என் மலர்

    நீங்கள் தேடியது "Summer heat"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னையில் அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது
    • சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை :

    சென்னையில் நேற்றும் வெயில் வறுத்தெடுத்தது. பிற்பகல் முதல் மாலை வேளை வரை நகரின் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே லேசான மழை பெய்தது. புறநகர் பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. அதனால் எந்த பலனும் இல்லை. சில நிமிடங்கள் பெய்த லேசான மழையும் சூட்டை கிளப்பி, மக்களின் வேதனையைத்தான் வாங்கியது.

    இதற்கிடையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பகீர் தகவலால் மக்கள் பீதி அடைந்திருக்கிறார்கள்.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக 6-ந்தேதி (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரையிலும், ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.

    வங்கக்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 13 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. அதிகபட்சமாக சென்னையில் 105.44 டிகிரி வெயில் கொளுத்தியது.

    தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பதிவான வெயில் நிலவரம் வருமாறு:-

    சென்னை நுங்கம்பாக்கம் - 104.18 டிகிரி - (40.1 செல்சியஸ்)

    சென்னை மீனம்பாக்கம் - 105.44 டிகிரி - (40.8 செல்சியஸ்)

    கடலூர் - 103.64 டிகிரி - (39.8 செல்சியஸ்)

    ஈரோடு - 101.12 டிகிரி - (38.4 செல்சியஸ்)

    கரூர் - 103.1 டிகிரி - (39.5 செல்சியஸ்)

    மதுரை - 104.36 டிகிரி - (40.2 செல்சியஸ்)

    நாகை - 102.38 டிகிரி - (39.1 செல்சியஸ்)

    பாளையங்கோட்டை - 104 டிகிரி - (40 செல்சியஸ்)

    தஞ்சை - 102.2 டிகிரி - (39 செல்சியஸ்)

    திருப்பத்தூர் - 101.84 டிகிரி - (38.8 செல்சியஸ்)

    திருச்சி - 103.28 டிகிரி - (39.6 செல்சியஸ்)

    திருத்தணி - 105.08 டிகிரி - (40.6 செல்சியஸ்)

    தூத்துக்குடி - 101.3 டிகிரி - (38.5 செல்சியஸ்)

    வேலூர் - 102.2 டிகிரி - (39 செல்சியஸ்)

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
    • தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    தமிழகத்தில் வரும் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அறிவிக்கப்பட்டது.

    தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் வரும் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.
    • அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் உக்கிரம் குறையவில்லை.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் தற்போது புதிய கல்வி ஆண்டில் பள்ளிக்கூடங்களை திறப்பதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. இதற்காக மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ந்தேதியும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிந்தது.

    ஆனால் வெயில் வாட்டி வதைப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்தது. அதன் அடிப்படையில் ஜூன் 7-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டார்.

    1-ந்தேதிக்கு பதில் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் சமயத்தில் வெயில் குறைந்து விடும் என கணிக்கப்பட்டது.

    ஆனால் இப்போது வெயில் குறைவதற்கான அறிகுறியே தென்படவில்லை. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது.

    அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் உக்கிரம் குறையவில்லை. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் 108 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. இயல்பாக பதிவாகும் வெப்ப அளவை விட கடந்த 6 நாட்களாக வெப்பத்தின் அளவு அதிகமாகவே காணப்படுகிறது.

    இதனால் பள்ளிகள் 7-ந்தேதி திறப்பதை மறுபடியும் தள்ளி வைக்க வேண்டும் என்று அரசுக்கு மீண்டும் கோரிக்கைகள் சென்ற வண்ணம் இருந்தது.

    எனவே பள்ளிகள் திறப்பதை மீண்டும் தள்ளி வைக்கலாமா? என்பது குறித்து அரசு ஆலோசித்து வந்தது.

    இதைத்தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கோட்டைக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். கல்வித்துறை செயலாளர் காகர்லாஉஷா மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிக்கூடங்களை திறப்பதை மீண்டும் தள்ளி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

    கூட்டம் முடிந்ததும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    வெயில் தாக்கம் இன்னும் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கூடங்கள் திறப்பதை மேலும் தள்ளி வைப்பது என்று முதலமைச்சருடன் நடந்த ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளை ஜூன் 14-ந்தேதி திறப்பது என்றும், 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12-ந்தேதி பள்ளிகளை திறப்பது என்றும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழ்நாட்டில் 13 இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்தது.
    • சென்னையில் கடந்த 3 தினங்களாக வெயில் கொளுத்துகிறது.

    சென்னை :

    வெயில் எப்போது குறையும் என்ற எதிர்பார்ப்பு அனைவருடைய மனதிலும் இருந்து வருகிறது. ஏனென்றால் அக்னி நட்சத்திரம் காலம் முடிந்த பிறகும், அந்த அளவுக்கு வெயிலின் உக்கிரம் கொஞ்சம் கூட குறையாமல் வாட்டி வதைத்து வருகிறது.

    அதிலும் சென்னையில் கடந்த 3 தினங்களாக வெயில் கொளுத்துகிறது. நேற்று முன்தினம் சென்னை மீனம்பாக்கத்தில் 106 டிகிரி வெயில் பதிவான நிலையில், நேற்று 108 டிகிரியாக பதிவாகியிருந்தது. நுங்கம்பாக்கத்தில் நேற்று 107 டிகிரி வெயில் பதிவானது. வாட்டி வதைக்கும் வெப்பத்தால், சென்னை வாசிகள் வாடிப்போய் இருக்கின்றனர்.

    இதுபோல், கடலூர், ஈரோடு, கரூர், நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 13 இடங்களிலும் வெயிலின் கோரத்தாண்டவத்தை பார்க்க முடிந்தது.

    புதுச்சேரியில் 105.08 டிகிரியும் (40.6 செல்சியஸ்), காரைக்காலில் 100.4 டிகிரியும் (38 செல்சியஸ்) வெயில் பதிவாகியிருந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தெலுங்கானாவில் ஒவ்வொரு மாதமும் சுமார் 28 முதல் 30 லட்சம் பெட்டி பீர் விற்பனை செய்யப்படுகிறது.
    • கோடை விடுமுறை மற்றும் திருமண சீசன் காரணமாக பீர் விற்பனை அதிகமாக இருந்தது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் அக்னி நட்சத்திர வெயில் சுட்டெரித்தது. இதிலிருந்து தப்பிக்க மது பிரியர்கள் ஹாட் வகைகளிலிருந்து பீருக்கு மாறினர்.

    குடிமகன்களை கவருவதற்காக தெலுங்கானா மாநிலத்தில் 300 வகையான பீர் விற்பனைக்கு வந்தன. 650 மில்லி மற்றும் 350 மில்லி என 2 அளவுகளில் பீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது.

    மேலும் கடந்த மாதம் ஒரு பாட்டில் பீர் ரூ.10 விலையும் குறைக்கப்பட்டது.

    இதனால் அனைத்து மது கடைகளிலும் பீர் விற்பனை அதிகரித்தது. குறிப்பாக பிரசித்தி பெற்ற 12 வகையான பீர்கள் அதிக அளவில் வாங்கி குடித்தனர்.

    நாளுக்கு நாள் அதிகரித்த வெயில் காரணமாக குடிமகன்கள் பீர் வாங்கி குடித்து பொழுதை கழித்தனர்.

    இதனால் இந்த ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் வரலாற்று சாதனையாக 7.4 கோடி பீர் பாட்டில்கள் விற்பனையாகி உள்ளன. மொத்தமாக கணக்கிட்டு பார்த்தால் 4 கோடி லிட்டர் பீர் மது பிரியர்கள் குடித்துள்ளனர்.

    கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் அதிகபட்சமாக 7.2 கோடி பாட்டில்கள் விற்பனையாகி இருந்தது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானாவில் ஒவ்வொரு மாதமும் சுமார் 28 முதல் 30 லட்சம் பெட்டி பீர் விற்பனை செய்யப்படுகிறது.

    கோடை விடுமுறை மற்றும் திருமண சீசன் காரணமாக பீர் விற்பனை அதிகமாக இருந்தது. மேலும் விலை குறைப்பும் விற்பனை அதிகரிப்பு காரணமாக இருந்துள்ளது.

    வருங்காலங்களில் மேலும் பீர் விற்பனை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாக கருதப்படுகிறது.
    • அந்த வகையில், நடப்பாண்டு கத்திரி வெயில் காலம் கடந்த மே மாதம் 4-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நீடித்தது.

    சேலம்:

    தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாக கருதப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதில் வெப்பத்தின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் அக்னி நட்சத்திர நாட்கள் கத்திரிவெயில் காலமாக கருதப்படுகிறது.

    அந்த வகையில், நடப்பாண்டு கத்திரி வெயில் காலம் கடந்த மே மாதம் 4-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை நீடித்தது. சேலத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக 106 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி இருந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் சிரமத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில், அக்னி வெயில் காலம் முடிந்த பிறகு வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த 3 நாட்களாக சேலத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. இன்றும் காலை முதல் கடும் வெப்பம் நிலவியது. தகிக்கும் வெப்பத்தால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஏப்ரல் மாதம் தொடங்கி மே, ஜூன், ஜூலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.
    • இயற்கை வழியில் நீங்கள் பாதுகாப்பை தேட முடியும்.

    வெயில் மண்டையை பிளந்து வருகிறது. அனல் காற்று பாடாய் படுத்துகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கி மே, ஜூன், ஜூலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இந்நிலையில், கோடை வெயிலுக்கு இதமாக சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவுகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

    1.தர்பூசணி : இது கோடை காலத்தில் உடலை 'ஹைட்ரேட்' (நீரேற்றம்) செய்யும் ஒரு சூப்பர் ஹைட்ரேஷன் உணவாகும். தர்பூசணிகள் அதிகப்படியான நீரை கொண்டுள்ளன. மேலும் அவை உங்களை குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றன. மேலும் தர்பூசணி சூரிய வெப்பத்தால் தோல் சேதமடையாமல் பாதுக்காக்கிறது.

    2.தக்காளி : கோடை வெயிலில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க பலர் எப்போதும் சன்ஸ்கிரீன் போன்ற செயற்கை பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இயற்கை வழியில் அதற்கு நீங்கள் பாதுகாப்பை தேட முடியும். ஆம் தக்காளி மற்றும் பிற சிவப்பு பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதால் உங்கள் தோலுக்கு கூடுதல் பாதுகாப்பை நீங்கள் பெற முடியும். ஏனெனில் இது லைகோபினை கொண்டுள்ளது. தக்காளியை சிவப்பு நிறமாக்கும் கரோட்டினாய்டு மற்றும் அதிக லைக்கோபீனை உட்கொள்வதன் மூலம் உங்கள் சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்க முடியும்.

    3. முலாம் பழம் : கோடை கால ஆரோக்கிய உணவுகளில் முலாம் பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை ஊட்டச்சத்துக்கள், நீர் மற்றும் அதிக சுவையையும் கொண்ட பழமாக உள்ளது. எனவே ஆரோக்கியமான சுவையான கோடை கால உணவாக முலாம் பழம் விளங்குகிறது. குறிப்பாக முலாம்பழம் உடலில் நீரிழப்பை குறைக்கிறது.

    4.பெர்ரி : ஸ்ட்ராபெர்ரி, ப்ளு பெர்ரி, ப்ளாக் பெர்ரி என அனைத்து வகையான பெர்ரி பழங்களிலும் ஆரோக்கிய நன்மைகள் அதிகமாக உள்ளன. ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளுபெர்ரி இரண்டு அதிக பிளாவனாய்டுகளை கொண்டுள்ளன. இவை சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் இது உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தையும் தோற்றத்தையும் மேம்படுத்துகிறது. ப்ளாக் பெர்ரி மற்றும் ராஸ் பெர்ரி இரண்டிலும் அதிகமான நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.

    5. சிட்ரஸ் பழங்கள் : சிட்ரஸ் பழங்கள் கோடை காலத்தில் மட்டும் கிடைக்கும் பருவகால பழங்கள் அல்ல என்றாலும் ஆரஞ்சு போன்ற கனிகளில் அதிக பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது கோடையில் உங்களுக்கு முக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. நமக்கு வெயில் காலங்களில் அதிகப்படியான வியர்வை ஏற்படும்போது நமது உடல் பொட்டாசியத்தை இழக்கிறது. இதனால் நமது தசைப்பிடிப்புகளில் ஆபத்து ஏற்படலாம். எனவே உடலை நீரேற்றமாக்கவும், புத்துணர்ச்சி ஆக்கவும் இது உதவுகிறது. அதே போல குடிக்கும் தண்ணீரில் எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம். அல்லது சோடா குடிப்பதற்கு பதிலாக எலுமிச்சை சாற்றை அருந்தலாம். கோடை காலங்களில் மீன் போன்ற இறைச்சி வறுவல்களில் எலுமிச்சையை பிழிந்து விட்டு சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு கூடுதல் வைட்டமின்-சி கிடைக்கிறது.

    6. இனிப்பு சோளம் : கோடை காலத்தில் வரும் பருவ கால காய்கறிகளில் இனிப்பு சோளமும் ஒன்றாகும். நீங்கள் அதை வேகவைத்தாலும் க்ரில் செய்தாலும் அது இனிப்பு சுவையிலேயே இருக்கும். மேலும் இது அறியப்படாத பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. கண்புரை மற்றும் வயது சார்ந்து ஏற்படும் தசை சிதைவை இது தடுக்கிறது. மேலும் இது உங்கள் கண்களை வெயில் பாதிப்பில் இருந்தும் பாதுகாக்கிறது.

    7. அவகாடோ : உங்கள் ஆரோக்கிய உணவுப்பட்டியலில் கண்டிப்பாக இருக்க கூடிய ஒரு உணவாக அவகாடோ உள்ளது. ஏனெனில் அவகாடோ மோனோசாச்சுரேட் கொழுப்பு, போலெட் மற்றும் பைபர் ஆகியவற்றை கொண்ட சுவையான மூலமாக உள்ளது. கூடுதலாக அவை இயற்கையாகவே ஒவ்வாமை எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளன.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் நேற்று முன்தினம் விடை பெற்றுவிட்டது.
    • தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    சென்னை:

    அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் நேற்று முன்தினம் விடை பெற்றுவிட்டது. அக்னி நட்சத்திரம் விடைபெற்ற நிலையிலும் தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, நேற்று தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவாகியிருந்தது. அதிகபட்சமாக வேலூரில் 102.92 டிகிரி வெயில் பதிவானது. மற்ற இடங்களில் பதிவான வெயில் அளவு வருமாறு:-

    சென்னை நுங்கம்பாக்கம் - 96.98 டிகிரி (36.1 செல்சியஸ்)

    சென்னை மீனம்பாக்கம் - 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்)

    கோவை - 97.7 டிகிரி (36.5 செல்சியஸ்)

    கடலூர் - 97.16 டிகிரி (36.2 செல்சியஸ்)

    தர்மபுரி - 97.7 டிகிரி (36.5 செல்சியஸ்)

    ஈரோடு - 100.04 டிகிரி (37.8 செல்சியஸ்)

    கன்னியாகுமரி - 92.84 டிகிரி (33.8 செல்சியஸ்)

    கரூர் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

    கொடைக்கானல் - 71.6 டிகிரி (22 செல்சியஸ்)

    மதுரை நகரம் - 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்)

    மதுரை விமானநிலையம் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

    நாகப்பட்டினம் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)

    நாமக்கல் - 98.6 டிகிரி (37 செல்சியஸ்)

    பாளையங்கோட்டை - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

    பரங்கிப்பேட்டை - 99.68 டிகிரி (37.6 செல்சியஸ்)

    சேலம் - 99.68 டிகிரி (37.6 செல்சியஸ்)

    தஞ்சாவூர் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)

    திருப்பத்தூர் - 100.76 டிகிரி (38.2 செல்சியஸ்)

    திருச்சி - 101.66 டிகிரி (38.7 செல்சியஸ்)

    திருத்தணி - 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்)

    தூத்துக்குடி - 93.92 டிகிரி (34.4 செல்சியஸ்)

    ஊட்டி - 66.2 டிகிரி (19 செல்சியஸ்)

    வால்பாறை - 80.6 டிகிரி (27 செல்சியஸ்)

    வேலூர் - 102.92 டிகிரி (39.4 செல்சியஸ்)

    இதுதவிர, புதுச்சேரியில் 96.26 டிகிரியும் (35.7 செல்சியஸ்), காரைக்காலில் 95.54 டிகிரியும் (35.3 செல்சியஸ்) வெயில் பதிவாகியிருந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அக்னி நட்சத்திரம் நேற்று முன்தினம் விடைபெற்றது.
    • வெயிலினால் காய்ந்து கிடந்த இலை சறுகுகள், சாலை மண்கள் புழுதியை கிளப்பியபடி காற்றுடன் சேர்ந்து பறந்தது.

    சென்னை:

    கோடை காலம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இடையில் அவ்வப்போது பெய்த கோடை மழையால் ஓரளவு வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடிந்தது. அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயிலின் பிற்பாதியில் வெயிலின் கோரத்தாண்டவம் அதிகளவில் இருந்தது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயில் சதம் அடித்தது.

    இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் நேற்று முன்தினம் விடைபெற்றது. இருந்தாலும் வெப்பத்தின் தாக்கம் தமிழ்நாட்டில் சில இடங்களில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் நேற்று சில இடங்களில் வெயில் சுட்டெரிக்கத்தான் செய்தது. அந்த வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெயிலின் தாக்கத்தை உணர முடிந்தது.

    ஆனால் அக்னி நட்சத்திரம் காலத்தில் பதிவான வெயிலை விட குறைவாகவே சென்னை நகர் பகுதிகளில் இருந்தது. மீனம்பாக்கம் உள்பட புறநகர் பகுதிகளில் வெயில் இயல்பை விட சற்று அதிகமாகவே பதிவானது.

    நேற்று பிற்பகலில் இருந்து சூரியன் சுட்டெரித்து வந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை 4 மணிக்கு மேல் சீதோஷ்ண நிலை அப்படியே மாறியது. மேகங்களே இல்லாமல், வெறுமையாக இருந்த வானத்தில் திடீரென்று கருமேகங்கள் சூழத் தொடங்கின.

    5 மணி அளவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பல இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்து இருட்டாக்கியது. மேலும் சூறாவளி காற்றும் பலமாக வீசியது. வெயிலினால் காய்ந்து கிடந்த இலை சறுகுகள், சாலை மண்கள் புழுதியை கிளப்பியபடி காற்றுடன் சேர்ந்து பறந்தது.

    இதனால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமப்பட்டனர். அதிலும் வாகன ஓட்டிகள் பலரை சூறாவளி காற்று தள்ளியதால், சிலர் அச்சத்தில் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தியதையும் பார்க்க முடிந்தது. அதிலும் குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையோரத்தில் கடற்கரை மணலுடன் காற்று வீசியது.

    இருள் சூழ்ந்தபடி, கருமேகக்கூட்டங்கள் வந்ததால், மழை வெளுத்து வாங்கும், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து குளிர்ச்சியான நிலை உருவாகும் என்று எதிர்பார்த்திருந்த மக்களை, வெறும் காற்றுடன் வந்த மேகக்கூட்டங்கள் அப்படியே கலைந்து சென்று, மழை பெய்யாமல் மக்களை ஏமாற்றி விட்டது. ஓரிரு இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது.

    இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'சென்னைக்கு வடக்கில் உருவாகி, இடி மேகக்கூட்டங்களில் வந்த குளிர்ந்த காற்று சென்னை உள்பட புறநகர் பகுதிகளில் வந்ததால், தரைப்பகுதியில் சூறாவளி போல் காற்று வீசியது. அந்த குறிப்பிட்ட நேரத்தில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசியுள்ளது. இதனால் சென்னை நுங்கம்பாக்கத்தில் மாலையில் 6 டிகிரி வரை வெப்பம் குறைந்திருந்தது. காற்றில் ஈரப்பதம் பெரிய அளவில் இல்லாததால், மழை பெய்யாமல் சென்றுவிட்டது' என்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குளிர்பான விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்களின் வரவால் கோலி சோடாவின் மார்க்கெட் மெல்ல மெல்ல குறைந்தது.
    • கோடை காலத்தை முன்னிட்டு கோலி சோடா தயாரிப்போர் ரோஜா, ஆரஞ்சு, எலுமிச்சை என பல்வேறு சுவைகளில் கோலி சோடாவை அறிமுகம் செய்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் விடைபெற்றாலும், சூரிய பகவானின் உக்கிரம் இன்னும் தணியவில்லை.

    இதனால் சென்னை உள்பட பல நகரங்களில் மக்கள் அதிகாலையிலேயே வியர்வையில் குளித்து வருகிறார்கள். வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மக்கள் அடிக்கடி தண்ணீர் அருந்த வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். குறிப்பாக இயற்கை பானங்களான இளநீர், நுங்கு, பதனீர் போன்றவற்றை வாங்கி அருந்தும்படி கூறியுள்ளனர்.

    டாக்டர்களின் அறிவுரைப்படி இயற்கை பானங்களை தேடி செல்லும் மக்களின் பார்வை தற்போது கோலி சோடா பக்கமும் திரும்பி உள்ளது.

    தமிழகத்தில் கடந்த 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிமுகமான கோலி சோடா, ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கழுத்துபாணி கண்ணாடி பாட்டில்களில் விற்பனைக்கு வந்தது.

    சாதாரண பெட்டிக்கடைகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள இந்த கோலி சோடாக்களின் விலை சாமானிய மக்களும் வாங்கும் அளவுக்கு இருந்ததால் இதனை அதிகமானோர் விரும்பி வாங்க தொடங்கினர். குறிப்பாக வெயிலில் அலைந்து திரும்புவோர், கோலி சோடா ஒன்றை வாங்கி அருந்தி மகிழ்ந்தனர்.

    குளிர்பான விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்களின் வரவால் கோலி சோடாவின் மார்க்கெட் மெல்ல மெல்ல குறைந்தது. அதன்பின்பு சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டும் என்ற கோஷம் கிளம்பியபோது, கோலி சோடாவுக்கும் ஆதரவாக குரல் எழும்பியது. இதனால் சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் கோலி சோடாவின் வரவு மீண்டும் தொடங்கியது.

    தற்போது வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மக்களின் பார்வை மீண்டும் கோலி சோடா பக்கம் திரும்பி உள்ளது. குறிப்பாக சென்னையின் பல பகுதிகளில் கோலி சோடாவுக்கு மக்கள் மத்தியில் மீண்டும் மவுசு அதிகரித்து உள்ளது.

    கோடை காலத்தை முன்னிட்டு கோலி சோடா தயாரிப்போர் ரோஜா, ஆரஞ்சு, எலுமிச்சை என பல்வேறு சுவைகளில் கோலி சோடாவை அறிமுகம் செய்துள்ளனர். இவை லிட்டருக்கு ரூ.15 முதல் ரூ.150 வரை விற்பனை ஆகிறது. இளம் தலைமுறையினரும் இப்போது கோலி சோடா பக்கம் பார்வையை திருப்பி உள்ளதால் சென்னையில் கோலி சோடா விற்பனை சூடு பிடித்து வருகிறது.