என் மலர்
உலகம்
- ஈரானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் போராட்டம் வெடித்துள்ளது.
- போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால், அமெரிக்கா தலையிடும் என டிரம்ப் எச்சரிக்கையால பதற்றம்.
ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் அரசு மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிரான போராட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.
நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்ததால் அதை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதில் போராட்டக்காரர்கள்-பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஈரான் முழுவதும் வன்முறை வெடித்தது. வாகனங்கள், அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
ஈரானில் தற்போது நடந்து வரும் போராட்டங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 2500-யை தாண்டியுள்ளது.
இதனிடையே, போராட்டக்காரர்கள் கொலை செய்யப்பட்டால், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பெரும் போர் வெடிக்கும் என்று கத்தார் எச்சரிக்கை விடுத்தது.
இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் கத்தாரில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளத்தில் உள்ள சில பணியாளர்களை வெளியேறுமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
ஈரான் தலைவர் இதற்கு முன்னதாக வெளியிட்டு ஒரு வீடியோ, தற்போது வேகமாக பரவி வரும் நிலையில், அமெரிக்கா இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆலோசகர், அலி ஷம்கானி தனது எக்ஸ் பக்கத்தில் "அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரானின் அணுஆயுத நிலையத்திற்கு எதிராக பயனற்ற ஆக்கிரமிப்பு குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். இதனுடன் ஈரானிய ஏவுகணைகளால் அல்-உதைதில் (கத்தார்) உள்ள அமெரிக்கத் தளம் அழிக்கப்படுவது குறித்தும் குறிப்பிடுவது நல்லது.
எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் பதிலடி கொடுப்பதில் ஈரானின் விருப்பம் மற்றும் திறமை குறித்து ஒரு உண்மையான புரிதலை உருவாக்க இது நிச்சயமாக உதவும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
- நாடு மீது மீண்டும் தாக்குதல் நடத்த போராட்டங்களை அமெரிக்கா பயன்படுத்தக்கூடாது.
- உலகளாவிய சர்வதேச பாதுகாப்பிற்கும் பாதகமான விளைவுகள் ஏற்படும்.
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா விடுத்துள்ள மிரட்டல்களுக்கு ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஜகாரோவா கூறியதாவது:-
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா விடுக்கும் மிரட்டல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா விமானப்படை ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்கிய பிறகு, அந்த நாடு மீது மீண்டும் தாக்குதல் நடத்த போராட்டங்களை அமெரிக்கா பயன்படுத்தக்கூடாது.
இதுபோன்ற நடவடிக்கைகளால் மத்திய கிழக்கிற்கும் உலகளாவிய சர்வதேச பாதுகாப்பிற்கும் பாதகமான விளைவுகள் ஏற்படும்.
வர்த்தக வரிகளை உயர்த்துவதன் மூலம் ஈரானின் வெளிநாட்டு கூட்டாளிகளை மிரட்டிப் பணிய வைக்கும் அமெரிக்காவின் முயற்சி கண்டித்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஈரானில் நடந்து வரும் போராட்டங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 2500-யை தாண்டியுள்ளது.
- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.
ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் அரசு மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிரான போராட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.
நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்ததால் அதை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதில் போராட்டக்காரர்கள்-பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஈரான் முழுவதும் வன்முறை வெடித்தது. வாகனங்கள், அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
ஈரானில் தற்போது நடந்து வரும் போராட்டங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 2500-யை தாண்டியுள்ளது.
இதனிடையே, போராட்டக்காரர்கள் கொலை செய்யப்பட்டால், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இதனையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பெரும் போர் வெடிக்கும் என்று கத்தார் எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், ஈரானுக்கு எதிரான எந்தவொரு இராணுவ நடவடிக்கைக்கும் தனது வான்வெளியை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று சவுதி அரேபியா அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கத்தார் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுடன் இணைந்து சவுதி அரேபியா ஒரு அமைதியான முன்னெடுப்பை முன்னெடுத்து வருகிறது. வளைகுடா நாடுகளில் பதற்றம் அதிகரித்தால் அது தனது பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்று சவுதி அரேபியா கருதுகிறது.
குறிப்பாக ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டால் தங்களது நாட்டில் உள்நாட்டுக் கலவரங்கள் வெடிக்கும் என்று சவுதி அரபியா அஞ்சுகிறது என்று கூறப்படுகிறது.
ஈரானிய ஆட்சியை கவிழ்க்கும் எந்தவொரு முயற்சியும் எண்ணெய் சந்தைகளை சீர்குலைத்து , இறுதியில் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கே தீங்கு விளைவிக்கும் என்று சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஓமன் ஆகிய நாடுகள் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ராக்கெட் பாதை மாறி சென்றதால் இலக்கை அடைய முடியவில்லை.
- பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டில் இருந்து பிரிந்து இயங்கி தரவுகளை அனுப்பியுள்ளது.
பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டை கடந்த 12-ந்தேதி இஸ்ரோ விண்ணில் ஏவியது. இதில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) உருவாக்கிய இ.ஓ.எஸ்-என்-1 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
மேலும், அந்த ராக்கெட்டுடன் ஸ்பானிஷ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய சோதனை கருவி மற்றும் 16 சிறிய செயற்கைக் கோள்களும் இணைக்கப்பட்டு ஏவப்பட்டது. ஆனால் ராக்கெட் பாதை மாறி சென்றதால் இலக்கை அடைய முடியவில்லை. இதனால் இத்திட்டம் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் திடீர் திருப்பமாக பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட ஒரு சிறிய செயற்கைக்கோள் செயல்பட தொடங்கியது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஆர்பிட்டல் பாராடிகம் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர் என்ற சிறிய செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டில் விண்ணுக்கு அனுப்பி இருந்தது.
இதற்கிடையே அந்த சிறிய செயற்கைக்கோள் தரவுகளை அனுப்பியதாக ஆர்பிட்டல் பாராடிகம் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் கூறும்போது,"எதிர்பாராத அனைத்து தடைகளையும் மீறி, எங்கள் சிறிய விண்கலம் கேப்சூல் பி.எஸ்.எல்.வி-சி62 ராக்கெட்டில் இருந்து பிரிந்து இயங்கி தரவுகளை அனுப்பியுள்ளது.
நாங்கள் அதன் பயணப் பாதையை மீண்டும் உருவாக்குகிறோம். முழு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்து உள்ளது.
- அனைவரும் கிடைக்கும் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்.
- தொடர்ந்து அரசுக்கு எதிராக போராடுங்கள் என டிரம்ப் கூறிய நிலையில் அறிவுறுத்தல்.
ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் அரசு மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிரான போராட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.
நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்ததால் அதை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதில் போராட்டக்காரர் கள்-பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஈரான் முழுவதும் வன்முறை வெடித்தது. வாகனங்கள், அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
தொடர்ந்து போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணியாக செல்கிறார்கள். அப்போது அரசு மற்றும் அயதுல்லா அலிகமேனிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் போராட்டம்-வன்முறையில் 646 பேர் பலியானதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ஈரானில் தற்போது நடந்து வரும் போராட்டங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 2500-யை தாண்டியுள்ளது.

இந்த நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் கிடைக்கும் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி உடனடியாக வெளியேறுமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அந்நாட்டில் நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால் இந்தியர்கள் உச்சபட்ச பாதுகாப்பை கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசுக்கு எதிராக போராடுங்கள் உதவி வந்து கொண்டே இருக்கிறது என டிரம்ப் கூறிய நிலையில் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஈரானில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் இணைய சேவை, வான்வெளி போக்குவரத்தும் முடங்கியுள்ளது.
- அல்டாய் மலைத்தொடர் பகுதிக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்தனர்.
- அல்டாய் மலைத்தொடர் பகுதியில் வாகனம் விபத்தில் சிக்கியது.
கஜகஸ்தானில் உள்ள செமே மருத்துவப் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இந்தியாவை சேர்ந்த 11 மாணவர்கள், அல்டாய் மலைத்தொடர் பகுதிக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் மிலி மோகன் (வயது 25) என்பவர் உயிரிழந்தார். ஆஷிகா ஷீஜாமினி, ஜசீனா ஆகியோர் காயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களின் நிலைமை சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கிரேன் விழுந்த வேகத்தில் ரெயில் பெட்டிகள் நொறுங்கின.
- ரெயிலுக்குள் சிக்கியவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நாட்டின் வடகிழக்கில் உள்ள உபோன் ராட்சதானி மாகாணத்திற்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. அதில் 195 பேர் பயணம் செய்தனர்.
அந்த ரெயில் நக்கோன் ராட்சசிமா மாகாணம் சிக்கியோ மாவட்டத்தில் விபத்தில் சிக்கியது. உயர்த்தப்பட்ட அதிவேக ரெயில் பாதை அமைக்கும் பணிக்காகப் பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன் ஒன்று திடீரென்று சரிந்து ரெயில் மீது விழுந்தது.
இதில் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்தன. கிரேன் விழுந்த வேகத்தில் ரெயில் பெட்டிகள் நொறுங்கின. மேலும் ரெயில் தீப்பிடித்து எரிந்தது.
உடனே மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ரெயிலுக்குள் சிக்கியவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் 22 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ரெயிலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுவிட்டது என்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் போலீசார் தெரிவித்தனர்.
தாய்லாந்தின் பாங்காக்கை லாவோஸ் வழியாக சீனாவின் குன்மிங்குடன் இணைக்கும் அதிவேக ரெயில் திட்டத்தின் ஒரு பகுதியாக சிக்கியோ மாவட்டத்தில் கட்டுமான பணி நடந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. இத்திட்டம் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் செயல்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- உயிரிழந்தவர்களில் 2,403 பேர் போராட்டக்காரர்கள் என்றும், 147 பேர் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.
- அரசு மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும் ஈரானில் போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் அரசு மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிரான போராட்டம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.
நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்ததால் அதை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதில் போராட்டக்காரர் கள்-பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஈரான் முழுவதும் வன்முறை வெடித்தது. வாகனங்கள், அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
தொடர்ந்து போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணியாக செல்கிறார்கள். அப்போது அரசு மற்றும் அயதுல்லா அலிகமேனிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.
போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் போராட்டம்-வன்முறையில் 646 பேர் பலியானதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஈரானில் தற்போது நடந்து வரும் போராட்டங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 2500-யை தாண்டியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்கள் நிறுவனம் கூறும்போது, ஈரானில் போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறையால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2,571 ஆக உயர்ந்து உள்ளது.
உயிரிழந்தவர்களில் 2,403 பேர் போராட்டக்காரர்கள் என்றும், 147 பேர் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவித்துள்ளது. 12 குழந்தைகள், போராட்டங்களில் பங்கேற்காத 9 பொதுமக்களும் கொல்லப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. போராட்டங்களில் ஈடுபட்ட 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசு மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும் ஈரானில் போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. நாடு முழுவதும் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு இருந்தாலும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் ஈரானில் பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகிறது.
இதற்கிடையே போராடும் மக்கள் மீது அரசாங்க படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்துவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். அவர்கள் கூறும்போது, அரசாங்கப் படைகள் தானியங்கி ஆயுதங்களுடன் துப்பாக்கிச் சூடு நடத்த தொடங்கியுள்ளன. எந்த ஆயுதங்களும் இல்லாமல் போராடும் மக்களை நோக்கி கண்மூடித்தனமாக சுடுகிறார்கள். கட்டிடங்களின் மேற்கூரையில் இருந்து துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள் என்றனர்.
போராட்டங்கள் காரணமாக ஈரானில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டன. தற்போது சில தகவல் தொடர்பு கட்டுப்பாடுகளை ஈரான் அரசு தளர்த்தி உள்ளது. இதற்கிடையே ஈரானில் இலவசமாக இணைய சேவையை வழங்குவதாக எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் அறிவித்துள்ளது.
- பாகிஸ்தானில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் போலீஸ் உள்பட 6 பேர் பலியாகினர்.
- பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தலிபான் TTP அமைப்பு பொறுப்பேற்றது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி அங்கு தாக்குதல் நடைபெறுவது வழக்கம். எனவே அங்குள்ள டேங்க் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கோமல் பஜார் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துச் சிதறியது. இதில் போலீஸ் சூப்பிரண்டு உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் 3 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இந்தத் தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதனையடுத்து, அந்தப் பகுதி ராணுவம் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் உள்துறை மந்திரி மோஷின் நக்வி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் TTP தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசாங்கத்தால் அவர்கள் அடைக்கலம் பெற்றதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. இதனால் சமீபத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்கா மற்றும் கனடா உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது.
- கனடா பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஒட்டாவா:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் வர்த்தகப் போர் மற்றும் நாடுகளைக் கைப்பற்றும் அச்சுறுத்தல் ஆகியவற்றால் அமெரிக்கா, கனடா உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீனா செல்லும் கார்னி வரும் 16-ம் தேதி அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதுதொடர்பாக மார்க் கார்னி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளாவிய வர்த்தகக் குழப்பம் நிலவும் இந்த நேரத்தில் கனடா ஒரு போட்டித்தன்மை வாய்ந்த, நிலையான மற்றும் சுதந்திரமான பொருளாதாரத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. ஒரே வர்த்தகப் பங்காளியைச் சார்ந்திருந்த நமது பொருளாதாரத்தை மாற்றுவதற்காக நாங்கள் உலகம் முழுவதும் புதிய கூட்டாண்மைகளை உருவாக்கி வருகிறோம் என தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் மாதம் தென் கொரியாவில் நடந்த ஆசியா-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை மார்க் கார்னி சந்தித்தார். அப்போது சீனா வருமாறு அவர் விடுத்த அழைப்பை ஏற்று அங்கு செல்ல கார்னி ஒப்புக் கொண்டார்.
கனடா பிரதமரின் சீன பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.
- டிரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போராட்டக்காரர்கள் கொலை செய்யப்பட்டால், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். ஆனால், டிரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பெரும் போர் வெடிக்கும் என்று கத்தார் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஜித் அல்-அன்சாரி, "ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தும். பெரும் போர் வெடிக்கும். தூதரக ரீதியிலான அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்
- போராட்டங்கள் தொடங்கிய டிசம்பர் 28 முதல் இதுவரை 10,721 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- 1,847 போராட்டக்காரர்கள் உட்பட மொத்தம் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அடக்குமுறைக்கு எதிராக நாடு முழுவதும் வெடித்துள்ள போராட்டங்களில் பலியானோரின் எண்ணிக்கை 2,000-ஐத் தாண்டியுள்ளது என அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
ஈரானியப் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சுமார் 1,847 போராட்டக்காரர்கள் உட்பட மொத்தம் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அரசு தரப்பில் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 135 பேர் உயிரிழந்துள்ளனர். போராட்டங்களில் நேரடியாகப் பங்கேற்காத 9 குழந்தைகள் மற்றும் 9 பொதுமக்கள் வன்முறையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். போராட்டங்கள் தொடங்கிய டிசம்பர் 28 முதல் இதுவரை 10,721 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டம் குறித்த தகவல்கள் பரவுவதைத் தடுக்க ஈரான் அரசு கடந்த பல நாட்களாக இணையச் சேவையை முழுமையாகத் துண்டித்துள்ளது. போராட்டங்களில் ஈடுபடுவோர் 'கடவுளின் எதிரிகள்' எனக் கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படலாம் என ஈரானிய அட்டர்னி ஜெனரல் எச்சரித்துள்ளார்.
இதனிடையே அதிபர் டொனால்ட் டிரம்ப், போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு, ஈரானிய அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளை ரத்து செய்துள்ளார். மேலும், ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என்றும், போராட்டக்காரர்களைப் பாதுகாக்க ராணுவத் தலையீடு இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள அவர்,
ஈரானிய தேசபக்தர்களே, தொடர்ந்து போராடுங்கள் - உங்கள் நிறுவனங்களைக் கைப்பற்றுங்கள்! கொலைகாரர்கள் மற்றும் சித்திரவதை செய்பவர்களின் பெயர்களைச் சேமித்து வையுங்கள். அவர்கள் மிகப்பெரிய விலையைக் கொடுப்பார்கள்.
போராட்டக்காரர்களின் கொலைகள் நிறுத்தப்படும் வரை, ஈரானிய அதிகாரிகளுடனான அனைத்து சந்திப்புகளையும் நான் ரத்து செய்துள்ளேன். உதவி வந்துகொண்டிருக்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.






