என் மலர்
நீங்கள் தேடியது "Gen z"
- தங்களின் எதிர்காலம் அவர்களின் ஆடம்பரங்களுக்காக கொள்ளை அடிக்கப்படுவதை இளைஞர்கள் உணர்ந்தனர்.
- புகைந்து கொண்டிருக்கும் நெருப்பை கிளறி விட ஒரு உடனடி காரணி தேவை.
2025, நேபாள வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆண்டாக அமைந்தது. பல்லாண்டுகளாக நீடித்த பழைய அரசியல் கட்டமைப்பை 1997 முதல் 2012 இடையில் பிறந்த 'ஜென்-சி' (Gen Z) என்று அழைக்கப்படும் இளம் தலைமுறையினர் தங்கள் போராட்டத்தின் மூலம் தகர்த்தெறிந்துள்ளனர்.
ஒரு புரட்சி தொடங்க 2 காரணிகள் உண்டு. ஒன்று நீண்டகால காரணி. மற்றொரு உடனடி காரணி.
நேபாளத்தை அரசியல் மாற்றத்திற்கான விதைகள் 2025 தொடக்கத்திலேயே தூவப்பட்டன.
பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான கம்யூனிஸ்ட் கூட்டணி அரசு மீது ஊழல் புகார்கள், பொருளாதாரத் மந்த நிலை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக இளைஞர்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.

இதேநேரம் அரசியல் தலைவர்களின் மகன்களும் மகள்களும் ஆடம்பர வாழ்க்கை வாழும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரப்பப்பட்டன. தங்களின் எதிர்காலம் அவர்களின் ஆடம்பரங்களுக்காக கொள்ளை அடிக்கப்படுவதை இளைஞர்கள் உணர்ந்தனர். இதுவே நீண்டகால காரணிகள்.
புகைந்து கொண்டிருக்கும் நெருப்பை கிளறி விட ஒரு உடனடி காரணி தேவை. அந்த வகையில் செப்டம்பர் 4, 2025 அன்று, அரசு பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதித்தது. கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் இந்த நடவடிக்கையே நாடு தழுவிய போராட்டத்திற்கு உடனடி காரணியாக அமைந்தது.
செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நேபாளத்தின் வீதிகள் போர்க்களமாக மாறின.
பாராளுமன்றக் கட்டிடம், உச்ச நீதிமன்றம் மற்றும் பிரதமரின் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு கட்டிடங்கள் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டன.

பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 51 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமையைக் கட்டுப்படுத்த ராணுவம் களம் இறக்கப்பட்டது.
இந்தப் போராட்டங்களால் நேபாளத்திற்கு சுமார் 586 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

போராட்டத்தின் தீவிரத்தைத் தாங்க முடியாமல் செப்டம்பர் 9-ஆம் தேதி பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து இடைக்கால அரசு அமைக்கப்பட்டு, நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி, நாட்டின் முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்றார்.
சுவாரஸ்யமாக, இவரது தேர்வு Discord என்ற சமூக வலைதளம் மூலம் இளைஞர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மற்றும் ராணுவம், ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் அமைந்தது.

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, புதிய பொதுத்தேர்தல் 2026 மார்ச் 5 அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-ஆம் ஆண்டு நேபாள இளைஞர்கள் தங்களின் வலிமையால் ஒரு ஆட்சியையே கவிழ்க்க முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தனர்.
வரும் 2026 தேர்தல், நேபாளத்தில் மீண்டும் பழைய அரசியல்வாதிகளின் கைகளுக்குச் செல்லுமா அல்லது புதிய இளம் தலைமுறைத் தலைவர்களை உருவாக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இதேபோல் மற்ற சில நாடுகளிலும் அரசுக்கு எதிராக ஜென் z போராட்டங்கள் வெடித்தன.

மடகாஸ்கர்: அகடோபர் மாதம் மடகாஸ்கரில் கடும் குடிநீர் மற்றும் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனை எதிர்த்துத் தொடங்கிய இளைஞர்களின் போராட்டம், விரைவிலேயே அரசின் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேட்டிற்கு எதிரான மாபெரும் புரட்சியாக உருவெடுத்தது.
இந்தோனேசியா: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அதிகப்படியான வீட்டு வாடகைப் படிக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் இந்தோனேசிய இளைஞர்கள் போராடினர்.

இந்தப் போராட்டத்தின் தீவிரத்தால் அந்நாட்டின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
மொராக்கோ: 2030 பிபா கால்பந்து உலகக் கோப்பைக்காக அரசு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கிய அதே வேளையில், கல்வி மற்றும் சுகாதாரம் புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து இளைஞர்கள் கொதித்தெழுந்தனர்.

'GenZ 212' என்ற ஆன்லைன் குழுவின் மூலம் இந்தப் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன.

பல்கேரியா: 2026-ஆம் ஆண்டுக்கான வரைவு பட்ஜெட் ஊழலுக்கு வழிவகுப்பதாகக் கூறி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பல்கேரியத் தலைநகர் சோஃபியாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராடினர்.

பிலிப்பைன்ஸ்: வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் நடந்த பெரும் ஊழலைக் கண்டித்து பிலிப்பைன்ஸ் இளைஞர்கள் களமிறங்கினர். தவறு செய்த அதிகாரிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என அதிபர் மார்க்கோஸ் ஜூனியருக்கு அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.

கென்யா: கென்யாவில் வரி உயர்வு மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து தொடங்கிய போராட்டம், 2025 ஜூலை மாதத்தில் போலீஸ் அராஜகத்திற்கு எதிரான போராட்டமாக மாறியது. இளைஞர்கள் கடத்தப்படுவதையும் சட்டவிரோதக் கைதுகளையும் எதிர்த்து அவர்கள் இடைவிடாமல் போராடினர்.

மெக்சிகோ: குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு மற்றும் மேயர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இளைஞர்கள் தேசிய மாளிகைக்குள் அதிரடியாகப் புகுந்து போராடினர்

பெரு: அரசியல் ஸ்திரமின்மை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் தினா பொலுவார்டே பதவி விலகக் கோரி செப்டம்பரில் போராட்டங்கள் வெடித்தன.
2025-ஆம் ஆண்டில் 'ஜென் Z' இளைஞர்கள் வெறும் சமூக வலைதளங்களில் மட்டும் கருத்துகளைப் பதிவிடாமல், களத்தில் இறங்கி மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். ஒரு புதிய அரசியல் வடிவதற்கான ஆரம்பமாகவே இந்த உலகளாவிய போராட்டங்கள் பார்க்கப்படுகின்றன.
- ஜப்பானின் முதல் பெண் பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- ஐரோப்பாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் வலதுசாரி கட்சிகள் அதிக எழுச்சி பெற்றுள்ளன.
ஆட்சி மாறும் ஆட்சி மாறினால் காட்சிகள் மாறும் என்ற ஒரு சொல்லாடல் உண்டு. அதற்கேற்ப உலகெங்கிலும் பல நாடுகளில் ஆட்சி மாற்றங்களும் ஆட்சிக் கழிவிப்புகளும் இந்தாண்டு அதிகம் நிகழ்ந்தன.
அவ்வாறு இந்தாண்டு நிகழ்ந்தவற்றை இங்கு பார்ப்போம்.
2025-ஆம் ஆண்டின் தொடக்கமே உலக அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கடந்த ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் வென்ற டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20, 2025 அன்று அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பதவியேற்றார்.

வர்த்தகப் போர் மற்றும் உலகளாவிய இறக்குமதி வரிகள்,கடுமையான குடியேற்றக் கொள்கைகள் என பல பரபரப்புகளை அவர் ஏற்படுத்தினார்.
ஜெர்மனி: ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனியின் ஆளும் கூட்டணி அரசு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிப்ரவரி 2025-ல் முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது.
ஓலாப் ஷோல்ஸின் (Olaf Scholz) தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி வீழ்த்தப்பட்டது. பிரீட்ரிக் மெர்ஸின் கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் மகத்தான வெற்றியைப் பெற்றது.
சிரியா: 2024 டிசம்பரில் சிரியாவில் கிளர்ச்சியாளர்களால் ஈரான் மற்றும் ரஷ்யாவின் ஆதரவுடன் நீடித்து வந்த அல்-அசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில் இந்தாண்டு தொடக்கத்தில் புதிய இடைக்கால அரசு அமைந்தது.

சிரியாவின் அதிபராக அகமது அல்-ஷாரா பதவியேற்றார். கடந்த நவம்பரில் அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் டிரம்ப்பின் ஆசி பெற்று திரும்பினார்.

கனடா: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதை அடுத்து ஏப்ரலில் கனடாவிலும் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
ஏற்கனவே ஆட்சியில் இருந்த ட்ரூடோவின் லிபரல் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றது. பின்னர் மார்க் கார்னி கனடாவின் பிரதமரானார்.

ஆஸ்திரேலியா: இந்த ஆண்டு மே மாதத்தில் ஆஸ்திரேலியாவும் தேர்தலை நடத்தியது. தொழிலாளர் கட்சி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றது, ஆன்டனி அல்பானீஸ் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பெலாரஸ்: 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெலாரஸிலும் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அலெக்சாண்டர் லுகாஷென்கோ இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார். லுகாஷென்கோ தொடர்ந்து ஏழாவது முறையாக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சானே தகைச்சி
ஜப்பான்: இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பானின் கீழ்சபைக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆளும் LDP கட்சி தோல்வியடைந்தது. தோல்விக்கு பொறுப்பேற்று, ஷிகெரு இஷிபா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதைத் தொடர்ந்து, LDP-யைச் சேர்ந்த சானே தகைச்சி பெரும்பான்மை வாக்குகளுடன் ஜப்பானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆவார்.
நேபாள்: இந்த ஆண்டு செப்டம்பர் தொடக்கத்தில்,ஜென்-Z போராட்டங்களைத் தொடர்ந்து நேபாள அரசாங்கம் வீழ்ந்தது.

சர்மா ஒலியின் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் ஊழல்களுக்கு எதிரான இளைஞர்களின் எழுச்சி போராட்டமாக மாறி வன்முறையாக மாறி கடைசியில் ஆட்சியே மாறியது.

சார்மா ஒலி - சுஷீலா கார்க்கி
தற்போது அந்நாட்டின் உச்சநீதிமன்ற முன்னால் நீதிபதி சுஷீலா கார்க்கி தலைமையில் இடைக்கால அரசு ஆட்சி செய்து வருகிறது.
தாய்லாந்து: தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை மோதலை அடுத்து, முன்னாள் கம்போடியத் தலைவர் ஹன் சென்னுக்கும் தாய்லாந்து பெண் பிரதமராக இருந்த பேதோங்தான் சினவத்ரா இடையே நிகழ்ந்த தொலைபேசி உரையாடல் கசித்தது.

பேதோங்தான் சினவத்ரா
இந்த சர்ச்சையில் தாய்லாந்து அரசியலமைப்பு நீதிமன்றத்தால் 2025 ஆகஸ்ட் 29 அன்று சினவத்ரா பிரதமர் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதனையடுத்து, அனுடின் சார்ன்விரகுல், புதிய பிரதமராக 2025 செப்டம்பர் 7 அன்று பதவியேற்றார்.
பிரான்ஸ்: 2025-ல் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பட்ஜெட் வெட்டுகள் தொடர்பான பிரச்னையால் பெரும் அரசியல் நெருக்கடியைச் சந்தித்தார். 2025 அக்டோபர் நிலவரப்படி கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 6 பிரதமர்கள் பிரான்சில் மாறியுள்ளனர்.
தான்சானியா: இந்த ஆண்டு, அக்டோபர் 20, 2025 அன்று தான்சானியாவில் தேர்தல்கள் நடைபெற்றன. சாமியா சுலுஹு ஹாசன் தேர்தலில் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக நாட்டின் அதிபரானார்.

தான்சானியா வன்முறை
இருப்பினும், அவரது தேர்தலைத் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. இவற்றில் சுமார் 700 பேர் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கேமரூன்: இந்த ஆண்டு அக்டோபரில் கேமரூனில் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன, ஏற்கனவே இருந்த அதிபர் பால் பியா மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.
இதுதவிர்த்து ஐரோப்பாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் வலதுசாரி கட்சிகள் அதிக எழுச்சி பெற்றுள்ளன. ஜெர்மனி தேர்தலில் வலதுசாரி வெற்றி இதற்கு எடுத்துக்காட்டாகும்.

ஜோஸ் அன்டோனியோ காஸ்ட்
இந்த மாதம், தென் அமெரிக்க நாடான சிலியில் அதிபர் தேர்தலில் தீவிர வலதுசாரியான கன்சர்வேடிவ் கட்சியின்தான்சானியாகம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜீனெட் ஜாராவை தோற்கடித்து 58 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
- இந்த பேரணியை GenZ இளைஞர் குழுக்கள் ஏற்பாடு செய்திருந்தன.
- இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமின் அரசாங்கத்தில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஊழளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மெக்சிகோ நகரத்திற்குள் பேரணி நடத்தினர்.
இந்த பேரணியை GenZ இளைஞர் குழுக்கள் ஏற்பாடு செய்திருந்தன. இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
குறிப்பாக உருபான் மேயர் கார்லோஸ் மான்சோ சில வாரங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை இளைஞர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி போராட்டத்திற்கு வழிவகுத்தது.
இந்நிலையில், GenZ இளைஞர்களின் போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. மெக்சிகோவின் நாடாளுமன்றத்தை GenZ போராட்டக்காரர்கள் சூறையாட முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மேலும், போராட்டக்காரர்கள் அரசு சொத்துக்களை சூறையாட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
- ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டது.
- பலரும் ஆதரவு அளித்ததால் போராட்டங்களால் நாடு ஸ்தம்பித்தது.
கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மடகாஸ்கரில் அதிபர் Andry Rajoelina தலைமையிலான ஆட்சிக்கு எதிராக Gen-Z போராட்டம் நடைபெற்று வருகிறது. தண்ணீர், மின் பற்றாக்குறை காரணமாக தொடங்கிய போராட்டம் தீவிரமடைந்தது. இதனை தொடர்ந்து மடகாஸ்கர் ராணுவத்தின் 'CAPSAT பிரிவு' முழு ராணுவத்தையும் கைப்பற்றி அதிபருக்கு எதிராக திரும்பியது. இதனால் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டது.
இதனிடையே, Gen-Z போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், வர்த்தக சங்கங்கள் என பலரும் ஆதரவு அளித்ததால் போராட்டங்களால் நாடு ஸ்தம்பித்தது. 16 ஆண்டுகளில், ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் தங்களை வளப்படுத்திக் கொள்வதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை, அதே நேரத்தில் மக்கள் ஏழைகளாகவே இருக்கிறார்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், Gen-Z போராட்டம் தீவிரம் அடைந்ததால் அபதிர் Andry Rajoelina நாட்டை விட்டு வெளியேறினார்.
ஆட்சி அதிகாரத்தை பலவந்தமாக கைப்பற்றும் முயற்சி நடந்து வருவதாக மடகாஸ்கர் அதிபர் குற்றம் சாட்டியிருந்த நிலையில், கடந்த சில தினங்களாக பொது இடங்களில் அதிபர் காணப்படாததால் அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.
- தண்ணீர், மின் பற்றாக்குறை காரணமாக Gen-Z போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மடகாஸ்கர் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மடகாஸ்கரில் அதிபர் Andry Rajoelina தலைமையிலான ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் Gen-Z போராட்டத்திற்கு அந்நாட்டு ராணுவம் ஆதரவு தெரிவித்துள்ளது.
தண்ணீர், மின் பற்றாக்குறை காரணமாக தொடங்கிய போராட்டம் தீவிரமடைந்தது. இந்நிலையில், மடகாஸ்கர் ராணுவத்தின் 'CAPSAT பிரிவு' முழு ராணுவத்தையும் கைப்பற்றி அதிபருக்கு எதிராக திரும்பியுள்ளது. இதனால் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆட்சி அதிகாரத்தை பலவந்தமாக கைப்பற்றும் முயற்சி நடந்து வருவதாக மடகாஸ்கர் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார்.
அண்மையில் நேபாளத்தில் நடைபெற்ற Gen-Z போராட்டத்தில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- 1946 – 1964 காலகட்டத்தில் பிறந்தவர்கள் பூமர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
- 1981-96 காலகட்டத்தில் பிறந்தவர்கள் மில்லியனில் என்று அழைக்கப்படுகிறார்கள்.
15 ஆண்டுகாலம் என்பது தற்போது ஒரு தலைமுறை என்று கூறப்படுகிறது. அவ்வகையில் ஒவ்வொரு தலைமுறையும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். 1946 – 1964 காலகட்டத்தில் பிறந்தவர்கள் பூமர்கள் என்றும் 1981-96 காலகட்டத்தில் பிறந்தவர்கள் மில்லியனில் என்றும் அதன் பின்னர் 1997 to 2012 காலகட்டத்தில் பிறந்தவர்கள் ஜென் Z என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், மில்லியனில் என சொல்லப்படும் 1981-96 காலகட்டத்தில் பிறந்தவர்கள் அதிகம் படித்த தலைமுறையினராக இருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
ஆனாலும் குறைவான சம்பளம் பெறுபவர்களாகவும், பொருளாதார ரீதியில் நிலையற்ற தன்மையுடன் தள்ளாடுபவர்களாக இருப்பதாகவும் மில்லியனில் தலைமுறையினர் கவலைப்படுவதாக கூறப்படுகிறது.
- 61 வயதாகும் ஜோடி ஃபாஸ்டர் பட தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றவர்
- ஜென் இசட்டிடம் ஒரு அலட்சிய போக்கு இருந்து வருகிறது என்றார் ஜோடி
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு கதாநாயகியாக உருவெடுத்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்தவர், ஹாலிவுட் நடிகை ஜோடி ஃபாஸ்டர் (Jodie Foster).
தற்போது 61 வயதாகும் ஜோடி ஃபாஸ்டர், திரைப்பட தயாரிப்பாளராகவும் வெற்றி அடைந்தார்.
தனது நடிப்பிற்காக இரண்டு முறை உலக புகழ் பெற்ற ஆஸ்கார் விருதுகளை வென்றவர், ஜோடி ஃபாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலமாக ஹாலிவுட்டில் செயலாற்றி வரும் ஜோடி ஃபாஸ்டர், தற்போதைய ஜென் இசட் (Gen Z) எனப்படும் 90களின் பிற்பகுதியிலிருந்து 2000 முற்பகுதி வரை பிறந்த ஆண்கள் மற்றும் பெண்களுடன் பணியாற்றுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
"ஜென் இசட் இளைஞர்களுடன் பணியாற்றுவது பல நேரங்களில் பெரிய தொந்தரவாக உள்ளது. நேரம் காப்பதில் அவர்களுக்கு ஒரு அலட்சிய போக்கு இருந்து வருகிறது. போட்ட திட்டப்படி பணியாற்ற வர வேண்டிய நேரத்திற்கு வராமல் அலட்சியமாக காரணம் சொல்கின்றனர். அவர்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பினால், ஏகப்பட்ட தவறுகள் இருக்கின்றன. அனுப்பும் முன்பாக சரிபார்க்கவில்லையா என கேட்டால், அதை காலவிரயம் என அலட்சியமாக பதிலளிக்கின்றனர். நாங்கள் வளர்ந்து போது எங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செயல்பட முழு சுதந்திரம் அளிக்கப்படவில்லை. திரைப்படத்துறையில் கலைஞர்களாக வர விரும்பும் தற்கால இளைஞர்கள் தங்களின் சொந்த படைப்புகளையே கொண்டு வர முயற்சிக்க வேண்டும்" என ஜோடி தெரிவித்தார்.
- 2000 வாக்காளர்களிடம் டிரம்ப் மற்றும் பைடன் குறித்து கேட்கப்பட்டது
- ஜென் இசட், டிரம்ப் முன்னர் அதிபராக இருந்த போது வாக்களிக்கும் வயதையே எட்டவில்லை
வரும் நவம்பர் மாதம், அமெரிக்காவில் 46-வது அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
இரு-கட்சி அரசியல் நிலவும் அந்நாட்டில், ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் (81) மீண்டும் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் (77) டிரம்ப் களம் இறங்கியுள்ளார்.
தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளதால், மக்களின் எண்ண ஓட்டத்தை கணிக்க பல கருத்து கணிப்புகளிலும், தகவல் சேகரிப்பிலும், பத்திரிகைகளும் தனியார் அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் "சென்டர் ஃபார் அமெரிக்கன் பொலிடிகல் ஸ்டடீஸ்" (CAPS) எனும் அமைப்பு வேறு சில அமைப்புகளுடன் இணைந்து கருத்து கணிப்புகளை நடத்தி வருகிறது.
இந்த அமைப்பு நடத்திய ஒரு ஆய்வில் கலந்து கொண்ட 2000 வாக்காளர்களிடம் பல்வேறு கேள்விகளுடன் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் குறித்தும் கேட்கப்பட்டது.

இதில் 57 சதவீத ஜென் இசட் வாக்காளர்கள், குடியரசு கட்சியின் டிரம்ப் அதிபராக விரும்புவதாகவும் 41 சதவீதம் பேர் அவரை ஏற்க மறுப்பதாகவும் தெரிவித்தனர்.
ஆனால், "ஜென் இசட்" (Gen Z) எனப்படும் 18 வயதிலிருந்து 24 வயதிற்கு உட்பட்டவர்களில் 64 சதவீதம் பேர் டிரம்ப் அதிபராக வருவதை ஆதரித்தனர்.
2017 முதல் 2021 வரை அதிபராக டிரம்ப் இருந்த போது, இவர்கள் வாக்களிக்கும் வயது நிரம்பாதவர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் வயதினரின் வாக்குவங்கி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதால் இந்த ஆய்வின் முடிவுகள் மீண்டும் அதிபராக முயன்று வரும் ஜோ பைடனுக்கு சாதகமான தகவல் அல்ல என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
மேலும், ஜென் இசட் வயதினருக்கு அடுத்து 55 வயதிலிருந்து 64 வயது வரை உள்ளவர்களும் (60 சதவீதம்), 25 வயதிலிருந்து 34 வயது உள்ளவர்களும் (58 சதவீதம்) மற்றும் 35 வயதிலிருந்து 44 வயது வரை உள்ளவர்களும் (58 சதவீதம்) டிரம்பிற்கு ஆதரவு தெரிவித்தனர்.
- 2035ல் உலக மக்கள் தொகையில் 16% பேர் GEN-BETA ஆவர்.
- இவர்கள் 22 ஆம் நூற்றாண்டை பார்க்க அதிக வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியார்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது ஜென் Z தலைமுறை டிரெண்டிங்கில் உள்ள நிலையில் 2025 ஜனவரி 1 முதல் Gen-Beta என்ற புதிய தலைமுறை உருவாக உள்ளது.
2025 முதல் 2039 வரை பிறப்பவர்கள் ஜென் பீட்டா என்று அழைக்கப்படுவர். இந்த தலைமுறையினர் பெரும்பாலும் Gen Alpha மற்றும் Gen Z-க்களின் வாரிசுகளாக இருப்பர் என்று கணிக்கப்பட்டுள்ளது.
1998 முதல் 1996 வரை மில்லினியல்கள் என்றும், 1996 முதல் 2010 ஆம் வரை பிறந்தவர்கள் Gen Z என்றும் 2010 முதல் 2024 க்கு இடையில் பிறந்தவர்கள் Gen Alpha ஆல்பா என்றும் அழைக்கப்பட்டு வரும் நிலையில் வரும் புத்தாண்டுடன் இந்த லிஸ்டில் பீட்டா தலைமுறை சேர உள்ளது.

வரும் 2035ல் உலக மக்கள் தொகையில் 16% பேர் GEN-BETA-ஆக இருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவர்கள் 22 ஆம் நூற்றாண்டை பார்க்க அதிக வாய்ப்புள்ளது.

பீட்டா குழந்தைகளின் அன்றாட வாழ்வில் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக AI தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவை, பீட்டாவினரின் அன்றாட வாழ்க்கை, கல்வி மற்றும் பணியிடங்களில் சுகாதாரம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றில் முழுமையான ஆதிக்கம் செலுத்தும்.

தொழில்நுட்பம் அவர்களின் விரல் நுனியில் இருக்கும். அதே வேளையில், காலநிலை மாற்றம், நகரமயமாக்கல் மற்றும் உலகளாவிய மக்கள்தொகை மாற்றங்கள் போன்ற பல குறிப்பிடத்தக்க சவால்களைக் கொண்ட ஒரு சமூக வாழ்க்கையை பீட்டா தலைமுறையினர் எதிர்கொள்வார்கள்.






