என் மலர்
நீங்கள் தேடியது "Uttar pradesh"
- ரெயில் விபத்து பற்றிய சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
- இந்த சம்பவம் தொடர்பாக உயர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் மின்சார ரெயில் பிளாட்ஃபாரத்தின் மீது ஏறி நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும், ரெயில் விபத்துக்கான காரணம் பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ரெயில் விபத்து பற்றிய சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. அதன்படி ரெயிலை இயக்கி வந்த லோக்கோ பைலட், ஒருகட்டத்தில் ரெயிலை நிறுத்திவிட்டு அதில் இருந்து வெளியேறுகிறார். அவர் வெளியேறியதும், சில நொடிகளில் மற்றொரு லோக்கோ பைலட் ரெயிலில் ஏறுகிறார்.
ஏறும் போதே தனது மொபைல் போனில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த அவர் உள்ளே நுழைந்ததும், கதவை இழுத்து மூடினார். பிறகு, உள்ளே வந்த அவர் தனது பையை ரெயிலை இயக்கும் ஸ்விட்ச் மீது வைத்து, தொடர்ச்சியாக மொபைல் போனை பயன்படுத்துகிறார். இந்த சூழலில் தான் திடீரென ரெயில் வேகமெடுத்தது.
உடனே சுதாரித்துக் கொண்ட அவர் ரெயிலை நிறுத்தும் முன்பு அது, பிளாட்ஃபாரத்தின் மீது ஏறியது. இதனாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உயர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மேலும் ஐந்து பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்று ரெயில்வே மேலாளர் தேஜ் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.
- துப்பட்டாவை இழுத்ததால் நிலை தடுமாறி விழுந்தவர் மீது பைக் மோதியது
- குற்றவாளிகள் காவல் துறையினரை சுட்டு தப்பிக்க முயன்றனர்
உத்தர பிரதேசத்தில் உள்ளது அம்பேத்கர் நகர் மாவட்டம்.
இரு தினங்களுக்கு முன் இந்த மாவட்டத்தில் உள்ள ஹன்ஸ்வார் பகுதியில், ஹிராபூர் அங்காடி தெருவில் ஒரு 17-வயது பள்ளி மாணவியும், அவரது தோழியும் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அந்த மாணவியை பின் தொடர்ந்து வந்து சீண்டலில் ஈடுபட்டு வந்தனர். அந்த இரு மாணவிகளும் அவர்களிடமிருந்து தப்பிக்க ஒதுங்கி சென்றாலும் அவர்கள் பலவந்தமாக தவறாக நடக்க முயன்றனர்.
இதில் இரு சக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவன் அம்மாணவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்தான். இதில் அந்த மாணவி நிலை தடுமாறி சைக்கிளிலிருந்து கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த வேறொரு இரு சக்கர வாகனம் அந்த மாணவியின் மீது மோதியது. இதில் அவர் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அத்துடன் அவரது தாடை பகுதி நொறுங்கியது. கீழே விழுந்த மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களில் இந்த சம்பவத்தின் காட்சிகள் பதிவாகி, அவை சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
சம்பவத்திற்கு காரணமான இருவர் மற்றும் மாணவி மீது மோதிய வாகனத்தை ஓட்டி வந்தவர் ஆகிய 3 பேரையும் கேமிரா காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அப்போது அவர்கள் காவல் அதிகாரிகளின் துப்பாக்கியை பிடுங்கி கொண்டு தப்பிக்க முயன்றதால், அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். காயமடைந்த அவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
- இவ்வாறு செய்த போது ஸ்மார்ட்போனில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு இருக்கிறது.
- வெடித்த ஸ்மார்ட்போன் பேட்டரியில் ஏதேனும் பிழை இருந்ததா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறும் சம்பவங்கள் மிகவும் அபாயகரமானவை ஆகும். ஸ்மார்ட்போன்கள் வெடிப்பது, தீப்பிடித்து எரிவது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. இந்த வரிசையில், உத்திர பிரதேச மாநிலத்தின் படௌன் மாவட்டத்தில் ஏற்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதில் ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆகிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட மின் கசிவு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் படௌன் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்த போது உயிரிழந்தார் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஸ்மார்ட்போனை சார்ஜ் ஏற்றிக் கொண்டிருக்கும் போதே, சிறுவன் அழைப்பில் பேசியிருக்கிறார். இவ்வாறு செய்த போது ஸ்மார்ட்போனில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு இருக்கிறது. மின்சாரம் சிறுவன் மீது பாய்ந்ததை அடுத்து திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். உடனே சிறுவனின் பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் வெடித்துச் சிதறிய ஸ்மார்ட்போன் எந்த பிராண்டு மற்றும் மாடல் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. மாறாக அது பெரிய பிராண்டு ஒன்றின் ஸ்மார்ட்போன் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் சிறுவன் இந்த ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் என இரண்டிற்கும் சேர்த்து ரூ. 20 ஆயிரம் கொடுத்து வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஸ்மார்ட்போன் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஒன்று ஆகும்.

வெடித்துச் சிதறிய ஸ்மார்ட்போனின் பேட்டரியில் ஏதேனும் பிழை ஏற்பட்டு இருந்ததா அல்லது வேறு ஏதேனும் ஹார்டுவேர் கோளாறு ஏற்பட்டு இருந்ததா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும், மின்கசிவு காரணமாகவே சிறுவன் உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ஸ்மார்ட்போன் பழைய மாடல் என்பதில், அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என தெரிகிறது.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்த நிலையில், பயன்படுத்துவதை உடனே நிறுத்த வேண்டும். சார்ஜ் செய்யும் போது பயன்படுத்தினால், ஸ்மார்ட்போன்கள் அதிகளவில் சூடாகலாம். இதன் காரணமாக அவை வெடித்துச் சிதறும் அபாயம் உண்டு.
பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களில், சாதனம் அதிக சூடாவதை எச்சரிக்கை செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற சமயங்களில் ஐபோன்கள் வெப்பத்தை குறைத்து, சாதாரன நிலைக்கு மாற சற்று நேரம் எடுத்துக் கொள்கின்றன.
- உத்தரபிரதேசம் மாநில லக்னோவில் 17-வது இந்திய ஜூனியர் சாப்ட் டென்னிஸ் சாம்பியன் ஷிப் போட்டி வருகிற 9-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
- புதுவை மாநில ரோகிட் பந்து கழக செயலாளருமான புருசோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களுக்கு சீருடைய வழங்கி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
புதுச்சேரி:
உத்தரபிரதேசம் மாநில லக்னோவில் 17-வது இந்திய ஜூனியர் சாப்ட் டென்னிஸ் சாம்பியன் ஷிப் போட்டி வருகிற 9-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
இப்போட்டியில் பங்கேற்க புதுவை வீரர்கள் உத்தரபிரதேசம் புறப்பட்டு சென்றனர். இவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் விழா கவுண்டன்பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
விழாவில் அணியினருக்கு புதுவை கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ரராஜன், சாப்ட் டென்னிஸ் சங்க செயலாளர் ரத்தினபாண்டியன், பயிற்சியாளரும், புதுவை மாநில ரோகிட் பந்து கழக செயலாளருமான புருசோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களுக்கு சீருடைய வழங்கி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
- பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
- சிறுமியை போலீஸ்காரர்கள் ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வீடியோவும் வெளியாகி உள்ளது.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலம் கன்னாஜ் நகரில் அரசு விருந்தினர் இல்லம் அருகே நேற்று முன்தினம் 13 வயது சிறுமி தலையில் பலத்த காயமடைந்து கிடந்தார். ரத்தம் சொட்டச் சொட்ட வலியால் துடித்த அந்த சிறுமி தனக்கு உதவி செய்யும்படி அழைத்தார். சத்தம் கேட்டு அங்கு பலர் திரண்டனர். ஆனால் யாரும் அந்த சிறுமிக்கு உதவி செய்ய முன்வரவில்லை. மாறாக, அந்த சிறுமியை செல்போனில் வீடியோ எடுப்பதிலும் புகைப்படம் எடுப்பதிலும் பிசியாக இருந்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
சிறுமி தனது ரத்தக்கறை படிந்த கைகளை நீட்டி, உதவிக்காக அழைப்பதும், சுற்றி நிற்கும் ஆண்கள் அவளை வெவ்வேறு கோணங்களில் படம்பிடிப்பதில் மும்முரமாக இருப்பதும் அந்த வீடியோவில் உள்ளது. போலீசுக்கு தகவல் கொடுத்தாச்சா? என ஒரு குரல் கேட்கிறது. இன்னொருவர் காவல்துறை தலைவரின் போன் நம்பரை கேட்கிறார். ஆனால் அந்த சிறுமிக்கு உதவ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தகவல் அறிந்து போலீசார் வரும் வரை அந்த சிறுமி வலியால் துடித்தபடி காத்திருந்தார். இதேபோல் அந்த சிறுமியை போலீஸ்காரர் தூக்கிக்கொண்டு ஓடி, ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோவும் வெளியாகி உள்ளது.
விசாரணையில் அந்த சிறுமி, உண்டியல் வாங்குவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு வந்தும், ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. சிறுமியுடன் ஒரு வாலிபரும் சென்றுள்ளார். அது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அவர் யார் என்பது அடையாளம் தெரிந்துள்ளது. எனவே, அந்த பெண் தாக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. எனினும் மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்தபிறகே, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது உறுதி செய்யப்படும்.
சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
- காவல்துறையில் 22,000 பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- காவலர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
லக்னோ:
காவலர் நினைவுத் தினத்தையொட்டி உத்தர பிரதேசத்தில் பணியின் போது உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத், நிகழ்ச்சியில் பேசியதாவது:
நாட்டின் பாதுகாப்பைப் பேணுவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தருணம் இது. கடந்த 5 ஆண்டுகளில் உத்தரப் பிரதேச காவல்துறையினர் நடத்திய என்கவுன்ட்டர்களில் 166 குற்றவாளிகள் கொல்லப்பட்டனர். 4,453 பேர் காயமடைந்தனர்.
காவலர்களின் குடும்ப நலன் மற்றும் அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து காவல்துறையில் 22,000 பெண்கள் உட்பட 1,50,231 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
45,689 பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயுதப்படை காவலர்கள், தலைமை கான்ஸ்டபிள்கள் மற்றும் கான்ஸ்டபிள்களுக்கு தொலைபேசி உதவித் தொகை ஆண்டுக்கு ரூ.2,000 கூடுதலாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அலிகர் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
- தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் கடந்த சில தினங்களாக இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.
இந்நிலையில் மழையைத் தொடர்ந்து சுவர் இடிந்து விழுதல், வீடு இடிந்து விழுதல், இடிமின்னல் போன்ற விபத்துகளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 7 பேர் எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 11 பேர் காயமடைந்துள்ளனர்.
அலிகர் மாவட்டத்தில் மூன்று நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிப்பதால், சனிக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
நேற்று காலை முதல் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 140 மி.மீ மழை பதிவானதாக எட்டாவா வானிலை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. ஆக்ராவிலும் அதிக அளவில் மழை பதிவாகியுள்ளது.
- வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 800க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இது உ.பி. அரசின் மத துவேச நடவடிக்கை என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கான்பூர்:
முன்னாள் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, டி.வி. விவாதம் ஒன்றில் பங்கேற்றபோது முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உத்தர பிரதேசம் கான்பூரில் ஒரு பிரிவினர் கடையடைப்பு போராட்டத்துக்கு கடந்த 10ந்தேதி அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்த போராட்டத்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது. இதில் பல இடங்களில் வாகனங்கள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. மேலும் இந்த கலவரத்தில் 20 போலீஸ்காரர்கள் உள்பட 40 பேர் காயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில் கைது நடவடிக்கைகளையும் தொடங்கினர்.
இதில் 800க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எனக்கூறி 337 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் பிரயாக்ராஜ் நகரில் இருந்து 92 பேர், சஹாரன்பூரில் இருந்து 83 பேர், ஹத்ராசில் இருந்து 52 பேர், மொராதாபாத்தில் இருந்து 40 பேர், பெரோசாபாத்தில் இருந்து 18 பேர் மற்றும் அம்பேத்கர்நகர் பகுதியில் இருந்து 41 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இருப்பினும் இது உ.பி. அரசின் மத துவேச நடவடிக்கை என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தில் உள்ள லிசாரி கேட் பகுதியை சேர்ந்த சிறுவன் உவைஷ் அகமத் (14). சிறுவன் நிஜ துப்பாக்கியை தனது நெற்றியில் வைத்து சுடும் வகையில் செல்பி எடுத்துக் கொண்டிருந்தான்.
அப்போது, திடீரென துப்பாக்கி டிரிக்கரை அழுத்தியதில் புல்லட் பாய்ந்து சிறுவன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முதற்கட்ட விசாரணைக்கு பிறகு கூறியதாவது:-
உவைஷ் செல்பி எடுக்கும்போது தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்துள்ளார். உவைஷின் மூத்த சகோதரர் சுஹையில் திருட்டு வழக்கில் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டவன். மேலும், நிறைய வழக்குகளும் சுஹையில் மீது உள்ளன.
அதனால், சம்பந்தப்பட்ட துப்பாக்கி சுஹையிலுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும் துப்பாக்கி குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்." என்று அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. செல்பி மோகத்தால் பறிபோன ஐ.ஐ.டி. மாணவி உயிர்: ஆற்றில் மூழ்கி பலி
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த 23-ந் தேதி இந்திய விமானப்படை அதிகாரி ஒருவருக்கு முதல் முறையாக ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அடுத்தடுத்து மேலும் சிலருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, இந்திய விமானப்படை நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களிடையே மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, லக்னோவில் உள்ள ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில், 30 பேருக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, கான்பூர் மாவட்டத்தில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், 45 பேர் ஆண்கள், 21 பேர் பெண்கள் ஆவர். நோய்ப்பரவலை தடுக்க கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத்துறைக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.