிசு தொகையை எனது மகள்களின் கல்வியில் முதலீடு செய்யவும், குடும்பத்தாரின் எதிர்காலத்தை வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.






