search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    12-ந்தேதி தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் கலெக்டர் தகவல்
    X

     கலெக்டர் மகாபாரதி.

    12-ந்தேதி தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் கலெக்டர் தகவல்

    • வருகிற 12-ந்தேதி திங்கள் கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெற உள்ளது.
    • தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ பயிற்சி பெற்றவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஏழுமலையான், தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகிற 12-ந்தேதி திங்கள் கிழமை காலை 9.00 மணியளவில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ஆவின் உள்ளிட்ட அரசு பொதுத்துறை நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஐ.டி.ஐ பயிற்சி பெற்றவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    மேலும் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு டிப்ளமோ மற்றும் டிகிரி கல்வித்தகுதி உடையவர்களை நேரடியாக தொழிற்சாலைகளில் புதிய பழகுனராக சேர்த்து 3 முதல் 6 மாதகால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் ஈராண்டுகள் வரை தொழிற்பழகுநர் பயிற்சியும் பெற்று, தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம்.இத்தொழிற்பழகுநர் பயிற்சிக்கு உதவித்தொகை ரூ.7000- முதல் நிறுவ னத்தால் வழங்கப்படும். இச்சான்றிதழ் பெறுவதன் மூலமாக அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் முன்னுரிமை, இந்திய அளவிலும், அயல்நா டுகளிலும் பணிப்புரிந்திட பயனுள்ளதாக அமையும்.

    இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறுமாறும், மேலும் தகவல்களுக்கு உதவி இயக்குநர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மயிலாடுதுறை (பொ) தொலைபேசி எண்: 04362-278222 என்ற எண்ணிலும், 9442215972 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×