என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடை வெயில்"

    • நம்மை வாட்டி வதைக்கும் கோடை காலம், மார்ச் முதல் வாரம் தொடங்கவுள்ளது.
    • மழைப்பொழிவை குறைவாக தரக்கூடிய 'எல்நினோ' என்ற அமைப்பினால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஆகும்.

    தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    அடுத்து நம்மை வாட்டி வதைக்கும் கோடை காலம், மார்ச் முதல் வாரம் தொடங்கவுள்ளது. அதுவும் அக்டோபர் மாதம் வரை வெப்பம் நீடிக்க வாய்ப்பு உள்ளது எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறிய மேலும் விவரங்கள் வருமாறு:-

    இந்த ஆண்டு கோடை காலம் மார்ச் முதல் வாரத்தில் தொடங்குகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதன்படி, மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடை காலத்தில் 12 வாரங்களில் 4 முதல் 6 வாரங்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவும், வறண்ட வானிலை கொண்டதாகவும் இருக்கும். 2 வாரங்கள் வெப்பசலன இடிமழையும், 3 முதல் 4 வாரங்கள் இயல்பான வெப்பநிலையும் காணப்படும். இதில் வெப்பசலன மழை மார்ச் இறுதி வாரத்தில் தொடங்கும்.

    தென்மேற்கு பருவமழை வழக்கமாக தொடங்கக்கூடிய ஜூன் மாதத்தில் இந்த ஆண்டு தொடங்கப்பட்டாலும், அதே மாதத்தில் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதை உணர முடியும். இந்த வெப்பம் செப்டம்பர் இறுதி வரையிலோ அல்லது அக்டோபர் 2-வது வாரம் வரையிலோ நீடிக்க அதிக வாய்ப்புள்ளது.

    இது மழைப்பொழிவை குறைவாக தரக்கூடிய 'எல்நினோ' என்ற அமைப்பினால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஆகும்.

    2020, 2021, 2022, 2024, 2025 ஆகிய ஆண்டுகள் மழை தரக்கூடிய 'லாநினோ' ஆண்டுகளாக இருந்தன. 2027-ம் ஆண்டு உலகளாவிய எல் நினோ ஆண்டாக இருக்கும் என்பதால், உலகம் முழுவதும் வெப்பநிலை அதிகரிக்கும்.

    அதிலும் தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2027) மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்ப அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும். மொத்தத்தில் 2026-ம் ஆண்டு வெப்பம் அதிகரிக்கும் ஆண்டாகவும், 2027-ம் ஆண்டு வெப்பமான ஆண்டாகவும் காணப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இரவில் அதிக அளவில் புழுக்கம் நிலவி வருவதால் மக்கள் தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர்.
    • அடுத்த மாதம் 7-ந்தேதி வரை வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் இரவு நேரம் முதல் அதிகாலை வரை பனி அதிகமாக இருந்தது. இதனால் மின்சார தேவையும் குறைந்து இருந்தது.

    இந்நிலையில் சென்னையில் மதிய நேரங்களில் வெப்பம் சுட்டெரித்து வருகிறது. கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது. காலை 9 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடித்தது. குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் 4 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது.

    வாகன ஓட்டிகள் வெளியே செல்லும்போது வெயிலின் தாக்கத்தால் அவதி அடைந்தனர். இதே போல் குழந்தைகள் முதியவர்கள் வெயிலின் தாக்கத்தால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    கோடை வெயில் போன்று வெயில் கொளுத்த தொடங்கி உள்ளது. வீட்டில் மின்விசிறி ஓடினாலும் புழுக்கம் நிலவி வருகிறது.

    இரவில் அதிக அளவில் புழுக்கம் நிலவி வருவதால் மக்கள் தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர். காலை தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடித்து வருகிறது. நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் முதன் முதலாக நடப்பாண்டில் 100 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.

    வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் அதிக அளவில் கரும்பு பால், மோர், குளிர் பானங்களை அதிக அளவில் பருகி வருகின்றனர். இரவு நேரங்களில் மின்விசிறி இயங்கினாலும் புழுக்கத்தால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    மதியம் வெளியே செல்லும் பெண்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முகத்தை துணியால் மூடி செல்கின்றனர். சிலர் குடைகளை பிடித்து செல்வதையும் காண முடிகிறது. கோடை வெயில் இன்னும் தொடங்காத நிலையில் இப்போதே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவது மக்களை அச்சுறுத்தி வருகிறது.

    கோடைக்காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    அடுத்த மாதம் 7-ந் தேதி வரை வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். கடலில் இருந்து வறண்ட காற்றும், வளிமண்டலத்தில் வறண்ட வானிலையும் நீடிப்பதனாலும், வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர்கள் கூறினர்.

    • ரத்த சோகை தடுப்புக்கு உதவுகிறது.
    • கருவேப்பிலையில் உள்ள இரும்புசத்து மற்றும் போலிக் அமிலம் ஹீமோகுேளாபின் அளவை உயர்த்த உதவுகின்றன.

    கோடை வரப் போகின்றது வழக்கம் போல் வெயில் கொளுத்தும். நாம் வாடி வதங்கி வெயிலால் தவிப்போம். இது வருடம் தவறாது நடக்கும் நிகழ்வுதான். கோடைக் கால பராமரிப்பு, கோடைக்கால நோய்கள் என கோடையை சமாளிக்க பல வழிகளை பின்பற்றுவோம். நன்கு அறிந்தனவற்றினைக் கூட மீண்டும் ஞாபகப்படுத்தி செயல்படுத்துவோம். அந்த வகையில் உடலின் நீர் தன்மை வற்றாது இருக்கவும், கூடவே நீருடன் சில பொருட்களை பயன்படுத்தி உடலுக்குத் தேவையான சில தாதுக்கள் மற்றும் பல நன்மைகளைப் பெறும் வழிமுறைகளை இப்போது பார்ப்போம்.

    நமது உணவு முறையில் நீரே சிகிச்சை தன்மை கொண்டதாக முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. தினமும் 2 முதல் 3 லிட்டர் நீர் பருகுவது அவசியம் என வலியுறுத்தப்படுகின்றது. இத்துடன் இயற்கை மூலிகைகள், பழ சாறுகள் சேரும் போது அது மருந்தாக, ஊட்டச் சத்தாக பயன்படுகின்றது. பல தலைமுறைகளாக நம் நாட்டில் பயன்படுத்தப்படும் முறைகள் இவை. குறைந்த செலவு, நிறைந்த பலன் என்ற முறையிலே பலன் தருபவை. பாதுகாப்பானவை. எளிமையானவை. ஆரோக்கியமானவை.

    எலுமிச்சை நீர்- ஒரு கிளாஸ் வெகு வெதுப்பான நீரில் அரை எலுமிச்சை சாறு பிழிந்து குடிக்கலாம். சிலர் சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்வர்.

    எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி, சிட்ரிக் அமிலம், பிளாவரைய்டுகள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன.

    நன்மைகள்- செரிமானத்தினை மேம்படுத்தும். அஜீரணம், வயிற்று வீக்கம் போன்ற பிரச்சினைகள் குறைய உதவுகிறது.

    * நோய் எதிர்ப்பு சக்தி கூடுகின்றது. சளி, இருமல், தொண்டை வலி என்பவர்களுக்கு சிறந்த பலன் அளிக்கும்.

    * உடல் நச்சுகளை நீக்கும். கல்லீரல் செயல்பாட்டினை ஊக்குவித்து உடலில் சேரும். நச்சுக் கழிவுகளை வெளியேற்ற உதவும்.

    கமலி ஸ்ரீபால்


     

    * சரும ஆரோக்கியம் கூடும், முதுமை கட்டுப்படும், கரும் புள்ளிகள் நன்கு குறையும்.

    உடல் எடை கட்டுப்பாடு- எலுமிச்சை நீர் குடிப்பதால் பசி உணர்வு கட்டுப்படும். அதிக கலோரி உணவுகள் தவிர்க்க உதவுகின்றது.

    சீரக நீர்- ஒரு டீஸ்பூன் சீரகத்தினை நன்கு கழுவி 2 டம்ளர் நீரில் இரவு முழுவதும் நன்கு ஊற வைக்கவும். காலையில் இதனை நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.

    சீரகத்தின் மருத்துவத்தன்மை- சீரகம் ஒரு கார்மினேட்டிவ் வாயுவை வெளியேற்றும் என ஆயுர்வேதம் கூறுகின்றது.

    * சீரக நீர் குடிப்பதால் வயிற்றில் தேங்கிய வாயு வெளியேறி வயிற்று வலி, வீக்கம் குறைகின்றது.

    * ரத்த சர்க்கரை கட்டுப்பாடுடன் இருக்க உதவுகிறது- சீரகம் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றது. நீரிழிவு நோயாளிகள் மருத்துவர் ஆலோசனை பெற்று குடிக்கலாம்.

    * ரத்த சோகை தடுப்புக்கு உதவுகிறது. சீரகத்தில் இரும்பு சத்து உள்ளது. தொடர்ந்து சீரக நீர் குடிப்பது ஹீமோகுளோபின் அளவை உயர்த்த உதவும்.

    * மகப்பேறு கால நன்மைகள்- பிரசவத்திற்குப் பிறகு தாய்மார்களுக்கு சீரக நீர் பால் சுரப்பை அதிகரிக்கவும், உடல் சோர்வை குறைக்கவும் பயன்படுகின்றது.

    * உடல் அழற்சி குறைப்பு ஏற்படும். மூட்டு வலி, உடல் வலிகளை குறைக்க உதவுகின்றது.

    கொத்தமல்லி நீர்- தனியா விதைகளை கழுவி, நன்கு ஊற வைத்து பின் கொதிக்க வைத்து வடிக்கட்டி குடிக்கலாம்.

    * சீரணத்திற்கு உதவுகின்றது. இதில் உள்ள என்சைகள் அஜீரணத்தை சீர் செய்யும். வயிறு உப்பிசம், வாயு நீங்கும். ஆரோக்கியமான குடல் உருவாகும்.

    * ரத்தத்தில் உயர் சர்க்கரை ஏற்றத்தினை கட்டுப்படுத்தும்.

    * நச்சுகளை நீக்கும்- கல்லீரல், சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவும்.

     

    * சரும ஆரோக்கியம்- சரும தடிப்பு, பரு, சிகப்பு திட்டுகள் நீங்கும்.

    * வைட்டமின் ஏ, சி, கே. சத்து நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியினைக் கூட்டும். சிறுநீர் போக்கில் எரிச்சலுக்கு துணை மருந்தாக உதவும்.

    * உடலில் அதிக நீர் தேங்காது இருக்கச் செய்யும்.

    * வயிறு உப்பிசம், சதை பிடிப்புகள் நீங்கும்.

    உடல் நல பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை பெற்று பிறகு எடுத்துக் கொள்ளலாம். மற்றவர்களும் அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது.

    வெந்தய நீர்- வெந்தயம் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து நன்கு கழுவி ஒரு கிளாஸ் நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் குடிக்கவும். பொதுவில் அனைவருமே மருத்துவர் ஆலோசனை பெற்று இதனை எடுத்துக் கொள்வது அவசியம்.

    * வயிறு உப்பிசம், மலச்சிக்கல் நீங்கும்.

    * சர்க்கரை நோய் பிரிவு 2 பாதிப்பு உள்ளவர்களுக்கு சர்க்கரை அளவு கட்டுப்படும்.

    மாத்திரை, ஊசி என எடுத்துக் கொள்பவர்கள், சாதாரண உடல் நலத்துடன் இருப்பவர்கள் இரு பிரிவுமே சர்க்கரை ரத்தத்தில் அதிக அளவு குறையாமல் இருக்க மருத்துவர் ஆலோசனை அவசியம் பெற வேண்டும்.

    * கொழுப்பு சத்தினைக் குறைக்கும். இருதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

    * மூட்டு வலி குறையும் என ஆயுர்வேதம் குறிப்பிடுகின்றது.

    * ஹார்மோன் சீராக இயங்க உதவும். மாதவிடாய் கால பிரச்சினைகள், மாத விலக்கு நிற்கும் கால பிரச்சினைகளை குறைக்க உதவும்.

    * சருமம், முடி ஊட்டம் பெறும்.

    கருவேப்பிலை சாறு- நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் கருவேப்பிலை ஒரு மூலிகை என்றே ஆயுர்வேத, சித்த மருத்துவத்தில் குறிப்பிடுகின்றனர். இதனை சாறாக எடுத்துக் கொள்ளும் போது சிறந்த மருத்துவ பலன்களைப் பெறுகின்றோம். சர்க்கரை நோய், செரிமானக் கோளாறு, முடி உதிர்வு போன்றவைகளுக்கு கருவேப்பிலை சாறு சிறந்த பயன் அளிக்கின்றது.

    புதிய பறித்த கருவேப்பிலையினை சிறிதளவு நீர் விட்டு அரைத்து வடிகட்டி சுமார் 20 மி.லி. அளவு எடுத்துக் கொள்வது வீட்டு வைத்தியமாக பரிந்துரைக்கப்படுகின்றது.

    கருவேப்பிலை சாறு இன்சுலின் சுரப்பதனையும், அதன் செயல் திறனையும் மேம்படுத்த உதவுகின்றது. இதனால் சர்க்கரை அளவு சீராக இருக்க உதவுகின்றது. நீரிழிவு நோயாளிகள் இதனை துணை மருந்தாக பயன்படுத்தலாம்.

    'செரிமானத்தினை மேம்படுத்தும்- அஜீரணம், வயிறு வீக்கம், வாந்தி உணர்வு போன்றவை குறைய உதவுகின்றது. கல்லீரல் செயல்பாட்டினை ஊக்குவித்து பித்த சுரப்பை போக்குகின்றது.

    கருவேப்பிலையில் உள்ள இரும்புசத்து மற்றும் போலிக் அமிலம் ஹீமோகுேளாபின் அளவை உயர்த்த உதவுகின்றன. முடி ஆரோக்கியத்திற்கு, முடிவேர் வலுப்படுதலுக்கு கருவேப்பிலை சாறு உதவுகின்றது. உடலில் தேவையில்லாத கொழுப்பு நீங்குகின்றது. கல்லீரலை பாதுகாக்கின்றது. மதுபானம் அல்லது மருந்துகளால் ஏற்படும் கல்லீரல் அலற்சியை குறைக்க உதவுகின்றது. நோய் எதிர்ப்பு சக்தி கூடுகின்றது.

    கவனிக்க வேண்டியவை:

    கருவேப்பிலை சாறு அதிகம் எடுத்துக் கொண்டால் வயிற்று எரிச்சல் ஏற்படும். கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் இதனை தவிர்ப்பது நல்லது. இது மருந்தல்ல. சிகிச்சை முறையாக பயன்படுத்தக் கூடாது. இந்த தகவல்கள் ஆதாரத்துடன் சேகரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ளன.

    புதினா சாறு: இது நம் நாட்டு சமையலில் அதிகம் இடம் பெறுவது தான். இருப்பினும் சாறு குடிக்கும் பொழுது இதன் பலன்கள் கூடுதலாக இருக்கும். 30 மிலி அளவு சாற்றினை எடுத்துக் கொள்ளலாம். புதினாவில் உள்ள முக்கிய ஊட்ட சத்துக்கள்: வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஈ சத்து நிறைந்தது. இரும்பு சத்து, கால்சியம், மெந்தால் ஆன்டி ஆக்சிடெண்ட் அதிகமாக உள்ளன.

    நன்மைகள்: புதினா சாறு, செரிமானத்தினை மேம்படுத்தும். அஜீரணம், வயிற்று எரிச்சல், வாந்தி உணர்வு இவற்றினை குறைக்கும். அசிடிடி குறையும். கல்லீரல் செயல் பாட்டினை மேம்படுத்தும். மூக்கடைப்பு, சளி, இருமல் குறைக்கும். இதனால் சுவாசம் எளிதாகும். தலைவலி, மனஅழுத்தம், சோர்வு, இவற்றினைக் குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

    கவனிக்க வேண்டியவை: அதிக அளவில் குடித்தால் வயிற்று எரிச்சல் ஏற்படும். குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர்த்து விடலாம். கர்ப்பிணி பெண்களும் தவிர்த்து விடலாம். நீண்ட நாள் நோயாளிகள் மருத்துவர் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

    மோர்: மோர் என்பது தயிரை நீருடன் கலந்து வெண்ணெய் பிரித்து தயாரிக்கப்படும். பாரம்பரிய தயிரை விடவும் கூட மோர் நன்மை கொண்டது. மோர் குறைந்த கொழுப்பு, நிறைந்த கலோரி சத்து கொண்டது. நன்மை தரும் புரோபயாடிக் பாக்டிரீயா கொண்டது. கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் பி12, பி2, மற்றும் சிறிது புரதம் கொண்டது. குடல்நலம் காக்கப்படுகின்றது. அஜீரணம், வயிற்று வீக்கம், வாயுத் தொல்லை போன்ற பிரச்சினைகள் குறைக்கின்றன. சோர்வு, நீர் இழப்பு தடுக்கப்படுகின்றது. அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் குறைகின்றது. மோரில் உள்ள கால்சியம் எலும்பு வலிமை பெற மற்றும் எலும்பு தளர்வு தடுப்பு ஆகியவற்றிற்கு உதவுகின்றன. பசியை கட்டுப்படுத்தவும் சர்க்கரை பானங்களுக்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம்.

    கவனிக்க வேண்டியவை: சிலருக்கு சளி அதிகரிப்பு, மூக்கடைப்பு ஏற்படலாம். வயிற்று வலி, வயிற்றுப் போக்கு ஏற்படலாம். இரவு நேரத்தில் மோர் தவிர்க்க வேண்டும். அதிகமாக மோர் குடித்தால் வயிறு கனத்த உணர்வு. குடல் இயக்கம் பாதிப்பு ஏற்படலாம். உப்பு அதிகம் இருந்தால் தாதுச் சமநிலை பாதிப்பு ஏற்படலாம். காய்ச்சல் மற்றும் குடல் தொற்று உள்ள போது மோரை தவிர்க்க வேண்டும். மோர் புதிய தயிரில் தயாரித்து நல்ல அளவில் நீர் சேர்க்க வேண்டும். இஞ்சி, சீரகம், கருவேப்பிலை சேர்த்து பகலில் அருந்தலாம். இப்படி பல விதங்களில் உடலை, குடலை பராமரிக்க முடியும். எளிமையான இந்த பானங்களை அருந்தலாமே.

    • தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது.

    அதன்படி, 10-ந்தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்யும்.

    11-ந்தேதி ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    12-ந்தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

    13-ந்தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யும். அதே நேரம் மதிய வேளையில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகக்கூடும். 

    • தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை முதல் 9-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    10-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இன்று முதல் 6-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

    இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியம். குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று முதல் 5-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • கடந்த 2 நாட்களாக கொடூர வெயில் அடித்து வருகிறது.
    • வெப்ப காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் தவிப்புக்குள்ளானார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடையின் தாக்கம் தொடங்கி வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.

    பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. கடந்த மே 4-ந்தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் காலம் தொடங்கியது. இது கடந்த 28-ந்தேதி முடிவடைந்தது.

    அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட குறைந்தே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சில நாட்கள் மழை பெய்ததால் வெப்பம் குறைந்து காணப்பட்டது.

    இதற்கிடையே அக்னி நட்சத்திரத்துக்கு பிறகும் சென்னையில் வெயில் தாக்கம் அதிகரித்தது. நேற்று வெப்ப காற்று வீசியது. இந்த நிலையில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் 38 செல்சியஸ் (100.4 டிகிரி) வரை வெயில் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    அதன்படி இன்று சென்னையில் வெயில் சுட்டெரித்தது. வெப்பம் காரணமாக மக்கள் கடும் அவதியடைந்தனர். வெப்ப காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் தவிப்புக்குள்ளானார்கள்.

    அக்னி நட்சத்திர காலத்துக்கு பிறகு வெயிலின் தாக்கம் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக கொடூர வெயில் அடித்து வருகிறது.

    மாநிலம் முழுவதும் நாளை வரை சில பகுதிகளில் வெப்பநிலை 2முதல் 3 செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக வானிலை நிபுணர்கள் கூறும்போது, "வட-வட மேற்கு காற்று வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் ஈரப்பதத்துடன் அது இன்னும் வெப்பமாக உணரக்கூடும். மாலையில் மட்டுமே கடல் காற்று வீசுகிறது. இது சிறிய அளவில் பயன் அளிக்கிறது. அடுத்த 3 அல்லது 4 நாட்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    ஆனால் வெப்பநிலையை கணிசமாகக் குறைக்க இது போதுமானதாக இருக்காது. அடுத்த ஒரு வாரத்திற்கு உயர்ந்த வெப்பநிலை தொடர வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தனர்.

    • மண் பானையின் மேற்பரப்பில் காற்று வெளியேறுவதற்கான சிறிய துளைகள் இருக்கின்றன.
    • மண் பானையின் உள்ளே உள்ள தண்ணீர் மெதுவாக வெளியேறி காற்றில் ஆவியாகிறது.

    கோடை வெயிலுக்கு குளிர்ந்த நீரை குடிக்க விரும்புவோம். அந்த வகையில் மண் பானையில் குளிர்ந்த நீரை குடித்த அனுபவம் இருக்கிறதா?

    அப்படி குடிக்கிறபோது எந்தவித செயற்கை செயல்பாடும் இன்றி இயற்கையாக மண் பானையில் உள்ள நீர் எப்படி குளிர்ச்சியாக உள்ளது என்ற கேள்வி எழுந்திருக்கிறதா? வாருங்கள் அதற்கு பின் இருக்கும் அறிவியல் காரணத்தை அறிந்து கொள்வோம்.

    மண் பானையில் உள்ள தண்ணீர் குளிர்ச்சியாக இருப்பதற்கு முக்கியமான காரணம் அதன் இயற்கையான வடிவமைப்பு ஆகும். மண் பானையின் மேற்பரப்பில் காற்று வெளியேறுவதற்கான சிறிய துளைகள் இருக்கின்றன. அதனால் பானையின் உள்ளே உள்ள தண்ணீர் மெதுவாக வெளியேறி காற்றில் ஆவியாகிறது. இந்த ஆவியாக்க செயல்முறையினால் பானையின் மேற்பரப்பில் இருந்து வெப்பம் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் பானையின் உள்ளே இருக்கும் தண்ணீர் இயற்கையாகவே குளிர்ச்சியாகிறது. இது 'ஆவியாக்கக் குளிர்ச்சி' என அழைக்கப்படுகிறது.

    மண்பானை ஒரு இயற்கை குளிரூட்டி. இது மின் சக்தி இல்லாமலே குளிர்ந்த தண்ணீரை வழங்கும். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது. அதை அருந்துவது உடலுக்கு ஆரோக்கியமானது.

    பிளாஸ்டிக் அல்லது உலோக பானைகளுடன் ஒப்பிடுகையில், மண் பானையில் தண்ணீர் எப்போதும் புதியதாகவும், சுவையாகவும் இருக்கும். எனவே மண் பானையில் தண்ணீர் குடிப்போம். இயற்கையோடு இணைந்து வாழ்வோம்!

    • அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து சில நகரங்களில் மட்டுமே வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது.
    • கடல் காற்று வீசும் என்பதால் வெப்பநிலை தணிந்து சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவும்.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெப்பம் கடந்த சில நாட்களாக சுட்டெரித்து வந்தது. அதேநேரம், சில இடங்களில் கோடை மழையும் காணப்பட்டது.

    இந்த சூழலில், கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் எனும் 'கத்திரி' வெயில் தொடங்கியது. பொதுவாக, அக்னி நட்சத்திரம் காலக்கட்டத்தில், தமிழகத்தில் வெயில் உக்கிரமாக காணப்படும். ஆனால், இந்த ஆண்டோ, அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதலே தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது.

    அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து சில நகரங்களில் மட்டுமே வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. இனி வரும் நாட்களிலும் தமிழகத்தில் மழை பொழிவுக்கே அதிகளவு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடல் காற்று வீசும் என்பதால் வெப்பநிலை தணிந்து சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவும்.

    கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    • திருத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோஜெயன் கல்லுபாலம் பகுதியில் கடை நடத்தி வந்தார்.
    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல் சூட்டால் அவதிப்பட்டு வந்த நிலையில் மார்த்தாண்டம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர் பலியானார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை முதலே அடித்து வரும் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். மதிய நேரங்களில் சாலைகளில் அனல்காற்று வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

    வெப்பத்தின் தாக்கம் காரணமாக களியக்காவிளை அருகே திருத்துவபுரத்தில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோஜெயன் (வயது 47). இவர் கல்லுபாலம் பகுதியில் கடை நடத்தி வந்தார்.

    இவருக்கு மனைவியும், 8 மாத கை குழந்தையும் உள்ளனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல் சூட்டால் பாதிக்கப்பட்ட மனோஜெயனை சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோஜெயன் பரிதாபமாக இறந்தார்.

    திருத்துவபுரத்தை அடுத்த மடிச்சல் வடக்கே வெள்ளச்சிமாவிளை பகுதியை சேர்ந்தவர் அச்சுதன் கலைமணி (47). முன்னாள் ராணுவ வீரர். தற்போது செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல் சூட்டால் அவதிப்பட்டு வந்த நிலையில் மார்த்தாண்டம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர் பலியானார்.

    மடிச்சல் வடக்கே வெள்ளச்சிமாவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெகன் என்ற சந்தோஷ் (46), காய்கறி வியாபாரி. இவர் கடந்த 14-ந்தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் பலியானார். கோடை வெயிலின் தாக்கத்தால் ஒரே பகுதியில் அடுத்தடுத்து 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • பெங்களூருவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • இனிமேல் கோடை இல்லாத மாதத்தை அனுபவியுங்கள்.

    சென்னை :

    தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

    கோடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் இன்று முதல் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டிற்கு மிகவும் தனித்துவமான ஆண்டுகளில் ஒன்று. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வெப்ப அலை இருக்காது.

    மேலும் கடந்த 25 ஆண்டுகளில் 2022, 2018 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளிளை தொடர்ந்து இந்த மே மாதத்தில் சென்னை 40 செல்சியஸை ஒரு நாள் கூட தாண்டவில்லை.

    கிழக்கு மேற்கு வளி மண்டலத்தின் ஒரு பகுதியாக இந்த பரந்த சுழற்சி இம்மாத இறுதியில் அல்லது ஜூன் 1 ஆம் வாரத்தில் உருவாகிறது. இப்போது முதல் முறையாக மே மாத நடுப்பகுதியில் நான் இதைக் காண்கிறேன். பொதுவாக, இந்த வளிமண்டலம் முடிவடையும்போது குறைந்த காற்றழுத்ததை ஏற்படுத்தும். எனவே அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா இரண்டிலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (மாத இறுதியில்) இருக்கும். அரபிக் கடலில் ஒன்று அடுத்த 10 நாட்களில் ஒரு சூறாவளி புயலாக உருவாக வாய்ப்புள்ளது.

    அதன்படி, ஞாயிற்றுக்கிழமை இந்த சுழற்சி இன்னும் நெருக்கமாகி, கிழக்கு திசையில் இருந்து தமிழக வடக்கு கடலோரம் மற்றும் கடற்கரைகளில் வீசும். இதனால் வரும் நாட்களில் மிகவும் மழை பெய்யும். இன்றும் மழைக்கான வாய்ப்பு உள்ளது.

    கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், பாண்டி, விழுப்புரம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காரைக்காலின் டெல்டா பகுதிகள், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி, தர்மபுரி, திருப்பத்தூர், ஈரோடு போன்ற இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பெங்களூருவில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இனிமேல் கோடை இல்லாத மாதத்தை அனுபவியுங்கள். அதாவது 10 செல்சியஸ் வெப்பநிலையில் நடுங்கும் என்று அர்த்தமல்ல. மே மாத காலநிலையைக் கருத்தில் கொண்டு இது இயல்பை விட குறைவாக இருக்கும் என தெரிவித்துள்ளார். 



    • வெயிலின் உஷ்ணம் கடுமையாக இருப்பதால் வீடுகளில் மின்விசிறிகள் ஓய்வின்றி இயங்குகின்றன.
    • மாநில அரசின் இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்' என்ற தகவல்கள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது. பகல் நேரங்களில் சூரியனின் கோரப்பார்வையில் இருந்து தப்பிக்க வீடு, அலுவலகங்களில் பெரும்பாலானோர் தஞ்சம் அடைகின்றனர். தவிர்க்கமுடியாத காரணத்துக்காக வெளியே வருபவர்களும் மரத்தின் நிழலிலும், மேம்பாலங்களின் கீழேயும், பஸ் நிறுத்தங்களிலும் என சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு பின்னர் செல்கின்றனர். வெயிலின் உஷ்ணம் கடுமையாக இருப்பதால் வீடுகளில் மின்விசிறிகள் ஓய்வின்றி இயங்குகின்றன. இதில் அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டு மக்களுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்துகிறது.

    இந்த நிலையில், 'கோடைகால வெப்பத்தை தணிக்க மத்திய அரசு இலவசமாக 5 ஸ்டார் ஏ.சி. வழங்குகிறது. இதனை மாநில அரசின் இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்' என்ற தகவல்கள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரபூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிப்பார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது முற்றிலும் வதந்தியே. மத்திய அரசு இப்படியான எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. இது வதந்தி என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் மறுத்துள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    ×