search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "camps"

    • ஊராட்சி ஒன்றிய பகுதியில் கால்நடை மருத்துவ முகாம்கள் நடக்கிறது.
    • கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் நடப்பாண்டிற்கும் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 20 முகாம்கள் வீதம் மொத்தம் 220 சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்பு ணர்வு முகாம்கள் நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதன்படி அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் குல்லூர்சந்தை கிராமத்தில் கலெக்டரால் முகாம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த முகாம் நடைபெறும் இடம், தேதி, கலந்து கொள்ளும் மருத்துவக்குழு வினர் ஆகிய விவரங்கள் முன்கூட்டியே அந்த ஊராட்சி பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும்.

    நிகழ்ச்சி தொடர்பாக துண்டுபிரசுரங்கள் மற்றும் ஒலிபெருக்கிகள் மூலம் விளம்பரம் மற்றும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்ட பின்னர் குறிப்பிட்ட நாளில் உள்ளாட்சி அமைப்பு பிரதி நிதிகள் முன்னிலையில் முகாம்கள் நடைபெறும்.

    அப்போது கால்நடை மருந்தகத்தில் செய்யப்படும் சேவைகளான சிகிச்சை, குடற்புழுநீக்கம், ஆண்மை நீக்கம், மலடுநீக்க சிகிச்சை, தடுப்பூசிப்பணி, கே.சி.சி. விண்ணப்பங்கள் பெறுதல் ஆகிய பணிகள் அந்தந்த ஊராட்சி பகுதியில் மேற் கொள்ளப்படும். அனைத்து பணிகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.

    கலந்து கொள்ளும் கால்நடைகளுக்கு இலவச மாக தாதுஉப்பு கலவை ஒரு கிலோ எடையுள்ள சத்து பவுடர் ஒவ்வோர் முகாம்க ளிலும் வழங்கப்படும். கால்நடை வளர்ப்போருக்கு தேவையான தீவனபுல் விதைகள் மற்றும் நாற்று களை விவசாயிகள் தங்க ளது பெயர்களை பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

    சிறந்த முறையில் கால்நடை பராமரிப்பினை மேற்கொள்ளும் பண்ணை யாளர்களை தேர்வு செய்து 3 பேருக்கு ஊக்கப்பரிசுகளும் வழங்கப்படும். எனவே முகாம்கள் நடைபெறும் போது அப்பகுதி கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் மற்றும் விலங்கின ஆர்வ லர்கள் கலந்து கொண்டு தங்கள் கால்நடைகளை அழைத்துவந்து பயன் பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    • குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய, ஆகஸ்ட் 18,19, 20 ஆகிய 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
    • பெண்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால், மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட த்திற்கான விண்ண ப்பப்பதிவு முகாம்கள் ஜூலை 24-ந் தேதி தொடங்கப்பட்டு 2 கட்டங்களாக நடைபெற்றது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 766 நியாயவிலை கடைகளில் உள்ள 4,34,663 குடும்ப அட்டைகளில், முதற்கட்டமாக ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந் தேதி வரையும், 2-ம் கட்டமாக ஆகஸ்ட் 5 முதல் 14-ந் தேதி வரையும் 3,75,613 குடும்ப அட்டையை சேர்ந்த நபர்கள் விண்ணப்பங்கள் அளித்துள்ளனர். இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

    தற்பொழுது விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும்பத் தலைவிகள், முதியோர் ஓய்வூதியத் திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள தகுதி வாய்ந்த மகளிர் மற்றும் ஏற்கனவே முகாம்களில் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வருகை புரிய இயலாத குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய, ஆகஸ்ட் 18,19, 20 ஆகிய 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். மேற்கண்ட வகை குடும்பங்களில் உள்ள பெண்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தால், மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. இதுவரை முதல் கட்டம் மற்றும் 2-ம் கட்டத்தில் விண்ணப்பிக்காத தகுதியான பயனாளிகள் அனைவரும் இந்த வாய்ப்பினைப் பயன்படு த்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • சிறப்பு பட்டா முகாம்கள் இன்று நடக்கிறது.
    • பெரம்பலூர்-குன்னத்தில் நடைபெற்றது

    பெரம்பலூர் 

    பெரம்பலூர் மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் 2 இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பு பட்டா முகாம் நடைபெற்றது. பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய தாலுகாக்களுக்கும், பெரம்பலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திலும், குன்னம் தாலுகாவில் குன்னம் தாசில்தார் அலுவலகத்திலும் சிறப்பு பட்டா முகாம்கள் நடந்தது. சிறப்பு பட்டா முகாமில் வீட்டுமனை பட்டா மனுக்கள், பட்டா மாறுதல் மனுக்கள், வருவாய் ஆவணங்களில் பிழை திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பான மனுக்கள், வருவாய்த்துறை தொடர்பான பிற மனுக்கள் மற்றும் இதர துறை சார்ந்த மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்

    • 2-ம் கட்ட முகாம்கள் 5-ந் தேதி தொடங்குகிறது
    • விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் எடுத்து வர வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்து உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் கடந்த 24.07.2023 முதல் நடை பெற்று வருகிறது. மேற்படி முதற்கட்ட விண்ணப்ப பதிவிற்காக ஏற்கனவே நியாய விலைக் கடை பணியா ளர்கள் ஒவ்வொரு நியாய விலை கடை பகுதியில் உள்ள முகாம்கள் நடை பெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வீட்டில் நேரடியாக ஏற்கனவே 20.07.2023 முதல் 23.07.2023 வரை வழங்கப்பட்டது.

    மேற்படி விண்ணப்ப தாரர்கள் விண்ணப்பம் மற்றும் டோக்கன் பெற்ற வர்கள் விண்ணபங்களை இதுவரை முகாமில் அளித்துக் கொள்ள வில்லை என்றால் வருகிற 3.8.2023 மற்றும் 4.8.2023 ஆகிய நாட்களில் தங்களுக்குரிய நியாய விலைக் கடை முகாம்களில் கொடுத்துக் கொள்ளலாம். மேலும் குடும்ப அட்டை இருக்கும் நியாய விலைக் கடை பகுதியில் நடை பெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும் போது சரி பார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய வற்றை எடுத்து வர வேண்டும்.

    இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் வரும் 5.8.2023 முதல் 16.8.2023 வரை நடைபெறும். நியாய விலைக் கடை பணியா ளர்கள் ஒவ்வொரு நியாய விலைகடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகிய வற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வீட்டில் நேரடியாக இன்று (1-ந் தேதி) முதல் 4.8.2023 வரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டை இருக்கும் நியாய விலைக் கடை பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்ப தலைவி விண்ணப்பங் களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் எடுத்து வர வேண்டும். கடலூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 14 ஒன்றி யங்களில் 557 நியாய விலைக் கடைகளில் 2-ம் கட்ட முகாம் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
    • இந்த தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    மதுரை

    இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையில் 1.1.2024-ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு வருகிற 5.1.2024 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிட பல்வேறு முன்திருத்த நடவடிக்கைகளுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி 1.1.2024-ஐ தகுதியேற்பு நாளாக கொண்டு மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்கள் நடத்தி வருகிற 5.1.2024 வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

    இதை முன்னிட்டு முன் திருத்த நடவடிக்கையாக குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர் விபரங்களையும் சரிபார்த்து இன்று முதல் (21-ந்தேதி) முதல் ஆகஸ்டு 21-ந்தேதி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்து தொடர் நடவடிக்கை யாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் பெயர் நீக்கம் செய்தல் மற்றும் வாக்குச் சாவடிகள் பிரித்தல், இடம் மாற்றம், கட்டிட மாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    முன் திருத்த நடவடிக்கையின் முதற்கட்ட நடவடிக்கையாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக குடும்பத்தில் உள்ள வாக்காளர் விபரங்களை சரிபார்த்திட வருகைதர உள்ளனர்.

    எனவே மதுரை மாவட் டத்தில் இத்திட்டத்தினை சிறப்பாகவும், விரைவாகவும் மேலும் 100% தூய்மை யாகவும், துரிதமாகவும் இப்பணியினை முடித்திடும் பொருட்டு பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு கணக் கெடுப்பு பணிக்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தேவையான விபரங்களை அளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    • மதுரை மாவட்டத்தில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
    • சிகிச்சை ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படும்.

    மதுரை

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் மாவட்டந்தோறும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் 2 சிறப்பு பன்னோக்கு மருத்துவ முகாம்கள், ஊரகப்பகு தியில் 4 சிறப்பு பன்னோக்கு மருத்துவ முகாம்களும் நடத்த திட்டமிடப் பட்டு உள்ளது. இந்த முகாம்கள் வருகிற 24-ந்தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

    மாநகராட்சி பகுதியில் பொன்னகரம், வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கே.கே.நகர், அருள்மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், ஊரக பகுதியில் மதுரை கிழக்கு வட்டாரம் சக்கிமங்கலம் மீனாட்சி நகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மதுரை மேற்கு வட்டாரம் ஊமச்சிக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி, அலங்காநல்லுார் வட்டாரம் வெள்ளயம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, வாடிப்பட்டி வட்டாரம் அய்யப்பநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களிலும் நடை பெற உள்ளது.

    முகாம்களில் தாய்சேய் நலம், தொற்றாநோய், நோய்களுக்கான பரிசோதனையான இரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ, மற்றும் இசிஜி பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் பரிசோதனைகளுடன் முழு ரத்த பரிசோதனையும் இலவசமாக செய்யப்படும். பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இருதய மருத்துவம், மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மற்றும் மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆலோ சனைகள் சிறப்பு மருத்து வர்களால் இலவசமாக வழங்கப்படும். இதனுடன் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை ஆலோ சனைகளும் இலவசமாக வழங்கப்படும்.

    மேற்கண்ட முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

    • வருகிற 12-ந்தேதி திங்கள் கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெற உள்ளது.
    • தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ பயிற்சி பெற்றவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஏழுமலையான், தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகிற 12-ந்தேதி திங்கள் கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஆவின் உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ பயிற்சி பெற்றவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    மேலும் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு டிப்ளமோ மற்றும் டிகிரி கல்வித்தகுதி உடையவர்களை நேரடியாக தொழிற்சாலைகளில் புதிய பழகுனராக சேர்த்து 3 முதல் 6 மாதகால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் ஈராண்டுகள் வரை தொழிற்பழகுநர் பயிற்சியும் பெற்று, தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம்.இத்தொழிற்பழகுநர் பயிற்சிக்கு உதவித்தொகை ரூ.7000- முதல் நிறுவ னத்தால் வழங்கப்படும். இச்சான்றிதழ் பெறுவதன் மூலமாக அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இந்திய அளவிலும், அயல்நா டுகளிலும் பணிப்புரிந்திட பயனுள்ளதாக அமையும்.

    இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறுமாறும், மேலும் தகவல்களுக்கு உதவி இயக்குநர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மயிலாடுதுறை (பொ) தொலைபேசி எண்: 04362-278222 என்ற எண்ணிலும், 9442215972 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார். 

    • பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்கள் நாளை நடக்கிறது.
    • 4 கிராமங்களில் இந்த முகாம் நடக்கிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் வட்டாரத்திற்கு சத்திரமனை, வேப்பந்தட்டை வட்டாரத்திற்கு அரும்பாவூர், குன்னம் வட்டாரத்திற்கு காடூர் (வடக்கு), ஆலத்தூர் வட்டாரத்திற்கு கூடலூர் ஆகிய 4 கிராமங்களில் இந்த முகாம் நடக்கிறது. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் வட்டாரத்திற்கு புதுப்பாளையம், உடையார்பாளையம் வட்டாரத்திற்கு வெண்மான்கொண்டான் (மேற்கு), செந்துறை வட்டாரத்திற்கு ஆலத்தியூர், ஆண்டிமடம் வட்டாரத்திற்கு கூவத்தூர் (தெற்கு) ஆகிய 4 கிராமங்களில் இந்த முகாம் நடக்கிறது.

    கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகார சான்று வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம். மேலும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் படி பயன்பெறலாம் என்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 11-ந் தேதி ரேசன்கார்டு குறைதீர்க்கும் முகாம்கள் நடக்கிறது.
    • குறைதீர் முகாமில் மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

    தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வருகிற 11-ந்தேதி அன்று காலை 10 மணிக்கு கீழ்க்காணும் கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது.

    ராமநாதபுரம் வட்டம்-அம்மன்கோவில் (ரேசன் கடை), ராமேசுவரம் வட்டம்-பாம்பன் (ஊராட்சி ஒன்றிய கட்டிடம்), திருவாடானை வட்டம்-கல்லூர் (ரேசன் கடை), பரமக்குடி வட்டம் - சிரகிக்கோட்டை (ரேசன் கடை), முதுகுளத்தூர் வட்டம்-கண்டிலான் (ரேசன்கடை), கடலாடி வட்டம்-பீ.கீரந்தை (ரேசன்கடை), கமுதி வட்டம்-செங்கற்படை (ரேசன்கடை), கீழக்கரை வட்டம்-களரி (ரேசன்கடை), ஆர்.எஸ்.மங்கலம் வட்டம்-அழகர்தேவன் கோட்டையில் (ரேசன்கடை) முகாம்கள் நடைபெறுகிறது.

    இதில் அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டைகளில் பிழைத்திருத்தம், புகைப்படம் பதிவேற்றம், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும்.

    மேலும் ரேசன் கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகா ரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் பொது விநியோகக்கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறைதீர் முகாமில் மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரியலூரில் 39 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது
    • துணை கலெக்டர் தலைமையில் 5 குழுக்கள்

    அரியலூர்:

    தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடு த்ததையடுத்து, அரியலூர் மாவட்டத்தில் 39 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: அரியலூர் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியக்யப்பட்டுள்ள 29 பதற்றமான பகுதிகளை கண்காணித்திட துணை ஆட்சியர் தலைமையில் பல்வேறு துறைகளைச் சார்ந்த12 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, இவர்கள் மூலம் 5 குழுக்களாக அமைக்கப்பட்டுள்ளது.

    இவர்கள் பதற்றமான பகுதிகளை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கை எடுத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

    பதற்றமான பகுதிகளில் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க ஏதுவாக அடிப்படை வசதிகளுடன் 39 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது. பிற இடங்களில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் கூடுதலாக நிவாரண முகாம்கள் ஏற்படுத்திட வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள 28 நியாய விலை கடைகளில் பொதுவிநியோகத்திட்ட உணவுப்பொருள்களை கூடுதலாக நகர்வு செய்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் வைத்திட நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழையின் போது பேரிடர் தொடர்பாக தகவல் தெரிவிக்க ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புக் கொள்ளலாம்.

    இம்மையத்தினை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 04329 - 228709 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். கைப்பேசி எண் 9384056231 என்ற எண்ணுக்கு கட்ச்செவி மூலம் புகார் மற்றும் தகவல் அளிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் நடந்தன.
    • பெரம்பலூரில் 2-வது நாளாக

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வது நாளாக நேற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்கள் நடைபெற்றன. இந்த முகாமில் 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கு படிவம் 6-ம் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர் நீக்கம் திருத்தத்திற்கு படிவம் 7-ம், திருத்தம் மேற்கொள்ள படிவம் 8-ம், இடமாற்றம் திருத்தத்திற்கு படிவம் 8 ஏ-ம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான திருத்தத்திற்கு படிவம் 6 ஏ-ம் பயன்படுத்தி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்தனர். 17 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட விண்ணப்பங்களை அளித்து முன்பதிவு செய்தனர். மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்து கொள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். மேலும் வாக்காளர்கள் சிறப்பு சுருக்க திருத்த முகாமிற்கான விண்ணப்பங்களை தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமோ, அல்லது வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலோ பெற்றும் அரசு வேலை நாட்களில் வருகிற 8-ந்தேதிக்குள் பூர்த்தி செய்து அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க-நீக்க சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது
    • பெரம்பலூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் வாக்காளர் பட்டியல் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1.1.2023-ஐ தகுதி நாளாக கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளவும் அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது. இந்த விண்ணப்பங்களை தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமோ, அல்லது வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலோ மனு தாக்கல் செய்து கொள்ளலாம். மேலும், https://voterportal.eci.gov.in, www.elections.tn.gov.in என்ற இணையத்தளம் முகவரியிலும், Voter help line app என்ற செல்போன் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    சிறப்பு முகாம்கள்

    இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிக்காக 2-ம் கட்டமாக நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இம்முகாம் நாட்களை பயன்படுத்தி 1.1.2023-ம் நாளில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரினை சேர்க்கவும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் தங்கள் முகவரியில் மாற்றம் செய்யவும், வாக்காளர்களின் பெயர், முகவரி, வயது மற்றும் இதர வகைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்குரிய படிவங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் பெற்று, அப்படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி பயனடையலாம்.

    அடையாள அட்டை வழங்கப்படும்

    இதுதவிர, இளம் வாக்காளர் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க இனி ஜனவரி-1, ஏப்ரல்-1, ஜூலை-1 மற்றும் அக்டோபர்-1 என ஆண்டுக்கு 4 நாட்களை தகுதி நாட்களாக இந்திய தேர்தல் ஆணையத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. 17 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட முன்பதிவு செய்து கொள்ளலாம், அவ்வாறு முன்பதிவு செய்தவர்கள் 18 வயது பூர்த்தியானவுடன் பெயர் சேர்க்கப்பட்டு, பின்னர் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

    ஆதார் எண்ணுடன் இணைப்பு

    மேலும் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலை தூய்மைபடுத்துவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைத்தல் என்ற முக்கியமான பணியும் நடைபெற்று வருகிறது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்து கொள்ள மேற்கண்ட சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×