என் மலர்tooltip icon

    உலகம்

    • துருக்கியில் உயர் மட்ட பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
    • இதில் பங்கேற்ற லிபியா ராணுவ தளபதி அங்கிருந்து திரும்பும்போது விபத்து ஏற்பட்டது.

    அங்காரா:

    துருக்கியில் உயர் மட்ட பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க லிபியா ராணுவ தளபதி முகம்மது அலி அகமமது அல் ஹதாத் சென்றார்.

    கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு விமானத்தில் திரும்பும்போது விபத்து ஏற்பட்டது. இந்த விமான விபத்தில் லிபியா ராணுவ தளபதி உள்பட 4 பேர் பலியாகினர்.

    இதுதொடர்பாக, லிபியா பிரதமர் அப்துல் ஹமித் டெபிபா தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள செய்தியில், அங்காராவிற்கு அலுவல் பூர்வமாக பயணம் மேற்கொண்டு விட்டு லிபியா திரும்பியபோது ராணுவ தளபதி உள்ளிட்டோர் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியது. இந்த சோகமான விபத்தில் ராணுவ தளபதி உள்ளிட்டோர் உயிரிழந்தனர். லிபியாவிற்கு இது மிகப்பெரும் பேரிழப்பு என பதிவிட்டுள்ளார்.

    • ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை வழங்குவதில் மோசடி செய்ததாக லலித் மோடி மீது குற்றச்சாட்டு.
    • கடன் தவணைகளை திருப்பி செலுத்தவில்லை என விஜய் மல்லையா மீது குற்றச்சாட்டு.

    மிகப்பெரிய அளவில் வரி மோசடி, பண மோசடியில் ஈடுபட்டதாக லலித் மோடி, விஜய் மல்லையா மீது குற்றச்சாட்டு உள்ளது. இதனால் இந்திய அரசு அவர்களை கைது செய்ய முயற்சி மேற்கொண்டது. இதனை அறிந்த அவர்கள் இந்தியாவில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்திய அரசு அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இருந்தபோதிலும் இந்திய அரசை விமர்சித்து லலித் மோடி அடிக்கடி வீடியோ வெளியிடுவது உண்டு. இந்த நிலையில் விஜய் மல்லையாவின் பிறந்த நாள் விழாவில் லலித் மோடி கலந்து கொண்டுள்ளார்.

    அப்போது லலித் மோடி, நாங்கள் இரண்டு தப்பி ஓடியவர்கள். இந்தியாவில் இருந்து மிகப்பெரிய தப்பி ஓடியவர்கள் எனப் பேசுவது போன்ற வீடியோவை பதிவு செய்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அத்துடன், இணைய தளம் ஸ்தம்பிக்கும் வகையில் மீண்டும் ஏதோ ஒன்றை செய்யப் போகிறேன். இது உங்களுக்காகத்தான். பொறாமையால் உங்களுடைய இதயம் புழுங்கட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பும் உரிமைகள் வழங்குவது தொடர்பான மோசடி மற்றும் பண மோசடியில் லலித் மோடி ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. சுமார் 125 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், கைதில் இருந்து தப்பிக்க கடந்த 2010-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து லலித் மோடி தப்பி ஓடிவிட்டார்.

    விஜய் மல்லையா கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெளியேறினார். இவர் தப்பிய ஓடிய பொருளாதார குற்றவாளி என 2019ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

    இந்த வீடியோவிற்கு இணையதளவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

    • ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
    • பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் நியாயப்படுத்தியது.

    ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். நாங்கள் பயங்கரவாதிகளை குறிவைத்துதான் தாக்குதல் நடத்தினோம் என பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நியாயப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் ஜமியாத் உலேமா-இ-இஸ்லாம்-எஃப் {Jamiat Ulema-e-Islam-F (JUI-F)} தலைவர் மவுலானா பஸ்லுர் ரஹ்மான், பாகிஸ்தான் லாஜிக் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை ஆப்கானிஸ்தான் தாக்குதலுடன் ஒப்பிட்டு பாகிஸ்தானின் பாசாங்குதனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக மவுலானா பஸ்லுர் ரஹ்மான் கூறுகையில் "ஆப்கானிஸ்தானில் உள்ள நம்முடைய எதிரிகள் மீது நாம் தாக்குதல் நடத்தினோம் என்று சொல்லி, அதை நியாயப்படுத்தினால், பின்னர் காஷ்மீர் தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்ற குழுக்களின் தலைமையகம் மற்றும் பஹவல்பூர், முரித்கே போன்ற இடங்களில் தாக்குதல் நடத்தியதற்கு, இந்தியாவும் இதேபோன்று நியாயப்படுத்த முடியும்.

    அதன்பின் நீங்கள் எப்படி ஆட்சேபனை தெரிவிக்க முடியும்?. எப்படி இந்தியா பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது என்று நாம் குற்றம்சாட்டினோமோ, அதே குற்றச்சாட்டை தற்போது பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் சுமத்துகிறது. இரண்டை நீங்கள் எப்படி நியாயப்படுத்த முடியும்?.

    பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா கடந்த மே மாதம் 7-ந்தேதி ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து 9 பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகள் வீசி தாக்கி அளித்தது.

    • இந்திய பொருட்களுக்கு நியூசிலாந்து சந்தைகள் முழுமையாக திருந்துவிடப்படும்.
    • பால் பொருட்கள் ஏற்றுமதிக்கான வரி விதிப்பை போதுமான அளவிற்கு குறைக்க இந்தியா ஒப்புக் கொள்ளவில்லை.

    இந்தியா- நியூசிலாந்து இடையில் வரி இல்லா வர்த்தக ஒப்பந்தம் (FTA- Free Trade Agreement) ஏற்பட்டுள்ளது. இந்த வர்த்தகம் சுதந்திரமான மற்றும் நியாயமான ஒப்பந்தம் இல்லை என நியூசிலாந்து வெளியுறவுத்துறை மந்திரி வின்ஸ்டன் பீட்டர்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    மேலும், இது தொடர்பான மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது அதை கடுமையாக தங்களுடைய கட்சி எதிர்க்கும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொர்பாக வின்ஸ்டன் பீட்டர்ஸ் கூறுகையில் "வருந்தத்தக்க வகையில் இது நியூசிலாந்துக்கான மோசமான டீல். இந்திய பொருட்களுக்கு நியூசிலாந்து சந்தைகள் முழுமையாக திருந்துவிடப்படும். நியூசிலாந்தின் முக்கியமான பால் பொருட்கள் ஏற்றுமதிக்கான வரி விதிப்பை போதுமான அளவிற்கு குறைக்க இந்தியா ஒப்புக் கொள்ளவில்லை. விவசாயிகளிடமும் கிராமப்புற சமூகங்களிடமும் இந்த முடிவை நியாயப்படுத்துவது சாத்தியமற்றது.

    நவம்பர் மாதம் நியூசிலாந்தின் பால் பொருட்கள் ஏற்றுமதி ஏறக்குறைய 13.94 பில்லியன் டாலராகும். இது நாட்டின் மொத்த பொருட்கள் ஏற்றுமதியில் சுமார் 30 சதவீதமாகும். இந்த ஒப்பந்தம் முக்கிய பால் பொருட்களை விலக்கும் ஒப்பந்தமாக இருக்கும் என்றார்.

    மேலும், குடிபெயர்தல் விவகாரத்தில் நியூசிலாந்து நலனை பாதுகாப்பதில் தோல்வியடைந்து விட்டது என்றார்.

    • டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்கவேண்டும் எனக்கூறி டிரம்ப் பரபரப்பை ஏற்படுத்தினார்.
    • சீனாவுக்குப் போட்டியாக இப்பகுதியைக் கைப்பற்ற உள்ளதாக டிரம்ப் தெரிவித்து வருகிறார்.

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் அண்டை நாடுகளை வரியினாலும், கருத்தாலும் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்.

    அந்த வகையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் உலக சுதந்திரத்திற்காக கிரீன்லாந்து மீதான உரிமையும், கட்டுப்பாடும் அவசியம் எனக்கூறிய அதிபர் டிரம்ப், டென்மார்க்கிடம் இருந்து கிரீன்லாந்தை வாங்கவேண்டும் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    ஏராளமான கனிம வளங்கள் அங்கு குவிந்து கிடக்கின்றன என்பதால் சீனாவுக்குப் போட்டியாக இப்பகுதியைக் கைப்பற்ற உள்ளதாக டிரம்ப் தெரிவித்து வருகிறார்.

    இந்நிலையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்து பகுதி நிச்சயமாக வேண்டும் என கூறி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

    டென்மார்க் நாட்டின் கிரீன்லாந்து பகுதிக்கு மட்டும் தனியாக தூதரை நியமித்துள்ள ட்ரம்ப், அந்த பகுதி அமெரிக்காவுக்கு நிச்சயம் கிடைத்தாக வேண்டும் எனவும் பேசியுள்ளார். 

    • இலங்கையில் டிட்வா புயலில் சிக்கி 643 பேர் உயிரிழந்தனர்.
    • பலர் வீடுகளையும், உறவினர்களையும் இழந்து தனிமை ஆகினர்.

    இலங்கையில் இந்த மாத தொடக்கத்தில் 'டிட்வா' புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் அந்த நாடே சின்னாபின்னமானது.

    இலங்கையில் புயலில் சிக்கி 643 பேர் உயிரிழந்தனர். பலர் வீடுகளையும், உறவினர்களையும் இழந்து தனிமை ஆகினர்.

    நிதி பற்றாக்குறை மற்றும், பொருளாதார மந்தநிலை காரணமாக சிக்கி தவிக்கும் இலங்கை, புயல் பாதிப்பால் பெரும் பாதிப்படைந்தனர்.

    இதனிடையே புயல் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக ரூ.1,850 கோடி (206 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) அவசரநிதியை விடுவித்து நிவாரணமாக வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், இலங்கையின் மறுகட்டமைப்புக்கு ரூ.4041 கோடி (450 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) நிதியை வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.

    இலங்கை அதிபர் அனுர திசாநாயக்கவை சந்தித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதனை தெரிவித்தார்.

    இதுகுறித்து ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இன்று கொழும்பில் அதிபர் அனுர திசாநாயக்கவை சந்தித்ததில் மகிழ்ச்சி. டிட்வா புயலுக்குப் பிந்தைய பாதிப்பில் இருந்து மீண்டெழ உதவுவதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடியின் செய்தியையும் தெரிவித்தேன்.

    ஆபரேஷன் சாகர்பந்து நடவடிக்கையின் கீழ் இந்தியா இலங்கையின் கீழ்கண்ட மறுகட்டமைப்புக்கு 450 மில்லியன் அமெரிக்க டாலர் தொகுப்பை வழங்க உறுதியளித்துள்ளது" என்று தெரிவித்தார்.

    • அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.
    • ஸ்டார்லைனர் கைவிடவே, நீண்ட காத்திருப்புக்கு பிறகு உலகப் பணக்காரர் எலான் மஸ்க் கைகொடுத்தார்.

    சுனிதா வில்லியம்ஸ்

    உலகளவில் பேசப்படும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர். சுனிதாவின் தந்தையான அமெரிக்க விஞ்ஞானி தீபக் பாண்டியா, குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர்.

    ஸ்லோவேனியா வம்சாவளியை சேர்ந்த போனிக்கு 3-வது மகளாக 1965-ல் பிறந்தார் சுனிதா வில்லியம்ஸ். சிறு வயதிலேயே விண்ணில் பறக்க வேண்டுமென்ற ஆசை சுனிதாவின் கனவு பின்னாளில் அது நனவானது.

    அமெரிக்காவின் நீதம் என்ற இடத்தில் பள்ளிக்கல்வியை புளோரிடாவில் பொறியியல் படிப்பை முடித்தார். அமெரிக்க கடற்படையில் விமானியாக சேர்ந்த சுனிதாவை 1998-ல் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அழைத்துக்கொண்டது.

    2006 ஆம் ஆண்டு முதல்முறையாக அவர் விண்வெளிக்கு சென்றார். விண்ணை தொட்ட விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக மண்ணைத்தொட்டார். அவரது சாதனையை பாடப்புத்தகங்கள் பேசின.

    2024-25 பயணம்:

    கடந்த ஆண்டு 59 வயதான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரும்(62) மற்றும் சில குழுவினருடன் நாசாவின் சார்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

    8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்க வேண்டியதாயிற்று.

    அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 286 நாட்கள் (9 மாதங்கள்) விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர்.

    டிராகன் 

    ஸ்டார்லைனர் கைவிடவே, நீண்ட காத்திருப்புக்கு பிறகு உலகப் பணக்காரர் எலான் மஸ்க்கின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் உடைய டிராகன் ப்ரீடம் விண்கலம் மூலம் இந்த ஆண்டு இந்த ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.

    அன்றைய தினம் அதிகாலை 3:27 மணிக்கு புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது. பாராசூட் அவர்களின் கேப்சூலை கடலில் இறக்க, ஏற்கனவே அங்கு வந்திருந்த நாசா அதிகாரிகள், விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 பேரையும் படகில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

    அதன் பின் 10 நாட்களாகச் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் அவர்கள் இருந்தனர். இதன்பின் அமெரிக்க அதிபர் மாளிகையில் டிரம்ப் அவர்களை அழைத்துப் பாராட்டினார்.

    அனுபவம்

    தனது விண்வெளி அனுபவம் பற்றி செய்தியாளர்களிடம் பகிர்ந்த சுனிதா, "விண்வெளியில் இருந்து பார்ப்பதற்கு இந்தியா அற்புதமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் இமயமலைக்கு மேல் நாங்கள் வரும்போது, புட்ச் வில்மோர் அருமையான புகைப்படங்களை எடுத்தார்.

    கிழக்கிலிருந்து மும்பை, குஜராத்தின் மேற்பரப்பில் செல்லும்போது அழகிய கடற்கரையைக் கண்டோம். இரவு நேரங்களில் பெரிய நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை இந்தியா ஒளிந்தபடி இருக்கும்" என்று தெரிவித்தார்.

    விண்வெளியில் பல சோதனைகளை பதற்றமின்றி சிரித்தப்படி கையாண்டார் விண் தேவதை சுனிதா.

    விண்வெளிக்கு சென்ற சுனிதா விண்ணில் அதிக நேரம் விண்நடை மேற்கொண்டு சாதனை புரிந்தார். சுமார் 30 ஆண்டுகள் நாசா நடத்திய பல சோதனைகளில் சுனிதா வில்லியம்ஸ் சாதனைகள் படைத்தார்.

    சுனிதா வில்லியம்ஸ் இந்த பயணத்தின்போது ஜனவரி 2025-ல் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். விண்வெளியில் அதிக நேரம் 'விண்நடை' மேற்கொண்ட வீராங்கனை என்ற பெக்கி விட்சனின் சாதனையை சுனிதா முறியடித்தார்.

    அவர் மொத்தம் 62 மணிநேரம் 6 நிமிடங்கள் விண்வெளியில் நடந்து, உலக அளவில் 4-வது இடத்தைப் பிடித்தார். 

    • அனைத்து நாடுகளைச் சேர்ந்த H-1B மற்றும் H-4 விண்ணப்பதாரர்களுக்கும் பொருந்தும்.
    • வழக்கத்தை விடக் கூடுதல் காலம் ஆகலாம் என்பதால், விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    அமெரிக்காவில் வெளிநாட்டிலிருந்து சென்று வேலை செய்ய H-1B மற்றும் H-4 விசா பெற டிரம்ப் நிர்வாகம் மேலும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்களின் சமூக வலைதள  வலைதள கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

    இது அனைத்து நாடுகளைச் சேர்ந்த H-1B மற்றும் H-4 விண்ணப்பதாரர்களுக்கும் பொருந்தும். விசா முறைகேடுகளை தடுக்கவும் தகுதியானவர்களை தேர்வு செய்யவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சோஷியல் மீடியா வெட்டிங்

    விண்ணப்பதாரர் கடந்த 5 ஆண்டுகளில் பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்ட பொதுவான தகவல்கள் மற்றும் தரவுகளை அமெரிக்கக் குடிவரவு அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.

    விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மையானதா என்பதையும், பாதுகாப்பிற்கு ஏதேனும் அச்சுறுத்தல் உள்ளதா என்பதையும் இதன் மூலம் உறுதி செய்வார்கள்.

    இந்த செயல்முறையால் விசா நடைமுறைகளுக்கு வழக்கத்தை விடக் கூடுதல் காலம் ஆகலாம் என்பதால், விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    அமெரிக்காவில் பணியாற்றிவிட்டு தற்போது இந்தியாவிற்குத் திரும்பியுள்ள ஊழியர்கள், விசா கிடைக்காததால் மீண்டும் தங்களது வேலைக்குத் திரும்ப முடியாமல் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த புதிய கட்டுப்பாடு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.  

    • 303 மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்களைத் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது.
    • கடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே 50 மாணவர்கள் அங்கிருந்து தப்பித்து வந்தனர்.

    நைஜீரியாவில் பயங்கரவத்திகளால் கடத்தப்பட்ட சுமார் 130 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கடந்த நவம்பர் 21-ஆம் தேதி, நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் உள்ள புனித மேரி கத்தோலிக்கப் பள்ளியில் புகுந்த ஆயுதம் ஏந்திய கும்பல், 303 மாணவர்கள் மற்றும் 12 ஆசிரியர்களைத் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது.

    கடத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே 50 மாணவர்கள் அங்கிருந்து தப்பித்து வந்தனர். மீதமுள்ளவர்களை மீட்க ராணுவம் தீவிர நடவடிக்கையில் இறங்கியது.

    இதனைத் தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் 100 மாணவர்கள் கடத்தல்காரர்களால் விடுவிக்கப்பட்டனர்.

    தற்போது எஞ்சியிருந்த 130 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கடத்தல்காரர்கள் விடுவித்துள்ளதாக நைஜர் மாகாண போலீஸ் செய்தித் தொடர்பாளர் வாசியு அபியோடன் தெரிவித்துள்ளார். 

    ராணுவத்தின் தேடுதல் வேட்டை காரணமாகவே இந்த விடுதலை சாத்தியமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியவர்கள் நிலை குறித்த இதுவரை தகவல் வெளியாகவில்லை.

    விடுவிக்கப்பட்ட மாணவர்கள் நைஜர் மாகாணத் தலைநகரான மின்னாவுக்கு அழைத்து வரப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

    • இந்தச் செயலில் ஈடுபட்டதாக 26 வயதான கோகுலானந்தன் மோகன் கைது செய்யப்பட்டார்.
    • குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    சிங்கப்பூரில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் போலி வெடிகுண்டு வைத்து பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி இளைஞரை அந்நாட்டுப் போலீசார் கைது செய்துள்ளனர்.

    சிங்கப்பூரின் அப்பர் புக்கிட் திமா பகுதியில் உள்ள புனித ஜோசப் தேவாலயத்தில் நேற்று காலை பிரார்த்தனைக்காக வந்தவர்கள், வெடிகுண்டு போன்று காட்சியளித்த சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்றை கண்டனர்.

    கருப்பு மற்றும் மஞ்சள் நிற டேப் சுற்றப்பட்டு, கார்ட்போர்டு அட்டையை சுருட்டி சிவப்பு நிற வயர்கள் இணைக்கப்பட்டிருந்தது.

    தகவல் அறிந்ததும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    சோதனையில், அதற்குள் கற்கள் நிரப்பப்பட்டிருப்பதும், அது போலி வெடிகுண்டு என்பதும் உறுதி செய்யப்பட்டது.

    இந்தச் செயலில் ஈடுபட்டதாக 26 வயதான கோகுலானந்தன் மோகன் என்ற இந்திய வம்சாவளி இளைஞரைச் சிங்கப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

    குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    • 2022 பிப்ரவரியில் தொடங்கிய ரஷியா - உக்ரைன் போர் தீர்வு காணடபடாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.
    • கடந்த ஏப்ரல் மாதம் ஜெனரல் யாரோஸ்லாவ் மோஸ்காலிக் மாஸ்கோவில் கொல்லப்பட்டார்.

    உக்ரைன் நேட்டோ நாடுகளை இணைவதை எதிர்த்து கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போர் தீர்வு காணடபடாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்நிலையில் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கார் குண்டுவெடிப்பில் ரஷியாவின் ஆயுதப் படைகளின் செயல்பாட்டுப் பயிற்சித் துறையின் லெப்டினன்ட் ஜெனரல் ஃபானில் சர்வரோவ் உயிரிழந்துள்ளார்.

    இந்த கார் குண்டுவெடிப்புக்கு பின்னால் உக்ரைனின் சதி உள்ளதா என்ற கோணத்தில் ரஷியா விசாரணை நடத்தி வருகிறது.

    கடந்த ஏப்ரல் மாதம் ஜெனரல் யாரோஸ்லாவ் மோஸ்காலிக் மாஸ்கோவில் நடந்த கார் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதே சமயம் ஜெனரல் இகோர் கிரிலோவ் 2024 டிசம்பரில் ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக சீனா உள்ளது.
    • லைஜோ பகுதியானது சீனாவின் தங்க இருப்பு மற்றும் உற்பத்தியில் முதலிடத்தை பிடித்துள்ளது.

    பீஜிங்:

    உலகின் மதிப்புமிக்க உலோகங்களுள் ஒன்று தங்கம். மின்னல் வேகத்தில் இதன் விலை ஏறினாலும் மக்களிடம் இதற்கான மவுசு குறையவில்லை. இந்த தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக சீனா உள்ளது. அதேசமயம் தங்கத்தை கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளில் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து 3-வது இடம் வகிக்கிறது.

    இந்தநிலையில் மேலும் பல தங்க படிமங்களை கண்டுபிடிக்க சீனா ஆர்வம் காட்டி வருகிறது. அதன்படி தற்போது ஷான்டாங் மாகாணம் லைஜோ நகரின் கடலுக்கு அடியில் ஆசியாவின் மிகப்பெரிய தங்க படிமத்தை சீனா கண்டறிந்துள்ளது. இதன் மொத்த தங்க இருப்பு சுமார் 39 லட்சம் கிலோ என மதிப்பிடப்பட்டு உள்ளது. இது அந்த நாட்டின் மொத்த தங்க கையிருப்பில் 26 சதவீதம் ஆகும். எனவே லைஜோ பகுதியானது சீனாவின் தங்க இருப்பு மற்றும் உற்பத்தியில் முதலிடத்தை பிடித்துள்ளது.

    ×