என் மலர்
நீங்கள் தேடியது "சுற்றுலாப் பயணிகள்"
- மழைப்பொழிவு இல்லாததாலும் வெள்ளப்பெருக்கு வடிந்ததாலும் கொடிவேரி தடுப்பணைக்கு நீர் வரத்து குறைந்தது.
- கடந்த இரண்டு நாட்களாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
கோபி:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை ஆகும். ஈரோடு மட்டுமின்றி கோவை, சேலம், திருச்செங்கோடு, நாமக்கல் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக் கான சுற்றுலாப் பயணிகள் கொடிவேரி தடுப்பணைக்கு வருவது வழக்கம்.
தடுப்பணையில் குளித்து மகிழ்ந்து அங்கிருக்கும் பூங்கா பகுதியில் குடும்பத்தினருடன் உற்சாகமாக பொழுதை கழிப்பார்கள். மேலும் அணையின் வெளிப்பகுதியில் விற்கப்படும் பொரித்த மீன் புகழ்பெற்றதாகும்.
இந்நிலையில் பலத்த மழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக கடந்த அக்டோபர் மாதம் 18-ந்தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் கொடிவேரி அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து இரு கரைகளிலும் தொட்டபடி வெள்ள நீர் ஆர்ப்பரித்து சென்றதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.
இந்நிலையில் மழைப்பொழிவு இல்லாததாலும் வெள்ளப்பெருக்கு வடிந்ததாலும் கொடிவேரி தடுப்பணைக்கு நீர் வரத்து குறைந்தது. எனினும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அருவியில் குளிக்கும் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பிடித்து நிற்க வசதியாக பதிக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் சேதம் அடைந்திருந்தது.
இதனால் கடந்த இரண்டு நாட்களாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. சேதமடைந்த தடுப்புகளை ஊழியர்கள் சீர் செய்தனர். சீரமைக்கும் பணிகள் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
இதைத்தொடர்ந்து இன்று காலை முதல் மீண்டும் கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 18 நாட்கள் தடைக்கு பிறகு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப் பட்டதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
- கோவையில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் பர்லியார் - குன்னூர் வழியே உதகை வரவேண்டும்.
- உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகரி வழியே செல்ல வேண்டும்
தொடர் விடுமுறையால் நீலகிரியில் நாளை முதல் 5 நாட்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
* கோவையில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் பர்லியார் - குன்னூர் வழியே உதகை வரவேண்டும்.
* மறுமார்க்கமாக உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகரி வழியே செல்ல வேண்டும்
* அது சமயம் உள்ளூர் வாகனங்கள் மற்றும் அரசுப்பேருந்துகள் வழக்கம் போல செல்லலாம்
* குன்னூர் வழியே உதகை வரும் சுற்றுலாப் பேருந்துகள் ஆவின் வளாகத்தில் நிறுத்தப்படும். அங்கிருந்து அரசின் சுற்றுப் பேருந்துகளில் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லலாம்
* கோத்தகிரி வழியே வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் தொட்டபெட்டா சாலையோரம் நிறுத்த வேண்டும். கூடலூர் வழியே வரும் சுற்றுலா பேருந்துகள் HPF பகுதியில் நிறுத்தப்படும். அங்கிருந்து சுற்றுப் பேருந்துகள் மூலம் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லலாம்
* காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து வகையான கனரக வாகனங்களும் உதகை, கூடலூர், குன்னூர் நகரில் அனுமதிக்கப்படாது.
- அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
- சாரல் மழையில் நனைந்தவாறே பைக்காரா படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
ஊட்டி:
தமிழகத்தில் தற்போது காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளது. மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கி உள்ளனர்.
அவர்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், அவலாஞ்சி, சூட்டிங் மட்டம், பைக்காரா, படகு இல்லம், ரோஜா பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் அங்கு இருந்த மலர்களை கண்டு ரசித்து அதன் முன்பு செல்பி புகைப்படமும் எடுத்து கொண்டனர். தாவரவியல் பூங்கா புல்வெளியில் குடும்பத்துடன் அமர்ந்து பொழுதை கழித்தனர். நேற்று மதியம் ஊட்டியில் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் மழையில் நனைந்தவாறே சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர்.
கோத்தகிரியில் உள்ள கொடநாடு காட்சி முனையில் நேற்று சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
அங்கு வந்தவர்கள், கொடநாடு காட்சி முனையில் இருந்தவாறு, பசுமையான தேயிலைத் தோட்டங்கள், வண்ணமயமான பள்ளத்தாக்குகள், மாயார் நதி, பவானி அணை, மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள் சந்திக்கும் இடம் ஆகியவற்றை பார்த்து ரசித்தனர்.
மேல் கூடலூர், மசினகுடியில் உள்ள இ-பாஸ் மையத்தில் நேற்று காலை முதல் சோதனைக்காக வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனர். இ-பாஸ் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
கூடலூர், நடுவட்டம், பைக்கார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சமவெளிப்பகுதியில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் குளிர்ந்த காலநிலையை அனுபவித்தனர். சாரல் மழையில் நனைந்தவாறே பைக்காரா படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் ஊட்டி கூடலூர், ஊட்டி கோத்தகிரி, ஊட்டி குன்னூர் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த பகுதிகளில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நகர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.
இதேபோல் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே உள்ள கவியருவிக்கும் நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் அருவியில் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
- பேருந்தில் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸை சேர்ந்த 54 சுற்றுலாப் பயணிகள் பயணித்தனர்.
- விபத்தில் குழந்தைகள் யாரும் உயிரிழக்கவில்லை.
நியூயார்க்கில் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்று திரும்பிய சுற்றுலாப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 49 பேர் உயிர் தப்பினர்.
இந்த பேருந்தில் இந்தியா, சீனா, பிலிப்பைன்ஸை சேர்ந்த 54 சுற்றுலாப் பயணிகள் பயணித்தனர்.
நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்வையிட்ட பிறகு சுற்றுலாப் பயணிகள் நியூயார்க் நகரத்திற்குத் திரும்பிச் சென்றபோது பஃபலோவிலிருந்து கிழக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் குழந்தைகள் யாரும் உயிரிழக்கவில்லை. வேறு யாரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்றும் பல பயணிகள் மருத்துவ சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
- சிற்றருவி மற்றும் புலி அருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்று 2-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் மெயின் அருவியில் நேற்று சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார் அபாய ஒலி எழுப்பி சுற்றுலாப் பயணிகளை அவசர, அவசரமாக வெளியேற்றினர்.
தண்ணீரின் சீற்றம் குறையாத காரணத்தினால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழைய குற்றால அருவியிலும் நேற்று மாலையில் நீர்வரத்து திடீரென அதிகரித்ததால் அங்கும் சுற்றுலாப் பணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
சிற்றருவி மற்றும் புலி அருவியில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறையும் பட்சத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிற்றருவி மற்றும் புலியருவி ஆகிய 2 அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- சுற்றுலாப் பயணிகள் பலரும் பிரதான அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் குற்றாலம் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் சாரல் மழையின் எதிரொலியாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் குற்றாலத்தில் உள்ள அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் நேற்று காலையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவியில் அபாய ஒலி எச்சரிக்கை விடுத்து சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர். மற்ற அருவிகளான ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இன்று காலையில் தொடர்ந்து வனப்பகுதியில் மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தே காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனினும் சிற்றருவி மற்றும் புலியருவி ஆகிய 2 அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறையில் குற்றால அருவிகளில் குளிப்பதற்காக வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் பிரதான அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
மழைப்பொழிவு குறைந்து அருவிகளுக்கு வரும் நீர்வரத்து சீராகும் பட்சத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நகரம் முழுவதும் உள்ள சாதாரண விடுதி முதல் நட்சத்திர விடுதி வரை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- நகரில் உள்ள சாலையோர உணவகங்களில் கூட்டம் அலைமோதியது.
புதுச்சேரி:
புதுச்சேரிக்கு வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகள் விரும்பும் பட்டியலில் உலகிலேயே புதுச்சேரி 2-ம் இடத்தை பிடித்துள்ளது. அதனால் சுற்றுலா வருவோரை மேலும் கவர்வதற்காக மத்திய, மாநில அரசுகள் புதுச்சேரி யில் பல்வேறு சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையை கொண்டாட புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது.
இதனால் அங்குள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
அதோடு மகான் அரவிந்தர் பிறந்தநாளையொட்டி வட மாநில சுற்றுலாப் பயணிகளும் புதுச்சேரி வந்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் நகர குதியில் உள்ள ஆசிரம விடுதிகளில் தங்கி உள்ளனர்.
நகரம் முழுவதும் உள்ள சாதாரண விடுதி முதல் நட்சத்திர விடுதி வரை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதனால் நகரம் மற்றும் கடற்கரை ரிசார்டுகளில் அறைகள் கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் தவித்தனர். இதனால் பலர் தமிழக பகுதியான கடலூர் மற்றும் விழுப்புரத்தில் தங்கும் அறை எடுத்து தங்கி புதுச்சேரி வந்தனர். ஓட்டல்களில் உணவு அருந்த சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் நகரில் உள்ள சாலையோர உணவகங்களில் கூட்டம் அலைமோதியது.
புதுச்சேரி நகர பகுதியில் பல மாநிலங்களை சேர்ந்த கார்கள் உலா வருகிறது. இதனால் ராஜீவ்காந்தி சந்திப்பு, கிழக்கு கடற்கரை சாலை, வழுதாவூர் சாலை, திண்டிவனம், விழுப்புரம் சாலை, காமராஜர் சாலை, நேருவீதி, அண்ணா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஒவ்வொரு இடத்தையும் கடந்து செல்ல அரைமணி நேரத்துக்கும் மேல் ஆனது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன. கடற்கரை சாலை, பாரதிபூங்கா, ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில், நோணாங்குப்பம் படகு குழாம், பாண்டி மெரினா, ஈடன் கடற்கரை உள்பட சுற்றுலா தலங்கள் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் நிரம்பி வழிந்தது.
நேற்றைய தினம் தமிழகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மதுகடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் இருந்து மது அருந்த ஏராளமானோர் புதுச்சேரியில் குவிந்தனர். அனைத்து மதுக்கடைகளிலும் மது வாங்க கூட்டம் அலைமோதியது.
- தராலியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த அதிகனமழை காரணமாக, கீர் கங்கா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது.
- தேசிய பேரிடர் மீட்பு குழுவின் 3 குழுக்கள் தாராலிக்குச் செல்லும் வழியில் உள்ளன.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் அமைந்துள்ள மலை கிராமம் தராலி. ஆன்மிகத் தலமாக கருதப்படும் கங்கை உற்பத்தியாகும் இடமான கங்கோத்ரிக்கு செல்லும் வழியில் தராலி கிராமம் அமைந்துள்ளது.
எனவே இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்வார்கள். இதற்காக இங்கு ஏராளமான ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் அமைந்துள்ளன.
தராலியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த அதிகனமழை காரணமாக, கீர் கங்கா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது.
மலையில் இருந்து ஆர்ப்பரித்து வந்த வெள்ளம், தராலியில் இருந்த 25-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், வீடுகளை வாரிச்சுருட்டிச் சென்றது. ஏராளமானோர் வெள்ளத்தில் சிக்கி மாயமானார்கள். 4 பேர் பலியானார்கள்.
சம்பவ இடத்துக்கு தேசிய, மாநில பேரிடர் மீட்பு குழுவினர், இந்தோ-திபெத் படையினர், ராணுவத்தினர் விரைந்து சென்றனர். அவர்கள் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் இதுவரை 150 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் பலியானவர்களில் ஒருவரது உடலும் மீட்கப்பட்டுள்ளது. அவரது பெயர் ஆகாஷ் பன்வார் (வயது 35) என்று தெரியவந்துள்ளது.
இன்னும் 50 பேர் மாயமாகி உள்ளனர். இதில் ஹர்சில் ராணுவ முகாமில் இருந்த 11 ராணுவ வீரர்களும், கேரள சுற்றுலா பயணிகள் 28 பேரும் அடங்குவார்கள். அவர்களை தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மீட்பு பணி குறித்து தேசிய பேரிடர் மீட்புக்குழு டி.ஐ.ஜி. மொஹ்சென் ஷாஹேதி கூறியதாவது:-
தேசிய பேரிடர் மீட்பு குழுவின் 3 குழுக்கள் தாராலிக்குச் செல்லும் வழியில் உள்ளன. தொடர்ச்சியான நிலச்சரிவுகள் காரணமாக ரிஷிகேஷ்-உத்தரகாசி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களால் மேற்கொண்டு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இருப்பினும் மாற்று வழியை யோசித்து வருகிறோம்.
மீட்பு பணிக்காக டேராடூனில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் விமானம் மூலம் அனுப்பப்பட உள்ளன, ஆனால் மோசமான வானிலையால் அவர்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
தொடர்ந்து பெய்து வரும் மழை, நிலச்சரிவு, பெருவெள்ளம் ஆகியன மீட்பு பணிக்கு தடைகளாகவும், சவாலாகவும் உள்ளன. இருப்பினும் மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கங்னானியில் லிமாச்சா ஆற்றின் மீது கட்டப்பட்ட ஒரு பாலம் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து தாராலி மற்றும் ஹர்சிலில் வெள்ளத்தில் மூழ்கிய பகுதியை ஹெலிகாப்டரில் சென்றவாறு பார்வையிட்டார். பின்னர் காயமடைந்த ராணு வீரர்கள் மற்றும் வெள்ளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஒவ்வொரு உயிரும் எங்களுக்கு முக்கியம். அனைவரையும் மீட்கும் முயற்சி தொய்வின்றி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
- கவியருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான வால்பாறை சக்கி, தலனார் எஸ்டேட் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
- கவியருவியில் தண்ணீர் வரத்து சீரானதை தொடர்ந்து வனத்துறையினர் தடுப்பு வேலிகளை சீரமைத்தனர்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் பகுதியில் கவியருவி உள்ளது.
இந்த கவியருவிக்கு கோவை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.
அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் கவியருவியில் உற்சாக குளியல் போட்டு விட்டு, அருகே உள்ள ஆழியார் அணை மற்றும் பூங்காவை சுற்றி பார்த்து செல்வார்கள்.
வார விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை மழை பெய்தது.
குறிப்பாக கவியருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான வால்பாறை சக்கி, தலனார் எஸ்டேட் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக கவியருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
அருவியில் அமைக்கப்பட்ட தடுப்பு வேலிகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
வெள்ளப்பெருக்கை அடுத்து கவியருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடைவிதித்தது.
தற்போது மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் மழை குறைந்துள்ளது. கவியருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான சக்தி, தலனார் எஸ்டேட் பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், கவியருவிக்கு தண்ணீர் வரத்து சீராக உள்ளது.
கவியருவியில் தண்ணீர் வரத்து சீரானதை தொடர்ந்து வனத்துறையினர் தடுப்பு வேலிகளை சீரமைத்தனர். நேற்று மதியம் 1 மணி முதல் கவியருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆழியார் அணை பகுதிக்கு சுற்றுலா வந்தவர்கள், அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதை அறிந்து கவியருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். இன்றும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் கவியருவிக்கு வந்து குளித்து மகிழ்ந்து சென்றனர். நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை தினங்கள் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவையில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் கோவை குற்றாலமும் ஒன்று. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலத்திற்கு வருவார்கள்.
இங்கு நிலவும் சீதோஷ்ண நிலை மற்றும் வனத்தில் உள்ள வனவிலங்குகளை பார்ப்பதுடன், அருவியில் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்து செல்கின்றனர்.
கடந்த மே மாதம் இறுதியில் மழை பெய்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அருவிக்கு செல்ல வனத்துறை தடைவிதித்தது. மீண்டும் ஜூலை 11-ந் தேதி திறக்கப்பட்டது. ஆனால் கடந்த 23-ந் தேதி பெய்த மழை காரணமாக கோவை குற்றால அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடைவிதித்தனர். தற்போது அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று முதல் கோவை குற்றால அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து கோவை குற்றாலத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்து, அங்கு நிலவும் சீதோஷ்ண நிலை மற்றும் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.
- குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக விடுமுறை நாட்கள் போன்று வேலை நாட்களிலும் சுற்றுலாப் பணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது.
- கேரளாவில் இருந்து புது வரவாக அபி எனும் மருத்துவ குணம் கொண்ட பழம் இந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது.
இதனால் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக விடுமுறை நாட்கள் போன்று வேலை நாட்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது.
இன்று காலையில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மலை பகுதிகளில் வாசஸ் தலங்களில் கிடைக்கக்கூடிய அரிய வகை பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.
அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து புது வரவாக அபி எனும் மருத்துவ குணம் கொண்ட பழம் இந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
பலாப்பழ சீசனும் முழுமையாக தொடங்கி உள்ளதால் பலாப்பழங்கள் குற்றாலம் செல்லும் சாலையில் அங்கங்கே வியாபாரிகளால் சாலை ஓரங்களில் குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனை குற்றாலம் வரும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
- பாலத்தில் சுமார் 100 பேர் இருந்ததாகவும், சிலர் விழுந்து கரைக்கு வந்தடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
- தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) இரண்டு குழுக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
மகாராஷ்டிரா புனே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீதுள்ள ஒரு பாலம் இன்று இடிந்து விழுந்ததில் பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஒரு நபர் உயிரிழந்ததை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளதுடன், தண்ணீரில் விழுந்த மற்றவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விபத்து பிரபல சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் மாலை 3:30 மணியளவில் நிகழ்ந்தது. வார இறுதி என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு கூடியிருந்தனர்.
இந்த பழைய பாலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நின்றிருந்தபோது திடீரென இடிந்து விழுந்ததில் பலர் ஆற்றுக்குள் விழுந்தனர்.
மாளவ் தொகுதி எம்எல்ஏ சுனில் ஷெல்கே கூறுகையில், இந்திராயணி ஆற்றில் உள்ள இந்தப் பழைய இரும்புப் பாலம் 30 ஆண்டுகள் பழமையானது. பாலத்தில் சுமார் 100 பேர் இருந்ததாகவும், சிலர் விழுந்து கரைக்கு வந்தடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினர். தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) இரண்டு குழுக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
- கடந்த 24-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
- கடந்த 10 நாட்களாக அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமணலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து 750 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது.
அருவிக்கு வனப்பகுதியில் உற்பத்தியாகும் ஆறுகள், ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. அருவியில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் கடந்த 24-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து வனப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பின்பு அவ்வப்போது மழை பெய்து வந்ததால் அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது.
கடந்த 10 நாட்களாக அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தண்ணீரின் சீற்றம் குறைந்து அருவி இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் திருமூர்த்தி மலைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்தோடு அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.






