என் மலர்
நீங்கள் தேடியது "Salem District News"
- கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
சேலம்:
சேலம் கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற (22-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிவதாபுரம், கந்தம்பட்டி, மேம்பால நகர், நெடுஞ்சாலை நகர், கென்னடி நகர், வசந்தம் நகர், கிழக்கு திருவாக்கவுண்டனூர், மேத்தாநகர், காசகாரனூர், கோனேரிக்கரை, கே.பி.கரடு வடபுறம், மூலப்பிள்ளையார் கோவில், சண்முகசெட்டி காடு, ஆண்டிப்பட்டி, வேடகாத்தம்பட்டி, திருமலைகிரி, புத்தூர், நெய்க்காரப்பட்டி, பெருமாம்பட்டி, சேலத்தாம்பட்டி, வட்டமுத்தம்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, தாளவாய்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, சுந்தர்நகர், மல்லமூப்பம்பட்டி, காந்திநகர், சித்தானூர், கக்கன் காலனி, உடையார் தோட்டம், ஆரியகவுண்டம்பட்டி, எம்.ஜி.ஆர் நகர், காமநாயக்கன்பட்டி, ராமகவுண்டனூர், போடிநாயக்கன்பட்டி, சோளம்பள்ளம், பழைய சூரமங்கலம், ஐய்யம்பெருமாம்பட்டி, மாங்குப்பை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.
- கடந்த 10-ந் தேதி ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் சாப்பிட்ட சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த பள்ளி மாணவி கலையரசி (14) வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார்.
- இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
நாமக்கல் பரமத்திரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 10-ந் தேதி ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் சாப்பிட்ட சந்தைப்பேட்டை புதூரை சேர்ந்த பள்ளி மாணவி கலையரசி (14) வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். மேலும் அசைவ உணவு சாப்பிட்டு மயங்கிய 43 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் சோதனை நடத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
அதிரடி சோதனை
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கதிரவன் தலைைமயில் அதிகாரிகள் 33 ஓட்டல்களில் நேற்று சோதனை நடத்தினர். இதில் சேலம் அஸ்தம்பட்டி, பேர்லேண்ட்ஸ், புதிய பஸ் நிலையம், சாரதா கல்லூரி ரோடு உள்பட பல பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதே போல சேலம் புறநகர் பகுதிகளான ஆத்தூர் எடப்பாடி பகுதிகளிலும் ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடந்த இந்த சோதனைகளில் சுகாதாரமற்ற முறையில் இருந்த 182 கிலோ கோழி இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக 1 0 கடைகளுக்கு விளக்கம் ேகட்டு நோட்டீஸ் அனுப்பி ய உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கடை உரிமையாளர்கள் அளிக்கும் அறிக்கையை பொறுத்து இந்த கடைகளுக்கு போலீசார் மூலம் சீல் வைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனால் கடை உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
2-வது நாளாக சோதனை
தொடர்ந்து 2-வது நாளாக இன்று சேலம் மாநகரில் ஜங்சன், கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை உள்பட பல பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சேலம் புறநகர் மாவட்ட பகுதிகளில் ஓமலூர், தம்மம்பட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் அந்தந்த பகுதி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையின் போது அதிக அளவில் தரமற்ற இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த சோதனை தொடரும் என்றும், ஓட்டல்களில் தரமற்ற உணவுகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
- அனுமதி இல்லாமல் விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஈடுபட்ட இந்து முன்னனி கோட்ட பொறுப்பாளர் பழனிசாமி உள்பட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நங்கவள்ளியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
இதையடுத்து வழிபாடு செய்த விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றில் கரைப்பதற்காக 30-க்கும் இந்து முன்னணியினர் வனவாசி, தானபதியூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஊர்வலமாக சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா தலைமையில் ஏராளமான போலீசார் வந்தனர். உரிய அனுமதி பெறாமல் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தக்கூடாது என போலீசார் தெரிவித்தனர்.
இதற்கு இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனையடுத்து அனுமதி இல்லாமல் விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஈடுபட்ட இந்து முன்னனி கோட்ட பொறுப்பாளர் பழனிசாமி உள்பட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
- விநாயகர் சிலை ஊர்வலம் முடிந்ததும் நேற்று நள்ளிரவில் அனைவரும் ஒரு மினிவேனில் ஊருக்கு புறப்பட்டனர்.
- வேன் இரவு 11.30 மணி அளவில் தீவட்டிப்பட்டி அருகே உள்ள கொண்ரெட்டியூர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்தது.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காருவள்ளி சின்ன திருப்பதி பகுதியை சேர்ந்த சாணக்கியன் (வயது 16), ஜான்ஷினா (16), மைக்கேல் தேவன்(25), சந்துரு (19), ஸ்ரீகாந்த்(19), முனீஸ் (17)) உள்பட 11 பேர் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மேளம் வாசிப்பதற்காக ஜோடிகுளி பகுதிக்கு சென்றனர். விநாயகர் சிலை ஊர்வலம் முடிந்ததும் நேற்று நள்ளிரவில் அனைவரும் ஒரு மினிவேனில் ஊருக்கு புறப்பட்டனர்.
வேன் கவிழ்ந்தது
வேன் இரவு 11.30 மணி அளவில் தீவட்டிப்பட்டி அருகே உள்ள கொண்ரெட்டியூர் என்ற இடத்தில் வந்தபோது திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் அனைவரும் காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஸ்ரீகாந்துக்கு மட்டும் பலத்த காயங்கள் ஏற்பட்டு இருந்தது. அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மீதமுள்ள 10 பேரும் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீசார் விசாரணை
இது குறித்து தகவல் கிடைத்ததும் தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கருங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற போது ஏலத்தில் விவசாயிகள் விற்பனைக்காக சுமார் 150 மூட்டை தேங்காய் பருப்பு.
- இந்த பொது ஏலத்தில் முதல் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.7,431 முதல் ரூ.7,639 வரை விற்பனையானது.
எடப்பாடி:
கொங்கணாபுரம் - ஓமலூர் பிரதான சாலையில் உள்ள கருங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற போது ஏலத்தில் விவசாயிகள் விற்பனைக்காக சுமார் 150 மூட்டை தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இந்த பொது ஏலத்தில் முதல் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.7,431 முதல் ரூ.7,639 வரை விற்பனையானது. 2-ம் ரக தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.5,889 முதல் ரூ.7,325 வரை விலைபோனது. இதன் மூலம் ரூ. 2 லட்சத்து 72 ஆயிரத்து 626-க்கு தேங்காய் பருப்புகள் ஏலம் போனது.
- தனியார் வாகனங்கள் சில அனுமதி இன்றி பள்ளி குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச் செல்கின்றனர்.
- இதனால் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சங்ககிரி போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
எடப்பாடி:
எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தனியார் வாகனங்கள் சில அனுமதி இன்றி பள்ளி குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச் செல்வதாகவும், இதனால் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சங்ககிரி போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
திடீர் ஆய்வு
இதையடுத்து எடப்பாடி, கொங்கணாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணியம் மற்றும் போக்குவரத்து ஆய்வா ளர்கள் செந்தில்குமார், புஷ்பா ஆகியோர் தலைமையில் தனித்தனி குழுக்க ளாக பல்வேறு இடங்க ளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஜலகண்டாபுரம்- சின்னப்பம்பட்டி பிரதான சாலையில் நேற்று மாலை போக்குவரத்து அலுவலர்கள் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு தனியார் வேன் ஒன்று உரிய அனுமதி இன்றி அப்பகுதியில் உள்ள பள்ளி குழந்தைகளை அதிக அளவில் ஏற்றி வந்ததை கண்டறிந்த போக்குவரத்து துறையினர் வாகனத்தை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து வாகன உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட வாகன டிரைவரிடம் ஆய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் இது போன்று உரிய அனுமதி இன்றி தனியார் வாகனங்கள் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்வது கண்டறி யப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்கு வரத்து துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழாவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
- அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த பெட்டியில் பயணம் செய்த கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த ஏகியா (28), சுகில்தேவ் (30) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.
சேலம்:
தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழாவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் கஞ்சா கடத்துவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த ரெயிலில் இன்று அதிகாலை ஜோலார் பேட்டையில் இருந்து சேலம் ஜங்சன் வரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பொது ரெயில்பெட்டியில் சீட் எண் 45-க்கு கீழ் பகுதியில் கேட்பாரற்று கிடந்த 2 பேக்குகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த பெட்டியில் பயணம் செய்த கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த ஏகியா (28), சுகில்தேவ் (30) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ஒடிசா மாநிலம் பெரம்பூர் பகுதிக்கு சென்று 4 கிலோ கஞ்சாவை வாங்கி வந்து கேரளாவுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதாக கூறினர். இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மூக்கனேரி யில் கரைக்க திட்டமிட்டுள்ள வர்கள் நாளை நண்பகல் 12 மணிக்குள் கொண்டு சென்று கரைத்திடல் வேண்டும்.
- விநாயகர் சிலை கரைத்தல் சம்மந்தமான பாதுகாப்பு பணிக்கு ஊர்க்காவல் படையினர் உட்பட மொத்தம் 1232 காவலர்கள் ஈடுபட உள்ளனர்.
சேலம்:
சேலம் மாநகரப் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களால் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை (20-ந் தேதி) காலை 10 மணிக்குள் சேலம் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து எடுத்துச் சென்று, திட்டமிட்ட நீர்நிலைகளில் கரைத்திடல் வேண்டும்.
இவற்றுள் மூக்கனேரி யில் கரைக்க திட்டமிட்டுள்ள வர்கள் நாளை நண்பகல் 12 மணிக்குள் கொண்டு சென்று கரைத்திடல் வேண்டும்.
இந்து அமைப்புகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் நாளை காலை 11 மணிக்குள் சம்மந்தப்பட்ட பகுதிகளிலிருந்து எடுத்து, ஊர்வலம் புறப்படும் இடமான எல்லை பிடாரியம்மன் கோவில் அருகில் கொண்டு வந்து உரிய வழிமுறைகளைப் பின்பற்றி மாலை 6 மணிக்குள் மூக்கனேரியில் கரைத்திடல் வேண்டும்.
மேற்படி விநாயகர் சிலை கரைத்தல் சம்மந்தமான பாதுகாப்பு பணிக்கு ஊர்க்காவல் படையினர் உட்பட மொத்தம் 1232 காவலர்கள் ஈடுபட உள்ளனர்.
சேலம் மாநகரில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலப் பாதையான எல்லை பிடாரியம்மன் கோவில் முதல் மூக்கனேரி வரையிலான சாலையில் பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்தில் நாளை மாற்றம் செய்யப்படுகின்றது.
மாற்று வழிப்பாதை விவரம்
ஊர்வலப்பாதை சுந்தர் லாட்ஜ் முதல் அஸ்தம்பட்டி ரவுண்டானா வரை மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மாற்றுபாதை அண்ணா பூங்கா, 4 ரோடு, ராமகிருஷ்ணா ரோடு மற்றும் அஸ்தம்பட்டி. வழியாக போக்குவரத்து மாற்றபட்டுள்ளது. இதேபோல் அஸ்தம்பட்டி முதல் மூக்கனேரி வரையான ஊர்வலப்பாதை மாற்றாக அஸ்தம்பட்டி, கலெக்டர் பங்களா, ஐயந்திருமாளிகை, மற்றும் கன்னங்குறிச்சி வழியாக போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு மாநகர போலீஸ் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கிச்சிபாளையத்திற்கு செல்ல இந்த சாலை தான் பிரதான சாலையாக உள்ளது.
- 5 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அந்த சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.
சேலம்:
சேலம் மாநகராட்சி 45-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான கருவாட்டு பாலம் அருகில் சுமார் 10 மீட்டர் தூரத்திறகு தார் சாலை போடப்படாமல் கடந்த 5 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அந்த சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கிச்சிபாளையத்திற்கு செல்ல இந்த சாலை தான் பிரதான சாலையாக உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் மழைநீர் தேங்கி நிற்கும் குழியில் நிலைத்தடுமாறி பலர் கீழே விழுகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், கருவாட்டு பாலம் அருகில் 10 மீட்டர் மட்டும் சாலை போடாமல் விட்டுள்ளனர்.
குண்டும் குழியுமாக காணப்படும் இந்த சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி கிடங்கிறது. இங்கு மட்டும் ஏன் சாலை போடவில்லை என்று தெரியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
- விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் கடந்த 18-ந் தேதி முதல் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
சேலம்:
தேர்தல் வாக்குறுதியாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி கடந்த 15-ந் தேதி தமிழகம் முழுவதும் சுமார் 1 கோடி பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்த சுமார் 56 லட்சம் பெண்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் கடந்த 18-ந் தேதி முதல் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களின் இ-சேவை மையங்களில் கலைஞர் மகளிர் உரிமை தொகை கிடைக்காத பெண்கள் இன்று முதல் மேல்முறையீடு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீடு செய்ய ஏராளமான பெண்கள் வந்திருந்தனர். அப்போது வட்டாச்சியர் அலுவலகத்தின் இ-சேவை முடங்கியது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
முற்றுகை
தொடர்ந்து அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் பெண்கள் தொடர்ந்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிட்ம அதிகாரிகள் கூறும்போது, இ-சேவை முடங்கியதால் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை. இது சரியானதும் அனைவரும் காத்திருந்து விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தனர்.