என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது.

    இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

    இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக 2 குழுவாக பிரித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 93 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
    • அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஜெயலலிதாவின் நினைவி இடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் ஜெயலலிதாவின் நினைவி இடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

    இந்த நிலையில், த.வெ.க. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் செங்கோட்டையன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று வாழ்ந்து, நாட்டு மக்கள் எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும் என்று தன்னை அர்ப்பணித்து கொண்டு தவவாழ்வு வாழ்ந்த இதய தெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில் அவர்களின் தியாகங்களையும், பெரும் புகழையும் போற்றி வணங்குகிறேன் என்று கூறியுள்ளார்.


    • சென்னையில் இருந்து புறப்படும் 32 விமானங்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • பிற இடங்களில் இருந்து சென்னை வரும் 33 விமானங்களின் சேவையும் ரத்து.

    நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ நேற்று 3-வது நாளாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டது.

    மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. இதனால் 3-வது நாளாக பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

    தேவையான விமான பணியாளர்களை அமர்த்துவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் விமான போக்குவரத்து அட்டவணைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அந்த விமான நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதித்தது.

    இந்த நிலையில், 4-வது நாளாக இன்று சென்னையில் 65 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் 32 விமானங்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பிற இடங்களில் இருந்து சென்னை வரும் 33 விமானங்களின் சேவை என நேற்று இரவு 8 மணி முதல் தற்போது வரை 65 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

    • எழும்பூரில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும்.
    • சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் ஏற்கனவே, தாம்பரம், கடற்கரை ரெயில் நிலையங்களில் இருந்து சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்கள் மேலும் 10 நாட்கள் அதாவது இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16866), கொல்லத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20636), ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் (22662), ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16752) இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரையில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.

    * சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (16865) நாளை (சனிக்கிழமை) முதல் வரும் 15-ந்தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும்.

    * எழும்பூரில் இருந்து புறப்பட்டு கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20635), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும்.

    * சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் (22661), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும்.

    * சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16751), மேற்கண்ட தேதியில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.42 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும்.

    * சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22158), மேற்கண்ட தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

    தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்காலிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிட மறுத்தனர்.
    • அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் ஜனவரி மாதம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

    திருப்பூர்:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசுத்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் மறியலை கைவிட மறுத்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் போலீசாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    அப்போது அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் ஜனவரி மாதம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். 

    • கோவிலுக்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.
    • பாலாற்றில் வெள்ளம் குறைந்தபிறகு ஆஞ்சநேயர் கோவில் நடை திறக்கப்பட்டு, அங்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் உள்ள சண்முகபுரம் பாலாற்றங்கரையில் சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆஞ்சநேயர் கோவில் அமைந்து உள்ளது.

    இந்த நிலையில் பொள்ளாச்சி மற்றும் அர்த்தநாரிப்பாளையம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.

    இதன்காரணமாக பாலாற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே பாலாற்றின் கரையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

    மேலும் கோவிலுக்கு செல்லும் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. எனவே பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆஞ்சநேயர் கோவில் நடை சாத்தப்பட்டது.

    பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள், பாலாற்றங்கரையில் சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.

    பாலாற்றில் வெள்ளம் குறைந்தபிறகு ஆஞ்சநேயர் கோவில் நடை திறக்கப்பட்டு, அங்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    கோவை கவியருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வால்பாறை சண்முகா எஸ்டேட், சக்தி எஸ்டேட், தலநார் எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால் வனப்பகுதியில் உள்ள நீரோடைகள் மற்றும் சிற்றாறுகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறையிளர் தடை விதித்து இருந்தனர். இந்த நிலையில் ஆழியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது நீர்வரத்து குறைந்து உள்ளது. இதனால் கவியருவியில் தற்போது சீராக தண்ணீர் கொட்டி வருகிறது.

    எனவே சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்தனர். தொடர்ந்து கவியருவிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடி வழியாக புறப்பட்டு சென்று அங்குள்ள கவியருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ச்சியுடன் திரும்புவதை பார்க்க முடிந்தது.

    மழையின் அளவு, நீர்வரத்து ஆகியவற்றை பொறுத்து கவியருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். 

    • தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    வடதமிழக - புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மெதுவாக மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று மாலை 17.30 மணிஅளவில், வடதமிழக பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்து, இன்று காலை 08.30 மணி அளவில் மேலும் வலுவிழந்தது.

    தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

    தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    லட்சத்தீவு பகுதிகள் மற்றும் கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • தி.மு.க. அரசு தோல்வி பயத்தில் நடுநடுங்கி போய் உள்ளது.
    • 144 தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு அவசியமே இல்லை.

    நெல்லை:

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நெல்லையில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பிரசார பயணத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த வரவேற்பு எங்கள் கூட்டணியின் வெற்றிக்கான அறிகுறி ஆகும்.

    கள்ளக்குறிச்சி பகுதியில் ஒரு கிராமத்தில் சுற்றுப் பயணம் சென்றபோது அங்கு மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. ஆரம்ப சுகாதார நிலைய வசதி கூட இல்லை. வீடுகளில் தீபம் ஏற்றுவது போலவே கார்த்திகை நாளன்று கோவில்களிலும் தீபம் ஏற்றப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

    அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்றுவதில் யாருக்கு என்ன பிரச்சனை இருக்கிறது? முதலில் அந்த மலைக்கு பிரச்சனை செய்தார்கள். ஆனால் குன்றம் குமரனுக்கு என தீர்ப்பு வந்தது .

    முதலமைச்சரின் காவல்துறை எந்த வேலையும் செய்யவில்லை. கோவில்களுக்கு எதிரான வேலை என்றால் முதல் ஆளாக வந்து விடுகிறார்கள். நேற்று திருப்பரங்குன்றத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அறநிலையத்துறை சார்பில் இந்த தீர்ப்பை எதிர்த்துமேல் முறையீடு செய்துள்ளார்கள். பிரச்சனையை உருவாக்க வேண்டும். கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசு செயல்படுகிறது.

    வாக்கு வங்கியை குறிவைத்து இது போன்ற நடவடிக்கையை தி.மு.க அரசு மேற்கொள்கிறது. தி.மு.க. அரசு ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறது.

    கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றினால் கலவரம் வரும் என்று பேசுகிறார். அதற்கான வாய்ப்பே இல்லை.

    தீபம் ஏற்றுவதற்கு இஸ்லாமியர்கள் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அங்கு 2 மதத்தினரும் ஒன்றாகவே இருக்கின்றனர். முதலமைச்சரின் பிரித்தாலும் சூழ்ச்சியினாலேயே தற்போது இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதானத்தை வேரறுப்போம் என்று கூறியுள்ளார். அதனை முருகன் பார்த்துக் கொள்வார். இன்று 3 மணி வரை நேரம் இருக்கிறது. நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பரணி தீபத்தை மலை மீது ஏற்றுவோம். இந்த தீர்ப்புக்கு அறநிலையத்துறை தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    தி.மு.க. அரசு தோல்வி பயத்தில் நடுநடுங்கி போய் உள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு அவசியமே இல்லை. அவ்வாறு பிறப்பித்தாலும் 3 பேர் வரை செல்வதற்கு அனுமதி உள்ளது.

    ஓ.பி.எஸ். டெல்லிக்கு சென்று வந்தது தெரியும். ஆனால் எதற்காக சென்று வந்தார் என்பது எனக்கு தெரியாது. தி.மு.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும். அதனை வரவேற்கும் கட்சிகள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

    செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நமது கொடி பறக்கும். இனி யாருடனும் ரகசிய சந்திப்புகள் என்பது கிடையாது. நேரடி சந்திப்பு தான் இருக்கும். தமிழக வெற்றிக் கழகத்தில் தி.மு.க. அமைச்சர்கள் சேருவார்கள் என்று ஆதவ் அர்ஜுனா கூறுகிறார். அதே போல் பா.ஜ.க.விற்கும் வருவார்களா? என்று கேட்கிறீர்கள் பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

    • மதுரை ஐகோர்ட் வளாகத்திற்கு மட்டும் தான் மத்திய படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • தனி நீதிபதியின் உத்தரவால் மத பிரச்சனை ஏற்படும் நிலை உள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1-ம் தேதி உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அதிகாரிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நேற்று பிற்பகலில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனிடம் வக்கீல் அருண் சுவாமிநாதன் உள்ளிட்டோர் முறையிட்டனர்.

    அதன் பேரில் நேற்று மாலை இந்த வழக்கு அவசர மனுவாக விசாரிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் ராம ரவிக்குமார் உள்ளிட்ட 10 பேர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். அவர்களுக்கு மதுரை ஐகோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள மத்திய பாதுகாப்பு படையினர் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோவில் செயல் அலுவலர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் நேற்று மதுரை ஐகோர்ட் நிர்வாக நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக முறையிடப்பட்டது.

    இதையடுத்து அவர் இன்று இந்த வழக்கை விசாரிப்பதாக தெரிவித்து இருந்தார். அதன் பேரில் இன்று நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு இந்த வழக்கு காலை 10.30 மணி அளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    அப்போது தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபத்தை தனி நபர்கள் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி ஜி. ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது. மேலும் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தவருக்கு பாதுகாப்பாக மத்திய படை சி.ஐ. எஸ்.எப். செல்ல வேண்டும் என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவு ஏற்புடையதல்ல.

    மதுரை ஐகோர்ட் வளாகத்திற்கு மட்டும் தான் மத்திய படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வேறு பணிகளுக்கு அவர்களை அமர்த்த அதிகாரம் கிடையாது. மேலும் திருப்பரங்குன்றம் மலை விவகாரம் சம்பந்தமாக ஏற்கனவே பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி அந்த மலையில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக தனி நீதிபதி எந்த உத்தரவையும் பிறப்பிக்க அதிகாரம் இல்லை. எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவு என்பது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும். தனி நீதிபதியின் உத்தரவால் மத பிரச்சனை ஏற்படும் நிலை உள்ளது.

    இதனால் அரசின் அச்சம் உண்மையாகி விட்டது. நேற்று திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் பேரிகார்டுகள் உடைக்கப்பட்டு காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. தனி நீதிபதியின் உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு உள்ளது. சட்டத்தை மீறி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    நீதிபதிகள் வழக்குகளை விசாரிக்கலாம், விளக்கம் கேட்கலாம். ஆனால் வேறு உத்தரவுகளை பிறப்பிக்க இயலாது. திருப்பரங்குன்றத்தில் கலவரம் ஏற்படும் என்பதால் தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக 30 நாட்கள் அவகாசம் இருந்தும் தனி நீதிபதி அவசரம் காட்டுவது ஏன்.

    இவ்வாறு அரசு தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டது.

    தொடர்ந்து மனுதாரர் தரப்பில் கூறுகையில், திருப்பரங்குன்றத்தில் பிரிட்டிஷ் காலத்தின்போது தீபத்தூணில் தீபம் ஏற்றுவது நிறுத்தப்பட்டது. அதனை நாம் ஏன் பின்பற்ற வேண்டும். தீபம் ஏற்றுவது என்பது தமிழர்களின் மரபு கலாச்சாரம், பழக்கம், பண்பாடு ஆகும்.

    ஐகோர்ட் உத்தரவின்படி தீபம் ஏற்ற செல்லும்போது போலீசார் பாதுகாப்பு வழங்க முடியாது என தெரிவித்தனர். இதன் காரணமாக தனி நீதிபதியிடம் முறையிட்ட பின் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருடன் சென்றோம். ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்றாததால் தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தோம் என்றனர்.

    பின்னர் நீதிபதிகள் கூறுகையில், இந்த வழக்கின் உத்தரவு நகல் கொடுத்த பின் 13 மணி நேரத்திற்கு பின் மேல்முறையீடு தாக்கல் செய்தது ஏன்? நேற்று மாலை 5 மணிக்கு விசாரணைக்கு வந்தபோதும் கோவில் தரப்பில் இருந்து யாரும் ஆஜராகவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவை குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற வேண்டாமா? ஒரு மதத்தின் நம்பிக்கையை தடுப்பது எப்படி சமூக நல்லிணக்கம் ஆகும்.

    திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது ஏன்? எப்போது பிறப்பிக்கப்பட்டது? அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூண் கோவிலை விட பழைமையானதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அரசு தரப்பு தீபத்தூண் பழையானது தான். ஆனால் கோவிலை விட பழைமையானது தான் என தெரியவில்லை.

    தொடர்ந்து நீதிபதிகள் திருப்பரங்குன்றம் மலையில் யாருக்கும் பாதிப்பில்லாமல் தீபம் ஏற்றுவதை ஒரு தரப்பினர் ஏன் தடுக்க வேண்டும்.

    மத நல்லிணக்கம் என்பது ஒருவரை, மற்றொருவர் எதுவும் செய்யவிடாமல் தடுப்பதில் அல்ல. இருதரப்பும் இணைந்து தங்களுக்கானவற்றை செய்து கொள்வதிலும், செய்ய அனுமதிப்பிதிலும் தான் உள்ளது. இந்த வழக்கின் உத்தரவு இன்றே பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    • கருமேகங்கள் திரண்டு வானம் இருண்டு கனமழை கொட்டி தீர்த்தது.
    • சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தாலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்தது. டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த மழை கடந்த 30-ந்தேதி முதல் வட தமிழகத்தில் பெய்தது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மட்டுமின்றி ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் 3 நாட்கள் பலத்த மழை பெய்தது.

    30-ந் தேதி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் 1-ந் தேதி முதல் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கியது. பகலும் இரவாக காட்சிஅளித்தது. கருமேகங்கள் திரண்டு வானம் இருண்டு கனமழை கொட்டி தீர்த்தது.

    இதனால் சென்னை வாசிகள் வீடுகளில் முடங்கினர். டிட்வா புயல் சென்னை அருகே மையம் கொண்டதால் விட்டு விட்டு கனமழை பெய்தது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    இன்று காலை 7 மணி வரை மழை தூறிக் கொண்டே இருந்தது. சென்னையில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தாலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கி நின்றதாலும், ஒரு சில பகுதிகளில் மழைநீர் வடியாததாலும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் 4 நாட்களுக்கு பிறகு இன்று மழை நின்றதால் சூரிய பிரவேசம் இருந்தது. சென்னை மக்கள் வெயிலை இன்று பார்த்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். தினமும் பயன்படுத்திய துணிமணிகள் எல்லாம் வீடுகளில் உலர வைக்க முடியாமல் இருந்தனர்.

    வெயில் இன்று தலைகாட்டியதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். பயன்படுத்திய உடைகளையெல்லாம் துவைத்து வெயிலில் காய வைத்தனர்.

    மழையால் சாலையோர கடைகள் காணாமல் போனது. காய்கறி, பழங்கள் விற்கும் சிறு வியாபாரிகள் இன்று மீண்டும் விற்பனையை தொடங்கினர். சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் கனமழை மற்றும் குளிரால் வெயிலை தேடும் நிலை ஏற்பட்டது.

    • டேர்ம் காப்பீடு என்பது தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமான ஆயுள் காப்பீட்டு வடிவமாக மாறியுள்ளது.
    • முக்கியமாக இணையத்தின் மூலம் காப்பீடு வாங்கும்போது பல நன்மைகள் கிடைக்கின்றன.

    இன்றைய வேகமான வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள் எப்போது நேரும் என்பதை யாராலும் முன்கூட்டியே கணிக்க முடியாது. குடும்பத்தின் நிதி பாதுகாப்பு என்பது வாழ்க்கையின் அடிப்படை தூண்களில் ஒன்று.

    அந்தப் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று கால காப்பீட்டுத் திட்டம் ஆகும். குறிப்பாக, குறைந்த பிரீமியத்தில் அதிக பாதுகாப்பு வழங்கும் தன்மை காரணமாக, டேர்ம் காப்பீடு (Term Insurance) என்பது தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலமான ஆயுள் காப்பீட்டு வடிவமாக மாறியுள்ளது.

    அதோடு, ஆன்லைன் காப்பீட்டு தளங்களின் வளர்ச்சியால், பலரும் சில நிமிடங்களில் ACKO Term Insurance போன்ற திட்டங்களை ஒப்பிட்டு வாங்க முடிகிறது.

    கால அடிப்படையிலான காப்பீடு என்றால் என்ன?

    காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பாதுகாப்பு வழங்கும் வாழ்க்கை காப்பீட்டை கால காப்பீடு என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் வரை பாதுகாப்பு அளிக்கும் ஒப்பந்தமாகும். அந்தக் காலத்திற்குள் காப்பீடு வாங்கிய நபர் உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு முன்னதாக ஒப்புக்கொண்ட தொகை வழங்கப்படும்.

    இது ஒரு முதலீட்டு திட்டம் இல்லாததால், முழுக்க முழுக்க பாதுகாப்பையே நோக்கமாகக் கொண்டுள்ளது. அதனால் பிரீமியம் குறைவாகவும் பாதுகாப்பு அதிகமாகவும் இருக்கும். குடும்பத்திற்கு நிதிச் சுமை ஏற்படாமல் காக்கும் மிக வலுவான ஓர் ஆதாரமாக இது செயல்படுகிறது.

    ஏன் டேர்ம் காப்பீடு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது?

    குறைந்த செலவில் அதிக பாதுகாப்பு

    மற்ற வாழ்க்கை காப்பீட்டு திட்டங்களுடன் ஒப்பிடும்போது, கால காப்பீட்டுத் திட்டங்களில் நீங்கள் செலுத்த வேண்டிய தொகை மிகவும் குறைவு. காப்பீட்டு நிறுவனத்துக்கு முதலீட்டு சுமை இல்லாததால், முழு பாதுகாப்பையும் சிறிய பிரீமியத்தில் வழங்க முடிகிறது.

    உதாரணமாக, மாதம் சில நூறு ரூபாய்களில் கூட ஒரு குடும்பம் கோடிக்கணக்கான பாதுகாப்பை பெற முடியும். இதுவே இந்த திட்டத்தை சாதாரண வருமானம் உள்ளவர்கள் முதல் நடுத்தர குடும்பங்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாக மாற்றுகிறது.

    குடும்பத்திற்கான நிதி பாதுகாப்பு

    ஒரு குடும்பத்தின் வருமானம் வழங்கும் நபர் திடீரென இல்லாமல் போனால், அது ஒரு பெரிய உணர்ச்சி இழப்பாக மட்டுமல்லாமல் நிதி ரீதியாகவும் பெரும் சுமையாகிவிடும்.

    கால காப்பீடு இருப்பதால் குடும்பம்:

    ●தினசரி வாழ்க்கைச் செலவு

    ●வீட்டுக் கடன் தொகை

    ●குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரி செலவுகள்

    ●அவசர மருத்துவச் செலவுகள்

    ●நெருக்கடி நேர நிதித் தேவைகள்

    இவற்றை சமாளிக்க தேவையான பாதுகாப்பு பெறும்.

    அத்தகைய பாதுகாப்பு இல்லாத குடும்பங்கள் மிகப்பெரிய சிரமங்களை சந்திக்க நேரிடும்.

    வெளிப்படையான ஒப்பந்தம்

    இந்த திட்டம் முழுக்க பாதுகாப்பைக் மட்டுமே வழங்குவதால், இதில் மறைமுக நிபந்தனைகள் இல்லை. எந்த சூழ்நிலையில் எவ்வளவு பாதுகாப்பு கிடைக்கும், claim செய்யும்போது என்ன செய்ய வேண்டும், எத்தகைய ஆவணங்கள் வேண்டும் ஆகிய தகவல்கள் தெளிவாக இருக்கும்.

    இதனால் குழப்பமும் தவறான புரிதலும் இல்லாமல், வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் தேர்வு செய்ய முடிகிறது.

    கிளைம் வழங்கும் விகிதம் உயர்வு

    இன்றைய காப்பீட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் கிளைம் வழங்கும் விகிதத்தில் மிக உயர்ந்த நிலையைப் பெற்று வருகின்றன.

    இது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கின்றது. குடும்பம் claim செய்யும்போது தாமதம் இல்லாமல் நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகாலமானவர்களை இந்த காப்பீடு வாங்க தூண்டும் முக்கிய காரணமாக உள்ளது.

    சரியான கால காப்பீட்டு திட்டத்தைத் தேர்வு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை

    காப்பீட்டு தொகை

    இது திட்டத்தின் மைய அம்சம். குடும்பத்தின் எதிர்கால நிதி தேவைகளைப் பாதுகாக்கும் அளவிற்கான பாதுகாப்பு தொகையைத் தேர்வு செய்ய வேண்டும். வருட வருமானத்தின் குறைந்தது பத்து முதல் பதினைந்து மடங்கு வரை பாதுகாப்பு வைத்துக்கொள்வது நல்லது.

    காப்பீட்டு காலம்

    உங்கள் வயது மற்றும் நிதி பொறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு காலத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இளம் வயதில் வாங்கினால் பிரீமியம் மிகவும் குறைவாக இருக்கும். வயது அதிகரிக்கும்போது பிரீமியம் அதிகரிக்கும்.

    பிரீமியம் தொகை

    உங்கள் குடும்ப வருமானத்திற்கும் மாதாந்திர செலவுகளுக்கும் பொருந்தும் அளவில் பிரீமியத்தைச் செலுத்தக்கூடிய திட்டத்தைத் தேர்வு செய்ய வேண்டும். பலர் பிரீமியம் அதிகம் என தவறாக நினைக்கும் போதிலும், உண்மையில் இந்த திட்டம் மிகவும் ஏற்றது.

    கூடுதல் பாதுகாப்பு (ரெய்டர்) சேர்த்தல்

    தீவிர நோய் பாதுகாப்பு, விபத்து மரண பாதுகாப்பு, வருமான மாற்று பாதுகாப்பு போன்றவை சேர்த்தால் குடும்பத்திற்கு கூடுதல் நன்மை கிடைக்கும்.

    கிளைம் வழங்கும் விகிதம்

    உயர்ந்த கிளைம் விகிதம் கொண்ட நிறுவனத்தைத் தேர்வு செய்வது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.

    நிறுவனத்தின் நம்பகத்தன்மை மற்றும் சேவை

    காப்பீட்டு நிறுவனம் எவ்வளவு விசுவாசத்துடன் செயல்படுகிறது, வாடிக்கையாளர் சேவை எப்படி உள்ளது, claim செய்யும் போது ஆதரவு கிடைக்குமா என்பதைப் பாருங்கள்.

    ஏன் பலரும் இணையத்தின் மூலம் டேர்ம் காப்பீடு வாங்குகின்றனர்?

    நவீன காலத்தில் பெரும்பாலானவர்கள் life insurance online வாங்குவதையே விரும்புகிறார்கள், ஏனெனில் அதில் வேகமும் வசதியும் அதிகம், செலவும் குறைவு. இதற்கு முக்கிய காரணம், டிஜிட்டல் வழியில் கிடைக்கும் வசதியும் வெளிப்படைத்தன்மையும். முன்னொரு காலத்தில் காப்பீடு வாங்குவதற்கு முகவரை சந்திக்க வேண்டும், பல ஆவணங்களை உடன் கொண்டு செல்ல வேண்டும், பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்று அது சில நிமிடங்களுக்குள் முடியும் தன்மைக்கு மாறியுள்ளது.

    முக்கியமாக இணையத்தின் மூலம் காப்பீடு வாங்கும்போது பல நன்மைகள் கிடைக்கின்றன:

    திட்டங்களை ஒரே இடத்தில் ஒப்பிடும் வசதி

    ஒரே இணையப் பக்கத்தில் பல நிறுவனங்களின் கால காப்பீட்டு திட்டங்களை ஒப்பிட்டு பார்க்கலாம். பாதுகாப்பு தொகை, பிரீமியம், காலம், நிபந்தனைகள், கூடுதல் பாதுகாப்புகள் போன்றவற்றை ஒரே பார்வையில் அறிந்து கொண்டு முடிவு எடுக்க இயலும். இதனால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பொருத்தமானதாகவும், பட்ஜெட்டுக்கு ஏற்றதாகவும் உள்ள திட்டத்தை எளிதில் தேர்வு செய்ய முடிகிறது.

    ஆவணங்களை எளிதில் பதிவேற்றும் சுலபம்

    இணையத்தின் மூலம் ஆவணங்களை சில நொடிகளில் பதிவேற்ற முடியும். அடையாள அட்டை, முகவரி சான்று, புகைப்படம் போன்றவை தனித்தனி அலுவலகங்களுக்கு செல்லாமல் வீட்டிலிருந்தே சமர்ப்பிக்கலாம். இதனால் நேரம் மிச்சமாகும்.

    முழு செயல்முறை வெளிப்படையானது நிபந்தனைகள், வரம்புகள், விலக்குகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தெளிவாக இணையத்தில் காண்பிக்கப்படுவதால் குழப்பம் ஏற்படாது. முகவர் கூறும் தகவலையே மட்டும் நம்ப வேண்டிய நிலை இல்லாமல், ஒவ்வொரு தகவலையும் நேரடியாக புரிந்து கொண்டு முடிவு செய்யலாம்.

    இந்த வெளிப்படைத்தன்மை பலரையும் இணைய வழியை விரும்ப வைக்கிறது.

    நடுவண் முகவர் கட்டணம் இல்லாததால் செலவு குறைவு

    இணையத்தின் மூலம் நேரடியாக நிறுவனம் இருந்து திட்டத்தை வாங்கும் போது நடுவண் முகவர் கமிஷன் இருக்காது. இதனால் பிரீமியம் தொகை மேலும் குறைவாக இருக்கும். குறைந்த செலவில் அதிக பாதுகாப்பு கிடைப்பது பெரிய நன்மையாகும்.

    விரைவான அங்கீகாரம்

    முன்னொரு காலத்தில் காப்பீடு அங்கீகரிப்பதற்கு பல நாட்களோ வாரங்களோ எடுத்துக்கொள்ளும். இப்போது e-KYC செயல்முறை மூலம் சில மணிநேரங்களில் அல்லது சில சமயங்களில் சில நிமிடங்களிலேயே அங்கீகாரம் கிடைக்கிறது. இதனால் பாதுகாப்பு அவசியம் உள்ளவர்கள் உடனடியாக திட்டத்தைப் பெறலாம்.

    முழுநேர வாடிக்கையாளர் சேவை

    வரிகள், நிபந்தனைகள், claim செயல்முறை போன்றவற்றை பற்றி சந்தேகம் எழும்போது 24 மணி நேரமும் உதவி கிடைக்கிறது. வாடிக்கையாளர் சேவை எப்போதும் கிடைப்பதால் நம்பிக்கை அதிகரிக்கிறது.

    அணுகுவதற்கும் மேலாண்மை செய்வதற்கும் சுலபம்

    இணையத்தில் வாங்கிய காப்பீட்டுகளை:

    ●புதுப்பிக்க

    ●பிரீமியம் செலுத்த

    ●ஆவணங்களைப் பதிவிறக்க

    ●மாற்றங்களைச் செய்ய

    ●claim நிலையைச் சரிபார்க்க

    எல்லாம் மொபைல் கைப்பேசியில் இருந்து கூட செய்ய முடியும். இதனால் நேரில் அலுவலகத்தில் சென்று உட்கார வேண்டிய அவசியம் இல்லாமல் விடுகிறது.

    பாதுகாப்பான பண பரிமாற்றம்

    எல்லா நிறுவனங்களும் உயர் பாதுகாப்பு முறைமை, குறியாக்கம் மற்றும் ஒருமுறை கடவுச்சொல் சரிபார்ப்புகளை பயன்படுத்துவதால், பண பரிமாற்றம் பாதுகாப்பாக இருக்கும். இதனால் இணையத்தில் காப்பீடு வாங்குவதில் பயம் அல்லது சந்தேகத்திற்கான இடம் இருப்பதில்லை.

    முடிவுரை

    டேர்ம் காப்பீடு என்பது குறைந்த செலவில் அதிக பாதுகாப்பை வழங்கும் மிக நம்பகமான வாழ்க்கை காப்பீட்டு திட்டமாகும். குடும்பத்தின் எதிர்பாராத நிதிச் சுமைகளை சமாளிக்க இது உறுதியான பாதுகாப்பு வலையமைப்பாக செயல்படுகிறது.

    வெளிப்படையான நிபந்தனைகள், எளிய ஆன்லைன் செயல்முறை, குறைந்த பிரீமியம் மற்றும் விரைவான அங்கீகாரம் ஆகிய காரணங்களால், இது இன்று பெரும்பாலான குடும்பங்களின் முதன்மையான தேர்வாக மாறியுள்ளது. குடும்பத்தின் எதிர்கால நன்மைக்காக, உங்களுக்கு ஏற்ற கால காப்பீட்டு திட்டத்தை இன்றே தேர்வு செய்வது ஒரு பொறுப்பான முடிவாகும்.

    ×