என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem District News"

    • பிளஸ்-2 மாண–வி–யான மேகலா தற்–போது நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்–தேர்–வில் தேர்ச்–சி–ய–டைந்–தார்.
    • இது–தொ–டர்–பாக போலீ–சார் வழக்–குப்–ப–திவு செய்து விசா–ரணை நடத்தி வரு–கின்–ற–னர்.

    ஆத்–தூர்:

    சேலம் மாவட்–டம் ஆத்–தூர் அருகே உள்ள பைத்–தூர் கிரா–மம் 9-வது வார்டை சேர்ந்–த–வர் கணே–சன் (வயது 44), எலக்ட்–ரீ–சி–யன். இவ–ரு–டைய முதல் மனைவி சத்யா. இவர்–க–ளுக்கு பிர–வீணா, மேகலா என்ற 2 மகள்–கள் உள்ள–னர். பிர–வீ–ணா–வுக்கு திரு–ம–ணம் ஆகி–விட்–டது.

    பிளஸ்-2 மாணவி

    பிளஸ்-2 மாண–வி–யான மேகலா தற்–போது நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்–தேர்–வில் தேர்ச்–சி–ய–டைந்–தார். முதல் மனைவி சத்யா இறந்–து–விட்–ட–தால் கணே–சன் வெள்–ளை–யம்–மாள் என்–ப–வரை 2-வதாக திரு–ம–ணம் செய்து கொண்–டார். இவர்–க–ளுக்கு 2 வய–தில் பிர–வீண் என்ற மகன் உள்–ளார்.

    இந்த நிலை–யில் பிளஸ்-2 முடித்த மேகலா தனது தந்–தை–யி–டம் கல்–லூ–ரி–யில் சேர்ந்து மேற்–ப–டிப்பு படிக்க வேண்–டும் என்று கூறி–னார். ஆனால் இதற்கு கணே–சன் மறுத்–த–தாக கூறப்–ப–டு–கிறது. இது–தொ–டர்–பாக தந்தை, மகள் இடையே அடிக்–கடி வாக்–கு–வா–தம் ஏற்–பட்டு வந்–துள்–ளது.

    தற்–கொலை

    இந்த நிலை–யில் நேற்று மாலை வீட்–டில் பிர–வீண் டி.வி.யில் கார்ட்–டூன் படம் பார்த்–துள்–ளான். அப்–போது மேகலா ரிமோட்டை எடுத்து வேறு ஒரு சேனலை மாற்–றி–னார். இத–னால் பிர–வீண் அழு–துள்–ளான்.

    அந்த நேரத்–தில் வீட்–டுக்கு வந்த கணே–சன், மேக–லா–வி–டம் இருந்து டி.வி. ரிமோட்டை வாங்கி கீழே போட்டு உடைத்–தார். இத–னால் தந்தை, மகள் இடையே வாக்–கு–வா–தம் ஏற்–பட்–டது. அப்–போது மன–வே–தனை அடைந்த மேகலா நான் கிணற்–றில் குதித்து தற்–கொலை செய்து கொள்ள போகி–றேன் என்று கூறி–விட்டு வீட்–டின் அரு–கில் உள்ள கிணற்றை நோக்கி ஓடி–னார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணே–சன் மகளை காப்–பாற்–று–வ–தற்–காக பின் தொடர்ந்து ஓடி–னார். ஆனால் அதற்–குள் கிணற்–றில் குதித்த மேகலா தண்–ணீ–ரில் மூழ்கி பலி–யா–னார். அதே நேரத்–தில் மகளை காப்–பாற்ற கணே–ச–னும் கிணற்–றுக்–குள் குதித்–தார். எதிர்–பா–ரா–த–வி–த–மாக அவ–ரும் தண்–ணீ–ரில் மூழ்கி பரி–தா–ப–மாக இறந்–தார். இதை பார்த்த வெள்–ளை–யம்–மாள் சத்–தம் போட்–டார். இதை–ய–டுத்து அக்–கம் பக்–கத்–தி–னர் அங்கு திரண்டு வந்–த–னர்.

    மாணவி உடல் மீட்பு

    இது–கு–றித்து தக–வல் கிடைத்–த–தும் ஆத்–தூர் தீய–ணைப்பு நிலைய அலு–வ–லர் அசோ–கன் தலை–மை–யில் வீரர்–கள் அங்கு விரைந்து சென்–ற–னர். பின்–னர் சுமார் ஒரு மணி நேரம் போராடி மாணவி மேக–லா–வின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்–த–னர்.

    உறவினர்கள் கதறல்

    தொடர்ந்து கணே–ச–னை தீயணைப்பு வீரர்கள் தேடினர். கிணறு பல அடி ஆழம் என்பால் நீரில் மூழ்கிய கணேசனின் கதி என்ன? என தெரியாமல் இருந்தது. இரவில் போதிய வெளிச்சம் இல்லாததால் தேடும் பணியை நிறுத்தினர். இருப்பினும் தொடர்ந்து மோட்டார் மூலம் கிணற்றில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. அவரது குடும்பத்தினர் கிணற்றின் கரையில் கூடி சோகத்துடன் இருந்தனர். இன்று காலை கணேசன் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    போலீசார், உடலை கைப்–பற்றி பிரேத பரி–சோ–த–னைக்–காக அரசு ஆஸ்–பத்–தி–ரிக்கு அனுப்பி வைத்–த–னர். இது–தொ–டர்–பாக போலீ–சார் வழக்–குப்–ப–திவு செய்து விசா–ரணை நடத்தி வரு–கின்–ற–னர்.

    • 7-ம்‌ வகுப்பு மற்றும்‌ 8-ம்‌ வகுப்பு ஆகிய வகுப்புகளின்‌ சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வுப்போட்டிகள்‌ இன்று சேலம் காந்தி விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.
    • பயிற்சி கலகெடர் சங்கேத்‌ பல்வந்த்‌ வாகே தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பன்ளிகளில் பயிலும், மாணவ-மாணவியர் விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, ஊட்டி, விழுப்புரம், சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவியர்க கான விளையாட் விடுதிகள் ஈரோடு. திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி மற்றும் சென்னை, ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், திருச்சி, ஸ்ரீரங்கம்) மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களிலும், மாணவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கம் மற்றும் ஈரோட்டிலும், மாணவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சத்தூவாச்சாரி, வேலூர் ஆகிய இடங்களிலும் செயல்பட்டு வருகின்றன.

    இந்த விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுக்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ம் வகுப்பு 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு சேர்க்கையும் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 6-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளின் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வுப்போட்டிகள் இன்று சேலம் காந்தி விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. பயிற்சி கலகெடர் சங்கேத் பல்வந்த் வாகே தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் மற்றும் பயிற்றுநர்கள் பங்கேற்றனர். இத்தேர்வு போட்டியில் மாணவ-மாணவியர்கள் 108பேர் கலந்து கொண்டனர். 

    • மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிடெட் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.
    • அதன்படி நடப்பாண்டு சிடெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    சேலம்:

    மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிடெட் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு சிடெட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக இந்திய அரசு உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    சிடெட் தேர்வு நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆன்லைன் மூலமாக மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. நடப்பாண்டுக்கான தேர்வு வருகிற ஜூலை மற்றும் ஆகஸ்டு ஆகிய மாதங்களுக்கு இடைப்பட்ட நாட்களில் நடைபெற உள்ளது.

    கல்வி தகுதி

    1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான ெதாடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக பணிபுரிய விரும்புபவர்கள் பிளஸ்-2 தேர்ச்சியுடன் 2 வருட டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்திருக்க வேண்டும். இவர்கள் 1 முதல் 5-ம் வரையிலான ஆசிரியர் பணிக்கு சிடெட் தாள்- 1 எழுத தகுதியுடையவர்கள் ஆவர். 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக பணிபுரிய ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை முடித்து பி.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இவர்கள் சிடெட் தாள்-2 எழுத தகுதியுடைவர்கள் ஆவர்.

    ஆசிரியர் பணிக்கான பி.எட்., டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பு ஆகிய தகுதியை என்.சி.டி.இ -ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்

    களுடன் தேவையான கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

    2 தாள் தேர்வையும் எழுத விரும்பினால் ரூ.1200 கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 26.05.2023 ஆகும். தமிழ்நாட்டில் இந்த தேர்வு சேலம், நாகர்கோவில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பதிவுச்சான்று இல்லாமல் வெளிமாநிலத் தொழிலாளர்களை பணி அமர்த்தினால் அதற்கு தடைவிதிப்பதோடு சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
    • மேலும், பதிவு சான்று பெறுவதற்கு வெளிமாநில தொழிலாளர்களின் தற்போதைய விவரங்களை https://labour.tn.gov.in/ism என்ற இணையத்தளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யவேண்டும்.

    சேலம்:

    சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கு முன்னர் சம்ந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகங்கள் சேலம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநரிடம் பதிவுச்சான்று பெற்ற பின்புதான் பணியமர்த்த வேண்டும்.

    பதிவுச்சான்று இல்லாமல் வெளிமாநிலத் தொழிலாளர்களை பணி அமர்த்தினால் அதற்கு தடைவிதிப்பதோடு சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மேலும், பதிவு சான்று பெறுவதற்கு வெளிமாநில தொழிலாளர்களின் தற்போதைய விவரங்களை https://labour.tn.gov.in/ism என்ற இணையத்தளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யவேண்டும்.

    பதிவேற்றம் செய்யப்பட்ட விவரத்தினை dcifsalem@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு சாப்ட் காப்பி ஆகவும் சேலம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகம், 27/2 ஏ 2, காந்தி ரோடு, வருமான வரித்துறை அலுவலகம் அருகில், சேலம்-636007. என்ற முகவரிக்கு அதன் நகல்களை அனுப்புமாறு சேலம், தொழிலக பாதுபாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    வெளிமாநிலத் தொழிலாளர்களில் பணியின்போதும், பணியில் இல்லாமல் ஓய்வின் போதும் மற்றும் இரவு நேரங்களிலும் உயிருக்கு கேடு ஏதும் ஏற்படாவண்ணம் பாதுகாப்பது தொழிற்சாலை நிர்வாகங்கள் உரிய முறையில் கண்காணித்திட வேண்டும், வேறு ஏதாவது நேர்ந்தால் உடனே அருகிலுள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவகல் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் இது குறித்து சேலம், ராசிபுரம், நாமக்கல் மற்றும் பரமத்தி வேலூர் தாலுகாக்க ளை சேர்ந்தவர்கள் சேலம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் தினகரனை 9597386807, 9445869224 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

    மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி மற்றும் திருச்செங்கோடு தாலுக்காக்களை சேர்ந்தவர்கள் மேட்டூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநரை 9445869225 என்ற எண்ணிலும், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தினர் ஓசூர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் சந்திரமோகனை 9994847205 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • வீரகனூர் அருகே கடந்த 2020-ம் ஆண்டு 14 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக சேலம் குழந்தைகள் நல ஆணையருக்கு தகவல் கிடைத்தது.
    • தலைமறைவாக இருந்து வந்த செல்வத்தை, செக்கனூர் பொன்னாளி அம்மன் கோவில் அருகில் நேற்று கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே கடந்த 2020-ம் ஆண்டு 14 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக சேலம் குழந்தைகள் நல ஆணையருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட குழந்தைகள் நல அலுவலர், ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், சிறுமியை மீட்டு விசாரித்தனர்.

    இது தொடர்பாக வீரகனூர் அருகே ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் செல்வம் (38) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் செல்வத்தை போலீசார் கைது செய்யவில்லை.

    இந்த நிலையில் தற்போது அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையை படித்த நீதிபதி, சிறுமியின் வாக்குமூலம் தெளிவாக இருப்பதால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட செல்வத்தை கைது செய்து ெஜயிலில் அடைக்க உத்தரவிட்டார்.

    ஜெயிலில் அடைப்பு

    இதையடுத்து வீரகனூர் போலீசார், வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக இருந்து வந்த செல்வத்தை, செக்கனூர் பொன்னாளி அம்மன் கோவில் அருகில் நேற்று கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்வத்தை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 3 ஆண்டு தலைமறைவாக இருந்த கார் டிரைவர் தற்போது தான் கைது செய்து இருக்கும் சம்பவம் வீரகனூர் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    • நேற்று மோகன்ராஜ், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள குரங்குச்சாவடி ஏழுமலை கவுண்டர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 27). இவருக்கு திருமணமாகி திவ்யா (24) என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

    இந்த நிலையில் திவ்யாவின் தம்பிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு தன்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லை என்ற வருத்தத்தில் மோகன்ராஜ் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மோகன்ராஜ், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்டத்தின் நெருஞ்சிப்பேட்டை பகுதியை இணைக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீர் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
    • அணையின் நீர்த்தேக்க பகுதியில் சேலம்-ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் நடைபெற்று வந்த விசைப்படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    எடப்பாடி:

    எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி அருகே சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்டத்தின் நெருஞ்சிப்பேட்டை பகுதியை இணைக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீர் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கதவணையின் ஆண்டு பராமரிப்பு பணிகள் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 4-ந் தேதி அணையில் இருந்த நீர் பெருமளவு வெளியேற்றப்பட்டது.

    இதனால் அணையின் நீர்த்தேக்க பகுதியில் சேலம்-ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் நடைபெற்று வந்த விசைப்படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இதற்கு மாற்று ஏற்பாடாக சிறிய ரக படகுகளில் பயணிகள் சென்று வந்தனர்.

    கதவணை பகுதியில் உள்ள சட்டர்கள் மற்றும் நீர் மின் உற்பத்தி நிலைய தடுப்புகள் மற்றும் சல்லடை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டன.

    இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் அணையில் மீண்டும் தண் ணீர் தேக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு தற்காலிக மாக நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகு போக்குவரத்து நேற்று மீண்டும்தொடங்கியது.

    • பள்ளிகளின் வாகனங்களை ஆண்டுதோறும் ஆத்தூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • ஆத்தூர் வட்டாரத்தில் மொத்தம் உள்ள தனியார் பள்ளிகளுக்கான 497 வாகனங்களில் நேற்று 415 வாகனங்கள் ஆய்வுக்கு உட்பட்படுத்தப்பட்டன.

    ஆத்தூர்:

    ஆத்தூர் வட்டார பகுதியில் உள்ள அனைத்து தனியார், நர்சரி, மெட்ரிக், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் வாகனங்களை ஆண்டுதோறும் ஆத்தூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் ஆத்தூர் வட்டாரத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி மணிவிழுந்தான் கிராமத்தில் உள்ள கல்லூரியில் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா தலைமையில் ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    மோட்டார் வாகன ஆய்வாளர் தி. செல்வகுமார் மற்றும் பணியாளர்கள் பள்ளி பஸ்களை ஆய்வு செய்தனர் ஆத்தூர் வட்டாரத்தில் மொத்தம் உள்ள தனியார் பள்ளிகளுக்கான 497 வாகனங்களில் நேற்று 415 வாகனங்கள் ஆய்வுக்கு உட்பட்படுத்தப்பட்டன. இவற்றில் 20 பள்ளி வாகனங்கள் தகுதி இழப்பு செய்யப்பட்டன. 

    • அசோக்குமார் (வயது 33). எம்.பி.ஏ பட்டதாரியான இவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததால் அசோக்குமார் மன உளைச்சலில் இருந்தார்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணன் நகர், 2-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் அசோக்குமார் (வயது 33). எம்.பி.ஏ பட்டதாரியான இவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இதனிடையே படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததால் அசோக்குமார் மன உளைச்சலில் இருந்தார். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி எலி மருந்தை சாப்பிட்ட அவர், வீட்டில் யாரிடமும் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்து விட்டார்.

    கடந்த 19-ந் தேதி அசோக்குமாருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்படவே அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அப்போது, எலி மருந்து சாப்பிட்டதை கூறியுள்ளார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அசோக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் உழவர் சந்தைகளுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.
    • சமீப காலமாக உழவர் சந்தைகளில் தக்காளி 12 ரூபாய் முதல் விற்பனை ஆகிறது.

     சேலம்:

    சேலம் உழவர் சந்தைகளுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. இந்த காய்கறிகளை சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். சமீப காலமாக உழவர் சந்தைகளில் தக்காளி 12 ரூபாய் முதல் விற்பனை ஆகிறது. மற்ற காய்கறிகளின் விலை வருமாறு:-

    தக்காளி ரூ.12-18. உருளைக் கிழங்கு ரூ.30-32, சின்ன வெங்காயம் ரூ.35-55, பெரிய வெங்காயம் ரூ 18-20, பச்சை மிளகாய் ரூ.50-55, கத்தரி ரூ.45-50, வெண்டைக்காய் ரூ.12, முருங்கைகாய் ரூ.30-40, பீர்க்கங்காய் ரூ.40, சுரக்காய் ரூ.18-20, புடலங்காய் ரூ. 24, பாகற்காய் ரூ.45, தேங்காய் ரூ.25-28, முள்ளங்கி ரூ.22-24, பீன்ஸ் ரூ.75-80, அவரை ரூ.50-60, கேரட் ரூ. 60-66, மாங்காய் ரூ.20-30, வாழைப்பழம் ரூ.35-50, கீரைகள் ரூ. 15-20, பப்பாளி ரூ.24, கொய்யா-ரூ.50, சப்போட்டா ரூ.35, மாதுளை ரூ.180, சாத்துக்குடி ரூ.70.

    • சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டி பிளஸ் தியேட்டரில் உள்ள கடைகளில் காலாவதியான சிப்ஸ் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு அதிகாரி களுக்கு தகவல் கிடைத்தது.
    • அப்போது காலாவதியான 2 லிட்டர் பால், தயாரிப்பு காலாவதி தேதி குறிப்பிடாத 71 கிலோ ஐஸ்கிரீம், 18 கிலோ கேக் கிலோ சிப்ஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது .

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டி பிளஸ் தியேட்டரில் உள்ள கடைகளில் காலாவதியான சிப்ஸ் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு அதிகாரி களுக்கு தகவல் கிடைத்தது.

    அதன்ேபரில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவலிங்கம் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர் . அப்போது காலாவதியான 2 லிட்டர் பால், தயாரிப்பு காலாவதி தேதி குறிப்பிடாத 71 கிலோ ஐஸ்கிரீம், 18 கிலோ கேக் கிலோ சிப்ஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது .

    மேலும் தியேட்டர் நிர்வாகத்தினர் மீது உணவு பாதுகாப்பு சட்டம்- 2006 பிரிவு 52, 56, 58 -ன் படி நீதிவழி தீர்வு அலுவலரிடம் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.

    • சின்ன கொல்லப்பட்டி பஸ் நிலையம் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் சென்று கொண்டிருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதியது.
    • இதன் பின்னரும் நிற்காத அந்த கார், அங்கிருந்த இருந்த டிரான்ஸ்பார்மர் பெட்டியின் மீதும் மோதி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    சேலம்:

    சேலம் - ஏற்காடு பிரதான சாலையில் இன்று காலை 6.45 மணி அளவில் ஏற்காட்டில் இருந்து சொகுசு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. சின்ன கொல்லப்பட்டி பஸ் நிலையம் அருகே வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் சென்று கொண்டிருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதியது.

    இதன் பின்னரும் நிற்காத அந்த கார், அங்கிருந்த இருந்த டிரான்ஸ்பார்மர் பெட்டியின் மீதும் மோதி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்து வாகனத்தை மீட்டனர்.

    பின்னர் வாகனத்தை ஒட்டி வந்த திருச்சி பூந்தோட்டம் அருகே உள்ள ஆர்.சி.காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன் மகன் மார்ஷல் (வயது 37) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில், ஏற்காட்டில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் மத போதகர்கள் கூட்டம் நடைபெறுவதாகவும், இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள திருச்சியில் இருந்து சேலம் ஜங்ஷனுக்கு வந்தவர்களை அழைத்து வர ஏற்காட்டில் இருந்து சென்றபோது, விபத்து நடந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் மார்ஷலிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஏற்காடு பிரதான சாலையில் சொகுசு கார், மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதியதால் அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் சாலையோரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் பெட்டியின் மீது கார் மோதியபோது, தானாகவே மின்சாரம் துண்டிக்கப்பட்ட தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

    ×