search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Handicrafts"

    • கோட்டமேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலு (47) இவர் ஓமலூர் சுங்கச்சாவடியில் பணியாற்றி வருகிறார்.
    • கோட்டை மேட்டுப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்துள்ளனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டமேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலு (47) இவர் ஓமலூர் சுங்கச்சாவடியில் பணியாற்றி வருகிறார்.

    இவர் கோட்ட மேட்டுப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் தார் சாலையில் ஓரமாக கிடந்த பையை எடுத்து பார்த்தபோது அந்தப் பையில் 3 பவுன் தங்கச் செயின் மற்றும் கவரிங் நகைகள் பட்டுப் புடவை உள்ளிட்ட பொருட்கள் இருந்தது இதுகுறித்து பாலு கோட்டைமேட்டுப்பட்டி ஊராட்சி தலைவருக்கு தகவல் கொடுத்தார்.

    கோட்டை மேட்டுப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரின் இரு சக்கர வாகனத்தில் இருந்து நகை இருந்த பை கீழே விழுந்தது தெரியவந்துள்ளது இதைத்தொடர்ந்து பாலு மற்றும் இதே பகுதியைச் சேர்ந்த சிலர் ஓமலூர் போலீஸ் நிலையத்தில் சாலையில் கண்டெடுத்த பையை ஒப்படைத்தனர்.

    இது குறித்து ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி பகுதியைச் சேர்ந்த வினோத் (23) என்ற வாலிபர் வாகனத்தில் பையை மாட்டிக் கொண்டு வரும்பொழுது வேகத்தடையில் இருந்து பை கீழே விழுந்து தொலைந்தது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து அந்த வாலிபரை கண்டுபிடித்து தொலைந்து போன நகை பொருட்களை அவரிடம் ஒப்படைத்தனர் கீழே கிடந்த நகை உள்ளிட்ட பொருட்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த பாலு, ராஜ்குமார் ஆகியோரை போலீசார் வெகுவாக பாராட்டினர். தொடர்ந்து உரியவரிடம் உரிய ஆவணங்களை பெற்று 3 பவுன் நகை கவரிங் நகை பட்டுப்புடவை உள்ளிட்ட பொருட்களை ஒப்படைத்தனர்.

    • பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் இந்த கண்காட்சியில் கைத்தறி ஆடைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் நகைகள் இடம்பெற்றுள்ளன.
    • வீடுகளை அலங்கரிக்கும் ஏராளமான கைவினை கலைப்பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

    சென்னை:

    திருவான்மியூர் கலாஷேத்ரா மற்றும் பாம்பன் சுவாமி கோவில் எதிர்புறம் சிஇஆர்சி கண்காட்சி மைதானத்தில் கிருஷ்ணா ஆர்ட்ஸ் அன்ட் கிராப்ட்ஸ் நடத்தும் ஹஸ்தகலா உத்சவ் எனப்படும் கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் கண்காட்சி நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெறும் இந்த கண்காட்சியில் கைத்தறி ஆடைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் நகைகள் இடம்பெற்றுள்ளன.

    கைத்தறி வகைகளில் பெண்களுக்கான ஆடைகள், அழகான வண்ணங்களிலும், புதுமையான டிசைன்களிலும் இடம் பெற்றுள்ளன. ஒடிசா இக்கத் சேலைகள், டிரஸ் மெட்டீரியல் போன்றவை வெஜிடபிள் டை வண்ணத்தில் கிடைக்கின்றன. இவை கையால் நெய்யப்பட்ட ஆடைகள் ஆகும். மத்திய பிரதேசத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள சந்தேரி சில்க் காட்டன் சேலைகள், காட்டன் டிரஸ் மெட்டீரியல், ஜம்தானி காட்டன் சேலைகள், ஜம்தானி சில்க் சேலைகள் போன்றவையும் உள்ளன.

    பெண்கள் விரும்பி அணியும் மேலாடைகள் காட்டன் வகைகளிலும், சில்க் வகைகளிலும் கிடைக்கின்றன. மேலும் குழந்தைகளுக்கான ஷார்ட் மேலாடைகள், அனார்கலி மேலாடைகள், ஸ்கர்ட் போன்றவை உள்ளன.

    வீடுகளை அலங்கரிக்கும் ஏராளமான கைவினை கலைப்பொருட்களும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. பிளாக் மெட்டலால் ஆன சாமி சிலைகள் இங்கு ஏராளம் உள்ளன. விநாயகர், கிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து சாமி சிலைகளை இங்கு தேர்வு செய்யலாம். பித்தளையால் ஆன சாமி சிலைகள், நூக்க மரத்தினால் ஆன சிலைகள், சிற்பங்கள், ஜோத்பூர் மரத்தினால் ஆன சிற்பங்கள், கலைபொருட்கள் போன்றவையும் உள்ளன.

    இளம்பெண்கள் விரும்பி அணியும் ஒரு கிராம் தங்க நகைகளும் இங்கு கிடைக்கின்றன. நெக்லஸ், மோதிரம், வளையல், ஒட்டியாணம், நெத்திச்சுட்டி, கொலுசு, பிரேஸ்லெட், செயின், ஆரம் உள்ளிட்ட நகைகளும் ஒரு கிராம் தங்க நகைகள் ஆகும்.

    வருகிற 15-ந் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கிறது. காலை 10.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சி உண்டு.

    • கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது.
    • நூற்றுக்கணக்கான கலைநய படைப்புகள் கண்காட்சியை பார்வையிட வந்த பெற் றோர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது.

    கீழக்கரை

    கீழக்கரை இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளியில் மாணவ பிரம்மாக்களின் கலைத்திறனை வெளிச் சத்திற்கு கொண்டு வரும் வகையில் ஆண்டு தோறும் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ மாணவிகளின் கைவினை பொருட்களின் கண்காட்சி நடைபெற்று வருவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக் கான கண்காட்சியில் மாணவ, மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவர் சளைத்த வர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஆர்வத்துடன் களம் இறங்கி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியை மிஞ்சும் வகை யில் மாணவர்கள் நூற்றுக் கணக்கான படைப்பு களை தயார் செய்து காட்சிப் படுத்தி இருந்தனர்.

    பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம், இஸ்லாமியா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், உயர் நிலைப்பள்ளி தலைமை யாசிரியர் முகமது முஸ்தபா ஆகியோர் கண்காட்சி யினை பார்வையிட்டு மாணவர் களின் தயாரிப்பு குறித்து கேட்டறிந்து பாராட்டினர். துணி, அட்டை, பேப்பர் களால் தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கலைநய படைப்புகள் கண்காட்சியை பார்வையிட வந்த பெற் றோர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது.

    • கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது.
    • இயக்குநர் சுப்புராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராமேசுவரம்

    மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில் ராமேசுவரம் வர்த்தகம் தெருவில் உள்ள ராஜராஜேசுவரி திருமண மகாலில் மாற்று திறனாளிகளால் தயாரிக்கப்பட்ட கைவினை பொருட்கள் மற்றும் விற்பனை கண்காட்சி தொடக்க விழா நடந்தது. மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார் குத்துவிளக்கேற்றி ஏற்றி தொடங்கி வைத்தார். சுமார் 50 ஸ்டால்களில் அமைக்கப்பட்டிருந்த கைவினை பொருட்கள், அழகு சாதன பொருட்களை பார்வையிட்டு விற்பணையை தொடங்கி வைத்தார்.

    வருகிற 7-ந்தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் அதிகளவில் கைவினை பொருட்களை விற்பதற்கு அமைச்சகத்தின் பொறுப்பாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் சென்னை மண்டல அதிகாரி பிரபாகரன், நாகர்கோவில் மாற்றுத்திறனாளி சேவை மைய உதவி இயக்குநர் ரூபசந்திரன், பெட்கிராட் நிர்வாக இயக்குநர் சுப்புராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது.
    • மாணவர்கள் களிமண், பனைஓலை, வைக்கோல், தேங்காய் நார், காகிதம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வீட்டு உபயோகப்பொருட்கள் செய்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர்கள் தயாரித்த நாட்டுப்புற கைவினை கலைப் பொருட்களின் கண்காட்சி நடந்தது. 8-ம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் நாட்டுப்புற கைவினைக் கலைகள் என்ற பகுதியில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு கைவினை கலைப் பொருட்களைச் செய்துவர தமிழாசிரியர் கிருஷ்ணவேணி மாணவர்களுக்கு செயல்திட்டம் கொடுத்திருந்தார்.

    அதன் அடிப்படையில் மாணவர்கள் களிமண், பனைஓலை, வைக்கோல், தேங்காய் நார், காகிதம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வீட்டு உபயோகப் பொருட்கள், ஓலை கொட்டான்கள், உடுக்கை, பறவைக் கூடுகள், படகு போன்ற பொருட்களைச் செய்தனர்.

    இந்த பொருட்களின் கண்காட்சியை தலைமையாசிரியர் சண்முகநாதன் தொடங்கி வைத்தார். இதில் தாதனேந்தலைச் சேர்ந்த அசிகா என்ற மாணவி செய்த பனை ஓலையில் புட்டு அவிக்கும் பெட்டி, பொக்கனாரேந்தல் ரித்திகாஸ்ரீ, திருப்புல்லாணி ஆயிசத் சபா, தவுபிக் நிஷா ஆகியோர் பனை ஓலையில் செய்திருந்த ரோஜா, தாமரை பூக்கள், குருவிகள் உருவங்கள் அனைவரையும் கவர்ந்தது.

    ×