என் மலர்
நீங்கள் தேடியது "நேபாள்"
- நேபாளத்துக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
- சிமாராவில் பிற்பகல் 1:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாட்டை எதிர்த்தும் சர்மா ஒலி அரசின் ஊழல் மற்றும் நாட்டின் பொருளாதார பிரச்னைகளை எதிர்த்தும் ஜெனரல் z இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் வன்முறையாக மாறி, பாராளுமன்றம், நீதிமன்றம், அலுவலகங்களுக்கு தீ வைக்கப்பட்டது. வன்முறையில் 76 பேர் கொல்லப்பட்டனர். இதைதொடர்ந்து சர்மா ஒலி மற்றும் அமைச்சர்கள் பதவி விலகினர்.
தொடர்ந்து ஜெனரல் z விருப்பப்படி அந்நாட்டின் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுசீலா கார்க்கி இடைக்கால தலைவராக பதவி ஏற்றார். நேபாளத்துக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த சூழலில் நேபாளத்தின் பாரா மாவட்டத்தின் சிம்பாரா பகுதியில் ஜெனரல் z மற்றும் சர்மா ஒலி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அரசாங்க எதிர்ப்பு பேரணியில் உரையாற்ற சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் வருவதை எதிர்த்து ஜெனரல் z எதிர்த்து வீதியில் இறங்கி போராடிய நிலையில் நேற்று, சிமாரா விமான நிலையம் அருகே அவர்களுக்கும் சர்மா ஒழி ஆதரவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நிலைமை மோசமடைவதை தடுக்க சிமாராவில் இன்று பிற்பகல் 1:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
- உடனே அங்கு போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
- படுகாயம் அடைந்த10 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
நேபாளத்தின் கர்னாலி மாகாணம் பாபிகோட்டின் ஜர்மாரே பகுதியில் 18 பயணிகளை ஏற்றி கொண்டு நேற்று இரவு, ஜீப் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது அந்த ஜீப் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 700 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
உடனே அங்கு போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த10 பேரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. முதற்கட்ட விசாரணையில் அதிக வேகம் காரணமாக விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
- ஹமாஸ் தாக்குதலுக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் ஜோஷி நேபாளத்திலிருந்து இஸ்ரேலுக்கு சென்றிருந்தார்.
- சடலத்தை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கு முன் இஸ்ரேல் அரசு முறைப்படி இறுதி சடங்குகளை நடத்தும்.
காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த நிலையில் இஸ்ரேல் பணய கைதிகள் 20 பேரை ஹமாஸ் நேற்று முன்தினம் விடுவித்தது.
இதற்கிடையே ஹமாஸ் அமைப்பால் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்தவர்களில் நேபாளத்தைச் சேர்ந்த பிபின் ஜோஷி உட்பட நான்கு பேரின் சடலங்களை இஸ்ரேலிய அதிகாரிகளிடம் ஹமாஸ் ஒப்படைத்தது.
பிபின் ஜோஷியின் சடலம் நேற்று முன் தினம் நள்ளிரவு டெல் அவிவ் விமான நிலையத்தை அடைந்தது என்று இஸ்ரேலுக்கான நேபாள தூதர் தனபிரசாத் பண்டிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஜோஷியின் அடையாளத்தை உறுதிப்படுத்த இஸ்ரேலிய அதிகாரிகள் மரபணு (DNA) பரிசோதனை செய்ய உள்ளனர். அதன்பிறகு, நேபாள தூதரகத்துடன் ஒருங்கிணைந்து, சடலத்தை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கு முன் இஸ்ரேல் அரசு முறைப்படி இறுதி சடங்குகளை நடத்தும் என்று தூதர் பண்டிட் கூறினார்.
அக்டோபர் 7 , 2023, இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலுக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் ஜோஷி நேபாளத்திலிருந்து இஸ்ரேலுக்கு சென்றிருந்தார்.
ஸ்டுடென்ட் எக்ஸ்சேஞ்ச் திட்டத்தின் கீழ், காசா எல்லைக்கு அருகிலுள்ள கிப்புட்ஸ் அலிமிம் என்ற இடத்தில் விவசாயம் குறித்து ஆராய்ச்சி படிப்புக்காக சென்ற 17 நேபாள மாணவர்களில் ஜோஷியும் ஒருவர் ஆவார்.
ஹமாஸ் தாக்குதல் நடந்த நாளில், துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்புச் சத்தங்களுக்கு மத்தியில் சைரன் ஒலித்தபோது, அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக வெடிபொருள் தாக்குதலில் இருந்து தப்பிக்கப் பாதுகாப்பான இடத்தில் பதுங்கினர்.
ஆனால், அவர்கள் மறைந்திருந்த இடத்திற்குள் ஹமாஸ் போராளிகள் வெடிகுண்டு ஒன்றை வீசினர். இதனால் பலர் காயமடைந்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட பிபின் ஜோஷி, இரண்டாவதாக வீசப்பட்ட வெடிகுண்டைப் லாவகமாகப் பிடித்து, மீண்டும் வெளியே வீசினார்.
ஜோஷியின் இந்தத் துரிதச் செயலால் அங்கிருந்த பலரது உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் ஜோஷியை ஹமாஸ் படையினர் பிடித்து இழுத்துச் சென்றனர்.
இஸ்ரேலியர்கள் அல்லாத பிணைக்கைதிகளில் கஸாவில் உயிருடன் இருப்பதாக நம்பப்பட்ட ஒரே நபர் இவர்தான்.
2023 இல் கடத்தப்பட்டதில் இருந்து ஜோஷியைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லாமல் இருந்தது. சமீபத்தில் இஸ்ரேலிய இராணுவம் கஸாவில் இருந்து ஜோஷி உயிருடன் இருந்ததைக் காட்டும் ஒரு வீடியோவை மீட்டது. இருப்பினும் அவர் தற்போது சடலமாக திரும்பியுள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
- நேபாள இளைஞர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 பேர் உயிரிழந்தனர்.
- நேபாள இடைக்கால பிரதமராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.
நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளை எதிர்த்து அந்நாட்டு ஜென் z இளைஞர்கள் செப்டம்பர் 8 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இளைஞர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 பேர் உயிரிழந்தனர். இதனால் போராட்டம் கலவரமாக மாறியது.
இதைத்தொடர்ந்து செப்டம்பர் 9 அன்று சமூக வலைத்தளங்களுக்கு தடை நீக்கப்பட்டது. ஆனால் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரினர். எனவே அன்றைய தினமே பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார்.
இதற்கிடையில், இடைக்கால பிரதமராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.
இந்நிலையில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 19 பேர் பலியான சம்பவத்தில் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் முன்னாள் உள்துறை மந்திரி ரமேஷ் லேகாக் ஆகியோரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று ஜென் இசட் குழு வலியுறுத்தி உள்ளது.
ஆனால் துப்பாக்கி சூட்டுக்கு தான் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று கே.பி.சர்மா ஒலி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்டெல்லுடன் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- இடைக்கால பிரதமராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.
ஊழல் குற்றச்சாட்டுகள், அரசியல் தலைவர்களுடைய வாரிசுகளின் ஆடம்பர வாழ்க்கை ஆகியவை நேபாளத்தில் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தன.
இதற்கிடையே அண்மையில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட அந்நாட்டு ஜென் z இளைஞர்களை மேலும் கோபப்படுத்தியது. இதனால் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி போராட்டம் வெடித்தது.
இளைஞர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் போராட்டம் கலவரமாக மாறியது. 19 பேர் உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து செப்டம்பர் 9 அன்று சமூக வலைத்தளங்களுக்கு தடை நீக்கப்பட்டது. ஆனால் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரினர். எனவே அன்றைய தினமே பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார்.
ஒட்டுமொத்தமாக கலவரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 72 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. 159 போராட்டக்காரர்கள், 10 கைதிகள், 3 போலீஸ் அதிகாரிகள் இதில் அடங்குவர்.
தொடர்ந்து நாட்டில் இடைக்கால அரசு அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. இதற்காக ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் மற்றும் ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்டெல்லுடன் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை, இடைக்கால பிரதமராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.
நீதிபதியாக இருந்தபோது ஊழலுக்கு எதிராக பல உத்தரவுகளை பிறப்பித்த சுசிலாவுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் 2 நாட்கள் கழித்து இன்று, இடைக்கால பிரதமராக சுசிலா கார்கி அதிகாரபூர்வமாக கடமைகளை தொடங்கினார்.
முதலாவதாக போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 19 பேருக்கு தியாகி அந்தஸ்தும், அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
முன்னதாக லாய்ன்சவுரில் அமைக்கப்பட்டிருந்த தியாகிகள் நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தி விட்டு உள்துறை அமைச்சக கட்டிட அலுவலத்தில் தனது பிரதமர் கடமைகளை தொடங்கிய பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
பிரதமர் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில் உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் அலுவலகம் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கலவரத்தில் காயமடைந்த 134 போராட்டக்காரர்களுக்கும், 57 காவல்துறையினருக்குமான மருத்துவ செலவுகளை அரசு ஏற்றுள்ளது.
- இடைக்கால பிரதமாராக இடைக்கால தலைவராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.
- நேபாள பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த வருடம் மார்ச் 21 தேர்தல் அறிவிக்கப்பட்டது.
சமூக வலைதள தடை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளைக் தொடர்ந்து ஏற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தால் கடந்த செப்டம்பர் 9 ஆம் நீதி நேபாள் பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் நேற்று இடைக்கால பிரதமாராக இடைக்கால தலைவராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.
அதேவேளை நேபாள பாராளுமன்றமும் கலைக்கப்பட்டு அடுத்த வருடம் மார்ச் 21 தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சுசிலா கார்கிக்கு பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "நேபாள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள திருமதி சுசிலா கார்கிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேபாள மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் " நேபாளத்தில் திருமதி சுசிலா கார்கி தலைமையில் ஒரு புதிய இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். இது அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வளர்ப்பதற்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்.
நெருங்கிய அண்டை நாடு மற்றும் நீண்டகால வளர்ச்சி கூட்டாளியாக, இந்தியா நமது இரு மக்கள் மற்றும் நாடுகளின் நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக நேபாளத்துடன் தொடர்ந்து நெருக்கமாகப் பணியாற்றும்" என்று தெரிவித்திருந்தது.
- இடைக்கால தலைவராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்க்கி (73) பதவியேற்றார்.
- அரசியல் தலைவர்களுடைய வாரிசுகளின் ஆடம்பர வாழ்க்கை ஆகியவை நேபாளத்தில் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தன.
ஊழல் குற்றச்சாட்டுகள், அரசியல் தலைவர்களுடைய வாரிசுகளின் ஆடம்பர வாழ்க்கை ஆகியவை நேபாளத்தில் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தன.
இதற்கிடையே அண்மையில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட அந்நாட்டு ஜென் z இளைஞர்களை மேலும் கோபப்படுத்தியது. இதனால் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி போராட்டம் வெடித்தது.
இளைஞர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் போராட்டம் கலவரமாக மாறியது. 19 பேர் உயிரிழந்தனர்.
இதைத்தொடர்ந்து செப்டம்பர் 9 அன்று சமூக வலைத்தளங்களுக்கு தடை நீக்கப்பட்டது. ஆனால் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரினர். எனவே அன்றைய தினமே பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார்.
தொடர்ந்து நாட்டில் இடைக்கால அரசு அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. இதற்காக ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் மற்றும் ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்டெல்லுடன் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று இடைக்கால தலைவராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.
அதேவேளை நேபாள பாராளுமன்றமும் கலைக்கப்பட்டது. நேற்று இரவு 11 மணிக்கு பாரளுமன்றம் கலைக்கப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் மேலும் பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2026) மார்ச் 21 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்து உள்ளார்.
- பயணிகளின் மொபைல் போன்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்தனர்.
- நேபாள ராணுவம் அவர்களை மீட்டது.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் இந்தியர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் ஆவர். நேற்று பசுபதிநாத் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து பேருந்தில் திரும்பிகொண்டிருந்த அவர்களை சோனாலி அருகே கும்பல் ஒன்று வழிமறித்தது.
முதலில் மர்ம நபர்கள் பேருந்தின் மீது கற்களை வீசி, பின்னர் பயணிகளின் மொபைல் போன்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்தனர். இதில் 8 பேர் காயமடைந்தனர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு நேபாள ராணுவம் அவர்களை மீட்டு, இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவித்தது.
இந்திய அதிகாரிகள் அனைவரையும் காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.
- நான் சற்று பிடிவாத குணம் கொண்டவன். இல்லையென்றால், இந்த சவால்களுக்கு மத்தியில் நான் எப்போதோ விட்டுக்கொடுத்திருப்பேன்.
- இந்தப் பிடிவாதங்களில் நான் சமரசம் செய்திருந்தால், எனக்குப் பல நன்மைகள் கிடைத்திருக்கும்.
நேபாளத்தில் சமூக ஊடக தடைக்கு எதிராக செப்டம்பர் 8 இல் வெடித்த இளைஞர்களின் போராட்டம், ஊழலுக்கு எதிரான போராட்டமாக மாறி அந்நாட்டு ஆட்சியை கவிழ்த்துள்ளது.
அடுத்த நாளே சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய இது வழிவகுத்தது. அவரை தொடர்ந்து ஜனாதிபதியும் ராஜினாமா செய்தார்.
சர்மா ஒலி தற்போது காத்மாண்டுவின் வடக்கே உள்ள சிவுபுரி ராணுவ முகாமில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் பதவி விலகிய பின் அவர் முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியுள்ளார். அதில் தனது பதவி இழப்புக்கு இந்தியா மீதான தனது நிலைப்பாடே காரணம் என்று தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் பிறந்ததை எதிர்த்ததால் தான் ஆட்சியை இழந்ததாகக் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா எல்லையில் இருக்கும் சர்ச்சைக்குரிய பகுதிகளான லிபுலேக், காலாபனி மற்றும் லிம்பியாதுரா ஆகியவை நேபாளத்திற்கு சொந்தமானவை என்று தான் வலியுறுத்தியதும் தனது பதவி இழப்புக்கு ஒரு காரணம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவரது அறிக்கையில், "நான் சற்று பிடிவாத குணம் கொண்டவன். இல்லையென்றால், இந்த சவால்களுக்கு மத்தியில் நான் எப்போதோ விட்டுக்கொடுத்திருப்பேன். சமூக ஊடக நிறுவனங்கள் எங்கள் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
ராமர் நேபாளத்தில் தான் பிறந்தார், இந்தியாவில் அல்ல என்று நான் கூறினேன். இந்தப் பிடிவாதங்களில் நான் சமரசம் செய்திருந்தால், எனக்குப் பல நன்மைகள் கிடைத்திருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே போராட்டக்காரர்கள் பல அமைச்சர்களின் வீடுகளுக்குத் தீ வைத்ததுடன், நாடாளுமன்றம், பிரதமர் மற்றும் அதிபர் மாளிகைகளையும் சூறையாடினர்.
வன்முறையில் 30 பேர் கொல்லப்பட்டதாகவும், 13,500-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறைகளில் இருந்து தப்பி ஓடியதாகவும் நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது.
- நேபாளத்தில் அரசியல் நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ளது.
- பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் (73) கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது.
அண்டை நாடான நேபாளத்தில் 2008 இல் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தற்போது வரை கம்யூனிஸ்ட் அரசு ஆட்சியில் இருந்தது.
இந்நிலையில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை விவகாரத்தால் நேபாளத்தில் அரசியல் நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ளது.
ஜென் Z இளைஞர்கள் மேற்கொண்ட தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் (73) கம்யூனிஸ்ட் அரசு செவ்வாய்க்கிழமை சரிந்தது.
அவருடன் சேர்ந்து, நாட்டின் ஜனாதிபதி ராம்சந்திர பவுடேலும் ராஜினாமா செய்தார். இதனால் நாடு நிச்சயமற்ற நிலையில் உள்ளது.
இந்நிலையில், நேபாளில் பிரதமர், ஜனாதிபதி பதவி விலகியதை அடுத்து போராட்டம் தணிந்தது.
நாடு முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு நாட்டின் பாதுகாப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததால் நேபாளத்தில் மெல்ல மெல்ல அமைதி திரும்பி வருகிறது.
- பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் (73) அரசு செவ்வாய்க்கிழமை சரிந்தது.
- அவருக்கு சமூக ஊடகங்களில் இளைஞர்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.
அண்டை நாடான நேபாளத்தில் 2008 இல் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தற்போது வரை கம்யூனிஸ்ட் அரசு ஆட்சியில் இருந்தது.
இந்நிலையில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை விவகாரத்தால் நேபாளத்தில் அரசியல் நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ளது.
ஜென் Z இளைஞர்கள் மேற்கொண்ட தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் (73) கம்யூனிஸ்ட் அரசு செவ்வாய்க்கிழமை சரிந்தது.
அவருடன் சேர்ந்து, நாட்டின் ஜனாதிபதி ராம் சந்திர பவுடேலும் ராஜினாமா செய்தார். இதனால் நாடு நிச்சயமற்ற நிலையில் உள்ளது.

இந்த சூழலில், நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்த விவாதம் தொடங்கியுள்ளது. பிரதமர் பதவிக்கான போட்டியில் 3 பேர் முன்னிலையில் உள்ளனர்.

அவர்களில் முதலாவது, காத்மாண்டு மேயர் மற்றும் பிரபல ராப் பாடகர் பாலேந்திர ஷா. அவருக்கு சமூக ஊடகங்களில் இளைஞர்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.
அடுத்தது சுமனா ஸ்ரேஸ்தா (40). அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) எம்பிஏ பட்டம் பெற்ற இவர், நேபாளத்தின் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக முன்பு பணியாற்றினார். நாடாளுமன்றத்தில் பாலின சமத்துவம் பற்றிப் பேசி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.
மூன்றாவதாக முன்னாள் பத்திரிகையாளரும் இரண்டு முறை துணைப் பிரதமருமான ரவி லாமிச்சானே (49) பெயரும் அடிபடுகிறது. இருப்பினும், கூட்டுறவு சேமிப்பு முறைகேடு வழக்கில் ஏப்ரல் மாதம் அவர் கைது செய்யப்பட்டது அவருக்கு பின்னடைவாக அமையும் என்று கூறப்படுகிறது.
- பிரதமர் ஒலி பதவி விலக போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
- அவரை அடியொற்றி நாட்டின் ஜனாதிபதியும் தனது பதவியை ராஜினாமா செய்தார். நேபாள், கலவரம், சஞ்சய் ராவத்
அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை மேற்கோள் காட்டி, உத்தவ் பிரிவு சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் மத்திய அரசுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செவ்வாயன்று, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்த கலவரங்களின் வீடியோவை எக்ஸ் பக்கத்தில் சஞ்சய் ராவத் பகிர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவை நேரடியாக டேக் செய்தார்.
அந்த பதிவில், "இன்று நேபாளம் இப்படித்தான் இருக்கிறது. இந்த நிலைமை எந்த நாட்டிலும் நிகழலாம். ஜாக்கிரதையாக இருங்கள்! பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம்," என்று எழுதியுள்ளார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேபாளத்தில் சமூக ஊடகங்கள் மீதான தடை மற்றும் அரசின் ஊழலுக்கு எதிராக இளைஞர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. பிரதமர் ஒலி பதவி விலக போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை அடியொற்றி நாட்டின் ஜனாதிபதியும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.






