search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "website"

    • கைலாசா நாடு பற்றிய பரபரப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை.
    • நாட்டுக்கென தனி பாஸ்போர்ட், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றை அறிவித்தார்.

    புதுடெல்லி:

    சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் கைலாசா நாடு பற்றிய பரபரப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லை.

    கடந்த 2019-ம் ஆண்டு நித்யானந்தா இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாடு சென்ற நிலையில் அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

    மேலும் அந்த நாட்டுக்கென தனி பாஸ்போர்ட், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றை அறிவித்தார். அதைத்தொடர்ந்து கைலாசா சார்பில் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறி, இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலை தளங்களில் அவரது சிஷ்யைகள் பதிவிட்டனர்.

    அதோடு, கைலாசா நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்துள்ளதாக கூறியிருந்தனர்.

    இதைத்தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் கைலாசா பெண் பிரதிநிதிகள் பங்கேற்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கைலாசா சார்பில் பேசிய பெண் பிரதிநிதிகளின் பேச்சு நீக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை சார்பில் அறிவிக்கப்பட்டது. இல்லாத ஒரு நாட்டின் பெயரில் நித்யானந்தாவும், அவரது சிஷ்யைகளும் ஒரு பிம்பத்தை உருவாக்கி வருவதாக சமூக வலைதளங்களில் ஏராளமானோர் குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்நிலையில் கைலாசா இருக்கும் இடத்தை வருகிற 21-ந்தேதி அறிவிக்க போவதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    அதில், கைலாசா திறக்கப்பட்டுள்ளது. வருகிற 21-ந்தேதி குருபூர்ணிமா நன்னாளில் கைலாசா இருக்கும் இடம் அறிவிக்கப்படும். உங்களை அன்போடு வரவேற்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

    மேலும் கைலாசா வாசியாக இப்போதே பதிவு செய்யுங்கள் என்று ஒரு ஆன்லைன் லிங்கும் குறிப்பிட்டுள்ளனர்.

    இதன் மூலம் கைலாசா எங்கே உள்ளது என்ற கேள்விக்கு 21-ந்தேதி விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மதிப்பு பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு தயார் செய்யப்பட்டன.
    • கிராமப்புறங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

    சென்னை:

    தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி நிர்ணயம் செய்த வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் முத்திரை கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை, ஆவண பதிவுகளுக்கு பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கிறது.

    இந்த வழிகாட்டி மதிப்பில் பல்வேறு முரண்கள் இருப்பதாக புகார்கள் சொல்லப்பட்டன. எனவே அதனை சீர் செய்யும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையிலான துணை குழுக்களை தமிழக அரசு அமைத்தது.

    இந்த குழுவினர், தங்கள் மாவட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்புகளை ஆய்வு செய்து அதில் உள்ள குறைகளை சீர் செய்தனர். அதாவது ஒரே தெருவில் வெவ்வேறு வழிகாட்டி மதிப்புகள் இருந்தால், அதனை ஒன்றாக மாற்றுவது போன்ற பணிகளை மேற்கொண்டனர். ஆனால் புதிதாக மதிப்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

    இந்த திருத்தப்பட்ட வழிகாட்டி மதிப்பின் வரைவு பட்டியல் கடந்த மாதம் (ஜூன்) 10-ம் தேதி பத்திரப்பதிவு துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதன் மீது பொதுமக்கள் கருத்துக்கள் சொல்ல 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டன.

    பின்னர் பொதுமக்களிடம் இருந்து வரப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை கலெக்டர்கள் தலைமையிலான துணைக்குழுக்கள் ஆய்வு செய்தன. அதில் தகுதியானவை ஏற்றுக்கொள்ளப்பட்டு வரைவு வழிகாட்டி மதிப்பு பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு தயார் செய்யப்பட்டன.

    இந்த திருத்தம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்பிற்கு பத்திரப்பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கடந்த 29-ம் தேதி ஒப்புதல் அளித்தார்.

    இந்த புதிய வழிகாட்டி மதிப்பை பொறுத்தவரை கிராமப்புறங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால், நகர்ப்புறங்களில் சில இடங்களில் மட்டும் 10 சதவீதம் அதிகரித்தும், குறைத்தும் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் புதிய வழிகாட்டி மதிப்பினை இன்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைப்படுத்த பத்திரப்பதிவு துறை முடிவு செய்தது. அதற்காக பத்திரப்பதிவு துறையின் இணையதளத்தில் நேற்று இரவு புதிய வழிகாட்டி மதிப்புகள் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்தன. அதன் காரணமாக அந்த இணையதளம் https://tnreginet.gov.in சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.

    இன்று முதல் பத்திரப்பதிவு செய்பவர்கள் புதிய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஏற்கனவே ஆவணங்களை பதிவு செய்ய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து இருந்தால், அவர்கள் தற்போதைய மதிப்பின் அடிப்படையில் கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டிய நிலை ஏற்படும். வழிகாட்டி மதிப்பு குறைந்து இருந்தால், அந்த தொகை திருப்பி அளிக்கப்படும்.

    • அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளியிடப்படுகிறது.
    • இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணி புரியும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2023-24-ம் ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு விவரங்கள் தொகுக்கப்பட்டு 1.7.2024 அன்று காலை 10 மணிக்கு அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளியிடப்படுகிறது.

    cps.tn.gov.in/public என்ற இணையதள முகவரியில் சந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக வலைத்தளங்கள் மூலம் கருத்துக்களும் செய்திகளும் வேகமாக உடனுக்குடன் அனைவருக்கும் சென்று சேர்ந்து விடுகிறது.
    • இது ஜனநாயகத்துக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பத்திரிகை சுதந்திரம், மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் இணையதள முடக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

    நாட்டில் உள்ள பகுதிகளில் திடீர் கிளர்ச்சிகள், கலவரங்கள்,வன்முறைகள் ஏற்பட்டால் அது மேலும் வலுவடையாமல் இருக்கவும், மக்களுக்கு மத்தியில் அதைப் பற்றிய செய்திகள் பரவாமல் இருக்கவும் அந்த பகுதியில் இணையதள சேவை முடக்கப்படுகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக வலைத்தளங்கள் மூலம் கருத்துக்களும் செய்திகளும் வேகமாக உடனுக்குடன் அனைவருக்கும் சென்று சேர்ந்து விடுகிறது.

    அவசர நிலை ஏற்படும் சமயங்களில் இணையதளம் முடக்கப்படுவதே அரசுகளின் முதல் நடவைடிக்கையாக இருக்கும். இது ஜனநாயகத்துக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பத்திரிகை சுதந்திரம், மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் இணையதள முடக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த நிலையில் உலகம் முழுவதும் சர்வதேச அளவில் நடந்த ஆய்வின் படி தொடர்ந்து 6 வது வருடமாக 2023 ஆம் ஆண்டு இணையதள முடக்கம் அதிகம் ஏற்பட்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அறிக்கையின்படி, இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் மட்டும் 116 முறை இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது.

     

    சுமார் 8 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்ற மணிப்பூர் இனக் கலவரத்தின் போது அதிகப்படியாக 47 முறை இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்து ஜம்மு காஸ்மிரில் 17 முறையும், பிகாரில் 12 முறையும், ஹரியானாவில் 11 முறையும், மேற்கு வங்கத்தில் 6 முறையும், மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் 5 முறையும் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது.

    உலகளவில் இந்த பட்டியலில் ராணுவ ஆட்சி நடக்கும் மியான்மர் 37 முறை இணைய முடக்கத்துடன் 2 ஆவது இடத்தில உள்ளது. அதைத்தொடர்ந்து, ஈரானில் 34 முறையும் , பாலஸ்தீனத்தில் 16 முறையும், உக்ரைனில் 8 முறையும், பாகிஸ்தானில் 7 முறையும் இணையத்தளம் முடக்கப்பட்டு அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.

    • இ-பாஸ் பெறுவதற்கு என்று பிரத்யேகமாக https://epass.tnega.org என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • இ-பாஸ் நடைமுறை காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். குறிப்பாக கோடை சீசன்களான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

    ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பசுமையான சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதையடுத்து தமிழக அரசு சார்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டது. இ-பாஸ் பெறுவதற்கு என்று பிரத்யேகமாக https://epass.tnega.org என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    மேலும் இந்த இ-பாஸானது 3 வகை அடையாளக் கோடுகளுடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி உள்ளூர் பொதுமக்களுக்கு பச்சை நிற இ-பாசும், வேளாண் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், அடிப்படை தேவை, சரக்கு வாகனங்களுக்கு நீல நிற இ-பாசும், வர்த்தகம் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஊதா நிறத்திலும் இ-பாஸ் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அரசு பஸ்களில் வருபவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும், அரசு பஸ்களில் வருபவர்களின் விவரங்கள் போக்குவரத்து துறை மூலம் பெறப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது.

    நேற்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த இணையதளத்தில் சென்று இ-பாசுக்கு விண்ணப்பித்தனர். அதில், சுற்றுலா பயணிகள் எங்கிருந்து வருகிறீர்கள். எத்தனை நாள் இங்கு தங்க உள்ளீர்கள் என பல்வேறு விவரங்கள் அதில் கேட்கப்பட்டிருந்தது. அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை பூர்த்தி செய்து சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்றுக்கொண்டனர். விண்ணப்பித்த உடனே எளிதாக இ-பாஸ் கிடைத்ததால் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நேற்று ஒரே நாளில் நீலகிரி வருவதற்கு 21,446 வாகனங்கள் இ-பாஸ் பெற்றுள்ளன. இதில் 2 லட்சத்து 78 ஆயிரம் பேர் நீலகிரிக்கு வருகை தர உள்ளனர்.

    இன்று காலை முதல் நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. நீலகிரிக்கு வந்த அனைத்து வாகனங்களுமே தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

    மாவட்ட எல்லைகளில் உள்ள கல்லார், நாடுகாணி, தொரப்பள்ளி, சோலாடி, பாட்டவயல் உள்பட 16-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்கள் சோதனை சாவடி வழியாக ஊட்டிக்கு வரும் தனியார் பஸ்கள், வேன்கள், கார்கள், சரக்கு வாகனங்கள், லாரிகள் உள்பட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி அவர்கள் இ-பாஸ் பெற்றுள்ளனரா? என்பதை கண்காணிக்கின்றனர்.

    அவர்களிடம் இ-பாஸ் இருக்கிறதா என்று கேட்டு விசாரிக்கும் போலீசார் இ-பாஸ் இருந்தால் மட்டுமே நீலகிரிக்குள் அனுமதித்து வருகிறார்கள். சுற்றுலா பயணிகள், வர்த்தக வாகனங்கள் தங்களுக்கான ஊதா நிறத்திலான இ-பாசையும், உள்ளூர் வாகனங்கள் தங்களுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள பச்சை நிற இ-பாசை காண்பித்து சென்று வருகின்றனர்.

    அவர்கள் நீலகிரிக்குள் சென்றதும் அங்குள்ள ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், படகு இல்லம் உள்ளிட்டவற்றை கண்டு ரசிக்கின்றனர். இதனால் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்படுகிறது.

    நேற்று இரவு முதல் மழை பெய்ததால் தற்போது ஊட்டியில் குளு,குளு காலநிலை நிலவி வருகிறது. இதனை அங்கு வந்திருக்கும் சுற்றுலா பயணிகள் ரசித்து அனுபவித்து வருகிறார்கள்.

    இந்த இ-பாஸ் நடைமுறை காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. வாகனங்கள் உடனுக்குடன் சென்றதால் வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்தனர். இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால் உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • எக்ஸ் தளத்தில் ஒருவர் புத்தகத்தில் உள்ள பாடத்தினை புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
    • இந்த யுகத்தில் இதை ஏற்றுக்கொண்டு பாடத்திட்டத்தில் இது போன்ற தலைப்புகளை சேர்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

    புதுடெல்லி:

    மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. 9-ம் வகுப்பு பாட புத்தகத்தில் டேட்டிங் மற்றும் ரிலேசன்ஷிப் குறித்த பாடங்கள் இடம்பெற்றிருப்பது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதில் டேட்டிங் மற்றும் உறவுகள், பேய், கேட்பிஷிங், சைபர்புல்லிங் போன்ற அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகம் சிறந்த நட்பு போன்ற தலைப்புகளை உள்ளடக்கி உள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒருவர் புத்தகத்தில் உள்ள பாடத்தினை புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

    அதில், இளம் வயது என்பது உணர்ச்சிகளால் நம் மனதையும், இதயத்தையும் அடிக்கடி குழப்பும் பருவம். இப்படியான பருவத்தில் மாணவர்களுக்கு வெவ்வேறு டேட்டிங் விதிமுறைகள் குறித்த வழிகாட்டுதலை வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது என கூறி உள்ளார்.

    மற்றொரு பயனர், காலம் மாறிக்கொண்டிருக்கிறது, இப்போதெல்லாம் மக்கள் மிக இளம் வயதில் இருந்தே டேட்டிங் செய்ய தொடங்குகிறார்கள். இந்த யுகத்தில் இதை ஏற்றுக்கொண்டு பாடத்திட்டத்தில் இது போன்ற தலைப்புகளை சேர்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

    இந்த சிக்கலான இயக்கவியலை புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு உதவுவது நம் நாட்களில் டேட்டிங் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை விட மிகவும் சிறந்தது என பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், இது நேர்மையாக பெரியது. இந்திய கல்வி முறையின் உண்மையான வளர்ச்சியை அனைவரும் பார்க்க விரும்புகிறார்கள் என பதிவிட்டுள்ளார்.

    இதுபோன்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், புத்தகத்தில் இடம்பெற்ற இந்த தலைப்பு விவாத பொருளாக மாறி உள்ளது.

    • மாணவ, மாணிகளுக்கு கட்டணமின்றி நகல்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    சென்னை மாவட்டத்தில், மிச்சாங் புயல், மழை மற்றும் வெள்ளம் காரணமாக, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, வாரிசுச் சான்று, பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கென சிறப்பு முகாம்கள் நடத்தி, பொதுமக்களுக்கு கட்டணமின்றி அதனை வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களில் ( 1 முதல் 15 வரை) உள்ள 46 பகுதி அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

    இதைதொடர்ந்து, தென் மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மாணவர்களின் சான்றிதழ்கள் உள்பட முக்கிய ஆவணங்களும் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.

    இதை கருத்தில் கொண்டு, கனமழையால் ஏற்பட்ட பாதிப்பில் கல்லூரி சான்றிதழ்களை இழந்த 4 மாவட்ட மாணவ, மாணிகளுக்கு கட்டணமின்றி நகல்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    நகல்களைப் பெற உயர்கல்வித் துறை உருவாக்கிய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

    அதன்படி, தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி மாவட்ட மாணவ, மாணவிகள் www.mycertificates.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

    • ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் இன்று காலை 11 மணியில் இருந்து செயல்படவில்லை.
    • தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் செயல்படாததால் முன்பதிவு செய்யாமல் சிரமப்பட்டனர்.

    சென்னை:

    ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் இன்று காலை 11 மணியில் இருந்து செயல்படவில்லை. சாதாரண முன்பதிவு, தட்கல் முன் பதிவு செய்யக் கூடியவர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.

    நாடு முழுவதும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தை பயன்படுத்தி தினமும் லட்சக்கணக்கானவர்கள் முன்பதிவு செய்கிறார்கள். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் செயல்படாததால் முன்பதிவு செய்யாமல் சிரமப்பட்டனர்.

    தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி நடந்து வருவதாகவும் விரைவில் சரி செய்யப்பட்டு முன்பதிவு தொடங்கும் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது.

    • தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், இதற்கு ஊர் பொதுமக்கள் நியாயம் வழங்கவேண்டும்.
    • வாலிபர்களை காதல் வலையில் வீழ்த்துவது போல பழகி பணம் பறித்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகில் உள்ள கொங்கபட்டியை சேர்ந்தவர் குருவைய்யா. பூ வியாபாரி. இவரது மகன் ரோஷன்(27). இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில் உள்ள கோவில் பாளையம் கிராமத்தை சேர்ந்த அந்தோணி மகள் உஷா(31) என்பவருடன் பேஸ்புக்கில் பழகி வந்தார்.

    அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் உஷாவுடன் பேசுவதை ரோஷன் நிறுத்திவிட்டார். ஆனால் அதன்பிறகும் ரோஷனின் செல்போனுக்கு தொடர்ந்து உஷா போன் செய்து வரவே அவரது நம்பரை பிளாக் செய்துவிட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த உஷா பேஸ்புக்கில் இருந்த ரோஷனின் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து அதனை தன்னுடன் சேர்ந்து இருப்பது போல போஸ்டர் தயாரித்தார். தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், இதற்கு ஊர் பொதுமக்கள் நியாயம் வழங்கவேண்டும் என நிலக்கோட்டை பூ மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டினார்.

    மேலும் குருவைய்யா பூ மார்க்கெட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது உஷா மற்றும் கொங்கபட்டியை சேர்ந்த சவுந்திரராஜன்(55), சிவஞானம்(45), திருப்பூர் கூத்தம்பாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி கிருஷ்ணவேணி(40) ஆகிய 4 பேரும் வழிமறித்து ரூ.5லட்சம் பணம் கொடுக்காவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.

    இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் குருவைய்யா புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரசாத் ஆகியோர் வழக்குபதிவு செய்து பணம் கேட்டு மிரட்டிய உஷா என்ற கமலேஸ்வரி(31), சிவஞானம்(45), கிருஷ்ணவேணி(40) ஆகிய 3 பேரையும் கைது செய்து நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் நல்லகண்ணன் உத்தரவிட்டார்.

    போலீசார் விசாரணையில் உஷா என்ற கமலேஸ்வரி இதேபோல் பல்வேறு வாலிபர்களை காதல் வலையில் வீழ்த்துவது போல பழகி பணம் பறித்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 500-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் உலக கோப்பை இறுதிப் போட்டியையொட்டி பெட்டிங்கை தொடங்கியுள்ளன.
    • பெரும்பாலான சூதாட்டக்காரர்கள் இந்திய அணியே உலக கோப்பையை வெல்லும் என பந்தயம் கட்டியுள்ளன.

    புதுடெல்லி:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கடந்த மாதம் 5-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. 10 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டி தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்தது.

    உலக கோப்பை போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெ்ட ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் இன்று பிற்பகல் நடக்கிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    உலக கோப்பையை வெல்லப் போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

    உலக கோப்பை இறுதிப் போட்டியையொட்டி மிகப்பெரிய அளவில் சூதாட்டம் நடைபெறுகிறது. எந்த அணி உலக கோப்பையை வெல்லும்? என்பது தொடர்பாகவும், யார் சிறப்பாக பேட்டிங் செய்வார்கள், பந்து வீசுவார்கள், எவ்வளவு ஸ்கோர் குவிக்கப்படும் என்பது தொடர்பாக பெட் டிங் கட்டப்பட்டு வருகிறது.

    சுமார் 500-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் உலக கோப்பை இறுதிப் போட்டியையொட்டி பெட்டிங்கை தொடங்கியுள்ளன.

    ரூ.70 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வகையில் இந்த தொகை பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் ஆட்டம் கடந்த மாதம் 14-ந் தேதி அகமதாபாத்தில் நடந்தது. இந்தப் போட்டியின் போது ரூ.40 ஆயிரம் கோடிக்கு பந்தயம் நடைபெற்றது. அதை மிஞ்சும் வகையில் இறுதிப் போட்டியில் ரூ.70 ஆயிரம் கோடிக்கு சூதாட்டம் நடக்கிறது.

    பெரும்பாலான சூதாட்டக்காரர்கள் இந்திய அணியே உலக கோப்பையை வெல்லும் என பந்தயம் கட்டியுள்ளன. மேலும் இவர்கள் உலக கோப்பை இறுதி ஆட்டம் குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டியாக இருக்கும் என்றே கருதுகின்றனா். 300 முதல் 400 ரன் வரை வரும் என்று சிறிய அளவிலான சூதாட்டதரகர்கள் பெட்டிங் கட்டி உள்ளனர்.

    பேட்டிங்கில் ரோகித் சர்மா, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் மீது பெரும்பாலானோர் பந்தயம் கட்டி உள்ளனர். பந்து வீச்சை பொறுத்த வரையில் முகமது ஷமி மீது அதிகளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. பும்ரா, முகமது சிராஜ் மீதும் பந்தயம் கட்டப்பட்டுள்ளது.

    • வளர்ச்சி திட்டப்பணிகள் ஆகியவை இணையதளம் மூலம் கண்காணிக்கப்பட்ட வருகின்றன
    • இணையதள சேவை முடங்கி போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது

    மெலட்டூர்:

    தற்போது உள்ள நவீனகாலத்தில் எங்கும் இணையதள சேவை வசதி மிகவும் அத்தியாவசியமாக உள்ளது.

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் வீட்டு வரி, குடிநீர் வரி, ஊராட்சி களில் செயல்படுத்தப்படும் அனைத்து சேவைகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் ஆகியவை இணையதளம் மூலம் கண்காணிக்கப்பட்ட வருகின்றன.

    இதற்காக அனைத்து ஊராட்களுக்கும் இணைய தள சேவைக்காக அரசு மூலம் பல கோடி ரூபாய் செலவில் புதியதாக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு ஊராட்சிக்கும் கேபிள்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    தற்போது காவளூர் பகுதியில் இணைய தள சேவைக்காக அமைக்கப்பட்ட கேபிள்கள் அறுந்து விழுந்து பல நாட்களாக தரையில் கிடக்கிறது.

    இதனால் கிராம பஞ்சாயத்துகளில் இணை யதள சேவை முடங்கி போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது அரச உடனடியாக நடவடிக்கை எடுத்து அறுந்து கிடக்கும் கேபிள்களை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எந்தவித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
    • வருகிற நவம்பர் மாதம் 18-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

    விழுப்புரம், அக்.21-

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ ,மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எந்தவித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை பாலிடெக்னிக் தொழிற்படிப்பு போன்ற மற்ற படிப்புகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

    கல்வி உதவித்தொகை புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் வருகிற நவம்பர் மாதம் 18-ந் தேதிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்க ளுக்கு கல்லுரிகளில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரை யோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தி லுள்ள மாவட்ட பிற்படுத்தப்ப ட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    ×