என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை விபத்து"

    • மகளின் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முடிவெடுத்தனர்.
    • சிறுநீரகங்கள், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் உள்ள மற்றொரு குழந்தைக்கு வழங்கப்பட்டது.

    சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாதக் குழந்தை தனது உறுப்புகள் மூலம் 5 பேரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

    பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாத பெண் குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம் விபத்து ஒன்றில் மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

    ஆழ்ந்த துயரத்தில் இருந்தபோதிலும், குழந்தையின் பெற்றோர்களான தங்கள் மகளின் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தனர்.

    மருத்துவர்கள் குழந்தையிடமிருந்து கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதய வால்வு மற்றும் இரண்டு கண்கள் ஆகியவற்றைச் சேகரித்தனர். கல்லீரல், திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் உள்ள 6 மாதக் குழந்தைக்குப் பொருத்தப்பட உள்ளது.

    சிறுநீரகங்கள், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் உள்ள மற்றொரு குழந்தைக்கு வழங்கப்பட்டது. இதய வால்வு மற்றும் கண்கள், ஸ்ரீ சித்ரா இன்ஸ்டிடியூட் மற்றும் அமிர்தா மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டன.

    இதன் மூலம் கேரளாவிலேயே மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்த பெருமை மறைந்த 10 மாதக் குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம்க்கு கிடைத்துள்ளது.

    இந்நிலையில், உடல் உறுப்புகளை தானம் செய்த 10 மாதக் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

    • விளாத்திகுளம் அருகே பைக் மீது சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதியது.
    • இந்த விபத்தில் பைக்கில் சென்ற குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சுற்றுலா வேன் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதியது.

    இந்த விபத்தில் ஒரே பைக்கில் சென்ற 2 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விபத்துக்கு காரணமான வேன் ஓட்டுநரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பைக் மீது வேன் மோதியதில் 5 பேர் பலியானது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • மகளின் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தனர்.
    • கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதய வால்வு மற்றும் இரண்டு கண்கள் ஆகியவற்றைச் சேகரித்தனர்.

    கேரளாவில் சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாதக் குழந்தை தனது உறுப்புகள் மூலம் 5 பேரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாத பெண் குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம்.

    கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி குழந்தை அலின் உடன் தாய், தாத்தா, பாட்டி ஆகியோர் கோட்டயத்திலிருந்து திருவல்லாவுக்கு காரில் செல்லும் வழியில் எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

    காரில் இருந்த ஷெரினின் தாய், தாத்தா மற்றும் பாட்டி காயமடைந்தனர். படுகாயமடைந்த குழந்தை ஷெரின் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிப்ரவரி 13 ஆம் தேதி குழந்தை மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

    ஆழ்ந்த துயரத்தில் இருந்தபோதிலும், குழந்தையின் பெற்றோர்களான தங்கள் மகளின் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்தனர்.

    மருத்துவர்கள் குழந்தையிடமிருந்து கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இதய வால்வு மற்றும் இரண்டு கண்கள் ஆகியவற்றைச் சேகரித்தனர்.

    கல்லீரல், திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் உள்ள 6 மாதக் குழந்தைக்குப் பொருத்தப்பட உள்ளது.

    சிறுநீரகங்கள், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் உள்ள மற்றொரு குழந்தைக்கு வழங்கப்பட்டது. இதய வால்வு மற்றும் கண்கள், ஸ்ரீ சித்ரா இன்ஸ்டிடியூட் மற்றும் அமிர்தா மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டன.

    இதன் மூலம் கேரளாவிலேயே மிகக் குறைந்த வயதில் உடல் உறுப்பு தானம் செய்த பெருமை மறைந்த 10 மாதக் குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம்க்கு கிடைத்துள்ளது.  

    • 160 கி.மீ வேகத்தில் சொகுசு கார் சென்றது.
    • உங்கள் மகன்களின் உடல்களை அடையாளம் காட்ட வாருங்கள்.

    கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஹோஸ்கோட் பகுதியின் கம்பளிபுரா கேட் சேட்டிலைட் ரிங் ரோட்டில் நடந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

    நேற்று அதிகாலை 5:15 மணியளவில் 160 கி.மீ வேகத்தில் வந்த வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து ககன் (26) என்பவர் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில் ககன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    பைக் மீது மோதிய வேகத்தில், கார் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதியது. சாலையோர தடுப்புச் சுவரில் மோதிய கார், சுமார் 150 மீட்டர் தூரத்திற்குத் தேய்த்துக் கொண்டே சென்று நின்றது. இதில் கார் அடையாளம் காண முடியாத அளவிற்கு உருக்குலைந்தது.

    காரில் பயணம் செய்த 16 வயதுடைய அஹ்ரம் ஷெரீப் , 17 வயது அயன் அலி, பாரத், அஸ்வின் நாயர், ஈதன் ஜார்ஜ் , முகமது ஷேக் ஆகிய 6 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.

    இந்நிலையில் உயிரிழந்த சிறுவர்களின் வீட்டுக்கு தகவல் தர போலீசார் போன் செய்தபோது பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    தேர்வு நெருங்குவதால் தங்கள் மகன்கள் வீட்டின் அறையில் படித்துவிட்டு, உறங்குகிறார்கள் என்று நினைத்திருந்த பெற்றோர், "உங்கள் மகன்களின் உடல்களை அடையாளம் காட்ட வாருங்கள்" என்று போலீசார் கூறியபோது அதிர்ச்சி அடைந்தனர்.

    பெற்றோர் மகன்களின் அறைக்கு சென்று பார்த்தபோது படுக்கைகள் காலியாக இருந்துள்ளன. அப்போதுதான் தங்கள் மகன்கள் தங்களுக்கு தெரியாமல் வெளியே சென்றதை அவர்கள் உணர்த்தனர்.

    உயிரிழந்த சிறுவர்களில் ஒருவனான அயன் அலி தனது தந்தையின் காரில் ஐவரையும் அழைத்துச் சென்றுள்ளது தெரியவந்தது. 6 மாதத்திற்கு பின்புதான் அந்த காரை தந்தை வாங்கியிருந்த நிலையில் அயன் அதை வெளியே எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறான். 

    மருத்துவமனையில் உடல்களை அடையாளம் காண வந்த பெற்றோரில் ஒருவர் கூறுகையில், வெளியே செல்லக் கூடாது என்று கண்டிப்புடன் கூறி நள்ளிரவிலும் அறைக்குச் சென்று கண்காணித்துக் கொண்டேதான் இருந்தோம்.

    ஆனால், அதிகாலையில் எழுந்து பார்த்தால் மகனைக் காணவில்லை. வந்துவிடுவான் என்றுதான் எண்ணியிருந்தோம். ஆனால் போலீசிடம் இருந்து தகவல் தான்வந்தது என்றார்.  

    • பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்தும், எண்ணெய் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
    • மோசமான சாலைகள், போக்குவரத்து விதிமீறலால் அதிகளவில் விபத்துகள் நடக்கின்றன.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கராச்சி அருகே M9 நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தும், எண்ணெய் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

    இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    பாகிஸ்தானில் கிராமப்புறங்களில் உள்ள மோசமான சாலைகள், தவறான பாதையில் வாகனம் ஓட்டுதல், பனிமூட்டம் மற்றும் போக்குவரத்து விதிமீறல் உள்ளிட்ட காரணங்களால் அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன.

    • விபத்தை ஏற்படுத்தியது மற்றும் விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    பிரபல மலையாள நடிகர் மணியன்பிள்ளை ராஜு, விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    நேற்று, திருவனந்தபுரத்தில் மணியன்பிள்ளை ராஜு ஓட்டிச் சென்ற கார், இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

    விபத்து நடந்தவுடன் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக மணியன்பிள்ளை ராஜு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    விபத்தை ஏற்படுத்தியது மற்றும் விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.

    விபத்து நடந்த போது அவர் மது போதையில் இருந்தாரா என்பதை கண்டறிய மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    • பள்ளத்தில் விழுந்த அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
    • 3 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    டெல்லியின் ஜனக்புரி பகுதியில், சாலையில் மூடப்படாமல் இருந்த பள்ளத்தில் விழுந்து 25 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    உயிரிழந்த இளைஞர் யுவராஜ் சிங் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஜனக்புரி மேம்பாலத்திற்கு அடியில் சென்றுகொண்டிருந்தார்.

    அந்தப் பகுதியில் டெல்லி பொதுப்பணித் துறையின் தண்ணீர் சப்ளை அமைப்பான ஜல் போர்டு கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன.

    இதற்காகத் தோண்டப்பட்ட பெரிய பள்ளம் முறையான எச்சரிக்கை பலகைகள் இன்றி மூடப்படாமல் இருந்துள்ளது.

    இரவு நேரத்தில் இருட்டில் இந்தப் பள்ளத்தைக் கவனிக்காத யுவராஜ் சிங், தனது பைக்கோடு பள்ளத்தில் விழுந்தார்.

    பள்ளத்தில் விழுந்த அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    கட்டுமானப் பணியின் போது பாதுகாப்பு விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும், பள்ளத்தைச் சுற்றி தடுப்புகள் அல்லது எச்சரிக்கை விளக்குகள் வைக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதற்கிடையே ஜல் போர்டை சேர்ந்த நிர்வாகப் பொறியாளர், உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் ஆகிய 3 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    முன்னதாக நொய்டாவில் சாலையில் உள்ள பள்ளத்தில் பொறியாளர் ஒருவர் விழுந்து உயிரிழந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

    • ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜகானி-செனானி பகுதியில் இன்று காலை பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
    • பஸ் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜகானி-செனானி பகுதியில் இன்று காலை பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    டோடாவிலிருந்து ஜம்மு நோக்கி சென்ற அந்த பஸ் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சி.ஆர்.பி.எப் படை வீரர் உள்பட 4 பேர் பலியானார்கள்.

    • சுமார் 5 மணி நேரம் போராடி மீட்டனர்.
    • அப்பா, நான் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன். தயவுசெய்து வந்து என்னைக் காப்பாற்றுங்கள்.

    உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில், அடர்ந்த மூடுபனி காரணமாக இன்று காலை பயங்கர விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் 27 வயது சாப்ட்வேர் இன்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    யுவராஜ் மேத்தா என்ற அந்த இளைஞர், இரவு வேலை முடிந்து கார் மூலம் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது நிலவிய அடர்ந்த மூடுபனி காரணமாகப் சாலையில் எதுவும் தெரியாததால், கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் அருகில் இருந்த தண்ணீர் நிரம்பிய ஆழமான குழியில் விழுந்தது. 

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்புக் குழுவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை சுமார் 5 மணி நேரம் போராடி காரையும், யுவராஜையும் மீட்டனர். ஆனால், அதற்குள் அவர் உயிரிழந்திருந்தார்.

    முன்னதாக அவ்வழியே வந்த டெலிவரி ஊழியரும் அவருக்கு உதவ முயன்றுள்ளார்.  கார் தண்ணீரில் மூழ்கத் தொடங்கியதும், யுவராஜ் தனது தந்தைக்கு அலைபேசியில் அழைத்துள்ளார்.

    "அப்பா, நான் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன். தயவுசெய்து வந்து என்னைக் காப்பாற்றுங்கள். எனக்குச் சாக விருப்பமில்லை" என்று கதறியுள்ளார். இதை அவரது தந்தை ஊடகங்களுக்கு வேதனையுடன் தெரிவித்தார்.

    அந்தச் சாலையில் போதிய எச்சரிக்கை விளக்குகள் இல்லாததே இந்த விபத்துக்குக் காரணம் என்று யுவராஜின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.   

    • அல்டாய் மலைத்தொடர் பகுதிக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்தனர்.
    • அல்டாய் மலைத்தொடர் பகுதியில் வாகனம் விபத்தில் சிக்கியது.

    கஜகஸ்தானில் உள்ள செமே மருத்துவப் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இந்தியாவை சேர்ந்த 11 மாணவர்கள், அல்டாய் மலைத்தொடர் பகுதிக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் மிலி மோகன் (வயது 25) என்பவர் உயிரிழந்தார். ஆஷிகா ஷீஜாமினி, ஜசீனா ஆகியோர் காயம் அடைந்தனர்.

    அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களின் நிலைமை சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விபத்து ஒன்றுக்கு அதிகபட்சம் 7 நாட்களுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம்வரை கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்படும்.
    • உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படுவதை குறைக்கும் நோக்கத்தில் இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.

    புதுடெல்லி:

    சாலை விபத்துகளில் காயமடைபவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டம், கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 14-ந் தேதி, சண்டிகாரில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தால் பரிசோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது. பின்னர், அத்திட்டம் 6 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

    இந்நிலையில், விரைவில் நாடு முழுவதும் இத்திட்டத்தை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பார் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கூறினார்.

    அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் போக்குவரத்து மந்திரிகளின் வருடாந்திர கூட்டம், நிதின் கட்காரி தலைமையில் நடந்தது. அதில், சாலை பாதுகாப்பு, பயணிகளுக்கான வசதிகள் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு நிதின் கட்காரி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது இத்தகவலை தெரிவித்தார். கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டத்தின்படி, நாட்டின் எந்தவகையான சாலையிலும் மோட்டார் வாகன பயன்பாட்டின் மூலம் ஏற்படும் விபத்துகளில் காயமடைபவர்களுக்கு நபர் ஒருவருக்கு விபத்து ஒன்றுக்கு அதிகபட்சம் 7 நாட்களுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம்வரை கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்படும்.

    உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படுவதை குறைக்கும் நோக்கத்தில் இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.

    அதே சமயத்தில், கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் பரிசோதனை அடிப்படையில் அமலுக்கு வந்ததில் இருந்து 20 சதவீத கட்டணமில்லா சிகிச்சை கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.

    • தோழிகளான இருவரும் 3 ஆண்டுகள் முன் அமெரிக்கா சென்றுள்ளனர்.
    • இருவரும் மேலும் 4 நண்பர்களுடன் அமெரிக்காவின் அலபாமாவுக்கு காரில் சுற்றுலா சென்றனர்.

    அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த சாலை விபத்தில், 2 இந்திய இளம்பெண்கள் உயிரிழந்தனர்.

    உயிரிழந்தவர்கள் தெலுங்கானாவின் மஹபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த புல்லுகந்தம் மேக்னா ராணி (24) மற்றும் கடியால பாவனா (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    தோழிகளான இருவரும் 3 ஆண்டுகள் முன் அமெரிக்கா சென்றுள்ளனர். இருவரும் கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த நிலையில் அமெரிக்காவிலேயே வேலை தேடி வந்தனர்.

    இந்நிலையில், இருவரும் மேலும் 4 நண்பர்களுடன் நேற்று முன் தினம் அமெரிக்காவின் அலபாமாவுக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளனர்.

    சுற்றுலாவை முடித்து காரில் திரும்பியபோது மலைப்பாங்கான பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் காரில் பயணித்த ராணி, புவனா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். எஞ்சிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.

    தகவலறிந்து விரைந்த மீட்புக்குழுவினர் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிரிழந்த ராணி, புவனாவின் உடல்களை விரைந்து இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    ×