என் மலர்
நீங்கள் தேடியது "Website"
- கிளவுட்பிளேரில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இவை முடங்கியதாக தெரியவந்துள்ளது.
- இணையதளங்களை கண்காணிக்கும் Down Detector அறிக்கை வெளியிட்டுள்ளது.
எக்ஸ் சமூக வலைதளம்,சாட் ஜிடியின் ஓபன் ஏஐ உள்ளிட்டவை இன்று மாலை முதல் உலகமெங்கும் பல இடங்களில் முடங்கின.
இவை, இணைய உள்கட்டமைப்பு நிறுவனமான கிளவுட்பிளேர் சேவையின் மூலம் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கிளவுட்பிளேரில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இவை முடங்கியதாக தெரியவந்துள்ளது.
இணையதளங்களை கண்காணிக்கும் Down Detector அறிக்கையின்படி, இந்தியாவிலும் ஆயிரக்கணக்கானோர் எக்ஸ் முடக்கம் குறித்த புகார்களை தெரிவித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
உள்நுழைவு சிக்கல்கள் மற்றும் சர்வர் இணைப்பு தோல்விகள் போன்ற சிக்கல்களை எதிர்கொண்டதாக பயனர்கள் தெரிவித்தனர்.
இந்த கோளாறை உறுதி செய்துள்ள கிளவுட்பிளேர் நிறுவனம் சிக்கலை தீர்க்க முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளது.
- வங்கிக் கணக்குகள், சுகாதார தளங்கள் மற்றும் அரசாங்க இணையதளங்களுக்கான Login தகவல்களும் கசிந்தன.
- கடவுச்சொற்கள் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடி டார்க் வெப்பில் விற்கிறார்கள்.
பேஸ்புக், கூகிள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்ற முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் 18.4 கோடிக்கும் அதிகமான பயனர்பெயர்கள் (Username) மற்றும் கடவுச்சொற்கள் (password) ஆன்லைனில் கசிந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவற்றின் கோடிக்கணக்கான மின்னஞ்சல் முகவரிகள், கடவுச்சொற்கள் மற்றும் அங்கீகார URL களைக் கொண்ட பாதுகாப்பற்ற தளம் ஆன்லைனில் கண்டறியப்பட்டது.
இதுமட்டுமின்றி, வங்கிக் கணக்குகள், சுகாதார தளங்கள் மற்றும் அரசாங்க இணையதளங்களுக்கான Login தகவல்கள் உள்ளிட்ட முக்கியமான தரவுகளும் இந்தத் தளத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது சைபர் குற்றவாளிகளால் எளிதில் பயன்படுத்தக்கூடிய அபாயத்தை உருவாக்கி உள்ளது.
அபைபர் குற்றவாளிகள், வணிக ஆவணங்களைத் திருடவும், பெருநிறுவனங்களை உளவு பார்க்கவும், ரான்சம்வேர் தாக்குதல்களைத் நடத்தவும் இவற்றைப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இன்ஃபோஸ்டீலர் மால்வேர்:
இந்தத் தரவு இன்ஃபோஸ்டீலிங் மால்வேர் மூலம் திருடப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். லம்மா ஸ்டீலர் போன்ற மால்வேர்களை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் ஹேக் செய்யப்பட்ட வலைத்தளங்கள் மற்றும் அமைப்புகளிலிருந்து பயனர்பெயர்கள், கடவுச்சொற்கள் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடி டார்க் வெப்பில் விற்கிறார்கள்.
மேலும் இத்தகைய மால்வேர் தனிப்பட்ட சாதனங்களைப் பாதித்து, பாதுகாக்கப்பட்ட கடவுச்சொற்கள், மின்னஞ்சல்கள், குக்கீகளை திருடுகிறது
பயனர்களுக்கு எச்சரிக்கை
பேஸ்புக், கூகிள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், நெட்ஃபிக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் ஒரே பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்துபவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சைபர் குற்றவாளிகள் கணக்குகளை அணுகினால், அவர்கள் ஆன்லைன் மோசடி, அடையாள திருட்டு மற்றும் நிதி மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படலாம்.
எனவே தரவு மீறல்களிலிருந்து முற்றிலும் பாதுகாப்பாக இருக்க வழி இல்லை என்றாலும், வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்தவும் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இந்தத் தரவு கசிவு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களும் இந்தப் பிரச்சனையை ஆராய்ந்து வருகின்றனர்.
- சம்பத்தப்பட்ட நபர் மீது கடை உரிமையாளர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
- தனது தவறுக்காக இளைஞர் மன்னிப்புக் கோரினார்.
ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் இணையதளத்தில் நெகடிவ் ரிவ்யூ பதிவிட்ட இளைஞருக்கு இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
அபராதம் விதிக்கப்பட்ட நபரின் ரிவ்யூவால் தனது கடையின் விற்பனை பாதிப்பு அடைந்துள்ளதாக தொழிலதிபர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில், தனது தவறுக்காக இளைஞர் மன்னிப்புக் கோரிய நிலையிலும், கடை உரிமையாளருக்கு இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.
- "Fantastic Tea Club Pakistan Cyber Force" என்ற குறிப்பு இடம்பெற்றது.
- ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்த குறிப்புகள் இடம்பெற்றன.
ராஜஸ்தான் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் பாகிஸ்தான் ஹேக்கர்களால் இன்று ஹேக் செய்யப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு தாக்குதல் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் படைகளிடம் பிடிபட்டு, சமரசத்துக்குப் பின் பின் நாடு திரும்பிய IAF அதிகாரி அபிநந்தன் தொடர்புடைய கேலிக் குறிப்பு இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. முகப்புப் பக்கத்தில் "Fantastic Tea Club Pakistan Cyber Force" என்ற குறிப்பு இடம்பெற்றது.
மேலும் ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்த ஆட்சேபனைக்குரிய குறிப்புகளையும் ஹேக்கர்கள் இணையதளத்தின் முதல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
"பஹல்காம் தாக்குதல் ஒரு பயங்கரவாத தாக்குதல் அல்ல என்றும், மக்களை நம்பிக்கையின் அடிப்படையில் பிரித்து போரைத் தூண்டும் இந்திய அரசின் நடவடிக்கை" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வலைத்தளம் தாற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் பேசுகையில், "சைபர் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளோம், மேலும் இந்தத் தாக்குதலுக்குக் காரணமான குழுவைக் கண்டுபிடித்து தகவல் சேதத்தின் அளவைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
இதுவரை எந்த முக்கியமான தரவு கசிவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், முழு அமைப்பும் முழுமையாகச் சரிபார்க்கப்படுகிறது என்று திலாவர் மேலும் கூறினார்.
- போட்டித்தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டம்
- மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.
தஞ்சாவூர்:
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு குடிமைப் பணிகளுக்கு போட்டித்தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை தஞ்சாவூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணைய தளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பூர்த்தி செய்து தஞ்சாவூர் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 873/4 அறிஞர் அண்ணாசாலை, கீழவாசல் தஞ்சாவூர் - 613001 என்ற முகவரியில் இயங்கும் தஞ்சாவூர் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தகவலை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
- சில சமூக விரோதிகள் இணையதளம் உருவாக்கி உள்ளனர்.
- இந்த இணையதளத்தில் பணம் செலுத்த வேண்டாம்.
புதுடெல்லி :
சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்தின் பெயரில் போலி இணையதளம் உருவாக்கி நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உஷாராக இருக்குமாறு மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
இது தொடர்பாக சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'சி.பி.எஸ்.இ. அதிகாரபூர்வ இணையதளமான www.cbse.gov.in-ஐ போல https://cbsegovt.com என்ற பெயரில் சில சமூக விரோதிகள் இணையதளம் உருவாக்கி உள்ளனர். சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்குவதற்கு பணம் டெபாசிட் செய்யுமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு செய்திகளை அனுப்பி அப்பட்டமாக ஏமாற்றும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன' என கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில் மாணவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்குமாறும், மேற்படி இணையதளத்தில் பணம் செலுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ள சி.பி.எஸ்.இ., ஹால் டிக்கெட் பதிவிறக்கத்துக்கு நேரடியாக ஒருபோதும் பணம் கேட்பதில்லை என்றும் விளக்கம் அளித்து உள்ளது.
- உலகிலேயே இணையதளத்தை பயன்படுத்துவதில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது.
- பாஸ்வேர்டுகளை 41 சதவீதம் பேர் மட்டுமே பாதுகாப்பாக பயன்படுத்துகிறார்கள்.
இணையதளம் இரண்டு முகங்களை கொண்டது. நமக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் உடனடியாக தருவது ஒரு முகம்.
ஆபாசம், ஹேக்கிங் என்று வக்கிரங்களை காட்டுவது மற்றொரு முகம். இந்தியாவில் இணையதளத்தை பயன்படுத்துவோரில் 48 சதவீதம் பேர் சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவில் 11.3 கோடி மக்கள் சராசரியாக ரூ.15 ஆயிரத்்துக்கும் அதிகமான தொகையை இணையதள திருடர்களிடம் இழக்கிறார்கள், என்று ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இது சர்வதேச அளவில் சராசரியாக ரூ.23,878-ஆக உள்ளது. அப்பாடா நம்மைவிட மற்றவர்கள் கூடுதலாக இழக்கிறார்கள் என்று ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.பொதுவாக சைபர் கிரைம் தொடர்பான குற்றங்களில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் இணையதளத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்போது, பாஸ்வேர்டு உள்பட கணக்கு விவரங்களை திருடுவது, பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுப்பது, ஆபாச படங்களை வெளியிடுவது போன்றவைதான் தற்போது பெருகி வருகின்றன. 54 சதவீதம் பேர் தங்களுக்கு தெரியாமலேயே கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தகவல்கள் ஆன்லைனில் திருடப்படுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.
40 சதவீதத்தினர் மட்டுமே சைபர் கிரைம் குற்றம் நடந்தால் என்ன செய்வது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். 60 சதவீதத்தினர் ஆன்லைன் குற்றங்கள் குறித்த அச்சத்தில் உள்ளனர்.
உலகிலேயே இணையதளத்தை பயன்படுத்துவதில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்ல வேண்டிய இணையதளம், தற்போது பாதை மாறி அழைத்துச் செல்கிறது என்பதைத்தான் தற்போது வெளியாகியுள்ள அறிக்கை காட்டுகிறது. பாஸ்வேர்டுகளை பயன்படுத்தும் போது 41 சதவீதம் பேர் மட்டுமே சரியாக, பாதுகாப்பாக பயன்படுத்துகிறார்கள். இப்படி அடிப்படை பாதுகாப்புகளையே சரியாக செய்யாததன் விளைவுதான் இந்த இணையதள குற்றங்கள் அதிகமானதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. பெரும்பாலானோர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
இணையதள பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. எதற்காக சுய விவரங்களை கேட்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் விறுவிறுவென நம்மை பற்றிய அனைத்து தகவல்களையும் கொடுத்து விடுவதும் நடக்கிறது.. இந்த தகவல்கள் யாரோ ஒரு கும்பலால் திருடப்படுகிறது என்பது நம்மில் பல பேருக்கு தெரிவதில்லை. இதனால் பணத்தை இழக்க நேருகிறது. எனவே நமது தகவல்களை குறைந்தபட்சம் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தாலே இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து எளிதாக விடுபடலாம். எனவே சுயவிவரங்களை பகிரும்போது அதிக கவனம் தேவை.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க இனி தாசில்தார் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம். இடைத்தரகர்களையும் நம்பி ஏமாற வேண்டாம். பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து, இணையதளம் மூலமாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம். உட்பிரிவு மற்றும் மனுவிற்கான கட்டணம் ஆகியவற்றை இணையதளம் மூலமாக செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தின் நிலையை அறிய https://eservices.tn.gov.in/eservicesnew/login/Appstatus.html என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து, பட்டா மாறுதல் மனுவின் நிலையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். பட்டா மாறுதலின் நடவடிக்கையின்போது ஒவ்வொரு நிலையையும் மனுதாரருக்கு குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கப்படும்.
பட்டா மாறுதல் மனு அங்கீகரிக்கப்பட்ட பின்னர், பொது மக்கள் தங்களது பட்டா மாறுதல் உத்தரவின் நகல், பட்டா, சிட்டா, புலப்பம், அபதிவேடு ஆகியவற்றை https://eservices.tn.gov.in/ என்ற இணையதளம் மூலமாக கட்டணமில்லாமல் பார்வையிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் கூறியுள்ளார்.
- கிராமங்களில் இணையதள வசதி தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
- பாதாள சாக்கடை வழிந்தோடுவதை தடுக்க விரைவில் ரூ.99 கோடி செலவில் பணிகள் தொடங்கப்படும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம், குத்தாலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் செம்பனார்கோவிலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஏ.பி. மகாபாரதி தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மயிலாடுதுறை மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம் ஆகும்.
விவசாயிகளுக்கு அரசின் திட்டங்களை தெரியப்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பொதுமக்களுக்கு குடிநீர் தங்கு தடையின்றி வழங்க வேண்டும். தேவைப்படும் இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும்.
வருகிற ஒரு ஆண்டுக்குள் அனைத்து ஊராட்சிகளிலும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
அப்போது தான் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக உருவாக்கப்–படும்.
குறிப்பாக சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சாரம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தர வேண்டும்.
கிராமங்களில் இணையதள வசதி தடை–யின்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
குப்பைகள் இல்லா கிராமத்தை உருவாக்க வேண்டும்.
மயிலாடு–துறையில் நீண்ட காலமாக பாதாள சாக்கடை வழிந்–தோடுவதை தடுக்க விரைவில் ரூ.99 கோடி செலவில் பணிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களது ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள குறைபாடுகள் குறித்து கலெக்டரிடம் தெரிவித்தனர்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா, உதவி இயக்குனர் மஞ்சுளா மற்றும் சீர்காழி, கொள்ளிடம், குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- 2 வயதுக்கு மேற்பட்ட நாய்கள் என மூன்று பிரிவுகளாக பிரிக்கபடும்.
- பல்வேறு வகையான நாய்கள் உள்ளன, அவற்றை தெரிந்து வைத்துக்கொள்ளவே இந்த கண்காட்சி.
தஞ்சாவூர்:
தஞ்சை மாதாக்கோட்டை மிருகவதை தடுப்பு சங்க அலுவலகத்தில் (எஸ்.பி.சி.ஏ) இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது ;-
மிருகவதை தடுப்பு சங்கத்துக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டு மிருகவதை தொடர்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் முறையாக நாய்கள் கண்காட்சி நடத்த வேண்டும் என்று எஸ்.பி.சி.ஏ உறுப்பினர்களால் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) எஸ்.பி.சி.ஏ. வளாகத்தில் நாய்கள் கண்காட்சி நடைபெற உள்ளது.
காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறும்.
பல்வேறு தரப்பினர், நிறுவனங்கள் கண்காட்சி நடைபெற உறுதுணையாக இருந்தனர்.
அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
கண்காட்சியில் 3 பிரிவுகளாக போட்டி நடைபெறும்.
அதாவது 1 வயது வரை உள்ள நாய்கள் , 1 முதல் 2 வயது வரையுள்ள நாய்கள், 2 வயதுக்கு மேற்பட்ட நாய்கள் என மூன்று பிரிவுகளாக பிரிக்கபடும்.
இதில் நாய்களின் அணிவகுப்பு, பராமரிப்பு முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெளிவுப்படுத்துவார்கள்.
செல்ல பிராணிகள் மீது குழந்தைகளுக்கு ஈர்ப்பு வர வேண்டும்.
மிருகம் வதைக்கபடுவதோ அல்லது கடினமான சூழ்நிலைக்கு உட்படுத்த படுவதோ செய்யக்கூடாது என்ற எண்ணம் சிறு வயதிலே வர வேண்டும்.
பல்வேறு வகையான நாய்கள் உள்ளன.
அவற்றை தெரிந்து வைத்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக நாய்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது.
ஏராளமான நாய்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதில் கலந்த கொள்ள நாய்களின் உரிமையாளர்கள் என்ற இணையதளத்திலோ அல்லது 7418364555 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.
வருகிற 10-ந் தேதி மாலைக்குள் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு கட்டணம் ரூ.250 மட்டுமே ஆகும். இதில் நாய்களுக்கு தடுப்பூசி, உணவு ஆகியவையும் அடங்கும்.
கண்காட்சியை பார்த்து ரசிக்க பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம். அனைவரும் கண்காட்சியை பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 11ஆயிரம் காலியான அரசு பணியிடங்கள் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது.
- தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும்.
கடலூர்:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவினைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பணியாளர் அரசு தேர்வு ஆணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கு 2023-ம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டி அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பல்வேறு தேர்வுகளுக்கான 11ஆயிரம் காலியான அரசு பணியிடங்கள் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்வில் ஆதிதிராவிடர் , பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ மூலமாக இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் 18 முதல் 32 வயது வரை உள்ள பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு நடைபெறும் முறை அனைத்தும் இணையதளம் வழியாக நடைபெறும்.
இப்போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிகேற்ப ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை பணியமர்த்தப்படுவார்கள். இத்தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் இப்பயிற்சிக்கான கட்டணம் முழுவதும் தாட்கோவால் வழங்கப்படும்.இத்திட்டம் தொடர்பான விபரங்கள் மற்றும் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள தகுதியான அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ- மாணவிகள் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
- அலுவலக விவரங்கள் சரியாக உள்ளது.
- திருவண்ணாமலை நகராட்சியின் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
பல்லடம் :
பல்லடம் நகராட்சி இணையதளத்தில், வேறு நகராட்சி விவரங்கள் உள்ளதால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
பல்லடம் நகராட்சி குறித்த விவரங்களை காண இணையதளத்தில் சென்றால், அலுவலக விவரங்கள் சரியாக உள்ளது. ஆனால், நகராட்சியின் எல்லை, வார்டு விவரம், மக்கள் தொகை, உள்ளிட்ட விபரங்களை பார்வையிட்டால் திருவண்ணாமலை நகராட்சியின் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தற்போது நகராட்சி சொத்து வரி, உள்ளிட்டவற்றை இணையதளம் மூலம் செலுத்தலாம் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் இணையதளத்திற்கு சென்றால் உரிய விவரங்கள் இல்லை. எனவே நகராட்சி இணையதளத்தை முறையாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, இணையதளத்தில் ஏற்பட்ட கோளாறால், விவரங்கள் மாறி, மாறி வந்துள்ளது. பொதுமக்களின் புகாரையடுத்து. தற்போது இணையதளம் சரி செய்யப்ப ட்டுள்ளது இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






