search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்காட்சி"

    • இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘காதல் தி கோர்' படம் பெரிய வெற்றி பெற்றது.
    • இந்த புகைப்படம் கொச்சி தர்பார் ஆர்ட் கேலரி சமீபத்தில் நடந்த புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.

    மலையாள சூப்பர் ஸ்டாரான நடிகர் மம்முட்டி தமிழிலும் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார். இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'காதல் தி கோர்' படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் மம்முட்டி ஜோடியாக ஜோதிகா நடித்து இருந்தார்.

    கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மம்முட்டியின் பிரம்மயுகம் படமும் வசூல் சாதனை நிகழ்த்தியது. சமீபத்தில் மம்மூட்டி மற்றும் கன்னட பிரபலமான ராஜ் பி ஷெட்டி இணைந்து டர்போ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தார்.

    சினிமாவை தாண்டி இன்னொரு புறம் மம்முட்டிக்கு புகைப்படங்கள் எடுப்பது பிடிக்கும். படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது அங்குள்ள அழகான விஷயங்களை தனது கேமராவில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்வது உண்டு. அப்படி மம்முட்டி எடுத்த புகைப்படங்களில் இந்திய புல்புல் பறவையின் புகைப்படமும் ஒன்று. இந்த புகைப்படம் கொச்சி தர்பார் ஆர்ட் கேலரி சமீபத்தில் நடந்த புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது. பின்னர் மம்முட்டி எடுத்த புல்புல் பறவை புகைப்படத்தை ஏலம் போட்டனர்.

    ஏலத்தின் ஆரம்ப விலையாக ரூபாய் 1 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. பின் அந்த புகைப்படத்தை தொழில் அதிபரான அச்சு உல்லட்டில் [லீனா க்ரூப் ஆஃப் பிசினஸ்] ரூ.3 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார்.

    இந்த புகைப்பட கண்காட்சி மறைந்த எழுத்தாளரான இந்துச்சூடன் சார்பாக நடைப்பெற்ற கண்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • நவீன கண்காட்சியகத்தை இராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று கண்டுகளித்தோம்.
    • கழகத்தின், கலைஞரின், கழகத் தலைவரின் உழைப்பை நம் கண் முன்னே நிறுத்துகின்றன.

    முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாபெரும் பிரம்மாண்ட மெய்நிகர் அரங்கம், கலைஞரை மீண்டும் நேரில் சந்திக்கும் ஆச்சர்ய அனுபவத்தை தூண்டும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க "காலம் உள்ளவரை கலைஞர்" நவீன கண்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார்.

    இந்நிலையில அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கண்காட்சியை பார்வையிட்டார். இந்த கண்காட்சியின் சிறப்புகளை தனது எக்ஸ் தளபதிவில் கூறிப்பிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

    சென்னை முதல் குமரி வரை நவீன தமிழ்நாட்டைச் செதுக்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வாழ்வை நம் கண் முன் விரிக்கும் 'காலம் உள்ளவரை கலைஞர்' நவீன கண்காட்சியகத்தை இராஜா அண்ணாமலை மன்றத்தில் இன்று கண்டுகளித்தோம்.


    முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மெழுகு சிலை செல்ஃபி பாயின்ட், Virtual Reality தொழில்நுட்பத்துடன் கூடிய கலைஞர் அவர்களின் குறும்படம், அவரது வாழ்க்கையை விவரிக்கும் புகைப்படக் கண்காட்சி ஆகியவை கழகத்தின், கலைஞரின், கழகத் தலைவரின் உழைப்பை நம் கண் முன்னே நிறுத்துகின்றன.

    வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கண்காட்சியைக் கண்கொள்ளா காட்சியாக, சிறப்புற ஏற்பாடு செய்த சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான அண்ணன் சேகர்பாபு அவர்களுக்கு என் அன்பும் வாழ்த்துகளும்! என்று கூறியுள்ளார்.


    • நூற்றுக்கும் மேற்பட்ட அரிய வகை புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
    • இங்கு எடுக்கப்படும் செல்பி புகைப்படங்கள் குறுஞ்செய்தியாக பார்வையாளர்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும்.

    சென்னை

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாபெரும் பிரம்மாண்ட மெய்நிகர் அரங்கம், கலைஞரை மீண்டும் நேரில் சந்திக்கும் ஆச்சர்ய அனுபவத்தை தூண்டும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க "காலம் உள்ளவரை கலைஞர்" நவீன கண்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

    இப்பிரம்மாண்ட அரங்கத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளான "திருவாரூரில் ஆரம்பித்து சென்னை மெரினா கடற்கரை நினைவிடம் வரை" என நூற்றுக்கும் மேற்பட்ட அரிய வகை புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.


    இக்கண்காட்சி அரங்கிற்குள் உள்ளே நுழைந்ததும் முப்பரிமாண தொழில்நுட்பத்துடன் கூடிய 40 வயது தோற்றத்துடன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நேரடியாக மக்களுடன் தமிழை போற்றி பேசும் கவிதை காவியம் இடம்பெற்றுள்ளது. "வாழும் வரலாறு முத்தமிழறிஞர் கலைஞரின் கதைப்பாடல்" காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    மற்றொரு அரங்கில் முத்தமிழறிஞர் கலைஞர் எப்போதும் அவர் விரும்பும் முரசொலி அலுவலகத்தில் உரையாடுவதுபோல் ஒரு 'செல்பி பாயிண்ட்' மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எடுக்கப்படும் செல்பி புகைப்படங்கள் குறுஞ்செய்தியாக பார்வையாளர்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும்.


    மேலும், ஒரு அரங்கில் மெய்நிகர் தொழில்நுட்பத்துடன் 3டி கேமராவில் பதிவு செய்த கலைஞரின் வரலாற்று காவியமும் கலைஞர் வழியில் தொடரும் திராவிட அரசை மக்கள் போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வரங்கம் திறக்கப்பட்ட நாள் முதல் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தோழமை கட்சி தலைவர்கள், திரைப்படக் கலைஞர்கள், ஆதீனங்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள், மற்றும் மாணவர்கள் ஆகியோர் வருகை தந்து கலைஞருடைய வாழ்க்கை வராலாறு, அரசியல் பயணம் போன்ற முக்கிய சாதனைகள் அனைத்தையும் விளக்கும் குறும்படங்கள், பல்வேறு துறைகளில் அவர் புரிந்த சாதனைகளை குறித்து ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

    "காலம் உள்ளவரை கலைஞர்" நவீன கண்காட்சியகத்தை இன்று பார்வையிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இக்காண்காட்சியகத்தை ஏற்பாடு செய்த இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, குறும்படத் தயாரிப்புக்கு உதவிய கவிஞர் பா.விஜய், புகைப்படங்களை வடிவமைத்த அரசு ஆர்ட்ஸ் கோபி, மெய்நிகர் பரிமாண தொழில்நுட்பத்திற்கு உதவிய பாரதி மற்றும் கண்காட்சிக்கு உதவிய அனைவருக்கும் சால்வை அணிவித்து பாராட்டினார். இந்நிகழ்வின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆ. ராசா, பி. வில்சன், திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன், கவிஞர் பா.விஜய் ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலுக்கும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
    • கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நாளை மறுநாள் மலர் கண்காட்சி தொடங்க உள்ளது.

    ஊட்டி:

    தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களிலேயே ஊட்டி, கொடைக்கானல் என்பது மிகவும் முக்கியமானது.

    இங்குள்ள இயற்கை காட்சிகள், அருவிகள், எண்ணற்ற சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும், இங்கு நிலவும் குளு, குளு கால நிலையை அனுபவிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

    குறிப்பாக, ஏப்ரல், மே மாதங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஊட்டி, கொடைக்கானலில் கோடைவிழா என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டு மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்பட பல்வேறு வகையான கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பசுமையான சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி கடந்த 7-ந் தேதி முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவருமே இ-பாஸ் பெற்று சென்று வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 10-ந் தேதி மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி தொடங்கியது. மலர் கண்காட்சியையொட்டி பூங்காவில் மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள 65 ஆயிரம் மலர் தொட்டிகளில் மலர்கள் பூத்து குலுங்கி அங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுத்து வருகிறது.

    இதுதவிர 2 லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு மலைரெயில், டிஸ்னி வேர்ல்டு, மற்றும் பல்வேறு மலர் அலங்காரங்களையும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகிறார்கள்.

    வழக்கமாக கோடை மாதம் மற்றும் மலர் கண்காட்சியை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். குறிப்பாக ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால் இந்த மாதம் முழுவதும் நீலகிரி மாவட்டமே களைகட்டி காணப்படும். வியாபாரமும் படுஜோராக நடந்து வரும்.

    ஆனால் இந்த ஆண்டு இ-பாஸ் நடைமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து விட்டது. கண்காட்சி தொடங்கி இன்றுடன் 5 நாட்கள் ஆகிறது. ஆனால் மலர் கண்காட்சியை பார்வையிட ஒவ்வொரு நாளும் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே வருகின்றனர். அதிகபட்சமாக கடந்த 12-ந் தேதி 21 ஆயிரம் பேர் வந்திருந்தனர். மற்ற நாட்களில் அதனை விட மிகவும் குறைவாகவே வந்துள்ளனர்.

    சுற்றுலாபயணிகள் வருகை குறைவு காரணமாக மலர் கண்காட்சிக்கான நுழைவு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.150 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது ரூ.125 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஊட்டி வியாபாரிகள் சங்க மாவட்ட நிர்வாகி பரூக் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் நீலகிரியில் நடக்கும் கோடைவிழாவை காண அனைத்து பகுதிகளிலும் இருந்து எண்ணற்ற சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள். இதனால் இந்த ஒரு மாதம் முழுவதும் நீலகிரியில் வியாபாரமும் நன்றாக நடக்கும்.

    வழக்கமாக கோடை விழாவின் போது நடக்கும் மலர் கண்காட்சியை பார்க்க ஏராளமானோர் வருவார்கள். ஆனால் இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட இ-பாஸ் நடைமுறையால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விட்டது. இங்குள்ளவர்களுக்கு எளிதாக இ-பாஸ் கிடைத்து விடுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு விண்ணப்பித்த உடன் இ-பாஸ் கிடைப்பதில்லை. பலமுறை முயற்சி செய்த பின்னரே இ-பாஸ் கிடைப்பதாகவும், அதானாலேயே பலரும் இங்கு வருவதை தவிர்த்து வருகின்றனர்.

    சுற்றுலா பயணிகள் வருகை குறைவு மற்றும் இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாவை நம்பி நடந்து வரும் அனைத்து தொழில்களும் பாதிப்படைந்துள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலுக்கும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதாக உள்ளூர் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறும் போது, இ-பாஸ் நடைமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை விட குறைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் அதனை நம்பி நடக்கும் வியாபாரம் முற்றிலும் களை இழந்து விட்டது. தொழிலாளர்களும் கடும் பாதிப்படைந்துள்ளனர் என்றனர்.

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நாளை மறுநாள் மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. இதனை பார்வையிட சுற்றுலாபயணி கள் வருகை அதிகம் இருக்கும் என எதிர்பார்த்து வியாபாரிகள் காத்து இருக்கிறார்கள்.

    • தற்போது நீலகிரியில் வெயில் குறைந்து, குளு, குளு காலநிலை நிலவி வருகிறது.
    • ஊட்டிசேரிங்கிராஸ்-தொட்டபெட்டா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரியில் ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழாவை யொட்டி சுற்றுலா பயணி களை கவரும் வகையில் கண்காட்சிகள் நடத்தப்ப டும்.

    இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 10-ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியுடன் தொடங்கியது. இதேபோல் ஊட்டி ரோஜா பூங்காவிலும் ரோஜா கண்காட்சி நடந்து வருகிறது.

    அத்துடன் தற்போது நீலகிரியில் வெயில் குறைந்து, குளு, குளு காலநிலை நிலவி வருகிறது.

    கண்காட்சியினை கண்டு ரசிக்கவும், குளு,குளு சீசனை அனுபவிக்கவும்வெளி மாநிலங்கள், வெளிமா வட்டங்களில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ள னர்.

    வெள்ளிக்கிழமை முதல் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுவும் நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று விடுமுறை தினங்கள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டமாகவே காணப்பட்டது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் காலை முதலே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர்.

    அவர்கள் பூங்காவில் மலர் கண்காட்சியையொ ட்டி, பூங்காவில் மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மலர் தொட்டிகளில் பூத்து குலு ங்கிய பூக்களை பார்வை யிட்டனர்.மேலும் பூங்காவில் லட்சக்கணக்கான கார்னே சன் மலர்களை கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டி ருந்த மலைரெயில், டிஸ்னி வேர்ல்டு, பல ஆயிரம் மலர்களை கொண்டு வடி வமைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரங்களையும் கண்டு ரசித்ததுடன், அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    அங்குள்ள புல் மைதான த்தில் சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் ஆடி,பாடி தங்கள் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

    ஊட்டி ரோஜா பூங்காவிலும் ரோஜா கண்காட்சியை யொட்டி அங்கு வைக்கப்பட்டுள்ள பல வண்ண ரோஜா மலர்கள், மலர்களால் உருவான யானை, புலி, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் உருவங்களையும் கண்டு ரசித்தனர்.

    நேற்று மதியம் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. தாவரவியல் பூங்காவில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகள் சிலர் மழைக்கு அங்கிருந்த மரத்த டிகளில் தஞ்சம் அடைந்த னர். ஒரு சிலர் மழையில் நனைந்தபடி கண்காட்சியை பார்வையிட்டு, மகிழ்ந்தனர்.

    மழையால் அங்கு குளு, குளு காலநிலை நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்து வரும் மலர் கண்காட்சியை இது வரை 60 ஆயிரம் பார்வையிட்டுள்ளனர். இதேபோல் ரோஜா கண்காட்சியை கடந்த 3 நாட்களில் 25 ஆயிரம் பேர் பார்வையிட்டு ரசித்துள்ளனர். இன்று 4-வது நாளாகவும் சுற்றுலா பயணிகள் மலர் கண்கா ட்சியை பார்வையிட்டனர்.

    ஊட்டிக்கு ஏராளமானோர் சொந்த வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்களில் வருகின்றனர். பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அரசு பஸ்களில் பயணித்தும் ஊட்டிக்கு வருகிறார்கள்.

    இப்படி ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு இடத்தையும் சுற்றிப் பார்ப்பது சிரமமானது.

    சுற்றுலா பயணிகளின் நலன் கருதியும், அவர்கள் அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிக்கும் வகையில், ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து 20 சுற்று பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சுக்கு கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த பஸ் மூலம் படகு இல்லம், பிங்கர் போஸ்ட், அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ஆவின் வளாகம், தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுகிறார்கள்.

    இந்த பஸ்களுக்கு சுற்றுலா பயணிகளிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. ரூ.100 கட்டணத்தில் பஸ் இயக்கப்படுவதும், அனைத்து சுற்றுலா தலங்களையும் பார்ப்பதும் மகிழ்ச்சியாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    இதற்கிடையே ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

    ஊட்டிசேரிங்கிராஸ்-தொட்டபெட்டா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. 

    • பொதுமக்களை கவர்ந்த சிறுதானிய உணவுகள்
    • உணவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் சிறுதானிய உணவு திருவிழா நடந்தது.

    கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கண்காட்சி அரங்கினை திறந்து வைத்து, பள்ளி மாணவ மாணவிகளின் சிறுதானிய உணவு குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்,வேலூர் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறை, வேலூர் மாவட்ட நுகர்வோர்கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, உழவர் நலத்துறை, மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்டோர் அரங்குகள் அமைத்திருந்தனர்.

    இதில் 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற பழமொழியின் படி நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு 'உணவே மருந்து' என்பதை வலியுறுத்தும் வகையில் பாரம்பரிய உணவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    சிறுதானிய உணவு வகைகளான கேழ்வரகு, சம்பா, தினை உள்ளிட்டவைகளால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், மக்களுக்கு காட்சிப்படுத்தி அவற்றின் செய்முறை மற்றும் பயன்கள் குறித்து விளக்கப்பட்டது. காட்சிக்க வைத்திருந்த உணவுகள் பொதுமக்களை கவரும் வகையில் இருந்தது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன் மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அப்துல் முனீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் ரோவர் கல்லூரியில் மருந்தியல் கண்காட்சி நடைபெற்றது
    • டாக்டர் ராஜா முகமது கண்காட்சி யை துவங்கி வைத்தார்

    பெரம்பலூர்,

    தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரியில் 62ம் தேசிய மருந்தியல் வாரவிழா வினையொட்டி 4-ம் நாள் மருந்தியல் கண்காட்சி நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தின ராக டாக்டர் ராஜா முகமது கலந்துகொண்டு கண்காட்சி யை துவங்கிவைத்தார். ரோவர் கல்வி நிறுவனங்க ளின் நிறுவனர் மற்றும் மேலாண் தலைவர் கே.வரதராஜன் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் நெப்போலியன் சிறப்புரை ஆற்றினார்.

    துணை முதல்வர் மாரியம்மாள் நன்றி கூறினார். இந்த கண்காட்சியில் மருந்தியல் சம்பந்தமான 50க்கும் அதிகமான படைப்புகளை மாணவர்கள் தங்களுடைய தனித்துவத்தை கொண்டு வெளிப்படுத்தினர். மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர்கள் விழா வினை ஒருங்கிணைத்தனர். விழாவில் தலைமை அலுவலக மேலாளர் ஆனந்தன், கல்வி மேலாளர் சத்திஷ்வரன் அலுவலக மேலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • மீன்வள தினத்தை முன்னிட்டு கடல்வாழ் உயிரின உணவு கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரை பூங்கா வில் உலக மீன்வள தினத்தை யொட்டி கடல் வாழ் உயிரினங்களின் உணவு கண்காட்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உணவு கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    இக்கண்காட்சி அரங்கில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைத்து பல அறிய வகை மீன்கள் மூலம் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்கள் இடம்பெற்றன. மாலை 4 மணிக்கு தொடங்கிய கண்காட்சி இரவு 8 மணிக்கு முடி வடைந்தது. இதில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

    கண்காட்சி அரங்கில் நவீன மின்னணு திரை அமைத்து தமிழக அரசால் மீனவர்களுக்கு வழங்கும் அரசு நலத்திட்டங்கள் குறித்தும், மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் தொழிலில் ஈடுபட்டு அதன் மூலம் பெறப்படும் வருமா னம் மற்றும் மீனவர்க ளுக்கான பயிற்சி மற்றும் பேரிடர் காலங்களில் பாது காப்புடன் சென்று வருவ தற்கான வழிகாட்டுதல் குறித்த குறும்படங்கள் திரை யிடப்பட்டது.

    குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டிருந்தது. உணவு கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் விஜயகுமார், மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா. உதவி இயக்குநர்கள் சிவகுமார் (மண்டபம்), அப்துல்காதர் ஜெய்லானி (ராமேசுவரம்), மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
    • பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளி த்தனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் உலக மரபு வார சிறப்பு நடுகற்கள் கண்காட்சி ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 19-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை உலக மரபு வாரமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதை முன்னிட்டு கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சங்ககாலத்தில் இருந்தே வீரச்செயல் செய்தவர்க ளுக்கு நடுகல் எடுக்கும் வழக்கம் இருந்து வந்தது. ஆனால் சங்க காலத்தில் எடுக்கப்பட்ட பெரும்பா ன்மையான நடுகற்கள் அழிந்துபோயின. கி.பி 6-ம் நூற்றாண்டு தொடங்கி 9-ம் நூற்றாண்டு வரை பல்லவர், வாணர் கால நடுகற்கள் நமக்கு கிடைக்கி ன்றன. தர்மபுரி, செங்கம் பகுதிகளில் பல்லவர்கள் கீழ் ஆட்சி செய்த வா ணர்க ளின் நடு கற்கள் அதி கம் கிடை க்கி ன்றன.

    9-ம் நூற்றா ண்டுக்கு பின் சோழர்கள், வாண கோவ ரையர்கள், குறுநில நாடுகளில் நடுக ற்கள் கிடைக்கின்றன. இந்த காலக்கட்டத்தில் வைக்க ப்பட்ட பெரும்பா ன்மையான நடுகற்களில் கல்வெட்டுகள் காணப்ப டுகின்றன. மன்னரின் பெயர், ஆட்சி ஆண்டு, வீரச்செயல் செய்த வீரனின் பெயர், தந்தையின் பெயர், ஊர், எதற்காக இற ந்தான் போன்ற விவரங்கள் கல்வெ ட்டில் பொறிக்கப்ப ட்டன.

    தொறுபூசல் எனப்படும் கால்நடைகளை கவர்தல், மீட்டல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்தவர்களுக்கு நடுகல் எடுக்கப்பட்டது. 15-ம் நூற்றாண்டுக்குப்பின் நடுகல்லில் கல்வெட்டு வெட்டும் வழக்கம் குறைந்து போனது. இன்றும் கூட சில பிரிவுகளில் இறப்பின்போது கல்லெடுக்கும் வழக்கம் உள்ளது.

    நடுகல்லில் பல வகைகள் உள்ளது. நினைவுக்கல், வீரக்கல், நவகண்டம், அரிக ண்டம், சதிகல், புலிகுத்திப்ப ட்டான் கல், ஆநிரைக்கல் என அமைக்கப்பட்டது. இது மிக பழமையான கி.மு. 4-ம் நூற்றாண்டை சேர்ந்த தொல்காப்பியர் இலக்கிய விதிப்படி எழுதப்பட்ட முதல் நடுதல் புள்ளிமான் கோம்பை (தேனி) தாதா பட்டி (திண்டுக்கல்) உள்ளி ட்ட 69 நடுகற்களின் புகைப்ப டங்கள் காட்சி ப்படுத்தப்ப ட்டுள்ளன. இந்த கண்கா ட்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி குறி ப்பிட்ட என்னை கவர்ந்த கல்வெட்டு என்கிற கல்வெட்டின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பி டத்தக்கது.இந்த புகைப்பட கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளி த்தனர்.

    • கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட விற்பனையகம் அமைக்கப்பட்டிருந்தது.
    • மாணவிகள் தங்களது சொந்த தயாரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

    மணவாளக்குறிச்சி ;

    வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந் துள்ள அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரியில் கண்காட்சி மற்றும் கலைவிழா நடை பெற்றது. இந்த விழாவை திருவனந்தபுரத்தை சேர்ந்த திரைப்பட நடிகையான அன்கிதா வினோத் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஜோசப் ஜவகர் தலைமை உரையாற்றினார். அப்போது மாணவிகள் வேலையில்லாதவராக இல்லாமல் சுயதொழில் தொடங்குவோராக மாற வேண்டும். இதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்படு கிறது என கூறினார்.

    கல்லூரியின் தாளாளர் கிருஷ்ணசுவாமி வாழ்த்துரை வழங்கினார். இந்த கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட விற்பனையகம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் மாணவிகள் தங்களது சொந்த தயாரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

    குமரி மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவி கள் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவிகளுக்கிடை யிலான நடனப்போட்டி நடை பெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவி களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்க ளையும் கல்லூரியின் தாளாளர் வழங்கினார்.

    நிகழ்ச்சியின் முடிவில் டி.ஜே. இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி துணை தாளாளர் சுனி கிருஷ்ணசுவாமி, இயக்கு னர் தருண் சுரத், துறை தலைவர்கள், பேரா சிரிய, பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு கைத்தறி கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
    • கைத்தறி கண்காட்சியை இன்று மாலை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைக்கிறார்.

    ராமநாதபுரம்

    கைத்தறி வளர்ச்சி ஆணையர், புதுடில்லி மற்றும் கைத்தறி ஆணையர் சென்னை ஆகியோர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் நகரில் இன்று (3-ந் தேதி) முதல் 9-ந் தேதி வரை மாவட்ட அளவிலான 6-வது சிறப்பு கைத்தறி கண்காட்சி ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனைக்கு பின்புறம் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகின்றது.

    கைத்தறி கண்காட்சியை இன்று மாலை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைக்கிறார்.

    இந்த கண்காட்சியில் சுமார் 25 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், சேலம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில், திருப்பூர், கும்பகோணம், திருச்சி, கோயம்புத்தூர் மாவட்டங்களிலிருந்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் தங்களது அரங்குகளை அமைத்து, ஜவுளிகளை விற்பனைக்கு வைத்துள்ளன.

    கைத்தறி நெசவாளர்கள் தயாரித்த பெட்ஷீட்கள், பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், கோரா சேலைகள், பருத்தி சேலைகள், துண்டுகள், சின்னாளப்பட்டி சேலைகள், பம்பர் சேலைகள், உயர்தர காட்டன் வேட்டிகள், அசல்பட்டு, காட்டன் சேலைகள், லுங்கிகள் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    இந்த விற்பனைக்கு தமிழக அரசின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பருத்தி ரகங்களுக்கு உருப்படி ஒன்றுக்கு 30 சதவீதம் (அதிக பட்சமாக ரூ.150 வரை), பட்டு ரகங்களுக்கு ரூ.300-ம் அரசு தள்ளுபடியாக வழங்கப்படுகிறது. பட்டு ரகங்களுக்கு சங்க கமிஷனாக 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படுகின்றது. இந்த கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டு துணிகள் வாங்கி நெசவாளர்களுக்கு உதவிட வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

    • முதல் மற்றும் கடைசி வரியில் 12 குழிகளுக்கு பதிலாக 10 குழிகள் உள்ளன
    • கண் காட்சியை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்பட பலர் பார்வை யிட்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் ஏராள மான அரும் பொருட்கள் உள்ளன. ஒவ்வொரு பொரு ளும் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்கவை. அத்தனை சிறப்பு மிக்க பொருள்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் விதமாக மாதம் ஒரு சிறப்பு பொருள் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மாதம் கண்காட்சியில் அரும் பொருளான கலை நயம் மிக்க காசுகள் எண்ணும் மரத்தட்டு இடம் பெற்று உள்ளது.

    காசு எண்ண பயன்படும் இத்தகைய மரத்தட்டுக்கள் திருவனந்தபுரம், திருவி தாங்கூர், கொச்சின் போன்ற கேரள சமஸ்தான பகுதிகளிலும் நாஞ்சில் நாடு என அழைக்கப்படும் குமரி மாவட்ட பகுதிகளிலும் பெருமளவில் வழக்கத்தில் இருந்தன. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள காசு எண்ணும் மரத்தட்டு செவ்வக வடிவமாக உள்ளது. இதில் மொத்தம் 200 குழிகள் உள்ளன. குத்து கோட்டு வரிசையில் 12 குழிகளும், கிடைகோட்டு வரிசையில் 15 புள்ளிகளும் உள்ளன.

    முதல் மற்றும் கடைசி வரியில் 12 குழிகளுக்கு பதிலாக 10 குழிகள் உள்ளன. ஆக மொத்தம் 200 குழிகள் உள்ளன. நமது முன்னோர்கள் பயன்ப டுத்திய இந்த அரும் பொருட்களின் முக்கியத்து வத்தை இன்றைய தலை முறையினர் அனைவருக்கும் தெரிவிப்பதே கண்காட்சி யின் நோக்கமாகும் என்று கன்னியாகுமரி அரசு அருங் காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி தெரி வித்தார். இந்த கண் காட்சியை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்பட பலர் பார்வை யிட்டனர்.

    ×