என் மலர்
உலகம்
- ஏராளமான பொட்டலங்கள் பிரித்து பார்க்கப்படாமலே உள்ளது.
- பிரிக்கப்படாத பொருட்களை வைப்பதற்காக மற்றொரு வீட்டையும் வாடகைக்கு எடுத்து, வாங்கிய பொருட்களை குவித்து வைத்திருக்கிறார்.
இன்றைய இளையதலைமுறையினர், கடைக்கு சென்று பொருட்களை வாங்குவதைவிட ஆன்லைனில் விதவிதமான பொருட்களை வாங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இளம்பெண்கள், சிறுவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை காட்டியிருக்கிறது ஒரு சீன பாட்டியின் ஆன்லைன் ஷாப்பிங் பட்டியல். அவர் ஒரே ஆண்டில் ரூ.2.4 கோடிக்கு ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கிக் குவித்து உள்ளது அனைவரையும் வியக்க வைத்து உள்ளது.
சீனாவின் ஜியாடிங் பகுதியை சேர்ந்த வாங் என்ற 66 வயது பாட்டி தனியாக வசித்து வருகிறார். அவர் ஆன்லைனில் ஷாப்பிங் செய்து தனது பொழுதை கழிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். வீட்டில் எங்கு பார்த்தாலும் ஆன்லைனில் வாங்கப்பட்ட பொட்டலங்கள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. ஏராளமான பொட்டலங்கள் பிரித்து பார்க்கப்படாமலே உள்ளது.
அப்படி பிரிக்கப்படாத பொருட்களை வைப்பதற்காக மற்றொரு வீட்டையும் வாடகைக்கு எடுத்து, வாங்கிய பொருட்களை குவித்து வைத்திருக்கிறார். பொட்டலங்கள் அடைத்து வைத்திருப்பதால் தங்கள் வீடுகளில் பூச்சித் தொல்லைகள் அதிகரித்து இருப்பதாகவும், சில பொருட்களில் இருந்து கெட்ட வாசனை வீசுவதாகவும் புகார்கள் தெரிவித்து வருகிறார்கள் அண்டை வீட்டார். இருந்தபோதிலும் பாட்டி பொருட்களை வாங்கிக் குவிப்பதை நிறுத்தவில்லை. பாட்டி குறித்த தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
- "மாஸ்கோவைத் தாக்க முடியுமா? செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கைத் தாக்க முடியுமா?"
- நாங்கள் பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்புவோம்
ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் பல லட்சம் பேர் கொல்லப்பட்டு உள்ளனா்.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். அடுத்த 50 நாட்களில் போரை நிறுத்தவில்லை என்றால் ரஷியா மீது 100 சதவீதம் பொருளதார தடைகளை விதிப்பேன் என டிரம்ப் எச்சரித்தார். ஆனால் டிரம்ப் எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை என ரஷியா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப்பின் தொலைபேசி உரையாடல் கவனம் பெற்று வருகிறது.
அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, தொலைபேசியில், டிரம்ப் ஜெலன்ஸ்கியிடம், "மாஸ்கோவைத் தாக்க முடியுமா? செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கைத் தாக்க முடியுமா?" என்று கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு "நிச்சயமாக. நீங்கள் எங்களுக்கு ஆயுதம் வழங்கினால், நாங்கள் அதைச் செய்வோம்" என்று ஜெலென்ஸ்கி பதிலளித்துள்ளாராம்.
முன்னதாக உக்ரைன் தங்கள் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். நாங்கள் பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்புவோம் என்று டிரம்ப் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ரஷியாவை மோசமாக உணர வைத்து பேச்சுவார்த்தைக்கு வர வைப்பதே தனது யோசனை என்று டிரம்ப் கூறியுள்ளார்.
- கடுமையான தடைகளை விதிப்பேன் என டிரம்ப் எச்சரித்தார்.
- யாருடைய இறுதி எச்சரிக்கைகளையும் நாங்கள் ஏற்கவில்லை.
உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 50 நாட்கள் கெடு விதித்தார். ரஷியா போரை தொடர்ந்தால் அந்நாட்டின் மீது 100% கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பேன் என டிரம்ப் எச்சரித்தார்.
இந்நிலையில் இந்தக் மிரட்டலுக்கு ரஷியா செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பதிலளித்தார். தங்கள் நாடு யாருடைய அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது என்று தெரிவித்தார்.
டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், "அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கருத்துக்கள் மிகவும் தீவிரமானவை. குறிப்பாக, சில கருத்துக்கள் நமது அதிபர் புதினை தனிப்பட்ட முறையில் குறிப்பிடுவதாக தெரிகிறது.
யாருடைய இறுதி எச்சரிக்கைகளையும் நாங்கள் பொருட்படுத்தவில்லை (We Dont care). வாஷிங்டனின் கருத்துக்களை பகுப்பாய்வு செய்ய நாங்கள் நேரம் ஒதுக்குவோம். அதிபர் புதின் அவசியம் என்று கருதினால் நிச்சயமாக பதிலளிப்பார்" என்று தெரிவித்தார்.
- ரஷியா, உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டை கடந்துள்ளது.
- இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு உள்ளனா்.
கீவ்:
ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் பல லட்சம் பேர் கொல்லப்பட்டு உள்ளனா். இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன. அமைதி பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தாலும், இருநாடுகளும் போரை நிறுத்தால் தொடர்ந்து தாக்கி வருகின்றனா்.
இந்நிலையில், ரஷியாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ராஜினாமா கடிதத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் டெனிஸ் ஷிம்ஹால் வழங்கினார். அவரது ராஜினாமாவை ஏற்ற அதிபர் ஜெலன்ஸ்கி புதிய பிரதமராக யூலியா ஸ்வைரிடென்கோவின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.
உக்ரைன் பிரதமர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.
- கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு சீன அதிபரை ஜெய்சங்கர் முதல் முறையாக சந்தித்தார்.
பீஜிங்:
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) தற்போதைய தலைவராக சீனா உள்ள நிலையில், அந்த அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சீனா சென்றுள்ளார்.
இதற்கிடையே, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு சீன அதிபரை ஜெய்சங்கர் முதல் முறையாக சந்தித்துள்ளார்.
எஸ்சிஓ வெளியுறவு மந்திரிகள் மாநாட்டில், எஸ்சிஓ அமைப்பின் உறுப்பு நாடுகளான சீனா, ரஷியா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள வெளியுறவு மந்திரிகள் கூட்டாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
வெளியுறவுத்துறை மந்திரியாக பொறுப்பேற்ற பின் ஜெய்சங்கர் சீனா செல்வது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- சுபான்ஷு சுக்லா பூமி திரும்பியபோது பெற்றோர் அவரை ஆனந்தக் கண்ணீருடன் வரவேற்றனர்.
- சுபான்ஷு சுக்லா தரையிறங்கியதை அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
வாஷிங்டன்:
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட டிராகன் விண்கலம் சுமார் 22 மணி நேரத்திற்கு பிறகு இன்று மதியம் 2.55 மணிக்கு வளிமண்டல பகுதிக்குள் நுழைந்தது.
இதனையடுத்து இந்திய நேரப்படி இன்று பகல் 3.01 மணியளவில் டிராகன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியா கடற்கரையில் பத்திரமாக தரையிறங்கியது. இதன்மூலம் சுபான்ஷு சுக்லா வரலாற்று சாதனை படைத்தார்.
தரையிறங்கிய டிராகன் விண்கலத்தை கப்பலில் ஏற்றி அமெரிக்க கடற்படை வீரர்கள் கரைக்கு கொண்டு சென்றனர். பின்னர் விண்கலத்தில் இருந்து வீரர்களை பத்திரமாக மீட்கும் பணியில் அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈடுபட்டனர்.
இதையடுத்து டிராகன் விண்கலத்திலிருந்து விண்வெளி வீரர்கள் ஒவ்வொருவராக வெளியே அழைத்து வரப்பட்டனர். முதல் வீரராக நாசாவின் பெக்கி விட்சன் வெளியே அழைத்து வரப்பட்டார். 2-வது வீரராக இந்தியாவின் சுபான்ஷு சுக்லா அழைத்து வரப்பட்டார். அப்போது அவர் புன்னகைத்தவாறே, கைகளை அசைத்த படி சுபான்ஷு தரையில் கால்பதித்தார். 3-வது வீரராக ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு, 4-வது வீரராக போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி அழைத்து வரப்பட்டனர்.
சிறிய படகு மூலம் கரைக்கு அழைத்து வரப்படும் அவர்களுக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகள் நடக்க உள்ளன. சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்று பத்திரமாக திரும்பிய முதல் இந்தியராக சுபான்ஷு சுக்லா சாதனை படைத்துள்ளார். சுபான்ஷு சுக்லா பூமிக்கு திரும்பியபோது ஆனந்தக் கண்ணீருடன் பெற்றோர் அவரை வரவேற்றனர். டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பியதையடுத்து கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை அவரது பெற்றோர் பகிர்ந்து கொண்டனர்.
- படகின் முன்பு அமர்ந்து சிறுவன் திகா சிரமமின்றி நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலானது.
- சிறுவனுக்கு உதவித் தொகையாக ரூ. 20 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்தோனேசிய நாட்டின் ரியாவ் மாகாணத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரம்பரிய படகுப் பந்தயத்தில் படகின் முன்பு அமர்ந்து சிறுவன் திகா சிரமமின்றி நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், படகில் நடனமாடி கவனம்பெற்ற 11 வயது சிறுவன் ரியாவ் மாகாணத்தின் சுற்றுலாத் தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுலாத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள ரய்யான் அர்கன் திகா என்ற சிறுவனுக்கு உதவித் தொகையாக ரூ. 20 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டுள்ளது.
- மெக்சிகோவுடனான தக்காளி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
- தற்போது அமெரிக்க தக்காளி சந்தையில் சுமார் 70 சதவீதத்தை மெக்சிகோ வழங்குகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்து வருகிறார். இதில் அண்டை நாடான மெக்சிகோ மீதும் வரி விதிப்பு நடவடிக்கையை எடுத்துள்ளார்.
இந்த நிலையில் மெக்சிகோவுடனான தக்காளி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. மேலும் மெக்சிகோ தக்காளிக்கு 17 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், உள்ளூர் தக்காளி விவசாயிகளின் நலனுக்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அமெரிக்க தக்காளி சந்தையில் சுமார் 70 சதவீதத்தை மெக்சிகோ வழங்குகிறது.
மெக்சிகோ மீதான வரி விதிப்பு அமெரிக்க தக்காளித் தொழிலை மீண்டும் கட்டியெழுப்பவும், அமெரிக்காவில் உண்ணப்படும் விளைபொருட்களும் அங்கு பயிரிடப்படுவதை உறுதி செய்யவும் உதவும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
- ஆரம்பத்தில் 600,000 மக்களையும், இறுதியில் முழு பாலஸ்தீன மக்களையும் தங்க வைக்க இந்நகரம் தயாராகி வருகிறது.
- திட்டமிடப்பட்ட அந்நகரத்தை ஹிட்லரின் வதை முகாம்களுடன் ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.
தெற்கு காசாவில் உள்ள ராஃபாவில் இடிபாடுகளில் 'மனிதாபிமான நகரம்' ஒன்றை கட்டும் திட்டத்தை காட்ஸ் முன்மொழிந்தார்.
தெற்கு காசாவின் இடிபாடுகளில் ஒரு "மனிதாபிமான நகரத்தை" நிர்மாணிப்பதற்கான செயல்பாட்டுத் திட்டங்களை வகுக்க இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நகரத்திற்கு உள்ளே நுழைந்ததும், பாலஸ்தீனியர்கள் மற்ற நாடுகளைத் தவிர வேறு நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று காட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் 600,000 மக்களையும், இறுதியில் முழு பாலஸ்தீன மக்களையும் தங்க வைக்க இது தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரேல் உருவாக்க நினைக்கும் நகரம் ஒரு வதை முகாமாக இருக்கும் என்றும் பாலஸ்தீனியர்களை அங்கு வைப்பது இன அழிப்புக்கு சமம் என்று இஸ்ரேல் முன்னாள் பிரதமர் எஹுட் ஓல்மெர்ட் கூறினார்.
இஸ்ரேல் ஏற்கனவே காசா மற்றும் மேற்குக் கரையில் போர்க்குற்றங்களைச் செய்து வருகிறது. இந்த முகாம் கட்டுவது அந்தக் குற்றங்களில் பெரிய அளவில் அதிகரிக்க வழிவகுக்கும் என்று ஓல்மெர்ட் கூறினார்.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு "மனிதாபிமான நகரம்" திட்டத்தை ஆதரிக்கிறார். காசாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை அகற்ற அவர்கள் ஒரு முகாமைக் கட்டும் அதே வேளையில், பாலஸ்தீனியர்களைக் காப்பாற்றுவது அவர்களின் குறிக்கோள் அல்ல, மாறாக அவர்களை நாடு கடத்துவதும் தூக்கி எறிவதுதான் என்று ஓல்மெர்ட் கூறினார்.
இஸ்ரேலிய மனித உரிமை செயல்பாட்டாளர்களும் இந்தத் திட்டத்தை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான ஒரு வரைபடம் என்று விவரித்துள்ளனர்.
இது செயல்படுத்தப்பட்டால் இனப்படுகொலைக்கு சமமாகிவிடும் என்று எச்சரித்துள்ளனர். மேலும் பலர் திட்டமிடப்பட்ட அந்நகரத்தை ஹிட்லரின் வதை முகாம்களுடன் ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.
- இது போன்ற தீய எண்ணம் கொண்டவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை என்று கூறினார்.
- இதுபோன்ற கடுமையான தண்டனையை வழங்க சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்த தீவு நாடான மடகாஸ்கரில் தலைநகர் அன்டனநாரிவோவில் இருந்து 30 கி.மீ. மேற்கே ஐமெரீன்ட்சியாடோசிகா என்ற நகரம் உள்ளது.
இங்கு ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொல்ல முயன்ற வழக்கில், குற்றவாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் (castration) செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அரசு வழக்கறிஞர் நடிடியர் ரசாபின்ட்ரலாம்போ, "இந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், கடுமையான வேலைகளுடன் ஆண்மை நீக்க தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற தீய எண்ணம் கொண்டவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை" என்று கூறினார்.
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் வழக்குகளுக்கு 2024 இல் மடகாஸ்கரில் இதுபோன்ற கடுமையான தண்டனையை வழங்க சட்டம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் மனித உரிமை அமைப்புகள் இந்த இரு நடைமுறைகளையும் விமர்சித்துள்ளன.
- ஏமனுடன் ராஜதந்திர உறவுகள் இல்லை என்றும், இந்த விஷயத்தில் எதுவும் செய்வது இல்லை என்று மத்திய அரசு கைவிரித்துவிட்டது.
- 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே உள்ள நிலையில் கடைசி தருணத்தில் நிமிஷா காப்பாற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கொலைக் குற்றத்திற்காக நாளை (ஜூலை 16) ஏமனில் மலையாள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு (38) மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
ஏமனுடன் ராஜதந்திர உறவுகள் இல்லை என்றும், இந்த விஷயத்தில் எதுவும் செய்வது இல்லை என்று மத்திய அரசு கைவிரித்துவிட்டது. இந்நிலையில் நிமிஷாவை காப்பாற்ற மதத் தலைவர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேரள இஸ்லாமிய சமூகத்தில் செல்வாக்குமிக்க தலைவராக அறியப்படும் காந்தபுரம் ஏ. பி. அபூபக்கர் ஏமன் மத குருக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கேரள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் குறித்து அபூபக்கர், ஏமன் சூஃபி அறிஞர் ஷேக் ஹபீப் உமருடன் கலந்துரையாடினார்.
மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று காந்தபுரம் அபூபக்கர் வலியறுத்தி உள்ளதாக தெரிகிறது. மரண தண்டனைக்கு 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே உள்ள நிலையில் கடைசி தருணத்தில் நிமிஷா காப்பாற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டுடன் வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் டிரம்ப் இதைத் தெரிவித்தார்.
- ரஷிய அதிபர் புதின் அழகாக பேசுகிறார், குண்டுகளையும் வீசுகிறார் என்று டிரம்ப் கூறினார்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர 50 நாட்களுக்குள் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ரஷியா மீது கடுமையான வரிகளை விதிப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டுடன் வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் டிரம்ப் இதைத் தெரிவித்தார்.
"50 நாட்களுக்குள் ஒப்பந்தம் இல்லாவிட்டால், 100% இரண்டாம் நிலை வரிகளை விதிப்போம்" என்று அவர் கூறினார்.
மேலும், "வர்த்தகம் போர்களை முடிவுக்குக் கொண்டுவர மிகவும் பயனுள்ளது" என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், டிரம்ப்-பின் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கான சிறப்புத் தூதர் ஜெலன்ஸ்கியை கீவ்வில் சந்தித்துள்ளார். முன்னதாக ரஷிய அதிபர் புதின் அழகாக பேசுகிறார், குண்டுகளையும் வீசுகிறார் என்று டிரம்ப் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.