search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    • இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் தொடக்க விழா.
    • இன்னும் 45 விளையாட்டுகளில் சிலவற்றிற்கான டிக்கெட்டுகள் விற்பனையில் உள்ளது.

    பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் இன்று ஜூலை 26 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்த

    இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெற உள்ளது.

    7,500 விளையாட்டு வீரர்கள், 300,000 பார்வையாளர்கள் மற்றும் விஐபிகளுடன் பாரிஸ் தொடக்க விழா வண்ணமயமாக தொடங்குகிறது.

    இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டியில் அதிக எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

    அதன்படி, இந்த ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் 9.7 மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டு அல்லது ஒதுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    பாரிஸைப் பொறுத்தவரை, ஒலிம்பிக்கிற்கு மொத்தம் 10 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    9.7 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனையானபோதும், இன்னும் சில போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால், விற்பனை அளவு மேலும் கூடும் என எதிர்பார்கப்படுகிறது.

    முந்தைய டிக்கெட் விற்பனை சாதனையாக, 1996ம் ஆண்டில் அட்லாண்டா இடம் பிடித்தது. அப்போது 8.3 மில்லியன் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.

    இதற்கிடையே, கடந்த ஏப்ரலில் தொடங்கி, உள்ளூர் இளைஞர்கள், அமெச்சூர் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பிறருக்கு விளையாட்டுப் போட்டிகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்காக சுமார் ஒரு மில்லியன் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    • எத்தியோப்பியாவில் பெய்த கனமழையால் அங்கு மண் சரிவு ஏற்பட்டது.
    • இதில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    அடிஸ் அபாபா:

    தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தின் கோபா மண்டலத்தில் கடந்த 21-ம் தேதி கனமழை பெய்தது. இதனால் அங்கு மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 55 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், எத்தியோப்பியாவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

    மண் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழு ஈடுபட்டு வருகிறது. காணாமல் போனவர்களை தேடி வருகிறோம் என்பதால் பலி எண்ணிக்கை 500-ஐ கடக்கலாம் என ஐ.நா. அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

    • அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் களமிறங்குகிறார்.
    • கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவதை உறுதி செய்வோம் என்றார் முன்னாள் அதிபர் ஒபாமா.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கட்சியின் அதிபர் வேட்பாளரை மாற்றவேண்டும் என ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பலரும் போர்க்கொடி துாக்கினர். இதனால் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகினார்.

    இதையடுத்து, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசை முன்மொழிந்தார். அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

    இந்நிலையில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,

    இந்த வாரம் நானும், மிச்சலும் எங்களது நண்பர் கமலா ஹாரிசை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது, அமெரிக்காவின் மிகச்சிறந்த அதிபராக அவர் இருப்பார். எங்களின் முழு ஆதரவை அவருக்கு வழங்கினோம். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு அவர் வெற்றி பெறுவார். நவம்பர் மாதம் நடக்கும் தேர்தலில் அவர் வெற்றி பெறுவதை உறுதி செய்ய எங்களால் முடிந்ததை செய்வோம். நீங்களும் இணைவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது என பதிவிட்டுள்ளார்.

    அடுத்த மாதம் சிகாகோவில் நடைபெற உள்ள கட்சி மாநாட்டில், அதிபர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒலிம்பிக் தொடக்க விழா இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.
    • 10,714 விளையாட்டு வீரர்கள் 600 படகுகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

    பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் இன்று ஜூலை 26 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் உள்பட மொத்தமாக 10,714 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

    இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெற உள்ளது.

    இந்நிகழ்ச்சியில் இந்த தொடரில் இடம் பெற்ற 10,714 விளையாட்டு வீரர்கள் 600 படகுகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

    இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் பிரதான ரெயில் வழித்தடங்களில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.

    பிரான்ஸின் அதிவேக ரெயில் சேவையை மர்ம நபர்கள் நாசவேலை செய்து முடக்கியிருக்கும் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதனால், ஒட்டுமொத்த போக்குவரத்து அமைப்பும் சீர்குலைக்கப்பட்டு இருப்பதாக, அரசு போக்குவரத்து நிறுவனமான எஸ்என்சிஎப் தகவல் தெரிவித்துள்ளது.

    இந்த தீ விபத்து தாக்குதலால், பல வழித்தடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சுமார் 8 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தீ விபத்து காரணமாக, பாரிஸ் மற்றும் லில்லி இடையே அதிவேகப் பாதை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பாரிஸூக்கு செல்லும் மற்றும் வரும் அதைத்து அதிவேக ரெயில்களும் இன்று கிளாசிக் பாதை வழியாக திருப்பி விடப்படுகின்றன. இது பயண நேரத்தை சுமார் ஒன்றரை மணி நேரம் நீட்டிக்கிறது.

    ரெயில்கள் வெவ்வேறு தடங்களுக்கு திருப்பி விடப்பட்டன. ஆனால் அவற்றில் அதிக எண்ணிக்கையை நாங்கள் ரத்து செய்ய வேண்டியிருக்கும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "ஜூலை 29 திங்கட்கிழமை இயல்பான போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று ரெயில் புறப்படும் மண்டபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார்.
    • தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இலங்கையில் கடந்த 2022-ல் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே மிகப்பெரிய புரட்சி வெடித்தது. இதனையடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இதைத்தொடர்ந்து இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதத்தோடு முடிவடைகிறது. இதன் காரணமாக அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

    அதன்படி வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 16 ஆம் தேதிக்குள் இலங்கையில் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இலங்கை அதிபர் தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

    அந்த வகையில் இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. இந்த நேரத்தில் தற்போது அதிபராக உள்ள ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறார்.

    இதேபோல் இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆரோ [Arrow] நிறுவனத்தில் ஒரு ஊழியர் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து வேலை செய்து வந்துள்ளார்.
    • இது அந்நிறுவனத்தின் சி.இ.ஓ ரோஷன் படேல் கவனத்துக்கு வந்துள்ளது.

    இந்தியர்கள் வேலையில் காட்டும் அர்ப்பணிப்பு மற்றும் விஸ்வாசத்தால் உலகம் முழுவதும் பல்வேறு தொழில்களில் பரவி இருக்கின்றனர். வெளிநாட்டு முதலாளிகள் விரும்பிக் வேலைக்கு சேர்ப்பது இந்தியாவில் தயாரான பட்டதாரிகளையே என்ற அளவுக்கு நிலைமை இருக்கும் சூழலில் அதை எடுத்துக்காட்டும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.

    அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஆரோ [Arrow] நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்யும்  இந்திய ஊழியர் ஒருவர் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து வேலை செய்து வந்துள்ளார். இது அந்நிறுவனத்தின் சி.இ.ஓ ரோஷன் படேல் கவனத்துக்கு வந்துள்ளது. இதனால் அந்த ஊழியருக்கு மெசேஜ் செய்த அவர், 'நீங்கள் வெகு நாட்களாக விடுப்பு எடுக்காமல் வேலை செய்வதாக நான் அறிந்தேன். எனவே நீங்கள் நிச்சயம் விடுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கு பதிலளித்த அந்த ஊழியர், 'எனக்கு விடுப்பு வேண்டாம் சார், நமது நிறுவனத்தின் பிராடக்ட் மார்க்கெட் தரத்தினை அடைய எனது உடல் படகாக செயல்படும்' என்று கூறி சிஇஓவை பூரிக்க வைத்துள்ளார். ஊழியரின் கடமை உணர்ச்சியை எண்ணி மனம் நெகிழ்ந்த சிஇஓ, அவர்களின் இந்த உரையாடலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, இந்திய இன்ஜினியர்கள் வித்தியாசமாக உருவாக்கப்பட்டவர்கள் என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த பதிவு வைரலானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை கமன்ட் செக்சனில் குவித்து வருகின்றனர். 

     

    • 'நேதன்யாகுவை கைது செய்யுங்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிறுத்துங்கள்'
    • வெள்ளை மாளிகைக்கு வெளியிலும் போராட்டக்காரர்கள் திரண்டு கோஷம் எழுப்பினர்.

    இஸ்ரேல், காசா நகரின்மீது கடந்த 9 மாதங்களாக நடத்திவரும் தாக்குதலில் 39,175 பாலஸ்தீனிய மக்கள் கொள்ளப்பட்டுள்ளனர். 90,000 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பாலஸ்தீன இஸ்ரேல் போர் ஆபத்தான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஜோ பைடன் மற்றும் அமெரிக்க தலைவர்களிடம் பேசுவார்த்தை நடந்த நேற்று முன் தினம் அமெரிக்கா வந்துள்ளார். நேதன்யாகுவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போரை எதிர்க்கும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

     

    நேற்று முன் தினம் தலைநகர் வாஷிங்க்டன் யூனியன் கட்டிடத்தின்முன் திரண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாலஸ்தீன கொடியைக் கையில் ஏந்தியபடி ஊர்வலமாக வந்து நேதன்யாகுவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். நேதன்யாகுவை கைது செய்யுங்கள், இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் நிதியை நிறுத்துங்கள். நேதனயாகு நீ உள்ளே ஒளிந்துகொள்ள முடியாது, நீ செய்வது இனப்படுகொலை என்று கோஷம் எழுப்பினர். சில போராட்டக்காரர்கள் நேதன்யாகு நகருக்குள் நுழையும் வழியிலும் மறியல் செய்தனர்.

     

     

     

    இதனால் போராட்டக்கார்கள் மீது போலீஸ் கடுமையான அடக்குமுறையை உபயோகப்படுத்தியது. நகரின் சுவர்க்ளிலும், கொலம்பஸ் உள்ளிட்டவர்களின் சிலைகளிலும் கிராஃபிட்டி வரைந்து தங்களின் எதிர்ப்பை போராட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர். கைகளில் ரத்தத்துடன் ஜோ பைடன் நிற்கும் படங்களை போராட்டத்தில் பங்கேற்ற கலைஞர்கள் வரைந்தனர்.

     

    மேலும் அமெரிக்க கொடியையும், நேதன்யாகுவின் உருவ பொம்மையையும் போராட்டக்காரர்கள் எரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை 200 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதைதொடர்ந்து நேற்று ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸை நேதன்யாகு சந்தித்து பேசிய நிலையில் வெள்ளை மாளிகைக்கு வெளியிலும் போராட்டக்காரர்கள் திரண்டு கோஷம் எழுப்பினர். இந்நிலையில் அமெரிக்க கோடியை எரித்தது நாட்டுப் பற்றின்மையை காட்டுவதாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் இந்த போராட்டங்களுக்கு தனது கண்டனத்தை தெரிவியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

     

    • அமைதிக்கான உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளும்படி நேதன்யாகுவை பைடன் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
    • போரை நிறுத்த இதுதான் தருணம் என்றும் நேதன்யாகுவிடம் தான் வலியுறுத்தியதாக கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.

    பாலஸ்தீனம் மீதான தாக்குதல்களை  தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேல்  பிரதமர் நேதன்யாகு நேற்று அமெரிக்கவுக்கு பயணம் மேற்கொண்டு அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் காமலா ஹாரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேசுவார்த்தையில் அமைதிக்கான உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ளும்படி நேதன்யாகுவை பைடன் வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

     

    மேலும் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள கமலா ஹாரிஸ் நேதன்யாகுவிடம் பேசுகையில், கடத்த 9 மாதங்களாக காசாவில் நடந்தவை கொடூரமானது. இறந்த குழந்தைகளின் புகைப்படங்களையும், பசியில் துடித்தபடி தொடர்ந்து இடம்பெயரும் மக்களின் அவல நிலையையும் கண்டுகொள்ளாமல் இருக்கமுடியவில்லை. அவர்களின் துன்பங்களைப் பொருட்படுத்தாமல் எங்களை நாங்களே மரத்துப்போகச் செய்ய முடியாது. இவற்றைக் கண்டு நான் அமைதியாக இருக்கமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

     

     

    மேலும் நேதன்யாகுவிடம் பேசியது குறித்து பின்னர் மனம் திறந்த கமலா ஹாரிஸ், காசா மக்கள் படும் துயரம் குறித்தும் இதுவரை பறிபோன அப்பாவி மக்களின் உயிர்கள் குறித்தும் அங்கு நிலவும் மனிதநேய சிக்கல் குறித்தும் எனது கவலையை நான் அவரிடம் வெளிப்படுத்தினேன் என்று தெரிவித்துள்ளார். எனவே இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்தக்குக்கு உடன்பட்டு இருதரப்பிலும் உள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், போரை நிறுத்த இதுதான் தருணம் என்றும் நேதன்யாகுவிடம் தான் வலியுறுத்தியதாக கமலா ஹாரிஸ் தெரிவித்தார். இதற்கிடையில் இன்று குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்பை நேதன்யாகு சந்திக்க உள்ளார்.

     

    கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலில் 1,197 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். அதில் பலர் விடுவிக்கப்பட்ட நிலையில் இன்னும் 111 பேர் ஹமாஸிடம் பிணை கைதிகளாக உள்ளனர். ஹமாஸ் தாக்குதலால் கோபமடைந்த இஸ்ரேல், காசா நகரின்மீது கடந்த 9 மாதங்களாக நடத்திவரும் தாக்குதலில் 39,175 பாலஸ்தீனிய மக்கள் கொள்ளப்பட்டுள்ளனர். 90,000 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    • ரஷியாவின் மிக அழகான மோட்டார் பைக் ரைடர் டட்யானா ஓஸோலினா.
    • இவர் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ரஷியாவின் மிக அழகான மோட்டார் பைக் ரைடர் என வர்ணிக்கப்படும் சமூக வலைதள பிரபலமான, டட்யானா ஓஸோலினா, துருக்கியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். 

    38 வயதான அவர் BMW S1000RR பைக்கை ஓட்டிச் செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து, லாரியில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த செய்தி அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரஷிய பைக் ரைடரான இவரை இன்ஸ்டாகிராமில் 1 லட்சம் பேர் பாலோ செய்கின்றனர். மேலும் யூடியூப்பில் 2 லட்சம் பேர் இவரை பாலோ செய்கின்றனர். இவர் பைக் சாகசத்தில் ஈடுபடும் வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

    • பிரதமர் மோடி கடந்த 7, 8-ந்தேதிகளில் ரஷியா சென்றிருந்தார்.
    • அதே நேரத்தில் நேட்டோ மாநாடு நடைபெற்றது.

    இந்திய பிரதமர் மோடி கடந்த 8 மற்றும் 9-ந்தேதி என இரண்டு நாட்கள் பயணமாக ரஷியா சென்றிருந்தார். உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்திய பிறகு மோடியின் முதல் பயணம் இதுவாகும். மோடி பயணம் மேற்கொண்ட நேரத்தில்தான், அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நேட்டோ மாநாடு அமெரிக்காவில் நடைபெற்றது.

    இந்த நிலையில் நேட்டோ மாநாடு நடைபெற்ற நேரத்தில் இந்திய பிரதமர் மோடி ரஷிய பயணம் மேற்கொண்டது. அதிகரிக்கும் இந்தியா- ரஷியா இடையிலான உறவு அளிக்கிறது என அமெரிக்க பராளுமன்ற எம்.பி.க்கள் கவலை தெரிவித்தனர். இதற்கு தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் துணை செயலாளர் டொனால்டு லு பதில் அளித்தார்.

    "இந்திய பிரதமர் மோடியின் பயணம் நேரம் பற்றிய கவலைப்பற்றி உங்கள் கருத்துடன் நான் உடன்பட முடியாது. எங்களுடைய இந்திய நண்பர்களுடன் (அதிகாரிகளடன்) இது தொடர்பாக கடினமான பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிக்கிறோம்" என டொனால்டு அமெரிக்கா பாராளுமன்ற எம்.பி.க்களிடம் பேசும்போது குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் "இந்தியா பிரதமர் மோடி ரஷியா செல்வதற்கு இரண்டு வாரத்திற்கு முன்னதாக இத்தாலியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின்பேது போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சியை சந்தித்து பேசினார். உக்ரைன் மீதான போர் சண்டையால் போரை வெல்ல முடியாது. உக்ரைன் சண்டையில் குழந்தைகள் உயிரிழந்ததை பிரதமர் மோடி உணர்ந்துள்ளார். புதின் இருக்கையில் அவர் முன் லைவ் டெலிவிசனில் பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்தார் " என்றார்.

    ரஷியா பயணத்தின்போது இந்திய பிரதமர் மோடி என்ன செய்தார் என்பது குறித்து மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ரஷியா- இந்தியா உடன் புதிய முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தம் இல்லை. தொழில்நுட்ப ஒத்துழைப்பை பார்க்க முடியவில்லை" என்றார்.

    "உக்ரைனில் உள்ள கிய்வ் நகரில் உள்ள மிகப்பெரிய குழந்தைகள் மருத்துவமனையில் புடின் வேண்டுமென்றே ஏவுகணைகளை வீசிய அன்றே மாஸ்கோவில் போர்க்குற்றவாளி புட்டினை நான் மிகவும் மதிக்கும் மற்றும் போற்றும் பிரதமர் நரேந்திர மோடி கட்டித் தழுவியதைக் கண்டு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்" என எம்.பி. ஒருவர் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.

    • இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
    • முன்னாள் ராணுவ தளபதியான சரத் பொன்சேகா அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த 2022-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடம் பெரிய புரட்சி வெடித்தது. இதனால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தபடி, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார்.

    அனைத்துக் கட்சி ஆதரவுடன் அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது.

    இதற்கிடையே, இலங்கை அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை அந்நாட்டு தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. அதன்படி இலங்கை அதிபர் தேர்தல் வரும் செப்டம்பர் 17-ம் தேதியில் இருந்து அக்டோபர் 16-ம் தேதிக்குள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் அங்கு அரசியல் கட்சிகள் அதிபர் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் போட்டியிட முடிவு செய்து இருக்கிறார்.

    இந்நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார். இதுகுறித்து சரத் பொன்சேகா தனது எக்ஸ் தளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    • ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் தீ விபத்து.
    • 3 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    அமெரிக்கா நியூயார்க்கில் உள்ள ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தின் டெர்மினல் 8-ல் உள்ள எஸ்கலேட்டரில் தீப்பிடித்தது. இதனால் பயணிகள் அலறியடித்து ஓடினர்.

    உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 9 பேர் காயம் அடைந்தனர். 900-க்கும் மேற்பட்ட பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

    இந்த சம்பவத்தால் 3 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. தீ விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    ×