என் மலர்
நீங்கள் தேடியது "கண்காட்சி"
- 1,500 கிலோ எடை கொண்ட இந்த எருமை மாட்டின் விலை ரூ.21 கோடியாகும்.
- இதற்கு ஒரு நாள் தீவனத்துக்கே ரூ.1,500 செலவாகிறது
ராஜஸ்தானின் புஷ்கர் நகரில் கலாசார பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக ஆண்டுதோறும் புஷ்கர் கண்காட்சி நடைபெறுகிறது.
இதில் ஒட்டகம், குதிரை, எருமை மாடுகள் விற்பனை கண்காட்சியும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் கால்நடை கண்காட்சி அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது.
இந்த கண்காட்சியில் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனத்தையும் அன்மோல் என்ற எருமை மாடு ஈர்த்தது. 'அன்மோல்' என்ற இந்த மாடு கருகருவென, வனப்புடன் இருந்தது. 1,500 கிலோ எடை கொண்ட இந்த எருமை மாட்டின் விலை ரூ.21 கோடியாகும்.
இதுகுறித்து அதன் உரிமையாளர் பால்மேந்திரா கில் கூறுகையில், 'இந்த மாட்டை வைத்திருப்பதை பெருமையாக கருதுகிறேன். மன்னரைப்போல பராமரிக்கப்படும் இந்த எருமைக்கு நாள்தோறும் பால், நெய், பருப்பு வகைகளோடு உலர் பழங்கள் உணவாக தருகிறேன். இதற்கு ஒருநாளைக்கு ரூ.1,500 செலவாகிறது' என்று பெருமையாக தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த கண்காட்சியில் வைரலான ரூ.21 கோடி மதிப்பிலான எருமை மாடு திடீரென உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாபத்தின் பெயரில் விலங்குகளை கொடுமைப்படுத்துவதற்கு இது எடுத்துக்காட்டு என விலங்குகள் நல ஆர்வலர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- கண்காட்சியில் பங்கேற்க இதுவரை 3,028 குதிரைகள், 1,306 ஒட்டகம் உள்பட 4,300 கால்நடைகளின் உரிமையாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
- ரூ.15 கோடி மதிப்புள்ள குதிரை கண்காட்சிக்கு வந்துள்ளது.
ராஜஸ்தானின் புஷ்கர் நகரில் கலாசார பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக ஆண்டுதோறும் புஷ்கர் கண்காட்சி நடைபெறுகிறது.
இதில் ஒட்டகம், குதிரை, எருமை மாடுகள் விற்பனை கண்காட்சியும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் கால்நடை கண்காட்சி இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெறவுள்ளது.
கண்காட்சியில் பங்கேற்க இதுவரை 3,028 குதிரைகள், 1,306 ஒட்டகம் உள்பட 4,300 கால்நடைகளின் உரிமையாளர்கள் பதிவு செய்துள்ளனர். இன்று தொடங்கும் நிலையில் முன்கூட்டியே நாடு முழுவதும் இருந்து பலர் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை கொண்டு வந்துள்ளனர். இதனை பார்க்க கூட்டம் கூடி வருகிறது.
இதில் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனத்தையும் அன்மோல் என்ற எருமை மாடு ஈர்த்துள்ளது. 'அன்மோல்' என்ற இந்த மாடு கருகருவென, வனப்புடன் உள்ளது. 1,500 கிலோ எடை கொண்ட இந்த மாட்டின் விலையை கேட்டால் அசந்து போவீர்கள். ஆமாம் ரூ.23 கோடி.
இதுகுறித்து அதன் உரிமையாளர் பால்மேந்திரா கில் கூறுகையில், 'இந்த மாட்டை வைத்திருப்பதை பெருமையாக கருதுகிறேன். இதற்கு ஒரு நாள் தீவனத்துக்கே ரூ.1,500 செலவாகிறது' என்று பெருமையாக தெரிவித்தார்.
இதேபோல் ரூ.15 கோடி மதிப்புள்ள குதிரையும் கண்காட்சிக்கு வந்துள்ளது. உஜ்ஜைன் பகுதியில் இருந்து 600 கிலோ எடை கொண்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள எருமை மாடும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது மட்டுமல்ல உயரம் குறைந்த பசு மாடும் இந்த கண்காட்சிக்கு வந்துள்ளது.
- கோடை விழாவின் இறுதி நிகழ்வாக இன்று முதல் முறையாக காட்டேரி பூங்காவில் மலை பயிர்கள் கண்காட்சி தொடங்கியது.
- பூங்காவில் ஏற்கனவே நடவு செய்யப்பட்டுள்ள 2 லட்சம் மலர் செடிகள் பூத்துக் குலுங்கி வருகிறது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 3-ந்தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, மலர் கண்காட்சி, பழ கண்காட்சி நடந்து முடிந்துள்ளது. கோடை விழாவின் இறுதி நிகழ்வாக இன்று முதல் முறையாக காட்டேரி பூங்காவில் மலை பயிர்கள் கண்காட்சி தொடங்கியது.
மலைபயிர்கள் கண்காட்சியை முன்னிட்டு இளநீர், நுங்கு, பாக்கு உள்ளிட்டவற்றை கொண்டு பூங்காவின் நுழைவு வாயில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நுங்கு, இளநீர், பனைமர ஓலைகளை கொண்டு மலைகிராம குடிசை, பனை ஓலைகளில் சேவல், கோழி உள்ளிட்ட உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர முந்திரி பருப்பை பயன்படுத்தி ஆடு, மாடு மற்றும் மாட்டு வண்டி, விவசாயி தென்னை மரம் ஏறுவது போன்ற உருவம், ஏர் கலப்பை, ஆட்டு உரல் உள்ளிட்டவையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாக்கு, தேயிலை போன்றவற்றை கொண்டும் உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
பூங்காவில் ஏற்கனவே நடவு செய்யப்பட்டுள்ள 2 லட்சம் மலர் செடிகள் பூத்துக் குலுங்கி வருகிறது. இன்று தொடங்கிய கண்காட்சியானது வருகிற 1-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வரத்து குறைந்து விட்டது. தற்போது மழை ஓரளவு குறைந்து விட்டதால் இன்று தொடங்கும் மலைபயிர்கள் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மலர் கண்காட்சி, காய்கறி, பழங்கள் கண்காட்சி, நாய் கண்காட்சி என பல கண்காட்சிகள் இடம் பெறும்.
- நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
குன்னூர்:
சுற்றுலாதலமான நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் சுற்றுலாபயணிகள் வருகை தந்தாலும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் லட்சக்கணக்கானோர் திரள்வார்கள்.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்புவதற்காக நீலகிரியில் குவியும் சுற்றுலாபயணிகளை மகிழ்விப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் மலர் கண்காட்சி, காய்கறி, பழங்கள் கண்காட்சி, நாய் கண்காட்சி என பல கண்காட்சிகள் இடம் பெறும்.
இந்த ஆண்டு மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். கடந்த 11 நாட்களாக நடந்து வந்த மலர் கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து மாலையில் பரிசளிப்பு நடத்தப்பட்டு மலர்கண்காட்சி நிறைவடைந்தது.
பழக்கண்காட்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இன்று மாலை வரை கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
அதைத்தொடர்ந்து ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் குன்னூர் சிம்ஸ் பூங்கா அனைத்தும் இன்று மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக சிம்ஸ் பூங்காவில் இன்று கடைசி நாள் நடைபெற இருந்த பழக்கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. இன்று மாலை நடைபெற இருந்த பரிசளிப்பு விழாவும் ஒத்திவைக்கப்பட்டது. பரிசளிப்பு விழா மற்றொரு நாளில் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- பூங்காவில் உள்ள மாடங்களில் 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான வண்ண மலர் தொட்டிகளும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
- தினமும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.
ஊட்டி:
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள ஆர்கிட் மலர்கள், லில்லியம் மலர்கள் வாடாமல் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
ஆண்டுதோறும் கோடைகாலமான மே மாதம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான 127-வது மலர் கண்காட்சி கடந்த 15-ந்தேதி தொடங்கியது.
இந்த மலர் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த மலர் கண்காட்சியில் 2 லட்சம் மலர்களால் பொன்னியின் செல்வன் அரண்மனை, நுழைவுவாயில், கரிகாலன் கல்லணை, ராஜ சிம்மாசனம், ஊஞ்சல், சிப்பாய்கள், யானை, அன்னபறவை ரதம் உள்ளிட்ட பல்வேறு மலர் அலங்காரங்கள் இடம் பெற்றுள்ளது.
மேலும் பூங்காவில் உள்ள மாடங்களில் 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வகையான வண்ண மலர் தொட்டிகளும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதில் 200 லில்லியம் மலர்கள், 100-க்கும் மேற்பட்ட தொட்டிகளில் ஆர்க்கிட் மலர்கள் ஆகியவைகள் வைக்கப்பட்டுள்ளன.
மலர் கண்காட்சி தொடங்கியதில் இருந்து கண்காட்சியை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தினமும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடந்து வரும் ஊட்டி மலர் கண்காட்சியை கடந்த 6 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 13 ஆயிரம் பேர் கண்டு ரசித்துள்ளதாக தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.
- மலர் கண்காட்சியை தொடங்கியதை அடுத்து ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்தது.
- சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுப்பதற்காகவே செல்பி பாயிண்டுகளும் அமைக்கப்பட்டிருந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 3-ந் தேதி காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. கோடைவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது.
கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மலர் கண்காட்சியையொட்டி, தாவரவியல் பூங்காவில் 2 லட்சம் பல வண்ண கொய்மலர்களை கொண்டு பொன்னியின் செல்வன் அரண்மனை, அரண்மனை நுழைவு வாயில் மற்றும் பல வண்ண கார்னேசன், ரோஜா மலர்களை கொண்டு கரிகாலன் கல்லணை, யானை, ராஜ சிம்மாசனம், சிப்பாய் உள்ளிட்டவை அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்தது.
மலர் கண்காட்சியை தொடங்கியதை அடுத்து ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்தது. இன்று 2-வது நாளாக ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு காலையிலேயே சுற்றுலா பயணிகள் வந்தனர்.

அவர் அங்கு மலர்களால் உருவாக்கப்பட்டு இருந்த பொன்னியின் செல்வன் அரண்மனை, கரிகாலன் கல்லணை, யானை உள்ளிட்டவற்றை பார்த்து ரசித்து, அதன்முன்பு நின்று புகைப்படமும் எடுத்தனர்.
அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த ராஜ சிம்மாசனத்திலும் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுப்பதற்காகவே செல்பி பாயிண்டுகளும் அமைக்கப்பட்டிருந்தது.
பூங்காவில் பல வண்ண மலர்கள் பூத்து குலுங்கின. இந்த மலர்களையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
மலர் அலங்காரங்கள் மற்றும் மலர்களை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள், அங்குள்ள புல்வெளி தரையில் அமர்ந்து தங்கள் குடும்பத்தினர், குழந்தைகளுடன் விளையாடியும் மகிழ்ந்தனர்.
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்
- அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்
வேலூர்:
விரிஞ்சிபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் பாராம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் இன்று காலை நடைபெற்றது.
கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பொறுப்பு ஸ்டீபன் ஜெயக்குமார் திட்ட விளக்க உரையாற்றினார். உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.
இதில் வேளாண் அறிவியல் நிலைய தலைவரும் பேராசிரியருமான திருமுருகன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
- வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கை நடத்தின.
- நிகழ்ச்சியினை கலெக்டர் ஸ்ரேயா பி. சிங் தொடங்கி வைத்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கை நடத்தின. நிகழ்ச்சியினை கலெக்டர் ஸ்ரேயா பி. சிங் தொடங்கி வைத்தார். வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) ராஜகோபால் முன்னிலை வகித்தார்.
வேளாண்மை அறிவியல் நிலைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுதுரை, தோட்டக்கலை துணை இயக்குநர் கணேசன், வேளாண் வணிகம், விற்பனைத்துறையின் வேளாண்மை துணை இயக்குநர் நாசர், மோகனூர் வட்டார அட்மா குழு தலைவர், நவலடி, மோகனூர் வட்டார ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி கருமண்ணன் ஆகியோர் இயற்கை முறை பயிர் சாகுபடி முறைகள் குறித்தும் அதன் வாயிலாக கிடைக்கபெறும் நஞ்சில்லா உணவு குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமளித்தனர்.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் செல்வராஜு, ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் அருட்செந்தில், புதுக்கோட்டை இயற்கை வேளாண் விஞ்ஞானி சின்னையா நடேசன், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் ஸ்ரீபாலாஜி, செங்கோ இயற்கை வேளாண்மை பண்ணை விவசாயி நல்லசிவம், கரூர் ஜெயகவின் இயற்கை வேளாண் பண்ணை விவசாயி மனோகரன் ஆகியோர் பேசினார்கள்.
திருச்செங்கோடு நடமாடும் மண்பரிசோதனை நிலைய வாகனம் மூலம் சிறப்பு மண் மற்றும் நீர் ஆய்விற்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. விவசாயிகளுடன் கலந்துரை யாடல் நிகழ்ச்சியை நாமக்கல் உழவர் பயிற்சி மைய வேளாண்மை துணை இயக்குநர் நாச்சிமுத்து, வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் முருகன் தொகுத்து வழங்கினர்.
- ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது.
- மாணவர்கள் களிமண், பனைஓலை, வைக்கோல், தேங்காய் நார், காகிதம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வீட்டு உபயோகப்பொருட்கள் செய்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர்கள் தயாரித்த நாட்டுப்புற கைவினை கலைப் பொருட்களின் கண்காட்சி நடந்தது. 8-ம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் நாட்டுப்புற கைவினைக் கலைகள் என்ற பகுதியில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கைவினை கலைப் பொருட்களைச் செய்துவர தமிழாசிரியர் கிருஷ்ணவேணி மாணவர்களுக்கு செயல்திட்டம் கொடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில் மாணவர்கள் களிமண், பனைஓலை, வைக்கோல், தேங்காய் நார், காகிதம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வீட்டு உபயோகப் பொருட்கள், ஓலை கொட்டான்கள், உடுக்கை, பறவைக் கூடுகள், படகு போன்ற பொருட்களைச் செய்தனர்.
இந்த பொருட்களின் கண்காட்சியை தலைமையாசிரியர் சண்முகநாதன் தொடங்கி வைத்தார். இதில் தாதனேந்தலைச் சேர்ந்த அசிகா என்ற மாணவி செய்த பனை ஓலையில் புட்டு அவிக்கும் பெட்டி, பொக்கனாரேந்தல் ரித்திகாஸ்ரீ, திருப்புல்லாணி ஆயிசத் சபா, தவுபிக் நிஷா ஆகியோர் பனை ஓலையில் செய்திருந்த ரோஜா, தாமரை பூக்கள், குருவிகள் உருவங்கள் அனைவரையும் கவர்ந்தது.
- தொழில்நெறி வழிகாட்டுதல் கண்காட்சி நடைபெற்றது
- அரியலூர் மாவட்ட பூவாணிப்பட்டு அரசுப் பள்ளியில்
அரியலூர்
அரியலூர் அடுத்த பூவாணிப்பட்டு கிராமத்திலுள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையம் இணைந்து மாணவ, மாணவி களுக்காக தொழில் நெறி வழிக்காட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடை பெறற்றது.
இதனை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கா.விஜயபாஸ்கர் தொடக்கி வைத்து பேசுகையில், போட்டிகள் நிறைந்த இந்த காலக் கட்டத்தில், படிக்கின்ற போதே மாணவர்கள் தங்களது தனித் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேல்படிப்புக்கு செல்லும் போது, வேலைவாய்ப்பு தகுந்த படிப்பினை தேர்வு செய்து அதனை திட்டமிட்டு படிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து அவர், புத்தகக் கண்காட்சியையும் தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அ.கலைச்செல்வன் தலைமை வகித்து, உயர்படிப்பில் என்னென்ன படிப்புகளைப் படிக்கலாம் என்று மாணவர்களிடையே எடுத்து ரைத்தார். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் எம்.வினோத்குமார், சா.மணிமாறன் ஆகியோர் மத்திய, மாநில அரசு பணிகள், தனியார் துறை பணியமர்த்தம் மற்றும் சுயத்தொழில்கள் குறித்தும், மாற்றுத்திற னாளிகளுக்கான வேலை வாய்ப்புகள் குறித்தும் விளக்கினர்.
முன்னதாக அப்பள்ளி தலைமை ஆசிரியர் பா.பவானி வரவேற்றார்.முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ராஜராம் நன்றி தெரிவித்தார்.
- 2 நாட்கள் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
- இல்லம் தேடி கல்வி உறுப்பினர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அனுப்பர்பாளையம் :
திருப்பூர் மாநகராட்சி 4-வது வார்டுக்குட்பட்ட நெருப்பெரிச்சல் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 2 நாட்கள் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. தொடக்க விழா நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலா வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அசோக்குமார், பாண்டியன்நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜோசப் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.இதில் திருப்பூர் வடக்கு வட்டார கல்வி அதிகாரி முஸ்ரத் பேகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.
இந்த கண்காட்சியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் காற்றாலை மூலம் மின் உற்பத்தி, மருத்துவ தாவரங்கள், விவசாயம், மக்கும் குப்பை, மக்காத குப்பை, மூலிகை, தானிய வகைகள் மற்றும் இயற்கை உணவு வகைகள் உள்பட அறிவியல் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட படைப்புகளை கண்காட்சியில் காட்சிப்படுத்திய மாணவர்கள், அவற்றின் செயல்பாடு மற்றும் பயன்கள் குறித்து விளக்கி கூறினார்கள். இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி உறுப்பினர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் கண்காட்சியை பார்வையிட்டனர். கொரோனாவுக்கு பிறகு மாணவர்களின் அறிவு மற்றும் கல்வித்திறனை வளர்க்கும் நோக்கில் இந்த கண்காட்சி நடத்தப்படுவதாக தலைமையாசிரியை நிர்மலா தெரிவித்தார். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கண்காட்சியை குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கண்டு களித்தனர்.
- நாகையில் கண்டெடுக்கப்பட்ட பவுத்த சிற்பங்கள் உலகின் பல நாடுகளில் உள்ளன.
- அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பவுத்த சிலைகளுக்கு தனி கண்காட்சி ஒன்றை நடத்த வேண்டும்.
நாகப்பட்டினம்:
தமிழ் ஆட்சி மொழி, பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசை சென்னை தலைமைச் செயலகத்தில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் சந்தித்து, நாகப்பட்டினம் அருங்காட்சியகம் தொடர்பாக பின்வரும் கோரிக்கைகளை வைத்தார்.
நாகப்பட்டினம் அருங்காட்சியகம் பழமையும் சிறப்பும் மிக்கது.
எனவே அது தனித்துவத்துடன் இயங்குவதற்கு ஏற்ப, பாரம்பரிய அரசு கட்டடத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, அக்கட்டடத்தை முழுவதுமாக அருங்காட்சியகத்திற்கு ஒதுக்க வேண்டும்.
நாகப்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட பெளத்த சிற்பங்கள் உலகின் பல நாடுகளில் உள்ளன.
அவற்றை மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு அறைகளில் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் நாகப்பட்டினம் பெளத்த சிலைகளை நிரந்தரமாக காட்சிப்படுத்த வேண்டும்.
நாகப்பட்டினம் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பெளத்த சிலைகளுக்கு தனி கண்காட்சி ஒன்றை நடத்த வேண்டும் என்று நாகை எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
இது குறித்து ஆய்வு செய்து, விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் உறுதியளித்தார்.






